Showing posts with label குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம். Show all posts
Showing posts with label குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம். Show all posts

Tuesday, May 30, 2017

குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம்


குழந்தைக்கு திருஷ்டி ஏற்படாமல் இருக்க பரிகாரம்

குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும்.
அழகான சிறு குழந்தைகளைப் பார்த்தால் அதோடு பேச வேண்டும். அதைப் பார்த்து சிரிக்க வேண்டும். அதை தொட்டு முத்தம் கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவாகும். ஆனால் ஒருவர் பார்வை போல், மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலர் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். அவர்கள் கண்ணில் இருந்து வரும் கதிர்வீச்சு ஊறுவிளைவிக்கும் தன்மையைக் கொடுக்கலாம். அதனை கண் திருஷ்டி என்பார்கள்.
அங்ஙனம், திருஷ்டி ஏற்படாமல், பிள்ளை செழிப்போடும், சிரிப்போடும் இருக்க வேண்டுமானால், தாய் தன் குழந்தைக்கு ஒப்பனை செய்யும் பொழுது, கன்னத்தில் கறுப்புப் பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விடவேண்டும். அப்பொழுதுதான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது.