Thursday, April 6, 2017

கண்திருஷ்டி,பில்லி சூன்யத்தை விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு:


கண்திருஷ்டி,பில்லி சூன்யத்தை விலக்கும் ஆகாச கருடன் கிழங்கு:
இந்த கிழங்கு காடுகள்,மலை,வனம் சார்ந்த பகுதிகளில் தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.இம்மூலிகை கிழங்கிற்க்கு சில அமானுஷ்ய சகதிகள் உண்டு.அதாவது இக்கிழங்கை கயிற்றில் கட்டி வீட்டில் தொங்க விட வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி தோஷங்களை போக்கும் தன்மை கொண்டது.மேலும் எதிரிகளால் செய்யும் பில்லி சூன்யம் ஏவல் போன்ற மாந்திரீக எதிர்வினைகளை வீட்டை நெருங்க விடாமல்,அவ்வினைகளை தானே ஈர்த்துக் கொண்டு,தன்னை அழித்து நம்மை பாதுகாக்கும்.இதன் சக்தியால் வீட்டில் உள்ளவர்கள் மாந்திரீக தீயவிளைவுகளில் காக்கப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு அணுகவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

12 இராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்

12 இராசிகளுக்கான வெற்றிலை பரிகாரம்


12 இராசிக்காரர்களின் துன்பங்களை போக்க வெற்றிலை பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை எந்த ராசிக்காரர்கள் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்:- வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துன்பங்கள் அகலும்.

ரிஷபம்:- வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கன்னி:- வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

மிதுனம்:- வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

கடகம்:- வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.

சிம்மம்:- வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷ்டம் விலகும்.
துலாம்:- வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

விருச்சிகம்:- வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

தனுசு:- வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

மகரம்:- வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

கும்பம்:- வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

மீனம்:- வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வழக்குகளில் வெற்றி பெற,எதிரிகள் தொல்லை நீங்க காளி மந்திரம்

வழக்குகளில் வெற்றி பெற,எதிரிகள் தொல்லை நீங்க காளி மந்திரம்

ஏதேனும் வழக்கில் சிக்கி உங்கள் பக்கம் நியாயம் இருந்தால் மட்டும் இந்த பிரயோகத்தைச் செய்யவும்.தவறான நோக்கத்திற்காகப் பயன்படுத்தினால் காரிய வெற்றி கிடைக்காது மேலும் தெய்வ நிந்தனை ஏற்படும். 


ஏதேனும் ஒரு தேய்பிறை செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை
இரவில் 8 மணிக்கு மேல் விளக்கேற்றி  அதில் ஸ்ரீ காளிதேவியை எழுந்தருள வேண்டும் என்று வேண்டி உங்கள் கோரிக்கையை முன்வைத்து செந்நிறப் பூக்களால் கீழ்க்கண்ட மந்திரம் ஜெபித்து அர்ச்சிக்கவும்.
முதல் நாளும் 11 வது நாளும் வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும் மற்ற நாட்களில் வெற்றிலை,பாக்கு,பால்,பழம் மட்டும் வைத்து மந்திரம் ஜெபித்து வழிபடவும்.இவ்வாறு  தொடர்ந்து 11 நாட்கள் செய்யவும். 
தாமரைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றவும்.தினமும் திரியை மாற்ற வேண்டும்.முந்தைய நாள் பயன்படுத்திய திரியை ஒரு வெள்ளி அல்லது பித்தளை குங்குமச்சிமிழில் போட்டு வைக்கவும்.11 நாட்கள் முடிந்த பின் 12 ஆம் நாள் இரவில் எல்லாத்  திரிகளையும் போட்டு வைத்த குங்குமச்சிமிழை மூடி செந்நிரப்பூ பூக்கள் கொண்டு கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி அர்ச்சிக்கவும். பின் தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்த பின் வடக்கு நோக்கி நின்று 3 தடவை  மந்திரம் ஜெபித்து ஸ்ரீ காளிதேவியை வழக்கில் வெற்றி தரவேண்டி  குங்குமச்சிமிழில் உள்ள எண்ணையைக் கொஞ்சம் எடுத்துப் புருவத்தில் தடவி வரவும். எதிரிகளால் தொல்லை நேராது.வழக்கிலும் வெற்றியுண்டாகும்.இதை வெளியில் எல்லோரிடமும் சொல்லாமல் ரகசியமாய்ச் செய்யவும். 

மந்திரம் :
ஓம் க்லீம் பீஜ ரூபிண்யை மஹாகாளிகாயை க்லீம் பட் ||


ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, April 2, 2017

புத்திர பாக்கியம் கிடைக்க



புத்திர பாக்கியம் கிடைக்க
நந்தியுடன் கூடிய சிவலிங்கம் சிறிதாக ஒன்று வாங்கி வந்து,பெளர்ணமி அன்று பூஜை ஆரம்பிக்க வேண்டும். தினமும் சிவலிங்கத்திற்கும் நந்திக்கும் பால் அபிஷேகம் செய்து வர வேண்டும். பஞ்சாட்சரம் ஜெபம் செய்ய வேண்டும்.(ஒம் நமசிவய ) இப்படித் தினந்தோறும் பால் அபிஷேகம் செய்து சிவ வழிபாடு செய்ய வேண்டும்.வீட்டில் உள்ள அனைவரும் வழிபாடு செய்த பாலைப் பருகலாம். மூன்று பெளர்ணமி பூஜை செய்ய வேண்டும்.
இந்தப் பூஜையின் பலன் திருமணத் தடை விலகும். புத்திர பாக்கியம் உண்டு செய்யும். அத்துடன் கோமாதாவுக்கு இனிப்பு பொருள் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழில் அமையும் . வரவேண்டிய பாக்கி வசூலாகும். உடல்நலக் கோளாறு மனநலக் கோளாறு விலகும். புத்திர பாக்கியத்திற்க்கு நல்ல பரிகாரம் ஆகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அழகு ,மனஅமைதி தரும் ஸ்ரீ சந்திரபகவான் மந்திரம்:-


அழகு ,மனஅமைதி தரும் ஸ்ரீ சந்திரபகவான் மந்திரம்:-


திங்கள் கிழமைகள் தோறும்  ( நான்காம்பிறை நாள் தவிர ),மற்றும் பௌர்ணமி தோறும் இரவில் 8 முதல் 9 மணிக்குள்  ஸ்ரீ சந்திர பகவானை வணங்கி தீபம்,தூபம் காட்டி வணங்கி கீழ்க்கண்ட மந்திரத்தை  கிழக்கு நோக்கி அமர்ந்து குறைந்தது 27 தடவை  அதிகமாக 108 தடவை வரை ஜெபித்து வர அழகு கூடுவதுடன் ,மன அமைதி கிட்டும் ,அதிகம் கோபம் கொள்பவர்கள் சாந்த குணம் பெறுவர் . பார்வதி தேவியின் அருளும்,மஹாலக்ஷ்மியின் அருளும்  உண்டாகும்.முகத்தில் தேவையற்ற பரு,தழும்பு இவைகள் அற்ற மிருதுவான தோல் அமைவதுடன்,முக வசீகரம் உண்டாகும்.வளர்பிறை திங்கள்கிழமை அன்று ஆரம்பிக்கவும்.

மந்திரம்:

ஒம் ஹ்ரீம் வம் சந்திர தேவாய நமஹ ||

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, April 1, 2017

ராக்கெட் சங்கு(ஆகாச பறவை சங்கு):

ராக்கெட் சங்கு(ஆகாச பறவை சங்கு):
தொழில் வியாபாரத்தில் உள்ள பிரச்சினைகளை நீக்கி தொழில் வளத்தை அதிகரிக்கச் செய்யும் இந்த சங்கு.
வேலை வாய்ப்புக்கள்,வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை உருவாக்குத் தரும் வல்லமை கொண்டது.முடக்கம்,தடைகளை நீக்கி வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி தரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

இடம்புரி சங்கு பரிகாரம்:


இடம்புரி சங்கு பரிகாரம்:
மூன்று பெரிய நேர்த்தியான இடம்புரி சங்கை அமாவாசை திதியன்று அபிசேக ஆராதனை செய்து காளி அல்லது துர்க்கையை மனதில் நினைத்து கொண்டு பூஜை முறையுடன் அபிசேக ஆராதனை செய்து ஒரு சங்கை வாசற்படியில் புதைத்து விட்டு இரண்டாவது சங்கை ஒரு சிகப்பு துணியில் கட்டி உத்திரத்தில் கட்டிவிட வேண்டும்.மூன்றாவது சங்கை பூசையறையில் ஒரு பித்தளை அல்லது வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து அச்சங்குடன் கருங்குங்கிலியம்,3 விரலி மஞ்சளையும் சேர்த்து வைத்து சந்தனம் பொட்டு இட்டு அமாவாசை,பௌர்ணமி,செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் காளிதேவியை நினைத்து பூஜித்து வந்தால் ஏவல்,செய்வினை கோளாறுகள் விலகும்.எதிரிகள் பிரச்சினை இருக்காது.குடும்பம் சுபிட்சம் பெருகும்.சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
நேர்த்தியான இடம்புரி சங்கு தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு: ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989