Tuesday, May 16, 2017

வாழை மரத்தின் ரகசிய முறைகள்


வாழை மரத்தின் ரகசிய முறைகள்
1. தரித்திர பிணிகள் விலகஅமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.
2. திருமணம் தடை விலகதிருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.
3. சர்வ தரித்திரங்கள் விலக ஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகூர்த்த வேளையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.)
4. குழந்தை பாக்கியம் பெற குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதையை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
5. பித்ரு தோஷம் விலக100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.
6. செல்வம் மேலும் பெருக சம்பள பணத்தையோ அல்லது சுப காரியத்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்வம் மேலும் பெருகும்.
7. அன்ன தரித்திரம் விலகஅட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.
8. வியாபார விருத்தி பெருகஇதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.
9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகூர்த்த நாளில் சுபவேளையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகூர்த்த நாளில் சுப வேளையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம்
சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குல விருத்தி அடையும்.
10. பிள்ளைவரம் பெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுபநாளில் சுபவேளையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி எடுத்து மூன்று அங்குலம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பால் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?



குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும்.குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறுதெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது.அதன் சக்தியை அளவிடமுடியாது எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும்.குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்* என்று சிறப்புடன்அழைக்கப்படுகின்றன.குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி
வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரியஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம்.இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று.அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.இது எத்தனை தூரப்பார்வையோடு,வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்! விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் குரோமோ சோமே முடிவு செய்கிறது.
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது. ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம் மீண்டும் வழி வழியாக வளர்கிறது.வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும், முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்,பெண் குழந்தைகளை குல விளக்காக காத்தனர்.பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை.ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்.அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்.புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவது கிடையாது. அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அனைத்து நலன்களும் பெற்றிடுங்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Monday, May 8, 2017

பாவங்களை விலக்கும் சித்ரகுப்தன்

பாவங்களை விலக்கும் சித்ரகுப்தன்

சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும்.
சித்ரா பவுர்ணமி அன்று சித்ரகுப்தனின் படத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டாலும் சரி.. அல்லது காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தனின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் சரி, நம்முடைய பாவக் கணக்குகள் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை. 

மேலும் மறு பிறவி என்பதும் இருக்காது என்கிறார்கள். சித்ரா பவுர்ணமி தினத்தில் சிறு பிள்ளைகளுக்கு இனிப்பு கொடுத்து, ஆடை தானம் செய்வதுடன், புத்தகங்களையும் வழங்கினால், இந்தப் பிறவியில் நாம் செய்த தீமைகள் விலகும். விபத்துகளும், ஆபத்துகளும் நம்மை நெருங்காது. 

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

எதிர்மறை சக்திகள் நீங்க:

எதிர்மறை சக்திகள் நீங்க:
இலவங்கப் பட்டையுடன்,இலவங்கப்பத்திரியும் சேர்த்து செவ்வாய் கிழமை தோறும் வீடு/தொழிலகங்களில் தூபமிட்டு வர எதிர்மறை சக்திகள் நீங்கி சுபம் சேரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தை பாக்கியம் பெற பைரவர் விரதம்:


குழந்தை பாக்கியம் பெற பைரவர் விரதம்:
குழந்தை பாக்கியம் இல்லாத கணவன் மனைவியர்,ஆறு தேய்பிறை அஷ்டமி திதியில் பைரவருக்கு,செவ்வரளி மாலை,புனுகு இவற்றை சாற்றி,செவ்வரளி மலர்களால் இருவர் பெயருக்கும் அர்ச்சனை செய்து வந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அதேபோல் வறுமை,கஷ்டம்,தைரியமின்மை,எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சினைகள் தீர சனிக்கிழமை அல்லது அஷ்டமி திதிகளில் பைரவரை வணங்கி வந்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாத பிரச்சினைக்கு,என் முன்னோர்கள் கற்று கொடுத்த "புத்திர பாக்கிய யந்திரம்,தாயத்துக்கள்" செய்து கொடுத்து நிறைய அன்பர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது இது அணுபவ உண்மை.
"புத்திர பாக்கிய தாயத்து,யந்திரம்" தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தொழில் முடக்கம் நீங்கி,வியாபாரம் விருத்தி அடைய:


தொழில் முடக்கம் நீங்கி,வியாபாரம் விருத்தி அடைய:
கரும்புள்ளி இல்லாத எலுமிச்சைப் பழம் ஒன்றை எடுத்து தொழில் வளாகம்,அலுவலகம் இவற்றை சுற்றி வெளியில் நின்று பழத்தை நான்கு துண்டாக வெட்டி அதில் குங்குமம் தடவி திசைக்கு ஒன்றாக எரியவும்.
தொழில் முடங்கி இருக்கும் இடங்களில் முடக்கம் நீங்கி வியாபாரம் நடக்கும்.இதனை செவ்வாய்கிழமையன்று செய்யவும்.
செய்தொழில் வியாபாரம் சிறக்க தொழில் வசியம் வேண்டுவோர் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:
நாட்டுக்கோழி ஆண் முட்டை ஒன்றும்,பெண் முட்டை ஒன்றும் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சபூத சக்கரம் வரைந்து,தோஷ நிவர்த்தி மந்திரம் செபித்து உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தலையை 27 முறை சுற்றி இரண்டு முட்டைக்கும் இடையில் கற்பூரம் ஏற்றி வைக்க,செய்வினை கட்டு இருப்பின் முட்டை வெடித்து கற்பூரம் அனைந்து,உள்ளே இருக்கும் மஞ்சள் கரு,கருப்பாக வெளியேறும்.
இவ்வாறு இருப்பின் செய்வினை கட்டு உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.
தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989