Tuesday, October 8, 2019

வெள்ளெருக்கு விநாயகர்


வெள்ளெருக்கு விநாயகர்:
சூரியனுக்குரிய மூலிகையாக கருதப்படும் வெள்ளெருக்கு, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை நுட்பமாக கிரகித்து வளரும் தன்மை பெற்றது.
12 ஆண்டுகள் மழை பெய்யாமல் இருந்தாலும் கூட, சூரிய கதிர்களில் இருக்கும் தண்ணீரை கிரகித்து வளர்வதோடு, தக்க சமயத்தில் பூக்கள் பூத்து, காயும் காய்க்கும் அதிசய தன்மை கொண்டது எருக்கன் செடி. இதை வீட்டில் வைத்து வளர்த்து, அதன் பூக்களால் விநாயகருக்கும், சிவனுக்கும் வழிபாடுகள் செய்யலாம். வெள்ளெருக்கம் பூவானது, ‘சங்கு பஸ்பம்’ செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் பாம்புகள் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது.
பல்வேறு தெய்வீக சக்தி படைத்த வெள்ளெருக்கு வேரை பயன்படுத்தி செய்யப்படும் சிலையானது அபூர்வ சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்தது. வெள்ளெருக்கு விநாயகர் சிலை செய்ய வெள்ளை நிற பூக்கள் கொண்ட எருக்கன்செடிதான் தேர்வு செய்யப்படும்.
வெள்ளெருக்கு விநாயகர்:
✫ வெள்ளெருக்குச் செடிக்கு தனி சக்தி உண்டு. வெள்ளெருக்கை தேவ மூலிகை அல்லது விருட்சம் என்றும் கூறலாம். அரிதான பொருள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நு}ல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிள்ளையார; எத்தனை விதமாக இருந்தாலும் வெள்ளெருக்கு (வெள்ளை எருக்கு) வேரில் உருவான விநாயகருக்கே சக்தி அதிகம்.
✫ புதையல், ரத்தினங்கள், சிலைகள் பதுக்கி வைத்திருக்கும் இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நு}ல்களில் கூறப்பட்டுள்ளது. அதன்படி பார;த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர;த்தம்.
✫ ஆனால், அதேவேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர;ந்துள்ளது என்றும் பார;க்க வேண்டும். தீய சக்தி உள்ள இடத்தில் இருக்கும் வெள்ளருக்கு செடியின் வேரைக் கொண்டு விநாயகரை உருவாக்கக் கூடாது.
✫ வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர; வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகரின் மகிமையை உணரலாம்.
✫ வெள்ளெருக்கு பட்டையை நு}லுக்குப் பதில் விளக்குத் திரியாக போட்டு வீட்டில் ஏற்றினால் சகல பு+தங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வட வேரில் மணிமாலை செய்யலாம்.
✫ சொர்ண கணபதி மந்திரம் சொல்லி, வெள்ளெருக்கு விநாயகரை வழிப்பட்டால், துன்பம் விலகி இன்பம் பெருகும். தன தான்யம் சேரும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்

சர்வசித்திப்ரத ஸ்ரீ மாதங்கி மந்த்ரம்
ஓம்|
க்லீம் ஹூம் மாதங்க்யை|
மம வாஞ்சிதம் சித்தே பட் ||
இந்த மந்திரத்தை உங்களுக்கு படுபக்ஷி இல்லாத நல்ல நாள் பார்த்து கிழக்கு முகமாக அமர்ந்து 108 உரு வீதம் தொடர்ந்து ஜெபித்து வர பதவி உயர்வு,வேலை வாய்ப்பு,குழந்தை பாக்கியம்,வீடு,வாகனம் இவற்றோடு உங்கள் மனோவிருப்பங்களும் நிறைவேறும்.
மந்திரம் ஜெபிக்கும் முன் ஏதேனும் குறிப்பிட்ட தேவை (திருமணம்,வேலை , பதவி உயர்வு,)இருந்தால் அதை சங்கல்பித்து பின்னர் ஜெபிக்கவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Friday, July 5, 2019

சிவ மந்திரம்:


சிவ மந்திரம்:
 செய்யப்பா சிவத்தினுட மந்திரந்தான்கேளு
சீரான யென்மகனே கண்ணேசொல்வேன்
செய்யப்பா தெங்கென்றுங் கிலிவாவென்றும்
செயங்கொள்ளப் பிரபஞ்சம் வாவாவென்றும்
கையப்பா ஐயுமென்றும் ஸ்ரீறீங்கென்றும்
காமனையுந் தான்வென்ற யீஸ்வராவாவா
நொய்யப்பா நூற்றெட்டு உருவேயானால்
நோக்குமுன்னே சிவனங்கே வருவார்பாரே. (85)
-அகத்தியர் பரிபாஷை திரட்டு 500
பொருள்: மகனே சிவனுடைய மந்திரத்தை சொல்கிறேன் கேள்,
தூய்மையான ஓர் இடத்தில் உடல், மன சுத்தியுடன் வடக்கு
நோக்கி அமர்ந்து இம்மந்திரத்தை செபிக்கவும்.
"ஓம் தெங் கிலி வா செயஞ்கொள்ளப்பிரபஞ்சம் வாவா
ஐயும் ஸ்ரீறீங் காமனையும்தான் வென்ற ஈஸ்வரா வாவா" என்று
நூற்றி எட்டு உரு செபித்தாயானால் நீ எந்த செயலை நோக்கி
செயல்பட்டாலும்அதற்கு துணையாக சிவன் வருவார் என்கிறார்
அகத்திய மாமுனிவர்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்:


முதுகு வலி ,இடுப்பு வலி தீர அதர்வண வேத பரிகாரம்:
அதிகமான முதுகு மற்றும் இடுப்பு வலியால் அவதிப்படுபவர்கள் அரச மரத்தின் வடக்குப் பக்கம் செல்லும் வேரில் ஒரு சிறு துண்டை வணங்கி எடுத்து ஒரு கருப்புத் துணியில் சிறிது பன்னீர் தெளித்து அதில் அந்த வேரை வைத்து முடிந்து தலையணைக்கு அடியில் வைத்து உறங்கி வர படிப்படியாக வலி குறையும்.
தொடர்புக்கு 
ஸ்ரீ காளி தேவி-போன்:+91 7598758989

Monday, March 25, 2019

வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் பரிகாரம்


வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் பரிகாரம்:
வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
நமது நாட்டின் பாரம்பரிய கலையான “வாஸ்து சாஸ்திரம்” போலவே சீன நாட்டினருக்கும் பாரம்பரிய கலையாக “பெங் ஷூயி” கலை இருக்கிறது. இந்த பெங் ஷூயி கலையில் இருக்கும் சிறப்பே, நமக்கு அதிக செலவில்லாமல், அனைவரும் எளிமையாக செய்ய கூடிய சில பரிகார முறைகள் இருப்பது தான். அந்த வகையில் நமக்கு தொடர்ந்து அதிர்ஷ்டங்கள் உண்டாகவும், வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் நுழையாமல் தடுக்கும் “விண்ட் சைம்கள்” உபயோகிப்பதால் ஏற்படும் பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உலோகங்கள் கொண்டு செய்யப்பட்ட இந்த விண்ட் சைம்கள் இப்போது நம் நாட்டிலும் பரவலாக விற்கப்படுகிறது. மக்களில் பலரும் விண்ட் சைம்களை வாங்கி தங்கள் வீடுகளில் தொங்க விட்டுக்கொள்கின்றனர். சீன வாஸ்து பரிகார முறையாக இந்த விண்ட் சைம்கள் கருதப்பட்டாலும் பழங்கால இந்தியாவில் சிறு, சிறு மணிகள் கோர்த்து கோவில்களில் காற்று வீசும் போது ஒலி எழுப்பும் வகையில், இதை உபயோகப்படுத்தியிருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
visit as: mantrakali.blogspot.com