Wednesday, March 26, 2025

தசதீட்சைகள்-ஒர் அறிமுகம்

 

”தசதீட்சை” - ஓர் அறிமுகம்:

  

ஒவ்வொரு கட்டத்தையும் துவக்குதல் அல்லது புதிய கட்டத்திற்குள் பயணித்தல் போன்றவை குருவானவரின் மேற்பார்வையில் நடைபெறுதல் அவசியம் என்கின்றனர் சித்தர்கள். இதனையே பொதுவில் தீட்சைகள் என கூறியிருக்கின்றனர்.


அந்த வகையில் இனி வரும் பதிவுகளில் மச்ச முனிவர் தனது “மச்சமுனி திருமந்திரம்800” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கு தீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம். இவற்றினை “தசதீட்சை” என்கிறார் மச்ச முனிவர்.இந்த தீட்சை முறைகள் மறைபொருளில் அருளப் பட்டிருக்கின்றன.


தனது தீட்சை முறைகளை மச்சமுனிவர் பின்வருமாறு துவங்குகிறார்..


திரமான தீட்சை செப்புவேன் கேளு

கரமான நெல்லிக்கனி யதுபோல

சரமான வாசி சங்கர கெவுரி

வரமான தீட்சை மகிழ்ந்திடக் கேளே.


இந்த படிமுறைகளை தினமும் காலையும் மாலையும் 108 தடவைகள் வீதம், தூய்மையான அறையில் பத்மாசனத்தில் இருந்து செய்தல் வேண்டும். முடியாதவர்கள் தங்களுக்கு வசதியான ஓர் நிலையில் உடலை தளர்வாக வைத்து கண்களை மென்மையாக மூடி, மனதினுள் இந்த மந்திரங்களை ஜெபிக்க வேண்டும் என்கிறார்.


இன்றைய பதிவில் முதலாவது தீட்சையைப் பற்றி பார்ப்போம்.


கேளு அம்மென்று கெடியாக மண்டலம்

நாளுடன் செபிக்கில் நமனது விலகுஞ்

சேலுடன் தேகந் திரமது வாகும்

மாலுடன் சித்தும் வந்திடுந் தானே.


முதல் தீட்சையாக "அம்" என்ற மந்திர உச்சரிப்பை ஒரு மண்டலம் தொடர்ந்து செபித்தால் எமன் அண்ட மாட்டானாம்.மேலும் இந்த மந்திரத்தை செபிப்பவர் உடலானது அழியாத நிலையை அடையும் என்கிறார்.மேலும் சில சித்துக்களும் கைவரப் பெறும்.


......................................................

பிரசன்னம், அருள்வாக்கு கேட்க மற்றும் பரிகாரங்கள்,ஆலோசனைகளுக்கு தொடர்பு கொள்ளலாம்


தொடர்புக்கு 

ஸ்ரீ காளி தேவி

Call(or) whatsapp no:

+91 7598758989

Visit as: mantrakali.blogspot.com