Wednesday, November 8, 2017

திருவம்பலச் சக்கரம்:

திருவம்பலச் சக்கரம்:
ஆதி சதாசிவமும்,சக்தியும் இனைந்த மந்திர எழுத்துக்களின் உருவம் பெற்ற யந்திரம் தான் திருவம்பலச் சக்கரம் ஆகும்.
ஒப்பில்லா சிவனருளைப் பரிபூரணமாகத் தன்னுள் அடக்கி, உலகம் செழிக்க உன்னதமான பலன்களை அள்ளி வழங்கும் அற்புதம்தான் திருவம்பலச் சக்கரம்.
திருமூலர் அருளிய இந்த சக்கரத்தை, 'சித்துக்கள் ஆடுகின்ற சிதம்பரச் சக்கரம்’ என்று ஞானியர் பலரும் போற்றியுள்ளார்கள். சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, பெருமானின் மகா மூல மந்திர தத்துவங்கள் அடங்கிய இந்த சக்கரத்தை முறையாக எழுதி வாங்கி, உரிய தீட்சை முறையை எளிய வகையில் உபதேசமாகப் பெற்று ஜபம் செய்து வந்தால், அனைத்துச் செயல்களிலும் வெற்றி வந்து சேரும் என்கிறது சிவபூஜா ரகஸ்யம்.
இந்த சக்கரத்தில், சிவனாரே அருளிய சிவசிந்தாமணி மூல மந்திரமும் அடங்கியுள்ளது என்பது கூடுதல் சிறப்பு! சிவபெரு மானைப் புகழும் சமக மந்திரம், 'பஞ்சாட்சர மூலம் அடங்கிய திருவம்பலச் சக்கரத்தில் உள்ள சிவாய நம என்ற எழுத்துக்களைக் கோர்வை செய்து ஜபிப்பவர்களுக்கும், பூஜிப்பவர்களுக்கும் நலம் பல விளையும்’ என்று விவரிக்கிறது.
சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை ஜபயோக கர்ம விதியின்படி சிவ தீட்சை பெற்று, ஒரு லட்சம் முறை நம்பிக்கையோடு ஜபித்து வழிபட ஸித்திகள் பலவும் கிடைக்கும்.
அம்பலச்சக்கர பூஜை முறை:
பொதுவாக சித்தர்களின் போதனா முறையைப் பின்பற்றுபவர்கள், தமிழ் மறைப் பாடல்களை பாடும் முற்றோதுதல் வழிபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர். சிவாகம விதியைப் பின்பற்றுபவர்கள், ஆகம பூஜா விதிகளை வீட்டில் கடைப்பிடித்துச் செய்வதே முறையான வழிபாடாக அமைகிறது. பொது இடத்தில் வழிபாடு நடத்துபவர்கள் முற்றோதுதல் முறையையும், தனிப்பட்ட முறையில் குடும்ப நலனுக்காக செய்பவர்கள், ஆகம பூஜையையும் செய்யலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுதினமும் எளிய வகையில் செய்தால் போதுமானது.
தங்கம், வெள்ளி அல்லது தாமிரத் தகட்டில், இந்தச் சக்கரத்தை எந்தவித பின்னமும் ஏற்படாமல் கவனமாக எழுதி எழுத்தாணியால் வரைந்து கொள்ளவும். (சிவ அனுக்கிரகம் பெற்ற பெரியோர்களை அணுகி, உரிய முறைப்படி வரைந்து வாங்குவது சிறப்பு). பின்னர், குங்குமப்பூ, ஜவ்வாது, கோரோசணை, புனுகு, அத்தர் ஆகியவற்றை நெய் கலந்து பூசி, ஒரு தட்டில் வெண்பட்டு விரித்து அதன் மேல் தகட்டை வைத்து, சந்தன- குங்குமம் வைத்து பூஜை அறையில் இடம்பெறச் செய்யலாம்.
சிவராத்திரி, சோமவாரம் முதலான சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் பூஜிக்கத் துவங்குவது சிறப்பு.
முதலில் விநாயகரை வழிபட்டு வணங்கவேண்டும். பின்னர் சிவபெருமானை மனத்தால் தியானித்து வணங்கி, கீழ்க்காணும் சிவநாமங்களைக் கூறி, வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து திருவம்பலச் சக்கரத்தை வழிபடலாம்.
ஓம் பவாய நம:
ஓம் ருத்ராய நம:
ஓம் ம்ருடாய நம:
ஓம் ஈசானாய நம:
ஓம் சம்பவே நம:
ஓம் சர்வாய நம:
ஓம் ஸ்தானவே நம:
ஓம் உக்ராய நம:
ஓம் பர்காய நம:
ஓம் பரமேஸ்வராய நம:
ஓம் மகாதேவாய நம
வில்வத்தால் அர்ச்சித்து வழிபட்ட பிறகு, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கற்பூர ஆரத்தி செய்ய வேண்டும். நெய் இட்ட சாதத்தை நிவேதனம் செய்து, தேங்காய், பழம், தாம்பூலம் வைத்து வணங்கவும். எளிய முறையில் வழிபடுவோர் பூஜையின்போது கீழ்க்காணும் காயத்ரீ மந்திரம் மற்றும் துதிப்பாடலைப் படித்து வழிபட்டும் பலன் பெறலாம்.
காயத்ரீ
ஓம் தன்மஹேசாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி.
தந்தோ சிவ: ப்ரசோதயாத்
துதிப்பாடல்...
கங்கைவார் சடையாய் கணநாதா
காலகாலனே காமனுக்குக் கனலே
பொங்குமால் கடல்விடம் இடற்றானே
பூதநாதனே புண்ணியா புனிதா
செங்கண்மால் விடையாய்த் தெளிதேனே
தீர்த்தனே திருவாவடுதுறையுள்
அங்கணா எனை அஞ்சேல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே!
எல்லோரும் திருவம்பலச் சக்கரத்தை வீட்டில் வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கென சொல்லப்பட்ட எளிய கட்டுப் பாட்டு முறைகளைக் கையாள வேண்டும். லாகிரி- புகையிலை வஸ்துகளை பயன்படுத்தாமை, தெய்வ நிந்தையை தவிர்ப்பது, புலன் அடக்கம் ஆகியவை அவசியம்.
திருவம்பலச் சக்கரம் பற்றி மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Friday, October 20, 2017

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்


குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்

ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்


வளர்பிறை புதன்கிழமை அன்று தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.

கிழக்கு பார்த்து ஜெபிக்கவும்.

ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுதும் அருகம்புல்லால் கணபதி படம் அல்லது சிலைக்கு அர்ச்சிக்கவும்.

என் மகன் / மகள் (உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்கவும் .

வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

பன்னிரண்டு முக ருத்ராட்சம்(துவாதச ருத்ராட்சம்):


பன்னிரண்டு முக ருத்ராட்சம்(துவாதச ருத்ராட்சம்): 
இந்த ருத்ராட்சம் சூரியக் கடவுளைக் குறிக்கும்.இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர்.இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும் பலத்துடன்,பிறரை ஆட்சி செய்து வருவர்.இந்த பன்னிரண்டு முக ருத்ராட்சத்தை மந்திரிகள்,அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள்,வணிகர்கள்,நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள்,ஆன்மீகப் பலம் வேண்டுவோர் போன்றவர்கள் அணிய வெற்றி மேல் வெற்றியும்,ஆளும் திறமையும் கிட்டும். இது வியத்தக்க வகையில் பலனளிக்க வல்லது."ஓம் நமசிவய" ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

பண வரத்து பெருக பரிகாரம்


பண வரத்து பெருக பரிகாரம்: ஒவ்வொரு மாதமும் வரும் பரணி நட்சத்திரத்தன்று முடிந்தளவு,சர்க்கரை மற்றும் கல்உப்பு வாங்கி வீட்டில் வைக்க பண வரத்து பெருகும். ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Saturday, October 14, 2017

குல தெய்வத்தை வசியம் செய்யும் முறை


குல தெய்வத்தை வசியம் செய்யும் முறை
குல தெய்வம் வசியம் செய்ய ஒரு பௌர்ணமி நாளில் கரு மஞ்சள் செடிக்கு காப்பு கட்டி அந்த மஞ்சளை எடுத்து அரைத்து அதனுடன் ...

ஜவ்வாது
அத்தர்
அரகஜா
புனுகு
ஜாதிக்காய்
ஜாதி பத்திரி
வெட்டிவேர்
பச்சை கற்பூரம்

அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய் விட்டு பதம் வரும் வரைக்கும் நன்றாக 2 ஜாமம் வரைக்கும் அரைக்க வேண்டும்



இந்த மையை காந்தம் ஒட்டாத டப்பியில் பதனம் செய்து வைக்க வேண்டும் பூஜையின் போது குல தெய்வத்திற்கு ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் ஒரு செப்பு தகடு வைத்து அதன் மேல் கருப்பு மஞ்சள் மூன்று எடுத்து வைத்து அதில் மேற்கண்ட அஞ்சனத்தை மஞ்சள் மேல் தடவி பூஜைக்கு தேவையான படையலை படைத்து கொண்டு மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .
குல தெய்வ வசிய மந்திரம்

ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங்
ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம்
பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் )
சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக .

குல தெய்வம் வசியம் செய்ய ஞாயிற்றுக்கிழமை உகந்தது இதற்கு யந்திரங்கள் எதுவும் கிடையாது இந்த கருமஞ்சள் மற்றும் மேற்கண்ட அஞ்சனம் போதுமானது இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும்

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

குல தெய்வத்தை வசியம் அஞ்சனம் கிடைக்கும் .

தித்திக்கும் தீப ஒளி திருநாள் பரிகாரங்கள் !!!

தித்திக்கும் தீப ஒளி திருநாள் பரிகாரங்கள் !!!
தீப ஒளி திருநாள் மஹாலக்ஷ்மி தாயாரின் நாள் என்றே கூறலாம். இந்த நாளில் தீபங்கள் ஏற்றி தாயாரை வழிபட்டு பசுக்களுக்கு மஞ்சள் நிற லட்டு மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுத்து வர நம் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். தீப ஒளி திருநாளில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே உங்களுக்காக அளிக்கிறேன்.
தீப ஒளி திருநாளில் புதியதுடைபத்தில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும்-வறுமையை நீக்கும்.
மஹாலக்ஷ்மி / பெருமாள் கோவிலுக்கு புதிய துடைப்பம் மற்றும் வாசனை ஊதுவத்திகள் இந்நாளில் தானம் செய்யவும்.
கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தேவியின் படத்தில் மாலையாக இட்டு வழிபட்டு பின் அடுத்த நாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர, செல்வ நிலை ஓங்கும்.
வியாபாரத்தில் உள்ளோர் / தொழில் செய்வோர் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.
இந்நாளில் அனுமனை வழிபடுவது சிறப்பு- அனுமனுக்கு ஒரு மண் அகலில் எண்னை விளக்கேற்றி அதில் ஒரு கிராம்பு இட்டு வழிபடுவது நன்மை தரும்.
திருமணமான பெண்களுக்கு இந்நாளில் அழகு பொருட்கள் (முக பவுடர், லிப்ஸ்டிக் போன்றவை) தானம் செய்யவும்.
அதிகாலை ஸ்நானம் (குளியல்) நீரில் சிறிது பால் கலந்து குளிக்கவும்.
பூஜையில் மஞ்சள் கட்டைகளையும் வைத்து பூஜித்து பின்பு அவற்றை பண பெட்டியில் வைத்திருக்கவும்.
அசோக மரத்து இலைகளால் வீட்டின் முன் வாசலை அலங்கரிக்கவும்-மாமரத்து இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
கோமதி சக்கரத்தை கண்டிப்பாக தீப ஒளி நாள் வழிபாட்டில் சேர்த்து கொள்ளவும்.
குபேர மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரவும்.
ஏழு முக ருத்திராட்சம் இந்நாளில் அணிய பணவரத்து இரட்டிப்பாகும்.
தீப ஒளி நாள் இரவு அரச மரத்திற்க்கு அடியில் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும்.தீப ஒளி நாள் காலையில் மரத்திற்க்கு நீர் ஊற்றவும்.
தீப ஒளி நாள் பூஜையில் அரிசியின் மேல் தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும்.
அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்-அசைவம் தவிர்த்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து இறை வழிபாட்டுடன் இந்நாளை இனிதே கொண்டாடி மகிழ்வீராக !!
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Friday, October 13, 2017

குழந்தைப் பேறில்லதவர்களூக்கு


குழந்தைப் பேறில்லதவர்களூக்கு
திருமணம் ஆகி புத்திரபாக்கியம் இல்லாமல் அவதிபடுவோருக்கு ஒரு எளிய பூஜை முறை இதை குரு முகமாக செய்திடவும் முதலில் ஒரு ஹோம குண்டத்தினை பயன்படுத்திட வேண்டும் .பூஜை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திட வோண்டும் பிறகு ஹோம குண்டத்தில் கருங்கலி,நாவல், மர குச்சிகளை கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வோண்டும். பிறகு அக்கினியின் மூலமந்திரத்தை. உச்சரிக்க வேண்டும் .தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின். மந்திரத்தை செல்லி பசும்பால், சந்தனம்,தேன், கலந்த கலவையினை நெருப்பில் விட வோண்டும் .பிறகு புவனையின் மந்திரத்தை செல்லி பூஜையை நிறைவு செய்யவும் பிறகு பாலரிஷ்ட மந்திரத்தை செபித்து உச்சரித்து (தேனை) மந்திரித்து குழந்தை இல்ல தம்பதியருக்கு கொடுக்க வேண்டும் அதை தம்பதியின் மனைவி மாத விலக்கு முடிந்து தலை முழூகிய பின்னர் உண்ணக் கெடுத்து கணவன் உடன் இல்லறத்தில் ஈடுபட்டு வர கருதரிக்கும் குழந்தை உண்டாகும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989