Showing posts with label அஷ்ட கர்மங்களில் மூன்றாவது ஸ்தம்பனமாகும். Show all posts
Showing posts with label அஷ்ட கர்மங்களில் மூன்றாவது ஸ்தம்பனமாகும். Show all posts

Monday, May 21, 2018

அஷ்ட கர்மங்களில் மூன்றாவது ஸ்தம்பனமாகும்


அஷ்ட கர்மங்களில் மூன்றாவது ஸ்தம்பனமாகும்:
ஸ்தம்பனத்தின் அதிதேவதை இந்திரன்
ஸ்தம்பன என்பது எந்த ஒரு இயக்கத்தையும் அப்படியே தம்பிக்கச்செய்வதாகும்,
ஸ்தம்பனம் என்பது எந்தவொரு இயக்கத்தையும் செயல்படாமல் செய்வது ஆகும்.
இதில் பேய்பிசாசு,துஷ்ட சக்திகள் போன்றவைகளை அணுகாமல் ஸ்தம்பிக்க செய்யலாம்.
அதேபோல் தனிப்பட்ட ஒருவரையோ,தொழில் ஸ்தாபனங்களையோ,தெய்வ சக்திகளையோ ஸ்தம்பனமும் செய்யலாம்.
இதனால் தொழில் முடக்கம்,பணமுடக்கம்,தெய்வ முடக்கம்,குடும்ப முடக்கம் போன்ற கெடுபலன்கள் ஏற்படும்
ஸ்தம்பன வித்தைக்கு கட்டு கட்டுதல் என்ற பெயரும் உண்டு.
ஸ்தம்பனத்தின் எட்டுவகை
1)சர்வ ஸ்தம்பனம்
2)சுக்கில ஸ்தம்பனம்
3)ஆயுத ஸ்தம்பனம்
4)மிருக ஸ்தம்பனம்
6)அக்கினி ஸ்தம்பனம்
7)தேவ ஸ்தம்பனம்
8)சர்ப்ப ஸ்தம்பனம்
வருந்திமன துரிமையினால் வாசிகொண்டு
மகத்தான கேசரியில் மனக்கண்சாத்தி
தெரிந்துஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும்சுகசுகசுவாகாவென்று
திறமாக உருசெபிக்க செயலைக்கேளு
விரிந்துபஞ்ச கோணமதில் நடுவேவிந்து
விந்துநடு ஸ்ரீயும் நன்றாய்ச்சாத்தே.
நன்றாக கேசரியில் மனதைவைத்து
நன்மையுடன் மானதமாய்ப் பூசைபண்ணி
குன்றாமல் மந்திரத்தைத் தினம் நூறப்பா
குறையாமல் உருவேற்ற குணத்தைக்கேளு
விண்டதொரு எட்டுவகைத் தம்பனந்தான்
விபரமுடனின்று விளையாடும்பாரு
மண்டலத்திற் சென்றுவிளையாடுதற்கு
மகத்தான வித்தையடா மகிழ்ந்துபாரே.
பாரப்பா மனங்குவிந்து பதியில்நின்றால்
பத்தியுடன் சகலசித்து மாடலாகும்
ஸ்தம்பனம் மந்திரம்:
புதன் கிழமை நாளில் உடல் மன சுத்தியுடன் பச்சை நிற வஸ்திரம் அணிந்து தென்கிழக்கு திசை நோக்கி பலாபலகையில்
அமர்ந்து கொண்டு ஒரு செம்பு தகட்டில் ஐங்கோணம் (5 ஸ்டார்)
போட்டு அதன் நடுவில் ஒரு வட்டம் போடவும்,
அவ்வட்டத்தினுள் ஸ்ரீயும் என்று எழுதவும்,
பின்னர் அந்த தம்பனச்சக்கரத்தினை உன் எதிரில் வைத்து அதற்கு தாமரை மலர் சாற்றி ஆதளை எண்ணை ஊற்றி விளக்கேற்றி
வைத்து முறையான பூசை பொருட்களை வைத்துக்கொண்டு மனதை ஓர்நிலைப்படுத்தி புருவநடு மையத்தில் குவித்து
"ஓம் ஐயும்கிலியும்ஸ்ரீயும் ரீயும் சுகசுக சுவாகா"
என்ற மந்திரத்தை நாளொன்றுக்கு 108-உரு வீதம் 48-நாட்கள்
செபித்தால் மந்திரம் சித்தியாகும். மந்திரத்தை எண்ணிகை
குறையாமல் 48 நாட்கள் செபித்தால் எட்டுவகை தம்பனமும்
சித்தியாகும். தம்பனம் ஒரு மகத்தான வித்தையாகும்.
தம்பனத்தின் அதிதேவதை இந்திரன் தம்பன சித்தியினால்
சகலசித்தும் ஆடலாம்
அபிசார தோஷ நிவர்த்தி:
ஏவல் பில்லி சூன்யம் செய்வினை கோளாறு,பேய்பிசாசு,தீயசக்திகள்,கண்திருஷ்டி கோளாறுகள்,மனக்கோளாறு,மனபயம்,தீராத வியாதி,சாபதோஷம்,கிரகதோஷம்,தெய்வகுற்றத்தால் ஏற்படும் தோஷம்,மாந்திரீக பாவைகள் மூலம் ஸ்தம்பன கட்டுக்களையும் , சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க, தீர்வு காண அணுகவும்.
சகல தோஷங்களும் நிவர்த்தி செய்து பூஜைப் பொருட்கள் கொடுக்கப்படும்.
தொடர்புக்கு
+917598758989