Tuesday, September 25, 2018

கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்


கணவன் மனைவி ஒற்றுமைக்கு உதவும் மந்திரங்கள்:
மந்திரம் 1:
ஓம் காம் காமமாலினி பதிம் மே வசமானய ட்டஹ ட்டஹ ||

சூர்ய அல்லது சந்திர கிரகண நேரத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து மேற்கண்ட மந்திரத்தை 1008 தடவை ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.

அதன் பின்னர் குங்குமம் கஸ்தூரி கோரோசனை மூன்றையும் சேர்த்து அரைத்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும்.தினமும் குளித்து முடித்தபின் கிழக்கு நோக்கி நின்று அல்லது அமர்ந்து வலது கைப் பெருவிரலில் அந்தக் கலவையைத் தொட்டு இம்மந்திரத்தை 7 தடவை ஜெபித்து நெற்றியில் அல்லது புருவ நடுவில் வைத்து வரத் தம்பதிகளுக்குள் ஒற்றுமையும் பிரியமும் உண்டாகும்.
--------------------------------------------------------------------------------------------

மந்திரம் 2 :-

ஓம் ஹும் ஜும் ஸஹ அர்த்தநாரிஸ்வர ரூபே ஹ்ரீம் ஸ்வாஹா

இம்மந்திரத்தை மனைவி 41 நாட்கள் தொடர்ந்து நாள் ஒன்றுக்கு 108 தடவை ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.(மாதவிலக்கு நாட்கள் தவிர இடைவெளி இல்லாமல் 41 நாட்கள் ஜெபிக்கவும்).

-------------------------------------------------------------------------

மந்திரம் 3 :-
ஓம் கம் கம் க்யாம் க்யஹ மம ..............வஷ்யம் குரு குரு ஸ்வாஹா ||

குறிப்பு :
கணவன் ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பத்னி என்ற வார்த்தையும் ,

மனைவி ஜெபித்தால் அடிக்கோடிட்ட இடத்தில் பதி என்ற வார்த்தையும்
சேர்த்து ஜெபிக்கவும்.

இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 27 தடவை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இன்று அல்லது அமர்ந்து ஜெபித்து வரத் தம்பதிகளுக்குள் அன்பும்,ஒற்றுமையும் உண்டாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989