Tuesday, June 13, 2017

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்


12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் 

அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் சிறப்பு இதோ..  

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ தைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.

மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண் திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி

கடகம் : பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

கன்னி: இயற்கையில் பெண்மை குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் மோகன கணபதி

துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தை செய்துமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி

தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.

மகரம்: சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் நீங்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்று வெளிக்காண்பிக்காமல் செயல்படுவீர்கள். அதேநேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

மீனம்: இயற்கையில் கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள், தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.

கடன் பிரச்சினைகள் தீர யந்திர வழிபாடு:

கடன் பிரச்சினைகள் தீர யந்திர வழிபாடு:
பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் கடன் பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,ருண கணபதி மூலமந்திரம் உருவேற்றி,முறையான பூசைகள் செய்து வழிபட மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.
பூஜிக்கப்பட்ட யந்திரம்,ரட்சை கயிறு தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்


கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம்.
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம். மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் : மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, June 10, 2017

குப்பை மேனி (பூனை வணங்கி)


குப்பை மேனி (பூனை வணங்கி)
1. ஒரு சிட்டிகை ச மூலச் சூரணம் நெய்யில் காலை, மாலை 1 மண்டலம் கொடுக்க 8 விதப் பவுத்திர நோயும் தீரும். பிற மருத்துவ முறையினால் சிக்கலான பவுத்திரத்திற்கு 1 வாரம் காலை மாலை 50 மி.லி அவுரி க் குடிநீர் கொடுத்துப் பின்னர் மேற்கண்ட சிகிச்சையை 70 முதல் 90 நாள்கள் செய்யப் பவுத்திர நோய்கள் அனைத்தும் தீரும்.
2 வேர்ச் சூரணம் 1 லிட்டர் நீரில் 1 பிடி போட்டு 8 இல் ஒன்றாய்க் காய்ச்சிக் கொடுக்க நாடாப்புழு, நாக்குப் பூச்சி நீங்கும், பேதியாகும் , சிறுவர்களுக்கு பாதியளவு கொடுக்கவும்.
3. இலையை விளக்கெண்ணைய் விட்டு வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரப் படுக்கைப் புண்கள் தீரும்.
4. இலைச் சூரணத்தைப் பொடி போல் நசிய மிட தலைவலி நீங்கும்.
5. இலை' , சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சற்று நேரம் களித்துக் குளிக்கத் தோல் நோய் அணைத்தும் தீரும்.
6, பத்து கிராம் வேரை மென்மையாய் அரைத்து நீரில் கலந்து காலையில் மட்டும் 3 நாள் குடித்து உப்பில்லாப் பத்தியத்தில் இருக்க எலிக்கடி நஞ்சு தீரும். மருந்து சாப்பிடும் போது வாந்தியும் வயிற்றுப் போக்கும் இருக்கும்
7. இலைச் சாற்றுடன் சுண்ணாம்பு குழைத்துப் படர்தாமரை, சொறி, அட்டைக் கடி, பாம்பு, நச்சுப் பூச்சிக்கடி ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சாகத் தடவக்
குணமாகும்.

திருமண வாழ்க்கை தரும் தாந்த்ரீகப் பரிகாரம்

மனம் விரும்பியபடி மனைவியும்,மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையும் தரும் தாந்த்ரீகப் பரிகாரம்


ஒரு வளர்பிறை திங்கள் அல்லது வியாழக்கிழமை அன்று சுக்ர ஹோரை அல்லது குரு ஹோரையில் இந்த யந்திரத்தை ஒரு சுத்தமான வெள்ளைப்  பேப்பரில் மாதுளை மரக்குச்சியினால் அஷ்டகந்தத்தைத் தொட்டு வரைந்து கொள்ளவும்.அதற்கு ஊதுவத்தி காண்பித்த பின்  கற்பூரம் ஒன்றை ஏற்றி அதில் அந்த யந்திரத்தை எரித்து விடவும்.அந்தச்சாம்பலை  ஏதாவது பழங்கள் காய்க்கும்  மரத்தின் வேர்ப் பகுதியில் தூவி விடவும்.இது மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு வழி செய்யும்.இந்த பூஜைமுறையைச் செய்யும் பொழுது கீழே உள்ள மந்திரத்தை ஜெபித்தபடியே செய்யவும்.

இதைச் செய்த பின் தினமும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வர திருமணத் தடை நீங்கி மனம் விரும்பும் படி மனைவியும், தம்பதிகளுக்குள் மகிழ்ச்சியோடு கூடிய வாழ்க்கையும் ஏற்படும்.



மந்திரம் :-

ஓம் மனோரமாம் பார்யாம் தேஹி மே ஸ்வாஹா ஹ்ரீம் ஓம்  

Sunday, June 4, 2017

பணத் தடைகள் விலக:

பணத் தடைகள் விலக:
வாழைத் தண்டு திரியை,மஞ்சள் நீரில் நனைத்து காய வைத்து,வெண்கல விளக்கில் நெய் ஊற்றி,அந்த திரியை இட்டு,அதிர்ஷ்ட லட்சுமி யந்திரம் முன்பு தீபம் ஏற்றி வர பணத்தடைகள் மற்றும் சுபகாரிய தடங்கலும் விலகும்.
"அதிர்ஷ்ட லட்சுமி யந்திரம்" தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

உடல் எடையை குறைக்கும் "குண சூரணப் பொடி":


உடல் எடையை குறைக்கும் "குண சூரணப் பொடி":
ஒரு சராசரி மனிதனின் உடல் எடை,அவனுடைய உயரத்தின் அளவில்,நூறை கழித்தால் மீதி வரும் அளவில் தான் உடல் எடை இருக்க வேண்டும்.இதை விட அதிகமாக இருந்தால் உடல் எடை அதிகரித்து உள்ளது என அறியலாம்.இதனால் உடலில் பல நோய்கள் ஏற்படும்.
(எ.டு) ஒருவரின் உயர அளவு=160 செ.மீ,எனில் 160-100=60,அதாவது அவரின் உடல் எடை 60 கிலோ,இது தான் சராசரி அளவு.அதிகமாக இருந்தால் உடல் எடை அதகரித்துள்ளது எனலாம்.
அதிக உடல் எடையை குறைக்க,மறைக்கப்பட்ட சித்த வைத்திய முறைப்படி 101 மூலிகைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொடி தான் இந்த "குண சூரணப் பொடி" ஆகும்.இந்தப் பொடியை,ஒரு டம்ளர் தண்ணீரில்,ஒரு ஸ்பூன் அளவு போட்டு காலை மாலை சாப்பிட்டு வர உடலில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து,உடல் எடை வெகுவாக குறைந்து விடும்.இது அணுபவ உண்மை.
உடல் எடை குறைய"குண சூரணப் பொடி" தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989