Showing posts with label பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்.. Show all posts
Showing posts with label பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்.. Show all posts

Sunday, January 15, 2017

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்.


பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட 
லக்ஷ்மி கலசம்.
-----------------------------------------------------------------------------
நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள
ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டான
முறைகளை செய்வதில்லை அப்படியே
செய்தாலும் முறையாக செய்வதில்லை
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து
அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தயும் வியாழக்கிழமையே
வாங்கி வைத்துக்கொள்ளவும்
வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள்
மேற்கூறிய அனைத்து பொருளையும்
கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க
விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்
வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து
மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ
என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள
வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப
தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை
கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்
வைக்கவும்,
வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்
கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை
வணங்க தொடங்கியதும் அடுத்த
வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை
கண்கூடாக உணரலாம்
இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்
வளம் பெற வேண்டுகிறேன்,
108முறை கூற வேண்டிய மந்திரம்
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ