Saturday, September 30, 2017

கடல் முத்து பரிகாரம்:



கடல் முத்து பரிகாரம்:
நவரத்தினங்களில் பட்டை தீட்ட அவசியமில்லாத ரத்தினம் முத்து மட்டுமே.
இது சந்திரனின் முழு ஆகர்ஷண சக்தியை தன்னுள் அடக்கியவை.
வெள்ளி அல்லது தங்கத்திலான மோதிரத்தில் முத்தை பதித்து வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.
முத்து அணிவதால் ஏற்படும் பலன்கள்:
*மனக்குழப்பம்,மன அழுத்தம் நீங்கும்.
*முக வசீகர சக்தியும்,உடல்அழகும் ஏற்படும்.
*மனம் ஒருமைப்படும்,மன அமைதி நிலவும்
*கணவன் மனைவி உறவுகள் வலுப்படும்,அன்னினோன்யம் அதிகரிக்கும்
*மனதுக்காரன் சந்திரனின் தோஷங்கள் நீங்கி மனத்தெளிவும்,புத்திக்கூர்மை உண்டாகும்
*கடக ராசி,கடக லக்கினம் இவர்கள் அணிய வேண்டியவை முத்து ஆகும்.இதனால் சிறப்பான பலனை தரும்.
கடல் முத்து வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம்
சிறிய ரக கடல் முத்து விலை ரூ.1500/-
பெரிய ரக கடல் முத்து விலை ரூ2000/-
கடல் முத்து மொத்தமாகவும் கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989


தொழில் மந்தம்,பணத்தடைகள் நீங்க:


தொழில் மந்தம்,பணத்தடைகள் நீங்க:
பல இடையூறுகள்,இன்னல்களுக்கு பிறகு இந்த பதிவை பதிவிடுகிறேன்.
அதேபோல் என் குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
தொடர்ந்து 8 சனிக்கிழமைகள்,நல்லெண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து சப்பாத்தி சுட்டு,அந்த சப்பாத்தியை கருப்பு நிற நாய்க்கு இட்டு வர மேற்கண்ட தடைகள் நீங்கி,தொழில் சிறக்கும்,பண வரத்து உண்டாகும்,செல்வம் சேரும்.
தொடர்புக்கு
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989

ஸ்ரீகாளி மந்திரம் பகைவர்களை ஒடுக்க திருத்த


ஸ்ரீகாளி மந்திரம் பகைவர்களை ஒடுக்க திருத்த
தன்னையும் தனை சார்ந்தோர்களையும். துற்செயல் கொண்டோரிடமிருந்து காத்துக்கொள்ள

சுபமந்திரப் பதிவு

ஓம் திருக்கண் காளிகாம்பிகையே உன் திருமுகத்தழகும், குலாவியமனமும் பயங்கர வடிவமும் கொண்டவளே, பாதக்கிண்கிணீயும் நேமிநீங்காத்திவ்விய கரமும் கடகமின் நூராலும் தாழ்ந்த செங்கரமும், சிவனாரிடத்து பஞ்சானமும், எனைப் பகைத்த அறிவிலா மூடர்களின் செய்கைகள் எனையணுகாதிருக்க ஒருமாத்திரைப் பொழுதில் நேமிக்கிரையிடுவாய் காளிகாம்பிகையே, உன்பாதாரவிந்தம் யான் தொழுதேன் என்பகை தீர்ப்பது உன் பாரமல்லவோ இதுவுன் கடனே அட்சரி வராகி மகவீரி ஓம் ஐயுங் கிலியும் சௌவும் ஆனவளே ஐங்காரத்து சர்வலோக மாதாவே சிதம்பர நற்தேவி என்னை பகைத்தோரை ரட்சித்து காத்தருள்வாய். வசிவசி வசிவசி ஸ்வாஹ

என்று அனுதினம் காலை ஸ்நானம்செய்து, அவள் ஆலயம் சென்று மனமுருக மனதுக்குள் வாசித்து வர சகல சத்ருக்களின் செய்கைகள் அடியோடு மாள்வதுமில்லாமல் அவர்களும் நற்குணம் பெறுவார்கள்.

குறிப்பு: (நீங்கள் அவர்களுக்கு எவ்வகையிலும் தீங்கிழைத்திருக்ககூடாது
தொடர்புக்கு
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989

Sunday, September 17, 2017

விரைவில் திருமணமாக


விரைவில் திருமணமாக
வளர்பிறை வெள்ளிக்கிழமை தொடங்கி 12 வெள்ளிக்கிழமைகள் செய்து வரவும்.
வெற்றிலை,பாக்கு,பழங்கள்,பாயசம் படைக்கவும்.மஞ்சள் துணி விரித்து மஞ்சள் ஆடை அணிந்து செய்யவும்.விளக்கேற்றிக் கிழக்கு முகமாக அமர்ந்து மல்லிகை அல்லது பிச்சிப்பூவால் அர்ச்சித்தபடி மந்திரத்தை 108 தடவை ஜெபிக்கவும்.மந்திரம் ஜெபம் முடிந்த பின் விளக்கைக் குளிர வைத்து திரியின் கருக்கை நெற்றியில் அணிந்து வர விரைவில் திருமணமாகும்.
மந்திரம்:-
ஓம் வம் சிவப்ரியாயை சீக்ரம் விவாஹம் குரு குரு ஸ்வாஹா ||
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்


வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்
இன்றைய கால கட்டத்தில் வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடுமையான ஒரு செயல் ஆகிவிட்டது. ஒன்று பல போட்டியாளர்களும், அந்த வியாபார போட்டியல் வாடிக்கையாளர்களை கவர விலை குறைப்பும், பல சலுகைகளும் பரிசுப்பொருட்களை வாடிக்கையளர்களுக்கு அள்ளி வழங்குவதும் போன்ற காரணங்களாலும், செய்யும் வியாபாரங்களில் நல்ல லாபத்தினை நாம் அடைவது என்பது சாத்தியமில்லை. மேலும் நமது ஜாதகங்களில் உள்ள தோஷங்களும், கிரகங்களின் கோட்சாரமும், திசை - புத்தியால் நமக்கு உண்டாகும் பலன்களும் அதாவது நமது கர்மவினை பலன்களும் நம்மை நாம் செய்யும் வியாபாரத்தில் பெரும் இலாபத்தினை வெற்றிகளை வளர்ச்சியினை பாதிக்கும் அம்சங்களாக விளங்குகின்றன.
சரி இந்த நிலை மாற நாம் தெய்வ அருளினை தான் நாட வேண்டி இருக்கிறது, நாம் நேரடியாக தெய்வ அருளினை பெறுவது இயலாத காரியம் என்பதை அறிந்த முன்னோர்களும் சித்தர்களும் நாமும் வளமுடன் வாழ என்ற நோக்கிலேயே அருளி சென்றவை தான் எந்திரங்களும் அதற்க்கு உண்டான மந்திரங்களும் அதற்கென உடன் வைக்கும் வசிய மூலிகைகளும் ஆகும். அவ்வகையில் வியாபாரிகள் வியாபாரங்களில் வெற்றி மேல் வெற்றி அடையவும், செல்வங்கள் அடையவும், வாடிக்கையாளர்கள் பெருகவும் சொல்லி சென்ற எந்திரமே "வியாபாரத்தில் செல்வம் கொழிக்க வைக்கும் வாலை சக்கரம்" ஆகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, September 14, 2017

கட்டு மந்திரம் ...!!!


கட்டு மந்திரம் ...!!!
“ ஓம் பைரவா, உத்தண்ட பைரவா,
ஏந்திய கபாலமும், ரத்தின மாலையும், நாக பாஷமும், போக வேஷ்டியும், ஸ்வாநத் வாகனமும்,
அடித்த தண்டும், பிடித்த பார்வையும், நேரிட்ட மேனியும்,
இதோ என் காளீக்களீள் எனக்கு அருள் செய்ய புறப்பட்டார்.
என்னுடைய பைரவனார் தன்மையைப் போல் யாம் இருப்போமென்று,
புத பிரேத பிசாசு கணங்களைக் கட்டு,
பிற்பில்லி சூன்யம் வஞ்சனை நோயைக் கட்டு,
இரும்பு வலையை உருக்கியே எட்டுத் திக்கும் பதினாறு கோணமும் கட்டு,
ஆகாசம் பு+மி அதிரவே கட்டு,
எமனைக் கட்டு , எமதுதரைக் கட்டு ,
நாட்டைக் கட்டு , நகரத்தைக் கட்டு ,
சந்தனப் பாடு தனித்தனியே கட்டு ,
சொப்பனப் பேய்களை சுட சுட கட்டு ,
அகார உகார ஈஸ்வர புத்திராய, வடுக நாதாய,
கிணி கிணி சற்வேத்நாய, ரண்டி ரண்டி அகோர வீர பத்திராய,
ஓம் குருவே நமசிவய சுவாஹா “

திக்கு கட்டு
1. திருநீறை கையில் எடுத்துக் கொள்ள வேண்டும்
2. புவியை தொட்டு வணங்கி யங் என்று திருநீறை சிரசை தொட்டு முன்புறம் போடவும்
3. வங் என்று சிரசை தொட்டு பின்புறம் போடவும்
4. சிங் என்று சிரசை தொட்டு வலப்புறம் போடவும்
5. மங் என்று சிரசை தொட்டு இடப்புறம் போடவும்
குங்குமம் மலரையும் கூட இதற்கு பயன்படுத்தலாம்
பிறகு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்ல வேண்டும்
அரி ஓம் தெற்கே நோக்கினேனே தெற்கே சண்முகமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் வடக்கே நோக்கினேனே வடக்கே பிரம்மாவாக கொண்டேனே
அரி ஓம் கிழக்கே நோக்கினேனே கிழக்கே தேவேந்திரனாக கொண்டேனே
அரி ஓம் மேற்கே நோக்கினேனே மேற்கே நரசிங்கமூர்த்தியாக கொண்டேனே
அரி ஓம் ஆகாசத்தை நோக்கினேனே ஆகாசம் திருநீலகண்டனாக கொண்டேனே
அரி ஓம் பாதாளத்தை நோக்கினேனே பாதாளம் காலபைரவனாக கொண்டேனே
அரி ஓம் பு+மியை நோக்கினேனே பு+மி பு+டமாக கொண்டேனே
பொருப்பு இருப்பாக கொண்டேனே
சிவன் சிவமாக கொண்டேன்
சிவன் இருந்தவாறே.
உடல்கட்டு
ஓம் பகவதியீஸ்வரி யென்றே தேகத்தின் பஞ்சாட்சர மூர்த்தி காவல்
கைகளில் அம்பிகா மயேஸ்வரி சாமுண்டிஸ்வரி காவல்
சிரசு முதல் பாதம் வரையில் அ‘;டதேவர்களும் ஓம் என்ற அட்சரமும் காவல்
காதில் வீரபத்திரதேவரும் நவதுவாரத்தில் நவக்கிரகமும் காவல்
என்னைச் சுற்றி காலபைரவனும் காத்து நிற்க சுவாகா
(திருநீறு குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை போடவும்)
கட்டு மந்திரத்தை தொடர்ந்து செய்து வர கீழ்க்கண்டவை நடக்கும்
1 நம்மைச் சுற்றிலும் ஒரு கவசம் உருவாகும்
2 ஒரு முறை நம்மைச் சுற்றிலும் கவசம் உருவாகி விட்டால் எப்பொழுதும் நம்மைச் சுற்றியே கவசம் இருக்கும்
3 ஆன்மா விரிவு அடைய அடைய அதற்கு ஏற்றாற்போல் இந்தக் கவசமும் விரிவடைந்து செல்லும்
4 நம் மந்திரத்தின் எண்ணிக்கை கூட கூட கவசத்தின் அதிர்வுகளை நாம் உணர முடியும்
5 கட்டு மந்திரம் சித்தியடைந்தால் அந்த கவசம் நம் கண்களுக்கு தெரியும்
தவம் செய்பவர்களும் இந்த கட்டு மந்திரத்தை பயன்படுத்தி பயன் பெறலாம். ஏனென்றால் மந்திரங்கள் உச்சாடணம் செய்யும் பொழுதும் தவங்கள் செய்யும் பொழுதும் ஆன்மா விரிவடைந்து பிரபஞ்சத்துடன் தொடர்பு கொண்டு உடலுக்குள் வருகிறது.
கட்டு மந்திரத்தின் சிறப்புகளை உணர்ந்து விருப்பப்பட்டவர்கள் பயன்படுத்தி பயன் பெறலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சாபங்கள்


சாபம்
சாபங்கள் பல வகைப்படும்.அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.:
பெண் சாபம் : இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்றுவதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது. பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.
பிரேத சாபம் : இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும். பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.
பிரம்ம சாபம் : நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது, வித்தையை தவறாக பயன்படுத்துவது, மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது, இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.
சர்ப்ப சாபம்: பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும்., அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும், சர்ப்ப சாபம் உண்டாகும்..இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.
பித்ரு சாபம்: முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்-தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும், பித்ரு சாபத்தை ஏற்படுத்தும். பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண்குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.
கோ சாபம் : பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும்போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும். இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.
பூமி சாபம் : ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், ப்ளாஸ்டிக் பொருட்களைப் போட்டுப் புதைப்பதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும். பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.
கங்கா சாபம்: பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.
விருட்ச சாபம்: பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், , மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.
தேவ சாபம்: தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.
ரிஷி சாபம்: இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும். ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.
முனி சாபம்: எல்லை தெய்வங்கள், மற்றும் சின்ன சின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும். முனிசாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.
குலதெய்வ சாபம் : இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது. குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒருபோதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.
சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும். தீயவர்களை அழிக்கும். எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறி எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் அழித்துவிடும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989