Thursday, January 5, 2017

காதல் திருமணம் நினைத்தபடி நடக்க

காதல் திருமணம் நினைத்தபடி நடக்க

வெள்ளிக்கிழமை பூஜை அறையில் கணபதிக்கு பூஜை செய்து பின் குலதெய்வத்தை வேண்டி சூரிய அஸ்த்தமனம் ஆன பின் வீட்டிற்கு அருகில் உள்ள மாயாஜால மோகினி எனும் குப்பைமேனி செடிக்கு சாபநிவர்த்தி செய்து நம் நிழல் அதன் மீது படாமல் வேரை எடுத்து கொள்ளவேண்டும். பின் அந்த வேரை வாழை இலையில் வைத்து  நல்லெண்ணெய் ,தேங்காய் எண்ணெய் , வெப்ப எண்ணெய் இம் மூன்றும் கலந்து வேருக்கு பூசி பூஜையில் வைத்து 
நெய்வேத்தியமாக சந்தனம்,தேன் வைத்து புனுகு,ஜவ்வாது,பன்னீர், முதலியவை பூஜை அறையில் தெளித்து வேருக்கு முல்லை மலர் அணிவித்து நாம் திருமணம் செய்ய விரும்பும் நபரின் போட்டோவை மோகினி தேவதையை வணங்க வேண்டும்.....
மூலமந்திரம்:
                          "ஓம் க்லீம் ஸ்ரீம் சௌம் ஸ்ரீ வசிய மோகினி [பெயர்]வசிய மோகனம் ஆகர்ஷணம் ஸ்வாக" 

தினமும் 108 முறை 12 நாட்கள் ஜெபிக்க மந்திரம் சித்தியாகும் 

உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்:

உடலுறவு மூலம் சிசு உண்டாக நல்ல நேரங்கள்:


கணவனும், மனைவியும் கூடிய நேரம் சந்திர கலையாக இருந்தால் அந்தக் கரு பெண் ஆகும்.சூரிய கலை நடக்கும் பொது உடல் உறவு கொண்டால் அந்த கரு ஆண் ஆகும்.


சுழிமுனை நடக்கும் போது உறவுக்கொண்டால் குழந்தை ஆகாது 

அமாவாசையன்று கருவானால் கருப்பு நிறமாகவும்,ஆறு விரல் உள்ளதாகவும் குழந்தை பிறக்கும் 

தொலை தூரம் சென்று வந்த பொழுது உறவுக்கொண்டு கருவானால் அந்தக் குழந்தை அறிவில்லாத குழந்தை ஆகும்.

அமாவாசை கழித்து பிரதமையில் கரு உண்டானால் பொய் பேசும் குழந்தை பிறக்கும்

அமாவாசைக்கு மூன்றாம் நாள் கருவானால் அந்த குழந்தை நீண்ட நாள் வாழாது.

முழு நிலவுவில் உடலுறவு கொண்டு கருவானால் முடமாகவும், தண்டியாகவும் குழந்தை பிறக்கும்.யானை வடிவில் இருக்கும்.
முழுநிலவு கழித்துப் பிரதமையில் கருவானால் சிறு வயதில் பல கண்டங்களைத் தாண்டி, நீண்ட ஆயுள் உடையதாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாம் நாள் கூடிப் பிறந்த குழந்தை பித்தம், கருங்குட்டம், வெண்குட்டம், பித்தம், முயலகம் என்னும் நோயால் பீடிக்கும்.

புணர்ச்சியின் போது பேசக்கூடாது.பேச்சுக்களைப் பேசினால் குழந்தை அலியாகப் பிறக்கும்.

பெண்ணை நிர்வாணமாக்கிப் புணர்ந்தால் குழந்தை சோம்பேறியாகப் பிறக்கும்.

உடலுறவு கொள்ளும் பொழுது வேறு பெண்ணை நினைத்து உடலுறவு கொண்டால் அதற்குப் பிறக்கும் குழந்தை ஆறு அல்லது நான்கு விரல் உடையாதகப் பிறக்கும்.

பிறைகண்ட 3,5,8,10ஆகிய நாள்களில் எந்த உடலுறவும் கூடாது.வெள்ளிக்கிழமை மூன்றாம் ஜாமத்தில் உடலுறவு கொண்டு கருவானால்,மாறுகண் உள்ள குழந்தை பிறக்கும்.

ஒரு பெண் மாத விளக்கு ஆகி மூன்றாம் நாள் உடலுறவு கொண்டபோது கருவானால் குழந்தை திருடனாகப் பிறக்கும்.

நான்காம் நாள் கூடிக் கருவானால் குழந்தை வறுமையில் வாடும்.

ஐந்தாம் நாள் கூடிப் பிறக்கும் பிள்ளை கல்வியில் சிறந்து விளங்கும்.

ஆறாம் நாள் கூடிக் கருவானால் பெரியோர்கள் கருத்தைக் கேளாத குழந்தை பிறக்கும்.

ஏழாம் நாள் கூடிக் கருவானால் உண்மையை பேசும்,ஈகை,இரக்கம்,நற்குணம் உடைய குழந்தை பிறக்கும்.

எட்டாம் நாள் கூடிக் கருவானால் குழந்தை தரித்திரத்தில் வாழும்.

ஒன்பதாம் நாள் கூடிக் கருவானால் செல்வம்,வளம் நிறைந்து குபேரனாக வாழும் குழந்தை பிறக்கும்.

பத்தாவது நாள் கூடிக் கருவானால் காமம் மிகுந்து கெட்ட பழக்கம்,அவ மரணம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினொன்றாவது நாள் கூடிக் கருவானால் நோயுள்ள குழந்தை பிறக்கும்.

பன்னிரெண்டாவது நாள் கூடிக் கருவானால் பல கலைகளும், அறிவு நலன்களும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதின்மூன்றாவது நாள் கூடிக் கருவானால் அரசியல் ஞானம், வருங்காலத்தை உணரும் விவேகம் உள்ள குழந்தை பிறக்கும்.

பதிநான்காம் நாள் கூடிக் கருவானால் உலக இன்பங்களிலிலே திளைக்கின்ற யோகியாகக் குழந்தை பிறக்கும்.

பதினைந்தாவது நாள் கூடிக் கருவானால் ஓர் அரசனுக்கு ஒப்பான ஆற்றலும், நற்புகழும் உள்ள குழந்தை பிறக்கும்.

பதினாறாவது நாள் கூடிக் கருவானால் பெரிய ஞானியாகவும், யோகியாகவும், சித்தனாகவும் ஆகக்கூடிய குழந்தை பிறக்கும்.

மஞ்சள் கயிற்றில் தாலி

மஞ்சள் கயிற்றில் தாலி


நம் தமிழ் பெண்கள் ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி அணிய வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது ?


ஒவ்வொரு இடத்தின் தட்பவெட்ப நிலையை பொறுத்தே பழக்க வழக்கங்கள் அமைகின்றன.



மஞ்சள் தாலிக்கயிறு அணிந்து குளிக்கும்போது தினமும் தாலியில் மஞ்சளைப் பூசுகின்றனர்.


மஞ்சள் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி..


அப்போதெல்லாம் மணமான பெண் அடுத்த மூன்று மாதங்களில் ஒரு கருவை சுமக்க தயாராகிறாள். அப்போது அப்பெண் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது . .கிருமி நாசினியான மஞ்சள் தாயையும் அவள் வயிற்றில் வளரும் சேயையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.


பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட மஞ்சள்கயிறு தாலியில் கோர்த்து போட்டிருந்தனர். அப்போதெல்லாம் நம் தமிழகத்தில் எவ்வளவு சுகபிரசவங்கள் நடந்தது என்றும், தங்க செயினில் தாலி அணியும் இப்போது எவ்வளவு சுகபிரசவங்கள் நடை பெறுகிறது என்பதையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த உண்மை நமக்குப் புரியும் .


அது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை எத்தனை பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் இருந்தது, இப்போது எத்தனை பெண்களுக்கு இருக்கிறது என்றும் கணக்கிட்டுப் பார்த்தால் நமக்கு நன்கு புரியும்.


இப்போதும் கூட கிராமங்களில் கர்ப்பம் தரித்த பெண்கள் வெளியூர்களுக்கு செல்லும் போது தலையில் வேப்பிலை இலையை செருகி வைப்பார்கள் அது எதற்காக ? வேப்பிலை ஒரு சிறந்த கிருமிநாசினி. கர்ப்பிணிகள் தலையில் இருக்கும் வேப்பிலையானது அவர்கள் செல்லும் வழியில் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் கிருமி தொற்றிலிருந்து காக்கிறது .


மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு மஞ்சளுக்கும், வேப்பிலைக்கும் உரிமை கொண்டாடுகின்றனர். பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல் கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .


நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!


இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!


நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை... அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

ஜக்கம்மா தேவி

ஜக்கம்மா தேவி என்பது ராஜகம்பளம் தொட்டிய நாயக்கர் சாதியினரால் வணங்கப்படும் குல தெய்வம். தொட்டிய நாயக்கர்களில் சிலர் குறி சொல்தல், கோடாங்கி சொல்தல், அருள் வாக்களித்தல், குடுகுடுப்பை சொல்தல், 

கைரேகை சோதிடம் பார்த்தல்,வேட்டை ஆடுதல் ,விவசாயம் செய்தல் மாந்திரீகம் செய்தல் போன்ற வேலையில் ஈடுபடுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் தேவி ஜக்கம்மாதான் முதல் தெய்வம். ஜக்கம்மா காளி தேவியின் அவதாரம் என்றும், இவர் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற வேறு சில பெயர்களாலும் இந்த மக்களால் அழைக்கப்படுகிறார்.

தேவி ஜக்கம்மா வரலாறு


கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் ஆந்திராவில் இஸ்லாமியரின் படை எடுப்பால் தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள். இதற்கு இஸ்லாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக கம்பள நாட்டை ஆண்டு வந்த பாலராசு நாயக்கர் என்ற மன்னர் இஸ்லாமியர்களிடம் இருந்து தங்கள் குல பெண்களைக் காப்பாற்றிக் கொள்ள தெற்கு நோக்கி தமிழகத்திற்கு செல்ல ஆணையிட, ஜக்கம்மா என்ற பெண் தலைமையில் கம்பளத்து சமுதாய மக்கள் சிலர் அங்கிருந்து தெற்கு நோக்கி தமிழகத்துக்கு வந்தனர்.

இப்படி வரும் வழியில் பல தடைகள் ஏற்பட்டதாகவும் , அதனை வீரம், மாந்தரிகம் போன்றவற்றால் கலைத்து அவர்களை ஜக்கம்மா காத்ததால் அவரை தெய்வமாக வழிபடத் தொடங்கினர். இதனால் இவர் ராஜகம்பளம் சாதியினரால் குல தெய்வமாக வணங்கப்படுகின்றார். என்று இந்தஜாதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


மேலும் காப்பு இனத்தில் பிறந்த ஜக்கம்மாளுக்கு ஒன்பது குழந்தைகள் பிறந்ததாகவும் , இந்தப் பிள்ளைகளின் வம்சம்தான் தற்போதைய ஒன்பது கம்பளத்து மக்கள் என்றும் சொல்லப்படுகிறது.

மாந்தரிகம்

ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்தரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது.
இந்த ஜாதிமக்கள் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முன்பு பலருக்கும் இருந்தது. எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள். இவர்களும் கம்பளத்து நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்களே.
ஜோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திருமணம் மட்டுமல்ல, இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர்.

கட்டபொம்மன்


இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சில மன்னர்களுள் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஒருவர். இவர் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். இவருடைய அரண்மனை அமைந்திருந்த பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைப் பகுதியில் ஜக்கம்மாவுக்கு கோவில் ஒன்றும் அமைத்திருந்தார். இவர் தினமும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதுடன் தன்னுடைய செயல்பாடுகளுக்கு இங்குதான் வேண்டிக் கொள்வார் என்பதும் ஒரு கும்மிப் பாடல் மூலம் தெரிகிறது .

கம்பளத்து மக்கள் 
பொதுவாக தொட்டிய நாயக்கர், ராஜகம்பளம் சாதியினைச் சேர்ந்தவர்கள் ஜக்கம்மாவைக் குல தெய்வமாகக் கொண்டுள்ளதால் இவர்கள் சாதி விழாக்களில் ஜக்கம்மா வழிபாடும் ஒன்றாக உள்ளது.மாசி மாத திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது
திருவிழா
ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் திங்கள் கிழமையில் ஜக்கம்மா உயிர் நீத்தார் என்ற நம்பிக்கையில் சித்திரை மாதத் திங்கள் கிழமைகளில் ஜக்கம்மாவுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து சாதியினர் சிறப்பு வழிபாடுகளுடன் தேவராட்டம், சேர்வைஆட்டம், கும்மி போன்றவைகள் மூலம் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

ஜெக்கதேவியை எப்படி வழிபட வேண்டும்


தேவி ஜெக்கதேவிக்கு வேண்டுதல் சொல்லி இருந்தால் அந்த வேண்டுதலுக்கு “ அரக்கு மொக்கு “ என்று சொல்லி தான் வேண்டுதலை நிறைவேற்றுவார்கள் அந்த மக்கள் .
.அப்படி நேர்த்தி கடன் இல்லை என்றால் “ சரத்து மொக்கு “ என்று சொல்லி வட்டமாக நின்று வணங்கி செல்வார்கள் .இந்த வழிபாடு கார்த்திகை மற்றும் மாசி மாத ஜக்கதேவி கோவிகளின் வழிபாடுகளில் காணலாம் .

ஆதி ஜெக்கு பெயர்வரக்காரணம் 
உலகம் தோன்றும் போது அண்ட சராச்சரமும் இருண்ட பகுதியாக எவ்வித ஒளி ஒலியும் இல்லாமல் இருந்தது .அதனால் தான் ஆதி என்னும் பெண் தெய்வத்தை இரவுக்கு ஒப்பிடுகிறோம் .
அதன் பின் பலகோடி ஆண்டுகள் இருள் மயமாக இருந்து இருளின் மத்தியில் கண்ணுக்கு தெரியாத ஒரு மாய சக்தி அண்டத்தில் பல திசைகளிலும் பல கோணங்களில் அதன் சக்திதிக்கு ஏற்ப ஒரு மாய பொருளாக உருவாக்கி கொண்டு இருக்கும் போது அந்த அண்டங்களின் மத்தியில் ஒரு மென்மையான் ஒலி அ …அஅ…அஅஅ….. என்ற ஒலி தோன்றியவுடன் இருண்ட உருவம் இல்லாத பூமியின் ஆத்மா ஒளியின் மத்தியில் சிறிய சுடராக உருவான ஜோதியைத்தான்

ஆ + தீ =ஆதீ என்று ஆதி சக்தி
என்றும் ஆதி ஜெக்கு என்றும் நாம் அழைக்கின்றோம் .
ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள்

ஆதி ஜெக்க தேவியின் அம்சத்தில் தோன்றிய துர்கைகள் 9
அந்த தேவதைகளின் பெயர்கள் வருமாறு :

1. வன துர்க்கை – பிறவி பெருங்கடலை அளிப்பவள்
2.குளிகை துர்க்கை – திரிபுரம் எரிக்க சிவனுடன் சென்றவள்
3.ஜாத வேதா துர்க்கை – வாயுவுக்கு அருளியவள்
4.ஜீவளா துர்க்கை – பண்டா சுரனை வதம்புரிய அனல் பிரம்பாகி அரண் அமைத்தவள் .
5.சாந்தி துர்க்கை – தச்ச யாகத்தின் முடிவில் வெகுண்ட சிவனை சாந்தி படுத்தியவள் .
6.சபரி துர்க்கை – பார்த்தனுக்கு பாசுபதம் அளிக்க சென்ற சிவனுடன் வேட்டு வாசி வடிவில் சென்றவள் .
7.தீப துர்க்கை – குண்டலினி யோகிகளுக்கு ஒளியாய் நின்று உதவியவள் .
8.ஆசூரி துர்க்கை -அமுதம் தாங்கிய திருமாலுக்கு உதவியவள்
9.லவன துர்க்கை –லவணன் என்ற அசுரனை சத்ருக்கன் வென்று வர ராமர் வழிபட்டவர்கள்
தொம்மிதி பெத்தம்மாள்

ஆதி ஜெக்க தேவிக்கு 9 உடையப்பட்டவள் என்று தமிழிலும் ,தொம்மிதி பெத்தம்மாள் என்று தெலுங்கிலும் அழைக்கிறோம் .
 தொம்முதி என்றால் 9 என்றும் பெத்தா என்றால் பெரியவள் என்றும் பொருள் .

Saturday, December 31, 2016

வியாபார வெற்றிக்கு வசிய திலகம்

வியாபார வெற்றிக்கு வசிய திலகம்
ஒரு வெள்ளி விளக்கில் பௌர்ணமி அன்று காராம் பசுவின் நெய்யை விட்டு தாமரை பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றி ஒரு சங்கை அதில் கவிழ்த்து பிடித்தால் சங்கில் மை கட்டும்.

அந்த மை எடுத்து அத்துடன் ஜவ்வாது,பச்சை கற்பூரம்,புனுகு,கோரோசனை சேர்த்து குழைத்து வெள்ளி டப்பியில் வைத்து தொழில் வியாபாரம் செய்ய, மற்றும் எங்கு செல்வதானாலும் மையை புருவத்தில் வைத்து செல்ல காரிய பலிதம் உண்டாகும்.

வாழைமர மூலிகை வசியம்

வாழைமர மூலிகை வசியம்

வியாபார விருத்தி உண்டாக

பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.

வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற

வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து பெளர்ணமி நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும்.

பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும்,

பின்பு -பெளர்ணமி நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும்,குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீண் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குல விருத்தி அடையும்.

தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு

தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு

மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு,
நிலைக்கவும் செய்யும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்!!!