Wednesday, January 25, 2017

வியாபார வசிய யந்திரம்:--


வியாபார வசிய யந்திரம்:--
வியாபார விருத்தி, தொழில் முன்னேற்றம் தரும்.தொழில் போட்டிகளை சமாளிக்கலாம்.தொழிலில் தடை உள்ளவர்கள் இந்த யந்திரத்தை வழிபடுவதன் மூலம் சிறந்த லாபத்தை அடைய முடியும்.சக்திமிக்க யந்திரம்.வியாபாரிகள்,வணிகர்கள்,புதியதாக தொழில் தொடங்குபவர்கள் அனைவருக்குமான சிறந்த யந்திரம்.பல அளவுகளில் கிடைக்கும்.
சக்திமிக்கஇந்த யந்திரங்களை எவ்வாறு வழிபடுவது,எங்கு வைப்பது மற்றும் பூஜை முறைகள், விவரங்கள் அனைத்தும் யந்திரங்கள் வாங்கும் போது வழங்கப்படும்.
இந்த யந்திரங்கள் அனைத்தும் 48 நாட்கள் பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்டு ,சக்தியூட்டப்பட்டது
பூஜிக்கப்பட்ட,சக்தியூட்டப்பட்ட யந்திரங்கள் வாங்க



ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989

காளி உபாசனை மந்திரம்:

காளி உபாசனை மந்திரம்:

காளி செபத்தை மனத்தினால் தியானித்து,
"ஓம் நமோ பகவதி காளி சாமுண்டிதேவி பைரங்கதேவி சுவாஹா"
இந்த மந்திரத்தை மூன்றுவேளையில் ஸ்நானஞ் செய்வித்து மஞ்சள் வஸ்திரந்தரித்து சுத்தமான இடத்திலிருந்து ஏழு நாளையில் 1008 உரு செபிக்க வேண்டும்.பெண்கள் முகம் பார்க்கப்படாது,ஏழு நாளும் தானே சமையல் செய்து சாப்பிட வேண்டும்.இந்தப்படி சுத்தாமயிருந்து ஜெபிக்கச் சித்தியாகும்.
இதனால் கவி பாடத் திறமையுண்டாகும்,எதிரிகள் சத்துருக்கள் இருக்க மாட்டார்கள்,பேய் பிசாசு யாவும் உபதேசித்தவர் பெயர் சொன்னாலே ஓடிவிடும்.தொழில் வியாபாரம்,உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
காளி யந்திரம் வைத்து உபாசனை செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பூஜிக்கப்பட்ட காளி யந்திரம் தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி

போன்:7598758989

தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் விவரம்:


தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் விவரம்:
பூஜிக்கப்பட்டு,சக்தியூட்டப்பட்ட இந்த யந்திங்கள்,தாயத்துக்கள் கிடைக்கும்.
12 ராசிக்கான யந்திரம்,
கணவன் மனைவி வசியம்,ஆண் பெண் வசியம்,நினைத்தது நடக்க,சர்வ ஜன வசியம்,எதிரிகள் வசியம்,உயர் அதிகாரிகள் வசியம்,தொழில் வியாபார விருத்தி,சகல காரிய சித்தி,நல்ல வேலை கிடைக்க,படிப்பு வர,கர்ப்பம் தரிக்க,எந்த நோயும் விலக,செய்வினை பேய் பிசாசு கண் திருஷ்டி விலக,வீடு கட்ட,செல்வம் சேர,பெருக,நிலைக்க,பணச்சேமிப்பு உயர,பைத்தியம் மனநோய் விலக,சர்வ தோஷம் விலக,திருமணம் நடக்க,வியாபாரம் நன்கு நடக்க,விவசாயத்தில் மகசூல் அதிகரிக்க,அதிர்ஷ்டம் உண்டாக,பண வரவும் லாபமும் உண்டாக,லோக வசியம்,குடும்ப ஒற்றுமை வசியம்.
இவற்றுக்குண்டான தாந்த்ரீக பரிகார யந்திரங்கள்,தாயத்துக்கள் தேவைக்கு அணுகவும்.

ஸ்ரீ காளி தேவி

போன்:7598758989

விரைவில் திருமணம் நடைபெற பைரவர் வழிபாடு

விரைவில் திருமணம் நடைபெற பைரவர் வழிபாடு

ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

இவரை நம்பிக்கையுடன் வழிபடுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்டஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம்.


நம்பிக்கையுடனும், பக்தியுடனும், ஸ்ரீஸ்வர்ணா கர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்ரீஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுவார்கள்.

தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரி யையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989

துர்க்கை வழிபாடு

 துர்க்கை வழிபாடு
திருமணம் தடைபடுபவர்கள் துர்க்கை வழிபாடு செய்தால் போதுமானது. ஒவ்வொரு கிழமையிலும் வழிபாடு செய்ய வேண்டிய விபரம் தரப்பட்டுள்ளது.

ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமை துர்க்கை சன்னிதியில் மாலை 4.30 முதல்  - 6 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, விளக்கேற்ற வேண்டும். சர்க்கரை பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை நீங்கி, செல்வம் பெருகி எல்லா நலன்களும் உண்டாகும்.

திங்கள்: திங்கள்கிழமைகளில் காலை 7.30 -  முதல் 9 மணிக்குள் துர்க்கைக்கு வெண்ணெய் காப்பு செய்து வெண் பொங்கல் நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும் என்பதும். வெளிநாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிட்டும் 

செவ்வாய்: ராகு கால நேரமான மாலை 3 மணி முதல் - 4.30க்குள் வடக்கு முகமாக தீபமேற்றி, தக்காளி சாதம் நைவேத்யம் செய்து துர்க்கைய வழிபட வேண்டும். இதனால் மாங்கல்ய பலமும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் 

புதன்: மதியம் 12 முதல் 1.30 மணிக்குள் பஞ்சில் திரிசெய்து, விளக்கேற்றி, புளியோ தரை நைவேத்யம் செய்து துர்க்கையை வழிபட வேண்டும். இதனால் பதவி உயர்வு கிட்டும் என்பது, ரத்த சம்பந்தமான நோய் தீரும்  

வியாழன்: வியாழக்கிழமைகளில் மதியம் 1.30 முதல்  - 3 மணிக்குள் விளக்கேற்றி, எலும்மிச்சம்பழம் சாதம் நைவேத்யம் செய்து, வழிபட வேண்டும். இதனால் வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிட்டும். இதய சம்பந்தமான நோய்கள் நீங்கும் 

வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் ராகுகால நேரமான காலை 10.30 முதல்  - 12 மணிக்குள் துர்க்கையை வழிபட மற்ற நாட்களை விட மிக ஏற்ற காலம். எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு, அதை குழிவாகச் செய்து, நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சில் திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும். தேங்காய் சாதம் அல்லது பாயாசம் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் தீராத துன்பம் தீரும். மாங்கல்ய பலம் பெருகும் .

சனி: காலை 9 -  முதல் 10.30 மணிக்குள் மஞ்சள்துணி திரியில் விளக்கேற்றி, காய்கறி கலந்த அன்னத்தை நைவேத்யம் செய்து வழிபட வேண்டும். இதனால் வேலை வாய்ப்பு கிட்டும், அரசியல்வாதிகள் ஏற்றம் பெறுவர், சிறுநீரக கோளாறு நீங்கும் .

ஸ்ரீ காளி தேவி
போன்:7598758989

நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க

நிரந்தர வேலை கிடைக்க மற்றும் வேலைக்கு ஆட்கள் கிடைக்க
சிலர் நிரந்தர வேலை இல்லாமல் தவிப்பர், வேறு சிலரோ வேலைக்கு ஆட்கள் நிரந்தரமாக அமையாமல் தொழில் தடுமாற்றத்தில் இருப்பர். இத்தகைய சூழலுக்கு, காலை சூரியன் உதித்த ஒரு மணி நேரத்திற்குள், ஒரு செம்பு டம்பளரில் சுத்தமான நீர் எடுத்து அதில் சிறிது வெல்லம் கரைத்து, சூரியனை பார்த்தவாறு 'ஓம் சூர்யாய நமஹ: " மந்திரம் கூறியவாறே 10 முறை நீரை சிறிது சிறிதாக சூரியனுக்கு அர்ப்பணம் செய்து, கண் திறந்து வழிபட்டு வர நினைத்த வேலை கிடைக்கும். வேலைக்கும் ஆட்களும் நிரந்தரமாக கிடைப்பர்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மூலிகை சாப நிவர்த்தி

மூலிகை சாப நிவர்த்தி மற்றும் பிராண பிரதிஷ்டை மந்திரங்கள்
மூலிகைகள் தெய்வீக சக்தி கொண்டவை.அதுவும் நமது ஹிந்து தர்மத்தில் மூலிகை,செடி,மரம் இவை தெய்வ அம்சமாகவே பார்க்கப்படுகின்றன.
உதாரணம் :-
விநாயகர் - அருகம்புல்
சிவபெருமான் - வில்வம்
அம்மன் - வேம்பு
விஷ்ணு - துளசி
ஹனுமான் - வெற்றிலை,துளசி
துர்க்கை - வன்னிமரம்
அரசமரம் - விநாயகர்,திரிமூர்த்தி ஸ்வரூபம்

அந்த அந்த தெய்வங்களின் அருள் பெற குறிப்பிட்ட தெய்வத்திற்கு இஷ்டமான மரம்,செடியின் அருகில் தேவைக்கேற்ப திசை நோக்கி அமர்ந்து மந்திரம் ஜெபித்து அந்த செடியின் வேரடி மண்ணை பயன்படுத்திப் பல காரியங்களில் வெற்றி பெறலாம். (இந்த சக்தி வாய்த்த பிரயோகம் பற்றி எழுதினால் அதிகம் நீளும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்)
பல மூலிகைகள் அஷ்ட கர்மம் எனப்படும் மாந்திரீக வேலைகளுக்கும் தவறாகப் பயன்படுவதால் சித்தர்கள் ,ரிஷிமார்கள்,தெய்வங்களின் சாபம் மூலிகைகளுக்கு உண்டு. எனவே எந்த மூலிகையை பறிக்கும் போதும் அவர்களின் சாபம் தீர்க்கும் மந்திரம் ஜெபித்த பின்னரே பறிக்கவேண்டும்.
மூலிகை பிடுங்கும் முன்னர் கன்னிப்பெண் நூற்ற நூல் கொண்டு அல்லது மஞ்சள் தடவிய வெள்ளை நூல் கொண்டு காப்பு கட்டி எலுமிச்சம்பழம் படைத்துக் குறைந்தது 3 நாட்கள் கழித்துப் பறிக்க சிறப்பு என்று மந்திர சாஸ்திரம் கூறுகிறது.சில குறிப்பிட்ட பிரயோகங்களுக்குக் குறிப்பிட்ட நாள்,நட்சத்திரம்,திதி , பட்சி எல்லாம் பார்த்துச் செய்ய வேண்டும்.இங்கு நான் பொதுவான காரியங்களுக்குப் பயன்படுத்துவது பற்றி எழுதியுள்ளேன்.
குறிப்பிட்ட மூலிகையின் முன் கிழக்கு முகமாக நின்று கொண்டு கீழே உள்ள சாபநிவர்த்தி மந்திரத்தை 3 தடவை சொல்லிக் கொஞ்சம் விபூதியை அந்த மூலிகையின் மேல் போட்டு வணங்க வேண்டும்.
.
மூலிகை சாபநிவர்த்தி மந்திரம்

ஆனைமுகனை அனுதினம் மறவேன்
அகஸ்தியர் சாபம் நசி நசி
பதினென் சித்தர் சாபம் நசி நசி
தேவர்கள் சாபம் நசி நசி
மூவர்கள் சாபம் நசி நசி
மூலிகை சாபம் முழுவதும் நசி நசி


பின்னர் கீழே உள்ள ப்ராணப்ரதிஷ்டை மந்திரம் 3 தடவை ஜபித்து சிறிது அருகம்புல்லை மூலிகையின் மேல் போட்டு வணங்கி எடுக்க வேண்டும்.அப்பொழுது மட்டுமே மூலிகை மண்ணில் உயிர்ப்புடன் இருந்த போது உள்ள அதே சக்தியுடன் .விளங்கும்.சோதனை செய்து பாருங்கள். சாதாரணமாகப் பறிக்கும் மூலிகையை விட சாபநிவர்த்தி மற்றும் ப்ராண ப்ரதிஷ்டை மந்திரம் ஜெபித்து எடுக்கப்பட்ட மூலிகை நீண்ட நேரம் ,நாட்கள் வாடாமல் இருக்கும்.

ப்ராண பிரதிஷ்டை மந்திரம் :-
ஓம் மூலி மகாமூலி ஜீவமூலி உன்னுயிர் உன் உடலில் நிற்க சிவா
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தன(பணம்) ஆகர்ஷண தாந்த்ரீக யந்திரம்:

தன(பணம்) ஆகர்ஷண தாந்த்ரீக யந்திரம்:
வளர்பிறை வெள்ளிக்கிழமையன்று செம்புத் தகட்டில்,2 சக்கரங்கள் கீறி,தேங்காய்,பழம்,வெற்றிலை பாக்கு,சர்க்கரை பொங்கல் படைத்து மந்திர உருவேற்ற வேண்டும்.அதன் பிறகு ஒரு தகட்டை பணம் வைக்கும் இடத்திலும்,இன்னொரு தகட்டை வாசல்படிக்கு உள்புறமாக மாட்டி,சாம்பிராணி தூபம் காண்பித்து வர பணமுடக்கம் விலகி,பண வரவு உண்டாகும்.
பண வீண் விரயங்கள் குறைந்து கணிசமாக பண சேமிப்பு உயரும்.
பண விஷயங்களில் சிறப்பான பலனை கொடுக்கும் மிகவும் சக்தி வாய்ந்த யந்திரம் இது.
பூஜித்த தன ஆகர்ஷண யந்திரத் தகடு தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Monday, January 23, 2017

செய்வினை கோளாறு பாதிப்புகளை அறிவது எப்படி?

செய்வினை கோளாறு பாதிப்புகளை அறிவது எப்படி?
துஷ்டசக்திகளை ஏவி விட்டு செய்தல்,யந்திரத் தகடுகள் வைத்து செய்தல் போன்றவற்றால் செய்வினை செய்திருப்பின் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும்.
வீட்டில் உள்ள நிம்மதி காணாமல் போகும்,கணவன் மனைவிக்குள் சதாகாலமும் சண்டை சச்சரவு ஏற்படும்.
வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும்,பல விடயங்கள் நடக்கும்.
பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்.
பணம் சேமிப்பு ஆகாது,பண விரயம் ஏற்படும்.
எதிர்பாராத நோய்களையும்,வாகன விபத்துக்களையும் ஏற்படுத்தும்.
தெய்வ வழிபாடு செய்ய முடியாது,கடவுள் நம்பிக்கை குறையும்.
அதிக கடன்கள் உண்டாகும்,
மனநிம்மதி இருக்காது,பசி,தூக்கம் இருக்காது,மனதில் எதிர்மறை சிந்தனை,எண்ணங்கள் தோன்றும்.
இதற்கு மாறாக இப்படியும் இருக்கும்,அதாவது அசைவ உணவு சாப்பிட அதிக ஆர்வம்,நீண்ட நேர தூக்கம்,அதிக கோபம்,அதிகமான காம உணர்வு எண்ணங்கள் இவைகளையும் ஏற்படுத்தும்.
எந்த தொழில்,வேலை செய்தாலும் நஷ்டம்,தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மேற்கூறிய அறிகுறிகள் இருப்பின் செய்வினை கோளாறு பாதிப்பு உண்டு என உறுதிப் படுத்தலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கருவூராரின் ஐங்கோண வசிய சக்கர ரகசியம்:

கருவூராரின் ஐங்கோண வசிய சக்கர ரகசியம்:
கீழேயுள்ள யந்திரத்தை காரீயம் அல்லது செம்புத் தகட்டில் எழுதி,பூசையில் வைத்து தேங்காய்,வெற்றிலை பாக்கு,அவல்,பொறி கடலை,பொங்கல்.மல்லிகைப் பூ,பழங்கள் ஆகியவற்றை வைத்து,தூபம் காண்பித்து,ருத்திராட்ச மாலை கொண்டு,வசிய மந்திரத்தை தினமும் 500 உரு வீதம்,48 நாட்கள் உரு கொடுக்க சர்வலோகமும் வசியமாகும்.நம்மை மிஞ்ச எவராலும் முடியாது.
இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்துள் அடைத்து கட்டிக் கொண்டாலும் உன்னைக் கண்டவர்கள் அனைவரும் வசியமாகி உன்மீது மோகம் கொள்வார்கள் என்கிறார் கருவூரார்.
சக்தியூட்டிய ஐங்கோண வசிய சக்கரம் தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள்

கணவன் மனைவி ஒற்றுமைக்கும் மகிழ்ச்சியான வாழ்விற்கும் உதவும் ஆன்மீக ரகசியங்கள்
தம்பதிகள் ஒற்றுமைக்கு உதவும் பொதுவான மற்றும் குறிப்பிட்ட தேவைகளுக்கான சில ஆன்மீக ரகசியங்கள் உள்ளன.இவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது தேவையான ஒன்றைப் பின்பற்றி மகிழ்ச்சியான வாழ்வு வாழுங்கள்.
1.திருமணம் ஆனதும் தம்பதிகள் குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ ஆலயங்களுக்குச் செல்லும் முன் முதலில் ஸ்ரீ கிருஷ்ணன் ஆலயத்திற்குச் சென்று வணங்குவது தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் அன்பையும் வளர்க்கும்.
2.மனைவியின் அன்பைப் பெற திங்கட்கிழமை அன்று ஏதாவது வெள்ளை நிறமுடைய பொருட்களை அன்பளிப்பாக (GIFT) அளிக்கலாம்.
3.நீங்கள் ஒழுக்கமாக நடந்து கொண்டாலும் உங்கள் மனைவி உங்களுக்கு வேறு ஒருவருடன் தவறான தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து வந்தால் வெள்ளிக்கிழமை தோறும் பசுவுக்குப் புல் வாங்கிக் கொடுத்து வர உங்கள் மனைவியின் மனம் மாறி உங்கள் மீது அன்பு ஏற்படும்.
4.வளர்பிறை அஷ்டமி அன்று மனைவியின் நெற்றி மற்றும் வகிட்டில் கணவர் செந்தூரம் அல்லது குங்குமம் இட்டு வரத் தம்பதிகளுக்குள் அன்யோன்யம் பெருகும்.
5.கௌரி ஷங்கர் ருத்ராக்ஷம் ( இயற்கையாக இணைந்த ருத்ராக்ஷம் ) வீடு அல்லது அலுவலகத்தில் வைத்துப் பூஜித்து அணிந்து வர தம்பதிகளுக்குள் அன்யோன்யத்தையும் ஏற்படும்.

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்

பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் மந்திரங்கள்
நரசிம்ம மந்திரம்.
தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"
என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.
பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
துர்கா தேவி மந்திரம்
ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் துக்க ஹந்த்யை துர்க்காயை தே நம ஸ்வாஹா ||
தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.
பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழவும் பெறுவார்கள்.
பயம்,கெட்ட கனவுகள் நீக்கும் யந்திரங்கள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வியாபார விருத்தி யந்திரம்

வியாபார விருத்தி யந்திரம்
வேலை செய்பவர்களுக்கு என்னதான் கஷ்டமான வேலையாக இருந்தாலும் மாதமானால் சம்பளம் வந்துவிடும்.ஆனால் ,தொழில் செய்பவர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் போட்ட தொகை நஷ்டமாகாமல் லாபம் வர வேண்டும் என்ற சிந்தனை மனதை ஆக்கிரமித்தபடியே இருக்கும்.தொடர்ந்த தொழில் முன்னேற்றத்திற்குச் செம்பு தகட்டை சுத்தம் செய்து அபிஷேகித்து அதில் கீழே உள்ள வியாபார விருத்தி யந்திரத்தை வரைந்து முறைப்படி பிராணப் பிரதிஷ்டை செய்து நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக் கடை,தொழிற்சாலை, அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் அதிக லாபமும் உண்டாகும்.
செம்புத் தகட்டில் வரைய முடியாதவர்கள் ஒரு சுத்தமான வெள்ளை நிறப் பேப்பரில் நான்கு மூலைகளிலும் கொஞ்சம் ஜவ்வாது எடுத்து அதில் கொஞ்சம் பன்னீர் கலந்து அதைத் தடவி பின்னர் செந்தூரம் கொண்டு கீழே உள்ள யந்திரத்தை வரைந்து நெய் விளக்கேற்றி விளக்கின் முன்னால் வைத்து மல்லிகை மற்றும் செந்தாமரைப் பூக்களால் அர்ச்சித்துக் கடை,தொழிற்சாலை,அலுவலகத்தின் முகப்பு அல்லது வெளிப்புறச் சுவற்றில் மாட்டி அல்லது ஒட்டி வைக்கத் தொழிலில் தொடர்ந்த முன்னேற்றமும் ,அதிக லாபமும் உண்டாகும்.
இதை வளர்பிறை புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை மாலை 6:30 முதல் 8:00 மணிக்குள் செய்யவேண்டும்.
உருவேற்றிய வியாபார விருத்தி யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வீட்டு வாடகைக்கு ஆள் வர:

வீட்டு வாடகைக்கு ஆள் வர:
பீங்கான் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட நந்தி சிலையை வாங்கி வந்து அதை கண்ணாடி கிண்ணத்தில் வைத்துஅதன் மூக்கு வரை ஜலம் விட்டு 5 மிளகை எடுத்து கொண்டு,"சீக்கிரமாக இந்த இடத்திற்கு வாடகைதாரர் வர வேண்டும்" என்று வேண்டி நீரில் போட்டு விடவும்.கிண்ணத்தை வாசலை நோக்கியவாறு வைத்து செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் நீர் மாற்றி வரவும்.உடனடியாக பலன் தரும் பரிகாரம் இது.
வீடு.மனை,இடம் இவைகளில் பிரச்சினைகள்,வாஸ்து பிரச்சினைகள்,
விற்பனையாக மற்றும் 
சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு காண அணுகவும்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நவக்கிரக எண் யந்திரம்:

நவக்கிரக எண் யந்திரம்:
யந்திரங்களில் பல இருந்தாலும்,சித்தர்கள்,யோகிகள் வகுத்த எண் யந்திரங்களுக்கு பல சிறப்புகள் உண்டு.அந்த வகையில் நவக்கிரக எண் யந்திரத்தை செம்பு தகட்டில் கீறி,பூஜித்து வழிபட நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள்,தோஷங்கள் வெகுவாக குறையும்.மேலும் இடையூறுகள்,தடங்கல்கள் விலகி நன்மைகள் நடக்கும்.
உருவேற்றிய நவக்கிரக எண் யந்திரம் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


தீராத தரித்திரம் உடனே நீங்க:

தீராத தரித்திரம் உடனே நீங்க:
சனிக்கிழமை சனி ஹோரையில் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் எழுதி,மூலமந்திரத்தை 1008 உரு கொடுக்க யந்திரம் உயிர்பெறும்.அதன் பிறகு இரட்டை எலுமிச்சை ஒன்றை எடுத்து,இந்த யந்திரத் தகட்டை சுருட்டி பழத்துனுள் சொருகி,சம்மந்தப்பட்டவரை தெற்கு நோக்கி நிற்க வைத்து பழத்தின் மேல் கற்பூரம் ஏற்றி தலையை 3 முறை சுற்றி ஓடும் நீரில் அல்லது முச்சந்தியில் போட்டு விட தீராத தரித்திரம்,கஷ்டங்கள் உடனே நீங்கி விடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


பிரண்டை மூலிகை சூட்சமங்கள்:

பிரண்டை மூலிகை சூட்சமங்கள்:

தொழில் வியாபாரம் போட்டியா?

தொழில் வியாபாரம் போட்டியா?
உங்கள் தொழில் வியாபாரம் நன்றாக போய் கொண்டு இருக்கும்பொழுது சில முடக்கம் உண்டாகிறதா?இதற்கு காரணம் உங்கள் தொழில் போட்டியாளர்கள் உங்கள் வியாபார ஸ்தலத்தில் சில துஷ்ட பொடிகளை தூவி விட்டு சென்று இருப்பார்கள்.இதன் மூலம் நம் தொழிலில் சில குழப்பங்கள் உண்டாகும்.வியாபாரம் தொழில் முடங்கி விடும்.வாடிக்கையாளர்கள் வரத்தும் குறைந்து விடும்.இதற்கு தொழில்,பணத்திக்கு அதிபதியான புதனின் மூலிகை மற்றும் ஜன வசீகரத்தையும் உண்டாக்கும் சுக்கிர பகவன் மூலிகை மற்றும் மேலும் சில மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஜோதிஷா ஆகர்ஷண தூப பொடியை" தினமும் காலை,மாலை நேரத்தில் தூபமிட்டு வர தொழில் முடக்கம்,தடைகள்,போட்டிபொறாமைகள் விலகி தொழில் வியாபாரம் நன்கு நடக்கும்.தொழிலுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் உண்டாகும்.
தொழில் வியாபார விருத்திக்கு,"ஜோதிஷா ஆகர்ஷண தூப பொடி" கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Sunday, January 15, 2017

வாஸ்து தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு:

வாஸ்து தோஷத்தை நீக்கும் வலம்புரி சங்கு:
வலம்புரி சங்கை பூசையறையில் வைத்து வழிபட்டால் லட்சுமி குபேரரின் அருள் கிடைக்கும்.தொழில் செய்யும் இடத்தில் சங்கை வழிபட்டு வந்தால் தடை நீங்கி லாபம் பெருகும்.வலம்புரி சங்கில் பால் வைத்து லட்சுமியை வழிபட்டால் புதிய ஆடை ஆபரணம் சேரும்.சங்கில் ஊற்றிய புனித தீர்த்தை பூசையில் வைத்து அருந்த தீர்க்காயுள் உண்டாகும்.வெள்ளிக் கிழமையன்று வீட்டில் இத்தீர்த்தத்தை தெளித்தால் வாஸ்து தோஷம் விலகும்.சங்கு வழிபட்டால் ஏழு பிறவிகளில் செய்த பாவம் கூட நீங்கும்.முறையாக சங்கை தேர்வு செய்ய வேண்டும் இதுதான் மிக முக்கியம்.
வலம்புரி சங்கு தேவைக்கு அணுகலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வீட்டில் இருக்கும் தீயசக்திகள்,ஆவிகள் வெளியேற:

வீட்டில் இருக்கும் தீயசக்திகள்,ஆவிகள் வெளியேற:
வினாயகருக்கு அணிவித்த அருகம்புல் மாலையை வீட்டுக்கு கொண்டு வந்து நிழலிலே உலர வைத்து,மாலை காய்ந்தவுடன் அதில் இருக்கும் நாரை நீக்கி விட்டு அருகம்புல்லை இடித்து தூள் செய்யவும்.இந்த அருகம்புல் தூளுடன் சாம்பிராணி கலந்து அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் நெருப்பில் இட்டு தூபம் போட வீட்டில் உள்ள தீயசக்திகள்,ஆவிகள் வெளியேறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கல்வி அறிவு பெருக ஸ்லோகம்:


கல்வி அறிவு பெருக ஸ்லோகம்:
"ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே"
இந்த ஸ்லோகத்தை தினமும் 3 முறை மாணவ மாணவியர்கள் பாராயணம்(சொல்லுதல்) செய்து வந்தால் ஞாபக சக்தி அதிகரித்து கல்வி அறிவு பெருகும்.
பள்ளி,கல்வி தேர்வுகளில் உயர் மதிப்பெண்கள் பெற,நன்கு படிக்க தாயத்து,யந்திரத் தகடுகள் கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


வசிய செம்பு காப்பு:


வசிய செம்பு காப்பு:
சூரியனின் உலோகமான செம்பு ஆகர்ஷண சக்தி கொண்டவை.சூரியனே உலகின் அனைத்து உயிர்களின் வசியக்காரன் ஆவார்,அவரோட சக்தி நிறைந்த உலோகம் செம்பு.இரசவாத்தில் செம்பு பெரிய அளவில் பயன்படுகிறது.தங்கம்,வெள்ளியை விட செம்பு உயர்ந்தது என்கிறார் போகர் சித்தர்.தங்கமும் வெள்ளியும் உடல் என்றால் அவற்றை முழுமையாக்கும் உயிராக செம்பு பயன்படுத்தப்படுகிறது.செம்பு சேர்த்தால் மட்டுமே ஆபரணங்கள் செய்ய முடியும்.
சிறப்பு வாய்ந்த தூய்மையான செம்பை காப்பு செய்து மந்திர சக்தி உருவேற்றி வலது கையில் அணிந்து கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்,மேலும் செம்பு உடம்பில்பட்டாலே தரித்திரம் விலகும்,தடை,தடங்கல்கள் விலகும்.மேலும் இதை பயன்படுத்துவருக்கு தலைமை பண்பு கிட்டும்.காத்து,கருப்பு,பேய் பிசாசுகள் நெருங்காது.
சூரியன்,செவ்வாய்,ராகு கிரங்களின் வலிமையை அதிகரிக்கும்.அனைவரும் இணங்கி நடப்பார்கள்,வசீகர சக்தியை அதிகரிக்கும்.மேலும் செம்பு மகாலட்சுமி பரிபூரண சக்தியை கொடுக்கும்.எதிர்மறை சக்தியை விலக்கி நேர்மறை சக்தியை கொடுக்கும்.மந்திரசக்தி ஏற்றிய வசிய செம்பு காப்பு கிடைக்கும்.வசிய குங்குமமும் தரப்படும்.போன்:7598758989

குல தெய்வ அருள்பெற ஒரு செய்முறைப்பயிற்சி.


குல தெய்வ அருள்பெற ஒரு செய்முறைப்பயிற்சி.
குலதெய்வ அனுக்கிரகம் இருந்தால்தான் ஒருவருக்கு மற்ற தெய்வங்களின் ஆசிகள் மற்றும் பிரார்த்தனை பலன்கள் மிக எளிதாக கிடைக்கும். நாம் செய்யும் பரிகாரங்களுக்கும் விரைவான பலன்கள் கிடைக்கும்.
குலதெய் வழிபாடுகள் தற்காலத்தில் வெகுவாக குறைந்துவிட்டது.
இதனால் என்னதான் கோவிலுக்கு சென்று தெய்வ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் செய்தாலும் பிரார்த்தனைகளின் பலன்கள் குலதெய்வ அனுக்கிரகம் இல்லாதவர்களுக்கு கிடைப்பதில்லை.

இப்போதே குலதெய்வ வழிபாடுகள் குறைந்திருப்பதினால் வருங்கால சந்ததிகளுக்கு குலதெய்வம் என்றாலே என்ன என்று தெரியாத சூழ்நிலை உருவாக அதிக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இக்கால சந்ததியினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும்
குலதெய்வங்களைப்பற்றி தவறாமல் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.
குலதெய்வ வழிபாட்டை
ஒரு சிறிய பயிற்சியின் மூலம் எளிதாக இந்த தலைமுறையினருக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லலாம்.
வீட்டில் ஒரு புது உண்டியல் வாங்கி குலதெய்வ படம் அல்லது குலதெய்வம் என்று எழுதி அந்த உண்டியலின் மேல் ஒட்டி வைக்கவும். குலதெய்வத்தை நினைத்து தினமும் ஒரு ருபாய் காணிக்கையை நம் பிரார்த்தனையைக்கூறி உண்டியலில் சேமித்து வரவும். இதை உங்கள் மகன் மற்றும் பேரக் குழந்தைகளிடமும் தொடர்ந்து செய்து வரச் சொல்லவும். குலதெய்வம் கோவிலுக்கு செல்லும் போது இந்த காணிக்கையை உண்டியலில் செலுத்தி வரவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் இதுவே பழக்கமாகிவிடும்.தினமும் குலதெய்வத்தை நினைப்பதனால் குல தெய்வ அருள் நிச்சயம் கிடைக்கும். மேலும் அடுத்த தலைமுறையினருக்கும் குலதெய்வங்களின் மகத்துவங்கள் தெரியவரும்.

பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட லக்ஷ்மி கலசம்.


பணவரவு உண்டாக சித்தர்களால் சொல்லப்பட்ட 
லக்ஷ்மி கலசம்.
-----------------------------------------------------------------------------
நம்வீட்டில் லக்ஷ்மி குடியிருந்து நமக்கு அருள
ஒவ்வெருவரும் நம்வீட்டில் லட்ஷிமி குடியிருந்து நமக்கு அருள வேண்டும் என்று ஆசை படுவோம் ஆனால் அதற்க்குன்டான
முறைகளை செய்வதில்லை அப்படியே
செய்தாலும் முறையாக செய்வதில்லை
ஒரு சிறிய மண்கலசம்(மூடியுடன்) எடுத்து
அதில் சிறிது உப்பு, சர்க்கரை, பச்சரிசி, புளி,
பருப்பு,நவ தானியம், புனுகு, குங்கும பூ,
கஸ்துரி, ஜவ்வாது,ஐம்பொன், சிறிய வலம்புரிசங்கு, வெற்றிலை பாக்கு,
இவை அனைத்தயும் வியாழக்கிழமையே
வாங்கி வைத்துக்கொள்ளவும்
வெள்ளிகிழமை காலை 6 டூ 7 மணிக்குள்
மேற்கூறிய அனைத்து பொருளையும்
கலசத்தில் இட்டு மண்கலசத்திற்க்க
விபூதிபட்டையிட்டு சத்தனம் குங்குமம்
வைத்து உங்கள் பூஜை அறையில் வைத்து
மகாலட்சுமியை மனதாற வேண்டி தாயே நீ
என்றும் என்குடும்பத்தில் இருந்து அருள
வேண்டும் என பிராத்தனை செய்து விட்டு தூப
தீபம் காட்டி பின்வரும் மந்திரத்தை 108முறை
கூறி பின் கலசத்தை மூடி பூஜையறையில்
வைக்கவும்,
வெள்ளிக்கிழமை தோறும் 108 முறை மந்திரம்
கூறி வணங்க வேண்டும், மண்கலசம் மாற்ற
வேண்டிய அவசியம் இல்லை, முதல் முறை
வணங்க தொடங்கியதும் அடுத்த
வெள்ளிகிழமைக்குள் பணவரவு உயர்வதை
கண்கூடாக உணரலாம்
இந்த எளிய பரிகார முறையை செய்து வாழ்வில்
வளம் பெற வேண்டுகிறேன்,
108முறை கூற வேண்டிய மந்திரம்
ஒம் தன தான்ய லஷ்மியை வசி வசி வசியை நமஹ

நவரத்தின பரிகாரங்கள்


நவரத்தின பரிகாரங்கள்
--------------------------------------
1. கல்வி, வியாபாரம் சிறக்க – மோதிர விரலில் மரகதம்
2. பண வரவு அதிகரிக்க – ஆள் காட்டி விரலில் நீலம்
3. கடன் தொல்லை,சத்ரு உபாதை , நோய்கள் நீங்க- ஆள் காட்டி விரலில் பவளம்
4. தொழில் பிரச்சினைகள் தீர, வேலை வாய்ப்புகள் உருவாக - ஆள் காட்டி விரலில் நீலம்
5. அரசு வழி தொல்லைகள் நீங்க- நடு விரலில் வைரம், மோதிர விரலில் பவளம்
6. விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்க – சிறு விரலில் மாணிக்கம்
7. அவதூறுகள் நீங்க, விரையங்களை தடுக்க- நடு விரலில் வைரம், மோதிர விரலில் பவளம்

நவரத்தின கற்களின் தரம் கண்டறிவது எப்படி?


நவரத்தின கற்களின் தரம் கண்டறிவது எப்படி?
நவம் என்றால் ஒன்பது என்று பொருளாகும். ரத்னம் என்றால் ஒளி என்று பொருள்படும். வைரம், முத்து, மரகதம், மாணிக்கம், நீலம், புஷ்பராகம், வைடூரியம், கோமேதகம், பவளம் ஆகியவையே நவரத்தினங்களாகும். இவைகளில் முத்து மற்றும் பவளம் தவிர மற்ற அனைத்தும் இயற்கையாய் பூமியில் விளையும் கற்களாகும். முத்தும் பவளமும் கடலிலிருந்து கிடைக்கிறது. 
நல்ல தரமான நவரத்தினங்களை எப்படி கண்டறிவது என்று பார்ப்போம்.
முத்து கல்லை நுரையற்ற பாலில் போட்டால் மிதக்கும்.
மரகதத்தை கையில் வைத்துக்கொண்டு குதிரை அருகே சென்றால் குதிரை தும்மும்.
பச்சைக்கல்லை குத்து விளக்கு ஒளியின் முன்பு காட்டினால் சிவப்பு நிறமாக தோன்றும்.
வைர கல்லை சுத்தமான வைரத்தை ஊசியால் குத்தினால் உடையாது.
பவளத்தின் மையத்தில் ஊசியால் குத்தினால் மட்டுமே இறங்கும்.
கோமேதகம் கல்லை பசுவின் நெய்யில் போட்டால் குங்குமப்பூ வாசனை வரும்.
புஷ்பராக கல்லை சந்தனம் அரைக்கும் கல்லில் வைத்தால் தாமரைப்பூ வாசனை வரும்.
வைடூரிய கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் வெள்ளை நிறமாக மாறும்.
நீலக்கல்லை பச்சிலை சாற்றில் போட்டால் ஒருவித ஒலி வரும்.

Saturday, January 7, 2017

கணபதி மந்திரம் ...

கணபதி மந்திரம் ...

ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க்கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.
ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன் குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே

ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர கணபதி, மூல கணபதி என எட்டு வகை கணபதி இருப்பதாக கூறுகிறார். இந்த எட்டு வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம் இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்” என்பதாகும். இந்த மூல மந்திரத்தை எவ்வாறு பயன் படுத்தி பலனடைய வேண்டும் என்பதை பின் வருமாறு விளக்குகிறார்.

எண்ணமுடன் இடதுகையால் விபூதிவைத்து
ஏகாந்த கணபதியின் சுழியைநாட்டி
சொன்னமொழி தவறாமற் சுழியைப்பார்த்து
சுத்தமுடன் ஓம்கிலி அங்உங்கென்று
தன்னகமே சாட்சியாய் இருநூற்றெட்டுத்
தான்செபித்து விபூதியைநீ கடாட்சித்தாக்கால்
முன்னிறைந்த சற்குருவின் கடாக்ஷத்தாலே
மூர்க்கமுடன் தீருகிற வியாதிகேளே.
கேளப்பா சுரமுடனே சன்னிதீரும்
கெடியான குன்மமுடன் காசந்தீரும்
சூளப்பா வஞ்சினையும் ஏவல்தீரும்
சுருக்கான பலவிஷமுந் தோஷந்தீரும்
வாளப்பா கரப்பனொடு கெர்ப்பரோகம்
வயற்றிலுள்ள திரட்சியெல்லாம் வாங்கிப்போகும்
ஆளப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்று
ஆதியென்ற பூரணத்தில் அழுந்தலாமே.

இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக் கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ” என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல மந்திரத்தை இருநூற்றி எட்டுதடவைகள் செபிக்க வேண்டும் என்கிறார்.இப்படி செபிக்கப் பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன் ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும் தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம். அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம். இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார் அகத்தியர்.

- அகத்திய வாத சௌமியம்

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ...


சகலத்திர்கும் கட்டு மந்திரம் ...


"ஓம் பஹவதி ப்ய்ரவி 
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு 
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"
“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா”

இந்த மந்திரத்தை உதடு அசையாமல் நாக்கு உச்சரிக்காமல் மனதிற்குள் ஆழமாக, மிக ஆழமாக இருபது நிமிட நேரம் தொடர்ச்சியாக சொல்லுங்கள். சில நாட்களிலேயே உங்கள் வாழ்க்கையில் மாறுதல் ஏற்படுவதை அறிவீர்கள். மந்திரம், மாயம் என்று நம்புபவர்கள், தன்னம்பிக்கை இல்லாத கோழைகள் என்று சிலர் சொல்லலாம். அதற்கான பதிலை தேடி மனதை அலையவிட வேண்டிய அவசியம் இல்லை. ஆற்று சுழலில் அகப்பட்டு வெளியில் வர முயற்சிப்பவனுக்கு கையில் கிடைக்கும் கட்டை போன்றது இந்த மந்திரம். இதை பற்றிக் கொண்டால் கரைசேரலாம் என்று சவால்விட்டு சொல்கிறேன். முயன்று பாருங்கள் வெற்றி நிச்சயம். 

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்கள்

சிவ மந்திரங்களைப் பார்ப்போம்:ஓம் ஜகங் என தினமும் 108 முறை ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.ஓம் நமசிவாய என்று ஜெபித்தால் காலனை வெல்லலாம்.ஓம்நமசிவாய நமா என ஜெபித்தால் பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட தேவதைகள் அழியும். மன்னர்கள் அருள் கிடைக்கும். ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.ஆறு சாஸ்திரங்களையும், நான்கு வேதங்களையும் அறிய உதவும்.சிவாய ஓம் என்று சொன்னால் திருமாலின் ஆற்றல் கிட்டும். மய நசிவ சுவாகா என ஓதினால் ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள் கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து முழுமையாக நீங்குவான்.சிங் சிங் சிவாய ஓ எனஜபித்துவந்தால் முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால் வியாபாரம் நன்றாக நடக்கும்.லீங்க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள் வசியம் உண்டாகும்.சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால் அரச போகம் கிட்டும்.மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும் மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷிசிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-நந்தீசர் மகரிஷி
ோதிடம்
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
துங் நமசிவாய என்று உச்சரிக்க - வித்துவான் ஆகலாம்.
ஓங் கங்சிவய என்று உச்சரிக்க - சக்தி அருள் உண்டாம்.
ஓம் சிங்சிவாய என்று நம என்று உச்சரிக்க - நினைப்பது நடக்கும்.
ஓம் பங்சிவாய நம என்று உச்சரிக்க - தடைகள் நீக்கும்.
ஓம் யங்சிவாய நம என்று உச்சரிக்க - துன்பங்கள் விலகும்.
ஓம் மாங்நமசிவாய என்று உச்சரிக்க - செல்வம் செழித்தோங்கும்.
ஓம் மங்சிவாயநம என்று உச்சரிக்க- கவலைகள் வற்றும்
கெங்ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - வசிய சக்தி மிகும்
ஓம் மங்யங் சிவாய என்று உச்சரிக்க - விஷங்கள் இறங்கும்.
அங் ரங்ஓம்சிவாய என்று உச்சரிக்க - சாதனை படைக்கலாம்.
ஓங் அங் சிங் சிவாயநம என்று உச்சரிக்க - சப்த கன்னியர் தரிசனம்.
ஓங் வங்சிங் சிவாயநம என்று உச்சரிக்க - முக்குணத்தையும் வெல்லலாம்.
ஹிரீம் நமசிவாய என்று உச்சரிக்க- அரிய பேறுகள் கிடைக்கும்.
ஐயுஞ் சிவாயநம என்று உச்சரிக்க - ஆறு சாஸ்திரம் அறியலாம்.
வங்சிங் ஓம்சிவாயா என்று உச்சரிக்க - தேவர்கள் தரிசனம் காணலாம்.
சங் சிவய நம என்று உச்சரிக்க - விஷ பாதிப்பு நீக்கும்.
ஓம் துங்சிவாய நம என்று உச்சரிக்க - முத்தொழிலும் சிறக்கும். ஸ்ரீலம்ஹரீம் ஓம் நமசிவாய என்று உச்சரிக்க- பெரியபூமிகள் கொடுக்கும்.
சிங் நமசிவய என்று உச்சரிக்க - பயிர்களால் நன்மை.
வங் சிவய நம என்று உச்சரிக்க - மழை நனைக்காது.
சிவாய ஓம்ஸ்ரீ என்று உச்சரிக்க - மழை நிற்கும்.
கலியுங் சிவாய என்று உச்சரிக்க - வெள்ளம் பெருக்கெடுக்கும்.
ஓம் கங்சிவ்வுங்சிவய என்று உச்சரிக்க - பெரியகாரியங்களில் வெற்றி. சங்யவ் சி மந என்று உச்சரிக்க - தண்ணீரில் நடக்கலாம்.
மங் நங் சிங் சிவய என்று உச்சரிக்க - பிசாசு, பேய் சரணம் செய்யும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989