Thursday, March 27, 2025

தசதீட்சைகள் தொடர்ச்சி:(2, 3 , 4, 5, 6ம் தீட்சைகள்): உம் - இரண்டாம் தீட்சை


 தசதீட்சைகள்  தொடர்ச்சி:(2, 3 , 4, 5, 6ம் தீட்சைகள்):


உம் - இரண்டாம் தீட்சை


தானது ரெண்டாந் தீட்சையைக் கேளு


ஆனது உம்மென் றள்புட னீயும்


வானது நோக்கி மண்டலஞ் செபித்தால்


கோனவ னருள்தான் குடியிருப்பாமே.


இந்த தீட்சையில் "உம்" என்ற மந்திரத்தை வானத்தை நோக்கியவாறு ஒரு மண்டலம் செபித்து வந்தால் இறையருள் சித்தியாகுமாம்.நேற்றைய பதிவில் கூறியுள்ள முறைப்படி இந்த மந்திரத்தை செபித்து வர வேண்டும்.


சிம் - மூன்றாம் தீட்சை


குடியினில் மூன்றாந் தீட்சையைக் கேளு


முடியினில் சென்று முழுமனதாக


அடியினில் சிம்மென் றன்புட னீயும்


வடிவுடன் நன்றாய் வணங்கிடு முத்தியே.


இரண்டாவது தீட்சையை நிறைவேற்றிய பின்னர் இந்த மூன்றாவது தீட்சையை துவங்க வேண்டும். இந்த தீட்சையில் "சிம்" என்ற மந்திரத்தை, மனதை ஒரு முகப் படுத்தி அர்ப்பணிப்புடன் ஒரு மண்டலம் செபித்து வர சித்தியாகும் என்கிறார்.


நம்- நான்காம் தீட்சை


முத்தியில் நாலாந் தீட்சையைக்கேளு


அத்த னருளை யன்புட நோக்கி


உத்தம நம்மென் றுரிமையாய்ச் செபிக்கில்


சித்தஞ் சிவமாய்த் தானவ னாமே.


மூன்றாவது தீட்சையை செபித்து அது சித்தியான பின்னர் இந்த நான்காம் தீட்சையை துவங்கிட வேண்டுமென்கிறார்.இந்த முறையில் "நம்" என்ற மந்திரத்தை ஒரு மண்டலம் தடையின்றி செபித்து வர செபிப்பவரின் சித்தம் சிவமயமாகுமாம்.


தம்- ஐந்தாம் தீட்சை


தானது அஞ்சாந் தீட்சையைக் கேளு


ஆனது தம்மென் நன்புட னீயும்


வானுட நோக்கி மகிழ்ந்துருக் கொண்டால்


ஊனுடன் தேகம் உறுதியு மாமே.


நான்காவது தீட்சையை செபித்து சித்தியடைந்த பின்னர்,ஐந்தாவது தீட்சையாக "தம்" என்ற மந்திரத்தை முழுமனதுடன் ஒரு மண்டலம் செபித்து வர தேகம் உறுதி மிக்கதாகுமாம்.


லங்- ஆறாம் தீட்சை


உறுதியா மாறாந் தீட்சையைக் கேளு


நெறி தவறாமல் நேர்மையில் நின்று


சுருதியி லங்கென் றுடர்ந்துருக் கொண்டால்


பருதி போல் தேகம் பக்குவமாமே.


ஐந்தாவது தீட்சை செபித்து அந்த மந்திரம் சித்தியான பின்னர்,ஆறாவது தீட்சையாக "லங்" என்ற மந்திரத்தினை முழு மனதுடன் ஒருமண்டலம் செபித்து வர தேகமானது பருத்தியைப் போல பக்குவமாகுமாம்.


......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

Call(or) whatsapp no:

+91 7598758989

Visit as: mantrakali.blogspot.com

Wednesday, March 26, 2025

தசதீட்சைகள்-ஒர் அறிமுகம்

 

”தசதீட்சை” - ஓர் அறிமுகம்:

  

ஒவ்வொரு கட்டத்தையும் துவக்குதல் அல்லது புதிய கட்டத்திற்குள் பயணித்தல் போன்றவை குருவானவரின் மேற்பார்வையில் நடைபெறுதல் அவசியம் என்கின்றனர் சித்தர்கள். இதனையே பொதுவில் தீட்சைகள் என கூறியிருக்கின்றனர்.


அந்த வகையில் இனி வரும் பதிவுகளில் மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர்.இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.


தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..


திரமான தீட்சை செப்புவேன் கேளு

கரமான நெல்லிக்கனி யதுபோல

சரமான வாசி சங்கர கெவுரி

வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.


இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.


இன்றைய பதிவில் முதலாவது தீட்சையைப் பற்றி பார்ப்போம்.


கேளு அம்மென்று கெடியாக மண்டலம்

நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்

சேலுடன் தேகந் திரமது வாகும்

மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.


முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறும்.


......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

Call(or) whatsapp no:

+91 7598758989

Visit as: mantrakali.blogspot.com

Friday, March 21, 2025

பஞ்சாட்சர கணபதி யந்த்ரம் மந்திரம்:

 பஞ்சாட்சர கணபதி யந்த்ரம்  மந்திரம்:

 

எந்த ஒரு கலைகளுக்கும் முழு முதற்கடவுளாக விளங்குகிறவர் கணபதி ஆகையால் எந்த ஒரு சூழ்நிலையிலும் முழு முதற்கடவுளான கணபதி மந்திரத்தை கூறி முறையிட்டால் எந்த ஒரு பிரச்சனைகளும் நம்மை ஒன்றும் செய்யாது .

மூல மந்திரம் 


வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி 

யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி 

நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி 

மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி 

சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி 

அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல 

சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம் 

உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா .


பூஜை முறைகள்   


பஞ்சாட்சர கணபதி பூஜையை வளர்பிறை சமயத்தில் வெள்ளிகிழமை நாட்களில் பூஜை துவங்க வேண்டும் .பூஜையில் இந்த யந்திரத்தை அன்றைய தினம் குறு ஓரை அல்லது சுக்கிர ஓரை சமயம் பார்த்து மேற்கண்ட யந்திரத்தை எழுத வேண்டும் .எழுதி யந்திர சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .அதற்கு பிறகு யந்திரதிற்கு நைவேத்யங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும் ..


இந்த மந்திரத்தை 1008 தடவை விரதமிருந்து கூறிவந்தால் சித்தியாகும் .இதை சித்தி செய்தால் உடனடியாக உங்களை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்; நம் கஷ்டங்களை போக்ககூஒடிய ஒரே மனிதன் நீங்கள்தான் என்று கூறுவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.


அவ்வளவு சக்தி வாய்ந்த யந்திர பிரயாக முறை இது ..

......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

Call(or) whatsapp no:

+91 7598758989

Visit as: mantrakali.blogspot.com


Wednesday, March 19, 2025

அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்


அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் எளிய பரிகாரங்கள்
எந்த விதமான பிரச்சனைகள், கஷ்டங்களையும் போக்கும் எளிய, விரைவில் பலன் தரக்கூடிய பரிகாரங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
* ஆரத்தி எடுக்கும்போது பயன்படுத்தப்படும் குங்குமம் கலந்த நீர், வெற்றிலை மீது எரியும் கற்பூரம் ஆகியவற்றால் தீய சக்திகளை (கண்திருஷ்டி) விரட்டும் ஆற்றல் உண்டு. 
* வாழை மரத்தை வாசலில் கட்டுவார்கள். இதற்கு காரணம் வாழைக்கு திருஷ்டி தோஷங்களை ஈர்த்துக் கொள்ளும் குணம் உண்டு என்பதுதான்.
* கெட்ட எண்ணங்கள், குரூர சிந்தனைகளை திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். மீன்தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். வாசலில் கண் திருஷ்டி கணபதி படத்தையும் மாட்டி வைக்கலாம்.
* வாசலில் கற்றாழை, சப்பாத்தி கல்லி, முள்அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். ஆகாச கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடலாம்.
* வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர திருஷ்டியால் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இவ்வாறு குளிக்கலாம்.
* வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்க எலுமிச்சம்பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தை தடவி, மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவி வைக்கலாம். இதை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை செய்வது நலம் தரும். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையை சுற்றி தெருவில் வீசிவிட வேண்டும்.
* அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை அலுவலகத்தில் புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும்.
* முடக்கற்றான், பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, இவைகளை சேர்த்து அரைத்து அந்தப் பொடியை பசு கோமியத்தில் கரைத்து வீட்டிலோ, வியாபாரி ஸ்தலத்திலோ, தெளிக்க தீய சத்திகள், கண் திருஷ்டி, நீங்கி செல்வ செழிப்பு பெறலாம்.
* கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அர்ச்சனை செய்தல், தேங்காய் எண்ணெய், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்தால் தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நமது முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.
* வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம். கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-பொன்:7598758989


Saturday, March 8, 2025

லிங்காஷ்டக ஸ்லோகங்கள்:


 லிங்காஷ்டக ஸ்லோகங்கள்:


1. ப்ரஹ்மமுராரி ஸுரார்ச்சித லிங்கம்

நிர்மல பாஷித சோபித லிங்கம்

ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


2. தேவமுனி ப்ரவார்ச்சித லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம்

ராவண தர்ப்ப விநாசக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


3. ஸர்வஸுகந்த ஸுலேபித லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம்

ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


4. கனக மஹாமணி பூஷித லிங்கம்

பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்

தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


5. குங்குமசந்தன லேபித லிங்கம்

பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


6. தேவகணார்ச்சித ஸேவித லிங்கம்

பாவையர் பக்தி பிரேவச லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


7. அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்


8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்

ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம் பரமபர பரமாத்மக லிங்கம்

தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்

லிங்காஷ்டக மிதம் புண்யம் யஹ் படேச் சிவ ஸந்நிதெள

சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே


ஆதிசங்கரர் அருளிய லிங்காஷ்டகம் மிகவும் சக்தி வாய்ந்த பாடலாக கருதப்படுகிறது. இப்பாடலை தினமும் பாடி வந்தால் இறப்பின் போது சிவலோகத்தில் மோட்சத்தை அடையலாம் என்று கூறுகிறார். இப்பாடல் மகாவிஷ்ணு, நான்முக பிரம்மன் மற்றும் அத்துணை தேவர்களும் அர்ச்சித்து வழிபட்ட லிங்கமாக பக்தர்களுக்கு எடுத்துரைக்கிறார் எனவே இதில் இருக்கும் 8 லோகங்களையும் இடைவிடாமல் தினமும் உச்சரித்து வந்தால் நமக்கு இருக்கும் அத்தனை பிரச்சினைகளும் விரைவாக தீருமாம். மேலும் தீர பிணி தீரவும், சகல சௌபாக்கியங்களும் பெறவும், பாவங்கள் தீரவும் இப்படி தினமும் உச்சரித்து பயன் பெறலாம்.

......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Friday, March 7, 2025

இந்திர பகவான் காயத்ரி மந்திரம்

 இந்திரபகவான் காயத்ரி மந்திரம்:


"ஓம் தேவராஜாய வித்மஹே

வஜ்ரஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்"


இந்த காயத்ரி மந்திரத்தை தினசரி 108 முறை கூறி வர பணப் புழக்கம் அதிகரிக்கும்.தொழில் மேன்மையுறும்.வீடு வாகன வசதி உண்டாகும்.


பணப்புழக்கம் அதிகரிக்கச் செய்யும் தன ஆகர்ஷண யந்திரத் தகடு கிடைக்கும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-பொன்:+917598758989