Sunday, January 15, 2017

கல்வி அறிவு பெருக ஸ்லோகம்:


கல்வி அறிவு பெருக ஸ்லோகம்:
"ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே"
இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
பள்ளி,கல்வி தேர்வுகளில் உயர் மதிப்பெண்கள் பெற,நன்கு படிக்க தாயத்து,யந்திரத் தகடுகள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வசிய செம்பு காப்பு:


வசிய செம்பு காப்பு:
சூரியனின் உலோகமான செம்பு ஆகர்ஷண சக்தி கொண்டவை.சூரியனே உலகின் அனைத்து உயிர்களின் வசியக்காரன் ஆவார்,அவரோட சக்தி நிறைந்த உலோகம் செம்பு.இரசவாத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுகிறது.தங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர் சித்தர்.தங்கமும் வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பு பயன்படுத்தப்படுகிறது.செம்பு சேர்த்தால் மட்டுமே ஆபரணங்கள் செய்ய முடியும்.
சிறப்பு வாய்ந்த தூய்மையான செம்பை காப்பு செய்து மந்திர சக்தி உருவேற்றி வலது கையில் அணிந்து கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,மேலும் செம்பு உடம்பில்பட்டாலே தரித்திரம் விலகும்,தடை,தடங்கல்கள் விலகும்.மேலும் இதை பயன்படுத்துவருக்கு தலைமை பண்பு கிட்டும்.காத்து,கருப்பு,பேய் பிசாசுகள் நெருங்காது.
சூரியன்,செவ்வாய்,ராகு கிரங்களின் வலிமையை அதிகரிக்கும்.அனைவரும் இணங்கி நடப்பார்கள்,வசீகர சக்தியை அதிகரிக்கும்.மேலும் செம்பு மகாலட்சுமி பரிபூரண சக்தியை கொடுக்கும்.எதிர்மறை சக்தியை விலக்கி நேர்மறை சக்தியை கொடுக்கும்.மந்திரசக்தி ஏற்றிய வசிய செம்பு காப்பு கிடைக்கும்.வசிய குங்குமமும் தரப்படும்.போன்:7598758989

குல தெய்வ அருள்பெற ஒரு செய்முறைப்பயிற்சி.


குல தெய்வ அருள்பெற ஒரு செய்முறைப்பயிற்சி.
குலதெய்வ அனுக்கிரகம் இருந்தால்தான் ஒருவருக்கு மற்ற தெய்வங்களின் ஆசிகள் மற்றும் பிரார்த்தனை பலன்கள் மிக எளிதாக கிடைக்கும். நாம் செய்யும் பரிகாரங்களுக்கும் விரைவான பலன்கள் கிடைக்கும்.
குலதெய் வழிபாடுகள் தற்காலத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் என்னதான் கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்தாலும் பிரார்த்தனைகளின் பலன்கள் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை.

இப்போதே குலதெய்வ வழிபாடுகள் குறைந்திருப்பதினால் வருங்கால சந்ததிகளுக்கு குலதெய்வம் என்றாலே என்ன என்று தெரியாத சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்கால சந்ததியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும்
குலதெய்வங்களைப்பற்றி தவறாமல் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
குலதெய்வ வழிபாட்டை
ஒரு சிறிய பயிற்சியின் மூலம் எளிதாக இந்த தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லலாம்.
வீட்டில் ஒரு புது உண்டியல் வாங்கி குலதெய்வ படம் அல்லது குலதெய்வம் என்று எழுதி அந்த உண்டியலின் மேல் ஒட்டி வைக்கவும். குலதெய்வத்தை நினைத்து தினமும் ஒரு ருபாய் காணிக்கையை நம் பிரார்த்தனையைக்கூறி உண்டியலில் சேமித்து வரவும். இதை உங்கள் மகன் மற்றும் பேரக் குழந்தைகளிடமும் தொடர்ந்து செய்து வரச் சொல்லவும். குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது இந்த காணிக்கையை உண்டியலில் செலுத்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இதுவே பழக்கமாகிவிடும்.தினமும் குலதெய்வத்தை நினைப்பதனால் குல தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் குலதெய்வங்களின் மகத்துவங்கள் தெரியவரும்.

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்.


பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட 
லக்ஷ்மி கலசம்.
-----------------------------------------------------------------------------
நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள
ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டான
முறைகளை செய்வதில்லை அப்படியே
செய்தாலும் முறையாக செய்வதில்லை
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து
அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தயும் வியாழக்கிழமையே
வாங்கி வைத்துக்கொள்ளவும்
வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள்
மேற்கூறிய அனைத்து பொருளையும்
கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க
விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்
வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து
மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ
என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள
வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப
தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை
கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்
வைக்கவும்,
வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்
கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை
வணங்க தொடங்கியதும் அடுத்த
வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை
கண்கூடாக உணரலாம்
இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்
வளம் பெற வேண்டுகிறேன்,
108முறை கூற வேண்டிய மந்திரம்
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ

நவரத்தின பரிகாரங்கள்


நவரத்தின பரிகாரங்கள்
--------------------------------------
1. கல்வி, வியாபாரம் சிறக்க – மோதிர விரலில் மரகதம்
2. பண வரவு அதிகரிக்க – ஆள் காட்டி விரலில் நீலம்
3. கடன் தொல்லை,சத்ரு உபாதை , நோய்கள் நீங்க- ஆள் காட்டி விரலில் பவளம்
4. தொழில் பிரச்சினைகள் தீர, வேலை வாய்ப்புகள் உருவாக - ஆள் காட்டி விரலில் நீலம்
5. அரசு வழி தொல்லைகள் நீங்க- நடு விரலில் வைரம், மோதிர விரலில் பவளம்
6. விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்க – சிறு விரலில் மாணிக்கம்
7. அவதூறுகள் நீங்க, விரையங்களை தடுக்க- நடு விரலில் வைரம், மோதிர விரலில் பவளம்

நவரத்தின கற்களின் தரம் கண்டறிவது எப்படி?


நவரத்தின கற்களின் தரம் கண்டறிவது எப்படி?
நவம் என்றால் ஒன்பது என்று பொருளாகும். ரத்னம் என்றால் ஒளி என்று பொருள்படும். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவரத்தினங்களாகும். இவைகளில் முத்து மற்றும் பவளம் தவிர மற்ற அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்களாகும். முத்தும் பவளமும் கடலிலிருந்து கிடைக்கிறது. 
நல்ல தரமான நவரத்தினங்களை எப்படி கண்டறிவது என்று பார்ப்போம்.
முத்து கல்லை நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதத்தை கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல்லை குத்து விளக்கு ஒளியின் முன்பு காட்டினால் சிவப்பு நிறமாக தோன்றும்.
வைர கல்லை சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளத்தின் மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் கல்லை பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்பராக கல்லை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப்பூ வாசனை வரும்.
வைடூரிய கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

Saturday, January 7, 2017

கணபதி மந்திரம் ...

கணபதி மந்திரம் ...

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டுதடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

- அகத்திய வாத சௌமியம்

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989