Tuesday, November 21, 2017

சக்தி வசியம்


சக்தி வசியம்:
பூச நட்சத்திரம் வரும் வெள்ளிகிழமை தினத்தில் விஷ்னுகிரந்தி செடிக்கு காப்பு கட்டி பொங்கலிட்டு பூஜை செய்து வேர் அறாமல் பிடுங்கி குளிசத்தில்(தாயத்தில்) அடைத்து வெள்ளை புஸ்பத்தினால் அலங்காரம் செய்து மூல மந்திரத்தை 1008 உரு கொடுத்து குளிசத்தை கட்டிகொள்ள ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, பூதம் எல்லாம் விலகும்.
சக்தி மூல மந்திரம்
ஒம் இம் கம் ரம் ரங்சிங் ஆயி டாகினி மாகினி விஷ்ணு சகோதரி சர்வாணிதேவி பராசக்தி நமசி ஸ்வாஹா.
Note:குளிசம் என்பது தாயத்து ஆகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

சாளக்கிராமம் கல்

சாளக்கிராமம் கல் :
யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன்.
ஒரு மன்னனின் மகள் துளசி, மகாவிஷ்ணுவையே கணவனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தாள். அவள் போன ஜன்மத்தில் கிருஷ்ணனுடன் கோபிகையாகக் கூடி இருந்தாள். மகாவிஷ்ணு மாறு வேடத்தில் சென்று துளசியை ஏமாற்றினார். "என்னை ஏமாற்றிய நீ யாராக இருந்தாலும் கல்லாகப் போவாயாக!" என்று சாபமிட்டாள்.
அந்த கல்தான் சாளக்கிராம கல். உடனே மஹாவிஷ்ணு அவருக்கு காட்சி கொடுத்தார். பதறிப்போனாள் துளசி. புன்னகை புரிந்தார் மஹாவிஷ்ணு. "அஞ்சாதே துளசி! எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது. கிருஷ்ண அவதாரத்தின் போது கோபிகையாக இருந்தவள் நீ. என்னை மணம் புரிய வேன்டும் என்று தவம் புரிந்தவளும் நீயே. பூலோகத்தில் வாழும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவே இத்தகைய லீலைகளும் நடத்தபடுகின்றன.
என்னை கல்லாக மாறுமாறு நீ சபித்ததும் என் விருப்பபடிதான். என்னை தரிசனம் செய்தால் உனது இந்த பிறவிக்கு முக்தி கிடைக்கிறது. இப்போது நீ கண்டகி நதியாகவும், துளசி செடியாகவும் மாறிவிடுவாய். என்னை கல்லாக மாறுமாறு சபித்து விட்டதால், நான் சாளக்கிராமக் கற்களாக மாறப் போகிறேன். நீ என்னை மணக்க விரும்பியவள் அல்லவா? அதனால் நீ கண்டகி நதியாக ஓட, நான் உன்னில் கிடப்பேன், ஆம் சாளக்கிராமக் கற்களாக கிடப்பேன்.
அந்த கற்களில் சங்கு, சக்கர சின்னங்களும் உண்டாகும். சாளக்கிராமமாக நானே இருப்பதால், பக்தர்கள் அந்தக் கற்களை வணங்குவார்கள். நாடெங்கும் எடுத்து சென்று தங்கள் வீடுகளில் வைத்து பூஜை செய்வார்கள். சாளக்கிராம கற்கள் கிடக்கும் நதியான நீயும், புனித நதியாக கங்கையை விட சிறந்த நதியாக போன்றபடுவாய். உன்னில் நீராடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்டதை எல்லாம் நான் தருவேன்.
இங்கே வர முடியாதவர்கள், துளசியை எனக்கு அர்ச்சித்தால் போதும். துளசி தீர்த்தை பருகினாலும் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்து அருள்பாலிப்பேன்" என்றார். "யார் தங்களுடைய வீட்டில் சாளக்கிராம மூர்த்தியை வைத்து கொள்கிறார்களோ, அந்த வீட்டில் வைக்கப்பட்டு இருக்கும் சிறு இடத்தையே, கோயிலாகக் கொண்டு அங்கே எழுந்தருள்கிறேன். அந்த சாளகிராமத்தில் நான் எப்போதும் வசிக்கிறேன்.
அது இருக்கும் வீட்டில் தோஷமே கிடையாது. சாளகிரமம் இருக்கும் வீடுகளில் உள்ளவர்களுக்கு சந்தோஷம்,சௌபாக்கியம் முக்தி ஆகிய எல்லாவற்றையும் நான் தருவேன்" என்றும் மஹாவிஷ்ணு கூறினார் சாளகிராமங்கள் எப்படி உருவாகின்றன..? மகாவிஷ்ணு தங்கமயமான ஒளியுடன் திகழும் "வஜ்ர கிரீடம்" என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளகிராம கல்லை குடைந்து அதன் மையத்தை அடைந்து, அங்கு உமிழ் நீரால் சங்கு சக்கர வடிவங்களையும், தனது அவதார ரூபங்களையும் விளையாட்டாக வரைகிறார்.
இவைதான் சாளகிராம மூர்த்திகள். எதுவும் வரையப் படாமல் உருளை வடிவக் கற்களாகவும் இவை கிடைக்கும். அவற்றுக்கு "ஹிரண்ய கர்ப கற்கள்" என்று பெயர். இவையும் பூஜைக்கு உகந்தவை. இந்த சாளகிராமங்கள், சங்கு, நத்தைகூடு, பளிங்கு போன்று பலவித வடிவங்களிலும் கிடைக்கிறன.
சாளக்கிராமம் கல் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Sunday, November 19, 2017

அரசு உத்தியோகம்,அரசு பதவியில் உயர்வு கிடைக்க


அரசு உத்தியோகம்,அரசு பதவியில் உயர்வு கிடைக்க:
அரசு உத்தியோகத்திற்க்கு முயற்சிப்போர்,அரசு பதவி உயர்வுக்காக காத்திருப்போர்,அரசு காரியங்களில் நன்மை பெற விரும்புவர்கள்,அரசியல்வாதிகள் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் 10 ஆரஞ்சு பழங்களை தனித்தனியாக தானம் கொடுக்கவும்.இதனை மதியம் 1-2 மணிக்குள் செய்ய பலன் கிடைக்கும்.பலன் கிடைக்கும் வரை தானம் செய்யவும்.
உத்தியோக வசிய தாயத்து மற்றும் ராஜ வசிய தாயத்துக்கள் தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

தன(பணம்) வசிய இரசமணி


தன(பணம்) வசிய இரசமணி:
கிரஹ சாரப்படி,கிரஹ அமைப்புகள் நல்ல நிலையில் இருந்தாலும் பலருக்கு பண முடக்கம,பண தடைகள்,பண புழக்கமின்மை இருந்து கொண்டே இருக்கும்.
நமது முன்னோர்கள் அதற்காக உருவாக்கியவை தன வசிய ரசமணி ஆகும்.
கருஊமத்தை,வெள்ளை விஷ்ணுகாந்தி போன்ற தன வசிய மூலிகைகள் -17 கொண்டு உருவாக்கப்பட்டவை இது.இதனை அணிய தன வசியமும்,ஆகர்ஷணமும் உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


அருள் வாக்கு,குறி சொல்ல ஸ்ரீ மலையாள பகவதி யந்திர மந்திர பூசை முறைகள்


அருள் வாக்கு,குறி சொல்ல ஸ்ரீ மலையாள பகவதி யந்திர மந்திர பூசை முறைகள்:
பழங்காலத்தில் என் முன்னோர்கள் உருவாக்கிய உபாசனை முறை இது.
ஆதிசக்தியின் அம்சமான 
பகவதி அம்மனின் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,மூலமந்திரத்தை 1 லட்சம் உருவேற்ற யந்திரம் உயிர் பெறும்.இதற்க்கு முறையாக படையல்கள் இட்டு,குருதி பூசை செய்ய வேண்டும்.
இதற்க்கு முன்பாக மயாண காளிக்கு படையல்கள் இட்டு காளியை ஆகர்ஷண செய்ய வேண்டும்,அதன் பிறகே மந்திர பிரயோகம் செய்ய வேண்டும்.
ஒரு மண்டலம் விரதம் கடைபிடித்து,தீட்சை முறையாக பெற்று,பகவதி தேவியின் யந்திரம் வைத்து பூசை செய்ய வாக்கு சித்தியுண்டாகும்.முக்காலத்தையும் பிறர் ஆச்சிரியப்படும்படி அருள் வாக்கு சொல்லலாம்.குறி சொல்லலாம்.மேலும் பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள்,செய்வினைக் கோளாறுகளை நீக்கலாம்.
அருள் வாக்கு,குறி சொல்ல உருவேற்றிய ஸ்ரீ மலையாள பகவதி யந்திரம்,மை மற்றும் தீட்ஷை வேண்டுவோர் தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989


அனுதினமும் வெற்றி பெற


அனுதினமும் வெற்றி பெற:
சுத்தமான செம்பு டம்ளரில் நீர் ஊற்றி,அதில் டீஸ்பூன் அளவு தேன் கலக்கவும்,கற்கள் எதுவும் பதிக்காத வெள்ளி அல்லது தங்கம் மோதிரத்தை அதில் போட்டு இரவில் மூடி வைக்கவும்.
காலையில் எழுந்ததும் முதல் உணவாக,மோதிரத்தை எடுத்து விட்டு அந்த நீரை அருந்தி வர நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.தினசரியும் செய்யலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்


நவரத்தினங்களுள்-பவளம் ஒர் விளக்கம்:
பவளம் என்பது ஒரு வகை கடல் வாழ் உயிரினமாகும்.இதில் வெண் பவளம்,செம்பவளம் என்று இரண்டு வகைகள் உண்டு.
யார் அணியலாம்?
செவ்வாய் கிரகத்தின் உலோகம் பவளம்.
மேஷம்,விருச்சிகம் ராசிக்காரக்கள் பவளம் அணிய தெய்வ கடாட்சம் கிட்டும்.கோபம் தணியும்.அதிர்ஷ்டம் உண்டாகும்.
மேலும் இந்த பவளத்தை தங்கம் அல்லது வெள்ளி அல்லது செம்பு மோதிரத்தில் பதித்து அணியலாம்.அதேபோல் 54 எண்ணிக்கையில் பவளத்தை எடுத்து மாலையாக கோர்த்து அணிய மேலும் சிறப்பாக இருக்கும்.
பலன்கள்:
°தெய்வ கடாட்சம் கிடைக்கும்
°கோபம்,ரத்த அழுத்தம் குறையும்
°அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்
°வீரம் விவேகம் அதிகரிக்கும்
°செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை,குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அணிய நிவர்த்தி உண்டாகும்
°நிலம்,கட்டிட பணிகள்,ரியல் எஸ்டேட் துறையினர் அணிய சிறப்பான பலன்கள் கிட்டும்.
°மன வலிமை,உடல் வலிமை உண்டாகும்.
°பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்க மாங்கல்யத்துடன் பவளம் சேர்த்து அணிய பலன் கிட்டும்.
ஒரிஜினல் பவளம் கற்கள்,பவள மாலை எங்களிடம் கிடைக்கும்.தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989