Saturday, July 1, 2017

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:

பெண்களுக்கு ஏற்படும் கண்திருஷ்டிகள்,கண்ணேறு தோஷம் நீங்க யந்திரம்:
கல்லடி பட்டாலும் படலாம்,கண்ணடி படக்கூடாது என்பது பழமொழி.
பெண்கள் குடும்பத்தை காக்கும் குலதெய்வம் போன்றவர்கள்.ஒரு குடும்பத்துக்கு கண்திருஷ்டி ஏற்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அக்குடும்பத்தலைவி தான்,பிறகு தான் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல் கன்னிப்பெண்கள் அதீத காம இச்சைக்கு ஆளாக்கப்பட்டது கண்ணேறு தோஷம் தான் காரணம்.பொதுவாக வயதுப்பெண் வெளியில் செல்லும்போது,ஆண்களின் காமபார்வையும்,பேச்சு அவர்களின் மீது படும்போது,உடல்நிலை குறைவும்,சோர்வும்,மனநிலை பாதிப்பும்,உடலில் அந்த அந்த பகுதிகளில் வலியும் வேதனையும் உண்டாகும்.
எத்தனையோ குடும்பங்கள் கண்திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டு சிதறிக் கிடைக்குகிறது.
இந்த யந்திரத்தை செம்புத்தகட்டில் கீறி,மந்திர உருவேற்றி,தாயத்தாகவும் அணியலாம்,பர்சிலும் வைத்துக் கொள்ள கண்திருஷ்டிகள் நீங்கும்,மேற்கொண்டு ஏற்படாது.
பூஜித்த கண்திருஷ்டி யந்திரம்,தாயத்து தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சத்ரு ஜெய யந்த்ரம்


சத்ரு ஜெய யந்த்ரம்
எதிரிகளால் தொல்லைகள் ,மிரட்டல்கள்,வழக்குகளைச் சந்தித்து வருபவர்கள் இந்த யந்திரத்தை ஒரு செப்பு தகட்டில் வரைந்து யந்திரத்தைப் பால் ,மஞ்சள் கலந்த நீர்,விபூதி கலந்த நீர்,பன்னீர் இவற்றால் கழுவி படுபக்ஷி இல்லாத நல்ல நாளில் அணிந்து குலதெய்வத்தையும், துர்கையையும் வழிபட்டு வலது கை அல்லது கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
இதே யந்திரத்தை மோதிரத்தில் செதுக்கி அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் ஏற்படும்.
இதனால் எதிரிகளால் நமக்கு உண்டாகும் தொல்லைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்குமே தவிர யாருக்கும் எந்த கெடுதலும் உண்டாகாது.
இந்த யந்திரம் பற்றி தாந்திரீக சாஸ்திரத்தில் மிக உயர்வாக சொல்லப்பட்டுள்ளது.இது நம்மிடம் இருக்க எந்த மனிதராலும் ,தெய்வ சக்திகளாலும் நமக்கு கெடுதல் செய்ய முடியாது.
பயன்படுத்திப் பலன் பெறுங்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

திருச்சி வருகை:


திருச்சி வருகை:
வரும்,08/07/2017 ,09/07/2017 சனிக்கிழமை மறறும் ஞாயிற்று கிழமை திருச்சியில் ஆலோசனை பெற மற்றும் பிரசன்னம் பார்க்க,பரிகாரம் செய்து கொள்ள விரும்புவர்கள் அணுகவும்.
முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு
+91 75 98 75 89 89

Tuesday, June 27, 2017

பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்


பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்
இது பெண்களின் உடல் ரீதியான,மன ரீதியான துன்பங்களைத் தீர்த்து உடல், மனபலம், நல்வாழ்வு தருவது .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களோ ,தீய கிரகங்களின் சேர்க்கையாலோ அவஸ்தைப்படுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திர ஜெபத்தினால் துன்பம் நீங்கப் பெறலாம்.காதல் தோல்வி, விவாகரத்து போன்றவற்றால் மனம் வருந்துபவர்களும் இம்மந்திரம் ஜெபித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

மந்திரம்:-


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் | ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே | ஹூம் பட் ஸ்வாஹா ||

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

முத்து பரிகாரம்


Thursday, June 22, 2017

சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?

சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?
சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது. 'சுமங்கலி' என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள். அம்பிகையின் திவ்ய நாமங்களைச் சொல்லி வழிபடும் ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 967 வது திருநாமமாக உள்ள 'சுவாஷினி' என்னும் பெயரில் இருந்துதான் 'சுமங்கலி' என்னும் பெயரானது உருவானது.
திருமணமான பெண்களை 'சுமங்கலி' என்று அழைப்பது வழக்கம். பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து, திறம்பட நடத்துவதால் சக்தி வழிபாடாகவே இது போற்றப்படுகிறது.
எந்தெந்த தினங்களில் சுமங்கலி பூஜை நடத்தலாம் ?

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நடத்தலாம். இந்த தினங்களில் யோகம், திதி போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரிநாளில் நடத்தக்கூடாது. ராகுகாலம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நவராத்திரி நாட்களில் நடத்துவது மேலும் சிறப்பாக அமையும்.

சுமங்கலி பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? :

பூஜை செய்வோர் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் உள்ளேயும், வாசலிலும் அழகாக மாக்கோலம் இட வேண்டும்.

மாவிலைத் தோரணங்களால் வீட்டை அழகுபடுத்த வேண்டும்.

பூஜை செய்வோர் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து நடத்துவது அந்தச் சூழலையே இனிமையானதாக மாற்றும்.

பூஜைக்கு அழைக்கப்படும் பெண்களை சக்தியின் வடிவமாகக் கருதி சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்.

பின்பு, அவர்களை அழகாக கோலமிடப்பட்ட பலகையில் அமரவைக்க வேண்டும். அவர்களது பாதங்களைத் தாம்பூலத் தட்டில் வைத்து, பூஜை நடத்தும் இல்லத்தின் தலைவி அவர்களுக்கு, பாதபூஜை செய்ய வேண்டும்.

அடுத்ததாக குங்குமம், சந்தனம் பூசி, அவர்கள் தலையில் சூடிக் கொள்ள மலர்களும் கொடுக்கவேண்டும்.
தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு புடவை அல்லது ஜாக்கெட் துணியுடன் , மஞ்சள், குங்குமம், மருதாணி (குலவிருத்திக்காக) மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றைத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கவேண்டும்.

விழாவுக்கு வந்த பெண்களுக்கு குடிப்பதற்குப் பாலும், பழமும் கொடுக்கவேண்டும். அவர்களை ஶ்ரீதேவியாக நினைத்துத் தீபாராதனை செய்ய வேண்டும். தீபாராதனை முடிந்த பின்பு 'பஞ்சாங்க நமஸ்காரம்' மேற்கொள்ளவேண்டும்,

அடுத்ததாக, பூஜைக்கு வந்த சுமங்கலிப் பெண்களுக்கு அறுசுவை உணவளித்து, விழாவுக்கு வந்தவர்களின் மனம் குளிரச் செய்ய வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை மரியாதையோடு வழி அனுப்ப வேண்டும். அதன் பிறகுதான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும்.

சுமங்கலி பூஜை செய்வதால், உண்டாகும் நன்மைகள்:

இல்லத்தில் செல்வம் பெருகும்.

துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.

தோஷங்கள் நீங்கும்.

குலவிருத்தி உண்டாகும்.

களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பஞ்சதீப எண்ணெய் தரும் பரவசப் பலன்கள்!


சனி தோஷம் விலகும், கடன் தொல்லை தீரும்.. பஞ்சதீப எண்ணெய் தரும் பரவசப் பலன்கள்!
அகல், திரி, எண்ணெய், சுடர் இந்த நான்கும் சேர்ந்ததுதான் விளக்கு. இந்த நான்கும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இணைந்ததுதான் வாழ்க்கை என்று குறிக்கின்றது. வீட்டில் தீபம் ஏற்றினால், மகாலட்சுமி அருள் கிடைக்கும், தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. நமது உடல் மற்றும் ஆன்மா இரண்டும் பஞ்சபூத சக்தியால்தான் ஆட்கொள்ளப்படுகின்றன. நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று இவையனைத்தையும் சமநிலையில் வைத்திருந்தாலே, தொல்லைகள் நீங்கி ஆனந்தம் அடையலாம். பஞ்சபூத சக்தியை சமநிலைப்படுத்த பஞ்சதீப எண்ணெயைப் பயன்படுத்துவதே போதுமானதாகும்.
பஞ்சதீப எண்ணெய் என்றால் என்ன?
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். பஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும். நான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டால், பசு பூமி போன்ற செல்வங்களைத் தரும். மூன்று முக தீபம் ஏற்றி வழிபட்டால், புத்திர சுகம் கிடைக்கும். இரண்டு முக தீபம் ஏற்ற குடும்ப ஒற்றுமை பெருகும் என்றும், ஒரு முக தீபம் ஏற்றுவதால், மத்திமமான பலன்கள் கிடைக்கும் என்பார்கள். இப்படி அவரவரின் தேவைகளுக்கேற்ப விளக்கை ஏற்றலாம்.
அமாவாசை, பெளர்ணமி அன்றும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த எண்ணெயில் விளக்கேற்றுவது சிறந்த பலனைத் தரும்.
கடைகளில் கிடைக்கும் பஞ்சதீப எண்ணெய் சுத்தமானதா? என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். அத்தகையவர்கள், இந்த ஐந்து எண்ணெய்களின் சமமான அளவை எடுத்துக்கொண்டு உதாரணமாக எல்லா எண்ணெய்களிலும் 100 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கி, தூய்மையான ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
பஞ்சதீப எண்ணெயின் பலன்கள் :
சாதாரண தீப எண்ணெயை ஏற்றுவதைக் காட்டிலும் பஞ்சதீப எண்ணெயை ஏற்றுவதால், மிகுந்த பலனை அடையலாம்.
தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டால், வசீகரம் கூடும்.
நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட, ஆரோக்கியம் பெருகும் எமபயம் அணுகாது.
சகல காரியங்களும், வெற்றிபெற இலுப்பை எண்ணெயில் விளக்கை ஏற்றலாம்.
அழியாத புகழைப் பெற விளக்கெண்ணெய் தீபம் ஏற்றலாம். செல்வ விருத்தி, நினைத்தது நிறைவேற பசு நெய் சிறந்ததாகும்.
கணவன் மனைவி உறவு மேம்பட, சிறந்தது வேப்ப எண்ணெய்.
இப்படி அனைத்து வகையான எண்ணெய்களில் தனித்தனியே கிடைக்கும் பலன்களை பஞ்சதீப எண்ணெய் விளக்கு ஒன்றை ஏற்றுவதன் மூலம் பெறலாம்.
தேங்காய் எண்ணெய் தீபம் ஒரு ஜோடி ஏற்றி வைப்பதன் பலன், ஒரு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வைப்பதற்குச் சமம். நல்லெண்ணெய் தீபம் ஒரு ஜோடி ஏற்றி வைப்பதன் பலன், பசு நெய்யில் ஒரு விளக்கினை ஏற்றி வைப்பதற்குச் சமம். ஆயிரம் பசு நெய் விளக்குகளை ஏற்றி வைப்பதன் பலன் ஒரு இலுப்ப எண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பதற்குச் சமம். பஞ்சதீப எண்ணெயை ஆலயங்களிலும் வீட்டிலும் ஏற்றிவைப்பதால், எண்ணற்ற பலன்களை நாம் அடையலாம்.
விளக்கு ஏற்றும் திசைகள் :
பொதுவாக நாம் விளக்கை கிழக்கு திசை நோக்கியே ஏற்றுகின்றோம் இதனால், நம் வாழ்வில் துன்பங்கள் தொலைந்து, இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. அதுபோல, தெற்கு திசை நோக்கி தீபத்தை ஏற்றிவைப்பது எமனை அழைக்கும் செய்கையாகும்.
கடன் தொல்லை நீங்கி சனிதோஷம் விலக மேற்கு திசை நோக்கி, விளக்கை ஏற்றவேண்டும். செல்வ வளம் பெருக, திருமணத் தடை நீங்க, கல்வி ஞானம் பெருக வடக்கு திசை சிறப்பாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989