Tuesday, November 13, 2018

வீரபத்திரர்


வீரபத்திரர்:
வீரபத்திரர் சிவபெருமானது நெற்றிக் கண்ணில் இருந்து தோற்றுவிக்கப்பட்ட கடவுளாகக் கருதப்படுகிறார்.சிவபெருமானை மருமகனாகக் கொண்ட கர்வத்தினால் தட்சண் சிவனை மதியாமலும் அவருக்கு கொடுக்க வேண்டிய அவிர்பாகத்தைக் கொடுக்காமலும் யாகத்தை நிகழ்த்தினான். நியாயம் கேட்டு நின்ற தாட்சாயணியையும் மதிக்காமல் பேசவே தாட்சாயணி யாகத்தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொள்ள முனைய, ருத்திர தாண்டவடிய சிவனின் உடலெங்கும
் தோன்றிய வியர்வைத் துளிகள் ஆயிரம் வீரபத்திரராகத் தோன்றி பின் அவை ஒன்றாகியதென்றும், கடுங்கோபத்துடன் யாகசாலை சென்று அங்கிருந்த தேவர், முனிவர் சகலரையும் துவம்சம் செய்தார் என்றும் ஈற்றில் தக்கனின் சிரசை தம் கைவாளினால் அறுக்க அவன் ஆட்டுக்கடா வடிவெடுத்து வீரபத்திரனிடம் மன்னிப்புக் கேட்டு நின்றான் எனவும் புராணங்கள் கூறும்.
வீரபத்திரருக்கு “வீரம்” என்பதற்கு “அழகு” என்றும், “பத்திரம்” என்பதற்கு “காப்பவன்” என்றும் பொருள் கொண்டு “வீரம் காக்கும் கடவுள்” என்கின்றனர். தமிழ்நாட்டிலுள்ள பல சிவன் கோயில்களில் வீரபத்திரர் துணைத் தெய்வமாக வைக்கப்பட்டு தனிக் கோயில்களில் வழிபடப்படுகிறார்.
திருச்செந்தூர்ப் புராணத்தில்

“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு

வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர் நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய

வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”

"மரகத மணிநீலம் கிண்கிணீ ஜாலபத்தம்

ப்ரகடித ஸமுகேச’ம் பானு ஸோமாக்னி நேத்ரம் … சூல தண்டோக்ர ஹஸ்தம்

விருதல மஹிபூஷம் வீரபத்ரம் நமாமி"

என்று வீரபத்திரர் பற்றிய ஒரு தியானஸ்லோகம் சொல்கிறது.

வட மாநிலத்தில் ஹரித்வாரில் தான் தக்ஷன் யாகம் செய்ததும் தாக்ஷாயணி யாக குண்டத்தில் விழுந்ததும் நடந்ததாய்க் கூறுகின்றனர். கங்கால் என்ற பெயரில் உள்ள இடத்தில் தக்ஷேஸ்வர மஹாதேவர் என்ற பெயரில் ஈசன் கோயில் கொண்டிருக்கிறார்.

இங்கே தான் வீரபத்திரரும் காளியும் தக்ஷனையும் அவன் கூட்டத்தாரையும் அழித்ததாயும் கூறுகின்றனர். தக்ஷன் சாகாவரம் பெற்றிருந்ததால் அவன் தலையை வெட்டி அதற்குப் பதிலாக ஆட்டுத் தலையை வைத்ததாகவும் கூறுவார்கள். மேலும் இங்கே சதிகுண்டம் என்ற பெயரிலேயே குண்டம் ஒன்றும் இருக்கிறது.
தோற்றம்[தொகு]
சதி என்கிற தாட்சாயினி தட்சனின் இளைய மகளாவாள். சிவன் மீது கொண்ட காதலால், தவமிருந்து சிவனின் அன்பை பெறுகிறாள். இறைவனான சிவபெருமான் தனக்கு மருமகனாக வந்தால் மேலும் புகழும், அதிகாரமும் என்று நம்பிய தட்சன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.தட்சன் கைலாயம் சென்றபோது, சிவபெருமான் எழுந்துநின்ற வரவேற்காததை நினைத்து வருத்தம் கொண்டார். வருத்தம் சிவன் மீதான கோபமாக மாறியது. அவரை பழிவாங்க பெரும் யாகமொன்றை நடத்தி சிவபெருமானை அழையாமல், மற்ற அனைத்து தேவர்களையும், இறைவன்களையும் தட்சன் அழைத்தார். இதனை அறிந்த சதி தன்னுடைய தந்தையிடம் முறையிட செல்ல சிவபெருமானிடம் அனுமதி கேட்டார். சிவன் அதற்கு அனுமதி தரமறுத்துவிட்டார். இருந்தும் தன் தந்தையின் செயலுக்கு காரணம் அறிந்திட சதி சென்றாள். அங்கு அவமானம் அடைந்து, யாககுண்டத்தில் விழுந்து மாண்டாள். இதனால் சிவபெருமான் ருத்திரன், மகாகாளி, வீரபத்திரன் முதலிய அவதாரங்களை உருவாக்கி தட்சனை அழித்தார்.

வீரபத்திரரின் வழிவந்தவர்கள் மற்றும் அவரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் வீரமுஷ்ட்டி அல்லது வீரமுட்டி என்று அழைக்கபடுவார்கள். வீரமுட்டிகள் தமிழ் நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் .வீரபத்திரசுவாமி வண்ணார்களின் தெய்வமாக வணங்கப்படுகிறது.
மந்திரம்:
" ஓம் காளி தெட்ஷணாமூர்த்தி அகோர வீரபத்திராயா அறு அறு நாசய நாசய சிங்ங வங்ங ஸ்ரீயும் நம சத்துரு படு படு கிரி கிரி கேர கேர சிவா".
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்:
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும். சகல பிரச்சினைகளுக்கும் பரிகார பூஜைகள் மற்றும் தாயத்துக்கள்,தகடுகள் செய்து கொடுக்கப்படும்.
நேரில் வர இயலாதவர்கள்,வெளிநாடு,வெளி மாநிலம் மற்றும் தொலைதூரத்தில் இருப்பவர்கள் பரிகார பூஜை பொருட்கள்,தாயத்துக்கள்,தகடுகள்,வசிய மை,சித்த மருந்துக்கள் கூரியரில் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com