Saturday, January 7, 2017

பஞ்சாட்சரம் மூன்று விதம்


பஞ்சாட்சரம் மூன்று விதம்


        
மூன்று  வித பஞ்சாட்சரம்

                                    ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

                                    சூட்சும பஞ்சாட்சரம் - சிவயநம

                                    காரணபஞ்சாட்சரம் - சிவ சிவ 

                       ஸ்தூல பஞ்சாட்சரம் - நமசிவய

நமசிவய” என்னும் ஸ்தூல பஞ்சாட்சரம் ஓம்கார பிரணவத்தோடு சேர்த்து “ஓம் நமசிவய” என்று உச்சரிப்பதே மரபாகும். சித்தர்கள் இம் மந்திரத்தை பஞ்சபூதங்களின் ஒருமித்த வெளிப்பாடகவே உணர்ந்தனர். இம் மந்திரத்தில் சித்தி அடைவதால் பஞ்சபூதங்கள் கட்டுப்படுவதொடு ஐம்பொறிகளும் நமது கட்டுக்குள் அடங்கி நிற்கும். பஞ்சபூதங்களில் இம் மந்திரத்தின் ஆளும் தன்மை

                                 ந – நிலத்தைக் குறிக்கிறது,
                                 ம – நீரைக் குறிக்கிறது,
                                 சி – நெருப்பைக் குறிக்கிறது,
                                 வ – காற்றைக் குறிக்கிறது,
                                 ய – ஆகாயத்தைக் குறிக்கிறது


ந - கிழக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, மஞ்சள் நிறம், கௌதம மகரிஷி

ம – தெற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, கருப்பு நிறம், அத்திரி மகரிஷி

சி – மேற்க்கு நோக்கிய முகத்திற்கு உரியது, புகையின் நிறம், விஸ்வாமித்ர மகரிஷி

வ – வடக்கு நோக்கிய முகத்திற்கு உரியது, பொன்னிறம், ஆங்கீரஸ மகரிஷி

 ய –மேல் நோக்கிய திருமுகத்திற்கு உரியது, சிவந்த நிறம், பரத்வாஜ மகரிஷி 


                               சூட்சும பஞ்சாட்சரம்

சிவய நம” என்பது சூட்சும பஞ்சாட்சரம் ஆகும். இம் மந்திரம் பிரணவத்தோடு சேர்த்து “ஓம் சிவய நம” என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களில் இருந்து ஓம் எனும் பிரணவம் உதித்தது. வாமதேவம் வடக்கு முகத்திலிருந்து ‘அ’ காரமும், சத்யோஜாதம் மேற்க்கு முகத்திலிருந்து ‘உ’ காரமும், அகோரம் தெற்கு முகத்திலிருந்து ‘ம’ காரமும், தத்புருஷம் கிழக்கு முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கமும், ஈசானம் மேல் நோக்கிய முகத்திலிருந்து நாதமான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ஓம் என்ற பிரணவத்தோடு சிவய நம சேர்ந்து முழுமையான மந்திரஸ்வரூபம் உருவானது.

அவ்வும், உவ்வும், மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே”

“சிவய நம என்று சிந்தித்திருப்போர்க்கு அபாயம் ஒரு நாளுமில்லையே”

திருவாய் பொலியச் சிவய நம என்று நீறணிந்தேன்தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே”

“சித்தம் ஒருங்கிச் சிவய நம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள் பெறலாமோ அறிவிலாப் பேதை நெஞ்சே...”

                           காரண பஞ்சாட்சரம்

 சிவ சிவ என்பது காரணப் பஞ்சாட்சரம் என வழங்கப்படும்.சிவ சிவ எனும் மந்திரம் நமது காரண சாரத்தில் உள்ள பிறப் பதிவுகளை நீக்க வல்லது என்பது ஞானியாரின் அழ்ந்த கருத்து. இந்த மந்திரத்தில் சாதாரண உலகின் ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்ட, ஞான நிலைக்கு ஒருவரை இட்டு செல்லக்கூடியது. ஆகையால் இந்த மந்திரத்தின் மூலமாக லவ்கீக லாபங்களை எதிர் பார்க்க முடியாது. அதாவது உலகியல் குறிகோள்களை பூர்த்தி செய்த ஒருவருக்கு (துறவு நெறி பூண்டவர்களும், மிக வயதானவர்களும்) இந்த மந்திரம் பொருத்தமானது.

             “சிவ சிவ என்றிடத் தீவினை மாலும்
              சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
              சிவ சிவ என்றிடத் தேவருமாவர்
             சிவ சிவ என்னச் சிவ கதி தானே”

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சித்தர்கள் சொன்ன வசியங்கள்


சித்தர்கள் சொன்ன வசியங்கள்

மேன்மை பொருந்திய சித்தர்கள் அனைவருமே, உலக மக்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக, யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகைக் காவியங்களை இயற்றித்தந்துள்ளனர். 

அந்த மாந்திரீக காவியத்தில் அட்டமாசித்துக்கள் என்ற பிரிவில், அட்டமா சித்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர். 
அவையாவன,

1. வசியம் :- 
இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல்.

2. மோகனம் :- 
இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல்.

3. ஸ்தம்பம் :- 
இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது.

4. உச்சாடனம் :- 
இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். 

5. ஆக்ருஷணம் :- 
இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது.

6. பேதனம் :- 
இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது.

7. வித்வேஷணம் :- 
இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது.

8. மாரணம் :- 
இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. 


இதிலே நாம் பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டுவகையாகப் பிரித்துள்ளனர். அது,
1.ஜன வசியம்.
2.ராஜ வசியம்.
3.புருஷ வசியம்.
4.ஸ்திரீ வசியம்.
5.மிருக வசியம்.
6.தேவ வசியம்.
7.சத்துரு வசியம்.
8.லோக வசியம்...ஆகியவை.

இப்படியான வசிய வேலைகளால் நாம் பிறரிடம் இருந்தோ, பிற ஜீவராசிகளிடமிருந்தோ பல நன்மைகளைப் பெற்று வாழலாம்.

அது மட்டுமல்ல இப்படி முயற்சி செய்து மேற்கொள்ளப் படும் வசியக் கலையை எந்தவொரு தவறான காரியங்களுக்கோ, மற்றவர் வாழ்வு அழிவிற்கோ பயன்படுத்தக் கூடாது. அதனால் வரும் கேடுகள் உடனடியாக இல்லாவிட்டாலும் அவரவர் காலத்திலேயே அனுபவிக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஆகவே...

வசியக் கலையை நமது நல்வழிக்காகவும், நாம் செல்லும் நல்வழிக்கு தடங்கல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தி, நாமும் வாழ்ந்து, மற்றவரையும் வாழ விடுவோம். 

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மாந்திரீக ரகசியங்கள்

மாந்திரீக ரகசியங்கள்

இறந்தவர்களின் ஆத்மாக்கள் வண்ணத்துப் பூச்சியினுள் புகுந்து இறப்பு ஏற்பட்ட நாளிலிருந்து கொஞ்ச காலம் வரை நம் வீட்டைச் சுற்றி வரும்.ஆகவே,மரணம் ஏற்பட்ட ஒரு வீட்டிற்குள் வண்ணத்துப்பூச்சி அடிக்கடி பறந்து வந்து கொண்டிருந்தால் அந்த வீட்டில் அந்த ஆன்மாக்களின் ஆசியால் சந்தோஷம்,சுபகாரிய நிகழ்வும்,தீர்க்காயுளும் உண்டாகும்.

சிங்கம்,புலி,கரடி ஆகிய கொடிய மிருகங்களின் பொம்மைகளை உங்களுடைய வீடுகளில் வைப்பதின் மூலம் எதிரிகளின் தொல்லை அடங்கும்.

தன்னைப்பற்றி பிறரிடம் சொல்வதன் மூலம் குறைந்து விடும் விஷயங்கள் இரண்டு. அவை பாவமும் புண்ணியமும்.
நாம் செய்யும் பாவங்களை நாமே பிறரிடம் கூறும் போது அதுவும் குறைந்து கொண்டே வரும்.

முறைப்படி மந்திரங்கள் ஓதி பிறர் மீது ஏவப்பட்ட செய்வினைக்கு 1008 நாட்கள் மட்டுமே சக்தி உண்டு.அதன் பிறகு அது செய்தவனையே திருப்பித்தாக்கும்.தான் செய்த வினையை தாமே அனுபவிப்பார்.

உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தால் கண்ணூறு தாக்கி இருப்பதாக உறுதி செய்து,உங்கள் வீடு முழுக்க உப்பு கலந்த நீரால் கழுவி விட்டால் கண்ணூரு போய்விடும்.

அடுக்கு அரளி,செம்பருத்தி பூக்களைக் கொண்டு பூஜை செய்வதினால் ஞானம் பெருகும்.தொழில் விருத்தியடையும்.

ஒரு பெண் கர்ப்பமான ஏழாவது மாதத்திலிருந்து அவள் குழந்தை பெற்ற முப்பதாவது நாள் வரை அவளது ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லுதல் கூடாது.

அன்னாச்சிப்பழம் ஓவியத்தை உங்கள் வீட்டில் சுவற்றிலோ அல்லது தொழிலகங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டம் தேடிவரும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பெண்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை:

பெண்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டியவை:
பெண்கள் உடலில் மூன்று இடங்களில் ஸ்ரீ லட்சுமி தேவி வாசம் செய்கிறார்.முதல் இடம் நெற்றி,இரண்டாவது மாங்கல்யம்.மூன்றாவது தலைமுடி வகிட்டின் ஆரம்பம்.
பெண்கள் தலையின் மத்தியில்,மூக்கு நுனிக்கு நேராகத் தான் வகிடு(உச்சி) எடுக்க வேண்டும்.
இம்மூன்று இடங்களிலும் குங்குமம் வைத்து ஸ்ரீ லட்சுமி தேவியை வணங்குவதை தினந்தோறும் அவசியம் செய்ய வேண்டும்.இந்த வழிபாடு அவர்களது மாங்கல்ய பலம் அதிகரிக்க செய்யும்.மேலும் லட்சுமி கடாட்சத்தை உண்டாக்கும்.
மாறாக நடுவில் வகிடு இல்லாமல் பக்கவாட்டில் ஆண்களைப் போல் எடுத்தால் லட்சுமி கடாட்சம் குறைந்து பெண்களும் பொருள் ஈட்டும் நிலை ஏற்படும்.
என் அனுபவத்தில் பக்கவாட்டு வகிடு எடுத்த பெண்கள் கணவனை பிரிந்தும்,இழந்தும்,உற்றார் உறவினர் ஆதரவின்றி வாழ்ந்து வருகின்றனர்.
அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தீட்டு தோஷம் விலக:

தீட்டு தோஷம் விலக:
சுபகாரியம் நடக்கும்போது அல்லது ஆலயத்திற்குள் செல்லும் போது தீட்டு(மாதவி லக்கு) பட்டு விட்டால் பெண்கள் நிலை குலைந்து மன வேதனை அடைகிறார்கள்.
அதற்குப் பரிகாரமாக எந்த கோவிலில் தீட்டு ஏற்பட்டதோ,அந்த கோவிலின் முன்பாக ஒரு கைப்பிடி மண் எடுத்து வந்து பாலில் கலந்து உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.மாதவிலக்கு நின்ற மறுநாள் இதை செய்யவும்.அதேபோல அபிசேகத்திற்கு 1 லிட்டர் பசும்பால் கோவிலுக்கு வாங்கி கொடுக்கவும்.இவ்வாறு செய்ய பெண்களுக்கு ஏற்படும் தீட்டு தோஷம் விலகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வேலை கிடைக்க மந்திரம்:

வேலை கிடைக்க மந்திரம்:
ஸ்ரீ லட்சுமி தாயார் கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 10 முறை செபிக்கவும்.வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி இலட்சுமி பூசை செய்து 108 முறை செபித்து வர விரைவில் வேலை கிடைக்கும்.
"ஸ்ரீ தேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா//
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ//
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலட்சுமீச சுந்தரி//"
வேலை கிடைக்க யந்திரத் தகடு,தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வசிய இடு மருந்து அறிவது எப்படி?

வசிய இடு மருந்து அறிவது எப்படி?
ஒருவர் வசிய இடு மருந்து வைத்து ஆண்களோ,பெண்களுக்கோ கொடுத்துவிட்டால் வைத்தவர் பேச்சை மட்டுமே கேட்டுக் கொண்டு அவருக்கு அடிமையாகி விடுவார்கள்.
இரண்டு விதமாக வசிய இடு மருந்துகள் கையாளப் படுகின்றன.
1)விஷத்தன்மையுள்ள மூலிகை மருந்து உருண்டைகள்
2)சுடுகாட்டு சாம்பல் வசிய உருண்டைகள்
அறிகுறிகள்:
இடு மருந்து உண்டவர்கள் தனது சுயசிந்தனையை இழந்து காணப்படுவார்கள்.
வயிற்று வலி,வயிற்று பொருமல்,வயிற்றுப் போக்கு,உடல் சோர்வு,பசியின்மை ஏற்படும்.
இதிலும் சுடுகாட்டு சாம்பல் மருந்து மிக மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
மனநிலை பாதிப்பை உண்டாக்கி பைத்தியமாக அலைய விட்டு விடும்.நல்லா வாக்கு சொல்லுவர்களை இந்த சாம்பலை வைத்து வாயை கட்டி வாக்கை முடக்கி விடுகிறார்கள்.கணவன் மனைவி கருத்து வேறுபாடு உண்டாகி பரிவினை ஏற்படும்.
உடலில் வசிய இடு மருந்து இருக்கும் வரை பெரிய முன்னேற்றமோ,ஆரோக்கியமோ இருக்காது,தொழில்,படிப்பில் அவர்கள் ஈடுபடுகிற எந்த காரியத்திலும் முன்னேற்றம் இருக்காது,உடலில் நோய்களை ஏற்படுத்தி மரணத்தை உண்டாகும்.வசிய இடு மருந்து முறிந்து வெளியேற ஜக்திஜா மூலிகை சூரணப் பொடி கிடைக்கும்.ஸ்ரீ காளி தேவி-7598758989