Saturday, February 4, 2017

சித்தர் தரிசன மந்திரங்கள்

                                        சித்தர் தரிசன மந்திரங்கள் 


சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.

1.சித்தர் தரிசன மந்திரம்:-

ஓம் || கிலி  ரங் அங் சிங் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன் ,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும்யோக, ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

2.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம கிலி ஓம்  |||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்  உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாத,வைத்தியம்), யோக ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.



3.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம ஓம் கிலீம் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.



தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய் 
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம்  வெளியிற்காணு 
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு 
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால் 
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று 
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே  - அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97 



4.சித்தர் தரிசன மந்திரம்:-

 ஓம்|சிங் ரங் அங் சிங்|

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்                 உண்டாகி நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .


மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதை தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்.

Wednesday, January 25, 2017

வியாபார வசிய யந்திரம்:--


வியாபார வசிய யந்திரம்:--
வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளிக்கலாம்.தொழிலில் தடை உள்ளவர்கள் இந்த யந்திரத்தை வழிபடுவதன் மூலம் சிறந்த லாபத்தை அடைய முடியும்.சக்திமிக்க யந்திரம்.வியாபாரிகள்,வணிகர்கள்,புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம்.பல அளவுகளில் கிடைக்கும்.
சக்திமிக்கஇந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள், விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
இந்த யந்திரங்கள் அனைத்தும் 48 நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு ,சக்தியூட்டப்பட்டது
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் வாங்க



ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989

காளி உபாசனை மந்திரம்:

காளி உபாசனை மந்திரம்:

காளி செபத்தை மனத்தினால் தியானித்து,
"ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"
இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 1008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கப்படாது,ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும்.இந்தப்படி சுத்தாமயிருந்து ஜெபிக்கச் சித்தியாகும்.
இதனால் கவி பாடத் திறமையுண்டாகும்,எதிரிகள் சத்துருக்கள் இருக்க மாட்டார்கள்,பேய் பிசாசு யாவும் உபதேசித்தவர் பெயர் சொன்னாலே ஓடிவிடும்.தொழில் வியாபாரம்,உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
காளி யந்திரம் வைத்து உபாசனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பூஜிக்கப்பட்ட காளி யந்திரம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி

போன்:7598758989

தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் விவரம்:


தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் விவரம்:
பூஜிக்கப்பட்டு,சக்தியூட்டப்பட்ட இந்த யந்திங்கள்,தாயத்துக்கள் கிடைக்கும்.
12 ராசிக்கான யந்திரம்,
கணவன் மனைவி வசியம்,ஆண் பெண் வசியம்,நினைத்தது நடக்க,சர்வ ஜன வசியம்,எதிரிகள் வசியம்,உயர் அதிகாரிகள் வசியம்,தொழில் வியாபார விருத்தி,சகல காரிய சித்தி,நல்ல வேலை கிடைக்க,படிப்பு வர,கர்ப்பம் தரிக்க,எந்த நோயும் விலக,செய்வினை பேய் பிசாசு கண் திருஷ்டி விலக,வீடு கட்ட,செல்வம் சேர,பெருக,நிலைக்க,பணச்சேமிப்பு உயர,பைத்தியம் மனநோய் விலக,சர்வ தோஷம் விலக,திருமணம் நடக்க,வியாபாரம் நன்கு நடக்க,விவசாயத்தில் மகசூல் அதிகரிக்க,அதிர்ஷ்டம் உண்டாக,பண வரவும் லாபமும் உண்டாக,லோக வசியம்,குடும்ப ஒற்றுமை வசியம்.
இவற்றுக்குண்டான தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் தேவைக்கு அணுகவும்.

ஸ்ரீ காளி தேவி

போன்:7598758989

விரைவில் திருமணம் நடைபெற பைரவர் வழிபாடு

விரைவில் திருமணம் நடைபெற பைரவர் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

இவரை நம்பிக்கையுடன் வழிபடுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்டஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.


நம்பிக்கையுடனும், பக்தியுடனும், ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரி யையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989

துர்க்கை வழிபாடு

 துர்க்கை வழிபாடு
திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 முதல்  - 6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள்: திங்கள்கிழமைகளில் காலை 7.30 -  முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் 

செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் - 4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் 

புதன்: மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோ தரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும்  

வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல்  - 3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் 

வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30 முதல்  - 12 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் .

சனி: காலை 9 -  முதல் 10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் .

ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989

நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க

நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க
சிலர் நிரந்தர வேலை இல்லாமல் தவிப்பர், வேறு சிலரோ வேலைக்கு ஆட்கள் நிரந்தரமாக அமையாமல் தொழில் தடுமாற்றத்தில் இருப்பர். இத்தகைய சூழலுக்கு, காலை சூரியன் உதித்த ஒரு மணி நேரத்திற்குள், ஒரு செம்பு டம்பளரில் சுத்தமான நீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் கரைத்து, சூரியனை பார்த்தவாறு 'ஓம் சூர்யாய நமஹ: " மந்திரம் கூறியவாறே 10 முறை நீரை சிறிது சிறிதாக சூரியனுக்கு அர்ப்பணம் செய்து, கண் திறந்து வழிபட்டு வர நினைத்த வேலை கிடைக்கும். வேலைக்கும் ஆட்களும் நிரந்தரமாக கிடைப்பர்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989