Saturday, December 31, 2016

வியாபார வெற்றிக்கு வசிய திலகம்

வியாபார வெற்றிக்கு வசிய திலகம்
ஒரு வெள்ளி விளக்கில் பௌர்ணமி அன்று காராம் பசுவின் நெய்யை விட்டு தாமரை பஞ்சுதிரி போட்டு விளக்கேற்றி ஒரு சங்கை அதில் கவிழ்த்து பிடித்தால் சங்கில் மை கட்டும்.

அந்த மை எடுத்து அத்துடன் ஜவ்வாது,பச்சை கற்பூரம்,புனுகு,கோரோசனை சேர்த்து குழைத்து வெள்ளி டப்பியில் வைத்து தொழில் வியாபாரம் செய்ய, மற்றும் எங்கு செல்வதானாலும் மையை புருவத்தில் வைத்து செல்ல காரிய பலிதம் உண்டாகும்.

வாழைமர மூலிகை வசியம்

வாழைமர மூலிகை வசியம்

வியாபார விருத்தி உண்டாக

பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.

வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெற

வாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து பெளர்ணமி நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம்புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும்.

பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும்,

பின்பு -பெளர்ணமி நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும்,குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீண் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், குல விருத்தி அடையும்.

தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு

தோஷங்களை நீக்கும்,,, மயில் இறகு

மூன்று மயில் இறகை ஒன்று சேர்த்து கருப்பு நிற கயிற்றினால் கட்டி, சிறிது பாக்கை நீரில் போட்டு, அந்நீரைத் தெளித்தவாறு ‘ஓம் சனீஸ்வராய நமஹ’ என்று தினமும் 21 முறை உச்சரிக்க வேண்டும் இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கும்.
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க எட்டு மயில் இறகை ஒன்று சேர்த்து, ஒரு வெள்ளை நிற கயிற்றினால் கட்டி, பூஜை அறையில் வைத்து ‘ஓம் சோமாய நமஹ’ என்ற மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.
நகை மற்றும் பணம் வைக்கும் அலமாரியில் ஒரு மயில் இறகை வைக்க வேண்டும். இதனால் அந்த அலமாரியில் செல்வம் அதிகம் சேர்வதோடு,
நிலைக்கவும் செய்யும்.

மயில் இறகை வீட்டின் முன் வைப்பதால், வீட்டினுள் எதிர்மறை ஆற்றல்கள் நுழைவதைத் தடுப்பதோடு, வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும்.
ஒருவர் அலுவலகத்தில் தாம் அமரும் இடத்தில் மயில் இறகை வைப்பதன் மூலம், அவரது இடத்தின் அழகு மேம்படுவதோடு, உற்பத்தி திறனும் அதிகரிக்குமாம்.
திருமணமான தம்பதியர்கள், தங்களின் படுக்கை அறையில் மயில் இறகை வைத்திருப்பதன் மூலம், தம்பதியருக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி, அன்யோன்யம் மற்றும் புரிதல் அதிகரிக்கும்!!!

குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க:

குழந்தைகளுக்கு உண்டாகும் கண்திருஷ்டிகள் நீங்க:
சிறு குழந்தைகளுக்கு கண்திருஷ்டி ஏற்படின் சீறி அழும்,பால் உணவுகள் சாப்பிடாது,தூங்காது.
இவற்றை நிவர்த்தி செய்ய முச்சந்தி மண்,கல்உப்பு,மிளகாய் வற்றல்-5,சுண்ணாம்பு,மஞ்சள்,கடுகு இவைகளை துணியில் வைத்து முடிந்து குழந்தையின் தலையை மூன்று முறை வலது-இடது,இடது-வலதுப் புறமாக சுற்றி உடம்பில் மேலிருந்து கீழாக தடவி இறக்கி பின் அந்த முடிச்சை நெருப்பில் போட கண்திருஷ்டிகள் விலகும்.
குழந்தைகளுக்குக்கான பாலகிரக தோஷம் மற்றும் கண்திருஷ்டி நிவர்த்தி தாயத்துக்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம்:

வறுமை நீங்கி செல்வம் பெருக எளிய பரிகாரம்:
வளர்பிறை நன்னாளில் வெற்றிலை கொடி நாற்று செடி ஒன்றை வாங்கி,நிலத்திலோ,பூந்தொட்டியிலோ நடும்முன் மூன்று ஐந்து ரூபாய் நாணயங்கள்,சிறிது மஞ்சள்,குங்குமம் இவைகளை அவற்றில் இட்டு நட்டு தண்ணீர் ஊற்றி வர வேண்டும்.வெற்றிலை கொடி வளர வளர நமது வறுமைகள்,கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருக ஆரம்பிக்கும்.அதீத சக்தி வாய்ந்த பரிகாரம் இது.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

லட்சுமி கட்டு உடைய,தரித்திர நிலை நீங்க:

லட்சுமி கட்டு உடைய,தரித்திர நிலை நீங்க:
தொடர்ந்து 8 சனிக்கிழமைகள் வன்னிமரத்தை வழிபட்டு அதனடியில் மண் அகல் விளக்கில் கருந்திரியிட்டு நல்லெண்ணெய் ஊற்றி தீபமேற்றி மரத்தை வழிபட்டு வர லட்சுமி கட்டு மற்றும் தரித்திர நிலைகள் நீங்கி செல்வ வளமும்,எதிலும் வெற்றியும் உண்டாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தெய்வீக யந்திரம்:

தெய்வீக யந்திரம்:
இந்த யந்திரத்தை முறையாக பூஜித்து வழிபட்டு வர வாழ்வில் பணம்,புகழ்,பதவி,காரிய சித்தியை கொடுக்கும்.
பூஜித்து உருவேற்றிய பணம்,பதவி,புகழ் தரும் தெய்வீக யந்திரத் தகடு கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

அமிதிஸ்ட் உபரத்தின கல் பரிகாரம்:

அமிதிஸ்ட் உபரத்தின கல் பரிகாரம்:
பணம் வீண் விரயங்கள்,பண வரவு இல்லாமை,தொழில் வேலையில் பிரச்சினைகள்,மரண பயம் உள்ளவர்கள்,மனக்குழப்பம் இவைகள் சரியாக முறையான தரமான 10 காரட் அமிதிஸ்ட் உபரத்தின கல்லை பயன்படுத்த சிறப்பான பலன் கிட்டும்.மேலும் தொழில் மேன்மை அடையும்,நிரந்தர வேலை கிடைக்கும்.வீண் விரயங்கள் குறைந்து பண வரவு உண்டாகும்.இவற்றை எல்லாம் சில சூட்சுமங்களோடு செய்ய வேண்டும்
மேலும் அமிதிஸ்ட் உபரத்தின கல் தேவைக்கும் விவரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க,
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

சகல காரிய சித்தி சக்கரம்:

சகல காரிய சித்தி சக்கரம்:
மிகவும் சக்தி வாய்ந்த இந்த சக்கரத்தை முறையாக கீறி,உருவேற்றி பயன்படுத்த,காரியத் தடைகள்,தடங்கல்கள்,முடக்கங்கள் விலகி சகல காரியமும் சித்திக்கும்,மேன்மையடையும்,நடக்கும்.அற்புதமான சக்தி கொண்டவை இது.
சகல காரிய சித்தி சக்கரம் கிடைக்கும்.தேவைக்கு தொடர்பு கொள்க,
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மாந்திரீக கட்டு கட்டுதல் விளக்கம்:

மாந்திரீக கட்டு கட்டுதல் விளக்கம்:
போட்டி உலகத்தில் தொழில் ரீதியாகவும் சரி,குடும்ப ரீதியாகவும் சரி,பொருளாதார வளர்ச்சி ரீதியாகவும் சரி நேருக்கு நேர் ஜெயிக்க முடியாத எதிரிகள்,சத்துருக்கள்,பகைவர்கள்,உறவினர்கள்,மறைமுகமாக இந்த வித்தையை செய்ய சொல்லி மாந்திரீகரை அணுகி கட்டு கட்டிவிடுவார்கள்.
பொதுவாக கட்டுகள் கட்டிவிட்டால் எல்லாமே ஸ்தம்பித்து விடும்,இழப்பீடுகள் வந்து கொண்டே இருக்கும்.கடன் பிரச்சினைகள்,குடும்ப பிரிவினைகளையும் உருவாக்கும்.செய்தொழில் நஷ்டம் அடையும்.
முறையாக மாந்திரீக கட்டை உடைக்கும் வரை பிரச்சினைகள் ஏதாவது ஒரு வழியில் வந்து கொண்டே இருக்கும்.
என் பாட்டனார் கோடாங்கி பகவதித் தேவர் சவால் விட்டு கோவில் கட்டை உடைத்த விவரம் அடுத்து பதிவிடுகிறேன்.
மேலும் ஆலோசனைக்கு தொடர்பு கொள்க
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி மந்திரம்:

சகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ மஹாலட்சுமி மந்திரம்:
"ஓம் ஸ்ரீம் அகண்ட சௌபாக்ய தன சம்ருத்திம் தேஹி தேஹி நம"
இந்த மந்திரத்தை ஏதேனும் ஒரு வெள்ளிக் கிழமையன்று மாலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை துளசி மாலை கொண்டு 600 உரு செபித்துப் பின்னர் 90 நாட்களுக்குத் தினமும் 27 தடவையாவது செபித்து வர தொடர் தோல்விகள்,தொழில் நஷ்டம்,காரியத் தடைகள்,வறுமை,கடன் நீங்கி வாழ்வில் எல்லா நிலைகளிலும் உயர்ந்திட நல்வாய்ப்புகளையும்,அதிர்ஷ்டங்களையும் அடையலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

என் பாட்டனார் கோடாங்கி பகவதித் தேவர் கோவில் கட்டை உடைத்த விவரம்:

என் பாட்டனார் கோடாங்கி பகவதித் தேவர் கோவில் கட்டை உடைத்த விவரம்:
மதுரை மாவட்டம்,திருமங்கலம் அருகில் உள்ள T.அரசப்பட்டி கிராமத்து பெரியவர்கள் சிலர் ஊர் குறி கேட்க அவர் முன்பு அமர்ந்தார்கள்,தன்னோட தெய்வத்தை அழைத்து உடுக்கி அடித்து குறி பாட ஆரம்பித்தார்,ஐயா, சில வருசமா உங்க ஊரில் திடீர் திடீர் சாவும்,மக்கள் எல்லோருக்கும் சுகமில்ல,பஞ்சமும்,பசியும் பட்டினியும் இருக்கீங்க,ஊர் கோவிலுக்கு களரி(விழா) நடத்த முடியலவில்லை என்று குறி சொன்னார்.அந்த பெரியவர்கள் என்னோட பாட்டனாரை அழைத்து சென்றார்கள்.மந்தையில் வைத்து உடுக்கு அடிக்க வைத்தார்கள்,அவரிடம் அம்மன் இறங்கி தெய்வத்தை மாதவிலக்கு துணி,பன்னி மலம்,கழுதை காது,கரும்பூனை எலும்பு,யந்திரம் வைத்து கட்டி கோவில் வாசலில் புதைத்து இருக்காங்க என்று சொன்னார்.இது இல்லைன்னா தலைகீழாக கட்டி வைச்சு அடிப்போம் என்று சொன்னார்கள்.சவால் விட்டு சொன்னார் அந்த இடத்தை பாருங்க என்று,ஊர் மக்களே தோண்டி எடுக்க அந்த பொருட்கள் அனைத்துமே இருந்தது. ஊர் மக்கள் அவரை வணங்கி,தெய்வத்தை பேச வையுங்க என்று கோரிக்கை வைத்தார்கள்.பரிகாரம் செய்து கட்டை உடைத்து அம்மனை பேச வைத்தார்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, December 27, 2016

ஐங்கோல மை பிரயோகம் மற்றும் செய்முறை


ஐங்கோல மை பிரயோகம் மற்றும் செய்முறை
அன்பர்களே முதலில் நான் ஒரு பெரிய மாந்திரீக வாதி என்று குறிப்பிடுபவர்கள் இந்த ஐங்கோல மை பிரயோக முறையினை தெரிந்திருக்க வேண்டும் அதை எப்படி பயன் படுத்தி காரியத்தை சாதிக்கலாம் என்ற முழு அறிவு வேண்டும் .
இந்த ஐங்கோல மையினை பொதுவாகவே துர்தேவதைகளை வைத்து ஏவல் செய்வதற்காக பயன் படுத்துகிறார்கள் .
இந்த மையை பயன்படுத்தி எதிரியின் ஏவலை திக் பந்தனம் செய்வதற்கும் சிறு தெய்வங்களை வேலை வாங்குவதற்கும் ஏவல் செய்வதற்கும் செய்வினைகள் புரிவதற்கும் இந்த மை பயன் படும் .இந்த மை நமது கையில் இருந்தால் மட்டுமே எல்லோரும் கூறும் ஏவல் பில்லி சூன்யம் செய்வினை அனைத்தும் சாத்தியமாகும் எதிரி ஏவி விட்ட தேவதையை கட்டு படுத்தவும் இந்த ஐங்கோல மை பயன்படும் .
ஐங்கோல மை செய்முறை :
இறந்து போன பிணத்தின் நாடியில் கட்டியுள்ள நாடிக்கட்டு துணி ,கையில் கட்டியுள்ள கைகட்டுதுணி ,கால் கட்டுத்துணி , வில் போட்ட வாய்க்கரிசி ,பிணத்தின் நெற்றியில் வைத்த சந்தனம் ,போட்டு ,பிணத்தின் கழுத்தில் அணிந்த மாலை ,மண்டை ஓடு ,இவையெல்லாம் சேகரித்து பொடிசெய்து சித்தாமனக்கு எண்ணெய் விட்டு அரைத்து அதிலிருந்து தைலம் இறக்குவார்கள் இதுதான் ஐங்கோல தைலம் மை செய்யும் முறை .
ஐங்கோல மை பிரயோகம் :
இந்த மையை பயன் படுத்திதான் நிறைய பேர் கேரளாவில் ஜால வித்தைகள் காட்டுகிறார்கள் ,இந்தமையை பயன்படுத்தி குறிப்பாக மாடன்மார்கள் என்று கூறப்படும் எட்டு வகை மாடன்மார்களை வேலை வாங்கலாம் நாம் என்ன சொன்னாலும் அது செய்துய் விட்டு வரும் .
துர்தேவதைகளுக்கு பூஜைபோட்டு ஒரு சில யந்திரங்களை இந்த வீட்டில் வைக்க சொன்னால் அந்த யந்திரமானது நாம் கூறிய இடத்திற்கு சென்று விடும்
இந்த மையை பயன்படுத்தி ஏவல் செய்யலாம் அடுத்து நல்ல வியாபாரம் நடக்கும் இடத்தில் இந்த மையுடன் கொஞ்சம் சுடுகாட்டு சாம்பலை சேர்த்து வியாபாரம் நடக்கும் இடத்தில் தூவி விட்டால் வியாபாரம் நடக்காமல் முடங்கி போய் விடும் .தாண்டு என்று கூறப்படுகிற முறை அதாவது ஒரு சில பூஜைகள் செய்து கருமைதடவி ஒரு சில பொருட்களை ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டால் அந்த இடத்தை எதிரி தாண்டியவுடன் அவன் மாண்டுபோவான் .இதுதான் தாண்டு என்று கூறப்படுவது .
இந்த விஷயங்கள் மிகவும் சூட்ஷமா சூட்சம விஷயங்கள் எல்லோரும் தெரிந்துகொள்வதற்காக கூறுகிறேன் ,யாரும் போலிகளை நம்பி ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக .
எந்த பிரச்சனைகளுக்கும் எங்களிடம் தீர்வுண்டு அதனால் தயங்காமல் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் செய்திகளை அனுப்பவும் .
mmsvguna@gmail.com,
mobile number: +91 75 98 75 89 89

ஏவல் பில்லி சூன்யம் செய்வினை வைப்பு

ஏவல் பில்லி சூன்யம் செய்வினை வைப்பு
பொதுவாக மாந்திரிகத்தால் செய்யபடுகின்ற பில்லி சூனியத்தை பற்றி மக்கள் பல நேரங்களில் பேசுகிறார்கள் சில மந்திரவாதிகளும் அந்த வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள் அப்படி என்றால் என்ன? அதன் உண்மையான பொருள் என்ன என்பது பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக ஏவல், சூனியம் என்பதை கூட சிறிது விளங்கி கொள்ள முடிகிறது. பில்லி என்பதை பற்றி அதிகமாக புரிந்துகொள்ள முடியவில்லை எனவே அவைகளை சிறிது விளக்க முடியுமா என்று என்னிடம் கேட்கிறார்கள் அவர்களுக்கு விளக்கம் தரவேண்டியது எனது கடமை என்று நினைக்கிறேன் அந்த கடமையே செய்து முடித்த பிறகே மாந்திரிகத்தை பற்றிய முழுமையான தகவல்களை கொடுத்தால் நன்றாக இருக்குமென்றும் கருதுகிறேன்.

பில்லி என்ற வார்த்தை வடமொழியிலோ தமிழிலோ கிடையாது இந்த வார்த்தை புத்தர் பேசிய பாலி மொழியில் உள்ளதாகும் இதற்கு நேரடியான பொருள் கட்டுபடுத்துதல் என்று சொல்லலாம் அதாவது மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டு படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரம் கற்ற ஒரு மந்திரவாதி ஒருவனை மன நோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும். ஒருவனது, செயல்களை தலைகீழாக மாற்றி தோல்விகளை மட்டுமே அவன் பெறும்படி செய்துவிடவும் முடியும். இது தான் பில்லி என்பதன் விரிவாக்கம்.
அடுத்ததாக சூன்யம் என்ற வார்த்தை வருகிறது. இது வடமொழி சொல் என்பது எல்லோருக்கும் தெரியும். சூன்யம் என்றாலே வெறுமை என்பது பொருளாகும். செல்வந்தனான ஒருவனை ஒன்றுமே இல்லாத வறியவனாக நடுத்தெருவில் நிறுத்துவதன் மந்திர பெயரே சூன்யம் என்பதாகும். இந்த சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும். அழித்து விடலாம் கைகால்களை முடக்கி விடலாம் சம்மந்த பட்டவருக்கு தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளை செலுத்தி விடலாம் கருவில் உள்ள குழந்தயை கூட கொன்றுவிடலாம்.
தனக்கு கீழே உள்ள ஒருவனை இந்த வேலையை செய் என்று சொல்வது எவலாகும். அதே போன்றது தான் மாந்திரிகத்தில் உள்ள ஏவல் முறையாகும் மந்திர சக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவி விட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய உறுப்பாகும் இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரது மூளையை முற்றிலுமாக நமது கைவசப்படுத்தி அவரை நமது ஏவலாளாக ஆக்கிவிடவும் முடியும்.
இதே போல மாந்திரிகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் என்னொரு வார்த்தை செய்வினை என்பதாகும். தனது சொந்த விருப்பத்தின் படி செயல்பட்டு கொண்டு லாபத்தையும். வெற்றிகளையும் அநுபவத்தி வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பி விட்டு கடேசியில் அவனை படுகுழியில் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும் இதன் மூலம் ஒருவனின் பொருளாதாரத்தையும் அழிக்கலாம் ஆரோக்கியத்தையும் நீர்த்து போக செய்யலாம்.
அடுத்ததாக உள்ளது வைப்பு என்பதாகும். இது மந்திர வழியிலோ மருத்து வழியியோ ஒரு பொருளை உண்ண கொடுத்து அல்லது அவர்களின் ஆடையில் உடம்பில் தடவி விட்டு அவர்களை வசிய படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இப்படி பட்ட தீய காரியங்கள் மாந்திரிகத்தில் ஏராளமாக இருக்கிறது
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஏவல் பில்லி சூன்யம் வகைகள்


ஏவல் பில்லி சூன்யம் செய்வதில் பல வகைகள் முறைகள் உண்டு. வாசகர்களின் வேண்டுகோளுக்காக சில முறைகளை இங்கே தெளிவு படுத்துகிறேன்.

1. காலடி மண் :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஒரு நபருக்கு தீங்கினை விளைவிப்பதற்காக அந்த நபரின் காலடி மண்ணை எடுத்து அதில் அந்த நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபருடைய வீட்டு கூரையின் மீது வீசி எரியபடுவதகும். அப்படி அந்த மண்ணை வீசிவிட்டால் அந்த குறிப்பிட்ட நபர் மற்றும் அந்த மண் வீசப்பட்ட வீட்டில் குடியிருக்கும் அனைவரும் நிம்மதியாக இரவில் தூங்க முடியாது. வீட்டின் மீது கல் விழுவது போன்ற சப்தம் எழும். சிலர் வீட்டில் கற்களும் விழும். அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு காலில் அரிப்பு புண்கள் ஏற்படும். சிலருக்கு கைக்கால் வராமலும் போகும்.


2.சுடுகாட்டு சாம்பல் :ஏவல் பில்லி சூனிய வகையில் இரண்டாம் வகை தலைச்சான் பிள்ளையின் மண்டையோட்டு சாம்பலை எடுத்து அதில் ஏவல் சக்கரங்களை எழுதி சூன்யம் செய்ய வேண்டிய நபரின் பெயரை அந்த சக்கரத்தில் எழுதி மந்திர உருவேற்றி அவர்களின் வீடுகளில் போடுவதாகும். இதனால் அந்த வீட்டில் உள்ள நபர்களுக்குள் பகைமை விரோதம் உண்டாகி ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் பிரிந்துபோவர்கள். இந்த சாம்பலை தின்பண்டங்களில் கலந்து கொடுத்தல் தீராத நோய்களை உண்டாக்கும்.


3.முட்டை :ஏவல் பில்லி சூன்ய வகைகள் மூன்றாவது முறை ஒரு முட்டையை வைத்து ஏவல் செய்ய வேண்டிய நபரின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அவர்களின் வீட்டு வாசலில் உடைத்து விடுவது. இதனால் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பலவிதமான இன்னல்கள் உண்டாகும்.


4.எந்திர தகடு :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் நான்காவது முறை செம்புத் தகடில் ஏவல் செய்ய வேண்டியவரின் பெயரை எழுதி சக்கரங்கள் வரைந்து மந்திர உருவேற்றி அடுப்பில் தீயிட்டு அந்த எந்திரத்தை எரித்து விடுவது. இதனால் ஏவல் செய்யப்பட்ட நபருக்கு உடல் முழுவதும் எரிச்சல் உண்டாகி தீராத துன்பத்தை அடைவான்.


5.சுண்ணாம்பு :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஐந்தாவது முறை சுண்ணாம்பு சிறிது எடுத்து பாட்டலில் அடைத்து இரவில் ஜன நடமாட்டம் இல்லாத சமயம் முச்சந்தியில் வைத்து மந்திர உருவேற்றி வைத்து, அதிகாலையில் யாருக்கும் தெரியாமல் எடுத்துவந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி இரண்டு வீட்டு சுவரிலும் பூசிவிடுவது. இதனால் இரண்டு குடும்பங்களுக்கும் இடையில் தீராத சண்டை சச்சரவுகள் உருவாகும்.


6.எலுமிச்சை :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஆறாவது முறையில் சில எலுமிச்சம் பழங்களை கொண்டுவந்து அதில் ஏவல் செய்ய வேண்டிய நபர்களின் பெயரை சொல்லி மந்திர உருவேற்றி அந்த நபர்களின் வீட்டுக்குள் போட்டுவிடுவது அல்லது புதைத்து விடுவது. இதனால் அந்த வீட்டில் தீராத பிரச்சனைகளும் குழப்பங்களும் உண்டாகும்.


7. மந்திர பாவை (பொம்மை) :ஏவல் பில்லி சூன்ய வகைகளில் ஏழாவது முறை சந்தன கட்டையால் ஓர் பொம்மை செய்து சரியாக அங்க அவயங்களை செதுக்கி கருப்பு, சிவப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்காரம் செய்து அந்த பொம்மையில் எதிரியின் பெயரை எழுதி மந்திர உருவேற்றி அந்த பாவையின் உடலில் சிறிய ஊசியால் குத்தி வைப்பது. இதனால் எதிரியின் உடலில் அந்த உறுப்பில் தீராத வலியும் வேதனையும் உண்டாகி துன்பப்படுவான்.ஏவல் பில்லி சூன்ய வகைகளில் இன்னும் மோகினியை வைத்து செய்வது, துர்தேவதைகளை வைத்து செய்வது, சாத்தானை வைத்து செய்வது என்று பல வகைகள் உண்டு. வாசக நல் உள்ளங்களே கெடுவான் கேடு நினைப்பான். எனவே யாருக்கும் கெடுதலை செய்யும் எண்ணமே வேண்டாம். ஏனென்றால் ஏவல் பில்லி சூன்யத்தால் பாதிக்க பட்டவன் அதனால் 12 வருடம் மட்டுமே துன்பப்படுவான். ஆனால் அதை செய்தவனும் அவன் பரம்பரையும் 98 வருடங்கள் துன்பப்பட வேண்டும். எனவே நல்லதே நினைப்போம் நல்லதே செய்வோம்.


ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண

தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, December 22, 2016

பைரவர் வழிபாடு






ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

   இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் அஜாமிளா (பைரவியை) அமர்த்திக்கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும்ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைரகிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார்.இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில்வெள்ளிசெவ்வாய் கிழமைகளில்வணங்கினால் சகல சம்பத்தும்பொன் பொருளும் கிட்டும்ஸ்ரீபைரவருக்குப்பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால்காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும்நல்லருள்கிட்டும்இலுப்பைஎண்ணெய்விளக்கெண்ணெய்தேங்காய் எண்ணெய்நல்லெண்ணெய்பசு நெய்இவற்றினை தனித்தனி  தீபமாக  அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணியகாரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

      வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர்ஸ்வர்ணாகர்ஷண பைரவரை  வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்புதிருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள் செல்வம் கிட்டும்தாமரை மலர் மாலைவில்வ இலை மாலை போடுவது சிறந்ததுதேய்பிறைஅஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்துநெய் விளக்கு ஏற்றிவடைமாலைசாற்றிசெந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்துவெள்ளைப் பூசணியில் நெய் தீபம்ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.
   
      ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றிவிபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்துவடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனைசெய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில்திருமணம்கூடும்.இவரை வழிபாடு செய்வதால் வறுமைபகைவர்களின்தொல்லைகள்பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும்தன லாபமும்வியாபார முன்னேற்றம்பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில்மகிழ்ச்சியை பெறலாம்நம்பிக்கையுடன்பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர்யந்திரத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன்தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக்கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச்செழிப்புஏற்படும்.

   வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர்பைரவி சிலைஅல்லது யந்திரம்,படம் வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்துசெல்வம் பெருகி வளம் பெறுவார்கள்தினமும் பைரவர் காயத்ரியையும்பைரவிகாயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்வெல்லம் கலந்தபாயசம்உளுந்துவடைபால்தேன்பழம்வில்வ இலைகளால் மூல மந்திரம்சொல்லி  அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்ஸ்வர்ணகர்ஷண பைரவஅஷ்டகம் தனச் செழிப்பைத் தரும்வெள்ளிக்கிழமைதிங்கட்கிழமை இரண்டுநாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும்தனவிருத்தியையும் அடைவார்கள்.  பவுர்ணமி அன்று  இரவு எட்டு மணிக்கு தீபத்தைஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்யவேண்டும்.

   இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தனவரத்தை அடையலாம்நீண்ட நாட்களாக உள்ள  வறுமையிலிருந்து விடுபடலாம்ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.கோரிக்கைகளை  நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

   சித்திரை - பரணிஐப்பசி - பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணிநட்சத்திரம்கால பைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும்ஏனெனில் பரணிநட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார்எனவே பரணி நடசத்திரக்காரர்கள்பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும்பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்தபலன்களை கொடுக்கும்பைரவர் விரதம் எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம்இருக்கலாம்ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால்அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.
  குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.அதிகாலையில்  நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்கவேண்டும்பகலில்இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாதுஅன்று மாலை பைரவருக்கு வடை மாலைசாற்றி வழிபட வேண்டும்வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால்போதும்

சிதம்பரத்தில் சொர்ண பைரவர்

   சிதம்பரம் நடராஜப் பெருமானுடைய சித்திர சபையில் கீழ்புறத்தில் வைக்கப்பட்டுள்ள சொர்ண பைரவ முர்த்தியின் பாதத்தில் சுமார் இருநுரு,முன்னுறு வருடங்களுக்கு முன் அப்போது வாழ்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் செப்புத்தகட்டை அர்த்தஜாமப் பூஜையின் போது மந்திரங்கள் கூறி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார்களாம் மறுநாள் காலையில் வந்து பார்க்க பைரவப் பெருமானின் பேரருளால் அந்தச் செப்புத் தகடு சொர்ணத் தகடாக மாறி இருக்குமாம் பின் அதை விற்று வாழ்க்கையை இனிமையாக கழித்ததாகக் கூறப்படுகிறது. இக்காலத்திலும் இவரை அன்புடன் உள்ளம் உருகி வணங்கி வழிபட்டு வர சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமருகம்
திரிசுலம் வரம் கரை
ஸமசந்ததம் த்ரிநேத்ரம்
தேவயாயுதம் தப்தஸவர்ண
வர்ஷணம் ஸ்வர்ணா
கர்ஷணம் பைரவம்


ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் துதி

“ஸ்வர்ண கால பைரவம் த்ரிசுலயுக்த பாணி நம்
வேத ருப ஸாரமேல் ஸம்யுதம் மஹேச்வரம்
ஸ்மாச்ரி தேஷ ஸர்வதா ஸமஸ்தவஸ்து தாயினம்
மகீந்திரி வம்ச பூர்வ புண்ய ருபினம் ஸமாச்ரயே”
   
  மேற்கன்ட ஸ்வர்ணாகர்சண மந்திரத்தினை தில்லை வாழ் அந்தணர்கள் அறுபத்து நான்காயிரம் தடவைகள் பைரவர் முன் கூறி வைத்துவிட்டு செல்லும் செப்புத் தகடே பொன் தகடாக மாறி அவர்களுக்கு வளமையை அள்ளித் தந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்


”ஏக சஷ்டி அஷரம் மந்திரம் லகு சித்தப்ரதாயகம்

ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய சித்தியே.”

(வேறு மூல மந்திரம்)

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989




ருத்ராட்சம் அள்ளித்தரும் பலன்கள்
இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.
சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம்    அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன.  

ஏகமுக ருத்ராட்சம்:

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

2 முக ருத்ராட்சம்:

சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.

3 முக ருத்ராட்சம்:

ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.

 4முக ருத்ராட்சம்:

கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.

5முக ருத்ராட்சம்:

கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.

6முக ருத்ராட்சம்:

ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.

7 முக ருத்ராட்சம்:

மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:

8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.

9 முக ருத்ராட்சம்:

இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

10 முக ருத்ராட்சம்:

இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.

11 முக ருத்ராட்சம்:

தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.

12 முக ருத்ராட்சம்:

இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:

6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.

14 முக ருத்ராட்சம்:

இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.





 ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
  
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண் களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்று ம் குரோதம் கிடையாது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத் ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது

சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெ ல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கு ம். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.