Tuesday, August 8, 2017

வலிப்பு நோய்க்கு மருந்து:

வலிப்பு நோய்க்கு மருந்து:
வசம்பு,சுக்கு,மிளகு,திப்பிலி,ஓமம,கல்உப்பு,பெருங்காயம் இவைகளை போதுமான அளவு எடுத்து சூரணமாக்க வேண்டும்.இதனை காலை மாலை பாலில் கலந்து,ஒரு மண்டலம் சாப்பிட்டு வர அனைத்துவிதமான வலிப்பு நோய்களும் பூரண குணமாகும.
மேலும் வலிப்பு நோய்க்கு 
மேலே குறிப்பிட்ட மருந்துகளுடன் சில வவிசேஷமான மூலிகை வேர்களும் சேர்த்து செய்த சூரணப் பொடி தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, August 4, 2017

கணவன் வசமாக:

கணவன் வசமாக:
தறிகெட்டு திரியும் கணவன் வசமாக புல்லாமணக்கு கிழங்கை மனைவியானவள் தன் எச்சிலில் அரைத்து கொடுக்க பலன் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


Thursday, August 3, 2017

சுடலை மாடன் வரலாறு மற்றும் அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:

சுடலை மாடன் வரலாறு மற்றும் அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோவில்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தக் கோவில்கள் பெரும்பான்மையாகத் திறந்தவெளியில், காவிக் கோடுகள் போடப்பட்ட திண்ணையின் மேல் முக்கோண வடிவிலான பீடங்களாகவே அமைக்கப்பட்டிருக்கும். சில கோவில்களில் இந்தப் பீடங்களின் முன்பகுதியில் சுடலை மாடசாமியின் உருவப்படம் வரையப்பட்டிருக்கும். ஒரு சில பெரிய கோவில்களில் மட்டுமே சுடலை மாடசாமியின் உருவத்திலான சிலைகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.
சுடலை மாடசாமி பெரிய மீசையுடன் வலது கையில் அரிவாள், இடது கையில் கம்பு போன்றவைகளுடன் மாட்டினை வாகனமாகக் கொண்டு காட்சியளிக் கிறார். சுடலை மாடசாமி சிலருக்கு குலதெய்வமாகவும், சில கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருப்பவர். சுடலை மாடசாமி வீற்றிருக்கும் திருக்கோவில் திருவிழாக்களின்போது, நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளில் சுடலை மாடசாமியின் தோற்றம் குறித்த கதை சொல்லப்படுகிறது.
ஈசனிடம் சோதனை
ஒருமுறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், பூலோகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் வினைப்பயன்படி உணவு அளிக்கும் நோக்கத்துடன் கிளம்பினார். சிவபெருமான் இந்தப் பணியை முழுமையாகச் செய்து வருகிறாரா? என்று பார்வதிக்கு சிறு சந்தேகம் எழுந்தது. அவள் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துக் காற்று கூட புக முடியாத குமிழ் ஒன்றில் அடைத்து வைத்தாள்.
தன் பணியை முடித்துத் திரும்பிய சிவபெருமானிடம் பார்வதி, சுவாமி!, இன்று அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டீர்களா? என்று கேட்டாள். சிவபெருமான், ஆமாம், நான் அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டேன். உனக்கு இதிலென்ன சந்தேகம்? என்றார்.
பார்வதிக்கு சாபம்
இந்தக் குமிழில் அடைபட்டிருக்கும் சிற்றெறும்புக்கும் உணவளித்து விட்டீர்களா? என்றபடி குமிழின் மூடியைத் திறந்தாள். அந்தச் சிற்றெறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்தது. பார்வதிக்குத் தன் தவறு புரிந்தது. இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். என்னுடைய மனைவியான நீ, என் பணியில் சந்தேகமடைந்து என்னைச் சோதிப்பதா?. என்னைச் சோதித்த நீ காட்டுப்பேச்சியாக மாறி, காடுகளில் அலைந்து கொண்டிரு! என்று சாபமிட்டார்.
பார்வதி தன் செயலுக்காக மன்னிப்பு கோரி, சாப விமோசனமும் வேண்டினார். சிவபெருமான், வனப்பேச்சியாகக் காட்டில் அலையும் நீ, மயானத்தில் என்னை வேண்டித் தவமிரு... உரிய காலம் வரும்போது, நானே உன்னை வந்து மீட்பேன் என்று சாப விமோசனம் அளித்தார். பார்வதி காட்டுப்பேச்சியம்மனாக மாறி, காடுகளில் அலைந்து திரிந்து, கடைசியில் மயானத்தில் சிவபெருமானை வேண்டித் தவமிருந்தார். தவத்தின் முடிவில் தோன்றிய சிவபெருமான் அவளின் சாபத்தை நீக்கி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார்.
குழந்தை வரம்
பார்வதிதேவி, சுவாமி, எனக்கு இரு புதல்வர்களைக் கொடுத்தீர்கள். அவர்கள் தனித்துச் சென்று விட்டார்கள். எனக்குத் தாங்கள் இன்னுமொரு குழந்தையைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவ பெருமான், இந்த மயானத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிணம் நன்றாக எரியும் போது, நீ என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்தி வேண்டிக் கொள். உனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும். அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர் என்று வரமளித்து மறைந்தார்.
பார்வதி, பிணம் நன்றாக எரியும் போது முந்தானையை ஏந்தியபடி சிவபெருமானை நினைத்து வேண்டி நின்றார். பிணம் நன்கு சுடர் விட்டு எரிந்த நிலையில், அதிலிருந்து சில சுடலை முத்துக்கள் பார்வதியின் முந்தானையில் வந்து விழுந்தன. அது குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை, உறுப்புகள் எதுவுமில்லாமல் பிண்டமாக இருந்தது. ஆனால், அதற்கு உயிர் இருந்தது.
இதைப் பார்த்த பார்வதி மீண்டும் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் அந்தப் பிண்டத்தை அழகிய குழந்தையாக மாற்றிக் கொடுத்தார். பார்வதியும் அந்தக் குழந்தையுடன் கயிலாயம் திரும்பினார்.
பூலோகம் செல்ல உத்தரவு
சுடலை முத்துக்களிலிருந்து தோன்றிய குழந்தை என்பதால், அதற்கு சுடலை மாடன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பார்வதி ஒரு நாள் இரவு அந்தக் குழந்தைக்கு உணவு கொடுத்து விட்டுப் படுக்கைக்குச் சென்று விட்டாள்.
நள்ளிரவு நேரம் சுடுகாட்டில் பிணம் ஒன்று எரியும் வாசனை அந்தக் குழந்தைக்கு எட்டியது. அந்தக் குழந்தை அங்கிருந்து சுடுகாட்டுக்கு வந்து, எரியும் பிணங்களை எடுத்துத் தின்றது. பேய்களோடு விளையாடி மகிழ்ந்தது. அதிகாலையில் கயிலாயம் திரும்பிப் படுத்துக் கொண்டது.
பார்வதிதேவி காலையில் குழந்தையைக் கையிலெடுத்த போது, அந்தக் குழந்தையிடமிருந்து பிண வாசனை வருவது கண்டு திகைத்தாள். நள்ளிரவில் நடந்ததை அறிந்து வருந்தினாள். இதுபற்றிச் சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான், பிணம் தின்ற இவன், இனி கயிலாயத்தில் இருக்க இயலாது. பூலோகம் சென்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்.
இதைக் கேட்ட சுடலை மாடன், நான் பூமியில் எப்படி வாழ்வது? தினமும் பிணங்களை எதிர்பார்த்து வாழ முடியுமா? எனக்கு நல்லறிவு வழங்கி நல்லதொரு வரமளிக்க வேண்டும் என்று வேண்டினார்.
சிவபெருமானும் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்? என்று கேட்டார்.
சுடலை மாடன், பேய்கள் அனைத்தையும் நானே அடக்கி ஆள வேண்டும். நான் கொடுக்கும் மயானச் சாம்பலில் அனைத்து நோய்களும் தீர்ந்திட வேண்டும். தீயவர்களை அழிக்கத் துணை புரிய வேண்டும் என்று வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரங்களைத் தந்து அனுப்பினார்.
புதையல் காக்கும் பணி
சுடலை மாடன் பூலோகத்தில் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டபடியே, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரக்கரை எனும் ஊரை வந்தடைந்தார். இந்த ஊரிலிருந்த பகவதியம்மன் அவருடைய தாயைப் போல் தோன்றியதால், அவருடன் இருக்க விரும்பினார். பகவதியம்மனிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். பகவதியம்மன் அவரை மகனாக ஏற்றுக் கொண்டதுடன், அவரிடமிருக்கும் புதையலைக் காக்கும் பணியையும் வழங்கினார்.
சுடலை மாடன், அம்மனின் அனுமதியைப் பெற்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் செல்வதும், பிற நாட்களில் பகவதி அம்மனின் புதையலுக்குக் காவலாகவும் இருந்தார்.
புதையலை மீட்டார்
இந்தநிலையில், கேரளாவின் நந்தம்புனலூர் எனும் ஊரில், பெரும் மந்திரவாதியான காளிப்பெரும்புலையன் என்பவன் இருந்தான். அவன் பகவதியம்மனிடம் இருக்கும் புதையலைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் திருடவும் திட்டமிட்டான். அவன் புதையலுக்குச் சுடலை மாடன் காவலாக இருப்பதையும், அவர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் சென்று விடுவதையும் அறிந்தான். ஒரு வெள்ளிக்கிழமை நாளில், சுடலை மாடன் மயான வேட்டைக்குச் சென்ற போது, பகவதியம்மனின் புதையலைத் காளிப்பெரும்புலையன் திருடிச் சென்று விட்டான். மயான வேட்டைக்குச் சென்று திரும்பிய சுடலை மாடன், பகவதியம்மனின் புதையல் திருடு போனதை அறிந்தார். உடனே கேரளாவில் இருக்கும் நந்தம்புனலூர் சென்று, காளிப்பெரும்புலையனின் மந்திர வித்தைகள் அனைத்தையும் தந்திரமாக முறியடித்து அவனைக் கொன்று புதையலை மீட்டு வந்தார்.
சுடலை மாடன் புதையலை மீட்டு வந்ததை அறிந்த கொட்டாரக்கரை மக்கள், அவரைத் தங்கள் காவல் தெய்வமாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, கொட்டாரக்கரையில் இருந்து வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய ஊர்களில், சுடலை மாடனுக்குத் தனிக் கோவில்கள் வைத்து வழிபடத் தொடங்கினர். இதனால், சுடலை மாடன் தென் மாவட்டங்களில் பல ஊர்களில், மாடசாமி, பெரிய மாடசாமி, புலமாடசாமி, வேம்படி மாடசாமி, கரையடி மாடசாமி, கொம்பு மாடசாமி, பட்டணத்து மாடசாமி, ஆற்றங்கரை மாடசாமி, சுடலை வீரன், சங்கிலி மாடசாமி, பொன் மாடசாமி, ஆகாச மாடசாமி, பூக்குழி மாடசாமி என்று பல்வேறு பெயர்களில் கோவில் கொண்டிருக்கிறார்.
உடைமைகளை மீட்பவர்
சுடலை மாடசாமி கொட்டாரக்கரை பகவதியம்மன் புதையலை மீட்டுக் கொடுத்தது போல், தங்களுக்குச் சொந்தமான உடைமைகள் எதுவாக இருந்தாலும், அதை ஏதாவதொரு வழியில் இழந்து விட்டால், அவைகளைச் சுடலை மாடசாமி மீட்டுக் கொடுத்துவிடுவார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது. இதனால், சுடலை மாடசாமி கோவில்கள் அனைத்திலும், பக்தர்கள் இழந்து விட்ட தங்கள் பொருட்களை மீட்டுக் கொடுக்க வேண்டி வழிபடுவது வழக்கத்திலிருக்கிறது. இதுபோல், தீயசக்தியால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, அவர்களிடமிருக்கும் தீயசக்திகளை விரட்டுவதற்கும் சுடலை மாடசாமி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வழிபாடு
சுடலை மாடசாமி கோவில்கள் அனைத்திலும் தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கொடை விழாவில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தச் சிறப்பு வழிபாட்டின் போது சுடலை மாடசாமிக்குப் பொங்கல் வைத்து, ஆடு, கோழி, பன்றி போன்றவைகளைப் பலியிட்டு உணவு சமைத்து, மது, சுருட்டு போன்றவைகளையும் சேர்த்துப் படைத்து வழிபடும் நடைமுறை வழக்கத்திலிருக்கிறது.
அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:
சுடலை யந்திரம், வசிய மை,பிரம்பு இவைகளை வைத்து அவற்றின் முன்பு அசைவ படையல்,சுருட்டு,மது மாமிசம்,வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை லட்சம் உரு செபிக்க வேண்டும்.
மந்திரம்:
"ஹரி ஓம் அகோரமாடா கெம்பிரமாடா ஆகாசமாடா பகவதி புத்திரா வீராதி வீரா வாவா ஐயும் கிலியும் சௌவும் நசி மசி வாவா சுவாகா"
பலன்கள்:
வாக்கு சித்தி,அருள் வாக்கு கூறுதல்,சகல ஏவல் பில்லி சூன்யம் பேய்பிசாசுகளை நீக்கலாம்.எதிரிகள் சத்துருக்கள் தொல்லைகள் நீங்கும்.மேலும் சகல சித்துக்களும் ஆடலாம்.
சுடலை மாடன் யந்திரம்,வசிய மை,தீட்ஷை தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, August 1, 2017

ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:

ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:
நேற்று(01/08/2017) திருச்சி உறையூரில் இருந்து வயதான தம்பதியர் ஆலோசனைக்கு வந்தார்கள்.அவர்கள் கால் வலி,கால் எரிச்சல்,உடல் எரிச்சல்,உடல் நடுக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்,அவர்களும் மருத்துவம்,மாந்திரீகம் எத்தனையோ இடத்தில் பார்த்தும் குணமாகவில்லை.பிரசன்னத்தில் பார்க்கும்போது அவர்களோட காலடி மண்,முடி மற்றும் நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,இவைகளை வைத்து பாவை செய்து,எரியும் பிணத்தில் போட்டு மாந்திரீக வேலைகள் செய்து ஏவல் செய்து இருந்தார்கள்.எல்லாத்துக்கும் காரணம் சொத்து பிரச்சினை தான்.மேற்கூரியவைகள் இருப்பின் அவை ஏவலின் அறிகுறிகள் ஆகும்.
அவர்களுக்கு நிவர்த்தி பூஜைகள் செய்து,சாப்பிட மருந்தும் கொடுத்தேன்.
இன்று அதிகாலையில் அவர்கள் போன் செய்து,இரவில் நன்றாக தூங்கினோம்,உடல் எரிச்சல் இல்லை என்று நன்றி சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.எனக்கே மனம் நெகிழ்ந்து விட்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கடன் அடைய எளிய பரிகாரம்:

கடன் அடைய எளிய பரிகாரம்:
கடன்களால் வெகுகாலம் துன்பப்படும் நபர்கள் ஒன்னேகால் அடி வெள்ளைத்துணியை எடுத்து அதில் 4 பக்கங்களில் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து கட்டி அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீரில் விட்டு விட கடன்கள் அடியோடு ஒழியும்.
கடன் பிரச்சினை,பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட

துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட
ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்
இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, ” தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது ” என்ற அரிய வரத்தினை பெற்றான்.
தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.
எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி “எங்கெ உன் நாராயணன்” எனக் கேட்க, பிரகலாதணோ ” என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் ” என்று கூறினான்.
கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.
அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி.அவரின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.
இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.
இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.
இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.
காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.
லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
“நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.
இதில் திருபுவனம் கோவிலில் சரபேஸ்வரருக்குத் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலிலும் தனிச் சன்னதி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட சரபேஸ்வரர் ஸ்லோகம்
ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம்
– இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்

தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்
பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபடவேண்டும். நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். . அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்..
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும். நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம். வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில். ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989