Thursday, June 1, 2017

பத்ரகாளி எண் யந்திரம்:


பத்ரகாளி எண் யந்திரம்:
காளி யந்திரங்களில்,இந்த பத்ரகாளி எண் யந்திரம் சக்தி வாய்ந்தது.
தன்னை வழிபடுவர்களை எக்காலத்தில் கைவிடாமல் முழு பாதுகாப்பான வாழ்வை தருபவள் அன்னை பத்ரகாளி.
இந்த சக்கரத்தை தங்கத் தகடு அல்லது வெள்ளித்தகட்டில் கீறி மூலமந்திரத்தை லட்சம் உரு செபிக்க வேண்டும்.முறைப்படி பூஜை செய்து உருவேற்றிய தகட்டை சுருட்டி,தாயத்தினுள் அடைத்துக் கட்டிக் கொள்ள முழு பாதுகாப்பு கிட்டும்,ஏவல் பில்லி செய்வினை,மாந்திரீக மற்றும் மந்திர பாதிப்புக்கள் நம்மை அணுகாது.அதோடுமட்டுமல்லாமல்வளமான வாழ்வும் தந்து அருள்பாள்.
இதே சக்கரத்தை விபூதியில் எழுதி,மந்திரம் உருவேற்றி கொடுக்க சகல ஏவல் பில்லி சூன்யம் செய்வினை,பேய் பிசாசுகள் மிரண்டு ஒடும்.இது அனுபவ முறை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மறுமண தோஷம் உண்டா?

மறுமண தோஷம் உண்டா?
இலங்கை கொழும்புவில் இருந்து பெண்ணொருத்தி என்னோட போனுக்கு தொடர்பு கொண்டு கணவன் தன்னை விட்டு பிரிந்து இருப்பதாக சொன்னாள்.அதேபோல் அந்த கணவர் விவாகரத்து ஆனவர்.பரிகாரம் எதுவும் செய்யாமல் திருமணம் செய்து கொண்டார்கள்.காலப்போக்கில் முதல் மனைவியோட சாப தோஷங்கள் இவர்களை பாதித்தது.விவகாரத்து செய்த ஆணோ/பெண்ணோ,அல்லது விதவைப் பெண்ணோ இவர்கள் மறுமணம் செய்து கொள்ளும் முன் கண்டிப்பாக மறுமண தோஷ பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.இல்லையென்றால் முதல் கணவன்/மனைவியோட சாபங்கள் பாதிப்பை உண்டாக்கும்.இல்லற வாழ்வில் பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருக்கும்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஆறு முக ருத்ராட்சம்:


ஆறு முக ருத்ராட்சம்:இதன் அதிதேவதை சுப்பிரமணியர்.கோள்களில் சுக்கிரனின் அம்சமாகும்.இதை அணிவதால் சுப்பிரமணியர் அருள் கிடைப்பதோடு,பிரம்மஹத்தி தோஷமும் விலகும்.மேலும் மன பயம்.மன சோர்வு நீங்கி மன உறுதி.படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்,பொருட்செல்வம் சேரும்.வணிகர்கள்,மேலாளர்கள்,பத்திரிக்கையாளர்கள்,ரிஷபம்,துலாம் ராசிக்காரர்கள் அணிய சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்?


செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்...
செய்வினை என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலருக்கு பயமும் பலருக்கும் சிரிப்பும் வரலாம். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நமக்கு உண்டாகியிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?
பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி இரண்டையும் அறிவியல் ரீதீயாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி எப்படி நம்மைத் தாக்குகிறது. நம்முடைய தேவையில்லாமல் காரணமே இல்லாமல் உறவினர்கள் உங்களையோ நீங்கள் அவர்களையோ ஒதுக்கி வைப்பது...
நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களால் சௌகரியமாக இருக்க முடியாமல் இருப்பது. வேலையை செய்ய முடியாமல் அதிக அசதியாக இருப்பது
திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது
காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது...
தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது...
மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது...
உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது...
ஒரே அறையில் இருக்க விரும்புவது, அந்த அறையை விட்டு வெளியே வர விருப்பமில்லாத மனநிலை உண்டாவது
திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது...
இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?


பரிகாரங்கள் உடனே பலன் தருமா...?
கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? என்பதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
கிரக தோஷங்களுக்கப் பரிகாரம் செய்தபின் அந்தத் தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிட்டன என்பதை எதை வைத்து முடிவு செய்வது? இப்படி பட்ட சந்தேகம் பலருக்கு உண்டு
தீராத வயிற்றுவலி வருகிறது. அதற்கு நாம் மருந்து சாப்பிடுகிறோம். சாப்பிடும் மருந்து வேலை செய்கிறதா இல்லையா என்பதை நோய் குணமாகும்
அனுபவத்திலிருந்து தான் தெரிந்து கொள்ள முடியும். அதே போன்று தான் தோஷங்களுக்கான பரிகாரங்களும் ஆகும்.
குறிப்பிட்ட தோஷ நிவாரணத்திற்காகச் செய்யப்படும் பரிகாரம் காலச்சூழலில் பலன் தருவதை வைத்து தான் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் உடனடியாகப்
பலன்கள் ஏற்பட்டு விடும் என்று பலர் நம்புகிறார்கள். இது தவறான எதிர்பார்ப்பாகும். எந்தத் துயரமும் உடனடியாக நம்மைத் தாக்குவதில்லை. நிதானமாகத் தான் நம்மை கஷ்டத்திற்கு உள்ளாக்கும்.
நிதானமாகத் தான் விடுதலையும் செய்யும். 10 வருடப் பிரச்சினை ஒரே நாளில் எந்தப் பரிகாரத்தாலும் தீராது. சற்று காலம் பிடித்து தான் தீரும். எனவே
கிரக பரிகாரங்கள் பலன் தருவதற்குக் குறைந்த பட்சம் 3 மாதங்களாவது ஆகலாம்.
3லிருந்து 6 மாதத்திற்குள் பிரச்சினையின் வேகம் குறைய அரம்பிக்கவில்லை என்றால் பரிகாரம் பலன் தரவில்லை அல்லது சரியான பரிகாரம் செய்யப்படவில்லை என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, May 30, 2017

மூலிகை சாபநிவர்த்தி

குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம்


குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம்

குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும்.
அழகான சிறு குழந்தைகளைப் பார்த்தால் அதோடு பேச வேண்டும். அதைப் பார்த்து சிரிக்க வேண்டும். அதை தொட்டு முத்தம் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவாகும். ஆனால் ஒருவர் பார்வை போல், மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலர் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். அவர்கள் கண்ணில் இருந்து வரும் கதிர்வீச்சு ஊறுவிளைவிக்கும் தன்மையைக் கொடுக்கலாம். அதனை கண் திருஷ்டி என்பார்கள்.
அங்ஙனம், திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விடவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது.