Friday, March 7, 2025

இந்திர பகவான் காயத்ரி மந்திரம்

 இந்திரபகவான் காயத்ரி மந்திரம்:


"ஓம் தேவராஜாய வித்மஹே

வஜ்ரஹஸ்தாய தீமஹி

தந்நோ இந்த்ர ப்ரசோதயாத்"


இந்த காயத்ரி மந்திரத்தை தினசரி 108 முறை கூறி வர பணப் புழக்கம் அதிகரிக்கும்.தொழில் மேன்மையுறும்.வீடு வாகன வசதி உண்டாகும்.


பணப்புழக்கம் அதிகரிக்கச் செய்யும் தன ஆகர்ஷண யந்திரத் தகடு கிடைக்கும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-பொன்:+917598758989


Saturday, October 19, 2024

வாராகி அம்மன் மந்திரம்

 


வாராகி அம்மன் மந்திரம்:

"ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் சௌம் க்லீம் வாராகியே நமஹ"


 இதில் ஓம் என்பது பிரணவ மந்திரமாக கருதப்படுகிறது. ஸ்ரீம் என்னும் பீஜ மந்திரம் எதிரிகள் தொல்லை நீங்க உதவும். சௌம் என்னும் பீஜ மந்திரம் நினைத்த காரியம் அனைத்தையும் நடத்திக் கொடுக்கும். க்லீம் என்னும் பீஜ மந்திரம் வெற்றிக்கு மேல் வெற்றி கிடைக்க துணை புரியும். 

 இந்த மந்திரத்தை தினமும் காலையில் வீட்டில் வாராகி அம்மனுக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு பலன் தரும் அளவு கூறுவதன் மூலம் வாராஹி அம்மனின் அருள் கிடைக்கும். மேலும் நமக்கு எப்போது தோன்றுகிறதோ அப்போழுதெல்லாம் நமது மனதிற்குள் இந்த மந்திரத்தை கூறி வருவதன் மூலமும் பல பலன்கள் கிடைக்கும். மேலும் இந்த மந்திரத்தை ஒரு லட்சத்து எட்டு முறை யார் மனதார வாராஹி அம்மனை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் நடக்கும் என்று கூறப்படுகிறது. அதே எளிமையான சமயம் வாய்ந்த இந்த மந்திரத்தை சக்தி வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து கூறுபவர்களுடைய வாழ்க்கையில் நினைத்தது அனைத்தும் நடந்தேறும்.


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி-பொன்:+917598758989

இவ்வாறு பார்வையிடவும்:mantrakali.blogspot.com

Thursday, September 12, 2024

நவகோள் பரிகாரங்கள்

நவகோள் பரிகாரங்கள்

1.சூரியனுக்குரிய பரிகாரம்

ஞாயிற்றுக்கிழமை கோதுமையினால் செய்யப்பட்ட சப்பாத்தி ரொட்டி கோதுமை தோசை போன்றவற்றை செய்து தானும் சாப்பிடலாம். வீட்டுக்கு வரும் உறவினர்க்கும் கொடுக்கலாம்.குழந்தைகளுக்கு கோதுமை அல்வா வாங்கிக் கொடுத்து சந்தோஷப் படுத்தலாம். இதனால் மேலதிகாரிகள் கோபம் தணியும் .அரசு சம்பந்தமான காரியங்கள் கை கூடும்.

2. சந்திரனுக்குரிய பரிகாரம்

பலா மரத்தின் வடக்கு போகும் வேரை பூச நட்சத்திரத்தில் அல்லது அமாவாசை ஞாயிற்றுக்கிழமை கூடிய சுபதினத்தில் காப்புக் கட்டி எடுத்து வந்து தாயத்தாக்கி கட்டிக் கொள்ள சந்திர திசை முழுவதும் நலம் தரும்.

3.செவ்வாய் பகவானின் மூலிகையான சிவனார் வேம்பை முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி எடுத்து அணிந்து கொள்ள அதிகார பதவி கிட்டும். உடல் நலம் தேறும்.எதிரிகள் சரணடைவார் .உறவுகள் மேம்படும்.எதிலும் முக்கியத்துவம் கிட்டும்.செவ்வாயின் திசை முழுவதும் பலன் தரும்.சகோதரர்கள் நலம் பெறுவார்.

4.புதனுக்குரிய பரிகாரம்

புதனுக்குரிய இருவேலி மூலிகை அல்லது செந்நாயுருவி வேருக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக் கட்டி உயிர் கொடுத்து பூஜையில் வைத்து புதன்கிழமை புதன் ஓரையில்( காலை 6:00 மணிக்குமேல் 7:00 மணிக்குள்) தாயத்தாககி கழுத்தில் அணிந்து கொள்ளுங்கள். இதனால் படிப்பவர்கள் பலன் பெறுவர்.தோல் நோய் வராது.சிந்தனைக்கு ஏற்ப சுப சந்தோஷ மேன்மையுண்டாகும். குடும்பத்தினர் மகிழ்வார்கள். பெண்களால் முன்னேற்றம் வரும்.

5.குருக்குரிய பரிகாரம்

வியாழனின் சமித்தாகிய அரச மரத்தின் புல்லுருவியை முறைப்படி பூஜை செய்து தாயத்தாக்கி அணியவும். வியாழனின் திசையில் தனதான்ய அபிவிருத்தி புத்திர சுகம்.குருவருள்.இறையருள் கிடைக்கும்.

6. சுக்கிரன் பரிகாரம்

சுக்கிரன் மூலிகையான கருஊமத்தன் செடிக்கு முறைப்படி பூஜை செய்து காப்புக்கட்டி சாப நிவர்த்தி செய்து உயிர் கொடுத்து எடுத்து வந்து. தாயத்தாக்கி அணியவும் நன்கு சிரத்தையுடன் தூபம் கொடுத்து வந்தால் சுக்கிரன் திசை முழுவதும் வெற்றி கிடைக்கும். வண்டி, வாகனம்,வீடு,நல்லதுணை அமையும்.சுக்கிரன் எந்த நிலையில் இருந்தாலும் திசை முழுவதும் நல்ல பலனைத் தரும்.அறுபத்தி நான்கு கலைகளிலும் தேர்ச்சி உண்டாகும் இயல் இசை நாடகத்தில் கலைத்துறையில் முழு வெற்றி கிடைக்கும்.

7.சனி பகவானுக்குரிய பரிகாரம்

சனிபகவான் மூலிகையான செவ்வலரி வேரை முறைப்படி காப்புக்கட்டி பூஜை செய்து வடக்கு போகும் வேரை எடுத்து அணிந்து கொள்ள வெற்றிமேல் வெற்றி உண்டாகும். இது பெரும் சக்தியையும் சர்வ மேன்மையையும் தரும்.ஆயுள் முழுவதிலும் பலன் தரும். நினைத்ததை சாதிக்க வைக்கும்.ஏழரை சனி,அஷ்டமத்து சனி,கண்டச் சனி,விலக சர்வ சாபங்களும் விலகும்.சனி பகவான் திசை வருடம் பத்தொன்பதும் நல்ல பலன் கிட்டும்.

8. ராகுவுக்குரிய பரிகாரம்

இராகு மூலிகை எட்டி மரத்தின் வடக்கு போகும் வேருக்கு காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து அந்த வேறுக்கு வாசனைத் திரவியங்கள் பூசி இராகுவின் காயத்ரி மந்திரம் 1008 முறை ஜெபித்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள இராகு திசை முழுவதும் நல்ல பலன் கொடுக்கும்.

9.கேதுக்குரிய பரிகாரம்

வேப்ப மரத்தின் வடக்கு போகும் வேருக்கு அசுவணி ,மகம்,மூலம் நட்சத்திரத்தில் காப்புக்கட்டி பூஜை செய்து எடுத்து வந்து தாயத்தாக்கி அணிந்து கொள்ள கேது பகவான் திசை முழுவதும் நல்ல பலன் தரும் .வாழ்வில் பிடிப்பு இல்லாதவர்கள் வீட்டில் துன்பம் ,துயரம் உள்ளவர்கள், நல்ல பெயரை எடுக்க இயலாதவர்கள் ,மேலதிகாரி தொல்லையுடையவர்களும், இம்மூலிகையால் இதன் மகிமையால் வாழ்நாள் முழுவதும் நல்ல பலனைத் தரும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989