Tuesday, October 8, 2019

வெள்ளெருக்கு விநாயகர்


வெள்ளெருக்கு விநாயகர்:
சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது.
12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.
பல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும்.
வெள்ளெருக்கு விநாயகர்:
✫ வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நு}ல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையார; எத்தனை விதமாக இருந்தாலும் வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகருக்கே சக்தி அதிகம்.
✫ புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நு}ல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார;த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர;த்தம்.
✫ ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர;ந்துள்ளது என்றும் பார;க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.
✫ வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர; வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகரின் மகிமையை உணரலாம்.
✫ வெள்ளெருக்கு பட்டையை நு}லுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் ஏற்றினால் சகல பு+தங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வட வேரில் மணிமாலை செய்யலாம்.
✫ சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிப்பட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும். தன தான்யம் சேரும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்
ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||
இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து ஜெபித்து வர பதவி உயர்வு,வேலை வாய்ப்பு,குழந்தை பாக்கியம்,வீடு,வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.
மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம்,வேலை , பதவி உயர்வு,)இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Friday, July 5, 2019

சிவ மந்திரம்:


சிவ மந்திரம்:
 செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே. (85)
-அகத்தியர் பரிபாஷை திரட்டு 500
பொருள்: மகனே சிவனுடைய மந்திரத்தை சொல்கிறேன் கேள்,
தூய்மையான ஓர் இடத்தில் உடல், மன சுத்தியுடன் வடக்கு
நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.
"ஓம் தெங் கிலி வா செயஞ்கொள்ளப்பிரபஞ்சம் வாவா
ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா" என்று
நூற்றி எட்டு உரு செபித்தாயானால் நீ எந்த செயலை நோக்கி
செயல்பட்டாலும்அதற்கு துணையாக சிவன் வருவார் என்கிறார்
அகத்திய மாமுனிவர்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்:


முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்:
அதிகமான முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் அரச மரத்தின் வடக்குப் பக்கம் செல்லும் வேரில் ஒரு சிறு துண்டை வணங்கி எடுத்து ஒரு கருப்புத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் அந்த வேரை வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்படியாக வலி குறையும்.
தொடர்புக்கு 
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Monday, March 25, 2019

வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் பரிகாரம்


வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் பரிகாரம்:
வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நமது நாட்டின் பாரம்பரிய கலையான “வாஸ்து சாஸ்திரம்” போலவே சீன நாட்டினருக்கும் பாரம்பரிய கலையாக “பெங் ஷூயி” கலை இருக்கிறது. இந்த பெங் ஷூயி கலையில் இருக்கும் சிறப்பே, நமக்கு அதிக செலவில்லாமல், அனைவரும் எளிமையாக செய்ய கூடிய சில பரிகார முறைகள் இருப்பது தான். அந்த வகையில் நமக்கு தொடர்ந்து அதிர்ஷ்டங்கள் உண்டாகவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் இப்போது நம் நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது. மக்களில் பலரும் விண்ட் சைம்களை வாங்கி தங்கள் வீடுகளில் தொங்க விட்டுக்கொள்கின்றனர். சீன வாஸ்து பரிகார முறையாக இந்த விண்ட் சைம்கள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிறு, சிறு மணிகள் கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி எழுப்பும் வகையில், இதை உபயோகப்படுத்தியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

Tuesday, November 13, 2018

வீரபத்திரர்


வீரபத்திரர்:
வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும
் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.
வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.
திருச்செந்தூர்ப் புராணத்தில்

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு

வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர் நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய

வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”

"மரகத மணிநீலம் கிண்கிணீ ஜாலபத்தம்

ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி நேத்ரம் … சூல தண்டோக்ர ஹஸ்தம்

விருதல மஹிபூஷம் வீரபத்ரம் நமாமி"

என்று வீரபத்திரர் பற்றிய ஒரு தியானஸ்லோகம் சொல்கிறது.

வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும் தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.

இங்கே தான் வீரபத்திரரும் காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.
தோற்றம்[தொகு]
சதி என்கிற தாட்சாயினி தட்சனின் இளைய மகளாவாள். சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார். இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.

வீரபத்திரரின் வழிவந்தவர்கள் மற்றும் அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கபடுவார்கள். வீரமுட்டிகள் தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .வீரபத்திரசுவாமி வண்ணார்களின் தெய்வமாக வணங்கப்படுகிறது.
மந்திரம்:
" ஓம் காளி தெட்ஷணாமூர்த்தி அகோர வீரபத்திராயா அறு அறு நாசய நாசய சிங்ங வங்ங ஸ்ரீயும் நம சத்துரு படு படு கிரி கிரி கேர கேர சிவா".
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்:
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com

வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்


வீட்டில் செல்வம் சேரத் தாந்த்ரீக ரகசியம்:
ஒரு சிறிய மண்பானை வாங்கி அதைப் பன்னீரும் தண்ணீரும்கலந்த கலவையால் கழுவிப் பின் அதில் கொஞ்சம் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைப் போட்டுக் கொஞ்சம் முனை மழுங்காத பட்டை தீட்டப்படாத பச்சரிசி அல்லது கோதுமையைப் போட்டுச் சிகப்புப் பட்டுத் துணியால் பானையின் வாயை மூடி அதை ஒரு வெண்பட்டு நூலால் கட்டி விடவும்.இதை வீட்டின் வடமேற்கு மூலையில் ஒரு பலகை போட்டு அல்லது ஒரு ஸ்டேண்ட் அடித்து அதில் வைத்து விடவும்.சிறிது காலத்தில் செல்வம் பெருகத் துவங்கும்.இதை வீட்டினர் தவிர வெளியில் யாரிடமும் சொல்லாமல் செய்யவும்.நல்ல பலன் கண்ட பின்னரே பிறரிடம் சொல்லவேண்டும்.
இதைச் செய்ய வசதியற்றவர்கள் ஒரு கலசத்தில் மூன்று புண்ணிய நதிகளின் தீர்த்தத்தை ஊற்றி வடகிழக்குத் திசையில் வைக்கலாம்.
.............................................................................................
செல்வம்,பண வசியம்:
பணம் முடக்கம்,லட்சுமி கட்டு,எவ்வளவு பணம் வந்தாலும் சேமிப்பு இல்லாமை,வீண் விரயங்கள் ஏற்படுதல் நீங்கி பண வரவு உண்டாக பணம்(தனம்) வசியம்,தன வசிய மை,லட்சுமி கடாட்சம் உண்டாக தனம்,செல்வம் வசிய யந்திரத்தகடுகள்,மற்றும் பரிகார பொருட்கள் செய்து தரப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com