Monday, September 10, 2018

தெய்வீக ரச மணி


இரசமணி:
என்றால் என்ன? அதன் பயன் என்ன?..
திடமற்ற திரவ நிலை உலோகமான இது பூமியிலிருந்து கிடைக்கக் கூடிய தாதுப் போருட்களில் ஒன்று. நீர்ச்சத்தும், காற்றும் ஒருங்கே அமையப் பெற்றது இந்தப் பாதரசம்.
பொதுவாக வெண்மை நிறத்துடன் கூடிய பாதரசத்தை நாம் பார்த்திருக்கிறோம். அனால் அதே போன்று சிகப்பு, மஞ்சள், வெளிர் நீலம் என பலவித நிறங்களிலும் உண்டு. ஆனால் இவை அபூர்வமாக கிடைப்பவை. இத்தகைய பாத ரசம் வாத வைத்தியத்தின் கூற்றுப்படி பாஷாண வகைகளில் ஒன்றாக சொல்லப் படுகிறது. பாஷாணப் பண்புகளை உள்ளடக்கி உள்ளதால் இதற்கு "சூதம்" என்று ஒரு பெயரும் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது.
வைத்தியத்திற்கு இரச பதங்கம், இரச பட்பம், இரச செந்தூரம் என்று பலவழிகளில் பயன்படும் இந்தப் பாதரசத்தை சற்று கடினமான உலோகமாக மாற்றி மணியாகச் செய்து கொள்வதே இரசமணி என்று அழைக்கப்படும். இந்த இரசமணியை உடலில் அணிந்து கொண்டோமானால், அதனால் நாங்கள் அடையும் பலன்கள் அதிகம். பாதரசத்தை மணியாக மாற்றுவது ரசவாதக் கலையின் ஒரு பகுதியே ஆகும். இதில் இருக்கும் நீரையும் காற்றையும் பிரித்தெடுப்பது தான் மிக இரகசியமாக கையாளப்படுவதுடன், மிக இரகசியமாக வைக்கப் பட்டுள்ளது.
இந்த இரசமணியைக் கயிற்றில் கோர்த்து உடலில் அணிந்து கொண்டால், உடலிலுள்ள முப்பிணிகளுக்கும் காரணமான வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை தமது நிலைகளில் சீராக இயங்க வைக்கும். இதனால் இவைசம்பந்தப்பட்ட எந்த நோயும் உடலைத்தாக்காது பாதுகாக்கும்.
இந்த இரசமணிக்கு எதையும் கிரகித்துக் கொள்ளும் தன்மை இயற்கையாகவே அமைந்திருப்பதால், நாம் எந்த சத்தை அதற்க்குக் கொடுக்கிறோமோ அதை உள்ளுக்கு இழுத்து பயன் தரும், இதனாலேயே யோக நிலைக்கு சென்று ஞானத்தை அடைய விரும்புபவர்கள், அதைப்பயன்படுத்தி ஞான நிலையை அடைந்தார்கள்.
இவ்வாறு பல அரிய பண்புகளை உள்ளடக்கிய பாதரசத்தை எவ்வாறு மணியாகக் கட்டி பயன்படுத்துகிறோமோ அவ்வாறே அது நமக்கு பலன் அளிக்கும். இதனைக் கட்டும் வழிமுறைகளை நமது சித்தர்கள் பலவாறாக கூறியுள்ளனர். இலகுவான முறை தொடக்கம் மிகவும் கடினமான முறை வரை அவரவர் தங்கள் குரு உபதேசித்ததை , தாங்கள் செய்து அனுபவம் அடைந்ததை அப்படியே ஒளிவு மறைவின்றி மக்கள் அறிந்து பயன் அடையும் விதமாக சொல்லித்தந்துள்ளனர்.
.............................................................................................
இவ்வளவு பயன்களைக் கொண்ட இந்த இரசமணியைக் கட்டுவது (தயாரிப்பது) எப்படி?
"காரமே சூதம்புண்யம் கற்பமாஞ் சாமஞ் சத்து
சூரியப கையாஞ் சாதிரு த்திரன் துள்ளியீசன்
வீரிய ஞ்சூழ்ச்சிநீராம் விண்ணீர் விண்ம ருந்து
சீர்பெறு மிரத மென்று செப்பி னார்ரொப் பிப்லோரே"
என்ற பாடலில் பாதரசத்திற்கு சித்தர்கள் சூட்டியுள மறை குறியீட்டு பேர்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது.
அவையாவன காரம் , சூதம், புண்ணியம், கற்பம், சாமம், விண்ணீர், வின்மருந்து , இரசம், என்று சொல்லப்பட்டுள்ளது.
இது போன்று பல சித்தர்கள் பாதரசத்தை புகழ்ந்துள்ளனர், அதில் முக்கியமானதாக நாம் எடுத்துக் கொள்வதாயின் மகா சித்தராகிய போகர் தனது சப்தகாண்டம் என்ற நூலில் பாதரசத்தை ஐந்து வகையாகப் பிரிக்கிறார்.. அது...
“ஆறியே சூதமஃ தை ந்துவித மாகும்
அதன் விபர மேதென்னி லறையக் கேளு
ஊறியே ரசமென்றும் இரசேந் திரமென்றும்
உற்றபா ரசமென்றுஞ் சூதமென்றும்
மீறியே மிசர கமென் றைந்து மாச்சு"
சூதம் ஐந்து வகையாச்சு அதன் விபரம் சொல்கிறேன் கேளு, இரசம் என்றும் , ரசேந்திரன் என்றும், பாரதம் என்றும், சூதம் என்றும், மிசரகம் என்றும் ஐந்து வகையாச்சு என்று சொல்கிறார். போகர் இவ்வாறு ஐந்து வகையாக பிரிப்பதற்குக் காரணம் அதன் தன்மைகளை கொண்டே.
.......................................................................................
“இரசமணி”கட்டப் பயன்படும் பாதரச வகைகள்...
இரசம் :- இது சுத்தமான இரசத்தைக் குறிப்பதாகும், இலேசான சென்நிறமுடையது. குற்றமில்லாதது.
ரசேந்திரன் :- இது சற்று கருமை நிறம் படர்ந்தது. இதுவும் குற்றமில்லாதது.
பாரதம் :- இது வெள்ளியைப் போன்ற நிறமுடையது இது குற்றமுள்ளது, இதன் குற்றத்தை சுத்தி செய்தால் மட்டுமே ரசமணி கட்டப் பயன்படும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.
சூதம் :- இது சிறியளவு வெளிர் மஞ்சள் நிறமுடையது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும்.
மிசரகம் :- இது சற்று தாழ்ந்த நிலையில் உள்ளது. இதிலும் தோஷமும் , குற்றமும் உள்ளது. இதையும் சுத்தி செய்யவேண்டும். இது சாதாரண கடைகளில் கிடைக்கும்.
அது என்ன தோஷமும் , குற்றமும்? அதை எங்களால் நீக்கி ரசமணிகட்ட முடியுமா? அதை இலகுவாக நீக்க முடியுமா?... முடியும் சித்தர்கள் இலகுவான வழிகளை சொல்லி இருக்கிறார்கள்.
...........................................................................
இரசமணி கட்டும் எளிய முறைகள்...
”பாரப்பா சூதங்கட்ட
பட்சமா யொன்று கேளு
வீரப்ப தாளிச் சாறு
விட்டுணு கிரந்தி சாறு
சேரப்பா ஒன்றாய்க் கூட்டி
சுரிங்கிடச் சூதம் கட்டும்
ஆரப்பா சொல்லப் போறா
ரடையலாம் சித்தி பாரே”
கருவூரார் சொல்லும் வழி இது…
பொருள் :-
சூதத்தைக் கட்ட எளிய மார்க்கம் ஒன்று சொல்கிறேன் கேளு, தாளி சாறு, விஷ்ணுகிரந்தி சாறு இரண்டையும் சேர்த்து சூதத்திற்கு சுருக்கிட சூதம் கட்டி மணியாகும்.
“முத்தான சூதத்தைக் கரண்டியிலே விட்டு
முதிந்து நின்ற செந்தூர மாரையிலைக் கிட்டு
காட்டான சாறதனைப் பிழிந்தாயா னால்
ககனம்போற் திரண்டுருண்டு மணியுமாகும்”
போகர் சொல்லும் வழி இது…
பொருள் :-
சூதத்தை ஒரு கரண்டியில் விட்டு துரிசு செந்தூரத்தை அரையிலையில் போட்டு சாறு பிழிய சூதம் திரண்டு மணியாகும்.
“காணும் சுத்தம் செய்த சூதம்
கட்டவே நீகேளடா
பூணு மஞ்ச ணாதிலை
பிழிந்த சாறு சுருக்கிட
வேணு மிரண்டு நாழிகையில்
மெழுகு போலுருண்டிடும்”
பொருள் :-
சுத்தி செய்த ரசத்தை அடுப்பேற்றி மஞ்சணாதி சாறு விட்டு சுருக்கிட இரண்டு நாழிகையில் ரசம் உருண்டு திரண்டு மணியாகும்.
இவையே ரச மணி கட்டும் இலகுவான வழிகளாகும்.
இந்த இரசமணி பற்றி சொல்ல வேண்டிய இன்னும் ஒரு முக்கியமான விடையம் என்ன வென்றால், பொதுவாக இரசமணி என்று சில போலி மணிகள் விற்பனையில் உள்ளதால் தூய ரசமணியைக் கண்டறிவது எப்படி? இதையும் சித்தர்கள் சொல்லியே சென்றுள்ளனர்.
……………………………………………………………………
தெய்வீக ரச மணி
வாலை மனோன் மணி பூஜை
சக்கரத்தை செம்புத் தக கட்டில் எழுதி கலசம் நிறுத்தி கலசத்திற்கு முன்னால் தகட்டை வைத்து தகட்டின் மீது வாலை ரசமணி வைத்து அதற்கு முன்னால் படையலிட்டு தேங்காய் பூ பழம் வெற்றிலைப் பாக்கு வைத்து கிழ்கண்ட மந்திரத்தை 11 நாட்கள் காலை , மாலை என 108 வீதம் ஜெபித்து உருவேற்றி அணிந்தால் ஏவல் பில்லி , சூனியம் , தாண்டு, தூவல், செய்வினை என்னும் மாந்திரிக அஷ்ட கர்மங்கள் விலகும்.
மூல மந்திரம்
''ஒம் சங்கராய நமா சண்முகா ய ந மா தேவி தேவி பஞ்சாட்சர ரூபி வாலை ரூபி பீஜாஷரி சகல ஏவல் பில்லி சூனியங்கள் மார் மார் நசி நசி சுவாஹா ''
ரசலிங்கம்:
ரசமணிக்கு எவ்வளவு பலன்கள் கிடைக்குமோ அதைவிட பலகோடி மடங்கு பலன் தரும் பாதரச லிங்கம்.வீட்டிலோ அல்லது வியாபரம் செய்யும் இடத்தில் வைத்து தினமும் பூஜித்து வந்தால் சகலவிதமான காரிய தடைகளும் நீங்கும்,ஏவல்,பில்லி,சூனியம் போன்ற எந்த விதமான மந்திர தந்திர வித்தைகளும் பலிக்காது.வியாபாரம் செழித்து வளம் பெரும்.போட்டி பொறாமை அகன்று நேர் வழியில் பயணிக்க வைப்பதில் ரச லிங்க வழிப்பாடு மிகவும் சக்தி வாய்த்த ஒன்றாகும்
ரசமணி விலை : 4500
ரசலிங்கம், ரசமணி விநாயகர் சிலை : ரூபாய் : 20,000 முதல்
தெய்வீக ரச மணி, ரசலிங்கம், ரசமணி விநாயகர் சிலை கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

ஸ்ரீ சரஸ்வதி தேவி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரம்


ஸ்ரீ சரஸ்வதி தேவி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரம்:
குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ,எந்தக் கடினமான விஷயத்தையும் எளிதில் விளங்கிக்கொள்ளவும் ,விளக்கிச்சொல்லவும் வல்லவர்களாக விளங்கச் செய்யும் ஸ்ரீ சரஸ்வதி ,ஸ்ரீ ஹயக்ரீவர் மந்திரங்கள் மற்றும் உபாசனை முறைகள் .

பகவான் ஸ்ரீ ஹயக்ரீவர் வேத ஸ்வரூபி .அவருடைய சிஷ்யையே ஸ்ரீ சரஸ்வதி தேவி.எனவே ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபடுபவர்களுக்குச் சரஸ்வதி தேவியின் அருள் தானாகவே கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.


ஸ்ரீ ஹயக்ரீவர்,ஸ்ரீ சரஸ்வதி தேவியின் மந்திரங்கள் ,ஜெபிக்கும் முறைகள்,வாக்குவன்மை கல்வியில் மேன்மை பெற உதவும் சிலப் பிரயோக முறைகளும் கற்றுத்தரவிருக்கிறோம்.


சரஸ்வதி பீஜ மந்த்ரம் - ஐம்
ஹயக்ரீவர் பீஜ மந்த்ரம் - ஹ்ரஸௌம்

நினைவாற்றல் கூட படிப்பில் விருப்பம் ஏற்பட :-

செம்புப் பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் பன்னீர் கலந்து,சிறிய துண்டு பச்சைக் கற்பூரம் போட்டுப் பாத்திரத்தில் வெண்தாமரையை இதழ் விரித்து வைத்து ஸ்ரீ சரஸ்வதி மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவரின் பீஜ மந்திரம் ஜெபிக்கப்பட்ட தீர்த்தத்தைப் பச்சை நிறப் போர்வை அல்லது துண்டில் தெளித்து அதில் அமர்ந்து படித்து வர நினைவாற்றல் அதிகரிப்பதோடு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். மந்தமான புத்தி படைத்த குழந்தைகள் சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் பெறுவார்கள்.

புதன்கிழமை மற்றும் பௌர்ணமிகளில் இதைச் செய்து வர நிறைவான தொடர்ந்த பலனைப் பெறலாம்.

மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்கள்,கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்களும் இதைச் செய்து வியக்கத்தக்க பலன்களைப் பெறலாம்.இது அனுபவ உண்மை.

மேலும் ஒரு பிரயோகம்

புதன்கிழமைகளில் கிழக்கு நோக்கி அமர்ந்து சரஸ்வதிக்கு பூஜை செய்யும் போதோ அல்லது பூஜை முடிந்த பிறகோ ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டில் சுத்தமான தேன் விட்டு அதில் வலது கை மோதிர விரல் கொண்டு ''ஐம்'' என்று எழுதிப் பின்னர் வாக்வாதினி மந்திரம் குறைந்தது 27 தடவையாவது ஜெபித்து அந்தத் தேனைச் சாப்பிட மாணவர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள், ஜோதிடர்கள் என்று யாவருக்கும் நல்ல வாக்கு வன்மையும்,கல்வி,கலைகளில் தேர்ச்சியும் உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Saturday, September 8, 2018

பெண்களுக்கான திருமண தோஷ பரிகாரங்கள்

பெண்களுக்கான திருமண தோஷ பரிகாரங்கள்:
திருமண தோஷம் உடைய பெண்கள் எந்த முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட்டால் திருமண தோஷம் நிவர்த்தியாகும் என்பதை பற்றி சாஸ்திரங்கள் கூறுகின்றன.
இந்த காலத்தில் எல்லா அம்சங்களும் நிறைந்த பெண்களுக்கு திருமணம் நடப்பது என்பதே மிகவும் அரிதான செயலாக இருக்கின்றது. அவர்களுக்கு தோஷமான ஜாதக அமைப்பாக இருந்தால் இன்னும் சிக்கல்தான். அப்படிப்பட்ட பெண்களுக்கு கண்கண்ட தெய்வம்தான் ஸ்ரீகருட பகவான். தன் அன்னையின் துயர் தடைத்து, அவரை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து மகிழ்வித்த உத்தம புத்திரன் அல்லவா அவர். அவரை யார்-யார் எவ்வாறு வழிபட வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்.

திருமண தோஷம் உடைய பெண்கள் கீழ்க்கண்ட முறைப்படி ஸ்ரீகருடனை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

1. பெண்கள் பிறந்த லக்னத்திற்கு 7-ம் வீட்டு அதிபதியின் வாரத்தில் ஸ்ரீகருடனை வழிபட்டு வர வேண்டும்.

2. அல்லது 7-ம் வீட்டதிபதி அமர்ந்த வீட்டின் அதிபதியாக யார் இருக்கிறாரோ, அவருக்குரிய வாரத்தில் வழிபடலாம்.

3. அல்லது ஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ள வீட்டதிபதி எங்கு அமர்ந்துள்ளாரோ அந்த வீட்டின் வாரத்திலும் வழிபடலாம்.

4. அல்லது ஒவ்வொருவரும் அவரவர் ராசிக்கு எதிரில் கொடுக்கப்பட்டுள்ள கிழமைகளில் ஸ்ரீகருட பகவானுக்கு துளசி மாலை அணிவித்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு வந்தால் திருமணத் தடை நீங்கும்.

மேஷம் - வெள்ளிக்கிழமை
ரிஷபம் - செவ்வாய்க்கிழமை
மிதுனம் - வியாழக்கிழமை
கடகம் - சனிக்கிழமை
சிம்மம் - சனிக்கிழமை
கன்னி - வியாழக்கிழமை
துலாம் - செவ்வாய்க்கிழமை
விருச்சிகம் - வெள்ளிக்கிழமை
தனுசு - புதன்கிழமை
மகரம் - திங்கட்கிழமை
கும்பம் - ஞாயிற்றுக்கிழமை
மீனம் - புதன்கிழமை

பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது. அதனையும் இந்த கருட வழிபாட்டால் நீக்க முடியும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Wednesday, September 5, 2018

உடல் கட்டு மந்திரம்


உடல் கட்டு மந்திரம்:
விபூதியை கையில் வைத்துக்கொண்டு வடக்கு முகமாய்
இருந்து கொண்டு
"ஓம் உள்ளங்கால் இரண்டும் பூமாதேவி காவல் கணுக்கால் இரண்டும் கணபதி காவல் முழங்கால் இரண்டும் முக்கோணர் காவல் துடை இரண்டும் துர்க்கை காவல் அரை ஆதி சிவன் காவல் வயுறு வைரவன் காவல் மார்பு மார்க்கண்டேயன் காவல் கழுத்து கந்தர்வன் காவல் உதடு உத்தமாதேவி காவல் பல்லு பரசுராமன் காவல் நாவு நாராயணன் காவல் கண்ணுரெண்டுக்கும் காளிங்கராயன் காவல் நெத்திக்கு நீலவர்ணன் காவல் தலைக்கு தம்பிரான் காவல் உடம்பு சுற்றிலும் சங்கு சக்கரம் காவல் என்னை கார்க்காவிட்டால் இது என் கட்டல்ல ஈஸ்வரன் கட்டு என்னை கார்க்க நம சிவாய "
இந்த மந்திரத்தை 21 முறை சொல்லிவிட்டு பிறகு பூஜையில் அமரவும்.
விபூதியை தன்னைச்சுற்றிலும்
போட்டு கொண்டால் எந்த மந்திரவாதி என்னவிதம் செய்தாலும்
நம்மிடம் ஏறாது. எந்த தீய சக்தியும் நம்மை ஒன்றும்
செய்ய முடியாது.
எந்தவொரு மந்திரம் செபிக்கும் முன்னரும் இக்கட்டு மந்திரத்தை செபித்து விபூதியை நம்மை சுற்றிப்போட்டுக்கொண்டால்
அம்மந்திரத்தை சித்தி செய்ய விடாமல் செய்யும் துஷ்டசக்திகளும்,கெட்டவர்களின் சதியும்,மற்ற எந்த இடையூறும் நீ அந்த விபூதியை விட்டு வெளியே வரும் வரை உன்னை நெருங்காது.அதற்குள் நீ சித்தி செய்ய வேண்டிய மந்திரத்தை சித்தி செய்து கொள்ளலாம். நீ அவ்விபூதியை விட்டு வெளியேரி விட்டால் அவ்விபூதியின் அற்றல் முறிந்து விடும்.
.................................................................................................
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்:
புருஷ வசியம்(கணவர் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் பிரிவு,மனைவியை கொடுமைப்படுத்துதல்,மனைவியுடன் வாழாமல் பிரிந்து செல்லுதல்,குடும்பத்தை கவனிக்காமல் இருத்தல்,கள்ள தொடர்புகள் போன்ற பிரச்சினைகளை சரி செய்து பிரிந்த கணவனை மனைவியுடன் ஒன்று சேர்த்து வைத்தல்,குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வைக்க புருஷ வசியம் செய்து தரப்படும்.
ஸ்திரீ வசியம்(மனைவி,பெண்கள் ஒற்றுமை ஏற்படுத்துதல்):
தவறான வழியில் செல்லும் மனைவி,பெண் பிள்ளைகளை கணவன் அல்லது குடும்பத்தாருடன் திருத்தி சந்தோஷமாக வாழவைப்பதாகும்.கள்ள தொடர்பு அல்லது தவறான வழியில் கணவனை விட்டு பிரிந்த பெண்கள் ஒன்று சேர்த்து வாழ ஸ்திரீ வசியம் செய்து தரப்படும்.
தொழில் வியாபார வசியம்(சர்வஜன ஆகர்ஷண வசியம்):
தொழில் வியாபாரத்தில் ஏற்படும் முடக்கம்,தடை,தடங்கல்கள்,வியாபாரம் இல்லாமை,வேலையாட்களால் ஏற்படும் பிரச்சினைகள்,தொழில் வியாபார திருஷ்டி கோளாறுகள்,தொழில் ஸ்தாபனத்தில் உள்ள வாஸ்து கோளாறுகள்,தொழில் வியாபாரத்தில் ஏற்படும் சகல பிரச்சினைகளும் சரி செய்து தொழில் வியாபாரம் சிறப்பாகவும்,லாபகரமாகவும் நடைபெற தொழில் வியாபார வசியம் செய்து தரப்படும்.
தொழிலுக்கு ஏற்றாற்போல் தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,தொழில் வசிய மை,தாயத்துக்கள் கொடுக்கப்படும்.
உத்தியோக ராஜ வசியம்(தனியார்,அரசுதுறை-அரசியல் முன்னேற்றம்):
அரசியல்-அரசு,தனியார் சம்மந்தப்பட்ட துறையில் உங்கள் திறமை மேம்படவும்,உயர் பதவிகள் கிடைக்க,அரசியல் உள்ளவர்கள் பெயர் புகழ் பெற்று நல்ல பதவி அடையவும்,உயர் அதிகாரிகள்,அரசியல் தலைவர்களின் நன்மதிப்பை பெற உத்தியோக ராஜ வசியம் செய்து தரப்படும்.சர்வராஜ வசிய மை கொடுக்கப்படும்.
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தெய்வதேவ வசியம்:
குலதெய்வம்,இஷ்டதெய்வம்,குலதெய்வம் அறிய,சகல தெய்வதேவ வசிய கலை மூலம் நமது கோரிக்கைகள் நிறைவேற்றி கொள்ள,அனுக்கிரக பெற தெய்வ வசிய யந்திரத்தகடு,தெய்வதேவ வசிய மை,தாயத்துக்கள்,பரிகாரப் பொருட்கள் பூஜித்து கொடுக்கப்படும்.
சத்துரு வசியம்:
வீடு,வெளி இடம் மற்றும் வேலை செய்யும் இடங்களில் உறவினர்கள்,நண்பர்கள்,எதிரிகள்,பகைவர்கள்,சத்துருக்களால் ஏற்படும் தொல்லைகள்,தடைகள்,பிரச்சினைகள் நீங்கி எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபட சத்துரு வசியம் செய்து தரப்படும்.
பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தன வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
திருமண தோஷ நிவர்த்தி:
மாங்கல்ய தோஷம்,செவ்வாய் தோஷம்,கால சர்ப்ப தோஷம்,நாக தோஷம்,களத்திர தோஷம்,தார தோஷம்,மறுமண தோஷம் இவைகள் நிவர்த்தியாகி திருமணம் உடனே நடக்க பரிகார பூஜைகள் செய்து தரப்படும்.
புத்திரபாக்கியம் கிடைக்க:
முன்னோர்கள் சாபம்,கர்ம வினைகளால் குழந்தைபேறு தடை,ஜாதக ரீதியான புத்திர பாக்கிய தோஷத்தால் புத்திர பாக்கியம் இல்லாமை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க புத்திரபாக்கிய தாயத்து,தகடுகள்,சித்த மருந்துகள் செய்து தரப்படும்
பாலகிரக தோஷம்:
1வயது முதல் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் பாலகிரக தோஷ பாதிப்புக்கள்,பயம்,மனக்குழப்பங்கள் நீங்க,
பள்ளி கல்வி தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற பரிகார தாயத்துக்கள்,பூஜைப்பொருட்கள் கொடுக்கப்படும்.
போட்டி தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை வாய்ப்புக்கள் கிடைக்க,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
கடன் தொல்லைகள் நீங்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

லோக வசிய மை


லோக வசிய மை :
வெண் குன்றிமணி வெள்ளைச் சாரணை
வெள்ளெருக்கு வெள்ளை விஷ்ணுகிராந்தி
இவைகளை முறைப்படி காப்பு கட்டி, சாபம் போக்கி ஆணிவேர் ஆறாமல் தோண்டி எடுத்து, உலர்த்தி தீயில் கருக்கி பத்திரப்படுத்தவும்.
கருங்குருவி பிச்சு கண் கரிச்சான் பிச்சு கண்
கரும்பூனை பிச்சு கண் கருநாய் பிச்சு கண்
இவைகளை எடுத்து உலர்த்தி வைத்துக் கொண்டு புனுகு,கோரோசனம்,பச்சைக்கற்பூரம்,குங்குமப்பூ, கஸ்தூரி இவைகளை வகைக்கு ஒரு குன்றிமணி எடை எடுத்து சேர்த்து, வல்லூறு தைலம் விட்டு இரண்டு சாமம் அரைத்து கொம்பு சிமிழில் பத்திரப்படுத்தவும்.
இதற்கு பூஜை மந்திரம்:
"ஓம் ஹ்ரீம் நமோ பகவதி உச்சிஸ்ட சண்டாளினி சர்வலோகம் தஸமானய சுவாக"
இந்த மந்திரத்தை தினம் 1008 உரு வீதம் 11 நாட்கள் ஜெபம் செய்ய மை உயிர் பெறும் .
இதை தேவை படும் பொழுது நெற்றியில் இட்டுக்கொள்ள சகல வசியம்{எறும்பு முதல் தாவரம்,மனிதர்கள்,மிருகம், என அனைத்தும் வசியமாகும்}.
லோக வசிய மை கிடைக்கும்
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Saturday, September 1, 2018

ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம் : வளம் சேர்க்கும் வழிபாடும்,பரிகாரமும்

ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம் : வளம் சேர்க்கும் வழிபாடும்,பரிகாரமும்: வளம் சேர்க்கும் வழிபாடும்,பரிகாரமும்: எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க நம் வழிபாட்டு முறை பல பரிகாரங்களைச் சொல்லி வைத்திருக்கிறது...