Monday, April 28, 2025

நாக பாம்பு தீண்டாதிருக்க:

 


நாக பாம்பு தீண்டாதிருக்க:


அகத்தியர் அருளிய "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் 

நாக பாம்பு தீண்டாதிருக்க ஒரு மந்திரத்தை அருளியுள்ளார்.


ஊணிப்பா ரரவமது வாய்தான்கட்ட

உண்மையுள்ள மந்திரமது ஒன்றுகேளு

பேணிப்பார் நங்கிலி சீ ஓம் என்றாக்கால்

பெரிதான நாகமது வாய்தான்கட்டும்

பூணிப்பார் தன்னகமே சாட்சியாகப்

புத்தியுட நாயிரத்தெட் டுறுவேசெய்தால்

ஆணிமாத் தந்தமதி னொளிபோல்மைந்தா

ஆதிதொடுத் தந்தமதின் சித்தியாமே.

- அகத்தியர்


ஒருவரை நாக பாம்பு தீண்ட வந்தால் "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை 

உச்சரிக்க பாம்பால் தீண்ட முடியாது என்று வாய் கட்டிப் போய்விடும் என்கிறார். 

இந்த மந்திரத்தை சொல்லுகிறவர் முன் கூட்டியே இந்த மந்திரத்தில் சித்தியடைந்திருக்க 

வேண்டியது அவசியம். "நங் கிலி சீ ஓம்" என்ற மந்திரத்தை தொடர்ச்சியாக ஆயிரத்து எட்டு 

தடவை செபித்தால் இந்த மந்திரம் சித்தியாகும். இந்தவகை மந்திரங்களைக் "கட்டு மந்திரம்" என்று அழைப்பர்.


தொடர்புக்கு:

ஸ்ரீ காளி தேவி

போன்:+917598758989

மின்னஞ்சல்: mmsvguna@gmail.com

பார்வையிடவும்: mantrakali.blogspot.com,