Saturday, February 11, 2017

அமானுஷ்யம்-பேய்கள்

அமானுஷ்யம்
பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....
பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....
விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். . பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....
பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். . பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....
நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....
பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். . பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது. ....
பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும். . பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....
பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். . பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....
பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். . பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு....
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அஞ்சனை தேவி


அஞ்சனை தேவி
இன்று நாம் பார்க்க இருக்கும் தெய்வத்தின் பெயர் "அஞ்சனா தேவி" அல்லது "அஞ்சனை தேவி". இந்த தெய்வத்தைப் பற்றிய தகவல்கள் என பார்த்தால் அரிதாய் ஒன்றிரண்டு குறிப்புகளே எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இந்த தெய்வம் வாயு புத்திரனான ஆஞ்சனேயரின் தாயாராக இருக்கும் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் அதற்கான சாத்தியங்கள் குறைவு என்பதாலும், அத்தகைய குறிப்புகள் வேறெங்கும் இல்லாததினாலும் இந்த தெய்வம் வாலையைப் போல தனித்துவமான தன்மைகளையும், பண்புகளையும் கொண்டவளாய் இருக்க வேண்டும்.
சித்தர் பெருமக்களைப் பொறுத்தவரையில் அவர்களின் படைப்புகளின் ஊடே புராணங்களுக்கும், மிகைப் படுத்திய கதைகளுக்கும் இடமில்லை. எனது சிறிய அனுபவத்தில் நான் பார்த்த வரையில் அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும், செயலுக்கும் பின்னால் ஏதோ ஒரு காரணமோ, காரியமோதான் இருக்கிறது. அந்த வகையில் இந்த அஞ்சனா தேவியின் அருளை பெறுவதற்கான மந்திரத்தையும், அதை செயலாக்கும் நுட்பத்தையும் அகத்தியர் தனது "அகத்தியர் 12000" எனும் நூலில் அருளியிருக்கிறார். அந்த பாடல்கள் பின் வருமாறு.....
ஆச்சப்பா இன்னமொரு மார்க்கங்கேளு
அருளான அஞ்சனா தேவிமூலம்
பேச்சப்பா பேசாத மவுனமூலம்
பிலமான புலத்தியனே சொல்லக்கேளு
மூச்சப்பா நிறைந்தவெளி மூலாதாரம்
முத்திதரும் ஆதாரத்தில் மனக்கண்சாத்தி
காச்சப்பா ஓங்கிலியும் ரங்ரங்கென்று
கண்ணார நூறுருவிற் காணலாமே.
காணுகிற விதமென்ன மைந்தாகேளு
கற்பூர தீபஒளி சோதிபோலே
தோணுகிற போதுமனம் ஒன்றாய்நின்று
சோதியெனு மஞ்சனா தேவியென்று
பேணியவள் பாதமதைசிர மேல்கொண்டு
பிலமாக மானதாய்ப் பூசைப்பண்ணி
ஊணிமன மொன்றாக நீறுசாத்தி
உத்தமனே நித்தியமுந் தியானம்பண்ணே.
பண்ணப்பா நித்தியமுந் தியானம்பண்ண
பதிவான இருதயமே வாசமாகி
முண்ணப்பா நிறைந்ததிரு சோதிபோலே
முக்யமுடன் காணுமந்த சோதிதன்னால்
கண்ணப்பா கண்ணுமன மொன்றாய்நின்று
காணுதடா அண்டபதங் கண்ணிநேரே
உண்ணிப்பா உன்னியந்த விண்ணுமண்ணும்
ஊடுருவிப் பார்த்ததைநீ ஒண்டிக்கேளே.
ஒண்டுமிடந் தனையறிந்து அண்டத்தேகி
ஊசாடு மஞ்சனா தேவிமூலம்
நின்றுமன தறிவாலே தியானம்பண்ணி
நேமமுடன் விபூதியைநீ தரித்துக்கொண்டு
சென்றுஅந்த ஆகாச வெளியைப்பாரு
திருவான அஞ்சனா தேவிதன்னால்
கண்டுகொள்வாய் பகல்காலம் நட்சத்திரங்கள்
காணுமடா கண்னறிந்து கண்ணால்பாரே.
கண்ணாரப் பூமியைநீ நன்றாய்ப்பார்த்து
கருணைவிழிப் பார்வையினால் உண்ணிப்பாரு
பொன்னான பூமிநடுப் பாதளத்தில்
பொருளான வெகுநிதிகள் பொருந்தக்காணும்
முன்னோர்கள் வைத்தநிதி கண்டாயானால்
மோகமென்ற ஆசையைநீ வைக்கவேண்டாம்
மெய்ஞானி செய்தவத்தை நன்றாய்ப்பாரு
மெஞ்ஞான அஞ்சனா தேவிதானே.
மூலாதாரத்தில் மனதை நிறுத்தி, அஞ்சனா தேவியின் மூலமந்திரமான "ஓங் கிலியும் ரங்ரங்" என்ற மந்திரத்தினை நூறு தடவைகள் செபிக்க வேண்டுமாம். இவ்வாறு தொடர்ந்து செபித்து வந்தால் அஞ்சனாதேவி மனக்கண்ணில் ஜோதி வடிவாக காட்சி தருவாளாம். அப்போது நம் நெற்றியில் திருநீறு சாத்தி அந்த தேவியை வணங்கி, மனதால் பூசித்து மந்திர ஜெபத்தை தொடர வேண்டும் என்கிறார்.
இவ்வாறு தொடர்ந்து ஜெபித்து வந்தால், பகல் நேரத்தில் நட்சத்திரங்கள் தென்படுமாம், அத்துடன் பூமியில் பாதாளத்தில் முன்னோர் வைத்த நிதிகளும் தென்படுமாம். அப்போது அந்த பொருட்களின் மீது ஆசை கொள்ளாமல், மெய்ஞானிகள் செய்த தவ முறைகளை எண்ணினால், அஞ்சனா தேவியின் அருளினால் அவை யாவும் கைகூடும் என்கிறார் அகத்தியர்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, February 9, 2017

தொழில் வளத்தை பெருக்கும் ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம்:


தொழில் வளத்தை பெருக்கும் ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம்:
செவ்வாய்கிழமை,செவ்வாய் ஹோரையில் செம்புத் தகட்டில் கீறி,யந்திர மந்திர பூசைகள் செய்து உருவேற்ற வேண்டும்.
தகட்டை லேமினேட் செய்து தொழிலகங்களில் மாட்ட வியாபார தோஷம் மற்றும் முடக்கங்கள் விலகும்
தொழில் வளத்தை பெருக்கும்.லாபத்தை கொடுக்கும்.
குறிப்பாக ரியல் எஸ்டேட்,கட்டிடத்துறை,ஆயுதத் துறை தொழில் செய்பவர்கள் சடாட்சர யந்திரத் தகட்டை பூஜிக்க மிக சிறப்பான பலனைக் கொடுக்கும்.
ஸ்ரீ சடாட்சர எண் யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சர்வ வசீகரண மந்திரம்

சர்வ வசீகரண மந்திரம்
வளர்பிறை திங்கட்கிழமை அன்று சிவாலயம் அல்லது அம்பாள் சன்னதியில் வைத்து 108 எண்ணிக்கை ஜெபிக்கவும்.பின் வரும் நாட்களில் வீட்டிலோ அல்லது ஆலயத்திலோ வைத்துக் கிழக்கு முகமாக அமர்ந்து 108 எண்ணிக்கை ஜெபித்து வர மனிதர்,தேவர்,விலங்குகள் என்று யாவும் வசமாகி எல்லோருடனும் இணக்கமான சூழ்நிலையுடன் மகிழ்ச்சியான வாழ்வு அமையும்.

மந்திரம் :-
ஓம் நமோ பகவதே ருத்ராய சர்வ ஜகன்மோகனம் குரு குரு ஸ்வாஹா
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

இந்தியன் வலம்புரி சங்கு


இந்தியன் வலம்புரி சங்கு:
இந்தியபெருங்கடல் பகுதியில் கோடிக்கான இடம்புரி சங்கு கூட்டங்களுக்கு நடுவே ஒரே ஒரு வலம்புரி சங்கு மட்டுமே வளரும் இது தெய்வ நியதி.
ஒரு வலம்புரி சங்கு கோடிக்கண இடம்புரி சங்குக்கு சமமானது.மஹாலட்சுமியின் பூர்ண அம்சமாகிய வலம்புரி சங்கு வற்றாத வளத்தை தரும்.மேலும் எண்ணில் அடங்காத பலன்களும் சித்துக்களும் உள்ளது.இதன் மதிப்புக்கு கோடி கொடுத்தாலும் வலம்புரி சங்குக்கு ஈடு ஆகாது.
வலம்புரி சங்கில் முனைப்புள்ளி வலப்புறமாக சுற்று இருக்கும்.இடக்கையில் பிடித்தால் அதன் பள்ள பகுதி வலப்புறம் நோக்கி இருக்கும்.
இனைத்துள்ள படத்தை பாருங்கள் வலம்புரி சங்கு பற்றி தெரியும்.உண்மையான வலம்புரி சங்கு இப்படித்தான் இருக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வியாபாரம் செழிக்க தாயத்து செய்யும் முறை


வியாபாரம் செழிக்க தாயத்து செய்யும் முறை

வியாபார வசியம் :
ஆதி வாரம் பௌர்ணமியும் கூடி வரும் தினம் பார்த்து சிறிய நாங்கள் செடிக்கு காப்பு கட்டி சாபம் போக்கி அடுத்து வரும் ஆதி வாரத்தில் பிடுங்கி வந்து  கால பைரவர் மந்திரம் லட்சம் கூறி தாயத்தில் அடைத்து பூஜையில் வைத்து கட்டி கொண்டால் எந்த விதமான வியாபாரமும் பலிதமாகி செழிப்பு ஏற்படும் 
வியாபார வசியம் :

அதைப்போல குப்பை மேனி செடிக்கும்  மேற்சொன்ன பிரகாரம் காப்புக்கட்டி தாயத்தில் அடைத்து கட்ட கொண்டால் வியாபார வசியம் உண்டாகும் .

கர்ண பிசாசினி மந்திரம்

கர்ண பிசாசினி மந்திரம்
கர்ண பிசாசினி என்னும் தேவதை யட்சணி வகையை சார்ந்ததுதான் கர்ண யட்சணி என்றும் ஒரு தேவதை உண்டு அந்த தேவதையும் முக்காலமும் காதில் வந்து பேசிக்கொண்டிருக்கும் நீங்கள் நினைத்த கேள்விகளுக்கான குறி சொல்லும் இந்த சப்தம் ஒரு வகையான கீச்சு குரலில் அமையும் .அந்த தேவதையை போலவே இந்த கர்ண பிசாசினி தேவதையும் குறி சொல்ல கூடியதுதான் .
மற்ற குறி சொல்லும் தேவதைகளுக்கும் இந்த தேவதைகளுக்கும் என்ன வித்தியாசம் என்றால் மற்ற தேவதைகளை வைத்து குறி சொன்னால் உணர்ந்து சொல்ல வேண்டும் .இந்த தேவதைகள் அப்படி அல்ல .இந்த தேவதையானது காதில் வந்து பேசும் .முதலில் சித்தி செய்யும் போது காதில் ஒரு வகையான இரைச்சல் சப்தம் கேட்கும் அதற்கு பிறகு ஒரு காத்து சுத்தமாக கேட்காது .அதற்கு பிறகுதான் அந்த தேவதை பேசும் சப்தம் நம் காதுக்கு கேட்கும் .
இந்த மந்திரத்தை அகோரிகள்தான் பயன்படுத்துகிறார்கள் அதனால் இந்த உபாசனா செய்யும் பொது மிகவும் பாதுகாப்பு அவசியம் .
கர்ண பிசாசினிமூலமந்திரம் :
ஓம் ஹ்ரீம் சமன் சக்தி பகவதி கர்ண பிசாசினி
சந்திர ரூபிணி வட் வட் சுவாகா
இந்த மந்திரத்தை 125000 உருக்கள் ஏற்றி சித்தி செய்த பின்னர் அந்த தேவதை உங்களிடம் பேசும் .
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989