Tuesday, February 14, 2017

தடைகள் விலக தாந்த்ரீக முறை:

தடைகள் விலக தாந்த்ரீக முறை:
இதை வியாழக் கிழமையன்று காலை 6-7,மதியம் 1-2,அல்லது இரவு 8-9 மணிக்குள் மட்டுமே செய்ய வேண்டும்.ஆகாச தாமரை மூலிகையை முறைப்படி பிடுங்கி வந்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து வெளியில் தெரியாதபடி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் மாட்டி வைக்க,தடைகள் தடங்கல்கள் விலகும்.இதை எவரும் தொடாதபடி பார்த்துக் கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:


தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:
ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையிலிருந்து பெண் ஒருத்தி,என்னை தொடர்பு கொண்டால்,மணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து,வேறு பெண்ணுடன் இருப்பதாகவும்,மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் கூறினாள்.நான் இருவர் பெயரையும் பூசையில் வைத்து அம்பாளிடம் கேட்டதற்கு,அவருக்கு வசிய இடுமருந்து கொடுக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும்,மேலும் சிலவிஷயங்களையும் சொன்னாள்.அந்த பெண்ணோட கணவருக்கு வசிய இடு மருந்தை முறிக்க முறிவு மருந்து உணவுடன் 15 நாட்கள் முதலில் கொடுக்கப்பட்டது இதற்கு அவர் அலுவலக நண்பர்கள் உதவினார்கள்.வசிய மருந்து முறிய முறிய சுயநினைவுக்கு வந்து தன் மனைவியை தேடி வந்தார்.அவரோட கள்ளக் காதலியை அவரிடமிருந்து பிரிக்க நான் சொன்ன முறைப்படி கொடுத்த பொருட்களை அவர் மனைவி செய்து முடித்தார்.அதேபோல் 35 நாட்களுக்குள் பிரிவினை உண்டானது.இன்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து என்னிடம் வந்தார்கள்.அந்த பெண்ணோட முகத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் வெளிப்பட்டது.எனக்கும் அளவில்லாத ஆனந்தம் உண்டானது.
எல்லாத்துக்கும் நம் அன்னையே துணை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கோழிக் கடை,கறிக் கடை,அசைவ உணவகங்களில் தொழில் சிறக்க:


கோழிக் கடை,கறிக் கடை,அசைவ உணவகங்களில் தொழில் சிறக்க:
கோழிக் கடை,பிராய்லர் சிக்கன் கறி கடை,ஆடு வெட்டும் கறிக் கடை,அசைவ உணவகம் இவைகளில் வியாபாரம் சிறப்பாக நடக்க,மதுரை வீரன் மூலிகையை முறைப்படி எடுத்து கருக்கி சவ்வாது,அரகஜா சேர்த்து மை செய்து உருவேற்ற வேண்டும்.இதோடு மதுரை வீரன் சக்கரத்தை செம்புத் தகட்டில் கீறி பூஜித்து,மந்திர உருவேற்ற வேண்டும்.
பூஜித்த மதுரை வீரன் யந்திரம் மற்றும் மை இவற்றை சிக்கன் ஸ்டால்,மட்டன் ஸ்டால் அசைவ ஹோட்டல் இந்த தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வியாபாரம் செய்ய,எவ்வித எதிர்ப்பும்,முடக்கமும் இல்லாமல் தொழில் சிறப்பாக நடக்கும்.லாபம் அதிகரிக்கும்,வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும்.
சக்தியூட்டிய மதுரை வீரன் யந்திரத் தகடு மற்றும் மை கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்

அரச மரப் பிரதட்சிணப் பிரயோகம்


ஒரு தேய்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமன வேளையில் ஊருக்கு வெளியில்,காட்டில், அல்லது மயானத்தில் உள்ள ஒரு அரசமரத்தடியில் மஞ்சளால் ஒரு வட்டம் வரைந்து அதற்குள் நல்லெண்ணெய் விட்டு அகல் விளக்கேற்றி, விளக்கிற்கு குங்குமம்,மஞ்சள் வைத்து பாயசம் படைத்து வழிபடவும்.பின்னர் பிரதட்சிணமாக அதாவது இடமிருந்து வலமாக 11 தடவை வலம் வரவும்.வலம் வந்து முடிந்தவுடன் விளக்கின் முன்  நின்று  கவலை, பிரச்சனை என உங்கள் மனக்குறை என்னவோ  அது விரைவில் தீர வேண்டிக்கொள்ளவும்.பின்னர் திரும்பிப்பார்க்காமல் சென்றுவிடவும்.இதைக் குறைந்தது 3 வாரம் செய்யவும்.துன்பங்கள் நீங்கும்,சுபகாரியத்தடைகள் தீரும்.தொழில் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் ,பணப்பற்றாக்குறை என வேண்டிக்கொண்ட பிரச்சனை என்னவோ அது தீரும் அல்லது அதைத் தீர்க்கும் வழி மனதில் தோன்றும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்

ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்

1.ஞாபகசக்தி,வாக்குவன்மை ஏற்பட மந்திரம்:

நம்மில் பலரும் அனேக விஷயங்கள்,நூல்களை படிக்கிறோம் ஆனால் மிகச்சிலரே படித்தவற்றை நினைவில் வைத்துக்கொள்ளும் திறன் உடையவர்களாக இருக்கிறோம்.கீழ்க்கண்ட மந்திரங்களை ஜெபித்து வருவதின் மூலம் நல்ல நினைவாற்றலைப் பெறலாம்.

சரஸ்வதி மால் மந்திரம் :-

ஓம்|ஆம்| ஐம் சரஸ்வதி|க்லீம் சரஸ்வதி|சௌம் சரஸ்வதி|
வேணுகாணி |வித்யாவதி |பாலமோகினி|பக்தரட்சகி|
வித்தக சக்தி|வேதபூஷணி |
உருவாய் அருவாய் உள்ளே இரு இரு|
சிந்தையில் நின்று செந்தமிழ் ஓது|
மனதில் இருந்து மாமறை ஓது |
கருத்தில் இருந்து கலை பல ஓது|
நாவில் இருந்து நானே நீயாய்
சொல்லும் பொருளாய் வல்லியே வா வா|
சொல்லால் உலகம் எல்லாம் வணங்க|
நில்லு நில்லு என் நினைவினில் நில்லு|
வெல்லு வெல்லு வல்லோர் வணங்க|
மானமும் கல்வியும் மோனமும் தா தா |
அஷ்டலக்ஷ்மியும் அடியேனைக் காக்க|
இஷ்ட சக்தியாய் இருந்து நீ காக்க|
வா வா தேவி வரம் தர வா வா|
காவாய் காவாய் கடாட்சம் குரு குரு||

இதனை தினமும் 3 அல்லது 11 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

2.சரஸ்வதி மந்திரம்|

ஓம்| ஐம்|வத வத வாக்வாதினி நமஹ|

(அல்லது)

ஓம்|ஐம் க்லீம் சௌம் வத வத வாக்வாதினி நமஹ|

இதனை தினமும் குறைந்தது 27 தடவை ஜெபித்து வர நல்ல நினைவாற்றல் ,கஷ்டமான விஷயங்களையும் விளங்கிக்கொள்ளும் ,விளக்கிச்சொல்லும் திறன் உண்டாகும்.வெண்சந்தனத்தில் ஜெபித்து அணிய சிறப்பான பலன் காணலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, February 11, 2017

ஏவல்களின் வகைகள்


ஏவல்களின் வகைகள்
ஏவல் என்று சொன்னால் ஆவிகளை மனிதர்கள் மேல் ஏவிவிடுகின்றதாகும்.
ஏவல்களின் வகைகள்
1. காட்டேரி என்ற நாமத்தையுடைய ஆவியை சமாதானத்தோடு வாழ்கின்ற ஒரு குடும்பத்தில் ஏவி விட்டால் குடும்பத்தில் சமாதானம் சீர்குலைந்து விடும். காட்டேரியானது குடும்பத்தில் புகுந்து அதை சின்னா பின்னாமாக்கி விடும்.
2. காளி என்ற நாமத்தையுடைய ஆவிக்கு பல அவதாரங்கள் உண்டு.
3. அக்கினி காளியை ஒருவருக்குள் ஏவினால் அவர் அக்கினியில் விழுவார்.
அல்லது தீ மூட்டிக் கொண்டு மரிப்பார்.
4. அக்கினி ஆவி பிடித்தவர்கள் யாரையும் தீ வைத்து அழிக்கத் தயங்க மாட்டார்கள்.
5. உதிரக்காளி என்ற நாமமுடைய ஆவியை ஒரு பெண்ணுக்குள் ஏவி விட்டால் பெண் உதிரப்போக்கினால் உபாதை அடைவாள். அசுத்த ஆவி அந்த பெண்ணை விட்டு விலகும் வரையும் உபாதைப்படுவாள்.
6. முனி என்ற நாமமுடைய ஆவியை ஒரு ஆணுக்குள் ஏவி விட்டால் அவர் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்கோ அல்லது கற்குகைகளுக்கோ சென்று விடுவார். சில வேளைகளில் அவர் இறந்து விடவும் கூடும்.
மொத்ததில் மிருகத்தை ஒருவர் மீது ஏவி விட்டால் அந்த மிருகம் அவரை சேதப்படுத்துமோ, அதபோல் இருப்பது ஏவல் போன்றவையாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அமானுஷ்யம்-பேய்கள்

அமானுஷ்யம்
பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன....
பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க கொள்ளவே முயற்சி செய்யும்....
விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும். . பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்கள்....
பேய்கள் அல்லது ஆவிகள் குளிர்மையானவை. அதனால் தான் அவைகளை நீங்கள் சந்திக்கின்ற பொழுது மிக குளிர்மையை உணர்வீர்கள். . பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உங்கள் எதிர்காலம் நன்றாகவே தெரியும்.. சில நேரங்களில் அவை கனவுகளின் மூலம் வெளிப்ப்படுத்த முயற்சி செய்யும்....
நல்ல பேய்கள் அல்லது ஆவிகள் பயங்கரமான தோற்றம் அற்றவை. கெட்ட பேய்கள் அல்லது ஆவிகள் தோற்றம் மிக கொடூரமானதாக இருக்கும்....
பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது..எப்பவுமே கோவில்கள்/ சர்ச்சுகளை வழிபாடு தலங்களை அண்டியே சுற்றியபடி இருக்கும். . பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings)உண்டு..ஆனால் உணர (sense) முடியாது. ....
பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக்கொள்ள முயற்சிக்கும். . பேய்கள் அல்லது ஆவிகளால் [கெட்ட] கொலைசெய்ய முடியாது.. ஆனால் ஒருவன் தன்னை தானே கொலைசெய்யும் அளவுக்கு தூண்டிவிடும் சக்தி உண்டு....
பேய்கள் அல்லது ஆவிகளால் தரையை கால்களால் தொட முடியும். கைகளாலோ அல்லது உடலின் வேறு பகுதிகளாலோ அல்ல..எனவே தான் உங்களால் அவைகளின் காலடி ஓசையை கேட்க முடியும். . பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்....
பேய்கள் அல்லது ஆவிகளால் 12 நாட்கள் மட்டுமே [இறந்த நாள்முதல்] அவர்கள் வீட்டில் அருகில் இருக்க முடியும். . பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக்கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு....
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989