Sunday, October 8, 2017

நல்லதங்காள் கதை


நல்லதங்காள் கதை
அர்ச்சுனாபுரம் ஒரு கிராமம். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது. வத்திராயிருப்பு அருகில் உள்ளது. இந்தப் பகுதியில் மாந்தோப்பு, தென்னந்தோப்பு ஏராளம். வாழைமரம், பாக்குமரம், தேக்குமரம் ஏராளம். வானம் பொய்க்காத வளமான பூமி.
அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் பிறந்த ஊர். நல்லதங்காளின் தந்தை ராமலிங்க ராஜா. தாயார் இந்திராணி. அண்ணன் நல்லதம்பி.
நல்லதங்காள் சின்னப் பெண்ணாக இருந்தபோது தாயும் தந்தையும் இறந்துவிட்டார்கள். நல்லதம்பிதான் தங்கச்சியை செல்லமாக வளர்த்தான். மானாமதுரை ராஜா காசிராஜனுக்கு நல்லதங்காளைக் கட்டிக்கொடுத்தான். கல்யாணம் ஆகும்போது நல்லதங்காளுக்கு ஏழு வயது. காசிராஜன் நல்லதங்காளுக்கு நிறைய பரிசுப் பணம் கொடுத்தார். சித்திரை மாதம் கல்யாணம் நடந்தது. செல்வக் கல்யாணம்.
பனைமரம் பிளந்து பந்தக்கால் நட்டார்கள்.
தென்னைமரம் பிளந்து தெருவெல்லாம் பந்தல் இட்டார்கள்.
நல்ல தம்பி தங்கச்சிக்கு நிறைய சீதனங்கள் கொடுத்தான்.
வேலி நிறைய வெள்ளாடுகள்
பட்டி நிறைய பால்மாடுகள்
மோர் கடைய முக்காலி பொன்னால்
அளக்குற நாழி பொன்னால்
மரக்கால் பொன்னால்.
இன்னமும் சீதனங்கள் நிறைய உண்டு. சொல்லிக்கொண்டே போகலாம். கல்யாணம் முடிந்தது. விருந்துச் சாப்பாடு முடிந்தது.
நல்லதங்காளும் காசிராஜனும் மானாமதுரைக்குப் புறப்பட்டார்கள். நல்லதங்காளுக்கு அண்ணனைப் பிரிய மனம் இல்லை.
அழுதுபுரண்டு அழுதாள்,
ஆபரணம் அற்று விழ,
முட்டி அழுதாள்.
முத்து மணி அற்று விழ.
நல்லதம்பி தங்கச்சிக்கு ஆறுதல் சொன்னான். ஒருவழியாக நல்லதங்காள் மானாமதுரைக்குப் புறப்பட்டுப் போனாள்.
நல்லதம்பிக்கு ஒரு மனைவி உண்டு. அவள் பெயர் மூளி அலங்காரி. அவள் கொடுமைக்காரி. நல்லதங்காள் போன பிறகு நல்லதங்காளைப் பார்க்க நல்லதம்பி ஒரு தடவைகூட மானாமதுரை போகவில்லையாம். அதற்கு மூளி அலங்காரிதான் காரணமாம்.
நல்லதங்காளுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. பிள்ளை குட்டிகளுடன் அவள் சந்தோஷமாக வாழ்ந்தாள். இதெல்லாம் கொஞ்ச காலம்தான்.
மானாமதுரையில் மழை இல்லை. 12 வருடமாக நல்ல மழை இல்லை. வயல்களில் விளைச்சல் இல்லை. மக்கள் பசியால் வாடினார்கள். பட்டினியால் தவித்தார்கள்.
பஞ்சமோ பஞ்சம்.
மரக்கால் உருண்ட பஞ்சம்
மன்னவரைத் தோற்ற பஞ்சம்
நாழி உருண்ட பஞ்சம்
நாயகரைத் தோற்ற பஞ்சம்
தாலி பறிகொடுத்து
கணவரைப் பறிகொடுத்து
கைக்குழந்தை விற்ற பஞ்சம்
இப்படி மக்கள் பஞ்சத்தில் செத்தார்கள். நல்லதங்காள் வீட்டையும் பஞ்சம் விடவில்லை. தாலி தவிர மற்றது எல்லாம் நல்லதங்காள் விற்றாள். குத்தும் உலக்கை, கூடை, முறம்கூட விற்றுவிட்டாள். எல்லாம் விற்றும் பஞ்சம் தீரவில்லை. குழந்தைகள் பசியால் துடித்தன.
நல்லதங்காள் யோசித்து யோசித்துப் பார்த்தாள். இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால் பிள்ளைகள் பசியால் செத்துப்போகும் என்று பயந்தாள். ஒரு முடிவு எடுத்தாள். அண்ணன் வீட்டுக்குப் பிள்ளைகளுடன் கொஞ்ச நாள் போய் இருக்கலாம் என்று முடிவு எடுத்தாள்.
காசிராஜனிடம் தன் முடிவைச் சொன்னாள். காசிராஜன் நல்லதங்காள் சொன்ன முடிவை ஒப்புக்கொள்ளவில்லை.
“அடி பெண்ணே! வாழ்ந்து கெட்டுப்போனால் ஒரு வகையிலும் சேர்க்கமாட்டார்கள். கெட்டு நொந்துபோனால் கிளையிலும் சேர்க்க மாட்டார்கள். கை கொட்டிச் சிரிப்பார்கள். நீ போக வேண்டாம். கஷ்டம் வருவது சகஜம். நாம் பிடித்து நிற்க வேண்டும். சாணி எடுத்தாவது தப்பிப் பிழைப்போமடி! வேலி விறகொடித்து விற்றுப் பிழைப்போமடி’’ என்று காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளிடம் பலவாறு சொன்னாள்.
காசிராஜன் சொன்னதை நல்லதங்காள் கேட்கவில்லை. இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்று நினைத்தாள்.
சந்தனம் தொட்ட கையால் - நான்
சாணி தொட காலமோ!
குங்குமம் எடுக்கும் கையால் - நான்
கூலி வேலை செய்ய காலமோ
என்று சொல்லி நல்லதங்காள் அழுதாள்.
இதற்குமேல் நல்லதங்காளைச் சமாதானப்படுத்த முடியாது என்று காசிராஜன் தெரிந்துகொண்டான். “சரி போய் வா. பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்’’ என்று சொல்லி வழியனுப்பி வைத்தான்.
நல்லதங்காள் பிள்ளைகளைப் பாசத்தோடு அழைத்தாள். “வாருங்கள் பிள்ளைகளா! உங்கள் மாமன் வீட்டுக்குப் போவோம். அங்கே தின்பதற்கு தேங்காய் கிடைக்கும், மாங்காய் கிடைக்கும், ஓடி விளையாட மான் கிடைக்கும்’’ என்று சொல்லி அழைத்தாள். பிள்ளைகள் ஆசை ஆசையாகப் புறப்பட்டன.
நல்லதங்காளும் பிள்ளைகளும் மானாமதுரையில் இருந்து அர்சசுனாபுரத்துக்குப் புறப்பட்டு வந்தார்கள். காடு மலையெல்லாம் தாண்டி வந்தார்கள். வனாந்திரங்களைக் கடந்து வந்தார்கள்.
அர்ச்சுனாபுரம் பக்கம் வந்துவிட்டார்கள். ஆனால் பிள்ளைகளுக்கு நடக்க முடியவில்லை. பசி பசி என்று கத்தினார்கள். அழுதார்கள்.
அந்த நேரம் பார்த்து நல்லதம்பி அந்தப் பக்கம் வந்தான். படை பரிவாரங்களோடு வந்தான். வேட்டையாட வந்தான். வந்த இடத்தில் நல்லதங்காளையும் பிள்ளைகளையும் பார்த்தான்.
அந்தக் கோலத்தில் அவர்களைப் பார்த்ததும் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.
குதிரை அரிதாச்சோ
குடி இருந்த சீமையிலே!
பல்லக்குதான் பஞ்சமோ
பத்தினியே உனக்கு!
கால்நடையாய் வர
காரணம் ஏன் தங்கச்சி?
என்று அழுது புலம்பினான். நல்லதங்காள் தன் வீட்டு நிலைமைகளைச் சொன்னான். நல்லதம்பி அவளைத் தேற்றினான். “சரி தங்கச்சி நம் வீட்டுக்குப் போ. தெற்குமூலையில் தேங்காய் குவிந்திருக்கும் வடக்குமூலையில் மாங்காய் குவிந்திருக்கும். காட்டு யானை வாசலில் கட்டி இருக்கும் காராம் பசுவும் உண்டு. போ தங்கச்சி போ! போய்ப் பிள்ளைகளுடன் பசியாறி இரு’’ என்று நல்லதம்பி சொன்னான்.
நல்லதங்காள் அண்ணன் இல்லாத வீட்டுக்குப் போக தயங்கினாள். அண்ணா! நீயும் கூட வா! என்று அண்ணனைக் கூப்பிட்டாள்.
“அம்மா நல்லதங்காள் நீ முதலில் போ. உன் அண்ணி மூளி அலங்காளி உன்னையும் பிள்ளைகளையும் நன்றாக கவனித்துக்கொள்வாள். நான் பின்னால் வருகிறேன். சீக்கிரன் வந்துவிடுவேன். உன் பிள்ளைகளுக்கு விளையாட புள்ளிமான் கொண்டுவருவேன்’’ என்று சொல்லி சமாதானப்படுத்தினான்.
நல்லதங்காள் அண்ணன் வீட்டுக்கு அரை மனதுடன் புறப்பட்டாள். அப்போது மூளி அலங்காரி வீட்டு மாடியில் இருந்தாள்.
நல்லதங்காளும் பிள்ளைகளும் பசியோடு தன் வீடு வருவதைப் பார்த்து விட்டாள். வேகவேகமாக இறங்கி வந்தாள். கதவுகளை அடைக்கச் சொன்னாள். இறுக்கிக் கதவை அடைத்தாள். ஈர மண் போட்டு அடைத்தாள். சோற்றுப் பானையை ஒளித்து வைத்தாள். பழந்துணி ஒன்றை உடுத்திக்கொண்டான். முகத்தில் பத்துப் போட்டு மூலையில் படுத்துக்கொண்டாள்.
நல்லதங்காள் வந்தாள். அண்ணி அண்ணி என்று ஆசையாகக் கூப்பிட்டு கதவைத் தட்டினாள். கதவு திறக்கவில்லை.
கால் கடுக்குது அண்ணி கதவைத் திற, தண்ணீர் தண்ணீர் என்று தவிக்குறாள் பாலகர். அன்னம் அன்னம் என்று சொல்லி அலையுறார் பாலகர். புத்திரர் பசியாற கதவைத் திறவாயோ?
என்று அழுது அழுது கூப்பிட்டாள். அதற்கும் கதவு திறக்கவில்லை. நல்லதங்காளுக்கு கோபம் வந்தது.
நான் பத்தினியானால் கதவு படீர் என்று திறக்கட்டும்
என்று கட்டளையிட்டாள். கதவுகள் திறந்தன. பிள்ளைகள் உள்ளே ஓடினார்கள். சுற்றிச் சுற்றி வந்தார்கள். ஒரு பண்டமும் இல்லை. மூளி அலங்காரி படுத்திருந்த இடத்தில் தேங்காயும், மாங்காயும் குவிந்து கிடந்தன.
ஓடிச்சென்று ஒரு பிள்ளை தேங்காயை எடுத்தது. தாவிச்சென்று ஒரு பிள்ளை மாங்காயைக் கடித்தது. மூளி அலங்காரி விருட்டென்று எழுந்தாள். மாங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் அழுகல் மாங்காயில் ஒன்று எடுத்துக் கொடுத்தாள். தேங்காயைப் பறித்துப் போட்டாள். ஆயிரம் தேங்காயில் அழுகல் தேங்காய் ஒன்று எடுத்துக் கொடுத்தாள்.
பார்த்தாள் நல்லதங்காள். மனம் பதறினாள். அண்ணி என் மக்களின் பசியை ஆத்துங்க என்று கெஞ்சினாள்.
மூளி அலங்காரி ஏழு வருசம் மக்கிப்போன கேப்பையைக் கொடுத்தாள். திரிப்பதற்கு உடைந்த திருகையைக் கொடுத்தாள். உலை வைக்க ஓட்டைப் பானையைக் கொடுத்தாள். நல்லதங்காள் பொறுமையாகக் கேப்பையைக் திருகையில் போட்டு அரைத்தாள்.
எப்படியே கஷ்டப்பட்டு கஞ்சி காய்ச்சினாள். ஈரமட்டைகளை வைத்து எரித்தாள். கூழும் கொதிக்கணும், குழந்தை பசியாறணும் என்று தெய்வங்களை வேண்டிக்கொண்டாள்.
ஒருவழியாகக் கஞ்சி கொதித்தது. ஆனால் பிள்ளைகள் கஞ்சியைக் குடிக்கப் போகும் நேரத்தில் மூளி அலங்காரி வந்தாள். பானையைத் தட்டிவிட்டாள். பானை உடைந்தது. கூழ் வழிந்து ஓடியது. பிள்ளைகள் அதை வழித்துக் குடித்தார்கள்.
நல்லதங்காளுக்கு இந்தக் காட்சியைப் பார்க்க சகிக்கவில்லை. இனியும் அவமானப்பட வேண்டாம். செத்துவிடலாம் என்று முடிவு எடுத்தாள்.
பிள்ளைகளைக் கூப்பிட்டு தெருவில் இறங்கினாள். வீதியில் நடந்தாள். அவளைப் பார்த்தவர்கள் பரிதாபப்பட்டார்கள். சாப்பிடுவதற்கு தங்கள் வீட்டுக்கு அழைத்தார்கள்.
பச்சரிசி குத்தித் தாரோம்
பாலும் கலந்து தாரோம்!
பாலரும் நீயும்
பசியாறிப் போங்க!
என்று கூப்பிட்டார்கள். நல்லதங்காள் மறுத்துவிட்டாள்.
அரச வம்சம் நாங்கள்
அண்டை வீட்டில்
தண்ணீர் குடிக்க மாட்டோம்.
என்று சொல்லிவிட்டாள்.
காட்டு வழியே பிள்ளைகளைக் கூட்டிப் போனாள். பாழும் கிணறு தேடிப் போனாள். அண்ணன் வந்தால் அடையாளம் தெரியட்டும் என்று ஆவாரம் செடிகளை ஒடித்துப் போட்டுக்கொண்டே போனாள்.
நல்லதங்காளும் பிள்ளைகளும் நெடுந்தூரம் வந்து விட்டார்கள். ஒரு கிணறும் காணோம். அப்போது சிறுவர்கள் ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார்கள். அவர்களைப் பார்த்து நல்லதங்காள் கேட்டாள்.
“தண்ணீர் தாகமப்பா. தண்ணீர் குடிக்கணும். பாழும் கிணறு இருந்தால் பார்த்துச் சொல்லுமப்பா!’’ என்று கேட்டாள். ஒரு சிறுவன் ஓடிச்சென்று ஆழமுள்ள பாழும் கிணற்றைக் காட்டினான்.
நல்லதங்காள் பிள்ளைகளோடு அங்கு போனாள். கணவன் கண்ணில் படுமாறு தாலியைக் கழற்றி கிணற்றுப் படியில் வைத்தாள். அண்ணன் கண்ணில் படுமாறு பாலூட்டும் சங்கை கிணற்று மேட்டில் வைத்தாள். அண்ணி கொடுத்த அழுகல் தேங்காயை ஓர் ஓரத்தில் வைத்தாள்.
ஒவ்வொரு பிள்ளையாக கிணற்றில் தூக்கிப் போட்டாள். ஒவ்வொரு பிள்ளையும் பயந்து பயந்து அம்மாவின் காலைக் கட்டிக்கொண்டன. காலைக் கட்டிய பிள்ளையை பிடித்து இழுத்து கிணற்றில் போட்டாள். இப்படி ஆறு பிள்ளைகளைப் போட்டுவிட்டாள்.
மூத்த பிள்ளை நல்லதங்காளுக்குப் பிடிபடாமல் ஓடினான். என்னை மட்டும் கொல்லாதே என்னைப் பெற்ற மாதாவே! என்று கெஞ்சினான்.
தப்பிப் பிழைத்து அம்மா - நான்
தகப்பன் பேர் சொல்லுவேன்
ஓடிப் பிழைத்து அம்மா - நான்
உனது பேர் சொல்லுவேன்
என்று சொல்லி தப்பித்து ஓடினான். ஓடிய பிள்ளையை நல்லதங்காள் ஆட்டு இடையர்களை வைத்துப் பிடிக்கச் சொன்னாள். இடையர்களுக்கு விசயம் தெரியாது. தாய்க்கு அடங்காத தறுதலைப் பிள்ளை என்று நினைத்து அவனைப் பிடித்துக்கொண்டுவந்து நல்லதங்காளிடம் விட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.
நல்லதங்காள் கதறி அழுத மூத்த மகனையும் பிடித்து கிணற்றுக்குள் போட்டாள். பிறகு தானும் குதித்தாள். நல்லதங்காளும், ஏழு பிள்ளைகளும் இறந்து மிதந்தார்கள். நல்லதங்காளுக்கு 16 அடிக் கூந்தல். அவள் கூந்தல் கிணறு பூராவும் பிரிந்து பரந்து கிடந்தது. பிள்ளைகளும் தெரியவில்லை. கிணற்றுத் தண்ணீரும் தெரியவில்லை. நல்லதங்காளின் கூந்தல் மட்டுமே கிணறு பூராவும் தெரிந்தது.
நல்லதங்காள் குடும்பம் இப்படி பட்டினியால் செத்து முடிந்தது.
நல்லதங்காள் புறப்பட்டு வந்த சில நாட்களிலேயே மானாமதுரையில் நல்ல மழை பெய்தது. பயிர்கள் திகிடுமுகடாக விளைந்தன. நாடு செழிப்பு அடைந்தது. காசிராஜன் தன் மனைவி நல்லதங்காளையும் தன் பிள்ளைகளையும் அழைப்பதற்கு புறப்பட்டு வந்தான்.
நல்லதம்பி வேட்டை முடித்து வீட்டுக்கு வந்தான். தங்கச்சியைக் காணவில்லை. தங்கச்சி பிள்ளைகளையும் காணவில்லை. பதறிப்போனான்.
மூளி அலங்காரியைப் பார்த்து என் தங்கச்சியையும், தங்கச்சி பிள்ளைகளையும் எங்கே என்று கேட்டாள். மூளி கூசாமல் பொய் சொன்னாள்.
“சீரகச் சம்பா சோறு ஆக்கிப் போட்டேன்
பத்து வகைக் காய்கறி வைத்தேன்.
சாப்பிட்டுப் போனாங்க’’
என்று பொய் சொன்னாள்.
நல்லதம்பி இதை நம்பவில்லை. பக்கத்து வீடுகளில் போய்க் கேட்டான். அவர்கள் நடந்து நடந்தபடி சொன்னார்கள். பிள்ளைகளைப் பட்டினி போட்டதைச் சொன்னார்கள். அவ்வளவுதான் நல்லதம்பிக்கு மீசை துடித்தது. கண் சிவந்தது. பக்கச் சதை எல்லாம் பம்பரம் போல் ஆடியது. தங்கையைத் தேடி காட்டுவழியே போனான். பதறிப் பதறிப் போனான். நல்லதங்காள் ஒடித்துப் போட்ட ஆவாரஞ் செடிகள் வழிகாட்டின. நல்லதம்பி பாழும் கிணற்றின் பக்கம் வந்தான். உள்ளே எட்டிப் பார்த்தான். அய்யோ தங்கையும் பிள்ளைகளும் செத்து மிதந்தார்கள். நல்லதம்பி ஓங்காரமிட்டு அழுதான்.
தங்கச்சி தங்கச்சி என்று தரையில் புரண்டு அழுதான். அம்மா அம்மா என்று அடித்துப் புரண்டு அழுதான். இப்படி அவன் அழுது புரண்டு கொண்டு இருந்தபோது காசிராஜனும் அங்கே வந்து விட்டான். பிள்ளைகளையும் மனைவியையும் பிணமாகப் பார்த்தான். மனைவியைக் கட்டிக் கொண்டு கதறி அழுதான்.
நல்லதங்காளையும் பிள்ளைகளையும் வெளியே எடுத்து தகனம் செய்தார்கள். நல்லதம்பி தன் மனைவி மூளி அலங்காரியைப் பழிவாங்க நினைத்தான். அவளை மட்டுமல்ல. அவள் குலத்தைப் பழிவாங்க ஏற்பாடு செய்தான். தன் மகனுக்கு உடனடியாக திருமணம் ஏற்பாடு செய்தான். மூளி அலங்காரியின் உறவினர்கள் உட்காரும் இடத்தில் இடிப்பந்தல் போட்டான். இடிப்பந்தலைத் தட்டிவிட்டு எல்லோரையும் கொன்றான். மூளி அலங்காரியையும் அரிவாளால் வெட்டிக் கொன்றான்.
இத்துடன் கதை முடியவில்லை. நல்லதம்பி ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். அதேபோல் காசிராஜனும் ஈட்டியில் பாய்ந்து தன் உயிரை விட்டான். இவ்வாறு இரண்டு குடும்பங்களும் பூண்டோடு அழிந்தன. இதற்கு அடிப்படையான காரணம் என்ன?
வறுமை ஒரு பக்கம். மூளி அலங்காரியின் கொடுமை மறுபக்கம். வறுமை கொடியது. பசி கொடியது. பட்டினி கொடியது. அதைவிடக் கொடியது மனிதத்தன்மையற்ற செயல்.
நல்லதங்காள் பட்ட துன்பத்தை இந்த நாடு மறக்காது.
நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஊர் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு பக்கத்தில் அமைந்துள்ளது[1]. இந்த ஊரின் பெயர் அர்ச்சுனாபுரம். பச்சை ஆடை போர்த்திய வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது அர்ச்சுனாபுரம். அங்கே வயல்வெளிக்கு மத்தியிலேயே கோவில் கொண்டுள்ளாள் நல்லதங்காள்.
நல்லதங்காள் கோவில் அமைப்பு மற்ற கோயில்களைப் போல் அல்லாமல் வித்தியாசமாகக் கட்டப்பட்டுள்ளது. கோவில் கருவறையில் நல்லதங்காள் சிலை கம்பீரமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஏழு குழந்தைகளின் சிலை ஒரே கல்லில் செதுக்கப்பட்டு தனியே இன்னொரு சன்னதியில் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஒரு பாழடைந்த கிணறு சிதைந்து போய்க் காணப்படுகிறது. நல்ல தங்காள் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்டது இங்கேதான் என்று சொல்கிறார்கள்.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மேலும், ஒவ்வொரு ஆடி மாதமும் நடைபெறும் பொங்கல் விழாவில் நல்லதங்காளின் உறவினர் வழித் தோன்றல்களாக வந்தவர்கள், மானாமதுரையில் இருந்து இங்கு வந்து விழாவில் கலந்து கொள்கின்றனர். இந்தத் திருவிழா நான்கு நாட்கள் நடைபெறுகிறது. அத்துடன், மாதம்தோறும் பவுர்ணமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது.
இந்தக் கோவிலுக்கு வந்து வேண்டினால் குடும்ப உறவு பலப்படும், திருமணமாகாத பெண்கள் வந்து மஞ்சள் கயிறு வாங்கி கட்டினால் திருமணம் கைகூடும், வாழ்வில் நலம் ஏற்படும் என்பது இக்கோயில் பக்தர்களின் நம்பிக்கை.
ஒரு மனிதனுக்கு தேவையானவை உணவு,உடை,இருப்பிடம் மட்டுமே.இதிலும் அனைவருக்கும் அன்றாடம் தேவையானவை உணவு தான்.
தான தருமங்களில் உயர்ந்தவை அன்னதானம் மட்டுமே.அதற்க்காக வசதியுள்ளவர்களுக்கும்,போலியான துறவிகளுக்கும் நீங்கள் அன்னதானம் செய்வதால் எவ்வித பலனும் இல்லை.பசியால் வாடும் வறியோர்களுக்கும்,மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும்,மாற்றுத்திறனாளிகளுக்கும்,கைவிடப்பட்ட குழந்தைகளுக்கும் உணவு கொடுங்கள் உங்களது ஈசனின் அருளால் கர்மவினைகள் குறைந்து உங்கள் குடும்பம் தழைக்கும்.
"பசித்தோர்க்கு உணவு அளிப்போம்"
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Thursday, October 5, 2017

காரிய தடை நீங்க-காரிய சித்தி அஞ்சனம்:

காரிய தடை நீங்க-காரிய சித்தி அஞ்சனம்:
சிலருக்கு எந்த வேலையாக சென்றாலும் அந்த வேலை கைகூடி வருவதுபோல் இருந்து அப்படியே நின்று விடும்.காரியம் நடக்காது.காரியத் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும் .அப்படிப்பட்டவர்கள்
முக்கியமான காரியமாக வேலையாக செல்லும் முன் இந்த காரிய சித்தி அஞ்சன மையை நெற்றியில் இட்டுக் கொண்டு செல்ல அனைத்து காரியங்களிலும் ஜெயம் உண்டாகும்.சுமுகமாக நடக்கும்.
காரிய சித்தி அஞ்சன மை விலை ரூ1500/-
இதனுடன் காரிய சித்தி யந்திரத்தகடு கொடுக்கப்படும்.
தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989,7598758991

Tuesday, October 3, 2017

படிக்கும் குழந்தைகள் எத்தனை முகம் ருத்ராட்சம் அணிய வேண்டும்


படிக்கும் குழந்தைகள் எத்தனை முகம் ருத்ராட்சம் அணிய வேண்டும்:
பலரோட கேள்வியும்,சந்தேகமும் இதுதான்,படிக்கும் குழந்தைகளுக்கு எத்தனை முக ருத்ராட்சம் அணிவிக்க வேண்டும்.!
1 வயது முதல் 14 வயது வரையுள்ள படிக்கும் குழந்தைகளுக்கு,ஆறு முக கடவுள் முருகப்பெருமானின் அம்சமான ஆறு முக ருத்ராட்சம் மட்டுமே அணிவிக்க வேண்டும்.
14 வயதுக்கு மேற்பட்டவர்கள் பிரம்மாவின் அம்சமான நான்கு முக ருத்ராட்சம் அணிய வேண்டும்.
ருத்ராட்ச காய்களில் வலப்பக்க முக காய்களே பலன் அதிகம் தரக்கூடியவை.
இதனால் தடைகள்,தடங்கல்கள் இன்றி கல்வித்துறையில் சிறந்து விளங்கலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பிரசன்னம் சொல்ல : மதுரை வீரன் சக்கர பூஜை


பிரசன்னம் சொல்ல : மதுரை வீரன் சக்கர பூஜை
மதுரை வீரன் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நதி காணப்படுகிறது. மதுரைவீரன் தனித்தும், அல்லது அவருடைய இரு மனைவியருடனும் வணங்கப்படுகிறார்.
மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய திருவாளுடனும் முறுக்கிய மீசையடனும் காட்சியளிக்கின்றார். வலது புறப்புறத்தில் வைரவரும் இடது புறத்தில் பரியும் காணலாம்.
வழிப்பாடு
மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, சிங்கப்பூர், பாலி, இலங்கை, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிப்பாடு என்ற கூற்றை இல்லை என ஆய்வாளர்கள் மறுக்கின்றனர். உண்மையில் சிவன், ஏசு, புத்தன், முருகன், ராமன், க்ருஷ்ணனை போல் மக்களை காக்க நீதி, சத்தியம் மற்றும் தர்மம் ஆகியவற்றை மண்ணில் நிலை நாட்ட அவதரித்த ஒரு தெய்வ பிறவிதான் மதுரைவீரன் என்று கருதுகின்றனர். மதுரை வீரன் வழிப்பாடு என்பது முறையான சைவ வழிப்பாடாகும். அவர் ஒரு காவலர் என்ற ஒரு காரணத்தினால் ஆதியில் பாமரமக்கள் அவரையும் காவல் தெய்வங்களில் ஒன்றாக இணைத்து பூஜைமுறைகளையும் அப்படியே நிறைவேற்றினர். இவர் தன் வாழ்நாளில் சாதி எதிர்ப்பையும் தன் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக கொண்டு போராடி இருந்ததால், அவர் மறைந்த பின் சாதி வெறியர்கள் அன்னை மதுரை மீனாட்சியின் ஆணையையும் மீறி ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மனின் ஆலயத்தினுல் வீரனுக்கு சிலை வைப்பதை தவிர்த்து மாறாக அவர் தாழ்ந்த இனத்தவர் தெய்வம் என்றும் ஒதுக்கி விட்டனர். ஒன்றும் அறியாத பாமரமக்கள் அவர் தன் வாழ்நாளில் காவலராக இருந்ததை கருத்தில் கொண்டு அவரையும் மற்ற காவல் தெய்வங்களோடு ஒருவராக்கி விட்டனர் எனவேதான் அவர் காவல் தெய்வமானார். உண்மையில் அவருக்கும் காவல் தெய்வங்களான முனிகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. கருமுனி, செம்முனி, வால்முனி, ஜடாமுனி, கும்பமுனி, கங்கை முனி, நாதமுனி, மச்சமுனி, சிவமுனி, தவமுனி என இன்னும் பல முனிகள் இருப்பினும் மதுரைவீரன் என்று பெயர்வகையில் மாறுப்பட்டு நிற்பதிலேயே கண்டுக்கொள்ள இயலும். இன்னும் சொல்லப்போனால் வரலாறு கொண்ட காவல் சரித்திர நாயகர்கள் என்றால் அது மதுரை வீரன் மற்றும் சங்கிலி கருப்பன் மட்டும்தான். ஆனால் தொடக்க புள்ளியில் இருந்தே காவல் தெய்வங்கள் அனைவரையும் மக்கள் ஒரே கோட்டின் கீழ் நிறுத்தி சகோதரர்களாக வரிசை படுத்தி வணங்கினர். நாளடைவில் காவல் தெய்வ சக்திகள் யாவும் ஒரே சக்தியாய் வடிவம் பெற்றதை ஆன்மிகவாதிகள் ஒப்பு கொள்கின்றனர். எல்லா காவல் தெய்வங்களுக்கும் பலி படையல் இட்டு வந்த மக்கள் தொடக்கத்தில் இருந்தே மதுரை வீரனுக்கும் அப்படியே படையல் இட்டு வந்தனர். அது வாழையடி வாழையாகி இப்பொழுது அதுவே வழக்கமாகி விட்டது.
இல்ல வழிப்பாடு
உண்மையில் ஸ்ரீ மதுரை வீரருக்கு சைவ உணவு படைத்து வழிப்படுதலே முறையாகும். பால், பழம், வெண்பொங்கல், மல்லிகை மற்றும் மணக்கும் மலர்கள் முதலியவற்றை படைத்து வணங்குதல் சிறப்பு. நறுமணம் கொண்ட ஊதுபத்தி சாம்பிராணி பற்றவைத்து இல்ல வழிப்பாட்டை நிறைவேற்றலாம். பூஜை நேரத்தின் போது அமைதியான மனதிற்க்கு இதமான மெல்லிசையை சேர்த்து கொள்ளலாம். இல்லவழிப்பாட்டிற்கோ ஆலயவழிப்பாட்டிற்கோ முன்னதாக தாம் பூஜை செய்யும் இடச்சூழல் கடலோரத்திலோ, நதியோரத்திலோ, மலைஉச்சியிலோ, எழில் கொஞ்சும் வனப்பகுதியின் நடுவிலோ அமைந்திருப்பதை போன்று ஆழ்மனதில் ஆழமாக பதிந்து கொள்ளவேண்டும். பூஜைக்கு முன் நமக்கேற்ப்பட்டிருக்கும் மனசஞ்சலங்கள், மனச்சிக்கல், குழப்பங்கள், பிரச்சனைகள் அனைத்தையும் ஒரு மூளையில் மூட்டைக்கட்டி வைத்து விட்டு "என்னையும் இம்மண்ணையும் அந்த விண்ணையும் ஆளும் அந்ந மாபெரும் பரமாத்ம சக்தியான ஸ்ரீ மதுரை வீரருக்கு பூஜை செய்ய போகும் நான் எத்தனை பாக்கியம் செய்திருக்க வேண்டும்” என்பதை உணர்ந்து பெருமையுடனும் சந்தோஷத்துடனும் பூஜையை துவங்க வேண்டும். சுவாமியின் படத்திற்க்கு முன்பும் சரி விக்கிரகத்தின் முன்பும் சரி, பூஜை செய்யும் போது அந்த ஸ்ரீ மதுரை வீரரே தம்முன் இருப்பதாக உறுதி செய்து கொள்ள வேண்டும். பிரார்த்தனையின் போதும் கூட. இறைவன் நம்மிடத்தில் இருந்து எதிர்ப்பார்ப்பது மூன்று. அவை அன்பு, பக்தி, மரியாதை ஆகும்.சுருங்க கூரின் நாம் நம் தாய்க்கோ தந்தைக்கோ கால் பிடித்து விட்டால் எவ்வளவு அன்பாக செய்வோம். நம் நாட்டு ஜனாதிபதிக்கு எடுபிடி வேளை செய்தால் நாம் எவ்வளவு மரியாதையுடனும் கவனத்துடனும் செய்வோம். எல்லாம் முடிந்து அவர் நமக்கு பதக்கம் குத்தி விட்ட பின்பு நாம் எவ்வளவு அடக்கமாக பணிவாக கூனி குறுகி பின் நோக்கி சில அடிகள் எடுத்து வைத்து விடை பெறுவாம். அதே அன்பும் மரியாதையும்தான் பக்தியின்(பூஜையின்) போது நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் பொழுதும் சரி வைக்கும் பொழுதும் சரி மிகவும் பணிவுடனும் மரியாதையுடனும் செய்தல் வேண்டும். நேரே வந்த ஆண்டவனிடத்தில் நாம் எப்படி பேசுவோம், என்னென்ன கேட்ப்போம், எப்படி அடிப்பணிவோம் அதையெல்லாம் அங்கே அன்பாக செய்ய வேண்டும். பூஜையின் இடைஇடையே ஆத்மார்த்தமான பாடல்கள் பாடி பஜனை செய்தல் மிக சிறப்பாகும். இரு கரங்களையும் மேல் உயர்த்தி பக்தி பரவசத்தோடு உடலை அங்கும் இங்கும் அசைத்தவாறு அல்லது ஆடியப்படி “வீராயநம ஓம் வீராய நமஹா வீராயநம ஓம் நமசிவாய” என்று கோஷமிடலாம். இதையே ஆயலயத்தில் பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் மெய் மறந்து செய்யும் பொழுது அவர்களோடு ஸ்ரீ வீரரும் சேர்ந்துக்கொள்வார். பூஜையின் துவக்கத்திலும் இறுதியிலும் உறுமிமேல வாத்தியங்கள் வாசித்து அவரை மகிழ்ச்சி படுத்தலாம். உறுமிமேல இசையால் அவரை இன்புர செய்யலாம். பஜனை செய்து பக்தி பரவசத்தால் நம் ஜீவாத்மாவை தூய்மைபடுத்தி அந்த பரமாத்மாவோடு ஒன்றிணைக்கலாம். எனவேதான் இங்கு பஜனை மிக மிக அவசியமான ஒன்றாதாகிறது.
எண்ணவழிப்பாடு
முதலில் நாம் ஸ்ரீ வீரனை நேசிக்க பழகி கொள்ள வேண்டும். நாம் எங்கு சென்றாலும் சரி, என்ன செய்தாலும் சரி அவரோடு பேசுவது போன்று விளையாடுவது போன்று நம் எண்ணங்களால் அவரோடு உறவாட வேண்டும். அல்லது அவருடைய சரித்திரத்தை படித்து அதில் அவர் செய்யும் வீர சாகசங்களை அவருடைய பெருமைகளை நாம் நமது எண்ணத்திரையில் ஒரு திரைப்படத்தை காண்பதை போல் காணவேண்டும். உதாரணத்திற்க்கு ஒரு திருமணமானவனின் குழந்தை இரண்டு வயதை எட்டியதும், அது பேசும் கொஞ்சும் மழழையை கேட்டு அது செய்யும் சுட்டிகளை கண்டு அதனோடு விளையாடவே அவன் மனம் ஏங்கும். எப்பொழுது மணியாகும் எப்பொழுது வீட்டிற்க்கு போகலாம் என மனம் துடிக்கும். சதா அக்குழந்தை நினைவாகவே மனம் லயித்திருக்கும். எண்ணி எண்ணி ஆனந்தத்தில் திளைத்திருக்கும். இந்த உறவும் தொடர்பும்தான் நாம் ஸ்ரீ வீரனிடத்தில் கொண்டிருக்க வேண்டும். உணவுக்கு முன் “அய்யனே, அப்பா வீராண்டவரே எமக்கு இவ்வேளை உணவருளியமைக்கு மிக்க நன்றி என் தேவனே. வீரவா, தாங்கள் தயவு செய்து இதுப்போலவே என்தன் வாழ்வின் இறுதி நொடிவரையிலும் குறைவல்லாது உணவருளவேண்டும் எம்பெருமானே ,ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா" என்றும், உறங்குவதற்க்கு முன் “ஐயனே, அப்பா பரமாத்ம தேவனே பரலோக நாயகனே பாராலும் மன்னவனே, ஸ்ரீமஹா மதுரை வீராண்டவனே, அப்பா தாங்கள் எமக்கு இந்நிம்மதியான உறக்கம், இந்நிம்மதியான தருணம், இந்நிம்மதியான சூழ்நிலையினை அருளியமைக்கு மிக்க நன்றி என் அய்யனே ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமஹா” என்றும், துயில் களைந்ததும் “அய்யனே என் தேவ பெருமானே, இந்த பொழுது எமக்கு இன்பமான நலமான அதிர்ஷ்ட்டமான வெற்றியான பொழுதாக அமைய எல்லாம் வல்ல வீரவரே தாங்கள் தயவு செய்து எமக்கு அருள் புரியவேண்டுமப்பா, ஓம் ஸ்ரீமஹா மதுரை வீராய நமோ நமஹா” என்றும் பிரார்த்திக்க வேண்டும். இதில் மிக முக்கியமாக உணவருந்துவதற்க்கு முன். இது இரண்டு மணி நேரம் பூஜை செய்வதற்க்கு ஒப்பாகும். எண்ணத்தால் உரையாடுவதும் உறவாடுவதுமே எண்ணவழிப்பாடாகும். எண்ணங்களின் பிறப்பிடமே மனம். மனம் ஒரு கோவில் எனப்படும். ஒரு கோவிலை தங்கத்தால் கட்டினாலும் அக்கோவில் சுத்தமில்லை எனில் அங்கே தெய்வங்கள் குடியிருக்காது. ஆக, இங்கே செய்ய வேண்டிய முதற்க்காரியம் நம் மனத்தை தூய்மை படுத்துவதே.
எப்படி தூய்மை படுத்துவது?
ஸ்ரீஇராம கிருஷ்ண பரஹம்சர் ஒரு முறை தன் சீடர்களுக்கு ஒரு கதை சொன்னார். ஒரு ஊரில் வணிகர் ஒருவர் மிக செல்லமாக நாய் ஒன்று வளர்த்து வந்தார். அதை கட்டிப்போட்டு துன்புறுத்த கூடாதென அதை தன் வீட்டிற்க்குள் சுதந்திரமாக விட்டிருந்தார். இவர் இரவு வீடு திரும்பும் போதெல்லாம் அந்த நாய் இவர் மீது பாய்ந்து பாய்ந்து விளையாடும். மிகவும் களைப்பில் இருக்கும் அவருக்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு நாளும் இவர் வீடு திரும்பும் போது அது பாய்ந்து விளையாடுவதால் அதனை உதறி உதறி தள்ளினார். பின்பு ஒருநாள் அது தன் எஜமானரை பார்த்தப்படி தொலைவிலேயே அமர்ந்திருந்தது. இப்படிதான் நம் மனத்தை தூய்மை படுத்த வேண்டும். இந்த எண்ணவழிப்பாடு சற்று கடினமான ஒன்று. ஆனால் அதுதான் நம்மை ஸ்ரீவீரரோடு பேசவும், விளையாடவும், கட்டிதழுவி அன்பை பறிமாறிக்கொள்ளவும் செய்யும். நாளை நிகழபோவதை இன்றே அறிவித்துவிடும். முதல் அறிமுகத்தின் போதே நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்பதை திரை போட்டு காட்டிவிடும். நம் மீது கொண்ட பொறாமையினால் நம் பின்னால் யாரேனும் சூழ்ச்சியோ சூனியமோ எது செய்தாலும் அது நம்மை துளியும் அணுக முடியாது. மாறாக, கயவர் யார் என்பதை நமக்கு காட்டி கொடுத்து அவரின் தோல்வியையோ அழிவையோ மிக விரைவிலேயே நம் விழிகளுக்கு முன்நிலையில் கொண்டு வரும். நாம் ஒன்றை நோக்கி அடி எடுத்து வைத்தால் நிச்சயம் அதில் வெற்றி பெறுவோம். வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறுவோம். மனத்தை தூய்மை படுத்துவது கடினமான ஒன்று என்றாலும் ஸ்ரீஇராமகிருஷ்ணர் கூறுவதுப்போல் நாம் முழுமூச்சுடன் செயல்ப்பட்டால் நிச்சயம் நம்மால் இயலும். மனத்தை தூய்மை படுத்துவது என்றால் என்ன? நாம் யாரையும் தாழ்த்தவோ புறம்பேசவோ கூடாது. மற்றவர் நம் மனதை காய படுத்தியபோதும் நாம் அவர் மனம் நோகாது பேச வேண்டும். மந்திரம் ஜெபித்து தியானம் செய்தல், ஸ்ரீ வீரரின் பெயரில் தானங்கள், கோவில்களில் தொண்டுகள், இயலாதவர்களுக்கு உதவிகள் செய்தல், மற்றும் மனிதர்களிடத்தில் மட்டும் இன்றி சக உயிரினங்கள் ஜீவராசிகள் அனைத்தின் இடத்திலும் அன்பும் பரிவும் அதிகளவில் காட்டுதல், இமயத்தின் உச்சத்தில் கோபம் இருப்பினும் கர்வம், கௌரவம் எதையும் பார்க்காமல் மன்னித்தல், தாய் தந்தையரை கண் போல் காத்து முதியோர்களுக்கு பணிந்து போதல், காமம் கண் மறைக்கும் நொடியில் அறிவுக்கு வேலை கொடுத்து மனத்தை அடக்குதல், செல்லும் வழியில் கர்பிணியையோ, விபத்தையோ, நாய் பூனை காகம் எலி முதலிய பிராணிகள் இறந்து கிடப்பதையோ, சவ ஊர்வலத்தையோ கண்டால் உடனே சில நொடிகள் உறுக்கமாக பிரார்தனை செய்ய வேண்டும். அசுர கோபத்திலும் மன்னிக்கும் குணம் வேண்டும் , கொச்சை மொழி பேசுவதை தவிர்க்கவும், நம் பார்வயை சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். வருடத்தில் குறைந்தது ஒருமுறையாவது உடல்குறைப்பாடுகள் உள்ளவர்களின் இல்லதிற்க்கு/அநாதை இல்லங்ளுக்கு சென்று பணமோ,சமையலுக்குண்டான பொருட்களோ அல்லது சமைத்த உணவோ வழங்குதல் மிக மிக நன்மை பயக்கும். ஒவ்வொரு மாதமும் ஊதியம் பெற்றதும் ஆயிரம் வெள்ளி சம்பளம் என்றால் அதில் குறைந்தது பத்து வெள்ளியாவது கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்த வேண்டும். காமம், கேடு, சூது, வஞ்சம் போன்ற எண்ணங்களை வேரோடு அறுக்க வேண்டும். வேளைக்கு செல்லும் பொழுதும் சரி வரும் பொழுதும் சரி ஸ்ரீவீரரின் நாமத்தை “ஓம் ஸ்ரீ மஹா மதுரை வீராய நமோ நமஹா” என்று எண்ணுதல் சிறப்பு.
மதுரை வீரன் கதை
16 நூற்றாண்டில்,துளசிங்க மகராஜன் என்ற ஒரு அரசருக்கும் கற்ப்பகவள்ளி என்ற அரசிக்கும் மகனாக பிறக்கின்றார் . ஆனால் குழந்தை கழுத்தில் மாலையுடன் பிறக்கவே மன்னர் மந்திரிகளின் ஆலோசனைகளை நாட, குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனான் என்றால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அந்த குழந்தையை கொள்ள மனமில்லாமல் வெகுதூரம் இருக்கும் ஒருக்காட்டில் சென்று விட்டு விடும்படி கட்டளை இடுகிறார். குழந்தையை சுற்றி சிங்கம், புலி, கரடி, யானை அனைத்தும் மண்டியிட்டு வணங்க நாகம் தலைக்கு மேல் குடைவிறித்திருந்தது. அந்த நேரம் சின்னான் செல்லி என்ற தம்பதியினர் அவ்வழியே செல்ல அக்காட்சியை கண்டு பிரமிப்படைந்தனர். சிறிது நேரத்தில் அந்த விலங்குகள் அவ்விடத்தை விட்டு அகன்றதும் வெகுநாள் குழந்தை பாக்கியம் இல்லாத அவர்கள் அந்த குழந்தையை எடுத்து வீரன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். மதுரை வீரன் என்பவர் உண்மையாக வாழ்ந்த ஒரு மண்ணின் மைந்தர். இவர் அரசபரம்பரையை சேர்ந்தவராவார். ஒரு சிறந்த பெரிய போர் வீரனான அவர் எப்போதும் தன் மக்களை போராடி பாதுகாத்து வந்துள்ளார்.
அந்த நேரத்தில்.மதுரை நாயக்கரால் ஆழப்பட்டு வந்த மதுரை நகரம் மற்றும் மக்களை, ஒரு வெல்ல முடியாத போரினில் மூலம் சங்கிலி கருப்பர் அச்சிறுத்தி வந்தார். இறுதியாக, மதுரை வீரன் அந்த போரில் கலந்து சங்கிலி கருப்பரை தோற்கடித்து மதுரையை மீத்தார்.
சங்கிலி கருப்பரை தோற்கடித்தப்பின், மதுரை வீரன் திருமலை நாயக்கரின் கீழ் தளபதிகளில் ஒருவராக மதுரை வீரன் பொறுப்பெடுத்தார். திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் அருந்ததியினர் காவல் செய்ய வேண்டும்.காவல் பொறுப்பை ஏற்ற வீரன் பொம்மிக்கு காவல் செல்கிறார். வீரனின் உயரமான நிமிர்ந்த தோற்றத்தையும், விரிந்த மார்பையும், பெரிய கட்டான தோள்களையும், முரட்டு கைகளையும், உருதியான கால்களையும், துடுக்கான பேச்சும், கழுகின் பார்வையும், முரட்டு மீசையும், கலையான சிரிப்பையும் கண்ட பொம்மிக்கு யார் இந்த வீரன்? என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் உண்டாயிற்று. இன்னும் சொல்லப்போனால் புதிதாய் பூத்த செந்தாழம்பூவான பொம்மியை பெரிதாய் கவர்ந்ததே வீரனின் நடைதான். அரசனிடம் நன்மதிப்பு பெற்ற காவலர்களில் ஒருவரான சின்னான் என்பவரின் மகன்தான் இந்த வீரன் என்பதை பொம்மியின் தோழி ஒருத்தி சொல்லக்கேட்டு பொம்மி ஐயம் தெளிந்தாள். பொம்மி ஜன்னலின் ஓரம் நின்று மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தாள். பின் இருவரும் சரளமாக உரையாட ஆரம்பித்தனர். வீரன் காவலுக்கு வராத நாட்களில் பொம்மி வீரனின் வரவை எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைவாள். சின்னான் காவலுக்கு வர இயலாத நாட்களில்தான் வீரன் காவலுக்கு வருவார். அது ஒரு மழைக்காலம் என்பதால் சின்னானுக்கு குளிர்காய்ச்சல் ஏற்ப்பட்டது. ஆகவே சிலநாள் காவலுக்கு வீரன்தான் சென்றார். ஒருநாள் காவலின் போது பெருமழை தூரவே காவலில் இருந்து விலக முடியாமல் வீரன் அங்கேயே நின்றார். பொம்மி தன் குடிலுக்குல் வரச்சொல்லி உத்தரவிட்டும் வீரர் காவலிலிருந்து பின்வாங்கவில்லை. “யாரும் இளவரசியார் குடிலுக்குள் செல்லாதப்படி காவலிருப்பதே எனக்குண்டான அரசக்கட்டளை. நானே அதை மீறலாகுமா?" என்றார். அத்தோடல்லாமல் தன் தந்தையின் மேல் மன்னர் வைத்திருக்கும் நன்மதிப்பும் தந்தை தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் பாழாகும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். எனவே காவல் நேரம் முடியும் வரை அவர் அங்கிருந்து ஓரடிக்கூட அகல வில்லை. இரவு முழுதும் மழையில் நனைந்ததால் மறுநாள் வீரன் காவலுக்கு செல்ல இயலவில்லை. தொடர்ந்து ஒருசில நாட்கள் வீரன் வராததைக் கண்டு வீரனைக் காண ஆவல் கொண்ட இளவரசி நேரே வீரனின் குடிசைக்கு சென்றாள். மாறுவேடத்தில் மறுத்துவச்சியாக. பொம்மியின் வருகையினால் சினனானும் செல்லியும் அச்சமுற்றனர். இளவரசியாரின் தேற்றலால் அவர்கள் சாந்தமாகினர். பொம்மியின் அளவற்ற காதலால் வீரனின் மனமும் தளர்ந்தது. இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் .இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அந்த சமையத்தில் மதுரை வீரர் ராஜாவின் அரண்மனையில் பணிபுரியும் ஒரு பணிப்பெண்ணை காதலித்து வந்தார். இவரின் வீரத்தைக் கண்ட தொட்டிய நாயக்க இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் அருந்ததியர் இனம் என்று எண்ணி, உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக சக்கிலியர் சமூகமும் திருமலை நாயக்கரும் மதுரை வீரருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று எண்ணினர். மதுரை வீரரை போன்ற ஒரு பெரிய வீரரை மோதுவது இயலாத காரியம் என்று இருந்த போதும், மதுரை வீரரை உடல் அங்கங்கள் தனி தனியாக வெட்டி எறிய உத்தரவித்தார். ராஜாவின் உத்தரவை மீற முடியாதலால், அந்த தண்டனை மதுரை வீரருக்கு வழங்கப்பட்டது.
மதுரை வீரரின் மரணத்துக்கு பிறகு, திருமலை நாயக்கர் காணவில்லை. சில நாட்களுக்கு பிறகு, அவரின் உடல் ஒரு கிணற்றில் காணப்பட்டது. அதிலே அவரின் சகாப்தமும் முடிந்தது.
பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் . ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் அதற்கு தகுந்த வரலாற்று சான்றுகள், ஆதாரங்கள் எதுவும் இல்லை. மதுரை வீரன் காட்டில் ஆதரவற்ற குழந்தையாக தான் கண்டெடுக்க பட்டார் என்பது வரலாற்று பதிவுகளின் அடிப்படையிலும், மதுரை வீரன் கதைப்பாடல்களின் அடிப்படையிலும் மற்றும் அருந்ததியர் இனத்து மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்கப்பட்டு, கூறப்படும் செவிவழி செய்தியின் அடிப்படையிலும் உண்மையாக கருதப்படுகிறது.
கதைபாடல்
மதுரை வீரன் வடக்கில் (கதைபாடல் காசி என்கிறது) உள்ள துளசிங்க மகராஜன் என்ற ஒரு அரசருக்கும் கற்ப்பகவள்ளி என்ற அரசிக்கும் மகனாக பிறக்கின்றார் . ஆனால் குழந்தை கழுத்தில் மாலையுடன் பிறக்கவே மன்னர் மந்திரிகளின் ஆலோசனைகளை நாட, குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனான் என்றால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் . குழந்தையை சுற்றி சிங்கம், புலி, கரடி, யானை அனைத்தும் மண்டியிட்டு வணங்க நாகம் தலைக்கு மேல் குடைவிறித்திருந்தது. அந்த நேரம் சின்னான் செல்லி என்ற தம்பதியினர் அவ்வழியே செல்ல அக்காட்சியை கண்டு பிரமிப்படைந்தனர். சிறிது நேரத்தில் அந்த விலங்குகள் அவ்விடத்தை விட்டு அகன்றதும் வெகுநாள் குழந்தை பாக்கியம் இல்லாத அவர்கள் அந்த குழந்தையை எடுத்து வீரன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் அருந்ததியினர் காவல் செய்ய வேண்டும். காவல் பொறுப்பை ஏற்ற வீரன் பொம்மிக்கு காவல் செல்கிறார். வீரனின் உயரமான நிமிர்ந்த தோற்றத்தையும், விரிந்த மார்பையும், பெரிய கட்டான தோள்களையும், முரட்டு கைகளையும், உருதியான கால்களையும், துடுக்கான பேச்சும், கழுகின் பார்வையும், முரட்டு மீசையும், கலையான சிரிப்பையும் கண்ட பொம்மிக்கு யார் இந்த வீரன்? என்பதை தெரிந்துக்கொள்ள ஆர்வம் உண்டாயிற்று. இன்னும் சொல்லப்போனால் புதிதாய் பூத்த செந்தாழம்பூவான பொம்மியை பெரிதாய் கவர்ந்ததே வீரனின் நடைதான். அரசனிடம் நன்மதிப்பு பெற்ற காவலர்களில் ஒருவரான சின்னான் என்பவரின் மகன்தான் இந்த வீரன் என்பதை பொம்மியின் தோழி ஒருத்தி சொல்லக்கேட்டு பொம்மி ஐயம் தெளிந்தாள். பொம்மி ஜன்னலின் ஓரம் நின்று மெல்ல மெல்ல பேச்சு கொடுத்தாள். பின் இருவரும் சரளமாக உரையாட ஆரம்பித்தனர். வீரன் காவலுக்கு வராத நாட்களில் பொம்மி வீரனின் வரவை எதிர்ப்பார்த்து ஏமாற்றம் அடைவாள். சின்னான் காவலுக்கு வர இயலாத நாட்களில்தான் வீரன் காவலுக்கு வருவார். அது ஒரு மழைக்காலம் என்பதால் சின்னானுக்கு குளிர்காய்ச்சல் ஏற்ப்பட்டது. ஆகவே சிலநாள் காவலுக்கு வீரன்தான் சென்றார். ஒருநாள் காவலின் போது பெருமழை தூரவே காவலில் இருந்து விலக முடியாமல் வீரன் அங்கேயே நின்றார். பொம்மி தன் குடிலுக்குல் வரச்சொல்லி உத்தரவிட்டும் வீரர் காவலிலிருந்து பின்வாங்கவில்லை. “யாரும் இளவரசியார் குடிலுக்குள் செல்லாதப்படி காவலிருப்பதே எனக்குண்டான அரசக்கட்டளை. நானே அதை மீறலாகுமா?" என்றார். அத்தோடல்லாமல் தன் தந்தையின் மேல் மன்னர் வைத்திருக்கும் நன்மதிப்பும் தந்தை தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையும் பாழாகும் என்பதையும் நன்கு அறிந்திருந்தார். மழை இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் .இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர்களுடன் போரிட்டனர். இவரின் வீரத்தைக் கண்ட தொட்டிய நாயக்க இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் அருந்ததியர் இனம் என்று எண்ணி, உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் .ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் அதற்கு தகுந்த வரலாற்று சான்றுகள், ஆதாரங்கள் எதுவும் இல்லை. மதுரை வீரன் காட்டில் ஆதரவற்ற குழந்தையாக தான் கண்டெடுக்க பட்டார் என்பது வரலாற்று பதிவுகளின் அடிப்படையிலும், மதுரை வீரன் கதைப்பாடல்களின் அடிப்படையிலும் மற்றும் அருந்ததியர் இனத்து மக்கள் உட்பட அனைத்து சமூக மக்களாலும் ஏற்கப்பட்டு, கூறப்படும் செவிவழி செய்தியின் அடிப்படையிலும் உண்மையாக கருதப்படுகிறது.
பிரசன்னம் சொல்ல : மதுரை வீரன் சக்கர பூஜை
நடந்த காலம் , நிகழ்காலம் , எதிர்காலம் என பிரசன்னம் கேட்போர் விடைக்கும் வண்ணம் பிரசன்னம் கூரிட , மதுரை வீரன் இறங்கி அருள்வாக்கு சொல்லிட , உங்களை கண்ட மாத்திரத்தில் துஷ்ட சக்திகள் விலகிட மதுரை வீரன் உபாசகன சக்ர பூஜை .
ஆன்மீக தேடல் உள்ளவர்களும் , உண்மை தீட்சை பெற்றஉபாசகர்கள் மட்டுமே பலன் அடைய முடியும் . குருமார்களை சோதிப்பது , மந்திரங்களையும் , பூஜா விதிகளையும் உரிய குரு ஆசீர்வாதத்தின் மூலமே பயிற்சி கொள்ளவேண்டும் . இல்லை எனில் சித்திபெற முடியாது . எதிர்மறையான பலனை அடைய வேண்டிவரும் .
செவ்வாய் கிழமை அல்லது வெள்ளிக்கிழமை குளித்து தலை முழுகி வேட்டி அணித்து விபூதி , குங்குமம் வைத்துக்கொண்டு , கிழ்கண்ட சக்கரத்தை ஒரு தாமிர தகட்டில் வரைந்து , ஒரு ஆசன பலகையில் கிழக்கு முகமாக வைத்து .
அதற்க்கு விபூதி சந்தானம் குங்குமம் சார்த்தி நல்ல வாசனை பூக்கலால் அலங்காரம் செய்து , அதன் எதிராக வாழையிலை வைத்தது வெற்றிலை , பாக்கு , தேங்காய் , பழம் அவுல் கடலை , புனாதி லேகியம் , சுருட்டு , புழுங்கல அரிசி சாதம் , மாமிசம் , கருவாடு , முட்டை , முருங்கைக்காய் , கீரை , புண்ணாக்கு இவைகளை படையல் செய்து , கள்ளு , மது , பானகம் ஆகியவைகளுடன் வத்தி , சாம்பிராணி , கற்பூரம் தூபம் காட்டி , படையலை வைக்க வேண்டும் .
மூல மந்திரம் , மால மந்திரம் இவைகளை 1008 உரு , முப்பது நாளுக்கு ஜெபிக்கு சக்கரம் சித்தியாகும் . ஜெபம் செய்ய படிக மாலை உபயோகிக்க வேண்டும் .
மதுரை வீரன் அருள் இறக்கி பிரசன்னம் சொல்ல,அருள் வாக்கு சொல்ல தீட்சை வேண்டுவோர் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Monday, October 2, 2017

ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம் மந்திரம்




ஆபத்துக்களில் இருந்து காக்கும் ஸ்ரீ சுப்பிரமணிய மந்திரம்
மந்திரம்
ஓம் வஜ்ரபுவே நமஹ||
இம்மந்திரம் மந்திர சாஸ்திர நூலான ஸ்ரீ சாரதா திலகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.தொடர்ந்து பல விபத்துக்கள்,எதிர்பாராத பிரச்சனைகளால் துன்பம் அனுபவித்து வருபவர்கள் இம்மந்திரத்தை ஜெபித்து வர ரக்ஷையாக விளங்கிக் காக்கும்.
பிரயோகம் :-
கிழக்கு முகமாக நின்று அல்லது அமர்ந்து ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் ஜவ்வாது கலந்த விபூதி பரப்பி அதில் இம்மந்திரத்தை ஊதுவத்திக் குச்சி அல்லது வலது கை மோதிர விரல் கொண்டு எழுதி 108 தடவை இம்மந்திரத்தை ஜபம் செய்த பின் அணிந்து வர உயர்ந்த பலன் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, September 30, 2017

எங்களிடம் கிடைக்கும் பரிகார தாயத்துக்கள் விவரம்:


எங்களிடம் கிடைக்கும் பரிகார தாயத்துக்கள் விவரம்:
1)ஏவல்,பில்லி,செய்வினை,மந்திர தந்திர அபிசார தோஷ நிவர்த்தி தாயத்து- ரூ2000/-
2) பேய்பிசாசு தொல்லைகள்,கண்திருஷ்டி தோஷ நிவர்த்தி தாயத்து-ரூ1750/-
3)கணவன் மனைவி வசியம்,ஆண்/பெண் வசிய தாயத்து-ரூ2000/-
4)உத்தியோகம்,தொழில் வசியம்,நல்ல வேலை கிடைக்க தாயத்து-ரூ1800/-
5)கல்வியில் சிறந்து விளங்க தாயத்து-ரூ1500/-
6)குலதெய்வம்,இஷ்ட தெய்வம் வசிய தாயத்து-ரூ1700/-
7)எதிரிகள் சத்துருக்கள் வசிய தாயத்து-ரூ1500/-
8)குழந்தைகளுக்கான பாலகிரஹ தோஷ நிவர்த்தி தாயத்து-ரூ750/-
9)அருள் வாக்கு,குறி சொல்ல,பிரசன்னம் சொல்ல தெய்வ வசிய தாயத்து-ரூ2500/-
10)செல்வ ஆகர்ஷண தாயத்து-ரூ2100/-
11)கோர்ட் கேஷ்,சொத்து பிரச்சினைகள் வெற்றி பெற தாயத்து-ரூ1800/-
12)உடல் உபாதைகள்,நோய் நொடிகள் தீர தாயத்து-ரூ1500/-
மேற்கண்ட பரிகார தாயத்துக்கள் எங்களிடம் கிடைக்கும்.தொலைதூரத்தில் இருப்பவர்களுக்கு துரித கூரியரிலும் தாயத்துக்கள் அனுப்பி வைக்கப்படும்.

ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989

கடல் முத்து பரிகாரம்:



கடல் முத்து பரிகாரம்:
நவரத்தினங்களில் பட்டை தீட்ட அவசியமில்லாத ரத்தினம் முத்து மட்டுமே.
இது சந்திரனின் முழு ஆகர்ஷண சக்தியை தன்னுள் அடக்கியவை.
வெள்ளி அல்லது தங்கத்திலான மோதிரத்தில் முத்தை பதித்து வலது கை மோதிர விரலில் அணிய வேண்டும்.
முத்து அணிவதால் ஏற்படும் பலன்கள்:
*மனக்குழப்பம்,மன அழுத்தம் நீங்கும்.
*முக வசீகர சக்தியும்,உடல்அழகும் ஏற்படும்.
*மனம் ஒருமைப்படும்,மன அமைதி நிலவும்
*கணவன் மனைவி உறவுகள் வலுப்படும்,அன்னினோன்யம் அதிகரிக்கும்
*மனதுக்காரன் சந்திரனின் தோஷங்கள் நீங்கி மனத்தெளிவும்,புத்திக்கூர்மை உண்டாகும்
*கடக ராசி,கடக லக்கினம் இவர்கள் அணிய வேண்டியவை முத்து ஆகும்.இதனால் சிறப்பான பலனை தரும்.
கடல் முத்து வேண்டுவோர் தொடர்பு கொள்ளலாம்
சிறிய ரக கடல் முத்து விலை ரூ.1500/-
பெரிய ரக கடல் முத்து விலை ரூ2000/-
கடல் முத்து மொத்தமாகவும் கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்
போன்:+91 7598758989