Saturday, April 1, 2017

பீஜத்ரயாத்மிக ஸ்ரீ த்ரிபுரபைரவி மந்திரம்

பீஜத்ரயாத்மிக ஸ்ரீ த்ரிபுரபைரவி மந்திரம்


தசமஹாவித்யா என்ற 10 பெரும்தேவியரில் ஸ்ரீ த்ரிபுரபைரவி தேவியும் ஒரு சக்தி.தசமஹாவித்யா தேவியரில் விரைவான பலன்களைத் தருபவள் ஸ்ரீ திரிபுர பைரவியே.ஆன்மீக உயர்வு மட்டுமின்றி லௌகீக வாழ்வுக்கும் வறுமை,எதிர்ப்புகள் நீக்கி வளம் சேர்ப்பது இவள் வழிபாடு .ஸ்ரீ த்ரிபுரபைரவி எதிரிகள் தன் பக்தர்களுக்குத் துன்பம் செய்யாமல் தடுப்பதோடு அவர்களைத் தூரமாய்த் தள்ளி வைப்பவள்.மேலும் வளம்,புகழ்,வாழ்வில் நல்ல நிலையை அருள்பவள்.

ஏதேனும் ஒரு நல்ல நாளில் இரவு 10 மணி அல்லது அதற்கு மேல் இந்த மந்திர ஜபத்தைத் துவங்கலாம். குளித்து முடித்து சிகப்பு நிற ஆடை அணிந்து சிகப்புக் கம்பளம் அல்லது சிகப்புத் துணியில் வடக்கு முகமாக அமர்ந்துஜெபிக்கவும்.
ஜப எண்ணிக்கை 2500 ஐத் தாண்டிய பின் பலன் தரத்துவங்கும்.21000 உரு ஜெபித்தால் மந்திரம் முழுமையாகச் சித்தியாகும்.
வெற்றிலை,பாக்கு,தேங்காய்,மாதுளம்பழம் மற்றும் பழங்கள் படைக்கவும்.   
திரிபுர பைரவி யந்திரம் வைத்து ஜெபித்தால் நல்லது.அல்லது இதில் இணைத்துள்ள இந்த திரிபுர பைரவி யந்திரப் படத்தைப் ப்ரிண்ட் எடுத்து அதில் நான்கு மூலைகளிலும்  மற்றும் நடுவிலும்  அத்தர்,ஜவ்வாது,சந்தானம் போன்ற ஏதேனும் ஒரு வாசனைத் திரவியம் தடவி அதை முன்னால் வைத்துப் பூஜிக்கவும்.பூஜை முடிந்ததும் அதற்கு மலர் தூவி மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து பிரேம் போட்டு வீட்டில் வடக்குப் பக்கம் மாட்டி வைத்துக்கொள்ளவும்.


மந்திரம் :-
ஹ்ஸ்த்ரைம்  ஹ்ஸ்க்லீம் ஹ்ஸ்த்ரௌம் ||

ஆங்கில உச்சரிப்பு :MANTRA IN ENGLISH :
HSTRAIM  HSKLEEM HSTRAUM

யந்திரம் 




Thursday, March 30, 2017

தனிநபர்கள் தங்கள் கடனை அடைக்க அணுகூலமான- மைத்ர முகூர்த்தங்கள்


தனிநபர்கள் தங்கள் கடனை அடைக்க அணுகூலமான- மைத்ர முகூர்த்தங்கள்

வாஸ்து நேரத்திற்கு எப்படி ராகு காலம் எமகண்டம் விதி விலக்கோ அதுபோல மைத்ர முகூர்த்த நேரத்திற்கும் விதிவிலக்கு உண்டு.

மேஷம்- வியாழன் காலை 9 முதல் 10 வரை
ரிஷபம்- வெள்ளி காலை 8 முதல் 10 வரை
மிதுனம்- புதன் காலை 7 முதல் 9 வரை
கடகம்- திங்கள் மாலை 4 முதல் 6 வரை
சிம்மம்- ஞாயிறு காலை 11 முதல் 12.30 வரை
கன்னி- வெள்ளி மாலை 5 முதல் 6 வரை
துலாம்- சனி காலை 10 முதல் 12 வரை
விருச்சிகம்- வியாழன் மாலை 3 முதல் 5 வரை
தனுசு- செவ்வாய் காலை 10 முதல் 12 வரை
மகரம்- சனி காலை 3 முதல் 10 வரை
கும்பம்- திங்கள் மாலை 3 முதல் 5 வரை
மீனம்- வியாழன் காலை 3 முதல் 10 வரை

கடன்களைத் தீர்க்க மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு சில சந்தேகங்கள் வரலாம். நேரத்தைப் பயன்படுத்தியே அமெரிக்க கோடீஸ்வரர் ராக்பெல்லர் முன்னுக்கு வந்தார். பிரபல அமெரிக்க கோடீஸ்வரர் கசோகி- சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருந்ததால் செல்வந்தராக இருக்கிறேன் என்றார். ஆம்! நேரத்தை வகுத்து எடுத்து சரியான மைத்ர முகூர்த்தத்தை பயன்படுத்துங்கள் வெற்றி காணுங்கள்.

கடன் ஏற்பட காரணம் பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கை காரணமாக கடன் ஏற்படும். தனகாரகன் குரு, தனஸ்தான கிரகம் பலம் குறைந்து நீச்சம் பெற்று 6, 8, 12ல் மறைந்தால் பொருளாதார பிரச்னைகள் இருக்கும். ஆனாலும் அந்தந்த காலகட்டங்களில் வரும் திசா புக்திகள்தான் கடன் சுமை பிரச்னை அதிகமாவதற்கு காரணம். ஆறாம் அதிபதியுடன் சேரும் கிரகங்கள் மூலம் கடன் பிரச்னைகள் ஏற்படும். ஆறாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் குடும்ப செலவு, சுப விஷயத்துக்காக கடன் வாங்க நேரிடும். மூன்றாம் அதிபதி சம்பந்தப்பட்டால் சகோதரர்களால் பணவிரயம் ஏற்படும். நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டால் நிலம், விவசாயம், உடல்நலக் குறைவு, தாய் மூலம் பணம் செலவாகும். ஐந்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் கல்யாணம், கல்வி வகையில் கடன் ஏற்படும். ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டால், மனைவி, நண்பர்கள் மூலம் செலவுகள் இருக்கும். எட்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் வீண் செலவுகள் வரலாம். அதே நேரத்தில் திடீர் யோகத்துக்கும் இடமுண்டு. ஒன்பதாம் அதிபதி சம்பந்தப்பட்டால் பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடும். தந்தையால் செலவுகள் இருக்கும். பத்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் மூலம் கடன் ஏற்படும்.

கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால் பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும். சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம். ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக... இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும்

மாந்திரீக பாவை ரகசியம்:

மாந்திரீக பாவை ரகசியம்:
மாந்திரீக காரியங்களில் பாவை போட்டு நற்காரியங்களும் செய்யலாம்,துஷ்ட காரியங்களும் செய்யலாம்.
குறிப்பாக ஒருவரை முடக்க,தொழிலை முடக்க,நோயை உண்டாக்க,ஆண் பெண் பிரிவினையை உண்டாக்க,இறுதியாக மாரண காரியங்களும் செய்யலாம்.இதற்குரிய யந்திரத்தை பாவையில் பதித்து,மந்திர உருவேற்றி,சில பூஜை முறைப்படி செய்து காரியங்கள் செய்யலாம்.
மாந்திரீக பாவை கட்டு போட்டு விட்டால் குடும்பத்தில் பிரிவினை,தொழில் முடக்கம்,உடல் நிலை பாதிப்புக்கள்,மனநிலை பாதிப்பு போன்ற தீராத பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருக்கும்.
இதை உடைத்து பாதிப்புகளிலிருந்து விடுபட மறுபடியும் மாந்திரீக பாவை போட்டு,பூசை செய்து கட்டுக்களை உடைத்தால் மட்டுமே விடுபட முடியும்.இந்த காரியங்களை செய்வதெல்லாம்,கவனமாக செய்ய வேண்டும்.கரணம் தப்பினால் மரணம் நேரிடும்.
நன்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சர்ப்ப தோஷம்,திருமணத் தடை நீங்க:

சர்ப்ப தோஷம்,திருமணத் தடை நீங்க:
மிக அதீத சக்தி வாய்ந்த கீழ்க்கண்ட நவநாக மந்திரத்தை தினசரி குளித்து முடித்ததும்,9 முறை கூறி மனதார நாகங்களை வழிபட்டு வர சர்ப்ப தோஷம்,கால சர்ப்ப தோஷம்,திருமணத் தடை,வாழ்வில் சோதனைகள் போன்றவை விலகி வாழ்வில் நன்மைகள் வந்து சேரும்.
மந்திரம்:
" அனந்தம் வாஸீஇம் சேஷம்
பத்மநாபம் ஸ கம்பஸம்
ஷங்கப்பலம் தர்டராஷ்ட்ரம்
தக்ஸகம் கலியம் தத"
திருமணத் தோஷங்கள்,திருமணத் தடை விலகி உடனே திருமணம் நடைபெற யந்திரம்.தாயத்துக்கள் கிடைக்கும்.
திருமணத் தோஷங்களுக்கு பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தியும் செய்யப்படும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வாழ்வு மேன்மையடைய:


வாழ்வு மேன்மையடைய:
முருகனின் இந்த காயத்ரி மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் கூடுவது மட்டுமில்லாமல் ஸ்ரீ குரு பகவானின் அருளும் சேர்ந்து உங்கள் வாழ்வை மேன்மையடைய செய்யும்.
"ஓம் தத்புருஷாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்"
புராண காலத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் தான் குருபகவானின் பரிகாரத் தலமாக இருந்துள்ளது.ஆனால் எப்படியோ இன்று மாறிவிட்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989
 

அரசியலில் வெற்றி பெற எளிய பரிகாரம்:


அரசியலில் வெற்றி பெற எளிய பரிகாரம்:
தங்கள் ஊரில் உள்ள அம்மன் அல்லது துர்க்கை ஆலயத்திற்க்கு வளர்பிறையில் வரும் தசமி திதியன்று சென்று வழிபட்டு வர அரசியலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றலாம்.இப்படி 30 மாதங்கள் சென்று வழிபட மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
அரசியலில் வெற்றி பெறலாம்.
அரசியலில் வெற்றி பெற யந்திரம் மற்றும் தாயத்து கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:

மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட பெண்:
காவல் துறையில் பணியாற்றும் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி பிரசன்னம் பார்க்க இரண்டு நாட்களுக்கு முன்பு வந்தாள்.முகம் வாட்டத்துடன் காணப்பட்டது.பிரசன்ன பார்க்கும்போது அவளுக்கு தீட்டு தோஷம் இருப்பதாக காளி தேவி கூறினாள்.அதேபோல் அவள் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.இது மட்டுமில்லாமல் மேலிடத்தில் சில பிரச்சினைகள் உருவாகி கொண்டே இருப்பாதகவும் அன்னை கூறினாள்.
பிரசன்னத்தில் பார்த்ததை,அந்த பெண்ணிடம் கூறினேன்,இது எல்லாம் உண்மை தான் என்றார்.அதேபோல் சில கேள்விகள் அவளிடம் கேட்டேன்,மாதவிலக்கான நேரத்தில் கோவிலில்,காவல் பணியாற்றினீங்க என்றேன்.அதற்கு நிறைய நாட்கள் கோவிலில் தான் எனக்கு பணி ஒதுக்குவாங்க என்றும்,அந்த நாட்களில் பணியின் காரணமாக லீவு கிடைப்பதில்லை என்றார்.தீட்டு தோஷத்தால் தான் உங்களுக்கு பாதிப்புக்களும்,பிரச்சினைகளுக்கும் உருவாகியுள்ளது என்றேன்.சரியாக நாட்களை ஞாபகப்படுத்தி வேறு இடத்துக்கு பணியை ஒதுக்கி கொள்ளுங்கள் என்று,பரிகாரங்கள் செய்து தீட்டு தோஷத்தை நிவர்த்தி செய்து அனுப்பினேன்.தற்போது மனநிம்மதி கிடைத்துள்ளதாகவும்,கணவன் வந்துவிட்டார் என்றார்
ஸ்ரீகாளி தேவி-போன்:7598758989