Tuesday, June 13, 2017

கடன் பிரச்சினைகள் தீர யந்திர வழிபாடு:

கடன் பிரச்சினைகள் தீர யந்திர வழிபாடு:
பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் கடன் பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,ருண கணபதி மூலமந்திரம் உருவேற்றி,முறையான பூசைகள் செய்து வழிபட மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.
பூஜிக்கப்பட்ட யந்திரம்,ரட்சை கயிறு தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்


கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம்.
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம். மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் : மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, June 10, 2017

குப்பை மேனி (பூனை வணங்கி)


குப்பை மேனி (பூனை வணங்கி)
1. ஒரு சிட்டிகை ச மூலச் சூரணம் நெய்யில் காலை, மாலை 1 மண்டலம் கொடுக்க 8 விதப் பவுத்திர நோயும் தீரும். பிற மருத்துவ முறையினால் சிக்கலான பவுத்திரத்திற்கு 1 வாரம் காலை மாலை 50 மி.லி அவுரி க் குடிநீர் கொடுத்துப் பின்னர் மேற்கண்ட சிகிச்சையை 70 முதல் 90 நாள்கள் செய்யப் பவுத்திர நோய்கள் அனைத்தும் தீரும்.
2 வேர்ச் சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல் ஒன்றாய்க் காய்ச்சிக் கொடுக்க நாடாப்புழு, நாக்குப் பூச்சி நீங்கும், பேதியாகும் , சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவும்.
3. இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.
4. இலைச் சூரணத்தைப் பொடி போல் நசிய மிட தலைவலி நீங்கும்.
5. இலை' , சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் களித்துக் குளிக்கத் தோல் நோய் அணைத்தும் தீரும்.
6, பத்து கிராம் வேரை மென்மையாய் அரைத்து நீரில் கலந்து காலையில் மட்டும் 3 நாள் குடித்து உப்பில்லாப் பத்தியத்தில் இருக்க எலிக்கடி நஞ்சு தீரும். மருந்து சாப்பிடும் போது வாந்தியும் வயிற்றுப் போக்கும் இருக்கும்
7. இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்துப் படர்தாமரை, சொறி, அட்டைக் கடி, பாம்பு, நச்சுப் பூச்சிக்கடி ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சாகத் தடவக்
குணமாகும்.

திருமண வாழ்க்கை தரும் தாந்த்ரீகப் பரிகாரம்

மனம் விரும்பியபடி மனைவியும்,மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்


ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வியாழக்கிழமை அன்று சுக்ர ஹோரை அல்லது குரு ஹோரையில் இந்த யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளைப்  பேப்பரில் மாதுளை மரக்குச்சியினால் அஷ்டகந்தத்தைத் தொட்டு வரைந்து கொள்ளவும்.அதற்கு ஊதுவத்தி காண்பித்த பின்  கற்பூரம் ஒன்றை ஏற்றி அதில் அந்த யந்திரத்தை எரித்து விடவும்.அந்தச்சாம்பலை  ஏதாவது பழங்கள் காய்க்கும்  மரத்தின் வேர்ப் பகுதியில் தூவி விடவும்.இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழி செய்யும்.இந்த பூஜைமுறையைச் செய்யும் பொழுது கீழே உள்ள மந்திரத்தை ஜெபித்தபடியே செய்யவும்.

இதைச் செய்த பின் தினமும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வர திருமணத் தடை நீங்கி மனம் விரும்பும் படி மனைவியும், தம்பதிகளுக்குள் மகிழ்ச்சியோடு கூடிய வாழ்க்கையும் ஏற்படும்.



மந்திரம் :-

ஓம் மனோரமாம் பார்யாம் தேஹி மே ஸ்வாஹா ஹ்ரீம் ஓம்  

Sunday, June 4, 2017

பணத் தடைகள் விலக:

பணத் தடைகள் விலக:
வாழைத் தண்டு திரியை,மஞ்சள் நீரில் நனைத்து காய வைத்து,வெண்கல விளக்கில் நெய் ஊற்றி,அந்த திரியை இட்டு,அதிர்ஷ்ட லட்சுமி யந்திரம் முன்பு தீபம் ஏற்றி வர பணத்தடைகள் மற்றும் சுபகாரிய தடங்கலும் விலகும்.
"அதிர்ஷ்ட லட்சுமி யந்திரம்" தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

உடல் எடையை குறைக்கும் "குண சூரணப் பொடி":


உடல் எடையை குறைக்கும் "குண சூரணப் பொடி":
ஒரு சராசரி மனிதனின் உடல் எடை,அவனுடைய உயரத்தின் அளவில்,நூறை கழித்தால் மீதி வரும் அளவில் தான் உடல் எடை இருக்க வேண்டும்.இதை விட அதிகமாக இருந்தால் உடல் எடை அதிகரித்து உள்ளது என அறியலாம்.இதனால் உடலில் பல நோய்கள் ஏற்படும்.
(எ.டு) ஒருவரின் உயர அளவு=160 செ.மீ,எனில் 160-100=60,அதாவது அவரின் உடல் எடை 60 கிலோ,இது தான் சராசரி அளவு.அதிகமாக இருந்தால் உடல் எடை அதகரித்துள்ளது எனலாம்.
அதிக உடல் எடையை குறைக்க,மறைக்கப்பட்ட சித்த வைத்திய முறைப்படி 101 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொடி தான் இந்த "குண சூரணப் பொடி" ஆகும்.இந்தப் பொடியை,ஒரு டம்ளர் தண்ணீரில்,ஒரு ஸ்பூன் அளவு போட்டு காலை மாலை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து,உடல் எடை வெகுவாக குறைந்து விடும்.இது அணுபவ உண்மை.
உடல் எடை குறைய"குண சூரணப் பொடி" தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தாய்ப்பால் சுரக்க அற்புத மூலிகை:

தாய்ப்பால் சுரக்க அற்புத மூலிகை:
தாய்ப்பால் சுரப்பு இல்லாத தாய்மார்கள்,அம்மன் பச்சரிசி மூலிகையை பிடுங்கி வந்து,நீரில் கழுவிய பிறகு,தண்டு இலை பகுதியுடன் அம்மி அல்லது மிக்சியில் வைத்து அரைத்து,எலுமிச்சைக்காய் அளவு எடுத்து,200 மிலி பசும்பாலுடன் கலந்து,காலை,மாலை என இருவேளைகள்,ஒரு வார காலத்துக்கு சாப்பிட தாய்ப்பல் அபரிதமாய் சுரக்கும்.இது அணுபவ வைத்திய முறை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989