Monday, April 17, 2017

ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்


தீராத நோய்கள் தீர ,சர்க்கரை நோய் பாதிப்புகள் குறைய,கணவன் மனைவி அன்யோன்யம் உண்டாக ஸ்ரீ சுக்ரபகவான் மந்திரம்


ஓம் நமோ பகவதே பார்கவாய சுக்ரமுனியே |
ம்ருதசஞ்ஜீவினீம் தாபய தாபய ஸ்வாஹா |ஓம் நமஹ ||


வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் ஸ்ரீ துர்க்கை ஆலயத்தில் வைத்து இம்மந்திரம் ஜெபித்து வரத் தீராத நோய்கள் தீரும்.சர்க்கரை நோய் பாதிப்புகள் வெகுவாகக் குறையும்.தம்பதிகளுக்குள் அன்யோன்யம் உண்டாகும்.செல்வநிலையில் உயர்வு உண்டாகும்.

வெண்ணிற ஆடைகள் அணிந்து ஜெபித்தால் நிறைவான பலன் கிடைக்கும்.



தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, April 16, 2017

தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....


தடையின்றி தனவரவு,காரிய வெற்றி பெற.....
எல்லா மனிதர்களும் தங்கள் வீட்டை விட்டு வேலை நிமித்தம் தொழிற்சாலை,அலுவலகம்,வியாபாரம் என்று வெளியில் செல்லும்போது ஏற்படும் ஒரே சிந்தனை தனவரவு பெற வேண்டும் என்பதும்: போகும் காரியங்களில் வெற்றியை அடைய வேண்டும் என்பதும்தான் பிள்ளைக்கு உயர்கல்விக்கு இடம் கிடைக்க வேண்டும். பையனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும்,எதிரிகளால் ஏற்பட்ட வழக்குகளில் வெற்றிகிட்ட வேண்டும். அரசாங்கத்தில் பெற வேண்டிய காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும், கோபமாகச் சென்ற மருமகள் பிரச்சினை இல்லாமல் வீட்டிற்கு வரவேண்டும். மருத்துவ சிகிச்சையில் வெற்றி கிடைக்க வேண்டும் போன்ற பற்பல காரியங்களிலும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பவை அனைவரது சிந்தனையிலும் உள்ள அன்றாட பிரச்சினைகள். இதுமாதிரியான காரியங்களில் வெற்றியடையவும் தனவரவு பெறவும் கீழ்க்கண்ட பரிகாரங்கள் துணை நிற்கும்.
பரிகாரம்:
காரிய வெற்றிக்காகவும் தன வரவுக்காகவும் மேற்கொள்ளும் பயணத்தின்போது கறுப்பு நிற உடை அணிந்து செல்லக்கூடாது. தனது சட்ட்டைப் பையில் அல்லது பேக்கில் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு தாளில் பொட்டலம் கட்டி எடுத்துச் செல்லுங்கள். அம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். காரியம் தடையின்றி நடக்கும். மஞ்சள் தூளை எடுத்துச் செல்ல முடியாதவர்கள் ஒரு மஞ்சள் துண்டை எடுத்துச் செல்லலாம். காரியம் மங்களமாக முடியும். வர வேண்டிய தனவரவும் வரும்.
பரிகாரம் – 2
பயணத்தின் போது தங்களது குலதெய்வத்தை மனதில் வேண்டுவதோடு ‘ஓம் நமசிவாய நமக’ என்று மனதுக்குள் தொடர்ந்து 108 முறை சொல்லிச் செல்ல வேண்டும். இப்படிச் சொல்லிக் கொண்டே சென்றால் நீங்கள் தேடிச் சென்ற தனவரவு கிடைக்கும். சென்ற காரியத்திலும் வெற்றி கிட்டும். (இது அனுபவத்தில் கண்ட உண்மை.

கடன் தோஷம் நீங்க பரிகாரம்


கடன் தோஷம் நீங்க  பரிகாரம் 
சென்ற பிறவில் செய்த தவறுகளால் இந்த பிறவியில் ஏற்பட்ட கடன் தொல்லை இருந்து மீள 3 பௌர்ணமி நாளில் தங்கள் குலதெய்வம் வழிப்பாடு செய்து வந்தால் கடன் தொலை படிபடியாக குறையும் ,கடனை அடைக்கலாம்.
குலதெய்வம் அருகில் இல்லாமல் தொலைவில் வசிபவர்கள் அவர்கள் வீட்டில் குலதெய்வம் போட்டோ வைத்து அல்லது குலதெய்வம் உள்ள ஊர் திசை பார்த்து 5 முக நெய்விளக்கு ஏற்றி 9 பௌர்ணமி நாளில் தொடர்ச்சியாக வழிப்பாட்டு வந்தால் கடன் சுமை குறையும். 90 நாளில் கடனை அடைத்துவிடலாம் . உங்களுக்கு வரவண்டிய பாக்கி இருந்தாலும் வசூல் ஆகிவிடும் .

கொட்டைகரந்தை-மூலி கை

கொட்டைகரந்தை-மூலி கை
கொட்டைகரந்தை-மூலி கை
தமிழகத்தின் வளமான நிலங்களின் வரப்புகளிலும், நெற்பயிர் அறுவடைக்கு பிறகு வயல்களிலும் முளைத்து கிடக்கும். நல்ல மணம் கொண்ட சிறு செடியினம். செடியின் உச்சியில் பந்து போன்ற இதன் பூக்கள் மொட்டை தலைபோன்று காட்சியளிக்கும். இதனால் மொட்டை கரந்தை என்ற பெயர் இதற்கு உண்டு. பச்சை நிறத்தில் தோன்றும் இந்த பூக்கள் நாளடைவில் ஊதா நிறத்தில் காட்சியளிக்கும். குத்துக்கரந்தை, கொட்டைகரந்தை, சிறுகரந்தை, சிவகரந்தை, சுனைக்கரந்தை, சுரைக்கரந்தை, சூரியக்கரந்தை, விஷ்ணுகரந்தை, நாறும் கரந்தை என பல்வேறு பெயர்களால் வழங்கப்படும் கரந்தை பல்வேறு மருத்துவ பயன்களை தன்னுள் கொண்ட கற்பக மூலிகையாகும்.
இதில் கரந்தையும், சிவகரந்தையும் மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகிறது. கொட்டை கரந்தை சற்றேறக்குறைய சிவகரந்தைக்கு ஒப்பாக இருந்தாலும். மணத்தில் சிவகரந்தை சிறப்புடையது. கரந்தையில் வெண்மை, செம்மை என இரண்டு வகையுண்டு, மலமிளக்கியாகவும், தாது வெப்பம் தணிக்கவும் பயன்படும். நுரையீரல்நோய், யானைக்கால் நோய், ரத்தசோகை, பெண்களின் கர்ப்பபை வலிகள், மூலம் மூச்சிரைப்பு, வெண்புள்ளி, வயிற்றுக்கடுப்பு, வாந்தி இருமல், விரைவீக்கம், பெருங்குடல்வலி, தளர்ந்து தொங்கும் மார்பகம், மனக்கோளறுகள் ஆகியவற்றை நீக்க வல்லது. ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயநோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது.
கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.
கொட்டை கரந்தையின் பட்டையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் மூலம் குணமாகும். இதன் முழுச்செடியை கசாயம் வைத்து சாப்பிட தொடக்க நிலையில் உள்ள பைத்தியம் குணமாகும். சூரணம் செய்து உண்பதால் தலை, மூளை, இதயம் வலிமை அடையும்.இதன் கசாயத்துடன் சீரகத்தை பொடித்து போட்டு காலை, மாலை 100மிலி வீதம் குடித்து வந்தால் வயிறு தொடர்பான அனைத்து நோய்கள் நீங்கும்.கொட்டை கரந்தையின் சமூலத்தை இடித்து சூரணம் செய்து அதில் 4 கிராம் அளவில் காலை மாலை சாப்பிட பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை மற்றும் கரப்பான் நோய்கள் தீரும்.
இதன் இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வேளைக்கு ஒரு கிராம் எடை வீதம் நாள்தோறும் காலை மாலை சாப்பிட தோல்நோய்கள் அனைத்தும் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை பெருகும்.கொட்டை கரந்தையின் பூக்காத செடிகளை எடுத்து வந்து நிழலில் காயவைத்து சூரணம் செய்து கொள்ளவேண்டும். இதில் 5 கிராம் அளவில் எடுத்து அதில் பாதியளவிற்கு கற்கண்டை தூள்செய்து சாப்பிட வெள்ளை, உள்ரணம், கிராணி, கரப்பான் ஆகியவை தீரும். தொடர்ந்து சாப்பிட்டு வர மூளை, இதயம், நரம்பு ஆகியவற்றை பலப்படுத்தும்.இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும்.
இந்த பொடியுடன் கரிசிலாங்கண்ணி பொடியை சம அளவில் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட இளநரை நீங்கும். உடல் பலம் பெறும். கொட்டை கரந்தையின் பூக்களை பொடிசெய்து சாப்பிட உடல் சூடு குறைந்து குளிர்ச்சிபெறும்.கொட்டை கரந்தையின் விதைகளை சேகரித்து பொடி செய்து ஒரு கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட செரியாமை, இருமல் நீங்கும். இலைப்பொடியை 2 கிராம் அளவில் சாப்பிட வயிற்றிலுள்ள பூச்சிகள் நீங்கும்.
சிவகரந்தை:
இதே போல் சிவகரந்தையும் பல்வேறு நோய்களை நீக்கும் ஆற்றல் கொண்டது. வாந்தி, சுவையின்மை, ஆண்மைக்குறைவு கரப்பான், காசம், அக்கினிமாந்தம் நீங்கும். துவர்ப்பும் சிறுஅளவில் கார்ப்பு சுவையும் கொண்ட இதன் இலையை பொடித்து 4 கிராம் முதல் 8 கிராம் வரையில் வெண்ணெய் சேர்த்து சாப்பிட மூல நோய் நீங்கும்.
சிவகரந்தையின் இலைச்சாறு பாதரசத்தை சுத்தி செய்து அதை நீராய் மாற்றவும் செய்யும் தன்மை கொண்டதால் ரசமணி செய்பவர்களுக்கும், ரசவாத வித்தை புரிபவர்களும் இதை அதிகம் நாடுவார்கள். கிராமங்களில் கைகளில் சிறு குச்சியை வைத்த கொண்டு சிறுவர்கள் விளையாடும் போது இந்த செடியை தட்டுவார்கள் அப்பொழுது இதிலிருந்து வரும் மணத்தை விரும்பி மீண்டும் மீண்டும் தட்டிச்செல்வார்கள். இந்த மணமிக்க செடிதான் கொடிய மூலத்தையும் காசத்தையும் நீக்கி மனித குலத்தை வாழ்விக்கிறது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. இதை தேவையறிந்து முன்னோர் சொல்லிய வழியில் பயன்படுத்தி வளமோடு வாழ்வோம்.

Thursday, April 13, 2017

முடி வளர சித்தமருத்துவம்

முடி வளர சித்தமருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க
வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.
வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:
கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:
நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:
ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.
காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:
அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:
மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:
தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.
முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

சொட்டையான இடத்தில் முடி வளர:
நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

புழுவெட்டு மறைய:
நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தங்கம் சேர்க்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்


தங்கம் சேர்க்க விரும்புபவர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
பெண்களுக்கு தங்கம் என்றால் மிகவும் பிடிக்கும். தங்கம் சேர்க்க விரும்பும் பெண்களுக்கான எளிய பரிகார முறையை கீழே பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை அவிட்டம் நட்சத்திரத்தில், காலை எழுந்தவுடன் யாருடனும் பேசாமல் ஒரு பித்தளைக் குடத்தில் துவரம் பருப்பு, அரிசி, கொண்டைக்கடலை இவை மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி, அதன் மேல் ஒரு தேங்காயை கவிழ்த்து வைத்து, குடும்பத்தாருடன் அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று, சுவாமியின் முன் குடத்தை வைத்து, அபிஷேக ஆராதனைகள் முடித்து, அர்ச்சகரிடம், தோஷம் நீங்க செவ்வாய் கிரக பூஜைத்தானம் என்று சொல்லி கொடுக்க வேண்டும்.
பிறகு அர்ச்சகரிடம் குடத்தை கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து விட வேண்டும். பிறகு சிறிது கொண்டைக்கடலையை அவித்து தானம் செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தால் வீட்டில் தங்கம் நிலையாகத் தங்கும்.
இதனை செவ்வாய்க்கிழமைகளில் வரும் அவிட்டம் நட்சத்திரத்தன்று தொடர்ந்து செய்து வர வேண்டும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, April 12, 2017

அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்!

அஷ்வகந்தா சூரணத்தின் அற்புதமான நன்மைகள்!

அஷ்வகந்தா இப்போது எல்லாரிடமும் பிரபலமாகிக் கொண்டு வரும் மூலிகை. ஆனால் மிகப்பழமையான இந்த மூலிகை கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் வளரக் கூடிய மூலிகைச் செடியாகும்.
இது மிக அற்புதமான மருத்துவகுணங்களைக் கொண்டுள்ள மூலிகைச் செடி. அதன் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே மருத்துவ குணங்களைப் பெற்றுள்ளது. இது நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். இலைகள் மற்றும் வேரிலிருந்து தயாரிக்கப்படும் அஷ்வகந்தா பொடி மற்றும் சூரணங்கள் வெவ்வேறு வகையில் நோய்களை குணப்படுத்த பயன்படுத்துகிறார்கள். நோய்களுக்கென்று இல்லாமல் அவை உடல் வலிமையாக்கவும் பயன்படுகின்றன. அவற்றின் சிறந்த பலங்களைக் காண்போம்.
நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பு : அஷ்வகந்தா சூரணம் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகப்படுத்தி உடல் முழுவதும் கடத்திச் செல்கிறது. இதனால் எல்லா உறுப்புக்களும் தேவையான வலிமையைப் பெறுகின்றன. மேலும் நோய் எதிர்க்கும் செல்கள் பலம் பெற்று எதிர்ப்புத்திறனை உடலில் அதிகரிக்கச் செய்கின்றன.
வலி நிவாரணி : ஆர்த்ரைடிஸ், ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸினால் உண்டாகக்கூடிய வீக்கங்களை இந்த சூரணம் குறைக்கின்றன.மேலும் வலிகளை போக்கும் நிவாரணிகளாகவும் செயல்படுகின்றன.காயங்களை ஆற்றும் தன்மை கொண்டுள்ளது. ஆன்டி-ஆக்ஸிடென்ட் : அஷ்வகந்தா சூரணம் சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்டாக செயல்படுகிறது. உடலில் உண்டாகும் தேவையற்ற கழிவுகளை நீக்கி, ஃப்ரீ ரேடிகல்ஸை அழித்து ரத்தத்தை சுத்தப்படுத்துகின்றன.இளமையாக இருக்க உதவுகின்றது.
மன அழுத்ததை குறைக்கின்றது: மன அழுத்தம் ஒரு ஸ்லோ பாய்ஸனாக செயல்பட்டு மற்ற உறுப்புக்களை பாதிக்கிறது என ஆய்வு கூறுகின்றது.இந்த சூரணம் மனதில் தேவையற்ற குழப்பங்களால் உண்டாகும் மன அழுத்தத்தை குறைக்கின்றது.நரம்பு மண்டலத்தை தூண்டி அதன் செயல்களை அதிகரிக்கச் செய்து புத்துணர்வோடு இருக்கச்செய்கிறது.
இளமையை நீட்டிக்க : சருமத்தில் உண்டாகும் சுருக்கத்தை போக்கும் காரணிகள் இந்த சூரணத்தில் உள்ளன. இறந்த செல்களை சருமத்தின் மூலம் வெளியேறச் செய்து, சருமத்திற்கு புத்துணர்வு தருகிறது.
மூளை சம்பந்தபட்ட நோய்க்கு தீர்வு: டெமென்டியா என்ற மூளையில் ஏற்படும் நோய் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.இது பொதுவாக வயதானவர்களுக்கு வரும்.தொடர்ந்து அஷ்வகந்தா சூரனத்தை உட்கொள்ளும்போது டெமென்டியா நோய் கட்டுக்குள் வரும். கேன்ஸர் செல்களை விரட்டும் : அஷ்வகந்தா சூரணம் கேன்ஸர் செல்களை அழிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கூறுகின்றது. அதேபோல் கீமோதெரபியுடன் இந்த சூரணத்தையும் கொடுப்பதனால் கேன்ஸர் செல்கள் வேகமாய் அழிகின்றன என கூறுகின்றனர். உடலுறவு பிரச்சனைகளை போக்கச் செய்கிறது: உடலுறவு சம்பந்தமான பிரச்சனைகளை இந்த சூரணம் போக்குகின்றது. உடலுறவு செய்யத் தூண்டும் ஹார்மோன்களை சுரக்கச் செய்கிறது இந்த சூரணம்.

அஷ்வகந்தா சூரணம் கிடைக்கும்

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989