Saturday, February 4, 2017

குழந்தை பாக்கியம் பெற மந்திரம்:


குழந்தை பாக்கியம் பெற மந்திரம்:
"தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய்
பேயனே னையும் ஆண்ட பெருந்தகை
தேயநாத் சிராப்பள்ளி மேவிய
நாயனார் என நம்வினை"
இந்த ஸ்லோகத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் தினமும் சிவனை நினைத்து விரதமிருந்து சொல்லி வர குழந்தை பாக்கியம் கிட்டும்.
குழந்தைபேறு கிடைக்க தாயத்துக்கள்,மருந்துக்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பண முன்னேற்றத்திற்க்கு பரிகாரம்:

பண முன்னேற்றத்திற்க்கு பரிகாரம்:
தொடர்ந்து ஆறு புதன்கிழமைகள் ஓடும் நீர்,ஆறு,கடல் ,ஏரி இவைகளில் ஒரு சிறிய குவளை(jug) (செம்பு அல்லது ஸ்டீல் குவளைகள்) விட்டு விட நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.எந்த நபர் செய்கிறாரோ அவரே தொடர்ந்து செய்ய வேண்டும்.இதனை புதன்கிழமை மதியம் 1-2 மணிக்குள் செய்ய வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


எதிரிகள் தொல்லை விலக:

எதிரிகள் தொல்லை விலக:
சனிக்கிழமை தோறும்,பைரவர் சன்னதியில் வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டு வர எதிரிகள்,பகைவர்களின் தொல்லைகள் சிறிது சிறிதாக குறைந்து விடும்.மேலும் மரண பயம் விலகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருட்டு பயம் நீக்கும் ஸ்ரீ காளிதேவி மந்திரம்

திருட்டு பயம் நீக்கும் ஸ்ரீ காளிதேவி மந்திரம்

பல அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மந்திரத்தைப் பதிவு செய்கிறேன்.அனேக இடங்களில் பொருட்கள் திருடு போகின்றன, மேலும் திருடர்கள் அதன் உரிமையாளர்களையும் கொலை செய்து விடுகின்றனர். பெண்கள் இரவில் தனியே வீட்டில் தங்க நேரிட்டால் நிச்சயம் பயத்துடனே உறங்க வேண்டிவரும்.எவராலும் வீட்டில்,அலுவகத்தில் திருட்டு நேராது தடுக்கும் மந்திரபிரயோகம் கீழே தரப்பட்டுள்ளது.செய்து பலன் பெறுங்கள்.

செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை காலையில் 6 முதல் 7 மணிக்குள் 12 மிளகு எடுத்துக்கொண்டு  தென்மேற்கு மூலையிலிருந்து வீட்டை வலமிருந்து இடமாக 3 தடவை சுற்றி வரவும் ஒவ்வொரு சுற்றிலும் ஒரு மிளகை வீட்டின் ஒவ்வொரு மூலையில் போட்டு விட்டுச் சுற்றவும்.
வீட்டைச் சுற்றும் பொழுது கீழே உள்ள மந்திரம் ஜெபித்தபடி சுற்றவும்.
இந்தப் பிரயோகத்தைச்  செய்யும் முன் விளக்கேற்றி வெற்றிலை,பாக்கு,பால், பழங்கள்,பாயசம்,எலுமிச்சம்பழம் படைத்து ஸ்ரீ காளிமாதாவை வேண்டி பூஜை செய்யவும்.

மந்திரம் :-

ஓம் கராலினி ஸ்வாஹா |
ஓம் கபாலினி ஸ்வாஹா |
ஹ்ரௌம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் |
சோர பந்தக ட்டஹ ட்டஹ ||            

சித்தர் தரிசன மந்திரங்கள்

                                        சித்தர் தரிசன மந்திரங்கள் 


சித்தர்களில் முதன்மையானவரும்,அதிகமான பாடல்களை இயற்றியவருமான அகஸ்தியர் பின்வரும் மந்திரங்களை சித்தர் தரிசனத்திற்காகக் கூறுகிறார்.

1.சித்தர் தரிசன மந்திரம்:-

ஓம் || கிலி  ரங் அங் சிங் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாவதுடன் ,அஷ்ட சித்துக்கள்,வைத்தியமுறைகள் மற்றும்யோக, ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது பரிபூரணம் 1000 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

2.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம கிலி ஓம்  |||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்  உண்டாவதுடன் தொழில் முறைகள் (வாத,வைத்தியம்), யோக ஞான   ரகசியங்களையும் உபதேசித்து அருள் செய்வார்கள் என்று அகஸ்தியர் தனது ஞான சைதன்யம் 51 என்ற நூலில் குறிப்பிடுகிறார்.



3.சித்தர் தரிசன மந்திரம்:-

சிவயநம ஓம் கிலீம் ||

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ துரியம் என்ற சஹாஸ்ரார கமலத்தில் மனம் வைத்து 90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம் உண்டாகும்.சித்தர் பெருமக்கள் யாராவது காட்சி தருவார்கள் அச்சமயம் யார் வழியைப் பின்பற்றி அல்லது யார் நூலைப் பின்பற்றி இந்த முறையை அறிந்து கொண்டாய் என்று கேட்பார்கள்.அப்பொழுது அகஸ்தியரின் நூலைப் பின்பற்றி இம்முறையை அறிந்தேன் அய்யா என்று மறுமொழி கூற வேண்டும்.



தெரிசிக்கத் தியானமொன்று சொல்லக்கேளாய் 
சிவயநம ஓம் க்லீம் என்று சேவி
வரிசிக்குஞ் சித்தரெல்லாம்  வெளியிற்காணு 
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு 
பரிசிக்கும் படியவரைக் கண்டாயானால் 
பணிந்திடுவாய் பாதத்திற் சிரசு தட்ட
கிரிசிக்கும் ஆர்நூலிற் சார்ந்தாயென்று 
கேட்கிலகத்தீசுரர் தன கிருபை யென்னே  - அகத்தியர் பூரண சூத்திரம் பாடல் 97 



4.சித்தர் தரிசன மந்திரம்:-

 ஓம்|சிங் ரங் அங் சிங்|

இம்மந்திரத்தை பிரம்ம முஹூர்த்த நேரத்திலோ  ,இரவு 11-30-12.30 மணிக்குள்ளோ  90 நாட்கள் 1008 உரு ஜெபித்து வர சித்தர்கள் தரிசனம்                 உண்டாகி நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் .


மேற்கண்ட மந்திரங்களில் எது உங்களுக்கு பிரியமானதோ அதை தேர்ந்தெடுத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து ஜெபித்து வரவும்.ஜெபிக்கும் போது அருகில் ஒரு செம்பு பாத்திரத்தில் கொஞ்சம் நீர் வைத்துக் கொள்ளவும்.

Wednesday, January 25, 2017

வியாபார வசிய யந்திரம்:--


வியாபார வசிய யந்திரம்:--
வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளிக்கலாம்.தொழிலில் தடை உள்ளவர்கள் இந்த யந்திரத்தை வழிபடுவதன் மூலம் சிறந்த லாபத்தை அடைய முடியும்.சக்திமிக்க யந்திரம்.வியாபாரிகள்,வணிகர்கள்,புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம்.பல அளவுகளில் கிடைக்கும்.
சக்திமிக்கஇந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள், விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
இந்த யந்திரங்கள் அனைத்தும் 48 நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு ,சக்தியூட்டப்பட்டது
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் வாங்க



ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989

காளி உபாசனை மந்திரம்:

காளி உபாசனை மந்திரம்:

காளி செபத்தை மனத்தினால் தியானித்து,
"ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"
இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 1008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கப்படாது,ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும்.இந்தப்படி சுத்தாமயிருந்து ஜெபிக்கச் சித்தியாகும்.
இதனால் கவி பாடத் திறமையுண்டாகும்,எதிரிகள் சத்துருக்கள் இருக்க மாட்டார்கள்,பேய் பிசாசு யாவும் உபதேசித்தவர் பெயர் சொன்னாலே ஓடிவிடும்.தொழில் வியாபாரம்,உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
காளி யந்திரம் வைத்து உபாசனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பூஜிக்கப்பட்ட காளி யந்திரம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி

போன்:7598758989