Showing posts with label சூனியம். Show all posts
Showing posts with label சூனியம். Show all posts

Tuesday, March 27, 2018

பில்லி, ஏவல், சூனியம், வசியம்



பில்லி, ஏவல், சூனியம், வசியம்:
பில்லி, ஏவல், சூனியம், வசியம் என பல அபிசார தோஷங்கள் நீங்க சிறந்த வழி மனதை ஒருமுகப்படுத்தி இறைவழிபாடு செய்யவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். இதை பல ஆண்டுகளுக்கு முன்பே மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாம் என்று அகத்தியர் கூறியுள்ளார் இன்றைக்கு பல திரைப்படங்களும், தொலைக்காட்சி சீரியல்களும், பில்லி, சூனியம், செய்வினையை வைத்து ஓட்டிக்கொண்டுள்ளன. இந்து மரபியலில் மாந்திரிகம் பற்றிய பழைய நூல்கள் பல நமக்கு கிடைத்திருக்கின்றன. அதர்வண வேதத்திலும் மாந்திரிகம் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. இந்த வகையில் "உத்திர காலாமிர்தம்" என்ற நூல் முக்கியமானதாக கருதப் படுகிறது. மாந்திரிக முறைகள் பெரும்பாலும் ஒரு மனிதன் தான் விரும்பிய அல்லது விரும்பாத மனிதன் அல்லது மனிதர்களை தன்னுடைய இச்சைப் படி ஆட்டுவிப்பதாகவே இருக்கிறது. இவை பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதாக தேவையை முன்னிட்டு மாறுபடுகின்றன. இவை பற்றிய சுருக்கமான தெளிவுகளை இன்றைய பதிவில் பார்ப்போம்.
பில்லி:
மாந்திரிகம் என்ற உடன் நம் நினைவுக்கு வருவதே இந்த வார்த்தைதான். ஒரு மனிதனின் வழக்கமான செயல்பாடுகளில் இருந்து குழப்பி அவரது எண்ணம், செயல், சிந்தனைகளை நம் கட்டுக்குள் கொண்டு வந்து அவரை நம் விருப்பப்படி ஆட்டுவிக்கும் மாந்திரிக முறையே பில்லி எனப்படுகிறது. சூனியம் சூனியம் என்றால் ஒன்றுமில்லாத ஒரு நிலை .அதாவது ஒரு மனிதனை ஒன்றுமில்லாமல் போகச் செய்வதன் மூலம், அவனை முடக்குவது அல்லது அழிப்பதே இந்த வகை மாந்திரிகமுறை. இவை பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு மனிதனின் ஆடை, அணிகலன்கள், முடி, காலடி மண் போன்றவைகளைக் கொண்டு செய்யப் படுகிறது. வசியம் :
தான் விரும்பிய அல்லது விரும்பாத ஒருவரை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுவதுதான் வசியம். இது ராஜவசியம், லோகவசியம், சர்வவசியம், மிருகவசியம், ஆண்பெண் வசியம் என தேவைகளின் அடிப்படையில் செய்யப் படுகிறது. பெரும்பாலும் இந்த வகையில் ஆண்கள் பெண்களுக்கும், பெண்கள் ஆண்களுக்கும் செய்கின்றனர். பெரிய அளவில் ஏமாற்று வேலைகள் நடப்பதும், ஏமாறுவதும் இந்த வகையினரே!
ஏவல் :
ஏவல் என்பது ஒருவரை, அவன் விரும்பாத அல்லது உடன்படாத காரியம் ஒன்றினை செய்திடும் படி ஏவுதல் ஆகும். பூசையில் வைத்து மந்திரசக்தியூட்டப் பட்ட உணவுப் பொருட்களை உண்ணக் கொடுப்பதன் மூலமாக ஒருவரை ஏவலில் சிக்க வைக்க முடியுமாம். இந்த வகையில் நன்மையும் செய்யலாம், தீமையும் செய்ய முடியும்.
செய்வினை:
செய்வினை தனக்கு விருப்பமில்லாத ஒருவன் எல்லா வழிகளிலும் கெட்டு அழிந்து போக செய்ய வேண்டி செய்யப்படும் மாந்திரிக முறையே செய்வினை எனப்படுகிறது. மிகவும் கொடுமையான மாந்திரிக முறைகளில் இதுவும் ஒன்று.
வைப்பு :
இதுவும் செய்வினையைப் போன்றதே. மந்திர சக்தியூட்டப் பட்ட பொருட்களை ஒருவரின் இருப்பிடத்தில் அவருக்கு தெரியாமல் வைத்து வைத்து அதன் மூலமாக அவருக்கு கெடுதல் செய்வதே வைப்பு முறையாகும். பூசிக்கப்பட்ட யந்திர தகடுகள், மருந்துகள் போன்றவை இவ்வாறு வைக்கப்படுகின்றன. இவை தவிர இறந்து போனவர்களின் ஆவிகளைக் கொண்டு செய்யப்படும் மாந்திரிக முறைகளும் இருக்கின்றன.
ஏவல் பில்லி சூன்ய வகைகள் :
ஒவ்வொரு சப்தத்திற்கும் ஒரு அதிர்வு உண்டு.
அந்த அதிர்வு நேர்மறையாகவோ
அல்லது எதிர்மறையாகவோ
(Positive or negative) இருக்கும்.
மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாகவும்
அவற்றைக் கேட்பதின் மூலமாகவும்
நல்ல பலன்களை அடைய முடியும்.
அதே போல்
தீமை விளைவிக்கும் மந்திரங்கள்
தாந்த்ரீகம் அல்லது செய்வினை
செய்வோர்கள் மந்திரவாதிகள் !!
ஏவல் பில்லி சூன்யம் செய்வதில்
பல வகைகள் முறைகள் உண்டு.
1.காலடி மண் :
ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.
2.சுடுகாட்டு சாம்பல் :
தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால்
அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.
3.முட்டை :
மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.
4.எந்திர தகடு :
நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.
5.சுண்ணாம்பு :
சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.
6.எலுமிச்சை :
சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.
7.மந்திர பாவை (பொம்மை) :
சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக
அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.
இன்னும் :
மோகினியை வைத்து செய்வது,
துர்தேவதைகளை வைத்து செய்வது,
சாத்தானை வைத்து செய்வது
என்று பல வகைகள் உண்டு.
கெடுவான் கேடு நினைப்பான் !
ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன்
அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான்.
ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும்
98 வருடங்கள் துன்பப்பட வேண்டும்.
மனோவசியம் உங்களிடம் இண்டெர்நெட் இணைப்பு ,ஹெட்ஃபோன்,சாய்வு நாற்காலி இருக்கிறதா, அப்படியென்றால் வாருங்கள் வலை மூலம் வசியம் செய்து காட்டுகிறேன் என அழைப்பு விடுத்துருக்கிறார் பிரிட்டிஷ் மனோவசிய நிபுணர் ஒருவர். இண்டெர்நெட் வ‌ழியே எப்ப‌டி ம‌னோவ‌சிய‌ம் செய்ய‌ முடியும் என்ற‌ ச‌ந்தேக‌ம் ஏற்ப‌ட‌லாம்.இது சாத்திய‌மே என்று சொல்லும் ஹுயுஜ்ஸ் ஹெட்ஃபோன் மூல‌ம் த‌ன்னிட‌ம் காதுக‌ளை கொடுத்தால் போதும் வ‌சிய‌ம் செய்துவிடுவேன் என்கிறார். மனநலம் குன்றுதல் மனநலம் பற்றியும் மனநோய்கள் குறித்தும் எம் மக்களிடையே - படித்தவர் உட்பட - பொது அறிவும் புரிதலும் மிகக் குறைவாகவே இருந்து வருகிறது. இதன் காரணமாக, மன நோயாளர் மீது பாரபட்சமும் ஏன், வெறுப்பும் குரோதமும் காட்டப்படுகிறது. குடும்பங்களிடையே அது ஓர் அவமானமாக கருதப்படுகிறது. மனநோயுற்றவர்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப் படுகிறார்கள். அவர்களை கண்டு சமூகம் பயப்படுகிறது ('பராசக்தி' வசனம்!). மாயம் மந்திரம் மாந்திரீகம் மற்றும் மனோவசியம் மற்றும் மனநலம் குன்றுதல் பற்றி மேலே கூறப்பட்டவைகளை படித்ததில் இருந்து நமக்கு கீழ்கண்ட விஷயங்கள் தெளிவாகின்றன: •மாந்திரீகத்தின் முக்கிய செயல்பாடு ஒருவரின் மனதை சிதைத்து அதன் மூலம் அவரை செயலற்றவராகவோ அல்லது பிறர் பேச்சை கேட்பவராகவோ மாற்றுவது. •உணவில் நஞ்சுத்தன்மையை செலுத்தி அதன் மூலம் உடல் நிலையை பாதிக்க செய்வது. •ஒருவரின் பார்வையிலோ பயம் தரும் விஷயங்களை வைப்பது அல்லது காதுபட பயம் தரும் விஷயங்களை பேசுவது அதனால் அதிக பயம் கொள்ள செய்வது. ஜோதிடமும் மனோவசியமும்: •மந்திரமோ அறிவியலோ! எந்த வகையில் ஒருவர் மனதை கட்டுபடுத்தினாலும் அதற்கு காரகன் சந்திரனே. "சந்த்ரமா மனஸோ ஜாத:" என்கிறது புருஷ சூக்தம். சந்திரன் பலமிழந்த நிலையில்தான் ஒருவரை மந்திரம், மாந்திரீகம் வசியம், ஹிப்னாடிஸம், மெஸ்மரிஸம் எந்த முறையிலும் கட்டுபடுத்த முடியும். •பில்லி சூனியம் வைப்பவர்கள் கூட எல்லாருக்கும் வைத்துவிடுவதில்லை. யாருக்கு வைக்கவேண்டுமோ அவருக்கு ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்து அதனை தொடர்ந்து கோசாரத்திலும் சந்திரன் நிலை கெட்டு இருந்தால் மட்டுமே செய்ய உடன்படுவார்கள். பாதிப்படையும் கிரக நிலை: •லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 தொடர்பு பெற்று பலமிழந்த நிலையில் இருப்பது. •சந்திரன் லக்னத்திற்க்கு 4/8/12 ஆகிய வீடுகளில் நிற்பது. •சந்திரன் நீசமடைந்து சனியுடன் சேர்ந்து நிற்பது •சந்திரன் ராகுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது. •ஆத்ம காரகனாகிய சூரியன் கேதுவோடு சேர்ந்து கால புருஷனுக்கு 6/8/12 வீடுகளில் நிற்பது. •தேய்பிறையில் பஞ்சமிக்கு பிறகு வரும் திதிகளில் குறிப்பாக அஷ்டமியில் பிறந்திருப்பது. •சட்பலத்தில் சந்திரன் குறைந்த பக்ஷ பலம் பெற்று நிற்பது. மனபாதிப்பு எப்போது ஏற்படும்? •சந்திராஷ்டம காலங்கள், அமாவாசை போன்ற சந்திரபலம் குறைந்த தினங்கள் •ஏழரை, அஷ்டம அர்தாஷ்டம சனி காலங்கள் •சந்திரன்/சனி/ ராகு தசாபுத்தி காலங்கள் •சந்திரன் கேது புத்தி காலங்கள். •சூரியன் /ராகு/ கேது தசா புத்தி காலங்கள்.
யாரிடம் அபிசாரமுறைகள் பயனளிக்காது? •வேதத்தை ஓதும் அந்தனர்களிடம் அபிசாரம் பயனளிக்காது. அதாவது வேதியர்கள் அனைவரும் குருவின் ஆதிக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். எனவே குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் தெய்வாம்சம் நிறைந்திருப்பதால் அவர்களிடம் அபிசார வித்தைகள் பயனளிக்காது. •தற்கால அறிவியல் சார்ந்த மனோவசிய முறைகளும் கூட குரு ஆதிக்கம் நிறைந்தவர்களிடம் பயனளிக்காது. ஏனென்றால் அவர்கள் சிறந்த மனோதிடத்துடன் சிந்தனையாளர்களாகவும் இருப்பார்கள். •காயத்ரி மந்திர ஜெபம் செய்பவர்களிடம் அபிசார வித்தைகள் அனுகாது. •ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை, சுவாதி மற்றும் சதயத்தில் பிறந்தவர்களிடமும்; •கேதுவின் நட்சத்திரங்களான அஸ்வினி மகம் மற்றும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள். •லக்னத்தில் ராகு அல்லது கேது இருப்பவர்கள். •கிரஹன காலங்களில் பிறந்தவர்கள். •உணவின் காரகன் சந்திரன். தாய் அல்லது மனைவி மற்றும் நெருங்கிய ரத்த சொந்தங்கள் சமைத்ததை தவிர மற்ற இடங்களிலும் மற்ற உணவுகளையும் சாப்பிடாதவர்கள். •யோகா, ப்ராணாயாமம், தியானம் செய்பவர்களிடம் அபிசாரவித்தை பலனளிக்காது ஜோதிட பரிகாரங்கள் •குல தெய்வ வழிபாடு மற்றும் பித்ருகள் வழிபாடு. •ராகு/கேதுக்கள் ஆதிக்கம் கொண்ட ஸ்ரீ லக்ஷமி நரசிம்மர் வழிபாடு மற்றும் ப்ரத்யங்கிரா வழிபாடு மற்றும் காளி வழிபாடு. •மனோ பலம் தரும் திருக்கடையூர் அபிராமி வழிபாடு மற்றும் குணசீலம்,திருப்பதி வழிபாடுகள். •சந்திரனுக்கு வரமளித்த சந்திர மௌளீஸ்வரர் மற்றும் காமாக்ஷி வழிபாடுகள். •மனதை ஒருமுகப்படுத்தும் தியான பயிற்சிகள். •சந்திரனுக்கு அதிதேவதையான அம்பாள் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, துர்கா சப்தஸ்லோகி பாராயணம் செய்பவர்கள், மேரு, ஸ்ரீ சக்ரம் இவற்றுடன் வலம்புரி சங்கு, பசு இவற்றை பூஜிப்பவர்கள் ஆகியவர்களை அபிசாரங்கள் நெருங்குவதில்லை.
செய்வினை வைத்திருப்பதை எப்படி கண்டுபிடிக்கலாம்? அதற்கான அறிகுறிகள் இவைகள் தான்...
செய்வினை என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலருக்கு பயமும் பலருக்கும் சிரிப்பும் வரலாம். ஏவல், பில்லி, சூனியம் ஆகியவை நமக்கு உண்டாகியிருக்கிறதா இல்லையா என்று கண்டுபிடிப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளலாமா?
பாசிட்டிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி இரண்டையும் அறிவியல் ரீதீயாக நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதில் உள்ள நெகட்டிவ் எனர்ஜி எப்படி நம்மைத் தாக்குகிறது. நம்முடைய
தேவையில்லாமல் காரணமே இல்லாமல் உறவினர்கள் உங்களையோ நீங்கள் அவர்களையோ ஒதுக்கி வைப்பது...
நீங்கள் பணிபுரியும் இடங்களில் உங்களால் சௌகரியமாக இருக்க முடியாமல் இருப்பது. வேலையை செய்ய முடியாமல் அதிக அசதியாக இருப்பது
திடீரென சம்பந்தமே இல்லாமல் நோய் தாக்குவது. தோள் பட்டைகளில் வலியும் தாங்க முடியாத பாரமும் இருப்பது
காரணமில்லாமல் மூட்டு, எலும்புகளில் வலி உண்டாவது...
தொடர்ந்து தோல்விகளைச் சந்திப்பது...
மருத்துவக் காரணம் ஏதுமில்லாமல், முடி ஏராளமாகக் கொட்டிப்போவது...
உடலில் எந்த பிரச்னையும் இல்லாதபோதும் நகங்கள் மட்டும் கருத்துப் போவது...
ஒரே அறையில் இருக்க விரும்புவது, அந்த அறையை விட்டு வெளியே வர விருப்பமில்லாத மனநிலை உண்டாவது
திடீரென சம்பந்தமே இல்லாமல் தற்கொலை எண்ணம் தோன்றுவது...
இந்த அறிகுறிகள் வந்துபோனால் செய்வினை இருப்பதற்கான அறிகுறிகளாகக் கூறப்படுகிறது.
பிரசன்னம் கேட்க,ஆலோசனைகள் பெற:
அருள் வாக்கு பிரசன்னம்,ஆரூட பிரசன்னம்,ஜோவி பிரசன்னம்,வெற்றிலை பிரசன்னம் பார்க்க கேட்க,
அருள் வாக்கு ஜோதிடர் ஸ்ரீ காளி தேவி அம்மா அவர்களிடம் ஆசி பெற,ஆலோசனைகள் பெற,
சென்னை நண்பர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு நேரில் வந்து உங்களது அனைத்து பிரச்சினைகளுக்கும் ஆலோசனை பெறலாம்.
ROOM NO:410
கிருஷ்ணா லாட்ஜ்,
13,ராஜா பாதர் தெரு,
பாண்டி பஜார்,
திநகர்,
சென்னை-17.
தேதி:01/04/2018.
கிழமை:ஞாயிறு
போன்:+917598758989
EMAIL: mmsvguna@gmail.com
VISIT AS: mantrakali.blogspot.com,
முன்பதிவு செய்து கொள்ளவும்.

Wednesday, March 22, 2017

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை


ஏவல், பில்லி, சூனியம், செய்வினை
இந்த செய்வினை அல்லது இடு மருந்து கொடுப்பது என்பது பல கால காலமாய் இருந்து வருவது உண்டு. மேலும் தமிழகத்தில் ஒரு கிராமம் முற்றிலுமே இந்த தொழிலை செய்து வருவது பலருக்கு தெரிந்திருக்கும்.எதிரிக்கு வாரிசு இல்லாமல் போக, தொழிலில் நஷ்டம் வர, அடியோடு மாரணம் செய்ய,ஆண் பெண் வசியம், கணவன் மனைவி வசியம், கணவன் மனைவியை சேர்க்க பிரிக்க, காதலர்களை சேர்க்க பிரிக்க என பல எதிர்மறை விஷயங்களுக்கு இவை பிரதானமாக பயன்படுகிறது . பல் வேறு வகை மூலிகைகளையும் இவற்றுக்கு பயன்படுத்தலாம். உதாரணமாக பின்துடரி , ஆடை ஒட்டி, வெல்லாடனை போன்றவை மிக அதீத உடல் நசிவை தரக்கூடிய, செய்வினை பிரயோகங்களில் உபயோகப்படுத்தும் மூலிகைகள். ஆங்கிலத்தில் இவைகளை ' டாக்சிக் ஹெர்பல்ஸ்' என்பர். எவற்றை செய்தாலும் நஷ்டம், எதிலும் தோல்வி, எவ்வளவு புத்திசாலிதனத்துடன் செய்தாலும் தோல்வி, எந்த கோவில் குளம் சென்று வந்தும் பலன் இல்லாத தன்மை, திடீர் என கடன் எனும் பெரும் குழியில் மாட்டி கொள்வது போன்றவை தொழில் நசிவை மற்றும் அழிவை தருவதற்காக எதிரிகளுக்கு செய்யப்படும் ஸ்தம்பன மற்றும் கொடிய ஆக்ரூஷன நிலைகள். பேய்மிரட்டி, நத்தை சூரி, தலைச்சுருள் , ஆதிக்கொடி, காட்டாடி, செந்தாளி போன்ற சிலவற்றை ஆக்ரூஷன மந்திர கட்டுகள் கட்டி காற்றில் வெளியிட்டால் அணைத்து நாச வேலைகளையும் செய்யும் . இது பற்றி மேலை நாட்டு ஆய்வுகள் பல ஆங்கிலத்தில் உண்டு, முக்கியமாக 'சிஷோபிரிநியா' எனப்படும் ஒரு வகையான மூளை தொந்திரவு அனேகமாக இதில் சிக்கி கொண்ட பலருக்கு ஏற்பட்டு இருப்பதை கண்டு வருகிறோம். ஆய்வுகளின் முடிவுகளும் மேற்கண்ட நோய் மற்றும் வயிறு மற்றும் சுவாச கோளாறுகள் மற்றும் கால் முட்டிகளில் கோளாறு போன்றவை பிரதானமாய் ஏற்படுவதாக தெரிவிக்கிறது. அடுத்ததாக இவை காலடி மண், நகம், உடுத்திய துணி போன்றவற்றை வைத்தும் செய்யப்படுவது உண்டு-முக்கியமாக ஆண் பெண் சம்பந்தப்பட்ட அணைத்து விஷயங்களும் இம்முறையில் செய்யப்படுகிறது.ஆகையால் தான் வெட்டிய நகத்தை கீழே போடக்கூடாது, மற்றும் முடி உதிரக்கூடாது அப்படியே உதிர்ந்தாலும் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் வெளியே சென்று வந்தால் கண்டிப்பாக கால்களை அலம்ப வேண்டும் எனவும் நம் முன்னோர்கள் கூறி வைத்தனர். தற்போது இவற்றை இளைய சமுதாயம் கண்டு கொள்வதாக தெரியவில்லை. மலையாள மாந்த்ரீக முறைகளில் கடைபிடிக்கப்படும் யட்சிணி அல்லது சாத்தன் முறைகளில் நறுமண புகைகளின் மூலம் அவற்றை வசீகரித்து தேவைப்பட்ட மாந்த்ரீக காரியங்கள் சாதிக்கப்படுகின்றன . இதில் பல அதீத நுட்பங்களும் சூட்சுமங்களும் உண்டு. உதாரணமாக மரிகொளுந்து, சம்பங்கி போன்றவற்றை பரவ விடும் பொழுது அஷ்ட கர்மங்களில் ஒன்றான வசியம் எற்படுத்தபடுகிறது. ஆக்ரூஷனம், உச்சாடனம் மற்றும் வித்வேஷனங்கள் செய்ய சாம்பிராணியுடன்,குங்கிலியம் மற்றும் மிளகாய் சேர்த்து எரிக்கப்படுகிறது. தேவ கணங்களை வசீகரிக்க அரசன் குச்சிகள் எரிக்கப்படுகிறது. முக்கியமாக முதலில் எந்த முறைப்படி பாதிக்கப்பட்ட நபர் கட்டுண்டு உள்ளார் என்பதை அறிய முற்பட்டு பின்பு எத்தனை காலமாய் பாதிக்கப்பட்டுள்ளார் என அறிந்து, அவரின் புற ஒளி தோற்றம் எதை குறிப்பிடுகிறது , உடலில் உள்ள சக்கரங்களின் நிலை எவ்வாறு உள்ளது என பார்த்து அதற்கேற்றவாறு தீர்வு கொடுப்பது சிறந்ததாக இருக்கும். மனித உடலில் மஹா சக்தியான தனஞ்செயன் எனப்படுகிற
(தச வாயுவில் ஒன்று) காற்றின் சக்தி ஒளியை வெளிப்படுத்துகிறது. இறந்த உடலை அழித்து மண்ணோடு கலக்கும் பொழுது வெளிவருவதும் இந்த தனஞ்செயன் என்கிற காற்று தான் என்கிறார் திருமூலர். தனஞ்செயன் தவிர மற்ற ஒன்பது வாயுக்களும் நம் உடலின் ஒன்பது நாடிகளுக்குள் சென்று செயலாற்றுகிறது,எதிர்மறை சக்திகள் மற்றும் ஏவல் போன்றவை நம் உடலில் மட்டும் இல்லாமல் நம் வசிப்பிடம் மற்றும் வசிப்பிடத்தில் உள்ள பழைய பொருட்கள், ஓடாத கடிகாரம், உபயோகமற்ற சாமான்கள் மற்றும் நாற்காலிகள் போன்றவற்றிலும் படிந்திருப்பதை கண்டுள்ளோம். இதுவும் பெரியோர்கள் முன்பே சொல்லி வைத்த விஷயம் தான். பழையன கழித்தல் அவசியம் இருப்பின், புதியன நல்லன புகும் என்று.

மிகவும் கூட்டமான நெரிசல்களில் அடிக்கடி பயணம் செய்வோர், ரயில் மற்றும் கூட்டமான பேருந்தில் பயணம் செய்வோர், மருத்துவமனை, தியேட்டர் போன்றவற்றில் வேலை செய்வோர்களுக்கு 'Accidental Energy Transfer' எனப்படும் "தற்செயலாக உண்டாகும் எதிர்மறை சக்தியின்' பாதிப்புக்கள் இருக்கும்-பெரிய பாதிப்புக்கள் இல்லாவிட்டாலும் இனம் தெரியாத பயம்,மனச்சோர்வு, உடல் சோர்வு போன்றவை இவர்களை வாட்டி வரும். இவர்கள் அடிக்கடி 'ராக் சால்ட்' குளியல் செய்து வருவது அவசியம்.

நம் அனுபவத்தில் இவற்றை எல்லாம் வரும் முன் காத்து கொள்வது தான் சிறந்ததாக தெரிகிறது.

இடு மருந்து பாதிப்பு இருப்பதாய் தோன்றினால் காலையில் வெறும் வயிற்றில் சூடான சாதத்துடன் வெள்ளை பூசணியை சேர்த்து குழைய வேகவைத்து உப்பு காரம் எதுவும் சேர்க்காமல் உண்டு பார்க்கலாம். பாதிப்புகள் இருப்பின் வாந்தி வந்து வெளியேறும்-ஆனால் இது மிகவும் சாதாரண முறை தான்.

ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண,

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989