Wednesday, March 22, 2017

செல்வம் பெருக சில குறிப்புகள்

செல்வம் பெருக சில குறிப்புகள்

  1. வீட்டில் ஏற்றும் காமாட்சி விளக்கில் டைமண் கல்கண்டுபோட்டு தீபம் ஏற்ற லஷ்மி கடாட்சம் ஏற்படும்.
  2. வீட்டில் வெள்ளை புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடுநீங்கும்
  3. வீட்டில் பல வித ஊறுகாய் வைத்திருக்கவும், ஏனெனில்குபேரன் ஊறுகாய் பிரியர். எனவே பல வித ஊறுகாய்வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.
  4. நமது வீட்டிற்கு வரும் சுமங்கலிப்பெண்களுக்கு நீர் அருந்ததரவும். பின் மஞ்சள் குங்குமம் தரவும். இதனால் ஜென்மஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பண வரவு ஏற்படும்.
  5. அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம்போடக்கூடாது. தலைக்கு எண்ணெய் தடவக்கூடாது.பூஜை காலைப் பொழுதில் செய்யக்கூடாது. பிதுர்களைமட்டும் வழிபட பணம் வரும்.
  6. வீட்டில் விளக்கு ஏற்றியவுடன் பால், தயர், குடிநீர், உப்பு,ஊசி, நூல் இவைகள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது.பணம் ஓடிவிடும்.
  7. பொதுவாக இறை பக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெறுவது புண்ய பலம் கூடும். பண வரவு அதிகரிக்கும்.
  8. வெள்ளளிக்கிழமை  சுக்ர ஓரையில் மொச்சை, சுண்டலைமகாலஷ்மிக்கு நைவேத்யம் செய்து நமது  குடும்பத்தினர்மட்டும் சாப்பிடவும். தொடர்ந்து செய்து வர குடும்பத்தில்பண புழக்கம் அதிகரிக்கும்.
  9. அபிஜித் நட்சத்திரத்தில் (பகல் 12 மணி) அரவாணிக்குதிருப்தியாக உணவளித்து அவள் கையால் பணம் பெறபணம் நிலைத்திருக்கும்.
  10. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு மூன்றில் சுக்ரன்நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்ரஓரையில் பணம் பெற அன்றிலிருந்து நமக்கு சுக்ர திசைதான்.
  11. பசுவின் கோமியத்தில் தினமும் சிறிதளவு குளிக்கும் நீரில்கலந்து குளிக்கவும், வீட்டில் தெளிக்கவும் .45 நாட்கள்விடாமல் செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.
  12. முழு பாசி பருப்பை வெல்லம் கலந்த நிரில் ஊற வைத்துபின் அதனை (மறுநாள்) பறவைக்கு, பசுவிற்குஅளித்திடவும். இதனை தொடர்ந்து செய்து வர பணத்தடைநீங்கும்.
  13. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயாருக்குஅபிஷேகத்திற்கு பசும் பால் வழங்கிட பணம் வரும். பச்சைவளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.
  14. பெண்கள் இடது கையில் வெள்ளி மோதிரம் அணியதனப்ராப்தி அதிகரிக்கும்.
  15. பசும்பாலை சுக்ர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை செய்திட நிச்சியமாக பணம் வரும்.
  16. பாசிப்பருப்பை ஒரு பச்சை பையில் மூட்டையாக கட்டிதலையடியில் வைத்து உறங்கி மறுநாள் அதனை ஒருபிளாஸ்டிக் பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும்பணப்பிரச்சனை தீரும்.
  17. தினசரி குளிக்கும் முன் பசுந்தயிரை  உடல் முழுவதும்தடவி சிறிது நேரம் சென்று குளிக்க தரித்திரம் விலகும்.
  18. குளித்தவுடன் முதுகை முதலில் துடைக்கவும் தரித்திரம்விலகும்.
  19. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என தொடர்ந்து 12மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானைதரிசிக்கவும் நீங்கள் உறுதியாக கோட்டீஸ்வரர்  ஆகலாம்.பூர்வ புண்ணியம் இல்லாதவர் கூட லட்சாதிபதி ஆகலாம்.
  20. அம்திஸ்ட் கல் 10 கேரட் வாங்கி பணப்பெட்டியில் வைக்கபணம் ஆகர்ஷணம் ஆகும். சீக்கிரம் செலவு ஆகாது.
  21. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பகுதியில் கிணறு,நெல்லி மரம், வில்வ மரம் இருக்க அந்த வீட்டில் லஷ்மிகடாட்சம் ஏற்படும்.
  22. தினமும் காலையில் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணுசஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லஷ்மி நித்தமும் வாசம்செய்வாள்.
  23. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி வழிபடவசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.
  24. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமைவரும் வேளையில் அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11தீபமும் ,11 முறை வலம் வந்து வழிபட்டால் பணவரவுநிரந்தரமாகும்.
  25. வீட்டில் தலை வாசல் படியில் கஜலஷ்மி உருவத்தைவெள்ளி தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.
  26. ஒவ்வொரு மாதத்தில் வரும் பெளர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களை பெறலாம்.
  27. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை  வழிபடசெல்வம் பெருகும்.
  28. தொடர்ந்து  11 பெளர்ணமி அன்று இரவு 8.30 மணிக்குசொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலைஅணிவித்து பிரசாதமாக அவல், பாயாசம் படைத்து வழிபடசொர்ண ஆகர்ஷணமாகும்.
  29. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் திரிதளவில்வத்தால் அர்சித்து, வில்வ மாலை அணிவித்திடபணம் குவியும்.
  30. ஐஸ்வர்ய தூப பொடியுடன், துளசி பொடியுடன் சேர்த்துஅவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.
  31. சுக்ர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் குவியும்.
  32. வௌளிக்கிழமை  மாலை நேரத்தில் பசுவிற்குஉணவளிக்க செல்வம் சேரும்.
  33. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதளவில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணம் ஆகும்.
  34. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து இருவேளையிலும் லஷ்மி மந்திரம் கூறியபடி தெளித்திடசெல்வம் சேரும்.
  35. சுக்ர ஓரையில் மொச்சை பயிர் வாங்கிட செல்வம் சேரும்.
  36. சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அவரவர்பிறந்த தினத்தில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.
  37. பசுவுடன் கூடிய கன்றுக்கு உணவளித்தால் சகலசெல்வங்களும் வசமாகும்.
  38. வயதான சுமங்கலிக்கு மங்கல பொருட்களுடன்வளையல், மருதாணி சேர்த்து தானம் அளித்திட லஷ்மிஅருள் பரிபூரணமாக கிட்டும்.
  39. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும்,தொழில் ஸ்தாபனத்திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.
  40. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம்ஆகர்ஷணமாகும்.
  41. தங்க நகை அணிந்த திருப்பதி வெங்கடாஜலபதி  படத்தில்காலை எழுந்தவுடன் கண் விழித்திட பணம் கிடைக்கும்.
  42. தனாகர்ஷண தைலத்தால் விளக்கு ஏற்றிட செல்வம்நிலையாக தங்கும்.
  43. சொர்ணாகர்ஷன பைரவருக்கு 9 நெய் விளக்கு ஏற்றிட,தொடர்ந்து 9 வாரம் செய்து வர குடும்பத்தில் முன்னேற்றம்ஏற்படும்.
  44. குபேரனுக்கு தாமரை திரி போட்டு விளக்கேற்றிவழிபட்டால் பணம் வரும்.
  45. குல தெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும்இடைவிடாமல் செய்து வர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.
  46. திருமலை வெங்கடாஜலபதிக்கு  வெண் பட்டு அணிவித்துவழிபட செல்வம் சேரும்.
  47. துளசி மாடம் அமைத்து தொடர்ந்து அதனை பூஜை செய்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.
  48. சொர்ண பைரவருக்கு பன்னீர் கொண்டு அபிஷேகம்செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம்கிட்டும்.
  49. செவ்வாய்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர்முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம்பெருகும்.
  50. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்சித்து வழிபடபூமி லாபமும், செல்வ வளம் கிட்டும்.
  51. கோவிலில் லஷ்மி மீது வைத்த தாமரை மலரைக்கொண்டு வந்து பச்சை பட்டில் வைத்து மடித்துபணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.
  52. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்து அதனைஅன்னதானத்திற்கு செலவிட அதனை போல் ஐந்து மடங்குநம்மிடம் வந்து சேரும்.
  53. ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலில் பெருமாளுக்குஅணிவித்த சந்தனத்தை பெற்று அதனை தினமும்அணிந்து வர பணம் வரும்.
  54. வெள்ளிக்கிழமை சுக்ர ஓரையில் மகாலட்சுமிஅஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழ் கொண்டுஅர்சிக்க  தனலாபம் கிட்டும்.
  55. ஐஸ்வர்ய லஷ்மி படத்தினில் வாசனை திரவியம் தடவிபணப்பையில் வைக்க பணம் ஆகர்ஷணம் ஆகும்.
  56. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களை கொண்டு செய்ய லஷ்மி கடாடசம்நிரந்தரமாகும்.
  57. ஸ்ரீ லஷ்மி குபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூபஆராதனையோடு கூறி வர அஷ்ட தரித்திரம் நீங்கிதனலாபம் பெறலாம்.
  58. கனக தாரா ஸ்தோத்திரத்தினை கூறியும் கேட்டு வர பணம்கிடைக்கும்.
  59. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்துமஞ்சளாக பிடித்து அவர்களை  நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  60. மகாலட்சுமிக்கு  பச்சை பட்டினை அணிவித்து வணங்கபணம் வரும்.
  61. கற்பக விநாயகரை 1008 அருகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்கதொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
  62. பச்சை பட்டு உடுத்திய லஷ்மி படத்தனை வாசலில் மாட்டிதினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும்வசமாகும்.
  63. செல்வத்திற்கு உரியவள் மகாலட்சுமி வெள்ளிக்கிழமைதினம் வழிபடவும் 24 வெள்ளிக்கிழமை வழிபாட்டால்பணம் கிடைக்கும்.
  64. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிகிடைக்கும்.
  65. இந்துராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோக வாழ்வுவாழ பணம் கிடைக்கும்.
  66. வியாழன் அன்று குரு ஓரையில் தட்சணாமூர்த்தி வழிபாடுசெய்ய செல்வம் சேரும்.
  67. வெள்ளிக்கிழமை காலை சுக்ர ஓரையில் சுக்ரன்,மகாலஷ்மி இருவரையும் மல்லிகை மலர் கொண்டு 33வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.
  68. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபடபணம் கிடைக்கும்.
  69. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்ய சூக்தம் சுக்ரஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.
  70. அவரவர் குல தெய்வத்தை தினம் அதிகாலை நேரத்தில்நம்பிக்கையுடன் வழிபட பணம் வரும்.
  71. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி இவைகளில்முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்தஅளவின் மடங்குகள் பணம் வரும்.
  72. திருப்பதி வெங்கடாஜலபதி, பத்மாவதி படம் வைத்துவழிபட பணம் வரும்.
  73. தனதா யட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திரசாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.
  74. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க கோடிகணக்கில்பணம் கிடைக்கும்.
  75. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தனவீரபத்ரன், சொர்ண காளி, சொர்ண வராகி இவைகளைவழிபட தங்க நகை கிடைக்கும்.
  76. ஆந்தையை வழிபட பணம் கிடைக்கும்.
  77. ஜோடி கழுதை படம், ஓடும் வெள்ளை குதிரை படம்,அடிக்கடி பார்க்க பணம் வரும்.
  78. தனாகர்ஷண மூலிகை சட்டை பாக்கெட்டில் இருக்க பணம்குறையாது.
  79. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.
  80. ஒத்தை பனை மர முனீஸ்வரனை ஏரளஞ்சில் தைலதீபமேற்றி வழிபட அன்றே பணம் கிடைக்கும்.
  81. வியாழக்கிழமை குபேர காலத்தில் குபேரனை வழிபடபணம் வரும்.
  82. ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பஞ்சாட்சர கணபதி யந்த்ரம் மந்திரம்


பஞ்சாட்சர கணபதி யந்த்ரம்  மந்திரம் 

எந்த ஒரு கலைகளுக்கும் முழு முதற்கடவுளாக விளங்குகிறவர் கணபதி ஆகையால் எந்த ஒரு சூழ்நிலையிலும் முழு முதற்கடவுளான கணபதி மந்திரத்தை கூறி முறையிட்டால் எந்த ஒரு பிரச்சனைகளும் நம்மை ஒன்றும் செய்யாது .

மூல மந்திரம் 

வயநமசி வவ்வும் கணபதி வகார கணபதி 
யநமசிவ யவ்வும் கணபதி யகார கணபதி 
நமசிவய நவ்வும் கணபதி நகார கணபதி 
மசிவயந மவ்வும் கணபதி மகார கணபதி 
சிவயநம சிவ்வும் கணபதி சிகார கணபதி 
அரிஓம் ஐயும் கிலியும் சவ்வும் தேவரீர் கைவசமானது போல 
சங்கு சக்கரம் சர்வ சத்துரு வசீகரம் உலகெல்லாம் 
உனது வசம் ஆனது போல எனது வசமாக சிவா .

பூஜை முறைகள்   

பஞ்சாட்சர கணபதி பூஜையை வளர்பிறை சமயத்தில் வெள்ளிகிழமை நாட்களில் பூஜை துவங்க வேண்டும் .பூஜையில் இந்த யந்திரத்தை அன்றைய தினம் குறு ஓரை அல்லது சுக்கிர ஓரை சமயம் பார்த்து மேற்கண்ட யந்திரத்தை எழுத வேண்டும் .எழுதி யந்திர சாபநிவர்த்தி செய்ய வேண்டும் .அதற்கு பிறகு யந்திரதிற்கு நைவேத்யங்கள் செய்து பூஜை செய்ய வேண்டும் ..

இந்த மந்திரத்தை 1008 தடவை விரதமிருந்து கூறிவந்தால் சித்தியாகும் .இதை சித்தி செய்தால் உடனடியாக உங்களை அனைவரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள்நம் கஷ்டங்களை போக்ககூஒடிய ஒரே மனிதன் நீங்கள்தான் என்று கூறுவதை உங்கள் அனுபவத்தில் பார்க்கலாம்.

அவ்வளவு சக்தி வாய்ந்த யந்திர பிரயாக முறை இது ..
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட அன்னபூரணி யந்திரம்



தீராத கடன் ,வறுமை,கஷ்டங்கள் நீங்கிட  அன்னபூரணி யந்திரம் 

கடன்பட்டுவிட்டால் மனதில் அமைதி இராது. எப்பொழுது கடன் கொடுத்தவன் கேட்க வந்து விடுவானோ என்ற அச்ச உணர்வு வந்து வாட்டும்.நம்முடைய தரித்திரம் காரணமாகவே கடன் தொல்லைகள் ஏற்படுகின்றன. 
கடன் தொல்லை அகன்றால் மட்டுமே நாம் நம்முடைய வாழ்வில் முன்னேற முடியும்.நமது கடன்களும்தரித்திரமும் நீங்க அன்னபூரணி நமக்கு உதவ முன் வருகின்றாள்.

அன்னபூரணி மூலமந்திரம்

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஓம் நமோ பகவதே 
அன்னபூர்னே மம பிரிஷித அன்னம் தேஹி சுவாகா 

வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து கொள்ள வேண்டும்.அன்னபூரணி யந்திரம் வளர் பிறையில் ரோகினி மிருகசீரிடம் உத்திரம் ,சுவாதுய் இவற்றில் எதாவது ஒரு நட்சத்திரம் வரும் நாளில் இந்த யந்திரத்தை பிரதிஷ்டை செய்ய வேண்டும்முதலில் யந்திரத்திற்கு அபிஷேகம் செய்து பின்பு தூபம் காட்டி நிவேதனப்போருட்களாக தேங்காய் பழம் பொங்கல் பழங்கள் பூக்கள் படைத்து மூலமந்திரத்தை தினம் 108 உருக்கள் வீதம் 11 நாட்கள் ஜெபிக்க சித்தியாகி அன்னை அன்னபூரணியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதன்பிறகு எல்லாவிதமான கடன் தொல்லைகள் அனைத்தும் நீங்கி நல்வாழ்வு வாழலாம் 

இப்படி முறையாக கையால் எழுதி பூஜை செய்த யந்திரங்கள்தான் சரியாக வேலை செய்யும் . முறையாக பூஜை செய்த யந்திரங்கள் நம்மிடம் உள்ளன .
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, March 18, 2017

பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க


பசுவின் தோஷங்கள் நீங்கி அதிகமாக பால் சுரக்க
கிராமத்திலாகட்டும் நகரத்திலாகட்டும். நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்கள் வீட்டில் " காமதேனுவாகவும், மஹாலட்சுமியாகவும் " போற்றி வழிபட்டு வளர்த்து வருவார்கள் " பசுவை " அம்மனின் கிருபையால் அதை பராமரித்து வருபவர்களுக்கு பசுவின் மடிபெருத்து, பாலானது பெருகி,வளர்ப்போரின் வாழ்வில் தனசம்பத்து பெருகும். அப்போது மனம் பொருக்காத ஒரு சிலர் ஒன்று கூடி பேசிக்கொள்வார்கள். அந்தப் பசுவின் மடியைப்பாருடா ஒருநாளைக்கு குறஞ்சது இருபது லிட்டர் குறயாம பால் கொடுக்கின்றது. பிறகு ஏன் அவன் பணஞ்சேர்க்கமாட்டான். எம்பாங்க அந்த நேரமே அந்தப் பசுவிற்கு பலமான கண் அடி விழுந்திடும். அன்னயிலயிருந்து அந்தப்பசு இரண்டு லிட்டர் பால் கொடுப்பதே மிகசிரமமாகி விடும் (இது யான் அனுபவத்தில் கண்டது) பசு மாட்டிற்கே கண்திருஷ்டின்னா ! பார்த்துக்கோங்க. கீழ்வரும் சுபமந்திரத்த நாளொன்று நூறு உரு வீதம் நூறு நாளுக்கு , உரு கொடுத்து சித்தி செய்து கொண்டால், இது போன்ற கண்திருஷ்டியால் அவதியுறும் பசுக்களுக்கு. தோள்மீது போட்டுக்கொள்ளும் சுத்தமான பருத்தி துணியால் துண்டால், மந்திரத்தை 21 முறை காலை மாலை, இப்படியாக 9 நாள் மந்திரித்து பசுவின் நெற்றியில் விபூதியைத் தடவி. அதன் சரீரத்தின் மீதும் தடவி விட , கண்திருஷ்டி நீங்கி பழைய நிலையை விட. சற்று அதிகமாகவே பால் சுரக்கும். நம்புவர்களுக்கு மட்டுமே.
மூலமந்திரம்
குன்றதிரப் புல்மேய்ந்து, குளமதிர நீர் குடித்து, மண்ணதிர மேய்ந்து வருகின்ற காராம்பசுவே, உன்னை உற்றுப்பார்த்தவன் கண்களிரண்டும், பாம்பு கண்போலே வெடிக்கவும், ஆனைக்கண்டால் பாலாய் சொரியவும், ஒம்காளி ஓம்பிடாரி ஓம்நமசிவய.
என்று செபிக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குடும்ப ஒற்றுமைக்கு, உதவும் "தனதா தூப பொடி":

குடும்ப ஒற்றுமைக்கு, உதவும் "தனதா தூப பொடி":
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் சண்டை சச்சரவுகள்,பிரிவினை உண்டாகுதல்.கணவன் வேறு பெண்ணுடன் தவறான தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.மனைவி வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுதல்.அதேபோல் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காமை,போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பவர்கள்,"தனதா தூப பொடியை" இரவு படுக்க போகும் முன்பு புகை போட்டு தூபம் இட்டு வர மேற்கண்ட பிரச்சினைகள் விலகும்.மேலும் கண்திருஷ்டி கோளாறுகள் விலகும்.
குடும்பத்தில் உள்ளவர்கள் தீயப் பழக்கத்திலிருந்து விடுபடுவார்கள்.குடும்ப ஒற்றுமை உண்டாகும்.
"தனதா தூப பொடி" தேவைக்கு எனது தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தன ஆகர்ஷண ரகசியம்:

தன ஆகர்ஷண ரகசியம்:
நொச்சி செடிக்கு வெள்ளிக் கிழமை காப்புக் கட்டி,அதன் வேரை எடுத்து சாபநிவர்த்தி செய்து சந்தனம்,குங்குமம் தடவி தூபம் காண்பித்து பர்சில் அல்லது கேஷ் லாக்கரில் வைத்து கொள்ள பண வரவு உண்டாகி பணப் புழக்கம் அதிகரிக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வைரக்கல் மூக்குத்தி பரிகாரம்:


வைரக்கல் மூக்குத்தி பரிகாரம்:
பெண்கள் வைரக்கல் மூக்குத்தியை அணிந்தால் அவர்களுக்கு முக வசீகரத்தையும்,லட்சுமி கடாட்சத்தையும் உண்டாக்கும்.மேலும் கணவனுக்கு நல்ல யோகப் பலன் தரும்,ஆயுள் கூடும்.மரண கண்டத்தில் தப்பிப்பார்.கணவன் செய்யும் தொழில் படிப்டியாக நல்ல வளர்ச்சியடையும்.வைரம்-சுக்கிரபகவானுக்குரிய உலோகம்.இதனை அணிவதால் சுகபோக வாழ்வைத் தரும்.தம்பதிக்குள் ஒற்றுமையை பலப்படுத்தும்.
இந்த காலத்தில் நாங்க மூக்கு குத்துரதே இல்ல,அப்புறம் எப்படி மூக்குத்தி போடுறது என்று நினைக்கிறீங்களா தாய்க்குலமே.
கண்டிப்பாக மூக்குத்தி அணிய வேண்டும் இது தான் வளமான வாழ்வை தரும்.
மூக்குத்தி அணிவதால் ஏற்படும் பலன்களை பிறிதொரு பதிவில் பதிவிடுகிறேன்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989