Thursday, August 24, 2017

வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்:


வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றிக்கு- எட்டு முக ருத்ராட்சம்:
8 முக ருத்ராட்சத்தின் அதிதேவதை வினாயகர்.இது அஷ்டகணபதியின் ஸ்வரூபம்.இதன் ஆதிக்க கிரகம் ராகு.இதனை அணிபவருக்கு வாழ்க்கையில் வளமும்,உடல் நலமும்,அஷ்டமாதர்கள்,அஷ்ட வசுக்கள்,கங்காதேவி அருளும் கிட்டும்.மேலும் பகுத்தறியும் புத்தி,எழுத்தாற்றல்,கலைகளில் தேர்ச்சி,புகழ்,செல்வம்,தலைமைப் பதவி அனைத்தையும் தரும்.இந்த ருத்ராட்சம் மிகவும் அரிதாக கிடைக்ககூடியவை.விலை மதிப்பும் அதிகமானவை.
இதை ஏழு முக ருத்ராட்சத்தோடு சேர்த்து அணிவது சிறந்தது.வாழ்வில் பல தடைகள்,தொடர் தோல்விகளை சந்தித்து கொண்டிருப்பவர்கள் இதை அணிந்தால் பணத்தடைகள்,தடங்கல்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.வாழ்வில் முழுக்க முழுக்க வெற்றி கிட்டும்.
எட்டு முக ருத்ராட்சம் தேவைக்கு தொடர்பு கொள்க

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பண வரத்து உண்டாக,காரியத் தடைகள் நீங்க:


பண வரத்து உண்டாக,காரியத் தடைகள் நீங்க:
ஏழு முக ருத்ராட்சத்தின் அதிதேவதை ஆதிஷேசன்,இது சனி கோளின் ஆதிக்கம் நிறைந்தது.மேலும் இது மகாலட்சுமியின் அம்சமாகும்.
இதனை முறையாக அணிய சப்தமார்கள் அருள் கிட்டும்.தேக நோய்கள் நீங்கும்.சனிக் கிரஹ தோஷ பாதிப்புக்கள் குறையும்.
குறிப்பாக பணத் தடைகள்,பண முடக்கம் நீங்கி பண வரவு உண்டாகும்,நிதி நிலைமை மேலோங்கும்.காரிய சித்தி உண்டாகும்.
தொழில் வியாபாரம்,வீட்டில் பண வசியம் வேண்டுவோர் இரண்டு ஏழு முக ருத்ராட்சத்தை வைத்து பூஜிக்க பண வரவு கண்டிப்பாக அதிகரிக்கும்.
தற்சமயம் எங்களிடம் ஏழு ருத்ராட்சங்கள் சில வந்துள்ளது.
ஏழு முக ருத்ராட்சம் தேவைப்படுவர்கள் அணுகவும்.
தொடர்புக்கு

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஜன ஆகர்ஷண தூபபொடி:

ஜன ஆகர்ஷண தூபபொடி:
சாம்பிராணி தூபம் போடுவது போல்,32 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜன ஆகர்ஷண தூபபொடியை கொண்டு தொழில் வியாபார ஸ்தலங்களில் தூபம் இட ஜனம்(வாடிக்கையாளர்கள்) வரத்து அதிரிக்கும்.மேலும் கண்திருஷ்டி,பார்வைக் கோளாறு,தொழில் வியாபார முடக்கங்கள்,தடங்கல்கள் நீங்கும்.மேன்மேலும் தொழில் வியாபாரத்தில் வளர்ச்சியும் லாபமும் அதிகரிக்கும்.
ஜன ஆகர்ஷண தூபபொடியை பயன்படுத்தி பலபேர் பயன் அடைந்துள்ளார்கள்.இது அனுபவ ரீதியானவை.
"ஜன ஆகர்ஷண தூபொடி" தேவைக்கு அணுக.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்


செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்!
பொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.
பலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.
எப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.
பணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.
உங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.
வீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், வீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.
வீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.
நீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
வீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.
வீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.
வீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.
வீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.
குடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, August 22, 2017

தும்பிக்கையானை நம்பிக்கையோடு விரதமிருந்து வழிபடுவோம்


தும்பிக்கையானை நம்பிக்கையோடு விரதமிருந்து வழிபடுவோம்
விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும்.
விக்னங்களைத் தீர்ப்பதால் ‘விக்னேஸ்வரர்’ என்றும், கணங்களுக்கு அதிபதியாக விளங்குவதால் ‘கணபதி’ என்றும், தும்பிக்கை உள்ளதால் தும்பிக்கையான் என்றும், ஐந்து கரங்களைப் பெற்றதால் ஐங்கரன் என்றும், ஆனைமுகம் உள்ளதால் ஆனைமுகன் என்றும் போற்றப்படும் பிள்ளையாரைத் தொழுதால் எல்லையில்லாத நற்பலன் கிடைக்கும்.
அற்புதப் பலன்தரும் பிள்ளையாருக்கு உகந்தது சதுர்த்தி திதி. அதிலும் ஆவணி மாதம் வரும் சதுர்த்தி திதி ‘விநாயகர் சதுர்த்தி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் விநாயகர் சதுர்த்தி நன்னாள் 25-8-2017 (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் மோதகம், அப்பம், அவல், பொரி, கடலை வைத்து மூஷிக வாகனத்தானை வழிபடுவது வழக்கம். மேலும் விரதமிருந்து கவசம் பாடி பிள்ளையாரைத் துதித்தால் நல்ல பலன்கள் இல்லத்தில் நடைபெறும். ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும். ஆலயங்களுக்குச் சென்று அருகம்புல் மாலையிட்டு, கணபதியை வேண்டினால், பெருகும் பொன்னை அள்ளி அவர் பெருமையுடன் நமக்களிப்பார்.
எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார் சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துகளுக்கு நற்பலன் கிடைக்கும். எனவேதான் அவரை ‘மூலகணபதி’ என்றும் நாம் வர்ணிக்கின்றோம்.
ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்களையும் 3 விதமான கணங்களாகப் பிரித்து, திருமண சமயத்தில் கணப்பொருத்தம் பார்ப்பர். அவை தேவ கணம், மனித கணம், ராட்சச கணம்.
நாம் தேவ கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், மனித கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அசுர கணத்தில் பிறந்தவராக இருந்தாலும், அனைவரும் வணங்க வேண்டிய தெய்வமாக விளங்குபவர் ஆனைமுகப்பெருமான். அவருக்கு உகந்த நாள் ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தி.
அன்றைய தினம் விநாயகரை வழிபட்டால் எல்லா பாக்கியங்களும் நமக்கு கிடைக்குமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. எங்கு, எப் பொழுது கூப்பிட்டாலும், கும்பிட்டாலும் அருள்தருபவர் பிள்ளையார். மஞ்சள் பொடியிலும் காட்சி தருவார். மாட்டு சாணத்திலும் காட்சி தருவார். வீட்டிலும் வழிபாடு செய்யலாம். விக்ரகம் வைத்திருக்கும் ஆலயத்திற்குச் சென்றும் வழிபாடு செய்யலாம். தும்பிக்கை வைத்திருக்கும் அந்த தெய்வத்தை நாம் நம்பிக்கையோடு வழிபட்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்து சேரும். துன்பங்கள் தூர விலகி ஓடும்.
‘சதுரம்’ என்றால் நான்கு பக்கங்கள் பூர்த்தியாகிய அமைப்பாகும். எனவே வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக நாம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்வது நல்லது. அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம், விளாம்பழம் போன்றவற்றை விநாயகருக்கு படைத்து வழிபட வேண்டும். அவருக்கு பிடித்த இலைகள், அருகம்புல், வன்னி இலை, வில்வ இலை. பிடித்த மலர்கள், தும்பைப்பூ, மல்லிகைப்பூ, செண்பகப்பூ, செம்பருத்திப்பூ, எருக்கம்பூ. இவற்றில் ஏதாவது ஒன்றை விநாயகருக்கு சூட்டி வழிபடலாம்.
விநாயகருக்கு முன்பாக தோப்புக்கரணம் போட்டு, தலையில் குட்டிக் கொள்வது ஐதீகம். ‘தோர்பிக்கர்ணம்’ என்பதே தோப்புக்கரணம் என்றாயிற்று. ‘தோர்பி’ என்றால் கைகளில் என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். கைகளினால் காதைப்பிடித்துக் கொள்ளுதல் என்பது இதற்கு பொருளாகும். இவ்வாறு செய்வதால், ரத்த ஓட்டம் சீராகி மூளைக்கு தடையின்றி செல்கிறது; இதனால் நினைவாற்றல் கூடும்.
கஜமுகாசூரன் என்ற அசுரனுக்கு முன்பு, தேவர்கள் பயத்துடன் தலையில் குட்டிக் கொண்டனர். அந்த அசுரனை அழித்து, தேவர்களை காப்பாற்றினார் விநாயகர். எனவே விநாயகர் முன்பும் தேவர்கள் பக்தியுடன் தோப்புக்கரணத்தைப் போட்டனர். அந்தப் பழக்கமே நடைமுறைக்கு வந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
விநாயகருக்கு உகந்த நாட்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். அவருக்கு படைக்கும் பொருட்களில் கூட அர்த்தம் இருக்கிறது. மோதும் அகங்கள் இருக்கக் கூடாது. எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை வலியுறுத்தித்தான் மோதகத்தைப் படைக்கின்றோம்.
துன்பங்கள் சிதறி ஓட சிதறுகாய் உடைக்கின்றோம். விளாம்பழத்தில் கடினமான ஓட்டிற்குள் இனிய கனி இருக்கும். கடினமான உழைப்பிற்குப் பின்னர் கனிவான வாழ்க்கை இருக்கின்றது என்பதை அது எடுத்துக் காட்டுகின்றது. “அவல்” குசேலனைக் குபேரனாக்கிய பொருளாகும். எனவே இவற்றையெல்லாம் ஆனைமுகனுக்கு கொடுத்து கணபதி கவசம் பாடினால் மனம் மகிழும் வாழ்க்கை, மக்கள் போற்றும் செல்வாக்கு வந்து சேரும்.
ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி, விநாயகரைப் பிடிக்க வந்த பொழுது, ‘இன்றுபோய் நாளை வா’ என்று எழுதி வைக்கச் சொல்லித் தந்திரத்தைக் கையாண்ட தலைவன் விநாயகன். அப்படிப்பட்ட விநாயகருக்கு உகந்த சதுர்த்தியில் விரதமிருந்து, அவரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும். தொழில் வளம் பெருகும். மக்கள் பேறு கிட்டும். காரிய வெற்றி ஏற்படும். புத்திக்கூர்மை உண்டாகும். நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். விநாயகருக்கு எள்ளுருண்டை நிவேதனம் செய்து வழிபட்டால், சனிபகவானின் பாதிப்பில்இருந்து விடுபடலாம்.
எனவே அருகிலிருக்கும் சிவாலயத்திற்குச் சென்று ஆனைமுகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். அகிலம் போற்றும் வாழ்க்கை அமையும். விநாயகரை சதுர்த்தியில் வணங்கி, சந்தோஷம் காணுங்கள்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, August 18, 2017

பேய்க்கோட்டத்தால் பெண்களுக்கு கரு கலையுமா?

பேய்க்கோட்டத்தால் பெண்களுக்கு கரு கலையுமா?
விழுப்புரம் மாவட்டம்,எலவனசூர்கோட்டை என்ற கிராமத்தில் இருந்து,கண்ணன்-சங்கீதா இந்த தம்பதியினர் இன்று(11/08/2017) என்னிடம் ஆலோசனைக்கு வந்தார்கள்.திருமணம் ஆகி 5 வருடமாகிறது.கர்ப்பம் தரிக்கும் ஆனால் 90 நாட்களுக்குள் கரு கலைந்துவிடும்.இல்லையென்றால் குறைபாடு உள்ள கரு உருவாகும்.இந்த பிரச்சினை இவர்களுக்கு குழந்தை இல்லை.பிரசன்னத்தில் பார்க்கும்போது பேய்க்கோட்டமும்,முனிக்கோட்டமும் அந்த பெண்ணுக்கு இருப்பது தெரிய வந்தது.இந்த பிரச்சினைகள் இருந்தால் கரு கலையும்,கரு வளர்ச்சி இருக்காது,தனிமையில் இருப்பார்கள்,அசைவம் அதிகம் விரும்புவார்கள்,பிரம்பை பிடித்ததுபோல் இருப்பார்கள் இது அதன் அறிகுறிகள்.
அவர்களுக்கு பரிகார பூஜைகள் செய்து,தாயத்து,மந்திரம் உருவேற்றிய தேன்,மேலும் சில பெருட்கள் செய்து கொடுத்து அனுப்பி வைத்தேன்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:


துஷ்டசக்திகள்,பேய்பிசாசுகள் நீங்க:
பேய் மிரட்டி இலைகளை எடுத்து திரிபோல் திரித்து,5 மண் அகல் விளக்கில் ஐவகை எண்ணெய் ஊற்றி,அதில் இந்த இலை திரியை இட்டு செவ்வாய்கிழமைகளில் விளக்கேற்றி வர அவ்விடத்தில் உள்ள பேய்பிசாசுகள்,துஷ்டசக்திகள் விலகி ஒடிவிடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வசீகர திலகம்:


வசீகர திலகம்:
சுத்தமான கோரோசனையுடன்,சிறிது குங்குமப்பூ மற்றும் மஞ்சள் வாழைப்பழம் சாறு விட்டு குழைத்து,நெற்றியில் திலகமிட சர்வ வசியம் உண்டாகும்,செல்லும் காரியம் வெற்றியாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

12 ராசிக்குரிய நவரத்தின ராசிக்கற்கள்:

12 ராசிக்குரிய நவரத்தின ராசிக்கற்கள்:
மேஷம்,விருச்சிகம் - பவளம்,
ரிஷபம்,துலாம் - வைரம்,
மிதுனம்,கன்னி - பச்சை மரகதம்,
கடகம் - முத்து,
சிம்மம் - மாணிக்கம்,
தனுசு,மீனம் - புஷ்பரகம்,
மகரம்,கும்பம் - நீலக்கல்
மேற்கண்ட அந்தந்த ராசிக்கற்களை தங்கம் அல்லது வெள்ளி மோதிரத்தில் செய்து அணிய வேண்டும்.
பலன்கள்:
ராசிக்கற்களை அணிவதால்
*கிரக தோஷ பாதிப்புக்கள் குறையும்.
*அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கைகூடும்.
*குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும்.
*செய்தொழில்,வியாபாரம் சிறக்கும்.
*செல்வ வளம் பெருகும்.
*நோய் நொடி பிணிகள்,கஷ்டநஷ்டங்கள் நீங்கும்.
*மன நிம்மதி,மன அமைதி,மன மகிழ்ச்சி உண்டாகும்.
இதில் ஒரிஜினல் கடலில் விளைந்த தரமான முத்து எங்களிடம் கிடைக்கும்.
முத்து தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

எல்லாத் தோஷங்களையும் நீக்கும் வன்னி மரவேர்:


எல்லாத் தோஷங்களையும் நீக்கும் வன்னி மரவேர்:
தெய்வீக விருட்சங்களில் ஒன்றான வன்னி மரவேரை அமாவாசை தினத்தில் வீட்டின் எட்டு மூலைகளிலும் புதைக்க,மனை தோஷம்,மண் தோஷம்,வாஸ்து தோஷம் போன்ற எல்லாத் தோஷங்களும் நீங்கி விடும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:

குழந்தை பாக்கியம் கிடைக்க தாந்த்ரீக பரிகார யந்திரம்:
சக்தி வாய்ந்த இந்த யந்திரத்தை பௌர்ணமியன்று செம்புத்தகட்டில் கீறி,உருவேற்றிய பிறகு வெள்ளித் தாயத்தில் அடைத்து உங்கள் குலதெய்வம் பாதத்தில் வைத்து,பால்பாயசம்,பழம்,வெற்றிலை பாக்கு நைவேத்தியம் படைத்து பூஜிக்க வேண்டும்.பிறகு கணவன் மனைவி இருவரும் கட்டிக்கொள்ள நிச்சயமாக 90 நாட்களுக்குள் கருதரித்து குழந்தை பாக்கியம் கிட்டும்.
(குறிப்பு: இலங்கை,வவுனியாவில் பாத்திமா-ஹாகீர் உசேன் தம்பதியருக்கு இதே யந்திரத்தை உருவேற்றி தாயத்து செய்து கொடுத்தேன்.தற்சமயம் அப்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருக்குகிறாள்)
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பணத்தடைகள் விலக:


பணத்தடைகள் விலக:
20 துளசி இலைகளை கொதிக்கும் நீரில் இட்டு,அந்த நீரை குளிக்கும் நீரில் கலந்து,"ஓம் தனப்ராதயை நம" என்று சொல்லிக் கொண்டு குளிக்க பணத்தடைகள் விலகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

யார் உண்மையான மாந்திரீகன்?


யார் உண்மையான மாந்திரீகன்?
ஆடம்பரத்தையும்,ஆபரணங்களையும் பார்த்து கர்ப்பை பறி கொடுத்த பெண்கள் எத்தனையோ பேர்?பணம்,நிம்மதியை பறி கொடுத்தவர்கள் எத்தனையோ பேர்?இதற்கிடையில் ஏவல் செய்வினை பாதிப்புக்கு உட்பட்ட எத்தனையோ பேர்?
அப்படி என்றால் யார் உண்மையான மாந்திரீகன் யார்? எளிமையாக,மக்களோடு மக்களாக இருந்து கொண்டு,அவர்களோட பிரச்சினைகளுக்கு பரிகாரம் செய்து கொடுத்து,அவர்களுக்கு கிடைக்கும் பலனை பார்த்து மனதார மகிழ்ச்சி அடைவன் எவனோ?அவனே உண்மையான மாந்திரீகன்.
இவன் பணத்துக்காக ஒருபோதும் துஷ்ட காரியங்களை செய்ய மாட்டான்.
சென்னை,பெங்களூர்,மலேசியா,சிங்கப்பூர் பகுதியில் கருப்பு மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ பேர் என்னிடம் வந்து அதற்கான நிரந்தர தீர்வை தேடிக் கொண்டார்கள்,பலன் அடைந்தார்கள்.நடிப்பு,சாதுர்த்திய திறமையால் எனக்கு தட்சனை கொடுக்காமல் போனவர்கள் எத்தனையோ பேர்?அது தெரியுமா அரை குறையா இத்தொழிலை பார்க்கும் விஷகிருமிகளுக்கு.
மக்களுக்கு நீங்கள் செய்யும் கெடுபலன்களை நீக்கி தான் விடுவேன்,உன்னால் முடிந்தத பாருங்கட அறைகூவல் விடும் நாதாரிகளே.மக்களே எதுவாக இருந்தாலும் என்னை சந்திக்க நேரில் வாங்க

குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய மந்திரம்

குழந்தைகளுக்கு தோஷம் போக்கும் இஸ்லாமிய மந்திரம்
(இப்பதிவு விருப்பமுள்ள சகோதர சகோதரிகளுக்கு மட்டும்)
குழந்தைகளுக்கு தோஷந்தாங்கி பிணியினால் அவதியுறும், அச்சமயம் பொருளாதார வசதியில்லாத பெற்றோர்கள். குழந்தையைத் தர்க்காவிற்கு அதிகாலையில் கொண்டு செல்வார்கள். பள்ளி வாசலில் அதிகாலையில் வரிசையில் நிற்பார்கள். முஹம்மதிய பெரியோர்கள் வேதமோதிவிட்டு இறைவனை வணங்கி வழிபட்டு வெளிவரும் சமயம், இறைவனும் அவர்களுடன் வருவார்கள். அச்சமயம் தோஷத்தால் பாதிக்கப்பட்டு வரிசையில் பெற்றோர்களின் கையில் இருக்கும் குழந்தைகளின் முகத்தில் வேதத்தையோதி , மும்முறை சிரசு முதல் பாதம் வரை, வாயால் காற்றை ஊதி இறக்குவார்கள். 3 நாள் அதிகாலை கொண்டு செல்வார்கள். அக்குழந்தை 4வது நாள் பிணியிலிருந்து விடுபட்டு, ஆரோக்யத்துடனிருக்கும். இதைப் பார்த்த எமக்கு அக்கடவுள் மீதும் தனிபற்றுண்டு என்று சொல்வதில் பெருமையாக இருக்கு. இதில் தான் நம் சகோதரத்துவம் பின்னி பிணைந்துள்ளது. அது போன்ற குழந்தைகள் பிணியில் அகப்பட்டு அகால நேரத்தில் அவதியுறும் நேரத்தில், தர்க்காவிற்கு குழந்தையை கொண்டு செல்ல முடியாது, அச்சமயம் கீழ்வரும் சுபமந்திரத்தை, மும்முறை சொல்லி கையால் சிரசு முதல் பாதம் வரை தடவி, பூமியில் தட்டிவிட குழந்தை நிம்மதியாய் இருக்கும்.

சுபமந்திரம்

ஓம் அல்லா ஹல்லா அருளால் ஆதிவந்த பூதமுகம் மதுதன்னருளின கல்லால் கனலால் சட்டையிட்டேன். வல்லவர் சுலைமான் வேதம்பர் தீயாலும் நீராலும் காற்றாலும் படைக்கப்பட்ட. சின்ன சைத்தான்களும் பலவித தோஷங்கள் விலகிடவும், இனிவாராமல் காவல் செய்தேன். இரவும் பகலும் ஹதாவில் பள்ளி அகம்புகுந்து கொண்டோம். மக்காவின் ஆணை, ஈசு நபியாணை தரைக்குரு நபியாணை, சுலைமாண் நபியாணை,நாலு வேதத்தின் ஆணை, நாற்பத்தியீராயிரம் நஸாபியாணை, பலவித தோஷங்களும் பட்டுவிட வேண்டும்.மூன்று அல்லாயிடத்தும் இறல்லாவத்தும் அமன் அல்லா எட்டு திக்கும் பதினாறு கோணமும் டும்டும் ரீம்ரீம் மங்மங் அக்குலா குலா இல்லல்லாஹி சுலைமான் சொல்.

என்று மானதமாக சொல்லி குழந்தைகளுக்கு மந்திரிக்க வேண்டும். எம் பாட்டனார் சொல்லிக் கொடுத்தது. யாமுள் கையாண்டு வருகிறேன. பாதிக்கப்பட்ட குழுந்தைக்கு. வருமானத்தை எதிர்நோக்கி அல்ல. குழந்தையின் மீதுள்ள கருணை உள்ளமே.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Thursday, August 10, 2017

சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல்


சகல விதமான காரியங்களும் வெற்றி அடைய எந்திரங்கள் பட்டியல்
1.காதலர்கள் விரும்பியவரை மணந்துகொள்ள யந்திரம்,
2.பிரிந்து சென்ற கணவன் அல்லது மனைவியை திரும்ப வரவழைக்க யந்திரம்,
3.விரைவில் திருமணம் நடக்க யந்திரம்,
4.பெண் ஆசை ஒழிய யந்திரம் ,
5.ஆண் ஆசை ஒழிய யந்திரம் ,
6.துமாபதி பிரிவு முறை (தகாத உறவை பிரிக்க) யந்திரம்,
7.இடத்தை கலி செய்ய யந்திரம்,
8.எதிரியின் நாவினை கட்ட யந்திரம்,
9.வயதுக்கு வராத பெண்கள் வயதுக்கு வர,
10.சபைக்கட்டு ( சபையில் நம்மை எதிர்த்து யாரும் பேசாமல் இருக்க ) யந்திரம்,
11.தன்மேல் அனைவரும் அன்பும் ஆசையுமாயிருக்க காரிய சித்தி யந்திரம் ,
12.குபேர வசியம் ( பணம் கையில் தங்க ) யந்திரம் ,
13.ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தஷ்டம சனி தொல்லைகள் நீங்க யந்திரம்,
14.குரு யந்திரம் ( சுபகாரியங்கள் தடையின்றி நடக்க ),
15.மந்த புத்தியுடைய குழந்தைகள் நன்கு படிக்க யந்திரம்,
16.பயந்த சுபாவம் நீங்கி தைரியம் பெற யந்திரம்,
17.தீராத மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோய்கள் நீங்க சிவ யந்திரம்,
18.கெட்ட தசை, புத்தியின் கேடு பலன்கள் தடுக்க யந்திரம்,
19.கிரக மூலாதார யந்திரம்,
20.கர்ப்பம் தரிக்க யந்திரம்,
21.போட்டி தேர்வுகளில் வெற்றி பெற யந்திரம்,
22.பிரம்ம வாஸ்து யந்திரம்,
23.ஜோதிடம்,குறி சொல்பவர்களுக்கு வாக்கு பலிதமாக யந்திரம் ,
24.திசை கட்டு யந்திரம்,
25.பகைவர்கள் தேவதைகள் கட்டு அறுக்க யந்திரம்,
26.அஷ்ட திக்கு பந்தன யந்திரம்,
27.சத்ரு வசிய யந்திரம்,
28.வசிய சந்தனம்,
29.கடன் தொல்லை விலகிட அன்னபூரணி யந்திரம்,
30.மேலதிகரிகள், எதிரிகள் நமக்கு அடிமையாக யந்திரம்,
31.தேவதைகளை கட்ட யந்திரம்,
32.சல்லியம் பிரிவு முறை யந்திரம்,
33.காதலில் வெற்றியடைய யந்திரம்,
34.கணவன் - மனைவி ஒற்றுமையுடன் வாழ யந்திரம்,
35.வாஸ்து தோஷம் விலக யந்திரம்,
36.காணமல் போன பொருள் கிடைக்க யந்திரம்,
37.தீராத நோய்கள் தீர யந்திரம்,
38.அரசியலில் மக்கள் செல்வாக்கு பெற யந்திரம்,
39.பெண் ஆசை ஒழிய யந்திரம்,
40.பேராசை விலக யந்திரம்,
41.போதை குடி பீடி சிகரெட் விலக்கி நல்லவர் ஆக,
42.கற்பு அழியாது இருக்க யந்திரம்,
43.இல்வாழ்வு, தாம்பத்ய சுகம் நீக்க யந்திரம் ,
44.பெண்கள் வலையில் அகப்படாமல் இருக்க யந்திரம் ,
45.வழக்கு வெற்றி பெற யந்திரம்,
46.பெண்களை தாயாக நினைக்க யந்திரம்,
47.உடல் வசீகரம் உண்டாக யந்திரம்,
48.கல்வியில் சிறக்க யந்திரம்,
49.மன வருத்தம் தீர யந்திரம்,
50.தன்னை அறிந்துகொள்ள யந்திரம்,
51.அவாவருக்க ( சந்தேகங்களை நீக்க ) யந்திரம்,
52.பஞ்ச பூதங்களை அறிய யந்திரம்,
53.பாச வலையில் அகப்படாது இருக்க யந்திரம்,
54.விதியை வெல்ல யந்திரம்,
55.புகழ் பெற யந்திரம்,
56.உலக நடை அறிய யந்திரம்,
57.எதிரிகள் ஒழிய யந்திரம்,
58.இழந்ததை திரும்ப பெற யந்திரம்,
59.விநாயகர் வசிய யந்திரம்,
60.குல தெய்வ வசிய யந்திரம்,
61.அகத்தியர் வசிய யந்திரம்,
62.உபாசனை தெய்வ வசிய யந்திரம்,
63.காளி வசிய யந்திரம்,
64.யட்சணி குடுவை,
65.கலசம் தயார் செய்ய,
66.பானகம் செய்ய,
67.கர்ண யட்சணி வசியம்,
68.பத்மாவதி யட்சணி வசியம்,
69.அனைத்து யட்சணி, தெய்வங்கள், தேவதைகளை வசியம் செய்ய ஒரே தாந்த்ரீக முறைகள்.
மேற்படி யந்திரங்கள் தேவைப்படுவோர்சர்வ தொடர்பு கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி



திருமண வரம் அருளும் முருகன் 108 போற்றி
செவ்வாய் தோஷத்தால் திருமணம் தடைப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருகன் 108 போற்றியை செவ்வாய் அல்லது முருகனுக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் கிடைக்கும்.
ஓம் அழகா போற்றி
ஓம் அறிவே போற்றி
ஓம் அரன் மகனே போற்றி
ஓம் அயன்மால் மருகா போற்றி
ஓம் சக்திவேலவா சரவணா போற்றி
ஓம் முக்தி அருளும் முருகா போற்றி
ஓம் பன்னிருகை வேலவா போற்றி
ஓம் பவழ வாய் சிரிப்பு பாலகா போற்றி
ஓம் ஆறிரு தடந்தோள் போற்றி
ஓம் ஆறெழுத்து மந்த்ரம் போற்றி
ஓம் இடும்பனை வென்றவனே போற்றி
ஓம் இடர் களைவோனே போற்றி
ஓம் உமையவள் மகனே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஐயனே போற்றி அருளே போற்றி
ஓம் ஐங்கரன் தம்பியே போற்றி
ஓம் ஓம்கார சொருபனே போற்றி
ஓம் மூலப்பொருளே குகனே போற்றி
ஓம் ஓதுவார்க் கினியனே போற்றி
ஓம் ஓங்காரத்துள் வளர் ஒளியே போற்றி
ஓம் திருவடி தொழுதிட அருள்வாய் போற்றி
ஓம் குருவடிவான குருவின் உருவே போற்றி
ஓம் பக்தர்கள் போற்றும் பழம் நீ போற்றி
ஓம் சித்தர்கள் வசமான செல்வேள் போற்றி
ஓம் தேவர்கள் சேனைத் தலைவா போற்றி
ஓம் தேவகுஞ்சரி மணாளா போற்றி
ஓம் வெண்நீறணியும் விசாகா போற்றி
ஓம் கண்ணின் மணியே கனியே போற்றி
ஓம் தண்டபாணி எம் தெய்வமே போற்றி
ஓம் குண்டல மொளிரும் சுந்தரா போற்றி
ஓம் வேதப் பொருளே வேந்தே போற்றி
ஓம் அருந்தமிழ் வளர்த்த ஐயா போற்றி
ஓம் செந்தில் உறையும் ஸ்கந்த போற்றி
ஓம் பழனி பதிவாழ் பாலக போற்றி
ஓம் இருளிடர் போக்கும் பகலவா போற்றி
ஓம் இன்பமாம் வீடருள் இறைவா போற்றி
ஓம் அன்பின் உருவமே எம்அரசே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் சேந்தா குறிஞ்சி வேந்தா போற்றி
ஓம் கந்தா கடம்பா கார்த்திகேயா போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கதிர் வேலவனே போற்றி
ஓம் மூலப்பொருளே முருகா போற்றி
ஓம் சூரனுக் கருளிய சேனாபதியே போற்றி
ஓம் குன்று தோறாடும் குமரா போற்றி
ஓம் அறுபடை விடுடையவா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தனே போற்றி
ஓம் கந்தசஷ்டி நாயக போற்றி
ஓம் இதயக் கோயிலில் இருப்பாய் போற்றி
ஓம் பக்தர்தம் பகை ஒழிப்பவனே போற்றி
ஓம் மகா சேனனே போற்றி
ஓம் மயில் வாகனனே போற்றி
ஓம் வடிவேலுடனே வருவாய் போற்றி
ஓம் அடியார் துயரம் களைவாய் போற்றி
ஓம் வளமான வாழ்வு தருவாய் போற்றி
ஓம் வள்ளி தெய்வானை மணாளா போற்றி
ஓம் செஞ்சுடர் மேனிச் செவ்வேள் போற்றி
ஓம் மலைமகட் கிளைய மகனே போற்றி
ஓம் அமிர்தாம் தமிழின் தலைவர் போற்றி
ஓம் தமிழர் தம் கருணை மிகு இறைவா போற்றி
ஓம் ஆடும் அயில்வேல் அரசே போற்றி
ஓம் வந்தருள் செய் வடிவேலவா போற்றி
ஓம் கலியுக வரதா கந்தா போற்றி
ஓம் கவலைக் கடலை களைவோய் போற்றி
ஓம் தந்தைக்கு மந்த்ரம் உரைத்தவா போற்றி
ஓம் எந்தனுக்கு இரங்கி அருள்வாய் போற்றி
ஓம் சைவம் வளர்த்த சம்பந்தா போற்றி
ஓம் சரவணபவ சண்முகா போற்றி
ஓம் வேடர் தம் கொடி மணாளா போற்றி
ஓம் வனத்தில் வேடனாய் வந்தாய் போற்றி
ஓம் புனத்தினில் ஆண்டியாய் வந்தவா போற்றி
ஓம் தேன்திணைமா நெய்வேத்யா போற்றி
ஓம் தெவிட்டா இன்பமே தென்றலே போற்றி
ஓம் தேவாதி தேவனே தெய்வமே போற்றி
ஓம் போகர் நாதனே பொலிவே போற்றி
ஓம் போற்றப் படுவோனே பொருளே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே வரதா போற்றி
ஓம் யோக சித்தியே அழகே போற்றி
ஓம் பழனியாண்டவனே பாலகா போற்றி
ஓம் தென்பரங் குன்றோனே தேவா போற்றி
ஓம் கருணைமொழி போருர்க் கந்தா போற்றி
ஓம் அருணகிரிக் கன்பு அருளினை போற்றி
ஓம் குறிஞ்சி நிலக் கடவுளே போற்றி
ஓம் குறுமுனி தனக்கருள் குருவே போற்றி
ஓம் தணிகாசலம் வுறை சண்முகா போற்றி
ஓம் சிக்கல் மேவிய சிங்காரா போற்றி
ஓம் நக்கீரர்க் கருள் நாயகா போற்றி
ஓம் விராலி மலையுறு வேலவா போற்றி
ஓம் திருக்கழுக் குன்றின் செல்வா போற்றி
ஓம் மணம்கமழ் கடம்ப மலையாய் போற்றி
ஓம் குன்றக்குடி அமர் குகனே போற்றி
ஓம் குமரகுரு புகழ் அழகா போற்றி
ஓம் கதிர் காமத்துறை கடவுளே போற்றி
ஓம் துதிபுரி அன்பென் துணையே போற்றி
ஓம் பழனிப் பதிவாழ் பண்டித போற்றி
ஓம் செந்தூர் பதிவாழ் சுந்தரா போற்றி
ஓம் மருதாசல மூர்த்தியே மகிழ்வே போற்றி
ஓம் கந்தாஸ்ரமம் நிறை கந்தா போற்றி
ஓம் பழமுதிர்த் சோலைப் பதியே போற்றி
ஓம் பத்துமலை முத்துக்குமார போற்றி
ஓம் ஒளவையின் பைந்தமிழ் கேட்டவா போற்றி
ஓம் அருமையின் எளிய அழகே போற்றி
ஓம் இரு மயில் மணந்த ஏறே போற்றி
ஓம் அருள்சேர் இருவினை நீக்குவாய் போற்றி
ஓம் நீங்காப் புகழுடை நிமலா போற்றி
ஓம் திருப் புகழ் விருப்புடைத் தேவா போற்றி
ஓம் அருட்பெரும் ஜோதி ஆண்டவா போற்றி
ஓம் போற்றி... போற்றி... ஜெய ஜெய வேலவா போற்றி
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, August 8, 2017

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும் முதல் படி

சபரிமலை படிக்கட்டுகளும் அதன் மகத்துவமும்
முதல் படி
✻ பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி.
இரண்டாம் படி
✻ பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.
மூன்றாம் படி
✻ கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்.
நான்காம் படி
✻ பாவ - புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.
ஐந்தாம் படி
✻ நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.
ஆறாம் படி
✻ கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது. இதுவே ஆறாவது படி.
ஏழாம் படி
✻ இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன் தான் என உணர்வது பிரம்ம ஞானம்.
எட்டாம் படி
✻ எந்நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.
ஒன்பதாம் படி
✻ கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.
பத்தாம் படி
✻ அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி.
பதினொன்றாம் படி
✻ பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.
பன்னிரெண்டாம் படி
✻ இன்பம் - துன்பம், விருப்பு - வெறுப்பு ஏழை - பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.
பதிமூன்றாம் படி
✻ எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி.
பதினான்காம் படி
✻ யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.
பதினைந்தாம் படி
✻ தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.
பதினாறாம் படி
✻ இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.
பதினேழாம் படி
✻ 'சர்வம் பிரம்மம்" என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.
பதினெட்டாம் படி
✻ யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள்புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மாந்திரிகம் வசியம்

மாந்திரிகம் வசியம்
மாந்திரிகம் என்பது பழந்தமிழத்தில் புழக்கத்தில் இருந்த கலை. பெரும்பாலும் இதொரு தற்காப்பு கலையாகவே அறியப் பட்டிருந்தது. மருத்துவத்திலும் மாந்திரிகத்தின் பயன்பாடுகள் இருந்தன. காலப் போக்கில் மனிதனின் பேராசை இந்த கலையின் திறத்தையும், குணத்தையும் நிழலான காரியங்களின் பக்கம் மாற்றி வைத்தன.
சித்தர் பெருமக்களின் பாடல்க்ளின் ஊடே இந்தக் கலையைப் பற்றி உயர்வாக குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்த கலையினை அறிந்து தெளிந்து தேர்ந்தவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டார்களாம். அத்தகைய சிறப்புடையவர்களை எளிதில் இனம் காண இயலாது என கூறியிருக்கின்றனர். மேலும், அவசிய அவசரங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கலையினை நாடவும், கைகொள்ளவும் வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த மாந்திரிகத்திலும் எட்டு நிலைகளை வகுத்துக் கூறியிருக்கின்றனர். இவற்றை மாந்திரிக அட்டமாசித்து அல்லது அட்டகன்மம் என்கின்றனர்.
வசியம், மோகனம், தம்பனம், உச்சாடனம், ஆக்ருசணம், பேதனம், வித்துவேடணம், மாரணம் .ஆகியவையே மாந்திரிகத்தின் எட்டு நிலைகள். இவை குறித்தும் ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். இனி வரும் நாட்களில் இந்த அட்ட கன்மங்களைக் கொண்டு நோய்நொடிகள் பிரச்சனைகள் என்று தேடிவரும் மக்களுக்கு எவ்வாறு தீர்வுகளை கொடுக்கபட்டது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
வசியம்.
வசியம் என்பது ஒரு மனிதனை அல்லது மனிதர்களை தன் வயப்படுத்தி, தனது இச்சைகளுக்கு ஏற்ப அவரை அல்லது அவர்களை ஆட்டுவிப்பதேயாகும். இந்த வசியக் கலையை பயன்படுத்தி எந்தவகையில் தீர்வுகளை அளிக்க முடியும் என்பதை அகத்தியர் தனது "அகத்தியர் 12000" என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.
வசியமாய்க் காரீயத்தகடு வாங்கி
வளமாக நயமவசி என்று மாறி
உண்மையுள்ள மாந்தருக்கு கட்டினாக்கால்
பசிதாக மானதுபோல் உனைக் கண்டோர்கள்
பணிவார்கள் வசியமதாய்ப் பண்பாய் மைந்தா
நிசிதமுள்ள மிருக தாவர சங்கங்கள்
நேர்மையுடன் வசியமதாய் வணங்கும்பாரே.
காரீயத்தகடு ஒன்றை எடுத்து, அதில் "நயமவசி" என்று எழுதிக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அந்த காரீயத்தகட்டை கைகளில் ஏந்தியபடி கிழக்குமுகமாய் அமர்ந்து வசிய மூலமந்திரத்தினை 1008 தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம்.
இவ்வாறு செபித்து முடிந்ததும், தீர்வும், தேவையும் உள்ளவர்கள் உடலில் இந்த யந்திரத்தினை கட்டிவிட வேண்டுமாம். அதன் பின் அவர்களுக்கு மிருகங்கள் தாவரங்கள் வசியமாகுமாம். அத்துடன் அவர்களும் பண்பும் பணிவும் நிறைந்தவர்களாக நடந்து கொள்வார்கள் என்கிறார்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட:

வாழ்வில் அதிர்ஷ்டம் ஏற்பட:
மசூதி/கோவில்/சர்ச்சில் பிச்சை எடுப்பவர்கள் மூவருக்கு,எலுமிச்சை சாதத்துடன,ஒரு ஆரஞ்சு பழமும் சேர்த்து தானம் கொடுக்க வாழ்வில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் உண்டாகும்.காரிய தடைகள் நீங்கி பலிதமாகும்.
இதனை வியாழக்கிழமை
மதியம் 1:15 முதல் 1:30க்குள் கொடுக்கவும.தொடர்ந்து 12 வாரங்கள் செய்ய வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

வசிய மூலிகை-அழுகண்ணி:

வசிய மூலிகை-அழுகண்ணி:
ஜீவசக்தியுடைய மூலிகை இது.இதனினுடைய இலை நுனிப்பகுதியில் இருந்து பனித்துளி போல் நீர் வடிந்து கொண்டே இருக்கும்.இந்த மூலிகைக்கு முறையாக காப்பு கட்டி சாபநிவர்த்தி செய்து வடக்கு போகும் வேரை எடுத்து வெள்ளி அல்லது தங்கத்திலான தாயத்து அல்லது காப்புல் அடைத்து வலது கையில் கட்டிக்கொள்ள சர்வஜன வசியம்,லட்சுமி கடாட்சம்,தொழில் வியாபாரம் போன்றவற்றில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஏறுசிங்கி மூலிகை:

ஏறுசிங்கி மூலிகை:

வலிப்பு நோய்க்கு மருந்து:

வலிப்பு நோய்க்கு மருந்து:
வசம்பு,சுக்கு,மிளகு,திப்பிலி,ஓமம,கல்உப்பு,பெருங்காயம் இவைகளை போதுமான அளவு எடுத்து சூரணமாக்க வேண்டும்.இதனை காலை மாலை பாலில் கலந்து,ஒரு மண்டலம் சாப்பிட்டு வர அனைத்துவிதமான வலிப்பு நோய்களும் பூரண குணமாகும.
மேலும் வலிப்பு நோய்க்கு 
மேலே குறிப்பிட்ட மருந்துகளுடன் சில வவிசேஷமான மூலிகை வேர்களும் சேர்த்து செய்த சூரணப் பொடி தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, August 4, 2017

கணவன் வசமாக:

கணவன் வசமாக:
தறிகெட்டு திரியும் கணவன் வசமாக புல்லாமணக்கு கிழங்கை மனைவியானவள் தன் எச்சிலில் அரைத்து கொடுக்க பலன் கிட்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


Thursday, August 3, 2017

சுடலை மாடன் வரலாறு மற்றும் அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:

சுடலை மாடன் வரலாறு மற்றும் அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:
தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் சுடலை மாடசாமி கோவில்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தக் கோவில்கள் பெரும்பான்மையாகத் திறந்தவெளியில், காவிக் கோடுகள் போடப்பட்ட திண்ணையின் மேல் முக்கோண வடிவிலான பீடங்களாகவே அமைக்கப்பட்டிருக்கும். சில கோவில்களில் இந்தப் பீடங்களின் முன்பகுதியில் சுடலை மாடசாமியின் உருவப்படம் வரையப்பட்டிருக்கும். ஒரு சில பெரிய கோவில்களில் மட்டுமே சுடலை மாடசாமியின் உருவத்திலான சிலைகள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும்.
சுடலை மாடசாமி பெரிய மீசையுடன் வலது கையில் அரிவாள், இடது கையில் கம்பு போன்றவைகளுடன் மாட்டினை வாகனமாகக் கொண்டு காட்சியளிக் கிறார். சுடலை மாடசாமி சிலருக்கு குலதெய்வமாகவும், சில கிராமங்களில் காவல் தெய்வமாகவும் இருப்பவர். சுடலை மாடசாமி வீற்றிருக்கும் திருக்கோவில் திருவிழாக்களின்போது, நடத்தப்படும் வில்லுப்பாட்டு, கணியான் கூத்து போன்ற நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளில் சுடலை மாடசாமியின் தோற்றம் குறித்த கதை சொல்லப்படுகிறது.
ஈசனிடம் சோதனை
ஒருமுறை கயிலாயத்தில் வீற்றிருந்த சிவபெருமான், பூலோகத்தில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் அவைகளின் வினைப்பயன்படி உணவு அளிக்கும் நோக்கத்துடன் கிளம்பினார். சிவபெருமான் இந்தப் பணியை முழுமையாகச் செய்து வருகிறாரா? என்று பார்வதிக்கு சிறு சந்தேகம் எழுந்தது. அவள் ஒரு சிற்றெறும்பைப் பிடித்துக் காற்று கூட புக முடியாத குமிழ் ஒன்றில் அடைத்து வைத்தாள்.
தன் பணியை முடித்துத் திரும்பிய சிவபெருமானிடம் பார்வதி, சுவாமி!, இன்று அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டீர்களா? என்று கேட்டாள். சிவபெருமான், ஆமாம், நான் அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து வந்து விட்டேன். உனக்கு இதிலென்ன சந்தேகம்? என்றார்.
பார்வதிக்கு சாபம்
இந்தக் குமிழில் அடைபட்டிருக்கும் சிற்றெறும்புக்கும் உணவளித்து விட்டீர்களா? என்றபடி குமிழின் மூடியைத் திறந்தாள். அந்தச் சிற்றெறும்பின் வாயில் ஒரு அரிசி இருந்தது. பார்வதிக்குத் தன் தவறு புரிந்தது. இதைக் கண்ட சிவபெருமான் கோபமடைந்தார். என்னுடைய மனைவியான நீ, என் பணியில் சந்தேகமடைந்து என்னைச் சோதிப்பதா?. என்னைச் சோதித்த நீ காட்டுப்பேச்சியாக மாறி, காடுகளில் அலைந்து கொண்டிரு! என்று சாபமிட்டார்.
பார்வதி தன் செயலுக்காக மன்னிப்பு கோரி, சாப விமோசனமும் வேண்டினார். சிவபெருமான், வனப்பேச்சியாகக் காட்டில் அலையும் நீ, மயானத்தில் என்னை வேண்டித் தவமிரு... உரிய காலம் வரும்போது, நானே உன்னை வந்து மீட்பேன் என்று சாப விமோசனம் அளித்தார். பார்வதி காட்டுப்பேச்சியம்மனாக மாறி, காடுகளில் அலைந்து திரிந்து, கடைசியில் மயானத்தில் சிவபெருமானை வேண்டித் தவமிருந்தார். தவத்தின் முடிவில் தோன்றிய சிவபெருமான் அவளின் சாபத்தை நீக்கி, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்றார்.
குழந்தை வரம்
பார்வதிதேவி, சுவாமி, எனக்கு இரு புதல்வர்களைக் கொடுத்தீர்கள். அவர்கள் தனித்துச் சென்று விட்டார்கள். எனக்குத் தாங்கள் இன்னுமொரு குழந்தையைத் தந்தருள வேண்டும் என்று வேண்டினார். சிவ பெருமான், இந்த மயானத்தில் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. இந்தப் பிணம் நன்றாக எரியும் போது, நீ என்னை நினைத்து உன் முந்தானையை ஏந்தி வேண்டிக் கொள். உனக்கு ஒரு ஆண்குழந்தை கிடைக்கும். அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு கயிலாயம் வந்து சேர் என்று வரமளித்து மறைந்தார்.
பார்வதி, பிணம் நன்றாக எரியும் போது முந்தானையை ஏந்தியபடி சிவபெருமானை நினைத்து வேண்டி நின்றார். பிணம் நன்கு சுடர் விட்டு எரிந்த நிலையில், அதிலிருந்து சில சுடலை முத்துக்கள் பார்வதியின் முந்தானையில் வந்து விழுந்தன. அது குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தை, உறுப்புகள் எதுவுமில்லாமல் பிண்டமாக இருந்தது. ஆனால், அதற்கு உயிர் இருந்தது.
இதைப் பார்த்த பார்வதி மீண்டும் சிவபெருமானை வேண்டினார். சிவபெருமான் அந்தப் பிண்டத்தை அழகிய குழந்தையாக மாற்றிக் கொடுத்தார். பார்வதியும் அந்தக் குழந்தையுடன் கயிலாயம் திரும்பினார்.
பூலோகம் செல்ல உத்தரவு
சுடலை முத்துக்களிலிருந்து தோன்றிய குழந்தை என்பதால், அதற்கு சுடலை மாடன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். பார்வதி ஒரு நாள் இரவு அந்தக் குழந்தைக்கு உணவு கொடுத்து விட்டுப் படுக்கைக்குச் சென்று விட்டாள்.
நள்ளிரவு நேரம் சுடுகாட்டில் பிணம் ஒன்று எரியும் வாசனை அந்தக் குழந்தைக்கு எட்டியது. அந்தக் குழந்தை அங்கிருந்து சுடுகாட்டுக்கு வந்து, எரியும் பிணங்களை எடுத்துத் தின்றது. பேய்களோடு விளையாடி மகிழ்ந்தது. அதிகாலையில் கயிலாயம் திரும்பிப் படுத்துக் கொண்டது.
பார்வதிதேவி காலையில் குழந்தையைக் கையிலெடுத்த போது, அந்தக் குழந்தையிடமிருந்து பிண வாசனை வருவது கண்டு திகைத்தாள். நள்ளிரவில் நடந்ததை அறிந்து வருந்தினாள். இதுபற்றிச் சிவபெருமானிடம் முறையிட்டாள். சிவபெருமான், பிணம் தின்ற இவன், இனி கயிலாயத்தில் இருக்க இயலாது. பூலோகம் சென்று பிழைத்துக் கொள்ளட்டும் என்று சொன்னார்.
இதைக் கேட்ட சுடலை மாடன், நான் பூமியில் எப்படி வாழ்வது? தினமும் பிணங்களை எதிர்பார்த்து வாழ முடியுமா? எனக்கு நல்லறிவு வழங்கி நல்லதொரு வரமளிக்க வேண்டும் என்று வேண்டினார்.
சிவபெருமானும் உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்? என்று கேட்டார்.
சுடலை மாடன், பேய்கள் அனைத்தையும் நானே அடக்கி ஆள வேண்டும். நான் கொடுக்கும் மயானச் சாம்பலில் அனைத்து நோய்களும் தீர்ந்திட வேண்டும். தீயவர்களை அழிக்கத் துணை புரிய வேண்டும் என்று வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரங்களைத் தந்து அனுப்பினார்.
புதையல் காக்கும் பணி
சுடலை மாடன் பூலோகத்தில் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டபடியே, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரக்கரை எனும் ஊரை வந்தடைந்தார். இந்த ஊரிலிருந்த பகவதியம்மன் அவருடைய தாயைப் போல் தோன்றியதால், அவருடன் இருக்க விரும்பினார். பகவதியம்மனிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். பகவதியம்மன் அவரை மகனாக ஏற்றுக் கொண்டதுடன், அவரிடமிருக்கும் புதையலைக் காக்கும் பணியையும் வழங்கினார்.
சுடலை மாடன், அம்மனின் அனுமதியைப் பெற்று, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் செல்வதும், பிற நாட்களில் பகவதி அம்மனின் புதையலுக்குக் காவலாகவும் இருந்தார்.
புதையலை மீட்டார்
இந்தநிலையில், கேரளாவின் நந்தம்புனலூர் எனும் ஊரில், பெரும் மந்திரவாதியான காளிப்பெரும்புலையன் என்பவன் இருந்தான். அவன் பகவதியம்மனிடம் இருக்கும் புதையலைப் பற்றிக் கேள்விப்பட்டு அதைத் திருடவும் திட்டமிட்டான். அவன் புதையலுக்குச் சுடலை மாடன் காவலாக இருப்பதையும், அவர் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மயான வேட்டைக்குச் சென்று விடுவதையும் அறிந்தான். ஒரு வெள்ளிக்கிழமை நாளில், சுடலை மாடன் மயான வேட்டைக்குச் சென்ற போது, பகவதியம்மனின் புதையலைத் காளிப்பெரும்புலையன் திருடிச் சென்று விட்டான். மயான வேட்டைக்குச் சென்று திரும்பிய சுடலை மாடன், பகவதியம்மனின் புதையல் திருடு போனதை அறிந்தார். உடனே கேரளாவில் இருக்கும் நந்தம்புனலூர் சென்று, காளிப்பெரும்புலையனின் மந்திர வித்தைகள் அனைத்தையும் தந்திரமாக முறியடித்து அவனைக் கொன்று புதையலை மீட்டு வந்தார்.
சுடலை மாடன் புதையலை மீட்டு வந்ததை அறிந்த கொட்டாரக்கரை மக்கள், அவரைத் தங்கள் காவல் தெய்வமாகக் கொண்டு வழிபடத் தொடங்கினர்.
இதைத் தொடர்ந்து, கொட்டாரக்கரையில் இருந்து வாழ்வாதாரம் தேடி இடம் பெயர்ந்த மக்கள் தாங்கள் குடியேறிய ஊர்களில், சுடலை மாடனுக்குத் தனிக் கோவில்கள் வைத்து வழிபடத் தொடங்கினர். இதனால், சுடலை மாடன் தென் மாவட்டங்களில் பல ஊர்களில், மாடசாமி, பெரிய மாடசாமி, புலமாடசாமி, வேம்படி மாடசாமி, கரையடி மாடசாமி, கொம்பு மாடசாமி, பட்டணத்து மாடசாமி, ஆற்றங்கரை மாடசாமி, சுடலை வீரன், சங்கிலி மாடசாமி, பொன் மாடசாமி, ஆகாச மாடசாமி, பூக்குழி மாடசாமி என்று பல்வேறு பெயர்களில் கோவில் கொண்டிருக்கிறார்.
உடைமைகளை மீட்பவர்
சுடலை மாடசாமி கொட்டாரக்கரை பகவதியம்மன் புதையலை மீட்டுக் கொடுத்தது போல், தங்களுக்குச் சொந்தமான உடைமைகள் எதுவாக இருந்தாலும், அதை ஏதாவதொரு வழியில் இழந்து விட்டால், அவைகளைச் சுடலை மாடசாமி மீட்டுக் கொடுத்துவிடுவார் என்கிற நம்பிக்கை பக்தர்களிடம் இருக்கிறது. இதனால், சுடலை மாடசாமி கோவில்கள் அனைத்திலும், பக்தர்கள் இழந்து விட்ட தங்கள் பொருட்களை மீட்டுக் கொடுக்க வேண்டி வழிபடுவது வழக்கத்திலிருக்கிறது. இதுபோல், தீயசக்தியால் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வந்து, அவர்களிடமிருக்கும் தீயசக்திகளை விரட்டுவதற்கும் சுடலை மாடசாமி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
வழிபாடு
சுடலை மாடசாமி கோவில்கள் அனைத்திலும் தினசரி வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தாலும், ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் கொடை விழாவில், சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. இந்தச் சிறப்பு வழிபாட்டின் போது சுடலை மாடசாமிக்குப் பொங்கல் வைத்து, ஆடு, கோழி, பன்றி போன்றவைகளைப் பலியிட்டு உணவு சமைத்து, மது, சுருட்டு போன்றவைகளையும் சேர்த்துப் படைத்து வழிபடும் நடைமுறை வழக்கத்திலிருக்கிறது.
அருள் வாக்கு கூற மந்திரம் யந்திரம்:
சுடலை யந்திரம், வசிய மை,பிரம்பு இவைகளை வைத்து அவற்றின் முன்பு அசைவ படையல்,சுருட்டு,மது மாமிசம்,வைத்து கீழ்க்கண்ட மந்திரத்தை லட்சம் உரு செபிக்க வேண்டும்.
மந்திரம்:
"ஹரி ஓம் அகோரமாடா கெம்பிரமாடா ஆகாசமாடா பகவதி புத்திரா வீராதி வீரா வாவா ஐயும் கிலியும் சௌவும் நசி மசி வாவா சுவாகா"
பலன்கள்:
வாக்கு சித்தி,அருள் வாக்கு கூறுதல்,சகல ஏவல் பில்லி சூன்யம் பேய்பிசாசுகளை நீக்கலாம்.எதிரிகள் சத்துருக்கள் தொல்லைகள் நீங்கும்.மேலும் சகல சித்துக்களும் ஆடலாம்.
சுடலை மாடன் யந்திரம்,வசிய மை,தீட்ஷை தேவைக்கு அணுக
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989