Tuesday, August 1, 2017

ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:

ஏவல் பாதிப்புக்குள்ளான வயதான தம்பதியர்:
நேற்று(01/08/2017) திருச்சி உறையூரில் இருந்து வயதான தம்பதியர் ஆலோசனைக்கு வந்தார்கள்.அவர்கள் கால் வலி,கால் எரிச்சல்,உடல் எரிச்சல்,உடல் நடுக்கம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்,அவர்களும் மருத்துவம்,மாந்திரீகம் எத்தனையோ இடத்தில் பார்த்தும் குணமாகவில்லை.பிரசன்னத்தில் பார்க்கும்போது அவர்களோட காலடி மண்,முடி மற்றும் நண்டுகுழி மண்,சுடுகாட்டு மண்,இவைகளை வைத்து பாவை செய்து,எரியும் பிணத்தில் போட்டு மாந்திரீக வேலைகள் செய்து ஏவல் செய்து இருந்தார்கள்.எல்லாத்துக்கும் காரணம் சொத்து பிரச்சினை தான்.மேற்கூரியவைகள் இருப்பின் அவை ஏவலின் அறிகுறிகள் ஆகும்.
அவர்களுக்கு நிவர்த்தி பூஜைகள் செய்து,சாப்பிட மருந்தும் கொடுத்தேன்.
இன்று அதிகாலையில் அவர்கள் போன் செய்து,இரவில் நன்றாக தூங்கினோம்,உடல் எரிச்சல் இல்லை என்று நன்றி சொல்லி ஆனந்த கண்ணீர் வடித்தார்கள்.எனக்கே மனம் நெகிழ்ந்து விட்டது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கடன் அடைய எளிய பரிகாரம்:

கடன் அடைய எளிய பரிகாரம்:
கடன்களால் வெகுகாலம் துன்பப்படும் நபர்கள் ஒன்னேகால் அடி வெள்ளைத்துணியை எடுத்து அதில் 4 பக்கங்களில் சிகப்பு ரோஜாவை வைத்து கட்டி பின்பு நடுவிலும் ஒரு ரோஜாவை வைத்து கட்டி அதை 3 நதிகள் சங்கமிக்கும் இடத்தில் நீரில் விட்டு விட கடன்கள் அடியோடு ஒழியும்.
கடன் பிரச்சினை,பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட

துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட
ஸ்ரீ சரபேஸ்வரர் தோன்றிய காரணம்
இரணியன் என்ற அசுரர் குல தலைவன் பரமனை நோக்கி சாகா வரம் வேண்டி தவம் செய்தான். கடும் தவத்தின் பயனாக பரமனிடம் இருந்து, ” தேவர், மனிதர், விலங்குகள் முதலிய யாவராலும், பகலிலோ அல்லது இரவிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ, எவ்வித ஆயுதங்களாலோ தமக்கு மரணம் ஏற்படக் கூடாது ” என்ற அரிய வரத்தினை பெற்றான்.
தன்னை எதிர்ப்பார் யாரும் இன்றி தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு, தன்னையே கடவுளாக வணங்க வேண்டும், மற்ற யாரையும் தெய்வமாக தொழக்கூடாதெனக் கூறி கொடுமையான ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு பிறந்த மகன் பிரகலாதன். தன் தாயின் வயிற்றில் இருக்கும் வேளையிலேயே நாரத முனிவர் மூலம் திருமால் உபன்யாசம் கேட்டு சிறந்ததொரு பரந்தாமன் பக்தனாய் பிறந்தான்.
எந்நேரமும் நாராயணன் நாமம் சொல்லி வளர்ந்தான். இதனை கண்ட இரணியன் கடும் கோபம் கொண்டான். எவ்வளவு சொல்லியும் தன் நாமம் சொல்லாத பிரகலாதனை, தன் மகன் என்றும் பாராமல் பல வழிகளில் அழித்திட முயன்றான். பரந்தாமனின் அருளால் அனைத்திலிருந்தும் தப்பிய பிரகலாதனை நோக்கி “எங்கெ உன் நாராயணன்” எனக் கேட்க, பிரகலாதணோ ” என் நாராயணன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் ” என்று கூறினான்.
கோபம் கொண்ட இரணியன் அருகில் இருந்த தூணை தன் கதை கொண்டு தாக்க, அதிலிருந்து நரசிம்ம உரு கொண்டு வெளிப்பட்டார் பரந்தாமன். இரணியனது வரத்தின் படியே, மனிதனாகவோ, தேவராகவோ, விலங்காகவோ இல்லாது அனைத்தும் கலந்த கலவையாய் நரசிம்மமாய் வந்து, இரவோ பகலொ இல்லாத அந்தி நேரத்தி, எவ்வித ஆயுதங்களுமின்றி தன் நகத்தினை கொண்டு, வீட்டின் உள்ளும் இல்லாது வெளியும் இல்லாது வாசற்படியில் வைத்து இரணியனை வதம் செய்தார்.
அசுரனின் குருதி குடித்ததால் மதி மயங்கி ஆக்ரோஷமானார் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி.அவரின் கோபம் தணிக்க வேண்டி தேவர்கள் அனைவரும் பரமனை நாட, பரமன் சரபேசப் பறவை உரு கொண்டு வந்து நரசிம்மத்தின் கோபம் தணித்தார். இவ்வாறு பிரகலாதன் மற்றும் தேவர்களது நடுக்கத்தினை தீர்த்ததால் இவர் நடுக்கந்தீர்த்த பெருமான் என்றானார்.
இந்த சரபேசரின் தோற்றம் மிகவும் விசித்திரமானது. மனிதன், பறவை, மிருகம் மூன்றும் சேர்ந்த கலவை தான் சரபேஸ்வரர். தங்க நிறப் பறவையின் உடலும், மேலே தூக்கிய 2 இறக்கைகளும், 4 கால்கள் மேலே தூக்கிய நிலையிலும், 4 கால்கள் கீழேயும், மேலே தூக்கிய ஒரு வாலும், தெய்வீகத் தன்மை கொண்ட மனிதத் தலையும், அதில் சிங்க முகமும் கொண்ட ஒரு விசித்திரப் பிறவியாக உருமாறினார்.
இந்த அபூர்வப் பிறவி தோன்றியதும் போட்ட சப்தத்தில் நரசிம்மர் அடங்கியதாய்ச் சொல்வார்கள். சந்திரன், சூரியன், அக்னி ஆகியவை மூன்று கண்களாகவும், கூர்மையான நகங்களோடும், நாலு புறமும் சுழலும் நாக்கோடும், காளி, துர்க்கா ஆகியோரைத் தன் இறக்கைகளாகவும் கொண்டு வேகமாய்ப் பறந்து, பகைவர்களை அழிக்கும் இந்த சரபேஸ்வரரைப் “பட்சிகளின் அரசன்” என்றும் “சாலுவேஸ்வரன்” என்ற திருநாமத்துடனும் குறிப்பிடுகின்றனர்.
இவரின் சக்திகளாய் விளங்குபவர்கள் ப்ரத்யங்கிரா, மற்றும் சூலினி. இதில் தேவி பிரத்யங்கிரா சரபேஸ்வரரின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியதாகவும், இவள் உதவியுடன் தான் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கியதாகவும் சில குறிப்புக்கள் கூறுகின்றன.
காஞ்சி புராணத்தில் நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கப் பரமசிவன் வீரபத்திரரை அனுப்பியதாகவும், நரசிம்மம் ஆனது வீரபத்திரரைக் கட்டிப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்ததாகவும், அந்தச் சமயம் சிவன் ஒரு ஜோதி ரூபமாக வீரபத்திரர் உடலில் புகுந்ததாகவும், உடனே சரபேஸ்வரராக வீரபத்திரர் உருமாறி நரசிம்மத்தை அடக்கியதாகவும் கூறுகிறது.
லிங்க புராணக் குறிப்புக்களும் இவ்விதமே குறிப்பிடுகிறது. எப்படி இருந்தாலும் சரபேஸ்வரரின் சக்தி அளவிட முடியாதது. சத்ருக்களால் ஏற்படக் கூடிய பில்லி, சூன்யம், ஏவல் போன்றவற்றுக்கு மட்டுமில்லாமல் இவரைத் தரிசித்து முழு நம்பிக்கையுடன் பிரார்த்தித்து வந்தால் எல்லாவிதமான நோய்களையும் தீர்த்து வைப்பார் என்றும் கூறுகிறார்கள். இவரைக் “கலியுக வரதன்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
“நரசிம்ம கர்வ பஞ்சக மூர்த்தி” என்றும் குறிப்பிடுகின்றனர். தற்சமயம் காணப்படும் சரபர் மூர்த்தங்கள் யாவும் பிற்காலச் சோழர் காலத்தில் வந்தவை எனவும் சொல்கின்றனர். பழைய தஞ்சை மாவட்டத்தில் இருந்த தாராசுரம், திருபுவனம் போன்ற ஊர்களில் உள்ள கோவில்களில் சரபேஸ்வரரின் சிற்பங்கள் காணப்படுகிறது.
இதில் திருபுவனம் கோவிலில் சரபேஸ்வரருக்குத் தனி சன்னதி இருக்கிறது. இது தவிர சிதம்பரம் கோவிலிலும் தனிச் சன்னதி உண்டு. ஞாயிற்றுக் கிழமைகளில் இவரை வணங்குவது சிறப்பாகச் சொல்லப்படுகிறது.
துக்கங்கள் நீங்க, தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்ட சரபேஸ்வரர் ஸ்லோகம்
ஹராய பீமாய ஹரிப்ரியாய
பவாய சாந்தாய பராத்பராய
ம்ருடாய ருத்ராய த்ரிலோசனாய
நமோஸ்து துப்யம் சரபேச்வராய
ஸ்ரீ சரபாஷ்டகம்
– இத்துதியை ஞாயிற்றுக்கிழமை, ராகு காலத்தில் பாராயணம் செய்தால் துக்கங்கள் நீங்கும்; தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்

தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்
பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபடவேண்டும். நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். . அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்..
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும். நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம். வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில். ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

உங்கள் ராசிப்படி திருமணமாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்

உங்கள் ராசிப்படி திருமணமாக ஜெபிக்க வேண்டிய மந்திரங்கள்

மேஷம்

தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


ரிஷபம்

தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


மிதுனம்

தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


கடகம்

தினமும் அல்லது சனிக்கிழமை அன்று ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


சிம்மம்

தினமும் அல்லது சனிக்கிழமை அன்று ஓம் சம் சனைச்சராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


கன்னி

தினமும் அல்லது வியாழக்கிழமை அன்று ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


துலாம்
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமை அன்று ஓம் அங் அங்காரகாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.



விருச்சிகம்
தினமும் அல்லது வெள்ளிக்கிழமை அன்று ஓம் சும் சுக்ராய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


தனுசு
தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


மகரம்
தினமும் அல்லது திங்கட்கிழமை அன்று ஓம் சோம் சோமாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


கும்பம்
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமை அன்று ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்.


மீனம்
தினமும் அல்லது புதன்கிழமை அன்று ஓம் பும் புதாய நமஹ என்று 108 தடவை ஜெபித்து வரவும்

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஐங்கோண பஞ்சாட்சர யந்திரம்:


ஐங்கோண பஞ்சாட்சர யந்திரம்:
சிவகுருக்கள்,சிவனடியார்கள் பலர் என்னிடம் உங்களது பதிவுகள் அனைத்தும் மிக சிறப்பாக உள்ளது.அதேபோல் மக்கள் அனைவரும் சிவ வழிபாட்டில் ஈடுபட,அதற்குரிய பஞ்சாட்சர யந்திரத்தகடு,பூசை வழிபாட்டு முறைகளை கற்றுக்கொடுங்கள் என்று என்னிடம் அன்பான வேண்டுகோள் வைத்தார்கள்.
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,பலவிதமான வேலைப்பளுவுக்கு இடையிலும் முதலில் 50 ஐங்கோண பஞ்சாட்சர யந்திரத் தகடு முறையாக பூசை செய்து உருவேற்றப்பட்டுள்ளது.
ஐங்கோண பஞ்சாட்சர யந்திரத் தகடு வைத்து பூஜிப்பதால்சிவகடாட்சம் கிட்டும்,கிரக தோஷங்கள் நீங்கும்,குடும்ப மேன்மையடையும்.அருளும் பொருளும் கிட்டும்.செய்தொழில் வியாபாரம் சிறக்கும்.இன்னும் இதன் பலனை விவரித்துக் கொண்டே போகலாம்.
ஜோதிடர்கள்,மாந்திரீகர்கள் மக்களிடம் கொடுக்க மொத்தமாகவும் யந்திரத்தகடு கிடைக்கும்.
மந்திர உருவேற்றிய ஐங்கோண பஞ்சாட்சர யந்திரத் தகடு கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமணம் கைகூட தாந்த்ரீக பரிகாரம்:


திருமணம் கைகூட தாந்த்ரீக பரிகாரம்:
திருமணம் வயதை எட்டிய ஆண் பெண் இருபாலரும் செய்யலாம்.
பொடித்தேங்காய் மற்றும் கிரிஸ்டல் கல் என்னும் ஸ்படிகல் இவைகளை சிகப்புத்துணியில் பொட்டலமாக முடிந்து பலகையில் வைத்து,நெய் தீபமேற்றி,சுக்கிரபகவான் மூலமந்திரத்தை 108 உரு செபிக்க வேண்டும்.
திருமணம் கைகூடும் வரை வெள்ளிக்கிழமைகள் தோறும் பூஜிக்க வேண்டும்.விரைவில் திருமணம் கைகூடும்.
திருமணத்தடை,திருமணத்தோஷம் நிவர்த்தி செய்ய தொடர்பு கொள்ளலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989