Monday, March 2, 2020

சுகப் பிரசவத்திற்கு மந்திரம்:


சுகப் பிரசவத்திற்கு மந்திரம்:

விளக்கேற்றி அமர்ந்து கீழ்க்காணும் மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து வர சுகப்பிரசவம் ஆகும்.ஜெபித்து முடித்தபின் விளக்கின் மேல் வலது கையை மூன்று முறை சுற்றி அதே கைகொண்டு வயிற்றையும் மூன்று முறை சுற்றித் தடவவும்.

மந்திரம்:-

ஹே | சங்கர ஸ்மரஹர பிரமதாதீ நாத|
மன்னாத சாம்ப சசிசூடஹர த்ரிசூலினி ||
சம்போ சுகப்ரசவக்ருத் பாவமே தயாசோ|
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே ||
மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தானா மிஷ்டதாயக|
சுகந்தி குந்தளா நாவஹ சுகப்ரசவ ம்ருச்சது||
ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷனி
தஸ்ய ஸ்மரண மாத்ரேன விசல்யா கர்ப்பிணி பவேத்|

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Friday, February 14, 2020

சர்வ மங்கலங்களும் தரும் மாவிளக்கு விரத வழிபாடு


சர்வ மங்கலங்களும் தரும் மாவிளக்கு விரத வழிபாடு:

மாவிளக்கு வழிபாடு என்பது இன்றளவும், விரதம் இருந்து அம்மன் ஆலயங்களில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வேண்டி செய்யும் முக்கிய பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

Wednesday, January 22, 2020

பிரச்சினைகளை தீர்க்கும் நவரத்தினங்கள்



பிரச்சினைகளை தீர்க்கும் நவரத்தினங்கள்:
பூமித் தாய் எல்லையற்ற கருணை உள்ளம் படைத்தவள்! தன் மக்கள் நீடித்த ஆரோக்கியத்துடனும் மன நிம்மதியுடனும் பூரணமாக நூறு ஆண்டுகள் வாழ என்னென்ன தர வேண்டுமோ அனைத்தையும் தந்து அவள் அருளியுள்ளாள். இப்படிப்பட்ட அரிய பூமியில் அரிய பிறப்பான மனிதப் பிறப்பை எடுத்துள்ள மனிதர்களுக்கு வெவ்வேறு விதமான பிரச்சினைகள்.இவற்றிற்கு அவரவர் அறிவுக்கு தக்க அவரவர் வழியில் தீர்வு காண்கின்றனர்.
மனம் கனிந்த அன்னை சரியான வழியைக் காட்ட மகான்களையும், சித்தர்களையும் உலவ விட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழி காண்பிக்கவே அவை பல சாஸ்திரங்களாக - அற நூல்களாக வடிவம் எடுத்தன.
அவற்றுள் ஒன்று தாதுப் பொருள்களைப் பற்றிய சாஸ்திரம். இதன் முக்கியப்பகுதி நவரத்தினங்களைப் பற்றியது. மணி என்று சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது இது. மூன்று முக்கிய சாஸ்திரங்களுள் முக்கியமானது மணிகள் பற்றியதாகும்.
ஆபத்துக் காலங்களிலும் அனைத்து சமயங்களிலும் உதவுவது மணி மந்திர ஒளஷதமே என்று மேலோர் குறிப்பிடுவர். மணி என்பதில் சோதிடம், வைத்தியம், வாஸ்து, எண் கணிதம், பக்தி எனப்படும் இறையருள் பெறும் துதி செய்தல் உள்ளிட்ட அனைத்துக் கலைகளும் இணைகின்றன. மினரல் எனப்படும் தாது பொருள்களை கணக்கி அடங்காத அளவில் பூமித்தாய் தந்திருக்கிறாள். அவற்றில் 300 அரிய தாதுக்களை அறிஞர்கள் இனம் கண்டுள்ளனர்; அவற்றின் அரிய பயன்களைச் சொல்லி வருகின்றனர்.
இந்த முன்னூறில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்டவற்றை அரிதான மணிகள் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த எண்பதில் ஒன்பது மணிகளை உலகில் உள்ள அனைத்து பழைய நாகரிகங்களும் - உச்சி மேல் வைத்துக் கொண்டாடுகின்றன. ஒன்பது மணிகளை நவரத்தினங்கள் என்று சந்தோஷத்துடன் குறிப்பிடுகிறோம். ஏனையவை உபரத்தினங்கள் எனப்படும். வணிக நோக்கில் இவை ராசிக் கற்கள் என்ற பெயரைப் பெறுகின்றன.
அவையாவன :
1. மாணிக்கம் 2. முத்து - 3.பவளம் 4.மரகதம் -5. புஷ்பராகம் - 6.வைரம் -7.நீலக்கல் 8.கோமேதகம் -9.வைடூரியம் - கருட புராணம், சரக சம்ஹிதை, ஜோதிட சாஸ்திரம் உள்ளிட்ட நூல்கள் ஒவ்வொரு ரத்தினத்தின் பயனையும் தன்மையையும் விரிவாக விளக்குகின்றன.இவை பிரமிப்பை ஊட்டுபவை; ஏனெனில் இன்று அறிவியல் பல நவீன சாதனங்களின் உதவியால் கூறுபவற்றை அவை தீர்க்கமாக துல்லியமாகப் பல்லாண்டுகளுக்கு முன்பேயே குறிப்பிட்டிருப்பதால் தான் இந்த பிரமிப்பு.
ஆயுள் நீட்டிக்க ரத்தினக் கற்களை அணிக என்று ஆணையிடுகிறார் சரகர். தேர்ந்த மருத்துவரான இவர் நூறு வயது வாழ்வதற்கான வழிகளைத் தெள்ளத் தெளிவாக தனது சரக சம்ஹிதை நூலில் விளக்குகிறார். அதே நூலில் வெளியில் கிளம்பும் போது - ரத்தினக் கற்களைத் தொடாமல் (அணியாமல்) செல்லக் கூடாது. பெரியோர்களின் பாதங்களைத் தொடாமல் செல்லக் கூடாது.
நெய், நல்ல மங்களகரமான பொருள்கள், மலர்கள் இவற் றைத் தொடாமல் செல்லக் கூடாது. வணக்கத்திற்குரிய பெரியோர்கள், பூசிக்கப்படும் பொருள்கள் ஆகி யவை வலப்புறம் இருக்கும்படியும், சிறியவர்கள் இடப்புறம் இருக்கும் படியாகவும் உள்ள நிலையில் கிளம்ப வேண்டும். (அதாவது பூஜை செய்த பின் பெரியோர்களை வலமாகச் சுற்றிக் கிளம்ப வேண்டும்.)
இதை அடுத்து, அடுத்த சுலோகத்தில் ரத்தினக் கற்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். ரத்னக் கற்களை கைகளில் அணியாமலோ, குளிக்காமலோ சாப்பிடக் கூடாது என்று வலியுறுத்தும் அவர் மூலிகைகளை உடலிலே தரிக்குமாறும் அறிவுறுத்துகிறார். உலகில் உள்ள 750 கோடிப் பேர்களில் ஒருவர் போல ஒருவர் இல்லை. கை ரேகை தனி; கண்ணின் கரு விழித்திரை தனி. மரபணு தனி. அவர்களது ஆசையும் விருப்பமும் தேவையும் தனித் தனி தான்! உடல் வியாதிகளும், உள்ள மகிழ்ச்சிகளும் தனித் தனி தான்!
இந்த அடிப்படையில் நவ ரத்தினங்களை அலசுவோம்:
மாணிக்கம் உஷ்ண அலைகளை வெளிப்படுத்துகிறது. குளிர்ச்சி சம்பந்தமான வியாதிகளைப் போக்க வல்லது. ரத்த சோகை, குளிர், ஜன்னி முதலானவற்றை உடனே குணப்படுத்தும். முத்து மன சம்பந்தமான அனைத்து நோய்களையும் தீர்க்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பவளம் பக்கவாத நோயைக் குணப்படுத்தும். வயிறுக் கோளாறுகள், மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றைப் போக்கும்.
மரகதம் பில்லி சூனியத்தை நீக்கும். துர்தேவதைகளை விலகச் செய்யும். புஷ்பராகம் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தை நீக்கி புத்திர பாக்கியத்தைத் தரும்; மலடை நீக்கும். வைரம் குடும்ப ஒற்றுமையை ஓங்கச் செய்யும். கலைகளில் வல்லவராக்கும். குறிப்பாக நாட்டியம், நடிப்பு, சினிமா துறையில் உள்ளோர் அணிய வேண்டிய கல் இது. வாயு, பித்தம், கபம் ஆகிய மூன்றின் தோஷங்களை நீக்க வல்லது.
நீலக்கல், ஜல நீலம் மற்றும் இந்திர நீலம் என இது இரு வகைப்படும். தோல் நோய்களைப் போக்கும். தொழு நோய் உடையவர்கள் கூட இதை அணிந்து நலம் பெறலாம்.
கோமேதகம் பசியைத் தூண்டி ஜீரண சக்தியை அதிகரிக்கும். வைடூரியம் வாழ்வில் ஏற்படும் பெருந்துன்பங்களிலிருந்து காக்க வல்லது. இப்படிப்பட்ட ரத்தினங்களை ஜோதிட சாஸ்திரம் ஆதரிக்கிறது; அணிந்து பயன் பெறுமாறு அறிவுறுத்துகிறது. கற்களுக்கும் கிரகங்களுக்கும் உள்ள தொடர்பை ஜோதிட நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன.
சூரியன்-மாணிக்கம், சந்திரன்-முத்து, செவ்வாய்-பவளம்,
புதன்-மரகதம், குரு-புஷ்பராகம், சுக்ரன்-வைரம்
சனி-நீலக்கல், ராகு-கோமேதகம், கேது-வைடூரியம்
ஆக நவ மணிகளும் கிரக தோஷங்களைப் போக்க வல்லவை.
ரத்தினங்களைத் தேர்ந்தெடுப்பது ஒரு தனிக் கலை.
‘அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட கல்லை அணிந்தேன்; ஆனால் நல்லது நடக்கவில்லை; மாறாக நிலைமை மோசமானது’ என்று ஒருவர் சொன்னால் அது பொய்யாக இருக்காது. அவர் அணிந்திருந்த கல் உண்மையான, தோஷமற்ற கல்லா என்பதை ஆராய வேண்டும். ஆம், கற்களில் உள்ள தோஷங்கள் பல. அதுவும் இன்றைய அறிவியல் உலகில் செயற்கையாகச் செய்யப்படும் “கற்களை” அதிகப் பணம் கொடுத்து வாங்கி அணிந்து பயன் இல்லாதது மட்டுமன்றி இன்னும் அதிகக் கெடுதல் ஏற்பட்டால் மனம் நோவது இயற்கை தானே!
சாஸ்திரத்தைப் பழிக்காமல் அதைத் தந்த சதிகாரர்களைத் தான் பழிக்க வேண்டும்! ஆகவே எச்சரிக்கையுடன் இந்தக் கலையை அணுக வேண்டும். எல்லாத் துறைகளிலும் போலி கள் உள்ளனர் - அறிவியல் துறை உட்பட! ஆகவே முதலில் தினமும் சிறிது நேரம் இந்தக் கலைக்கு நேரம் ஒதுக்கி இதைப் பற்றிய அடிப்படை அறிவைப் பெற வேண்டும். அட, டி.வி. சீரியலுக்கு ஒதுக்கும் நேரத்தில் பத்தில் ஒரு பங்கு ஒதுக்கினால் கூட போதும், வாழ்க்கை வளம் பெற உதவும் கற்களைத் தேர்ந்தெடுத்து விடலாம். இது உண்மை, வெறும் புகழ்ச்சி இல்லை.
கற்க கசடறக் கற்க இந்தக் கலையை; பின் அணிக அதற்குத் தக என்பது தான் நமக்கு உரித்தான சூத்திரம்.
சூஷ்மத்தைப் புரிந்து கொண்டால் வெற்றி தான் பெறுவோம்!
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Tuesday, October 8, 2019

வெள்ளெருக்கு விநாயகர்


வெள்ளெருக்கு விநாயகர்:
சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது.
12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.
பல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும்.
வெள்ளெருக்கு விநாயகர்:
✫ வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நு}ல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையார; எத்தனை விதமாக இருந்தாலும் வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகருக்கே சக்தி அதிகம்.
✫ புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நு}ல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார;த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர;த்தம்.
✫ ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர;ந்துள்ளது என்றும் பார;க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.
✫ வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர; வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகரின் மகிமையை உணரலாம்.
✫ வெள்ளெருக்கு பட்டையை நு}லுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் ஏற்றினால் சகல பு+தங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வட வேரில் மணிமாலை செய்யலாம்.
✫ சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிப்பட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும். தன தான்யம் சேரும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்
ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||
இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து ஜெபித்து வர பதவி உயர்வு,வேலை வாய்ப்பு,குழந்தை பாக்கியம்,வீடு,வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.
மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம்,வேலை , பதவி உயர்வு,)இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Friday, July 5, 2019

சிவ மந்திரம்:


சிவ மந்திரம்:
 செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே. (85)
-அகத்தியர் பரிபாஷை திரட்டு 500
பொருள்: மகனே சிவனுடைய மந்திரத்தை சொல்கிறேன் கேள்,
தூய்மையான ஓர் இடத்தில் உடல், மன சுத்தியுடன் வடக்கு
நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.
"ஓம் தெங் கிலி வா செயஞ்கொள்ளப்பிரபஞ்சம் வாவா
ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா" என்று
நூற்றி எட்டு உரு செபித்தாயானால் நீ எந்த செயலை நோக்கி
செயல்பட்டாலும்அதற்கு துணையாக சிவன் வருவார் என்கிறார்
அகத்திய மாமுனிவர்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்:


முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்:
அதிகமான முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் அரச மரத்தின் வடக்குப் பக்கம் செல்லும் வேரில் ஒரு சிறு துண்டை வணங்கி எடுத்து ஒரு கருப்புத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் அந்த வேரை வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்படியாக வலி குறையும்.
தொடர்புக்கு 
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989