Thursday, August 24, 2017

பண வரத்து உண்டாக,காரியத் தடைகள் நீங்க:


பண வரத்து உண்டாக,காரியத் தடைகள் நீங்க:
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிஷேசன்,இது சனி கோளின் ஆதிக்கம் நிறைந்தது.மேலும் இது மகாலட்சுமியின் அம்சமாகும்.
இதனை முறையாக அணிய சப்தமார்கள் அருள் கிட்டும்.தேக நோய்கள் நீங்கும்.சனிக் கிரஹ தோஷ பாதிப்புக்கள் குறையும்.
குறிப்பாக பணத் தடைகள்,பண முடக்கம் நீங்கி பண வரவு உண்டாகும்,நிதி நிலைமை மேலோங்கும்.காரிய சித்தி உண்டாகும்.
தொழில் வியாபாரம்,வீட்டில் பண வசியம் வேண்டுவோர் இரண்டு ஏழு முக ருத்ராட்சத்தை வைத்து பூஜிக்க பண வரவு கண்டிப்பாக அதிகரிக்கும்.
தற்சமயம் எங்களிடம் ஏழு ருத்ராட்சங்கள் சில வந்துள்ளது.
ஏழு முக ருத்ராட்சம் தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஜன ஆகர்ஷண தூபபொடி:

ஜன ஆகர்ஷண தூபபொடி:
சாம்பிராணி தூபம் போடுவது போல்,32 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜன ஆகர்ஷண தூபபொடியை கொண்டு தொழில் வியாபார ஸ்தலங்களில் தூபம் இட ஜனம்(வாடிக்கையாளர்கள்) வரத்து அதிரிக்கும்.மேலும் கண்திருஷ்டி,பார்வைக் கோளாறு,தொழில் வியாபார முடக்கங்கள்,தடங்கல்கள் நீங்கும்.மேன்மேலும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்.
ஜன ஆகர்ஷண தூபபொடியை பயன்படுத்தி பலபேர் பயன் அடைந்துள்ளார்கள்.இது அனுபவ ரீதியானவை.
"ஜன ஆகர்ஷண தூபொடி" தேவைக்கு அணுக.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்


செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்!
பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.
பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.
எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.
பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.
உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.
வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.
வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.
நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.
வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.
வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.
வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.
குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, August 22, 2017

தும்பிக்கையானை நம்பிக்கையோடு விரதமிருந்து வழிபடுவோம்


தும்பிக்கையானை நம்பிக்கையோடு விரதமிருந்து வழிபடுவோம்
விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும்.
விக்னங்களைத் தீர்ப்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும், கணங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் ‘கணபதி’ என்றும், தும்பிக்கை உள்ளதால் தும்பிக்கையான் என்றும், ஐந்து கரங்களைப் பெற்றதால் ஐங்கரன் என்றும், ஆனைமுகம் உள்ளதால் ஆனைமுகன் என்றும் போற்றப்படும் பிள்ளையாரைத் தொழுதால் எல்லையில்லாத நற்பலன் கிடைக்கும்.
அற்புதப் பலன்தரும் பிள்ளையாருக்கு உகந்தது சதுர்த்தி திதி. அதிலும் ஆவணி மாதம் வரும் சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நன்னாள் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் மோதகம், அப்பம், அவல், பொரி, கடலை வைத்து மூஷிக வாகனத்தானை வழிபடுவது வழக்கம். மேலும் விரதமிருந்து கவசம் பாடி பிள்ளையாரைத் துதித்தால் நல்ல பலன்கள் இல்லத்தில் நடைபெறும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு, கணபதியை வேண்டினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.
எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நற்பலன் கிடைக்கும். எனவேதான் அவரை ‘மூலகணபதி’ என்றும் நாம் வர்ணிக்கின்றோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம்.
நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.
அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கு, எப் பொழுது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் அருள்தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.
‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலைகள், அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.
விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது ஐதீகம். ‘தோர்பிக்கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் கைகளில் என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது; இதனால் நினைவாற்றல் கூடும்.
கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு முன்பு, தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். அவருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.
துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கின்றோம். விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள் இனிய கனி இருக்கும். கடினமான உழைப்பிற்குப் பின்னர் கனிவான வாழ்க்கை இருக்கின்றது என்பதை அது எடுத்துக் காட்டுகின்றது. “அவல்” குசேலனைக் குபேரனாக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை, மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.
ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி, விநாயகரைப் பிடிக்க வந்த பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்கச் சொல்லித் தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகன். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி ஏற்படும். புத்திக்கூர்மை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டால், சனிபகவானின் பாதிப்பில்இருந்து விடுபடலாம்.
எனவே அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும். விநாயகரை சதுர்த்தியில் வணங்கி, சந்தோஷம் காணுங்கள்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, August 18, 2017

பேய்க்கோட்டத்தால் பெண்களுக்கு கரு கலையுமா?

பேய்க்கோட்டத்தால் பெண்களுக்கு கரு கலையுமா?
விழுப்புரம் மாவட்டம்,எலவனசூர்கோட்டை என்ற கிராமத்தில் இருந்து,கண்ணன்-சங்கீதா இந்த தம்பதியினர் இன்று(11/08/2017) என்னிடம் ஆலோசனைக்கு வந்தார்கள்.திருமணம் ஆகி 5 வருடமாகிறது.கர்ப்பம் தரிக்கும் ஆனால் 90 நாட்களுக்குள் கரு கலைந்துவிடும்.இல்லையென்றால் குறைபாடு உள்ள கரு உருவாகும்.இந்த பிரச்சினை இவர்களுக்கு குழந்தை இல்லை.பிரசன்னத்தில் பார்க்கும்போது பேய்க்கோட்டமும்,முனிக்கோட்டமும் அந்த பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்தது.இந்த பிரச்சினைகள் இருந்தால் கரு கலையும்,கரு வளர்ச்சி இருக்காது,தனிமையில் இருப்பார்கள்,அசைவம் அதிகம் விரும்புவார்கள்,பிரம்பை பிடித்ததுபோல் இருப்பார்கள் இது அதன் அறிகுறிகள்.
அவர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து,தாயத்து,மந்திரம் உருவேற்றிய தேன்,மேலும் சில பெருட்கள் செய்து கொடுத்து அனுப்பி வைத்தேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:


துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:
பேய் மிரட்டி இலைகளை எடுத்து திரிபோல் திரித்து,5 மண் அகல் விளக்கில் ஐவகை எண்ணெய் ஊற்றி,அதில் இந்த இலை திரியை இட்டு செவ்வாய்கிழமைகளில் விளக்கேற்றி வர அவ்விடத்தில் உள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலகி ஒடிவிடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வசீகர திலகம்:


வசீகர திலகம்:
சுத்தமான கோரோசனையுடன்,சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் வாழைப்பழம் சாறு விட்டு குழைத்து,நெற்றியில் திலகமிட சர்வ வசியம் உண்டாகும்,செல்லும் காரியம் வெற்றியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989