Wednesday, December 13, 2017

சுகர் குண சூரணம் (நீரழிவுச்சூரணம்) பொடி


சுகர் குண சூரணம் (நீரழிவுச்சூரணம்) பொடி:
48 வகையான கூட்டுபொருட்களை கொண்ட சுகர் குண சூரணம் (நீரழிவுச்சூரணம்) சக்கரை நோய்க்கு எடுத்துக்கொள்ளக்கூடிய அதிசிறந்த சித்தமருந்து. இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை பொறுத்து இன்சுலின் ஊசி அல்லது மாத்திரை பயன்படுத்தினாலும் இச்சூரணத்தை பயன்படுத்தலாம். சூரணம் எடுத்துக்கொள்ள பத்தியம் தேவையில்லை . மற்றும் பக்கவிளைவுகள் இல்லை.
நீரழிவு நோய்:
கணையத்தில் இன்சுலின் உற்பத்தியாகாமல் இருப்பதனாலோ அல்லது உடலில் இன்சுலினுக்கு பதிலளிக்காத உயிரணுக்களின் காரணமாக ஒருவருக்கு உயர்ந்த இரத்த சர்க்கரை அளவு ஏற்படுவதால் அவருடைய வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதின் ஒரு பகுதியே நீரழிவு நோயாகும். அடிக்கடி சிறுநீர் கழித்தல், தாகம் மற்றும் பசி அதிகரித்தல் ஆகியவற்றை இந்த உயர் இரத்த சர்க்கரை ஏற்படுத்துகிறது.
செயலின் எல்லைகள்:
இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் இன்சுலினை உருவாக்கும் கணைத்தை தூண்டி, நரம்பு இயக்க கோளாறு, சீறுநீரக நோய், விழித்திரை நோய் முதலிய நீரழிவு நோயின் சிக்கல்களை குறைக்கிறது.
மதுமேகம், அதிக சிறுநீர்போக்கு ஆகியவற்றிக்கு சிறந்தது.
48 வகையான கூட்டுப்பொருள்:
1.சர்க்கரை கொல்லி இலை
2.நாவற்கொட்டை
3.நாவற்பட்டை
4.வேப்ப இலை
5.வேப்பம் பூ
6.வேப்பம் பட்டை
7.வேப்பங்காய்
8.வேப்பமர வேர்
9.மரமஞ்சள்
10.கடலாஞ்சிப்பட்டை
11.சங்க வேர்
12.விஷ்ணு கிரந்தி
13.துளசி
14.துத்தி இலை
15.வெள்ளறுகு
16.மருதம் பட்டை
17.தென்னம் பாளை
18.ஆல விழுது
19.ஆடு தின்னாபாளை
20.ஆவாரம்பூ
21.ஆவாரம் இலை
22.ஆவாரம் காய்
23.ஆவாரை செடி மேல் பட்டை
24.ஆவாரை வேர்
25.அருகம் புல்
26.சீந்தில் கொடி
27.நெல்லி வத்தல்
28.ஆலவிதை
29.அரசவிதை
30.தண்ணீர் விட்டான் கிழங்கு
31.அமுக்காலா வேர்
32.சிறியாநங்கை
33.தான்றிக்காய்
34.கடல் தேங்காய்
35.சுக்கு
36.மிளகு
37.திப்பிலி
38.பொடுதலை
39.சிறுநாகப்பூ
40.அத்திக்காய்
41.வல்லாரை
42.குரோசனை ஓமம்
43.தேத்தான் விதை
44.வெந்தயம்
45.கருவேப்பிலை
46.கீவா நெல்லி
47.பருத்திக்கொட்டை
48.கடுக்காய்
எடுத்து கொள்ளும் அளவு
காலை, மாலை 5 கிராம் அளவு ( சுமார் 1 ஸ்பூன் ) உணவுக்கு ½ மணி நேரத்திற்கு முன் அரை டம்ளர் தண்ணீரில் கலக்கி குடிக்கவும்.
சுகர் குண சூரணம் (நீரழிவுச்சூரணம்) பொடி கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
Email: mmsvguna@gmail.com

Monday, December 11, 2017

வீண் செலவுகள் குறையவும்,சேமிப்பு அதிகரிக்கவும் தாந்த்ரீக பரிகாரம்

வீண் செலவுகள் குறையவும்,சேமிப்பு அதிகரிக்கவும் தாந்த்ரீக பரிகாரம்

1.வியாழக்கிழமை தோறும் துளசிச் செடிக்குப் பால் ஊற்றி வரவும்.

2.சனிக்கிழமை தோறும் சப்பாத்தி அல்லது ரொட்டி தயார் செய்து அதில் நல்லெண்ணெய் தடவி கருப்பு நிறமுள்ள நாய்க்கு சாப்பிடக் கொடுத்து வரவும்.


மேற்கண்ட இரண்டு பரிகாரத்தில் உங்களுக்கு எளிமையானது அதைத் தொடர்ந்து செய்து வர வீண் செலவுகள் குறைந்து,சேமிப்பு அதிகரிக்கத் துவங்குவதைக் கண்கூடாகக் காணலாம்.

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

காதல் வெற்றி பெற


காதல் வெற்றி பெற:
காதல் என்ற மந்திர வார்த்தைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். காதலிக்கிறோம் என்பதைவிட காதலிக்கப்படுகிறோம் என்பதில்தான் சுவாரஸ்யம் அதிகம். என்ன ராசிக்காரர்கள் காதலில் கில்லாடிகள் என்றும் யார், யார் காதலில் வெற்றி பெற முடியும் என்று தெளிவாக கூறியிருக்கிறார்கள் சோதிடவியல் வல்லுநர்கள்.
மேஷ ராசிக்காரர்கள் :
எதிலும் முதன்மையானவராக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் காதலில் நாயகனாக திகழ்வர். ஆனால், இவர்களது குணம் காதலிக்கும்படி இருந்தாலும், இவர்களது எண்ணம் காதலிக்க விடாமல் தடுக்கும். ஆனால் இவர் நிச்சயம் காதலிப்பார், காதலிக்கப்படுவார்.
ரிஷப ராசிக்காரர்கள் :
ரிஷப ராசிக்காரர்கள் என்றால் மிகையில்லை. தாங்கள் விரும்பும் நபரை 'பிராக்கெட்' போடுவதில் கில்லாடிகள் இந்த ராசிக்காரர்கள்.
இவர்களின் காதல் உண்மையானதாகவும், தூய்மையானதாகவும் இருக்கும். ரிஷப ராசிக்கார்ர்களின் காதல் கண்டிப்பாக வெற்றி பெரும். இவர்கள் தாம்பத்தியத்திலும் அதிக ஆர்வம் கொண்டவராக இருப்பார்..
மிதுன ராசிக்காரர்கள் :
மிதுன ராசிக்காரர்கள் தங்களைத் தாங்களே காதலிக்கும் குணமுடையவர்கள். பிறரிடம் இவர்களுக்கு காதல் ஏற்படுவது அரிதே. எதிர்பாலருடன் ஏற்படும் ஆர்வம் நாளடைவில் மறையும். மிதுன ராசிக்காரர்களுக்கு துலாம் ராசிக்காரர்களுடன் நல்ல தாம்பத்யம் அமையும்.
கடக ராசிக்காரர்கள்
கடக ராசிக்காரர்களுக்கு காதல் எந்த வகையிலும் ஒத்துவராது. கடக ராசிக்காரர்களை காதலிப்பவர்கள் சுய மரியாதையையும், யதார்த்தத்தையும் இழக்க நேரிடும். கடக ராசிக்காரர்கள் சில நேரங்களில் காதலில் விழ வாய்ப்புண்டு. அது தோல்வியிலும் முடியலாம். கடக ராசிக்காரர்கள் காதலிப்பதை தவிர்ப்பது நல்லது. இவர்கள் உறவினர்கள், குழந்தைகள் மீதே அன்பு செலுத்தலாம்.
சிம்ம ராசிக்காரர்கள் :
சிம்ம ராசிக்காரர்கள் காதலிப்பதையும், காதலிக்கப்படுவதையும் மிக மிக விரும்புவர். இவர்களுக்கு காதல் என்பது மகத்துவம் வாய்ந்தது. காதல் திருமணம் செய்யும் யோகம் உள்ளது.
சிம்ம ராசிப் பெண்கள் தங்களது கணவருடன் இனிமையான காதல் வாழ்க்கையை வாழ்வர். சிம்ம ராசிக்காரர்கள் யாரை வேண்டுமானாலும் தன் பக்கம் கவர இயலும். அவர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள்ளும் வைத்திருப்பர். இவர்களது திருமண வாழ்க்கை இவர்களது எண்ணப்படி நடக்கும்
கன்னி ராசிக்காரர்கள் :
கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர். இவர்களுக்கு அன்பு சந்தோஷத்தை கொடுக்கிறது.
கன்னி ராசி உள்ளவர்கள் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பதில் சந்தோஷமடைவர். விருச்சிக ராசியுடையவர்களோடு மனதளவிலும்,மகர ராசி உடையவர்களோடு உடலளவிலும் கவரக் கூடியவர்கள்.
துலாம் :
துலாம் ராசிக்காரர்களுக்கு மற்றவர்களை எளிதில் கவரும் ஆற்றல் உள்ளதால் காதல் இவர்களுக்கு கை வந்த கலை. ஆனால், இவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வது உகந்தது அல்ல. காதல் திருமணம் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும் வாய்ப்பு உள்ளது.துலாம் ராசிக்காரர்களுக்கு காதல் உணர்வு அதிகமாக இருக்கும். பெண்ணாக இருந்தால் சிறந்த காதலியாக இருப்பார்.
விருச்சிக ராசிக்காரர்கள்
விருச்சிக ராசிக்காரர்கள் காதலை விரும்புவர். தான் காதலிப்பதை விட, தன்னை காதலிப்பதையே அதிகம் விரும்புவர். தான் பழகுபவர்களிடம் உள்ள எல்லா நல்ல குணத்தையும் கற்றுக் கொண்டு ஒரு சிறந்த மனிதராக இருப்பார். பெண்களை பார்ப்பதை விட, பெண்கள் தன்னைப் பார்க்க வேண்டும் என்று எண்ணுவதால் இவருக்கு காதல் என்பது எட்டாத கனியாகும். இவர்களது வயது ஆக ஆக காதல் எண்ணம் அதிகரிக்கும். காதல் மற்றம் தாம்பத்ய வாழ்க்கையை முற்றும் உணர்ந்தவராக வாழ்வார்.
தனுசு ராசிக்காரர்கள்:
தனுசு ராசிக்காரர்கள் காதல் வெற்றி அடையும். காதலில் திறமைசாலியாக இருப்பார். இவர்களது லட்சியம் உயர்ந்ததாக இருக்கும். காதலில் வெற்றி அடைய அதிகமாக கஷ்டப்படுவார். காதலிப்பதிலேயே தனது ஆயுளில் பெரும்பாலான நேரத்தை செலவழிப்பார். காதல் எண்ணம் அதிகம் இருக்கும். துணையை வெகுவாக விரும்புவார். அவரின்பால் அதிக அன்பு செலுத்துவார்.
தனுசு ராசிக்காரர்கள் மேஷம் / மிதுனம் ராசிக்காரர்களுடன் திருமணம் செய்தல் நலம். மேஷ ராசிக்கார்களுடன் காதல் வயப்படுவர் .
மகர ராசிக்காரர்கள் :
மகர ராசிக்காரர்களுக்கு காதல் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. உண்ணாமல் உறங்காமல் கூட இருப்பார்கள். ஆனால், காதல் இல்லாமல் இருக்க மாட்டார்கள். மகர ராசிக்காரர் காதலியாக இருந்தால் அவரது அன்பு குறைவுதான். அதே சமயம் காதலராக இருந்தால் அவரது காதலுக்கு அதிக வலிமை உண்டு. இவர்களது காதல் எந்த வகையிலும் தவறாக இருக்காது. மகர ராசிக்காரர்களின் காதல் ஆத்மார்த்தமாக இருக்கும்.
கும்ப ராசிக்காரர்கள்:
கும்ப ராசிக்காரர்கள் உண்மையான காதலராக இருப்பர். ஆனால், காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர். புரிந்து கொள்வதும், புரிந்திருப்பதுமே காதல் என்று நம்புவர். காதல் என்பதை மன ரீதியான உணர்வாக மதித்து, காதலரை விரும்பினால் வெற்றி நிச்சயம் கிட்டும்.
மீன ராசிக்காரர்கள் :
மீன ராசிகாரர்களிடம் அன்பும், பொறுமையும் நிலைத்திருக்கும். இவர்கள் எப்பொழுதும் காம இச்சை கொண்டவராக இருப்பவர். இவர்களை யார் நேசிக்கின்றனரோ அவர்களை இவர் நேசிப்பார். இவர்களின் ரகசிய வாழ்வை பற்றி யோசிப்பது கிடையாது. மீன ராசிக்காரர்கள் உணர்ச்சியை தரக் கூடிய செயல்களை செய்பவர். தன்னுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள எதையும் செய்ய நினைப்பவர்கள்.
காதல் வெற்றி பெற,பிரிந்த காதல் ஒன்று சேர தாந்த்ரீக பரிகார யந்திரத்தகடு,தாயத்துக்கள் கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989


Friday, December 8, 2017

மரகத பச்சை (emerald)



மரகத பச்சை (emerald)
ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.
மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.
யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

திடீர் பண வரவிற்க்கு


திடீர் பண வரவிற்க்கு:
பவள மல்லி செடியின் வேரை எடுத்து அதனுடன் ,11 சிகப்பு குண்றிமணி சேர்த்து வெள்ளி தாயத்தில் அடைத்து கழுத்தில் கட்டிக் கொள்ள திடீர் பண வரவு உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


ராஜ வசிய மை செய்முறை


ராஜ வசிய மை செய்முறை:
குரு வாரம் குரு ஹோரையில்,கல்லுருவி மூலிகைக்கு காப்பு கட்டி மறுவாரம் அதே ஹோரையில் சாபநிவர்த்தி மற்றும் மூலிகை மந்திரம் ஒதி ஆணிவேர் அறாமல் எடுக்க வேண்டும்
அதனை நிழலில் உலர்த்தி கருக்கி,கருக்கலுக்கும் சாபநிவர்த்தி செய்ய வேண்டும்.இதனுடன் கோரோஜனை(1கிராம் ஒரிஜினல் கோரோஜனை விலை ரூ3000),சவ்வாது,சேர்த்து சந்தன அத்தர் விட்டு மை அரைக்க வேண்டும்.மை பக்குவதற்க்கு வரவும் வழித்து சிமிழில் அடைத்து கொள்ள வேண்டும்.இதற்க்கு நிவேதனப் பொருட்கள் படைத்து மந்தி உரு கொடுத்து உயிர் ஏற்ற வேண்டும்.
உருவேற்றிய இந்த மையை நெற்றியில் திலகமிட யாவரும் வசமாவார்கள்.
முக்கியாமாக யாரெல்லாம் ராஜ வசியம் பயன்படுத்தலாம்?
அரசர்கள்,பிரபுக்கள்,அந்தணர்கள்,செல்வந்தர்கள்,தொழில் அதிபர்கள்,அரசு அதிகாரிகள்,அரசியல் வாதிகள்,முக்கிய பிரமுகர்கள்,சினிமாத்துறை நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள்,மேல்மட்ட மனிதர்கள் முதல் யாவரும் இந்த மையை பயன்படுத்த வசீகர சக்தியும்,பரஸ்பர உறவும் மேம்படும்.நினைத்த காரிய சித்தியும்,தொழில் வளமும் மேன்மை அடையும்.
ராஜ வசிய மை தேவை மற்றும் மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க
தொடர்புக்கு


ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Tuesday, December 5, 2017

அற்ப ஆயுள் தோஷ நிவர்த்தி


அற்ப ஆயுள் தோஷ நிவர்த்தி:
ஜாதகத்தில் அற்ப ஆயுள் தோஷம் இருப்பின் ஆயுள் குறையும்.
சனிக்கிழமை தோறும் சுத்தமான பசும்பாலில் நீர் சேர்த்து அதனை அரச மர வேருக்கு ஊற்றி வேரை தொட்டு வணங்கி வர ஆயுள் பலம் கூடும்.அற்ப ஆயுள் தோஷம் நிவர்த்தியாகும்.
இதனை தினமும் செய்தால் பித்ரு தோஷம்,பித்ரு சாபம் நிவர்த்தியாகும்.
சகல பிரச்சினைகளுக்கும் தாந்த்ரீக பரிகார முறையில் தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989