Showing posts with label செய்வினை. Show all posts
Showing posts with label செய்வினை. Show all posts

Wednesday, March 22, 2017

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை


ஏவல், பில்லி, சூனியம், செய்வினை
இந்த செய்வினை அல்லது இடு மருந்து கொடுப்பது என்பது பல கால காலமாய் இருந்து வருவது உண்டு. மேலும் தமிழகத்தில் ஒரு கிராமம் முற்றிலுமே இந்த தொழிலை செய்து வருவது பலருக்கு தெரிந்திருக்கும்.எதிரிக்கு வாரிசு இல்லாமல் போக, தொழிலில் நஷ்டம் வர, அடியோடு மாரணம் செய்ய,ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், கணவன் மனைவியை சேர்க்க பிரிக்க, காதலர்களை சேர்க்க பிரிக்க என பல எதிர்மறை விஷயங்களுக்கு இவை பிரதானமாக பயன்படுகிறது . பல் வேறு வகை மூலிகைகளையும் இவற்றுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பின்துடரி , ஆடை ஒட்டி, வெல்லாடனை போன்றவை மிக அதீத உடல் நசிவை தரக்கூடிய, செய்வினை பிரயோகங்களில் உபயோகப்படுத்தும் மூலிகைகள். ஆங்கிலத்தில் இவைகளை ' டாக்சிக் ஹெர்பல்ஸ்' என்பர். எவற்றை செய்தாலும் நஷ்டம், எதிலும் தோல்வி, எவ்வளவு புத்திசாலிதனத்துடன் செய்தாலும் தோல்வி, எந்த கோவில் குளம் சென்று வந்தும் பலன் இல்லாத தன்மை, திடீர் என கடன் எனும் பெரும் குழியில் மாட்டி கொள்வது போன்றவை தொழில் நசிவை மற்றும் அழிவை தருவதற்காக எதிரிகளுக்கு செய்யப்படும் ஸ்தம்பன மற்றும் கொடிய ஆக்ரூஷன நிலைகள். பேய்மிரட்டி, நத்தை சூரி, தலைச்சுருள் , ஆதிக்கொடி, காட்டாடி, செந்தாளி போன்ற சிலவற்றை ஆக்ரூஷன மந்திர கட்டுகள் கட்டி காற்றில் வெளியிட்டால் அணைத்து நாச வேலைகளையும் செய்யும் . இது பற்றி மேலை நாட்டு ஆய்வுகள் பல ஆங்கிலத்தில் உண்டு, முக்கியமாக 'சிஷோபிரிநியா' எனப்படும் ஒரு வகையான மூளை தொந்திரவு அனேகமாக இதில் சிக்கி கொண்ட பலருக்கு ஏற்பட்டு இருப்பதை கண்டு வருகிறோம். ஆய்வுகளின் முடிவுகளும் மேற்கண்ட நோய் மற்றும் வயிறு மற்றும் சுவாச கோளாறுகள் மற்றும் கால் முட்டிகளில் கோளாறு போன்றவை பிரதானமாய் ஏற்படுவதாக தெரிவிக்கிறது. அடுத்ததாக இவை காலடி மண், நகம், உடுத்திய துணி போன்றவற்றை வைத்தும் செய்யப்படுவது உண்டு-முக்கியமாக ஆண் பெண் சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் இம்முறையில் செய்யப்படுகிறது.ஆகையால் தான் வெட்டிய நகத்தை கீழே போடக்கூடாது, மற்றும் முடி உதிரக்கூடாது அப்படியே உதிர்ந்தாலும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வெளியே சென்று வந்தால் கண்டிப்பாக கால்களை அலம்ப வேண்டும் எனவும் நம் முன்னோர்கள் கூறி வைத்தனர். தற்போது இவற்றை இளைய சமுதாயம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மலையாள மாந்த்ரீக முறைகளில் கடைபிடிக்கப்படும் யட்சிணி அல்லது சாத்தன் முறைகளில் நறுமண புகைகளின் மூலம் அவற்றை வசீகரித்து தேவைப்பட்ட மாந்த்ரீக காரியங்கள் சாதிக்கப்படுகின்றன . இதில் பல அதீத நுட்பங்களும் சூட்சுமங்களும் உண்டு. உதாரணமாக மரிகொளுந்து, சம்பங்கி போன்றவற்றை பரவ விடும் பொழுது அஷ்ட கர்மங்களில் ஒன்றான வசியம் எற்படுத்தபடுகிறது. ஆக்ரூஷனம், உச்சாடனம் மற்றும் வித்வேஷனங்கள் செய்ய சாம்பிராணியுடன்,குங்கிலியம் மற்றும் மிளகாய் சேர்த்து எரிக்கப்படுகிறது. தேவ கணங்களை வசீகரிக்க அரசன் குச்சிகள் எரிக்கப்படுகிறது. முக்கியமாக முதலில் எந்த முறைப்படி பாதிக்கப்பட்ட நபர் கட்டுண்டு உள்ளார் என்பதை அறிய முற்பட்டு பின்பு எத்தனை காலமாய் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து, அவரின் புற ஒளி தோற்றம் எதை குறிப்பிடுகிறது , உடலில் உள்ள சக்கரங்களின் நிலை எவ்வாறு உள்ளது என பார்த்து அதற்கேற்றவாறு தீர்வு கொடுப்பது சிறந்ததாக இருக்கும். மனித உடலில் மஹா சக்தியான தனஞ்செயன் எனப்படுகிற
(தச வாயுவில் ஒன்று) காற்றின் சக்தி ஒளியை வெளிப்படுத்துகிறது. இறந்த உடலை அழித்து மண்ணோடு கலக்கும் பொழுது வெளிவருவதும் இந்த தனஞ்செயன் என்கிற காற்று தான் என்கிறார் திருமூலர். தனஞ்செயன் தவிர மற்ற ஒன்பது வாயுக்களும் நம் உடலின் ஒன்பது நாடிகளுக்குள் சென்று செயலாற்றுகிறது,எதிர்மறை சக்திகள் மற்றும் ஏவல் போன்றவை நம் உடலில் மட்டும் இல்லாமல் நம் வசிப்பிடம் மற்றும் வசிப்பிடத்தில் உள்ள பழைய பொருட்கள், ஓடாத கடிகாரம், உபயோகமற்ற சாமான்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றிலும் படிந்திருப்பதை கண்டுள்ளோம். இதுவும் பெரியோர்கள் முன்பே சொல்லி வைத்த விஷயம் தான். பழையன கழித்தல் அவசியம் இருப்பின், புதியன நல்லன புகும் என்று.

மிகவும் கூட்டமான நெரிசல்களில் அடிக்கடி பயணம் செய்வோர், ரயில் மற்றும் கூட்டமான பேருந்தில் பயணம் செய்வோர், மருத்துவமனை, தியேட்டர் போன்றவற்றில் வேலை செய்வோர்களுக்கு 'Accidental Energy Transfer' எனப்படும் "தற்செயலாக உண்டாகும் எதிர்மறை சக்தியின்' பாதிப்புக்கள் இருக்கும்-பெரிய பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் இனம் தெரியாத பயம்,மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவை இவர்களை வாட்டி வரும். இவர்கள் அடிக்கடி 'ராக் சால்ட்' குளியல் செய்து வருவது அவசியம்.

நம் அனுபவத்தில் இவற்றை எல்லாம் வரும் முன் காத்து கொள்வது தான் சிறந்ததாக தெரிகிறது.

இடு மருந்து பாதிப்பு இருப்பதாய் தோன்றினால் காலையில் வெறும் வயிற்றில் சூடான சாதத்துடன் வெள்ளை பூசணியை சேர்த்து குழைய வேகவைத்து உப்பு காரம் எதுவும் சேர்க்காமல் உண்டு பார்க்கலாம். பாதிப்புகள் இருப்பின் வாந்தி வந்து வெளியேறும்-ஆனால் இது மிகவும் சாதாரண முறை தான்.

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண,

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989