Friday, August 9, 2024

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி

 

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி

செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் 108 போற்றியை செவ்வாய் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.

ஓம் அழகா போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் அரன் மகனே போற்றி

ஓம் அயன்மால் மருகா போற்றி

ஓம் சக்திவேலவா சரவணா போற்றி

ஓம் முக்தி அருளும் முருகா போற்றி

ஓம் பன்னிருகை வேலவா போற்றி

ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி

ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி

ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி

ஓம் இடும்பனை வென்றவனே போற்றி

ஓம் இடர் களைவோனே போற்றி

ஓம் உமையவள் மகனே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி

ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி

ஓம் ஓம்கார சொருபனே போற்றி

ஓம் மூலப்பொருளே குகனே போற்றி

ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி

ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி


ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி

ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி

ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி

ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி

ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி

ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி

ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி

ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி

ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி

ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி

ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி

ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி

ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி

ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி

ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி

ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி


ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி

ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கதிர் வேலவனே போற்றி

ஓம் மூலப்பொருளே முருகா போற்றி

ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி

ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி

ஓம் அறுபடை விடுடையவா போற்றி

ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி

ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி

ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி

ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி

ஓம் மகா சேனனே போற்றி

ஓம் மயில் வாகனனே போற்றி

ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி

ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி

ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி

ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி

ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி

ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி

ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி

ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி


ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி

ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி

ஓம் கலியுக வரதா கந்தா போற்றி

ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி

ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி

ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி

ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி

ஓம் சரவணபவ சண்முகா போற்றி

ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி

ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி

ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி

ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி

ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி

ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி

ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி

ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி

ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி

ஓம் யோக சித்தியே அழகே போற்றி

ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி

ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி

ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி

ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி

ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி

ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி

ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி

ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி

ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி

ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி

ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி

ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி

ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி

ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி

ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி

ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி

ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி

ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி

ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி

ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி

ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி

ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி

ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி

ஓம் அருமையின் எளிய அழகே போற்றி

ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி

ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி

ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி

ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி

ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி

ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, August 2, 2024

அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்:



 

அருள் வாக்கு கூற ஸ்ரீ கருப்பசாமி மந்திரம் யந்திரம்:


கருப்பன், கருப்பணன், கருப்பு, கருப்பண்ணசாமி என்று பயபக்தியோடு வணங்கப்படும் துடியான கிராம காவல் தெய்வம், கருப்பசாமி. கறுப்பன் அமர்ந்த இடத்தைக் கொண்டு பல்வேறு விதமாய் கருப்பரை அழைப்பதுண்டு. சங்கிலி கறுப்பன், கறுப்பனார் சாமி, குல கறுப்பனார், பதினெட்டாம்படியான், சின்ன கருப்பசாமி, பெரிய கருப்பசாமி, மீனமலை கருப்பசாமி, முன்னோடை கருப்பசாமி, நொண்டி கருப்பசாமி, ஒண்டி கருப்பசாமி என கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் இருக்கின்றது.

கருப்பன், கருப்புசாமி, கருப்பாயி எனும் பெயர்களைத் தென் தமிழர்கள் தம் குழந்தைகளுக்கு பெயராக சூட்டுவது காணலாம். தமிழ்நாட்டு கிராம தெய்வங்களிலேயே மிகவும் சிறப்பு பெற்ற தெய்வமாக கருப்புசாமி இருந்து வருகிறார். கருப்புசாமி இல்லாத கிராமங்களே இல்லை எனலாம்.

அடர்ந்த மீசையும், உருட்டிய விழிகளும், சிவந்த உதடும், ஓங்கிய அருவாளும், குதிரை வாகனமும் கொண்டு குலை நடுங்கும் தோற்றம் கொண்டவர் கருப்பன். உயர்ந்த உருவமும், கருத்த மேனியும் வேகமான ஓட்டமும், துடியான ஆட்டமும் கொண்டவர். எந்த எதிரிகளையும் அழிக்க வல்லவர். இவரிடம் பொய்யோ, ஏமாற்றமோ செல்லுபடி ஆகாது. நம்பியவருக்கு காவலாகவும், எதிர்ப்பவர்களுக்கு எமனாகவும் இருப்பவர் கறுப்பர். பரமசிவன் அம்சம் என்றும், பத்ரகாளி அம்சம் என்றும் வணங்கப்படுகிறார். தென் தமிழ்நாட்டின் எல்லா ஆலயங்களிலும் இவர் காவல் தெய்வமாக உள்ளார். பெரும்பாலும் எல்லா கிராம எல்லையிலும் காவலாக ஆட்சி செய்கிறார். பெரியாண்டவர் என்ற பெயராலும் பரவலாக குடி கொண்டுள்ளார்.

ஸ்ரீராமருக்கு இரு புதல்வர்கள், சீதை லவனை மட்டுமே பெற்றதாகவும், தண்ணீர் பிடிக்க சீதை சென்ற போது லவனை பார்த்துக்கொள்ளுமாறு வால்மீகி முனிவரிடம் கூறி சென்றாள். திரும்ப வந்து லவனை சீதை தூக்கி சென்று பர்ணசாலைக்கு வெளியே உணவு ஓட்டிக்கொண்டிருந்தாள். இது தெரியாத வால்மீகி முனிவர், குழந்தையை காணாது, சீதை சபிப்பாளோ என்று பயந்து தர்ப்பை புற்களை தன் தவ வலிமையால் உருவேற்றி லவனை போன்ற ஒரு குழந்தையை உருவாக்கினார். குசன் என்ற புதிய பிள்ளையையும் சேர்த்து சீதை இரு பிள்ளைகளையும் தன பிள்ளையாகவே வளர்க்கிறாள்.

ராமர் கானகம் வந்து சீதையிடம் இரண்டில் எது நம் குழந்தை, என கேட்கிறார், உடனே தீக்குளித்த சீதை அதையே தன்மகன்களை செய்யச்சொல்ல, லவன் பிழைத்து வர, குசன் மட்டும் யாக தீயில் கருக, ஸ்ரீராமரும் உயிர் தந்து குசனை காக்க, தீயில் கருகியதால் கருப்பா என்று அழைத்தாராம். அதுமுதல் அவர்தான் கருப்பண்ணசாமியானார் என்று ஒரு கதை மக்களால் கூறப்படுகிறது.

பெரும்பாலும், மது, கஞ்சா, மாமிசம் கொண்டே வணங்கப்படுகிறார். பொங்கலிட்டு, பூமாலை சார்த்தி மேள, தாளங்களோடு ஆர்ப்பாட்டமாய் இவரின் திருவிழா கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் சொத்து, சுகம், மக்கள், மாடு போன்ற எல்லா செல்வங்களுக்கும், சுகங்களுக்கும் இவரே காவல் என்று நம்புகின்றனர். எதிரி பயம் நீங்கவும், கொலை, களவு ஏற்ப்படாமல் இருக்கவும் இவரே கதி என்று இவருக்கு படையல் இடுகின்றனர். கருப்பரும் வணங்கும் அத்தனை ஏழை எளிய மக்களுக்கும் எப்போதும் காவலாக இருந்து கண்மூடாது சேவை செய்கிறார்.


ஸ்ரீ கருப்பசாமி மந்திரம்:

ஓம் க்ரூம் அஸிதாங்காய மஹாவீர

பராக்ரமாய கதாதராய தூம்ர நேத்ராய,

தம்ஷ்ட்ர கராளாய, மாலாதராய

நீலாம்பரதாய, ஸர்வ பாபக்னே,

ஸர்வ பயாக்னே, சிவபுத்ராய,

க்ருத்தாய க்ருபாகராய ஸ்வாஹா.


முதலில் விநாயகரையும், பின்னர் உங்கள்

குலதெய்வத்தையும் வழிபட்டு, மேலே உள்ள

கருப்பசாமியின் மந்திரத்தை முழுமனதுடன்

தினமும் பதினெட்டு முறை கூறவும்.

ஸ்ரீ கருப்பசாமியின் அருள் கிட்டும்.

அருள் வாக்கு மற்றும் குறி சொல்ல ஸ்ரீ கருப்புசாமி வசிய யந்திரத் தகடு,தாயத்து,வசிய மை,ரட்சைக் கயிறு மற்றும் தீட்ஷை வேண்டுவோர் அணுகவும்.


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989



Friday, June 7, 2024

செல்வ வளம் தரும் மஹாலட்சுமி யந்திரம்:


 செல்வ வளம் தரும் மஹாலட்சுமி யந்திரம்:


தாமிரத் தகடு அல்லது வெள்ளத் தகட்டில் முறையாக கீறி,மந்திர உருவேற்றிய மகாலட்சுமி யந்திரத்தகட்டை பூஜையறையில் வைத்து பூஜிக்க செல்வ வளம் தரும்,லட்சுமி கடாட்சமும்,குபேர சம்பத்தும் கிட்டும்.தனம்(பணம்),தான்ய விருத்தி உண்டாகும்.வீடு,மனை நிலபுலம் வாங்கும் யோகம் கைகூடும்.கடன் தீரும்.வீட்டில் வைத்து வழிபட வேண்டிய யந்திரம் இது.


மஹாலட்சுமி யந்திரத் தகடு தேவைக்கு அணுகவும்.


தொடர்புக்கு:

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Sunday, June 2, 2024

பைரவர் கவச மந்திரம் :



 பைரவர் கவச மந்திரம் :


 மனித சக்திக்கு அப்பாற்பட்டது தெய்வீக சக்தி என்பது அனைவரும் அறிந்ததே. தெய்வீக சக்தி நிறைந்திருக்கும் இதே உலகில் துஷ்ட சக்திகளும் இருக்கின்றன. இந்த துஷ்ட சக்திகளை தீய மாந்த்ரீக கலை மூலம் ஒரு சிலர் தங்களுக்கு ஆகாதவர்களுக்கு செய்வினை போன்றவற்றை செய்கின்றனர். ஒரு சிலருக்கு எதிர்பாராத விதமான விபத்துகளும் ஏற்படுகிறது. இவையனைத்திலிருந்தும் காக்கும் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு “பைரவர் கவச மந்திரம்” இது.


 பைரவர் கவச மந்திரம் :


"ஓம் நம கால்ரூபாய பதுக் பைரவாய நம ருத்ராய நம சிவாய ஓம் தம் தம் ஹம் ஹம் தம் தம் ஸ்வாஹ"

 

 காக்கும் கடவுளான பைரவரை வழிபடுவதற்கான மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை உபாசித்து பைரவரின் அருளை பெற நினைப்பவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தியானத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை மந்திர உரு போடுவது சிறந்ததாகும். பைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி தினத்தில், பைரவர் சந்நிதியில் பைரவருக்கு செவ்வரளி பூக்கள் சமர்ப்பித்து நெய் விளக்கேற்றி இம்மந்திரத்தை 108 துதித்தால் செய்வினை மாந்திரீகம், துஷ்ட சக்திகள் பாதிப்புகள் உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் அது நீங்கும். வாகனங்களில் பயணிக்கும் போது எதிர்பாரா விதத்தில் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும். தேவர்கள் அசுரர்களால் துன்புறுத்த பட்ட போது அவர்கள் அனைவரும் உலகை காக்கும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அசுரர்களை அழித்து தேவர்களின் துன்பம் நீங்க தனது அம்சமான பைரவரை தோன்ற செய்து அனுப்பினார் சிவபெருமான். பைரவர் திசைக்கு 8 வீதம் 64 வகையான பைரவர்களாக தோன்றி அசுரர்கள் அனைவரையும் அழித்தனர். எப்படிப்பட்ட துன்பங்களையும் போக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக பைரவர் விளங்குகிறார் அவரை இம்மந்திரம் கொண்டு துதிப்பதால் பல நன்மைகள் உண்டாகும். 


உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும் 


தொடர்புக்கு 

ஸ்ரீகாளி தேவி-போன்:+91 7598758989

Tuesday, May 21, 2024

கருவூராரின் ஐங்கோண லோக வசிய யந்திரம்:

கருவூராரின் ஐங்கோண லோக வசிய யந்திரம்:


லோக வசியம்:

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.


"தானேதா னாறுவரை நேரே கீறி

தன்மையா யாறுவரை குறுக்கே கீறி

கோனேகே லிருபத்தியஞ்சு மாச்சு

கொற்றவனே யறை தோறும் பீடங்கேளு

தேனே பார் முதலரையில் முக்கொனந்தான்

தெளிவாக மறுவறையில் நாற்கோணம் தான்

மானே கேளடுத்த ரண்டை வீட்டில்

மயக்கமின்றி வட்டமத்தை போடு போடு

போடே நீ அடுத்த வரையங்கோணம் பார்

பொன்னவனே யாரு கோணம் அடுத்தவீடு

நீஎநீ நடுவ ணையாம் பிடித்த மாறு

நாயகனே வரின்தொரும் மாற்றிக் கொள்ளு 

வாடாதே வயநமசி என்று போடு

வகையாக நடுவனையாம் முன்போல மாறு

தேடாதே வகரத்தில் றீயும் போடு

தெளிவாக யாக்ரத்தில் ஸ்ரீயும் போடே 

போடவே போட்டவுடன் சொல்லக் கேளு

புகலான நாகரத்தில் ஐயும் போடு

தேடவே மகரத்தில் கிலியும் போடு

நேர்மையாய் சிகாரத்தில் சௌம்போடு

நாடல்லாய் ஏ, ஒ, அ, இ, உ போடு

வாகாத வகாரத்தில் லம்தானையா

சஸ் வகுர சொல்வேன் கேண்மா

மாயவ யகரத்தில் சௌம்போடு

போட்டவுடன் நகரத்தில் ஐம்தானப்பா

பொன்னவனே மகாரத்தில் ஈம தான் போடு

நலமாகப் போட்டு மல்லே நவிலக் கேளு

தாட்டிகமாய் இவையெல்லாம் கோர்வையாக

தப்பாமல் அறை தோறும் வரைந்து கொண்டு

காட்டுவேன் நடுவணைய முன்போல் மாறு

கருத்தாக வரை தோறும் இப்படியே மாறே" 


என்று ஐங்கோண யந்திரம் வரைவதை சொல்லும் கருவூரார் (படம் கீழே)


"மேலான புத்தி கொண்டு மாறாமல்

கண்டு மாயா தானடைக்க யந்திரந்தான்

பாலகா தேயுமல்லோ மகிமை மெத்த

பாருலகில் உனக்கீடு சொல்லப் போமோ

காலான கால் கண்டு நின்று பூசி

கைகண்ட வசியமடா இன்னும் கேளே 

கேளப்பா கீழ் திசையில் புலிதோலப்பா

கேடியான ஆசனத்தில் வீற்றிருந்து

நாளப்பா போகாது ருத்ர மாலை 

ஆளப்பா செபன்சே வாய்மலர ரோமமல்லி

ஆளப்பா சதாசிவம் போலிருந்து கொண்டு

அடைவாக பூசிக்க வசியமாகும்

கண்மணியே கலங்காதே ஆடிப் பாரே 

பாரப்பா அதிசயமா இந்த போக்கு

அவனியிலே கிடையாது சொன்னேன்

சேப்பா செகமெங்கும் கிடையாதையா

கோடியில் ஒருவனல்லோ அறிவானிதை

கோடி சித்தும் கனத்துக்குள்ளே வருமே

நாடிப்பார் பெரியோரை வணங்கி நில்லு" 


மேற் சொன்ன பாடல்களின் படி, ஒரு காரீயத் தகட்டிலோ, அல்லது பொன் அல்லது செப்புத் தகட்டிலோ, இந்த யந்திரத்தைக் கீறி தூய இடத்தில் வைத்து ஊது பத்தி , சாம்பிராணி கற்பூரதீபங்காட்டி, வழிபட வேண்டும். கிழக்கு நோக்கி புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்து, ருத்திராட்ச மாலை கொண்டு ஜெபம் செய்ய வேண்டும்.(இன்றைக்கு புலித்தோல் ஆசனம் தேடிப் போனால் ஜெயிலில் களி திங்க வேண்டியிருக்கும் என்பதால் புலித் தோலாசனம் தரும் உஷ்ணத்தை மட்டும் மனதில் கொண்டு, அதற்கு மாற்றாய் சணல் கோணியை பயன் படுத்தலாம்.) 


"ஓம் றீம் ஸ்ரீம் ஐம் கிலீம் சவ்வும் வயநமசி சர்வலோக வாசியாய சிவ சிவ சுவாஹா" 


என்ற மந்திரத்தை தினசரி 1008 தடவை வீதம் ஒரு மண்டலத்திற்கு தொடர்ந்து சொல்லி வந்தால் இது சர்வ லோக வசியமாகுமாம். இதை முறையாக செய்பவரை மிஞ்ச உலகில் எவருமில்லை என்கிறார் கருவூரார்.


உருவேற்றிய கருவூராரின் ஐங்கோண லோக வசிய யந்திர தகடு 

கிடைக்கும்.


தொடர்புக்கு :

 

ஸ்ரீ காளி தேவி


போன்:+91 7598758989


Visit as: mantrakali.blogspot.com

Friday, May 10, 2024

அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி :


 அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி :


வாக்குவன்மை,தேஜஸ்,நினைவாற்றல்,சகல கலைகளிலும் உயர்வு தரும் ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி மந்திரம்

வளர்பிறைத் திங்கள்,புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் கிழக்கு நோக்கி வெள்ளை விரிப்பில் அமர்ந்து இதைச் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

செம்பு அல்லது பித்தளைத் தட்டு  - 1

வெண்தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூக்கள்

ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர்

விளக்கேற்றி வைத்து அதில் மாதா ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியை எழுந்தருள வேண்டி இரண்டு சிறிய கற்கண்டுகளை விளக்கில் போடவும்.பால் ,பழங்கள் வெற்றிலை,பாக்கு மற்றும் இயன்ற நைவேத்யம் வைக்கவும்.

ஒரு பித்தளை அல்லது செம்புத் தட்டில் கொஞ்சம் சந்தானம் பரப்பி அதில் கொஞ்சம் பன்னீர் அல்லது ரோஸ் வாட்டர் விட்டுக் குழைத்து தட்டு முழுவதும் பரப்பி அதில் வலது கை மோதிர விரலால் ஐம் என்று எழுதவும்.கொஞ்சம் காய்ந்த பின்னர்    தாமரை மலர் அல்லது மல்லிகைப் பூ எடுத்து கீழே உள்ள மூலமந்திரம் சொல்லி தட்டில் உள்ள ஐம் என்ற எழுத்தில் படும் படிப் போடவும். பின்னர் மந்திரம் குறைந்தது 108 தடவை ஜெபித்து அன்னை ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரியே உன் திருமந்திரம் கொண்டு இந்த அர்ச்சிக்கப்பட்ட இந்த சந்தனத்தை அணிவதால் எங்களுக்கு நல்ல ஞானம், வாக்குவன்மை,கல்வியில் ஆர்வம்,வாழ்விலும் ஆன்மீகத்திலும் உயர்வு, தேஜஸ் தந்தருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த சந்தனத்தைப் பன்னீரில் குழைத்துத் தினமும் அணிந்து கொள்ளவும்.பின்னர் அந்த சந்தனத்தை சேர்த்து எடுத்து ஒரு பித்தளை,செம்பு,தங்கம்,வெள்ளி இதில் எந்த டப்பி அல்லது பாத்திரம் உங்கள் வசதிக்கு உகந்ததோ அதில் போட்டு வைத்துக் கொள்ளவும்.பௌர்ணமி தோறும் அந்தப் பாத்திரம் அல்லது டப்பிக்கு மந்திரம் ஜெபித்துப் பூக்களால் அர்ச்சித்து வர சக்தி கூடும்.

தினமும் குளித்து முடித்த பின் கிழக்கு முகமாய் நின்று 3 முறை மந்திரம் ஜெபித்துச் சந்தனத்தைப் பன்னீர் விட்டுக் குழைத்து அணிந்து வர வாலைத்தாய் அருளால் நல்வாழ்வு கிட்டும்.

அசைவம் தவிர்க்கவும்.

மூலமந்திரம்:

ஓம் ஐம் க்லீம் சௌம் பாலா திரிபுர சுந்தரி |

என் வாக்கிலும் மனதிலும் முகத்திலும் வந்து நிற்க ஸ்வாஹா ||


அருள்வாக்கு சொல்ல ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரி யந்திரம்,வசிய மை,தீட்ஷை தேவைக்கு அணுகவும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Sunday, May 5, 2024

செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:


 செய்வினை கட்டுக்களை கண்டுபிடிக்கும் எளிய முறை:


நாட்டுக்கோழி ஆண் முட்டை ஒன்றும்,பெண் முட்டை ஒன்றும் எடுத்துக் கொண்டு அதில் பஞ்சபூத சக்கரம் வரைந்து,தோஷ நிவர்த்தி மந்திரம் செபித்து உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு பாதிக்கப்பட்டவர்கள் தலையை 27 முறை சுற்றி இரண்டு முட்டைக்கும் இடையில் கற்பூரம் ஏற்றி வைக்க,செய்வினை கட்டு இருப்பின் முட்டை வெடித்து கற்பூரம் அனைந்து,உள்ளே இருக்கும் மஞ்சள் கரு,கருப்பாக வெளியேறும்.

இவ்வாறு இருப்பின் செய்வினை கட்டு உள்ளது என்று அறிந்து கொள்ளலாம்.


செய்வினை, மாந்திரீக பாதிப்புகளிலிருந்து நிரந்தர தீர்வு காண அணுகலாம் 


தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989