Thursday, February 9, 2017

அரி சக்கர கட்டு மந்திரம்




அரி சக்கர கட்டு மந்திரம்
ஓம் அரி அரி சக்கரம் அறவுளி சக்கரம் எரி எரி சக்கரம் எதிரேறு சக்கரம் திரி
திரி சக்கரம் சிவன் கொடுத்த சக்கரம் ஐம்பத்தோர் அட்ஷரத்துக்கும் உயிர்
கொடுத்த சக்கரம் பெருமாள் கையில் பேர் பிறந்த சக்கரம் ஓடாத பேய்களை
ஓட்டிவிக்கும் சக்கரம் ஆடாத பேய்களை ஆட்டுவிக்கும் சக்கரம் கல்லற
கருவற கருவாளன் தடையற வில்லற விசையற வேடன் சொல்லற சூலம்
அறச்சொன்னவன் நாவற கன்னி நூத்த நூலெடுத்து கருங்கொடியில் செய்து
வைத்தனாகிலும் ஓதி வைத்து உரத்த பார்வை செய்து வைத்தானாகிலும் ஓம்
ஆம் என்று ஆனை அடியிற் புதைத்தானாகிலும் அந்தியில் தடுத்தவன்
அசைவை முறி சிலையிற் தடுத்தவன் சிரசை அறு உச்சியில் தடுத்தவன்
உயிரைக்கொல்லு அருக்கன் முருக்கன் சந்தி வயிரவன் குமாரன் கரு
நாவுடையான் ஆணை கட்டு கட்டவே சிவாகா
என்று சொல்லி காய் வெட்டி நூல் கட்டவும்
கரு நாவுடையான் ஆணை அறு முறி தெறி படு அறுபட்டு தடையற முறியவே சிவாகா
சித்தி செய்ய 1008 முறை உரு செய்து பயன் படுத்தவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

லக்ஷ்மி மூலிகை தூப பொடி

கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை விரட்ட ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி'':
"கல்லடி பட்டாலும் படலாம் ஆனால் கண்ணடி படக்கூடாது" என்பது முன்னோர் வாக்கு. ஒருவர் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்ந்தால் அவரை சுற்றி வாழும் சுற்றத்தார்க்கு மனதுக்குள் ஒரு பொறாமை தீ கொழுந்துவிட்டு எரிய தொடங்கிவிடும். இதைத்தான் பொறாமை, பொல்லாப்பு, வயிற்றெரிச்சல் என்பர். இத்தகைய துர் எண்ணங்களோடு, பொறாமையோடு பிறர் நம்மை பார்ப்பதையே கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். தீங்கை உண்டாக்கும் ஒருவரது பார்வைக்கு கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமல் என்று பெயர். கண்திருஷ்டி, கண்ணேறு, ஓமலால் முகத்தில் கருஞ்சிவப்பாய் படர் தாமரை உண்டாக்கும், கண்திருஷ்டியினால் உடலில் வியாதிகள், சுகவீனம் உண்டாகும். குடும்பத்தில் மனநிம்மதியின்மை, வீண் குழப்பங்கள், சண்டை - சச்சரவுகள், தேவையற்ற வம்பு - வழக்குகள், தொழிலில் குழப்பங்கள், வியாபாரத்தில் நலிவு - நஷ்டங்கள் - கடன்கள் உண்டாகுதல் முதலிய துன்பங்கள் உண்டாகும்.

ஏவல் பில்லி சூன்யம் செய்வதில் பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.
1. காலடி மண் :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.
2.சுடுகாட்டு சாம்பல் :
ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.
3.முட்டை :
ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.
4.எந்திர தகடு :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.
5.சுண்ணாம்பு :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.
6.எலுமிச்சை :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.
7. மந்திர பாவை (பொம்மை) :
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.
ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.
மேலே கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளை பற்றி விரிவாக பார்த்தோம். கண்திருஷ்டி, காற்று, கருப்பு, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை, துஷ்டசக்திகளின் பாதிப்புகள் நீங்கி நம் இல்லங்களில் அமைதியும் மகிழ்ச்சியும், மனநிம்மதியும், லட்சுமிகடாச்சமும், அதிஷ்டமும் உண்டாக உபயோகிப்பீர் ''லக்ஷ்மி மூலிகை தூப பொடி''.
'லக்ஷ்மி மூலிகை தூப பொடி'' கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Monday, February 6, 2017

பகை விலகி பாசம் கூடுதலாகக் கிடைக்க பரிகாரம்

பகை விலகி பாசம் கூடுதலாகக் கிடைக்க பரிகாரம்

தாய்வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா, போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்க ஒரு எளிய வழி இருக்கிறது.
ஒரு சிலர் பெற்றோரிடம் அதிகப்பாசம் வைத்திருப்பர். ஒரு சிலருக்கு பெற்றோர்களின் பாசம் கிடைக்காது. தன்னைவிடத் தன் சகோதரர்கள் மீது அதிக பாசம் காட்டுகிறார்களே என்று ஆதங்கப்படுபவர்கள் பலருண்டு. தாய்வழி மற்றும் மாமன் மற்றும் சித்தி, சித்தப்பா, போன்றவர்களின் உறவில் விரிசல் ஏற்பட்டால் அவர்கள் ஒற்றுமையாக இருக்கவும், உதவிக்கரம் நீட்டவும் ஒரு எளிய வழி இருக்கிறது.

பவுர்ணமி அன்று காலை நேரத்தில் விரதமிருந்து கன்றுள்ள பசுவிற்கு கீரை, வைக்கோல் போன்ற உணவுகளைக் கொடுத்து வாலைத் தொட்டு வழிபடுவது நல்லது. அல்லது பசுவும், கன்றும் உருவமுள்ள பொம்மைகள், படங்களை வீட்டில் வைத்து கோமாதாவை கும்பிட்டு வழிபாடு செய்யலாம்.
சந்திர ஓரையில் வெள்ளை வண்ணப் பொருட்களை தானம் கொடுக்கலாம். இதனால் தாய் மட்டுமல்ல, தாய்வழி உறவினர்கள் எல்லோருடைய பாசமும் கூடும். நேசமும் கூடும். உறவினர் பகை அகலும். 
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தோஷம், பிரச்சனைகள் தீர அனுமனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

தோஷம், பிரச்சனைகள் தீர அனுமனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்கள்

தோஷம் மற்றும் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் துன்பம் நீங்க அனுமனுக்கு செய்ய வேண்டிய பரிகாரங்களையும், வழிபாகளையும் கீழே விரிவாக பார்க்கலாம்.
வெண்ணெய் வழிபாடு :

வெண்ணெய் சாத்தி ஆஞ்சநேயரை வழிபடுவது விசேஷம். வெண்ணெய் எப்படி உருகுகிறதோ, அதைப்போல ராமநாம ஜெயத்தால் அவர் உள்ளம் உருகுகிறார். வெண்ணெய் குளிர்ச்சி தருவதாகும். போர்க்காலத்திலே வீர அனுமான் பாறைகளையும், மலைகளையும், பெயர்த்து எடுத்து கடும் போர் செய்தார். இதனால் அவரது உடலுக்கு குளிர்ச்சி ஏற்படுவதற்காகவே வெண்ணெய் சாத்தி வழிபடுகிறோம். 

நவக்கிரக தோஷம் போக்கும் அனுமன் :

அனுமனின் வாலில் நவக்கிரகங்கள் ஐக்கியமாகி உள்ளன. அதனால் நவக்கிரக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவரை வழிபட்டால் பலன் கிடைக்கும். மாதந்தோறும் மூலநட்சத்திரத்திலும், அமாவாசை திதியிலும் வழிபட்டு பலன் பெறலாம். வெற்றிலைமாலை, துளசி மாலை, வடைமாலை, எலுமிச்சை மாலை ஆகியன சாற்றி வழிபட்டால் நம் துன்பங்கள் பனிபோல் விலகும். 

வடைமாலை சாத்துவது ஏன்?


அனுமனுக்கு வடைமாலை சாத்தி வழிபடுவதை பார்த்து இருக்கிறோம். போர்க்களத்தில் கொழுப்பு நிறைந்த அரக்கர்களையும் தமது உடல் வலிமையால் வடைதட்டுவது போல் தட்டி துவம்சம் செய்தவர் ஆஞ்சநேயர். அதனால் தான் கொழுப்பு சத்து நிறைந்த உளுந்தைச்சேர்த்து அவருக்கு வடை மாலையாக கோர்த்து அணிவிக்கின்றனர். சீதாதேவி பரிசாக வழங்கிய முத்துமாலையை சுவைத்து அதில் ராமசுகம் இருக்கிறதா? என்று பார்த்து பிய்த்து எறிந்தவர்அனுமன். அது போலவே கழுத்தில் அணிவிக்கப்பட்ட வடை மாலையையும் அவர் சுவைத்து பார்ப்பதாக ஐதீகம். 

வெற்றிலை மாலை :

இலங்கையில் ராமனுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடைபெற்றபோது அரக்கர்களை பந்தாடி போர்க்களத்தில் வெற்றிக்கொடி நாட்டியவர் அனுமன். அதனால் தான் அவருக்கு கொடியிலேயே வளரும் வெற்றிலையை மாலையாக போடுகிறார்கள். இலங்கையில் அசோகவனத்தில் சீதாபிராட்டியார் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தபோது ராமதூதனாக சென்ற அனுமன், சீதையை சந்தித்து ராமர் விரைவில் இலங்கை வந்து உங்களை சிறை மீட்டு செல்வார் என்று கூறினார். 

இதைக்கேட்டு மகிழ்ந்து போன சீதை அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து வெற்றிலையைப்பறித்து அனுமனின் சிரசில் போட்டு சிரஞ்சீவியாக இருப்பாயென்று கூறி ஆசி வழங்கினார். இதை நினைவு கூரும் வகையில் வாழ்க்கையில்வெற்றி பெற வேண்டி அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவிக்கின்றனர். 

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

விரைவில் பலன் தரும் எளிய பரிகாரங்கள்

விரைவில் பலன் தரும் எளிய பரிகாரங்கள்

பல்வேறு பிரச்சனைகள் விரைவில் பலன் தரக்கூடிய எளிய பரிகாரங்கள் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை பயன்படுத்தி பலன் பெறுங்கள்.
(1) வேலை கிடைக்க சிரமம் ஏற்பட்டு வந்தால் தினசரி காலை சூரிய உதய நேரத்தில் சூரியனுக்கு கடுகு எண்ணெய் சிறிது ஊற்றி வர தகுந்த வேலை கிடைக்கும். இதை 41 நாட்கள் செய்ய வேண்டும். (சூரியனை பார்த்த படி வேண்டி கொண்டு கீழே விடலாம்)

(2) ஜாதகத்தில் ராகுவினால் ஏதும் தொல்லைகள் இருந்து வந்தால் சனிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் எளியோருக்கு மின் சாதன உபகரணங்கள் தானம் செய்ய, நிலை மாறும்.

(3) பிரச்சனைகளுக்கு வழியே தெரியாமல் குழப்பமான சூழ்நிலை இருந்து வந்தால் உடனடி மிருதியுஞ்செய ஜெபம் 108 முறை பாராயணம் செய்ய, தீர்வு கிடைக்கும்.

(4) வீட்டில் தந்தை மகன் இருவருக்கும் கஷ்டமான சூழ்நிலை/காலம் நடந்து வந்தால் வருடத்திற்கு நான்கு முறையாவது மான்களுக்கு உணவு மற்றும் நீர் வழங்கி வர மேன்மை உண்டாகும். நிரூபிக்கப்பட்ட முறை இது.

(5) தடைகள் அதிகமாக இருந்து கொண்டே இருப்பின் யானைக்கு பேரீச்சம்பழம் கலந்த சாதம் கொடுத்து வர உடனடி தடைகள் விலகுவதை காணலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வம் பெருக எளிய பலன்தரும் பரிகாரம்

செல்வம் பெருக எளிய பலன்தரும் பரிகாரம்
யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. செல்வம் பெருக கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த குபேர யந்திரத்தை பயன்படுத்தி விரைவில் நல்ல பலனை காணலாம்.

யந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை. பல பெரிய, நடக்க முடியாத விஷயங்களுக்கெல்லாம் முற்காலத்தில் யந்திரங்கள் உபயோகித்து பயன் அடைந்துள்ளனர். இதில் மிக எளிய அனைவரும் வீட்டிலேயே பின்பற்ற கூடிய, அதுவும் ஐப்பசி மாதம் தொடங்க வேண்டிய ஒரு சுலப தன ஆகர்ஷன முறையை பார்க்கலாம். குபேரர் உருவம் அல்லது படம் வைத்து செய்வது மிக சிறப்பு. (சீனத்து சிரிக்கும் குபேரர் சிலை அல்ல)  
கீழே கொடுக்கப்பட்டுள்ள குபேர யந்திரத்தை அரிசி மாவினால் பூஜை அறையில் வரைந்து கொள்ளவும். பின்பு ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு-ஒரு ரூபாய் நாணயத்தை வைக்கவும். நாணயத்தின் மேல் ஒரு சிகப்பு ஒரு வெள்ளை பூவையும் வைக்கவும். கோலத்தின் முன் சுத்தமான நெய் தீபம் மண் அகலில் ஏற்றவும். இதை வடக்கு திசையில் செய்தால் சிறப்பு-அல்லது பூஜை அறையில் செய்யலாம். 

விளக்கேற்றியதும் கீழ் கண்ட குபேர மந்திரத்தை 11 முறை கூறி வழிபடவும். பின்பு நிவேதனம் செய்து பூஜையை முடித்து கொள்ளலாம். விளக்கு அணைந்ததும் 9 நாணயங்களையும் எடுத்து தனியாக வைத்து கொள்ளவும். மறுநாள் அதே நாணயத்தை உபயோகிக்கலாம். இதை ஐப்பசி மாதம் முழுவதும் செய்து வர, குபேரர் நம் அனைத்து பண தேவைகளையும் நிறைவேற்றி செல்வ செழிப்போடு வாழ வைப்பார். மேலும் ஐப்பசி மாதம் முடிந்ததும் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் மற்றும் வெள்ளியிலும் இதை செய்யலாம். தங்களால் முடிந்த நேரத்திலும் செய்யலாம்.


மந்திரம் : 

ஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம் 
ஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம் 
க்லீம் விட்டேஸ்வராய நமஹ 

குபேர எண்யந்திரம் கிடைக்கும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, February 4, 2017

பணத் தேவைகள் பூர்த்தியாக:

பணத் தேவைகள் பூர்த்தியாக:
இந்த பரிகாரத்தை தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் செய்ய வேண்டும்.முதல் நாள் இரவில் கையளவு கருப்பு உளுந்தை எடுத்து தயிரில் ஊற வைக்கவும்.மறுநாள் காலையில் அதனுடன் வெல்லத்தை சேர்த்து அரச மரத்தின் அடியில் இட்டு விட்டுக்கு திரும்பி பார்க்காமல் வரவும்.இதனை மதியம் 12 மணிக்குள் செய்து விடவும்.இவ்வாறு 8 சனிக்கிழமைகள் செய்து முடிக்க நீங்கள் எதிர்பார்க்கும் பணத் தேவைகள் பூர்த்தியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989