Tuesday, November 21, 2017

சாளக்கிராமம் கல்

சாளக்கிராமம் கல் :
யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன்.
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். "என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள்.
அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. "அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. கிருஷ்ண அவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன்.
அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.
இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள்பாலிப்பேன்" என்றார். "யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன்.
அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார் சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன..? மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.
இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.
சாளக்கிராமம் கல் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Sunday, November 19, 2017

அரசு உத்தியோகம்,அரசு பதவியில் உயர்வு கிடைக்க


அரசு உத்தியோகம்,அரசு பதவியில் உயர்வு கிடைக்க:
அரசு உத்தியோகத்திற்க்கு முயற்சிப்போர்,அரசு பதவி உயர்வுக்காக காத்திருப்போர்,அரசு காரியங்களில் நன்மை பெற விரும்புவர்கள்,அரசியல்வாதிகள் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் 10 ஆரஞ்சு பழங்களை தனித்தனியாக தானம் கொடுக்கவும்.இதனை மதியம் 1-2 மணிக்குள் செய்ய பலன் கிடைக்கும்.பலன் கிடைக்கும் வரை தானம் செய்யவும்.
உத்தியோக வசிய தாயத்து மற்றும் ராஜ வசிய தாயத்துக்கள் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

தன(பணம்) வசிய இரசமணி


தன(பணம்) வசிய இரசமணி:
கிரஹ சாரப்படி,கிரஹ அமைப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் பலருக்கு பண முடக்கம,பண தடைகள்,பண புழக்கமின்மை இருந்து கொண்டே இருக்கும்.
நமது முன்னோர்கள் அதற்காக உருவாக்கியவை தன வசிய ரசமணி ஆகும்.
கருஊமத்தை,வெள்ளை விஷ்ணுகாந்தி போன்ற தன வசிய மூலிகைகள் -17 கொண்டு உருவாக்கப்பட்டவை இது.இதனை அணிய தன வசியமும்,ஆகர்ஷணமும் உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


அருள் வாக்கு,குறி சொல்ல ஸ்ரீ மலையாள பகவதி யந்திர மந்திர பூசை முறைகள்


அருள் வாக்கு,குறி சொல்ல ஸ்ரீ மலையாள பகவதி யந்திர மந்திர பூசை முறைகள்:
பழங்காலத்தில் என் முன்னோர்கள் உருவாக்கிய உபாசனை முறை இது.
ஆதிசக்தியின் அம்சமான 
பகவதி அம்மனின் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,மூலமந்திரத்தை 1 லட்சம் உருவேற்ற யந்திரம் உயிர் பெறும்.இதற்க்கு முறையாக படையல்கள் இட்டு,குருதி பூசை செய்ய வேண்டும்.
இதற்க்கு முன்பாக மயாண காளிக்கு படையல்கள் இட்டு காளியை ஆகர்ஷண செய்ய வேண்டும்,அதன் பிறகே மந்திர பிரயோகம் செய்ய வேண்டும்.
ஒரு மண்டலம் விரதம் கடைபிடித்து,தீட்சை முறையாக பெற்று,பகவதி தேவியின் யந்திரம் வைத்து பூசை செய்ய வாக்கு சித்தியுண்டாகும்.முக்காலத்தையும் பிறர் ஆச்சிரியப்படும்படி அருள் வாக்கு சொல்லலாம்.குறி சொல்லலாம்.மேலும் பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள்,செய்வினைக் கோளாறுகளை நீக்கலாம்.
அருள் வாக்கு,குறி சொல்ல உருவேற்றிய ஸ்ரீ மலையாள பகவதி யந்திரம்,மை மற்றும் தீட்ஷை வேண்டுவோர் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


அனுதினமும் வெற்றி பெற


அனுதினமும் வெற்றி பெற:
சுத்தமான செம்பு டம்ளரில் நீர் ஊற்றி,அதில் டீஸ்பூன் அளவு தேன் கலக்கவும்,கற்கள் எதுவும் பதிக்காத வெள்ளி அல்லது தங்கம் மோதிரத்தை அதில் போட்டு இரவில் மூடி வைக்கவும்.
காலையில் எழுந்ததும் முதல் உணவாக,மோதிரத்தை எடுத்து விட்டு அந்த நீரை அருந்தி வர நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.தினசரியும் செய்யலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்


நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்:
பவளம் என்பது ஒரு வகை கடல் வாழ் உயிரினமாகும்.இதில் வெண் பவளம்,செம்பவளம் என்று இரண்டு வகைகள் உண்டு.
யார் அணியலாம்?
செவ்வாய் கிரகத்தின் உலோகம் பவளம்.
மேஷம்,விருச்சிகம் ராசிக்காரக்கள் பவளம் அணிய தெய்வ கடாட்சம் கிட்டும்.கோபம் தணியும்.அதிர்ஷ்டம் உண்டாகும்.
மேலும் இந்த பவளத்தை தங்கம் அல்லது வெள்ளி அல்லது செம்பு மோதிரத்தில் பதித்து அணியலாம்.அதேபோல் 54 எண்ணிக்கையில் பவளத்தை எடுத்து மாலையாக கோர்த்து அணிய மேலும் சிறப்பாக இருக்கும்.
பலன்கள்:
°தெய்வ கடாட்சம் கிடைக்கும்
°கோபம்,ரத்த அழுத்தம் குறையும்
°அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்
°வீரம் விவேகம் அதிகரிக்கும்
°செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை,குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அணிய நிவர்த்தி உண்டாகும்
°நிலம்,கட்டிட பணிகள்,ரியல் எஸ்டேட் துறையினர் அணிய சிறப்பான பலன்கள் கிட்டும்.
°மன வலிமை,உடல் வலிமை உண்டாகும்.
°பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்க மாங்கல்யத்துடன் பவளம் சேர்த்து அணிய பலன் கிட்டும்.
ஒரிஜினல் பவளம் கற்கள்,பவள மாலை எங்களிடம் கிடைக்கும்.தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம்


இளமையை தக்கவைக்கும் திரிபலா சூரணம்:
திரிபலா சூரணம்- ஒரு காய கற்பம்
நன்றாக காய வைத்த நெல்லி வற்றல்,கடுக்காய்த்தோல், மற்றும் தான்றிக்காய்த்தோல் பொடிகள் ,சம அளவில் கலந்ததே திரிபலா சூரணம்.அறுசுவையில் உப்பைத் தவிர்த்துத் துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் நிறைந்த கடுக்காயில் வாத-கப தன்மையைச் சீர்படுத்தும் சக்தி இருக்கிறது. கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால், அதை நீக்கிவிட்டுப் பயன்படுத்த வேண்டும்.
இதை, இரவில் ஒரு தேக்கரண்டி அளவு சுடுதண்ணீரில் கலந்து தினமும் சாப்பிட்டு வர , குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும்.உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்
உடல் முதுமை மாறி, இளமைப்பொலிவு ஏற்படும். மலச்சிக்கல் தீரும்.திரிபலாவில் க்ரீன் டீயை விடவும் அதிக ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் உள்ளதாக ஆய்வு கூறுகிறது
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை- இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
திரிபலா குடல் அழற்சிக்குக்கூட நல்ல மருந்து.
அதேபோல வாய்ப்புண் வருகிற போதும் மலச்சிக்கல் தீரும், குடல் புண் ஆறும். இரத்தச் சோகை அதிக உடல் எடை குறையும். உடலில் அதிகப்படியாக உள்ள கொழுப்பு , வெளியேறும்.
திரிபலாவை புறக்காயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுத்தலாம். திரிபலா கலந்த கொதிக்கவைக்கப்பட்ட நீரால் காயங்களைக் கழுவதும் நல்ல இதைப் பயன்படுத்தலாம்மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்த லாம்
தொண்டை வலி:
சளி பிடிக்கிறதுக்கு ஒரு நாலைஞ்சு மணி நேரத்துக்கு முன்னாடி பாத்தீங்கன்னா தொண்டை ஒரு மாதிரி கரகரக்கும். அப்பவே தெரியணும், நமக்கு நாளைக்கு சளி பிடிக்கப் போவுதுன்னு. அந்த மாதிரி நேரத்துல நான் என்ன செய்வேண்டுமென்றல், கொஞ்சம் திரிபலாவை எடுத்து சுடுதண்ணியில போட்டு, நல்லா வாய் கொப்பளிக்க . சளி வராது. தொண்டைக்கும் இதமா இருக்கும். பிள்ளை அவ்வப்போது பள்ளிக்கூடத்திலிருந்து கொண்டுவரும் மற்ற தொண்டை வலிகளுக்கும் இது நல்ல மருந்து. வாய் கொப்புளிச்சுத் துப்பத் தெரிந்த குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். முழுங்கினாலும் பெரிய பிரச்சினை இல்ல, இருந்தாலும் ரொம்ப சின்ன பிள்ளைங்களுக்கு வேணாம்.
பல்லிடுக்குப் பிரச்சினை:
சில நேரம் பல்லிடுக்கில் உணவுத் துகள் மாட்டிக் கொள்கிறது. காரட் துண்டு, ஆட்டுக்கறி இப்படி. அப்போது கவனிக்காம விட்டுட்டா, அடுத்த நாள் வலிக்கும். அப்போ அந்தத் துணுக்கை floss போட்டு எடுத்துட்டாலும் வலிக்கும். அந்த நேரத்தில் திரிபலாவை சுடுதண்ணியில போட்டு வாய் கொப்பளிச்சா, அல்லது அந்த இடத்தில் வைத்து லேசாக பல் தேய்ப்பது போலத் தேய்த்தால் வலி மாயமாய்ப் போகிறது. மற்ற வகை பல்/ஈறு வலிகளுக்கும் இதைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.
திரிபலா எப்படி நமக்கு உதவுகின்றது?
திரிபலாவும் திரிகடுகமும் அற்புதமான சித்த மருந்துகள் ஆகும். சித்தர் கள் உடலை வலுவாக்கவும்,இரத்தத்தை சுத்திகரிக்கவும் இன்று உலகம் முழுவதும் பரவலாக எந்த நோய்க்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. சர்க சம்ஹிதா என்னும் ஆயுர்வேத நூலில் முதல் அத்தியாயத்திலேயே திரிபலாவைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது ஆச்சரியமான விஷயமாகும். நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய இம்மூன்றின் கலவையானது அற்புதமான காயகல்பமாகி, தேவர்களின் அமிர்தத்தினைப் போல் எந்த ஒரு வியாதியையும் தீர்க்கும் அற்புத சக்தியினைப் பெற்றுள்ளது.
நோய் எதிர்ப்புச் சக்தி
திரிபலா என்பது இளமையை பாதுகாக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது நமக்கு முதுமைத் தன்மையை நீக்கி இளமைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் என்று பொருள். இது உடல் ஆரோக்கியத்தினை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டவும் உதவுகிறது. ஆரோக்கியமான வாழ்வில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது ஒரு முக்கியமான அங்கமாகும். இது எப்போதுமே அதிகமாகவே இருக்க வேண்டும். நமது உடலில் இயற்கையாகவே அமைந்திருக்கும் தடுப்பு அரண்களைத் தாண்டி, உடலின் உள்ளே நுழையும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் ‘ஆன்டிபாடி’ (antibodies) எனப்படும் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிக அளவில் உற்பத்தி செய்ய, இந்த திரிபலா உதவுகிறது.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்
உடலில் செல்களுக்கிடையில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில், சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக திரிபலா செயலாற்றுகிறது. நமக்கு முதுமையைத் தரும் முக்கியமான காரணியான “கட்டற்ற காரணிகளை” (free radicals) உற்பத்தி செய்யும் வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் செல்கள் முறையாகச் செயல்படுவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் மைட்டோகாண்டிரியா, கோல்கை உறுப்புகள், உட்கரு ஆகியவை சிறப்பாகச் செயல்படுவதையும் திரிபலா தூண்டுகிறது.
செரிமானமின்மை
செரிமானக் கோளாறுகளை திரிபலா அற்புதமாக குணப்படுத்துகிறது. அதிலும் உணவுப்பாதையில், மலத்தினை வெளித்தள்ளும் குடலியக்கத்தை சீராக செயல்பட வைக்கிறது. மேலும் இரத்தத்தில் உள்ள கொழுப்பினை கரைக்க தேவைப்படும் பைல் (Bile) திரவத்தினை கல்லீரலிலிருந்து சுரக்கவும் உதவுகிறது. உணவுப்பாதையில் தேவையான கார அமிலநிலையை (pH level) தேவையான நிலையில் பேணுவதற்கும் துணை புரிகிறது.
மலச்சிக்கல்
திரிபலா ஒரு சிறந்த குடல் சுத்திகரிப்பானாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலுக்கு அதிகமாகப் பரிந்துரைக்கப்படும் இயற்கை மருந்து திரிபலாவாகும். உடலிலுள்ள நச்சுப்பொருட்களை நீக்கும் நச்சு நீக்கியாகவும் இது செயலாற்றுகிறது. சிறந்த மலமிளக்கியாகவும் பயன்படுகிறது.
வயிற்றுப் பூச்சிகளும் தொற்றுகளும்
வயிற்றில் பூச்சி வளர்வதையும், தொற்றுக்களையும் கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தது தான் திரிபலா. குறிப்பாக வயிற்றிலிருந்து நாடாப்புழுக்களையும், வளையப்புழுக்களையும் வெளியே அகற்றுவதற்கு பெரிதும் உதவுகிறது. மேலும் உடலில் பூச்சிகளும், நுண்கிருமிகளும் வளர்வதற்கு உதவாத நச்சு நிலையை உடலில் பேணுவதற்கு திரிபலா உதவுகிறது.
இரத்தசோகை
இரத்தத்தில் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையினை அதிகரிக்க திரிபலா உதவுகிறது. இதன் மூலம் இரத்த சோகை என்னும் நோயைத் தீர்க்க முடியும். (இரத்த சோகை என்பது இரத்தத்தில், ஹீமோகுளோபின் எனப்படும் இரத்த சிவப்பு அணுக்களின் அளவு குறைந்து காணப்படும் நிலையாகும்).
சர்க்கரை நோய்
திரிபலா சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பு மிக்கது. நமது கணையத்தினைத் (pancreas) தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கிறது. கணையத்தில்தான் இன்சுலினைச் சுரக்கும் லாங்கர்ஹான் திட்டுக்கள் (langerhans) எனப்படும் சுரப்பிகள் உள்ளன. மேலும் உடலில் குளுகோஸின் அளவை சமநிலையில் பேணுவதில் பெரும் பொறுப்பு வகிப்பது இன்சுலின் ஆகும். மேலும் திரிபலா கசப்புச் சுவையுடன் இருப்பதனால், சர்க்கரை நோயின் ஒரு நிலையான ஹைப்பர்கிளைசீமியா (hyperglycemia) எனப்படும் அதிக சர்க்கரை நிலையில், இதனை எடுத்துக் கொள்வது சிறப்பானது.
உடல்பருமன்
இயல்பை விட உடல் பருமனானவர்கள், திரிபலாவை உட்கொள்வது மிகவும் பயன்தரும். இதனுடைய மருத்துவக் குணத்தினால் உடலிலுள்ள கொழுப்பின் அளவினைக் குறைக்க முடியும். நமது உடலில் கொழுப்பு படிவதற்குக் காரணமான அடிபோஸ் செல்களைக் குறி வைத்து செயல்படுவதால், கொழுப்பின் அளவு குறைகிறது. இதன் மூலம் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படுகிறது.
சருமப் பிரச்சனைகள்
இது இரத்தத்தினைச் சுத்தம் செய்து இரத்தத்திலுள்ள நச்சுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டிருப்பதால், சரும நோய்களுக்கான மருத்துவத்தில் பெரும் பங்காற்றுகிறது. இரத்தத்தினைச் சுத்திகரிக்கும் தன்மை கொண்டிருப்பதால், தொற்று நோய்களையும் தீர்க்கும் குணம் கொண்டுள்ளது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989