Tuesday, February 13, 2018

பண வரவிற்கு எளிய பரிகாரம்

பண வரவிற்கு எளிய பரிகாரம்:
பணக்கஷ்டத்தால் அவதிப்படுபவர்களின் பிரச்சனை உடனடியாக தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தையும் பரிகார முறையை செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் காலை ஆறு முதல் ஏழு மணிக்குள் அல்லது மதியம் ஒன்றிலிருந்து இரண்டு மணிக்குள் அதுவும் இயலாதோர் இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் கீழ்காணும் பரிகார முறையை செய்து வர திடீர் பண வரவு உண்டாகும். செல்வ நிலை உயரும்.
இருபது மொச்சை கொட்டைகளை சிறிது சர்க்கரை சேர்த்து வேக வைக்கவும். குழைந்து விடக்கூடாது. முழு மொச்சைகளாக தெரிய வேண்டும். அவற்றை ஒரு வெள்ளை துணி அல்லது கைகுட்டையில் இட்டு முடிச்சு அவிழுமாறு லேசாக கட்டிக்கொள்ளவும். பின்பு கீழ்க்கண்ட மந்திரத்தை ஆறு முறை கூறி முடித்து அதை ஓடும் நீர்நிலைகளில் விட்டு விடவும். கைமேல் பலன் தரும் சிறந்த தாந்த்ரீக பரிகாரம் இது.
மந்திரம் :
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்ரீம் கமலே கமலாலயே
ப்ரஸீத ப்ரஸீத ஸகல
சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ
.......................................................................................................
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண,
பேய் பிசாசு பூதங்கள்,தீய சக்திகளை விலக்க விரட்ட,
கணவன் மனைவி வசியம்,ஆண் பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்,பிரிந்தவர்கள் ஒன்று சேர,
குடும்பத்திலுள்ள பிரச்சினைகள் நீங்கி அமைதி உண்டாக,குடும்பம் விருத்தி காண,
செய்தொழில்,வியாபாரத்தில் வளர்ச்சியும் விருத்தியும் லாபமும் உண்டாக,பணம் கொழிக்க,
விவசாயத்தில் விளைச்சல் பெருக,
குலதெய்வம் வசியமாகி காக்க பேச,இஷ்டதெய்வம் வசியமாக,ஜன வசிய மை,தொழில் வியாபார வசிய மை, லோக வசிய மை கிடைக்கும்,
புத்திரதோஷம் விலகி குழந்தைபேறு அடைய,
திருமண தடை தோஷம் விலகி உடனே திருமணம் நடக்க,
கோர்ட் கேஸ் வழக்குகள் சாதகமாக,வெற்றியாக,
படிப்பில் போட்டித் தேர்வில் வெற்றி பெற,
வீடு வண்டி வாகன நில யோகம் பெற,
தகாத உறவுகளை பிரிக்க,
எதிரிகள் தொல்லை நீங்க,
செல்வம் பெருகி நிலைக்க,பணவரவு உண்டாக,முடக்கம் தடைகள்,தடங்கல்கள் நீங்க,சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண,
தொடர்புக்கு
+917598758989

சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?


சிவராத்திரியான இன்று என்ன செய்ய வேண்டும்?
சிவராத்திரியான இன்று செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரத்தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

3. ஓதிக் கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

4. சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மை ஆன ஆடையை அணிவிக்க வேண்டும்.

7. எருக்க மலர் மாலைகளைப் பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

8. சிவதண்டமான கட்டங்களும், கபாலமும் ஏத்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

இப்படி விரதம் இருந்தவர்களின் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த பஞ்சு போல எரிந்து கரிந்து சாம்பாலகும்.

தீபங்களை வரிசையாக வைத்து சிவபெருமானை வழிபட வேண்டும்.

சிவபெருமான் தீபமங்கள ஜோதியாக விளங்குபவர்.

அவர் ஒளிவெள்ளமாக திருவண்ணாமலையில் காட்சி தருகிறார்.

கோவிலுக்குள் நீராடிய பிறகே செல்ல வேண்டும். கொடி மரத்திற்கு வெளியே விழுந்து வணங்கி விநாயகரை ஒரு முறையும் சிவபெருமானை மூன்று முறையும், அம்பிகையை நான்கு முறையும் வலம்வரவேண்டும்.

வழிபடும்போது மனம் இறைவன் மீது மட்டுமே இருக்க வேண்டும்.

விபூதி மற்றும் பிரசாதத்தை பயபக்தியுடன் இரண்டு கைகளாலும் ஏந்திப் பெறவேண்டும். அதைக்கீழே சிந்துவதோ எறிவதோ பெரும்பாவமாகும்.

சண்டிகேஸ்வரர் மீது நூல் இடக்கூடாது. சிவலிங்கத்திற்கும் நந்திதேவரக்கும் இடையே போகக்கூடாது. கோவிலில் பிரசாதங்களை சாப்பிட்டு விட்டு தூண்களில் துடைப்பது தவறாகும்.

வழிபாடு முடிந்த பிறகு கொடிமரத்தின் அருகில் வடதிசை நோக்கி அமர்ந்து மூலமந்திரம் ஜெபிக்க வேண்டும்.

அதிக சப்தம் இல்லாமல் இனிமையாக தோத்திரப் பாடல்களை பாடவேண்டும். கோவிலுக்கு செல்வோர் முக்கியமாக விளக்குகளில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இதனால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாவதுடன், அந்த வீட்டில் தெய்வ கடாட்சமும், லட்சுமியின் அனுகிரகமும் உண்டாகும்.

சிவராத்திரி - நான்கு ஜாமம் விவரம்
சிவராத்திரி நான்கு ஜாம காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள்.
சிவராத்திரி முதல் ஜாம நேரம்:
இரவு 7.30 முதல் 9.30 மணி வரை

சிவராத்திரி 2ஆம் ஜாம நேரம்:
இரவு 11.00 முதல் 12.30 மணி வரை

சிவராத்திரி 3ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 2.30 மணி முதல் 3.30 மணி வரை

சிவராத்திரி 4ஆம் ஜாம நேரம்:
அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை

சிவராத்திரி நான்கு ஜாமங்களாக உள்ளன. அக்காலங்களில் சிவலிங்க அபிஷேகம் செய்து அலங்கரித்து அர்ச்சித்து ஆராதனைகள் ஒவ்வொரு ஜாமத்திலும் செய்வார்கள். சிவராத்திரி தினத்தில் அதிகாலை முதல் சிவசிந்தனையுடன் எல்லா காரியங்களும் செய்தால் நன்மை பயக்கும்.

அன்ன ஆகாரம் இன்றி பால் பழம் போன்றவைகள் ஒருவேளை மட்டும் உண்டு இறைவனின் பஞ்சாசரத்தை சதா சர்வகாலமும் ஓதியபடி இருந்தால் மன அமைதி பெற்று வாழ்வில் பலவித மாற்றங்கள் நமக்கு நன்மை தருவதாக அமையும். சிவாயநம என சிந்திப்போருக்கு அபாயம் ஒருபோதும் இல்லை என்பது ஆன்றோர் வாக்கு.

சிவராத்திரியன்று தம்பதிகளாக கணவன்-மனைவி ஆகிய இருவரும் சிவலிங்க வழிபாடு செய்தால் இல்லறம் இன்பமயமாக திகழும். தம்பதிகள் அன்யோன்ய அன்பு நிறைந்து இறைவனின் திருவருளால் வளமுடன் வாழ்வார்கள். திருவண்ணா மலையில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று லட்சதீபம் ஏற்றுவார்கள். அதனை காண்பது சிறப்பாகும்.

சிவராத்திரி தினத்தில் சிவனை மனதார நினைத்து இரண்டாம் ஜாமத்தில் கிரிவலம் செய்தால் நினைக்கின்ற காரியம் வெகு விரைவில் முடியும். பிறவியில்லா பேரின்பத்தை தரும்.

லிங்கோத்பவ கால வழிபாடு

திருவண்ணாமலையில் பிரம்மாவுக்கும் திருமாலுக்கும் சிவபெருமான் ஒளி வடிவில் காட்சி கொடுத்த நாள் சிவராத்திரி.

அப்படிச் சிவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்த காலம் லிங்கோத்பவ காலம்னு சொல்லப்படுகிறது. (சிவராத்திரி அன்று நள்ளிரவு கடைசி 14 நாழிகை அதாவது இரவு 11.30 முதல் நள்ளிரவு 1 மணி வரையான காலம் லிங்கோத்பவ காலம் என்றழைக்கப்படும்) அதை நினைவுப்படுத்தும் விதமாகத் தான் எந்தச் சிவன் கோயிலாக இருந்தாலும் சிவலிங்கத்துக்குப் பின்புறம் லிங்கோத்பவர் இடம் பெற்றிருப்பார்.

சிவனை அந்த நேரத்தில் நாம் வழிபட்டால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் பஸ்பமாகும். சவுக்யமாக வாழ ஒரு வழி கிடைக்கும்.

தேனாபிஷகம்

சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து மகாவிஷ்ணு, மகாலட்சுமியையும் சக்கர ஆயுதத்தையும் பெற்றார். பிரம்மா, சரஸ்வதியை பெறும் பாக்யம் அடைந்தார். நந்தியம் பெருமான் சிவராத்திரி மகிமை எடுத்துக் கூறியதை அடுத்து முருகன், சூரியன், சந்திரன், மன்மதன், இந்திரன், அக்னி, குபேரன் ஆகியோர் நல்வரங்களைப் பெற்றார்கள் என புராணங்கள் சொல்கின்றன.

‘‘உங்களை வழிபடுவதில் எந்த வழிபாடு உங்களுக்கு மிகவும் பிடித்தது...?’’ என்று பார்வதி கேட்க, ‘‘சந்தேகமே வேண்டாம். மகா சிவராத்திரிதான் எனக்கு மகிழ்ச்சி தரும் நாள். விலையுயர்ந்த பட்டாடைகள், நகைகளை, மலர்களைவிட வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வதுதான் சிறந்தது. இரவின் முதல் காலத்தில் பாலினாலும், இரண்டாம் பகுதியில் தயிரினாலும், மூன்றாம் பகுதியில் வெண்ணெய் அல்லது பசு நெய்யினாலும், கடைசியில் தேன் அபிஷேகம் செய்தும் என்னை குளிர்வித்து அருள் பெறலாம்’’ என சிவபெருமானே பூஜை செய்யும் முறைகளை விளக்கியிருக்கிறார்.

Thursday, February 8, 2018

ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம்


ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம்:
இக்கால இளைஞர்கள் திருமணத்திற்கு முன்பு தங்களின் ஆண்மை தன்மையை பற்றிய சந்தேகம் அதிகம் கொண்டுள்ளனர். திருமணதிற்கு முன்பு சுய இன்பம் கொள்ளுதல், தகாத உறவில் ஈடுபடுதல் மற்றும் ஓரினச் சேர்க்கை காரணமாக தங்களால் தாம்பயத்தில் இடுபட முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுவிடுகிறது.
வீட்டில் திருமண பேச்சை எடுத்தாலே "இப்ப எனக்கு எதுக்கு கல்யாணம்" என்று தள்ளிப் போடுவதிலேயே குறியாக இருக்கின்றனர். உண்மையில் திருமண ஆசை இருந்தாலும் மேற்குறிப்பிட்ட தவறுகளை செய்துவிட்டபடியால் அவர்களால் முழுமையாக துணையை திருப்திபடுத்த முடியுமா என்ற சந்தேகம் வலுத்துவிடுகிறது.
அடிக்கடி சுய இன்பம் செய்து ஆசையை தீர்த்துக்கொள்பவர்களுக்கு ஆண் குறி சிறுத்து போவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இதனாலேயே திருமணத்தை தள்ளி வைத்து மனதில் வீண் பயத்திற்கு இடம்கொடுத்து விடுகின்றனர்.
"ஆண்மை அதிகரிக்க" என்ற விளம்பரங்களை பார்த்து, அவர்களிடம் சென்று அவர்கள் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்கின்றனர். உண்மையில் அதுபோன்ற மருந்துகள் உடனடி நிவாரணியாக மட்டுமே இருக்குமே ஒழிய, நிரந்தர தீர்வை தராது.
மன பயம் தான் பெரும்பாலானவர்களுக்கு ஆண்மை தன்மை குறைந்தது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. செய்ய கூடாத தவறுகளை செய்த பிறகு திருமணம் செய்துகொள்ள பெற்றோர்கள் கட்டாயபடுத்தும்பொழுதுதான் தங்களால் வீரியத்துடன் செயல்பட முடியுமா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
ஒரு சிலரை தவிர, நூற்றில் 99 சதவிகிதனருக்கு மனநோயே இதுபோன்ற ஆண்மை குறைவு தோற்றத்தை ஏற்படுத்திவிடுகிறது. பெண் துணை அருகில் இருக்கும்பொழுது அவர்களுடைய உடலில் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டாலே 100 சதவிகித ஆண்மை அதிகரிக்கும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
ஆண்மை தன்மையை சோதிக்கிறேன் பேர்வழி என நண்பர்களின் தவறான வழிகாட்டலில் சிலர், பணத்திற்காக படுக்கும் வேசிகளிடம் செல்வதுண்டு. அவ்வாறு செய்வது முற்றிலும் தவறானது. அதனால் பால்வினை நோய்கள் மற்றும் தொற்று நோய்கள் அவர்களை தாக்கும் அபாயம் உண்டு. எனவே இதுபோன்ற இழிவான தகாத செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும்.
இயற்கையிலேயே ஆண்மையை அதிகரிக்க மருந்துகள் உண்டு. "ஓரிதழல் தாமரை சூரணம்" ஆண்மை அதிகரிக்கச் செய்கிறது. இச்சூரணத்தை நீங்களாகவே தயார் செய்து பயன்படுத்தலாம். ஓரிதழல் தாமரை சூரணம் ஆண்மை தன்மையை அதிகரிக்கச் செய்வதோடு, உள் காய்ச்சல், TB என்கிற எலும்புருக்கி நோய், காந்தல், உடல் சூடு, சிறுநீர் பாதை ஏற்படும் புண்கள், அவற்றால் ஏற்படும் எரிச்சல் என பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.
ஓரிதழ் தாமரை சூரணம் செய்வது எப்படி?
ஓரிதழ் தாமரை சூரணம் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
அதிமதுரம்
ஓரிதழ் தாமரை
சர்க்கரை
செஞ்சந்தனம்
சாதிக்காய்
சாதிபத்திரி
ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த பிறகு அவற்றை எடுத்து நீர் விடாமல் அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும்.
மேற்கண்டவகளை மின் சக்தி மூலம் இயங்கும் சாதனங்களை பயன்படுத்த கூடாது. அம்மியில் அரைத்து தான் பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
இந்த பவுடரை அன்றாடம் இருவேளை காலை மாலை ஒரு டம்ளர் பாலுடன் கலந்து அருந்தி வர ஆண்மை அதிகரிக்கும். சிறுநீர் தொடர்பான நோய்கள் நீங்கும். பால் இல்லாவிடின் சிறு நெய்யுடன் கலந்து சாப்பிடலாம். தொடரந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர நல்ல பலன் தெரியும்.
ஆண்மை அதிகரிக்க ஓரிதழ் தாமரை சூரணம் நம்மிடம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: +91 7598758989

வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை


வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை :
சுக்கிரவார(வெள்ளிக்கிழமை) ராகுகால பூஜை:
15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு (மகாலட்சுமி) மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை ஏற்படும்.
11 வாரங்கள் ஸ்ரீதுர்க்காதேவியை அமிர்தகடிகை நேரத்தில் (11.30 - 12.00) மஞ்சள், குங்குமம், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பழம் பாக்கு வைத்து வணங்கி சுமங்கலி பெண்களிற்கு கொடுக்கவும். இதனால் திருமணத்தடை நீங்கும். மாங்கல்ய பலம் பெருகும். (கண்டிப்பாக எலுமிச்சை பழ தீபம் ஏற்றக்கூடாது
மங்களவார(செவ்வாய்க்கிழமை) பூஜை:
ஸ்ரீதுர்க்காதேவி சந்நதியில் அல்லது வீட்டில் செவ்வாய்க்கிழமை 4.00 - 4.30 மணியிலான அமிர்தகடிகை நேரத்தில் எலுமிச்சை சாதம், எலுமிச்சைபழ மாலை, நற்சீரக பானகம் வைத்து வணங்கி 9 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தட்சணை தந்து ஆசீர்வாதம் வாங்கினால் எந்தவிதமான திருமணத்தடைகளும் நீங்கி திருமணம் நடக்கும்.
துர்க்கைக்கு செவ்வரளி மாலை போட்டு, பசும்பாலில் தேன் கலந்து படையல் வைத்து, சம்பங்கிப்;பூவினால் அர்ச்சனை செய்து வழிபட்டு அனைவருக்கும் படையலை தந்து பூஜை செய்தால் எவ்வித தரித்திரமும் நீங்கும்.
செவ்வாய்க்கிழமை ராகுகாலம் பத்திரகாளி அவதரித்த வேளையாதலால் அந்த நேரத்தில் காளி பூஜை செய்தால் அவள் அருள் முழமையாக கிடைப்பதுடன் சகல சர்ப்ப தேர்களும் விலகும்.
கிரக சர்ப்ப சாந்தி:
பாம்பினை அடிப்பதால் வரும் தோசம்;, முன்னோர்களினால் வந்த நாக தோசம்; நீங்க செம்பு அல்லது வெள்ளியினால் நாகம் செய்து அதை முறைப்படி வீட்டில் வைத்து 9 நாட்கள் பூஜை செய்து வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து அதிற்க்கட்டி ஆறு போன்ற ஓடுகின்ற தண்ணீரில் போடவேண்டும். அன்று குறைந்தது 5 ஏழைகளிற்கு அன்னதானம் செய்ய வேண.டும்.
1. ராகு கால பௌர்ணமி பூஜை - பொருள் வரவு, புகழ் கிடைக்கும்.
2. ராகு கால கிருத்திகை பூஜை - புகழ் தரும்.
3. ராகு கால சஷ்டி பூஜை - புத்திரப்பேறு கிடைக்கும்.
4. ராகு கால ஏகாதசி பூஜை - பாவங்களைப் போக்கும். மகாவிஷ்ணு அனுக்கிரகம் கிடைக்கும்.
5. ராகு கால சதுர்த்தி பூஜை - துன்பங்களிலிருந்து விடுதலை தரும்.
எந்த விதமான சர்ப்பதோசமும் நீங்க ராகு பகவானுக்கு மந்தாரை மலர் சாற்றி உளுந்து சாதம் படைத்து தென்மேற்கு திசை நோக்கி அமர்ந்து பூஜை செய்ய வேண்டும்.
கேது பகவான்:
ராகுவின் உடற்பிரிவின் மறு அம்சம் கேதுவாகும். இதன் தலைப்பகுதி நாக வடிவும் உடற்பகுதி மனித வடிவும் உடையது. கேதுவின் அதிபதி சித்திரகுப்தர். கேது திசை, கேது புத்தி நடப்பவர்கள் வினாயகர் வழிபாடு செய்வது நலம் பயக்கும். கேது ஞானம், மோட்சம் தருபவர். ஜாதகத்தில் கெட்ட ஸ்தானத்தில் இருக்கும் போது தீய நண்பர்கள் சேர்க்கை, சண்டை சச்சரவு, வெட்டுக்காயங்கள், விபத்துக்கள், வீண் வழக்குகள், பிரிவினைகளை ஏற்படுத்துவார்.
கேதுவின் நல்லருள் பெற காணப்பயறு(கொள்ளு) கலந்த அன்னம் படைத்து, தர்ப்பை புல் சாற்றி, பல வர்ண அல்லது சிகப்பு நிற ஆடை அணிவித்து, செவ்வல்லி அல்லது செந்நிற மலர்கள் கொண்டு வழிபட வேண்டும். வைத்திய தொழில் செய்பவர்கள் கேது வழிபாட்டினால் சிறப்படைவர்.
ராகு, கேது ஸ்தலங்கள் திருப்பதி அருகிலுள்ள திருக்காளஹஸ்தி, கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் ஆகும்.
விளக்குத்திரி தரும் பலன்கள்:
1. பஞ்சுத்திரி - வீட்டில் மங்களம் நிலைக்கும்.
2. தாமரைத்தண்டுத்திரி - முன்வினைப் பாவம் நீக்கும். செல்வம் தரும்.
3. வாழைத்தண்டுத்திரி - தெய்வ குற்றம் நீக்கி மனச் சாந்தி தரும். புத்திரபேறு உண்டாகும்.
4. வெள்ளெருக்கன் பட்டைத்திரி - வறுமையைப் போக்கும். கடன் தொல்லை தீரும். பெருத்த செல்வம் சேரும்.
விளக்கேற்றும் திசைகள்:
1. வடக்குத்திசை - தொழில் அபிவிருத்தி. செல்வம் சேரும்.
2. கிழக்குத்திசை - சகல சம்பத்தும் கிடைக்கும்.
3. மேற்குத்திசை - கடன்கள் தீரும். நோய் அகலும்.
4. தெற்குத்திசை - இந்த திசையில் தீபம் ஏற்றக்கூடாது
விளக்கேற்றும் எண்ணெய் வகைகள்.
1. பசு நெய் - மோட்சம் கிடைக்கும். பாவங்கள் தீரும். மகாலட்சுமி அருள் கிடைக்கும்.
2. விளக்கெண்ணெய் - குடும்ப சுகம் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்.
3. இலுப்பையெண்ணெய் - குலதெய்வ அருள் கிடைக்கும். முன்னோர் சாபங்கள், முற்பிறவிப் பாவங்கள் நீங்கும்.
4. நல்லெண்ணெய் - கடன்கள் தீரும். நோய்கள் நீங்கும்.
5. தேங்காயெண்ணெய் - வினாயகரிற்கு மட்டும் தான் இதில் தீபமேற்ற வேண்டும். திருமணத்தடை நீங்கும்.
6. முக்கூட்டு எண்ணெய் - பசுநெய், விளக்கெண்ணெய், இலுப்பையெண்ணெய் மூன்றும் சமஅளவில் கலந்தது முக்கூட்டெண்ணெயாகும். இதில் தீபம் ஏற்றுவதால் தேவ ஆகர்~ணம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். செல்வம் சேரும்.
ஐந்தெண்ணெய் தயாரிக்கும் போது வேப்பெண்ணெய் சேர்க்கக்கூடாது. பசுநெய்யுடன் நல்ணெ;ணெய் கலப்பதும் தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும் கடலையெண்ணெய், சன் ஆயில் கொண்டு தீபம் ஏற்றக்கூடாது. இதனால் தெய்வ சாபம், தரித்திரம் உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

காளி வழிபாடு


காளி வழிபாடு:
காளி இந்து சமயத்தின் சாக்த பிரிவினர்]] வணங்கும் பெண் கடவுள் சக்தியின் அம்சமாகக் கருதப்படுகிறார்.
காளி என்ற பெயர் வடமொழியில் உள்ள 'காலா' என்ற வார்த்தையில் இருந்து எடுக்கபட்டதாகும். காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும், தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.அவர் தெய்வீக பாதுகாப்பாளராகவும், மோட்சம் அல்லது விடுதலையை வழங்குபவராகவும் கருதப்படுகிறார்.
தாந்திரீகர்கள் பெரும்பாலும் காளி தேவியையும், காளி தேவியின் யந்திரத்தையும் வைத்து வழிபடுகின்றனர். வங்காளத்தில் காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது.
காளி பூஜை (வங்காளி: কালীপুজা) என்பது இந்து தெய்வமான காளி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட ஒரு விழாவாகும். இதை சியாம பூஜை என்றும் மகாநிச பூஜை என்றும் அழைப்பர். இது வங்க நாள்காட்டியின் கார்த்திகை(ஐப்பசி) மாதத்தின் அமாவாசை நாளில் வரும். இது இந்தியாவின் கிழக்கு மாநிலங்களாகிய மேற்கு வங்கம், ஒடிசா, திரிபுரா போன்ற மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் கொண்டாடப்படும் தீபாவளியன்று (அமாவாசை தினத்தில்) இப்பண்டிகை வரும். மற்ற மாநிலங்களில் லட்சுமி பூஜை நடத்தப்படும் வேளையில் மேற்கு வங்கம் போன்ற மாநிலத்தில் உள்ள மக்கள் காளி தேவியை வழிபடுகின்றனர். மகாநிச பூஜை என்பது பீகாரிலும் நேபாளத்தின் மிதிலா பகுதியில் வாழும் மைதிலி மொழி பேசும் மக்களால் செய்யப்படுவது ஆகும்.
காளி பூஜை மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களில் பழமையான ஒரு விழாவாகும். ஆரம்பத்தில் இதைப் பழங்குடியினர் செய்து வந்தனர். பின்னர் இவ்வழிபாடு பிராமண வழிபாடாக மாறியது. சைதன்யரின் காலத்தில் கிழக்கு இந்திய மாநிலங்களில் வாழ்ந்த சாக்தர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் பகைமை நிலவியது. அதனை நீக்க இவ்விழா பயன்பட்டது. 19ம் நூற்றாண்டில் அசாம், வங்கத்தில் வாழ்ந்த வசதி படைத்த சமின்தார்கள் காளி பூஜையை நடத்தினர். அதனால் இவ்விழா பிரபலமடைந்தது. தற்போது வங்கத்திலும், அசாம் போன்ற கிழக்கு மாநிலங்களிலும் துர்கா பூஜைக்கு அடுத்து இரண்டாவது பெரிய விழாவாக காளி பூஜை திகழ்கிறது.
வழிபாடு:
பக்தர்கள் துர்கா பூஜை போல் காளி பூஜையிலும் அன்னையை மண் சிலையாக வீடுகளிலும், பந்தல்களிலும் (தற்காலிக கோவில்கள்) ஆராதனை செய்கின்றனர். காளி தாந்திரிக மந்திரங்களால் ஆராதனை செய்யப்படுகிறாள். அன்னைக்கு செம்பருத்தி ப்பூக்கள், கபாலத்தில் மிருக ரத்தம், இனிப்புகள், பருப்புகள் ஆகியன படைக்கப்படுகின்றன. காளி பக்தன் இந்நாளில் இரவு முழுவதும் மாதாவை தியானம் செய்ய வேண்டும். வீடுகளில் அந்தணர்களை கொண்டு காளியை சாந்த ரூபமாக "ஆத்யா சக்தி காளி" யாக வழிபாடு செய்யலாம். அன்று சில இடங்களில் மிருக பலி கொடுக்கப்படும். கொல்கத்தாவிலும், அசாம் மாநிலம், குவாஹாட்டியிலும் அன்னை மயானத்தில் உறைவதாக ஐதீகம். அதனால் அங்கும் காளி பூஜை செய்வர்.
பந்தல்களில் காளி சிலையுடன் அவளின் நாயகன் சிவன் சிலையும், பக்தன் ஸ்ரீ ராமகிரு ஷ்ணரின் சிலையும் வைக்கபடுகின்றன. சில இடங்களில் புராண கதைகளில் வரும் தச மகா வித்யா என்னும் காளியின் 10 உருவங்களையும் வைப்பர். மக்கள் இரவு முழுவதும் பந்தல்களுக்கு சென்று அன்னையை ஆராதிப்பர். இந்த இரவில் வான வேடிக்கைகள் நடைபெறும். சில இடங்களில் மாயஜால நிகழ்ச்சிகளும் நடக்கின்றன
கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோவிலிலும், அசாமில் உள்ள காமாக்யா கோவிலிலும் அன்று வைணவர்களின் காளி பக்தியை எடுத்துக்காட்டும் வகையில் அன்னை மகா லட்சுமியாக வழிபடபடுகிறாள். அன்று அன்னையைக் காண நாடெங்கும் உள்ள பக்தர்கள் திரள்வர். சிலர் மிருக பலியும் கொடுப்பர். தட்சிணேசுவரம் காளி கோவிலில் அர்ச்சகராக இருந்த ராமகிருஷ்ணர். காலத்தில் இருந்து இன்று காளி வழிபாட்டில் சிறிது மாறுதல் ஏற்பட்டுள்ளது .
மற்ற காளி பூஜைகள்:
வங்க நாள்கட்டியின்படி கார்த்திக் (ஐப்பசி) மாத அமாவாசையில் வரும் காளி பூஜை தீபன்வித காளி பூஜை எனப்படும். இதுபோல மற்ற மாத அமாவாசைகளிலும் காளி பூஜை செய்யலாம் .மார்கசிர்ஷம் (மார்கழி ) மற்றும் ஜேஷ்ட (ஆனி) மாதத்தில் வரும் பூஜைகள் முறையே ரதந்தி காளி பூஜை மற்றும் பலஹாரிணி காளி பூஜை எனப்படும். பலஹாரிணி காளி பூஜை அன்றுதான் ராமகிருஷ்ணர் அன்னை சாரதாதேவியை சோடஷியாக வழிபட்டார். வங்காளிகளின் இல்லங்களில் காளி தேவியை தினமும் ஆராதனை செய்வர்.
மந்திரம்:
ஓம் க்ரீம் காள்யை நமஹ ,
ஓம் கபாலின்யை நமஹ,
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்ரீம் பரமேஸ்வாரி
காளிகே ஸ்வாஹா
காளி மந்திரம் மற்றும் யந்திரம் தீட்ஷை,காளி அருள்வாக்கு சொல்ல மற்றும் குறி அஞ்சன மை தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989