Monday, February 27, 2017

செய்வினையும் அதன் ஏழு வகைகளும்

செய்வினையும் அதன் ஏழு வகைகளும்

பொதுவாக செய்வினைகள் ஏழு வகைகளில் செய்யப்படுகின்றன. அவை 1, பந்தனம், 2. ஸ்தம்பனம், 3. மோகனம், 4. ஆகர்ஷனம், 5. உச்சாடனம், 6. உன்மத்தனம், 7. மாரணம் என்ற ஏழு முறைகளில் செய்யப்படுகின்றன இனி இந்த முறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

1. பந்தனம் :
                       பந்தனம் என்பது ஒருவர் செய்யும் செய்வினை செய்பவரை பாதிக்காமல் தன்னை சுற்றி கட்டு போட்டு கொள்வது.

2. ஸ்தம்பனம் :
                            ஒருவர் செய்யும் நல்ல மற்றும் கெட்ட காரியங்கள் எதுவாயினும் அதை நடைபெற விடாமல் தடுப்பதாகும். ஸ்தம்பனம் - இயக்கத்தை நடைபெற விடாமல் நிறுத்துதல், ஸ்தம்பிக்க செய்தல்.

3. மோகனம் :
                          ஒருவர் தன்னை பற்றியே நினைத்து உடலும் உள்ளமும் உருகும்படி செய்துவிடுதல். மோகனம் மூலமாக செய்வினையால் பாதிக்கப்பட்டவர் உறங்கும்போது கெட்ட கனவுகள் கண்டு உறக்கத்திலேயே விந்து கழியும், நாளடைவில் உடல் நலம் கெட்டு அவதிப்படுவார்.

4. ஆகர்ஷனம் :
                             ஒருவரை வசிகரித்து யாருக்காக வசீகரப்படுத்தப் படுகிறாரோ அவருக்காக எதையும் செய்ய தயாராக மாறுதல்.  இதை வசியம் என்றும் சொல்லுவார்கள்.

5. உச்சாடனம் :
                             ஒருவரை மற்றொருவர் மேல் பைத்தியம் பிடித்தது போல் ஆக்கி விடுவது, ஒருவரின் முன்னேற்றத்தை தடுப்பது, வீட்டில் ஒருவருக்கொருவர் ஒற்றுமை இல்லாமல் சண்டையிடும்படி செய்தல், பண விரயங்களை உண்டாக செய்தல், இன்னும் பல கஷ்டங்களை உண்டாக்க முடியும்.

6. உன்மத்தனம் :
                               ஒருவரை பைத்தியமாக்கி விடுதல், கணவன் - மனைவி இடையே சந்தேகத்தை உண்டாக்கி சண்டை சச்சரவுகளை ஏற்படுத்தி பிரித்து விடுதல்.

7. மாரணம் :
                        ஒருவரை வியாதியால் உழல வைத்து நடமாட முடியாதபடி செய்து மரணமடைய செய்தல்,  கற்பத்தில் உள்ள கருவை அழித்தல், வீட்டில் தொடர்ந்து அடுக்கடுக்காக மரணங்களை ஏற்படுத்துதல்.

          ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டால் அதனால் அவருக்கு 12 வருட காலம் பாதிப்புகள் ஏற்படும், ஆனால் செய்தவருக்கோ அதனால் 98 வருடங்கள் பாதிப்புகள் ஏற்படும். அவரும் அவருடைய சந்ததியினரும் செழித்து வாழ முடியாது குல நாசமடையும். ஆகையால் தீய காரியங்களை செய்யாமல் இருப்பதே நாமும் நம் வம்சமும் செழித்து நீடூடி வாழ வகை செய்யும்.

ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

புத்திர பாக்கியம் தரும் விருட்சம்


புத்திர பாக்கியம் தரும் விருட்சம்

புத்திர பாக்கியம் வேண்டி ஏங்கி தவிக்கும் தம்பதியினர் பலர், இவர்களின் புத்திர பாக்கிய வேண்டுதலை உடனே நிறைவேற்றும் ஒரு பரிகார மரம் ஒன்று உண்டு என்று விருட்ச சாஸ்திரம் கூறுகிறது. இம்மரம் நமது சர்வ சக்தி விருட்ச பீடத்திலும் நட்டு சாஸ்திர முறைப்படி வளர்க்கப்பட்டும் வருகிறது. உலக மக்களின் புத்திர பாக்ய வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக புத்திர தோஷ பரிகார பூஜைகள்  நடத்தப்பட்டு வருகிறது. அந்த அபூர்வ சக்தி கொண்ட தெய்வீக விருட்சம் இலந்தை மரம் எனும் முட்கள் நிறைந்த சிறு மரம். இம்மரத்தில் சந்தான கணபதியும், மகாலட்சுமியும் ஒருங்கே வாசம் செய்வதால் இம்மரத்தை வணங்கும் போது புத்திரபாக்கியத்தில் உண்டாகும் வினைகளை விநாயகர் தீர்த்து அருள, லட்சுமியும் தனது அம்சங்களை பிறக்கும் குழந்தைகளுக்கு உண்டாக அருள்பாலிக்கிறார்.
இந்த மரத்தினை அதிகாலையில் சந்தன லட்சுமி மந்திரத்தை 16 முறை சொல்லி வலம்வந்து, அதன் இலைகளை ஒரு கைப்பிடி அளவு பறித்து அத்துடன் 10 மிளகு சேர்த்து அரைத்து, பெண்கள் மாத விலக்கான மூன்று நாட்களும் சாப்பிட கருவறையை சுத்தப்படுத்தி கரு உண்டாக செய்கிறது.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

சர்வ வசிய மை செய்முறை


சர்வ வசிய மை செய்முறை


வெள்ளை குண்டுமணி வேர், வெள்ளெருக்கன் வேர், வெள்ளை விஷ்ணு கிரந்தி வேர், பெரியா நங்கை வேர், வெள்ளை காக்கணம் வேர், வெண்கொழிஞ்சி வேர் இவைகளை சம எடையாக ஒரு புத்தம் புதிய சட்டியில்  போட்டு கருக்கி, அத்துடன் பச்சை கற்பூரம், கோரோசனை, குங்குமப்பூ, கஸ்தூரி,  புனுகு வகைக்கு ஒரு குண்டுமணி எடை கூட்டி கல்வத்தில் போட்டு புற்று தேன் விட்டு இரண்டு ஜாமம் அரைத்து கொம்பு டப்பாவில் பத்திரப்படுத்தவும்.
          இந்த சர்வ வசிய மையை வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு "ஓம் ஸ்ரீம் க்லீம் குமாரிகே ஜெகன் மோகினி த்ரிலோக்யம் வஸ்மானந் க்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா" - என்ற வசிய மந்திரத்தை 1008 முறை ஜெபிக்க சர்வ வசிய மை உயிர் பெறும்.
        

சர்வ வசிய மையின் பலன் 
                              சர்வ வசிய மையை திலகமிட சத்ரு ( எதிரிகள் ) வசியம், பொது ஜன வசியம், தொழில் - வியாபார வசியம், இலட்சுமி காடாச்சம்உண்டாகும்.

சர்வ வசிய மை உயிரேற்ற வைக்க வேண்டிய  நிவேதனம் : பால், பழம், கற்பூரம், ஊதுபத்தி, வெற்றிலை - பாக்கு, தேங்காய், சர்கரை பொங்கல்.

சர்வ வசிய மை தேவைப்படும் அன்பர்கள் என் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும். அலைபேசி எண் : +917598758989

வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்

            


வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம் 



            ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் மிக முக்கியமான தேவைகளில் ஒன்று வீடுமனை(காலி இடம்), பூமீவாகனம் ஆகியவை. இந்த அத்யாவஸ்ய தேவைகளை அடைய வாழ்வில் பல போராட்டங்களை சந்திக்கிறான். வீடுமனை (காலி இடம்), பூமீ, வாகனம் ஆகியவற்றை அடைந்திட தன் வாழ்நாளில் ஒரு பகுதியை உழைப்பிலேயே கழிக்கிறான். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தும் வீடுமனை (காலி இடம்), பூமீவாகனம் வாங்க முடியாமல் தன் ஆசை வெறும் கனவாய், கைக்கு எட்டா கனியாய் போகிறது என்று மனம் நொந்து வாழ்பவர்கள் எத்தனை பேர்? வீடுமனை (காலி இடம்), பூமீ, வாகனம் எனக்கும் கிடைக்க என்ன பரிகாரம் செய்வது? என கேட்டு ஜோதிடர்களை நாடுபவர்கள் எத்தனை பேர்? உன்னையே நம்பி தினமும் உருகி தொழுது வழிபடுகிறேனே எனக்கு ஏன் வீடுமனை (காலி இடம்), பூமீ, வாகனம் வாங்கும் யோகத்தை தர மறுக்கிறாய் உன்னையே கதி என்னும் என்னை சோதிக்கலாமா என்று தெய்வத்திடம் முறையிடுபவர்கள் எத்தனை பேர்? 



                       இவ்வாறு வாழ்வில் தான் நினைக்கும் வசதியில் வீடுமனை(காலி இடம்), பூமீவாகனம் வாங்கவைக்கும் அற்புத எந்திரம் தான் நம் முன்னோர்கள் அருளிச் சென்ற வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்எவ்வளவு  ஏழ்மை நிலையில் இருப்பவரையும் ஒரே வருடத்திற்குள் வீடுமனை (காலி இடம்), பூமீவாகனம் வாங்க வைக்கும் அற்புத எந்திரம் தான் வீடு மனை வாகன யோகம் தரும் எந்திரம் பூஜையில் உருவேற்றிய சக்தி மிக்க எந்திரம் தான் வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம்வீடு மனை பூமீ வாகன யோகம் தரும் எந்திரம் கிடைக்கும்.தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

Tuesday, February 21, 2017

அதிஷ்டக் கற்கள்


ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு.
ஒரே சூழ்நிலையில் வாழும் ஒவ்வொருவருக்கும் வாழ்கையில் பல வித்தியாசங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்:

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.
விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளியின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.
அதிஷ்டக் கற்களை தெரிவு செய்வதற்கு ஜாதகம் எதற்கு?
பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும்.
நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.
அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.
அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; எமது உடலுக்கு நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடிய "நவரத்தின கற்களை" கண்டறிந்து அதனைப் பாவிப்பதன் மூலம் எமக்கு ஏற்படும் துன்பங்களில் இருந்து தப்பிக்கொள்ளலாம் என்றும் அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதிஷ்டக் கற்கள் பாவிப்பதற்கான காரணங்கள்:
ஒளி குறைவாக இருந்தால், மேலும் வெளிச்சத்தை கூட்டி தெளிவான படங்கள் எடுப்பது போன்று, எமது உடம்பு கிரகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும் நல்ல கதிர்கள் குறைவாக காணப்படும் போது அவற்றைப் பெற்றுத்தரக்கூடிய அந்த கதிகளுக்குரிய கிரகத்தின் அதிஷ்டக் கற்களை பாவிக்கின்றோம். நவரத்தினக் கற்கள் சில நிறக் கதிகளை மாத்திரம் உள்வாங்கும் சக்தி கொண்டவை. அதனால்தான் அவை அந்த நிறத்தை பிரதிபலிக்கின்றது. அதிஷ்டக் கற்களை பாவிக்கும் போது அந்தக் கற்களின் குவியம் எமது உடம்பின் ஒரு பகுதியில் முட்டும்படியாக அணிந்து கொள்வதனால் அவ்வொளி எம்மீதுபட்டு வாழ்கை பிரகாசிக்கும் என்பது சோதிடர்கள் நம்பிக்கை. தவறான கற்கள் தீங்கு விளைவிக்கக் கூடியன.
மனிதர்களுக்குள் இருக்கும் "உயிர்க் காந்தம்" பிறக்கும்போதே இயற்கையாக உருவானது. அதனை மாற்றிவிட முடியாது. ஆனால் அவற்றினால் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்யவே பொருத்தமான அதிஷ்டக் கற்கள் பாவிக்கப்பெறுகின்றன. கண் பார்வை குறைவானவர்கள் அதனை நிவர்த்தி செய்வதற்கு கண்ணாடி பாவிப்பது போன்ற செயல்பாடே நல்ல கிரகங்களின் கதிவீச்சைப் (அனுக்கிரகத்தை) பெறுவதற்கு அதிஷ்டக் கற்களைப் பாவிக்கின்றோம் எனறும் கூறலாம்.
இராசிகளின் பிரகாரம் ஒருவருக்கு அதிஷ்டத்தை தரக்கூடிய நவரத்தின கற்கள்;
மேஷம் - பவளம்:
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
மிதுனம் - மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
கடகம் - முத்து:
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி - மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது
துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் - பவளம்:
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் - நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் - நீலக்கல் (Blue Shappire):
கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
நவரத்தினங்கள்: முத்து, வைரம், வைடூரியம், மாணிக்கம், நீலம், மரகதம், புஷ்பராகம், பவளம், கோமேதகம்,
முத்து (pearl)
முத்தை பெரும்பாலும் பெண்களே விரும்பி அணிகிறார்கள். முத்து ஆண்களுக்கு தன்னம்பிக்கையையும்,பெண்களுக்கு பாதுகாப்பையும் அளிக்கும்.மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து தம்பதியினரை ஒற்றுமையாக வைக்கும் சக்தி இதற்கு உண்டு.
வீட்டில் தீ விபத்து நேராமல் காக்கும். நீண்டஆயுளை கொடுக்கும். பேய்களை விரட்டும். முத்து கற்களை மாணிக்க கல்லை சுற்றிலும் பதித்து அணிந்தால் அதிஷ்டம் கிடைக்கும்,
அசையாசொத்துகள் வாங்கும்போது ஏற்படும் தடைகளை முத்து போக்கும். விலகிசென்ற நட்புகளையும், உறவுகளையும் சேர்த்து வைக்கும்.
முத்தின் மருத்துவ குணங்கள்
முத்தை ஊறவைத்த நீர் நல்ல ஊட்டம் மிகுந்தது. அந்த நீரை பருகினால் வயிற்றில் அமில சக்தியை மாற்றும். குடல் அழற்சி வராமல் காக்கும். மூத்திர கடுப்பை போக்கும்.
இதய வால்வுகோளாறு,எலும்புருக்கி,வாதம்,பித்தம், மூளைவளர்ச்சியின்மை, தூக்கமின்மை, ஆஸ்த்துமா ஆகிய நோய்களுக்கு நிவாரணம் கொடுக்கும். சர்க்கரையை குறைத்து கல்லீரலை சரியாய் இயங்க செய்யும்.
யாரெல்லாம் முத்து அணியலாம்
கடக ராசிக்கு அதிபதி சந்திரன். சந்திரனுக்குரிய ரத்தினம் முத்து. எனவே கடக ராசிக்காரர்கள் முத்து அணியலாம்.
ரோஹிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திர காரர்களும் முத்து அணியலாம்.
எண் கணிதபடி 2,11,20,20 தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதி, மாதம், வருடம் அனைத்தையும் கூட்டினால் 2 எண் வருபவர்களும், பெயர் எண் 2 கொண்டவர்கள்களும் முத்து அணியலாம்.
மேலும், 7,16, 25 தேதிகளில் பிறந்தவர்கள், பெயர் எண் 7 கொண்டவர்களும் முத்து அணியலாம்.
வைரம் (diamond)
உடல் உரம்,மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது. வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். ஆணுக்கு பெண்ணிடமும், பெண்ணுக்கு ஆணிடமும் நேசத்தை வளர்க்கும். கோரக் கனவுகளை நீக்கி இனிய தூக்கத்தை கொடுக்கும்.
கூட்டுதொழிலில் உள்ள கருத்து வேறுபாட்டை போக்கும் .கலைத்துறையில் உள்ளவர்களுக்கு செல்வாக்கும் பெரும் புகழும் வந்து சேரும் . பிறரை வசீகரிக்கும் வகையில் பேச்சாற்றல் உருவாகும் . சிலருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகும்.
வைரத்தின் மருத்துவ குணங்கள்
மலட்டு தன்மையை போக்கும், ஆண்குழந்தையை விரும்பும் பெண்கள் வைரம் அணிந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்துக்கு வலிமை சேர்க்கும் சக்தி இதற்க்கு உண்டு. சளி,சம்பந்தப்பட்ட நோய்களை போக்கும்.கருப்பை கோளாறை சரி செய்யும். சக்கரை நோய், மனநோய் ஆகியவற்றை சரி செய்யும்.வாதம், பித்தம் போன்ற நோய்களில் இருந்து காத்து ஆண்மை தன்மையை இழக்காதவாறு செய்யும்.
யாரெல்லாம் வைரம் அணியலாம் ..!
சுக்கிரனை அதிபதியாய் கொண்ட ரிஷபம் மற்றும் துலாம் ராசிகாரர்களும் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர காரர்களும் 6, 15. 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பெயர் எண் மற்றும் விதி எண் 6, 15, 25 கொண்டவர்களும் வைரம் அணியலாம்..!
வைடூரியம் (cat's eye)
இந்த கல் உடம்பில் பட்டால் மனம்பற்றிய முன்னேற்றத்தை கொடுக்கும் .சிந்தனையை மேம்படுத்தும் . தியானத்திற்கு ஏற்றது நம்மை மேல்நிலைக்கு கொண்டு செல்லும் ஆன்மிக சக்திவாய்ந்த கல். மனதில் அமைதியான அதிர்வுகளை உண்டாக்கும். மனநோய்களை குணப்படுத்தும். பெருந்தன்மையயும் பரந்த நோக்கத்தையும் கொடுக்கும். மனதெளிவை கொடுத்து மனசோர்வை அகற்றும்.
சூதாட்டம் போட்டி பந்தயங்களில் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்து கிடைக்கும். நிலையான வருமானம் அமையும். முகத்தில் வசீகரம் உண்டாகும் .
வைடூரியத்தின் மருத்துவ குணங்கள்
வைடூரியம் பதித்த நகைகளை குழந்தைகளுக்கு அணிவித்தால் நல்ல வளர்ச்சி, ஆரோக்கியம் பாதுகாப்பு கிடைக்கும். பயத்தை போக்கும் வைடூரியகல்லை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை கொண்டு கண்களை கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.காக்கை வலிப்பு,தோல் நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
யாரெல்லாம் வைடூரியம் அணியலாம்
அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திர காரர்களும், 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண், பெயர் எண் 7 வருபவர்களும் வைடூரியம் அணியலாம்.
மேலும், 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 2 வருபவர்களும் இந்த கல்லை அணியலாம் ...!
மாணிக்கம் (ruby)
இரத்தினங்களின் ராஜா எனப்படும் மாணிக்கம் சிவப்பு மற்றும், இளஞ்சிவப்பு நிறங்களில் காணப்படும் .
பண்புகள்
மாணிக்ககல் உணர்ச்சி வசப்படுதலை கட்டுபடுத்தும். வாழ்வில் உயர்வையும் தைரியத்தையும் கொடுக்கும். வெகுளித்தனமாகவும், ஏமாளித்தனமும் உள்ளவர்கள் இந்த கல்லை அணிந்தால் அவர்கள் புத்தி சாதுர்யம் பெறுவார்கள். தீய எண்ணங்கள், கவலை, கருத்து வேறுபாடுகளை போக்கும். இந்த கல் நீண்ட ஆயுளை கொடுக்கும் என்பது சீனர்களின் நம்பிக்கை .
மாணிக்கத்தை கனவில் கண்டால் அதிஷ்டம் உண்டாகும். இது செல்வத்தை ஈர்க்கும் சக்தி கொண்டது. மன உறுதியையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கும். இதனை தலையணை அடியில் வைத்து வைத்து தூங்கினால் தீய கனவுகளை தடுத்து நல்ல நித்திரையை கொடுக்கும்.
மாணிக்க கல்லை அணிவதால் முக வசீகரம் அதிகரிக்கும் .கடினமான காரியங்கள் எளிதில் கைகூடும் .நினைவாற்றல் அதிகரிக்கும் .தொழில்,வியாபாரத்தில் அதிக லாபம் கிட்டும் .
யாரெல்லாம் மாணிக்கம் அணியலாம் ..!
சிம்ம ராசிக்கு அதிபதி சூரியன். சூரியனுக்குரிய ரத்தினம் மாணிக்கம் ஆகும். எனவே சிம்மராசிக்காரர்கள் இந்த கல்லை அணியலாம். மேலும் கிருத்திகை, உத்தரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் மாணிக்கம் அணியாலாம். எண்கணித படி 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த கல்லை அணியலாம். பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றை கூட்டினால் 1 வருபவர்களும், பெயர் எண் 1 ஆக அமைந்தவர்கள் மாணிக்கம் அணியலாம்.
மரகத பச்சை (emerald)
ஆக்கபூர்வமான கற்பனை வளத்தை கொடுக்கும் திறன் படைத்தது மரகதகல். மலட்டுதன்மையை போக்கும், தீய சக்திகள், பில்லி சூனியங்களில் இருந்து காக்கும். போரிலும் வம்பு வழக்குகளிலும் வெற்றி தேடி தரும். காதல் உணர்வை கொடுக்கும். சிறந்த கல்வியை கொடுக்கும்.
பேச்சாற்றலை வளர்க்கும். ஜோதிடர்கள், மருத்துவர்கள் இந்த கல்லை அணிந்தால் மிக சிறந்த இடத்தை அடைவார்கள். உடல் வளர்ச்சி குன்றியவர்கள் மரகதகல்லை அணிந்தால் உடல் வளர்ச்சி திருப்திகரமாய் இருக்கும். மரகத கல்லை உற்று நோக்கினால் களைபடைந்த கண்கள் புத்துணர்ச்சி அடையும். நினைவாற்றலை பெருக்கும்.
மரகதத்தின் மருத்துவ குணம்
மரகத கல் வயிற்று கடுப்பை போக்கும். பெண்களுக்கு சுகப்பிரசம் ஆக உதவும். இருதய கோளாறு, ரத்த கொதிப்பு, புற்றுநோய், தலைவலி, நுரையீரல் சம்பந்த பட்ட நோய்களை குணப்படுத்தும்.
யாரெல்லாம் மரகதம் அணியலாம்..?
மிதுனம் மற்றும் கன்னி ராசிக்கு அதிபதி புதன். புதனுக்குரிய ரத்தினம் மரகதம்.
மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் மற்றும் ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர காரர்கள் மரகதம் அணியலாம். எண்கணிதப்படி 5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் பெயர் எண் 5 உடையவர்களும் மரகதம் அணியலாம்
புஷ்பராகம் (topaz)
இந்தகல் நிறமற்றதாகவும், மஞ்சள் நிறத்திலும் காணப்படும். மஞ்சள் நிற புஷ்பராகம் கனக புஷ்பராகம் ஆகும் இதுவே சிறந்தது. இந்த கல்லை அணிந்தால் தோற்றத்தில் ஒரு கம்பீரம் உண்டாகும். துணிச்சல் பிறக்கும். பொருளாதார முன்னேற்றம் கிடைக்கும். திருமணதடை நீங்கும். நின்றுபோன கட்டட வேலைகள் மீண்டும் தொடங்கும்.
கோபம் குறையும், மனம்அமைதியாக இருக்கும். நிலம், வீடு, வாகனம், வாங்கும் நிலை உருவாகும். பெரும் புகழ் கிடைக்கும். பகை, சதி, சூழ்ச்சி ஆகியவற்றில் இருந்து காக்கும். நல்ல நட்பை கொடுக்கும்.
புஷ்பராகத்தின் மருத்துவ குணங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நுரையீரல், இதயம்,குடல் சம்பந்தபட்ட நோய்களில் இருந்து காக்கும். நல்ல செரிமானத்தை கொடுக்கும். மூட்டுவலி,மூட்டு பிடிப்பு ஆகிய வற்றில் இருந்து காக்கும்.உடல் எடையை குறைக்கவும் பயன்படும்.
யாரெல்லாம் புஷ்பராகம் அணியலாம்
தனுசு, மீனம் ஆகிய ராசிகளின் அதிபதியான குரு விற்கு உரிய ரத்தினம் புஷ்பராகம்.
தனுசு, மீன ராசிக்காரர்களும் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர காரர்களும் புஷ்பராகம் அணியலாம். எண்கணித படி 3 ,12, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண்,பெயர் எண் 3 அமைய பெற்றவர்களும் புஷ்பராகம் அணியலாம்
பவழம் (coral)
இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும்.நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
பவழத்தின் மருத்துவ குணங்கள்
ஒவ்வாமை நோய்கள், ரத்த சோகை, மஞ்சள் காமாலை ஆகிய நோய்களுக்கு இக்கல் உகந்தது. ஆரம்ப நிலை கருச்சிதைவை தடுக்கும். பவழத்தை பஸ்பமாக்கி உட்கொண்டால் ரத்த சம்பந்த நோய்களையும், நுரையீரல் நோய்களையும் தடுக்கும். வெள்ளை நிற பவழத்தை புஷ்பராக கல்லுடன் சேர்த்து அணிந்தால் சர்க்கரை நோயை கட்டுபடுத்தும். மலட்டுதன்மையை போக்கும். நரம்பு தளர்ச்சியை குணபடுத்தும். சிவப்பு பவழத்தை ரத்தத்தை தூய்மை செய்ய பயன்படுத்தினர் இந்திய மருத்துவர்கள்.
யாரெல்லாம் பவழம் அணியலாம்
பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசி காரர்களும் ,மிருகசீரிடம்,சித்திரை,அவிட்டம் ஆகிய நட்சத்திர காரர்களும் எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும்,பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.
இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும், துணிச்சலையும் கொடுக்கும். அதிககோபம், பொறாமை, வெறுப்பு, கொலை சிந்தனை ஆகிய தீய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.
சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும். குழந்தைகளை கண்திருஷ்டி யில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.
அடிமை தொழில் செய்துவந்தால் அதிலிருந்து மீண்டு சுய தொழில் செய்யும் வாய்ப்பினை உருவாக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். செல்வந்தர்களின் தொடர்பு கிடைக்கும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் பதவி கிடைக்கும். நிலம் சம்பந்தமான சிக்கல்களை போக்கும்.
நீலம் (sappihire)
ஞானம், சாந்தம், பெருந்தன்மை நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காத்துக்கொள்ள அரசர்கள் இதனை அணிந்தனர். புகழையும் உடல்பலத்தையும் அளிக்கும். போதை பொருளுக்கு அடிமையானவர் நீலத்துடன் மரகத கல்லை சேர்த்து வலக்கையில் அணிந்தால் அப்பழக்கத்தில் இருந்து மீண்டு விடுவர்.
தியானத்திற்க்கு உகந்தது நீலம். நமது மூன்றாவது கண்ணை விழிப்படைய செய்து ஆழ்மனதெளிவை கொடுக்கும். திருமண உறவை மேம்படுததும். பகையை நீக்கி பகைவருடன் ஒத்துபோகசெய்யும். சிறை மீட்டு காப்பாற்றும் சக்தி நீலக்கல்லுக்கு உண்டு. வம்பு வழக்கு, சட்ட சிக்கலில் உள்ளவர்கள் இக்கல்லை அணிந்தால் நல்ல பலன் கிட்டும் நீலகல்லை வலக்கையில் அணியவேண்டும்.
நீலகல்லின் மருத்துவ குணம்
கீல் வாதம், இடுப்புவாதம், நரம்புவலி, வலிப்பு ஆகியவற்றிக்கு நீலம் உகந்தது. பித்த சம்பந்த நோய்களையும், குஷ்ட நோயையும் குணப்படுத்தும். வயிற்று நோயை சரிபடுத்தும். அதிக உடல் பருமனை குறைக்கும். இக்கல்லை நெற்றியில் வைத்து அழுத்தினால் காய்ச்சல் குணமாகும். மூக்கில் இருந்து கசியும் ரத்தம் நிற்கும்.
யாரெல்லாம் நீலம் அணியலாம்
சனி பகவானை அதிபதியாக கொண்ட மகரம், கும்பம் ராசிக்காரர்கள்; மற்றும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காரர்கள்; எண் கணித படி 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், விதிஎண், பெயர் எண் 8 கொண்டவர்களும் நீலம் அணியலாம்.
மேலும் ராகுவின் எண் 4, 13, 22 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் விதி எண் பெயர் எண் 4 கொண்டவர்களும் நீலம் அணியலாம்
கோமேதகம் (hessonits)
புத்திசாலிதனத்தையும், கல்வி மேம்பாட்டினையும் கொடுக்கும். அச்சத்தைபோக்கி தைரியத்தை கொடுக்கும். தம்பதியினரிடையே இணக்கத்தை உண்டாக்கி அமைதியான மகிழ்ச்சியான வாழ்வை தரும். வாக்கு வசியம், வாக்கு சாதுர்யம் உண்டாகும். அரசியல் வாதிகள், கலைஞர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு வெற்றியை தரும்.
உத்தியோக உயர்வை கொடுக்கும், தொழில்வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது. பண வரவை அதிகரிக்கும். லாட்டரி, ரேஸ் ஆகியவற்றில் வெற்றியை கொடுக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனை கொடுக்கும்.
கோமேதகத்தின் மருத்துவ குணங்கள்
கோமேதக பஸ்பம் ஈரல்வலி, குடல்வாதம்,ரத்த புற்று, வெண்குஷ்ட்டம் போன்ற நோய்களை குணப்படுததும். பசியின்மையை போக்கும்.
யாரெல்லாம் கோமேதகம் அணியலாம்..?
திருவாதிரை, சுவாதி,சதய நட்சத்திர காரர்கள். மற்றும் எண்கணித படி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.
எந்த கல்லை எந்த கிழமையில் அணிய ஆரம்பிக்க வேண்டும்..?
ஒவ்வொரு கல்லையும் ஒரு குறிப்பிட்ட தினத்தில்தான் அணிய ஆரம்பிக்க வேண்டும் என சாஸ்திரம் சொல்லுகிறது..!
அதன் படி எந்த கல்லை எந்த தினத்தில் அணிய ஆரம்பிக்க வேண்டும் என்பதை காண்போம்...!
ஞாயிறு : மாணிக்கம், கோமேதகம்
திங்கள் : முத்து, வைடூரியம்
செவ்வாய் : பவழம்
புதன் : மரகதம்
வியாழன்சனி : நீலம்
நவரத்தின கற்களை விட அதிஷ்டமும் நன்மையும் தரக்கூடிய மலிவான கற்களும் தற்பொழுது பாவனையில் உள்ளது.
சந்திர காந்தகற்கள் (moon stone), சூரிய காந்தகற்கள்( sun stone)
சந்திர காந்த கற்கள்
இதை அணிவோர்க்கு மன பலம் அதிகமாகும். பொருள்வரவு தடையின்றி கிடைக்கும்.கல்வியில் கவனம் இல்லாத மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை தூண்டும். ஜலகண்டதில் இருந்து காக்கும். நிம்மதியான தூக்கத்தை கொடுக்கும்.
மருத்துவ குணங்கள்
தாம்பத்ய வாழ்வில் பிரச்சனைகள் மற்றும் இருதய கோளாறுகளை போக்கும்.வயிற்று பிரச்சனைகளை நீக்கும். குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். மனநிலை பாதிப்பு மூளை கோளறு ஆகியவற்றை சரி செய்யும்.
யாரெல்லாம் அணியலாம் ..?
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்த சந்திர ஆதிக்கம் பெற்றவர்கள் அணியலாம். 7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்த கேது ஆதிக்கம் பெற்றவர்களும் அணியலாம்.முத்து மற்றும் வைடூரியத்திற்க்கு மாற்றாகவும் அணியலாம்.
சூரிய காந்த கற்கள்
இந்த கல்லை அணிவதால் திடீர் முன்னேற்றம் உண்டாகும். துரதிஷ்ட்டங்கள் விலகி அதிஷ்ட்டம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். அரசு சம்பந்தமான தடைகள் நீங்கும்.
யாரெல்லாம் அணியலாம் ..?
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் மற்றும் சிம்ம ராசி, சிம்ம லக்கினம் கொண்டவர்கள் இக்கல்லை அணியலாம் . மாணிக்க கல்லுக்கு மாற்றாகவும் இக்கல்லை அணிந்து பலன் பெறலாம்.
நவரத்தினங்கள் பதித்த மோதிரங்கள்--- யார், எப்படி அணியவேண்டும்...? ஒரு கண்ணோட்டம்
செவ்வாய் ஆதிக்கம் உள்ளவர்கள்தான் நவரத்தினம் அணிய வேண்டும் என்பது பெரும்பான்மையினர் கருத்து. மேலும் நவரத்தினங்களை வாங்கி சில நாட்கள் தன்னுடன் வைத்திருந்து பரீட்சித்து பார்த்து அணிந்து கொள்வது நலம். நவரத்தின மோதிரம் அணிந்து சிலருக்கு காய்ச்சல், தலைவலி ஏற்படலாம். பொதுவாக ஓபன் செட்டிங்கில் அணிவது பலன்தரும். தங்கத்தில் மட்டுமே பதித்து அணிய வேண்டும். இரத்தின நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் வாங்குவது நல்லது.
பதிக்கும் முறை
மோதிரத்தின் நடுவில் சூரியனுக்குரிய மாணிக்கத்தை வைத்து அதன் கிழக்குபக்கம் வைரம் பதிக்க வேண்டும். பிறகு கடிகார சுற்றுபடி முத்து, பவளம், கோமேதகம், நீலம், வைடூரியம், புஷ்பராகம் மரகதம் ஆகியவற்றை வரிசையாய் பதிக்க வேண்டும்.
நவரத்தினங்கள் தரும் நற்பலன்கள்
நவரத்தின 9-கற்கள் பதித்த மோதிரம் ஒருவருக்கு பொருந்திவிட்டால் அவர் மிக சிறந்த அதிஷ்ட சாலிதான். பெரும் சாதனைகள் படைக்கலாம். எதிலும் வெற்றிகிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, புகழ், செல்வாக்கு அனைத்தும் கிடைக்கும். போடும் திட்டங்கள் எல்லாம் சரியானதாக இருக்கும். உழைப்பிற்க்கு முழுமையான வெற்றி கிடைக்கும்.
யாரெல்லாம் நவரத்தின மோதிரம் அணியலாம் ...?
மேஷ ராசி, மேஷ லக்னம் மற்றும் விருச்சிக ராசி, விருச்சிக லக்னகாரர்கள்
மிருகசீரிஷம், அவிட்டம், சித்திரை ஆகிய செவ்வாயின் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அணியலாம். ஜாதகத்தில் செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருந்தாலும் அணியலாம் .
எண் கணித படி 9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், பிறந்த தேதியின் கூட்டு எண் 9 வருபவர்களும் அணியலாம்.
பிறவி எண் 2, 7 கொண்டவர்கள் நவரத்தின மோதிரம் அணிய கூடாது. வேறு எந்த வகையிலாவது நவரத்தின மோதியம் அணியலாம் என்ற நிலை இருப்பின் ரத்தினங்களை வாங்கி தன்னுடன் வைத்திருந்து சோதித்து பார்த்துதான் அணிய வேண்டும்.
அதிர்ஷ்ட கற்களுக்கான உலோகங்களும், அணிய வேண்டிய விரல்களும்...!
மாணிக்கம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல்
முத்து : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல், மோதிர விரல்
புஷ்பராகம், கனக புஷ்பராகம் : இணைக்கும் உலோகம் - தங்கம்
அணிய வேண்டிய விரல் - ஆள்காட்டி விரல்
கோமேதகம் : இணைக்கும் உலோகம் - வெள்ளி அல்லது தங்கம்
அணிய வேண்டிய விரல் - மோதிர விரல், நடு விரல்
மரகதம் : இணைக்கும் உலோகம் - தங்கம் அல்லது வெள்ளி
அணிய வேண்டிய விரல் - சுண்டு விரல், மோதிர விரல்
உங்களின் தொழிலுக்கேற்ற அதிஷ்ட இரத்தினம் எது..?
ஒருவர் தான் செய்யும் தொழிலுக்கேற்ற அதிர்ஷ்ட ரத்தினத்தை அணிந்தால் பெரிய அளவில் வெற்றி பெறலாம். ரத்தினங்களானது தொழில்,அல்லது வியாபார மந்த நிலையை போக்கி சிறப்பான முன்னேற்றத்தை கொடுக்கும்.
எந்த கல் எந்த தொழிலுக்கு ஏற்றது என்பதை காண்போம்.
புஷ்பராகம் : கல்வித்துறை. கலைத்துறை, எழுத்து துறை, பொருளாதார துறை, சமய துறை, அற நிலைய துறை
வைரம் : விவசாயம், நிர்வாகம், கோழிப்பண்ணை, பால் பண்ணை, பழ மரங்கள் பயிரிடுவோர்
கோமேதகம் : ஜோதிடர், கைரேகை நிபுணர், அரசியல் விமர்சகர் : புஷ்பராகம்
வெள்ளி : வைரம்
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!


குழந்தைகள் நன்றாக படிப்பதற்குரிய பரிகாரம் !!!


குழந்தைகள் நன்றாக படிக்கவில்லையென்ற வருத்தம் பெற்றோர் பலருக்கும் இருக்கும். தன் குழந்தை நன்றாக படிக்கவில்லையே என்று பலரிடமும் புலம்பி தீர்ப்பார்கள் குழப்பத்தில் தவிப்பார்கள். சில குழந்தைகளுக்கு படித்தது நினைவில் இருந்தாலும் பரீட்சையில் மறந்து விடும். பாடங்களை உணர்ந்து படித்தாலும் மனதில் ஏறாது. சிலருக்கு ஜாதக தோஷ குறைப்பாட்டினால் இவ்வாறு இருக்கலாம்.பரீட்சைக்கு சென்றவுடன் மறந்துவிடும். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை. படித்தது நினைவில் இல்லாமல் கவலைப்படும் குழந்தைகளுக்கு எளிய பரிகாரம் உள்ளது.

இப்படிப்பட்டவர்கள் மாலை நேரத்தில் படிக்கும்போது வீட்டு பூஜையறையில் விளக்கில் சிறிது தேங்காய் எண்ணெய் மட்டும் விட்டு விளக்கேற்றி சுவாமிக்கு பூஜை செய்துவிட்டு கல்விக்கடவுளான சரஸ்வதியையோ, ஹயக்ரீவரையோ வணங்கி ஒரிரு மணி நேரம் விளக்கை எரிய வைத்துவிட்டு படித்தால் குழந்தைகளின் படிப்பு சிறக்கும். படித்தவை மனதில் தங்கும் பரீட்சையில் வெற்றி கிடைக்கும். விளக்கில் இருந்து வரும் நல்ல அதிர்வலைகள் நம் மூளையை சுறுசுறுப்பாக்கி இருக்கும் இடத்தையும் சுபிட்சமாக வைத்து நாம் படிப்பதை மனதில் எளிதாக பதியவைத்து படிக்கும் விஷயத்தை எளிதாக்குவது இதன் தத்துவம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

திருமணமாகாதவர்களுக்கு அமாவாசை பரிகாரமுறை !!!


திருமணமாகாதவர்களுக்கு அமாவாசை பரிகாரமுறை !!!


திருமணம் ஆகாத ஆண்களுக்கு : 

அமாவாசையன்று(அல்லது மாதம் தோறும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்) இந்த பரிகாரத்தை செய்தால் மிகவும் சிறப்பு, திருமணமாகாத ஆண்கள் அமாவாசையன்று காலை 11 மணியில் இருந்து 12 மணிக்குள் அருகில் உள்ள சிவாலயத்திற்க்கு சென்று அங்கு உள்ள நாகலிங்கத்தின் மேல் சந்தனம் பூசி, பூமாலை அணிவித்து நாகலிங்கத்திற்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் . அமாவாசையன்று இந்த வழிபாட்டை மேற்கொண்டால் மிகவும் சிறப்பு.

திருமணமாகாத பெண்களுக்கு:

பெண்கள் வெள்ளிக்கிழமை ராகுகால நேரமான 10.30 மணியில் இருந்து 12 மணிவரை அருகில் உள்ள சிவாலயத்தில் உள்ள வில்வமரத்தடியில் சுத்தம் செய்து அந்த இடத்தில் மஞ்சள் கலந்த நீரை தெளித்து எட்டுவகையான கோலம் இட்டு, கோலத்தின்மேல் எட்டு நெய்விளக்கேற்றி, மரத்திற்கு பூமாலை சாற்றி பூஜை செய்து வழிபட்டு வந்தால் விரைவில் திருமணம் கை கூடும் என்பது நம்பிக்கை. நாளை அமாவாசை அன்று செய்தால் மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அல்லது மாதம்தோறும் வரும் அமாவாசைகளில் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!


பிரிந்த கணவணுடன் சேர்வதற்கு உதவும் பரிகாரம் !!!


பெண்கள் நன்றாக குளித்துவிட்டு முதலில் குங்குமம் நெற்றியில் இட்டுக்கொள்ளவேண்டும் தட்டு ஒன்றில் கொஞ்சம் குங்குமத்தை பரப்பிக்கொள்ளவேண்டும், அதில் தன் கணவரின் பெயரை எழுதி கொள்ள வேண்டும் கீழ்க்காணும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்துவரவேண்டும். 

த்ரை லோக்ய மோகனா ரங்கே
த்ரை லோக்ய பரி பூஜிதே
த்ரை லோக்ய வஸீதே தேவீ
த்ரை லோக்ய மே வஸம் குரு

இந்த மந்திரத்தை பூஜை செய்து முடித்ததும் அந்த தட்டுக்கு பூஜை செய்ய வேண்டும். அதற்க்கு தீபாராதனை செய்ய வேண்டும். பிறகு பூஜை செய்யப்பட்ட குங்குமத்திலிருந்து பொட்டு இட்டுக் கொள்ள வேண்டும்

மறுநாளும் இதேபோல் அந்த தட்டில் உள்ள குங்குமத்தில் கணவரின் பெயரை எழுதி, அதே சுலோகத்தை 108 முறை ஜபித்து தட்டுக்கு பூஜை செய்து, அந்தகுங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளவேண்டும்.(மாதவிலக்கு காலத்தில் 4 நாட்கள் வரை பூஜிக்க வேண்டாம்). கணவருடன் சேரும் வரை தினமும் தொடர்ந்து இந்த பரிகார வழிபாட்டை விடாமல் மேற்கொள்ள வேண்டும்

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தன ஆகர்ஷணம் தரும் முத்து சங்கு:


தன ஆகர்ஷணம் தரும் முத்து சங்கு:
ஸ்ரீ சந்திர பகவானின் ஆகர்ஷண சக்தி கொண்டது இது.
ஜாதகத்தில் சந்திரனின் தோஷத்தால் மனகுழப்பம்,தாய் பிள்ளைகள் உறவில் விரிசல்,வியாபார விருத்தியின்மை உண்டாகும்.
தொழில் வியாபார பிரச்சினைகள் தீர்ந்து வியாபாரம் விருத்தியாக,பண வரவு உண்டாக,குடும்ப பிரச்சினைகள் தீர அபூர்வமாக கிடைக்கும் முத்து சங்கை பூசையறை மற்றும் தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வழிபட பலன் கிட்டும்.
மேலும் கடல் கடந்து வெளிநாட்டு வணிகம்,வியாபாரம் செய்பவர்களுக்கும் சிறப்பான பலனை தரும்.
குறிப்பாக தன (பணம்) ஆகர்ஷணம் செய்யும் வல்லமை கொண்டது முத்து சங்கு.
முத்து சங்கு தேவைக்கு அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தடைகள் விலக பரிகாரம்:


தடைகள் விலக பரிகாரம்:
சிலருக்கு எடுத்த காரியம் எல்லாம் தடை தடங்கல்கள் ஏற்பட்டு அக்காரியம் நடைபெறாமல் நின்று விடும்.அதற்கு ஞாயிற்றுக் கிழமையன்று காலை நேரத்தில்,அரச மரத்தடியில் வீற்றிருக்கும் வினாயகருக்கு,
9 வெள்ளெருக்கு பூக்களை சமர்த்துப் பித்து,2 நெய் விளக்கு ஏற்றி,வினாயகர் முன் அமர்ந்து "கணபதியே,எனக்கு ஏற்பட்டுள்ள தடை தடங்கல்களை நீக்கி அருள் புரிய வேண்டுகின்றேன்" என்று 9 முறை கூறி வழிபட தடை தடங்கல்கள் விலகி விடும்.இதேபோல் 9 நாட்கள் தொடர்ந்து வழிபட வேண்டும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


குடிப் பழக்கத்தை நிறுத்த,"தேவிஸ் பஸ்பா பொடி":


குடிப் பழக்கத்தை நிறுத்த,"தேவிஸ் பஸ்பா பொடி":
குடி குடியை கெடுக்கும் என்பதற்கு ஏற்ப இன்றைய சூழலில் 100 க்கு 90 சதவீதம் ஆண்கள் மது பழக்கத்திற்க்கு அடிமையாகி உள்ளனர்.தன் உடல்நிலையை கெடுப்பதோடு மட்டுமல்லாமல் குடும்பத்தையும்,பொருளாதரத்தையும் சீரழிக்கின்றனர்.எத்தனையோ குடும்பங்கள் அழிந்து விட்டது,சீரழிந்து கொண்டு இருக்கிறது.இதற்கு பண்டைய காலத்தில் நமது சித்தர் பெருமக்கள் அருளிய அற்புதமான மூலிகைகளை கொண்டு பஸ்பம் செய்து,குடிப்பவருக்கு தெரியாமல் உணவில் கலந்து,15 நாட்களுக்கு கொடுத்தார்கள்.அதன்படி குடியை முற்றிலும் மறந்து விட்டார்கள்.அவர்கள் அருளிய முறைப்படி தயாரித்தது,இந்த "தேவிஸ் பஸ்பா பொடி".
இந்த பொடியை குடிப்பவருக்கு தெரியாமல் உணவில் அல்லது தண்ணீரில் கலந்து,15 நாட்களுக்கு கொடுக்க,குடியை முற்றிலும் மறந்து,அந்த நினைப்பே இல்லாமல் மாறி விடுவார்கள்.பின் விளைவுகள் அற்றது.பலர் வாங்கி பயன்படுத்தி பயன் அடைந்துள்ளார்கள்.
குடிப் பழக்கத்தை நிறுத்தும்,"தேவிஸ் பஸ்பா பொடி" கிடைக்கும்.தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்: 7598758989

பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பரிகாரம்:


பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களுக்கு பரிகாரம்:
பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களும்,காதல் திருமணம் செய்தவர்களும் தம்பதிக்குள் சகிதம் ஏற்பட திருப்பரங்குன்றம் முருகன் சன்னதிக்கு சென்று வணங்கி வரலாம்.
கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் மயில் இறகை,முருகன் படத்தின் முன்பு வைத்து வணங்கி வர வேண்டும்.அதாவது தினசரி காலையில் பூசை செய்யும்போது மயில் இறகை கையில் வைத்துக் கொண்டு,"முருகப் பெருமானே எங்களது மணவாழ்க்கையில் எவ்வித இடையூறுகளும்,இடர்பாடுகளும் வராமல் காத்து அருள் புரிய வேண்டுகிறேன்" என்று சொல்லி வணங்கிட வேண்டும்.குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்தவர்களும்,பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தவர்களும் இவ்வாறு வணங்கி வர குடும்பத்தில் குழப்பம் வராது.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Saturday, February 18, 2017

கண் திருஷ்டி நீங்க

கண் திருஷ்டி நீங்க கிராமங்களில் செய்யப்படும் எளிய பரிகாரங்கள்
கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
இல்லாதவன் இருப்பவனை பார்த்து பெருமூச்சு விடுவதும்..ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும்...கிராமங்களில் இதனை எப்படி கழிக்கிறார்கள் என பார்ப்போம்..
சிலர் கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்..பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்...குழந்தை அழாமல் தூங்கி விடும்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பெளர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்...செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்...
மூன்று வயது குழந்தை வரை கன்னத்தில் கறுப்பு பொட்டு வைத்துவிடுவர்..இதுவும் கெட்ட கண் பார்வையை தடுக்கும்...நாமும் வெளியே செல்லும்போது கறுப்பு பொட்டு சிறிது வைக்கலாம்.. அந்த கறுப்பு பொட்டு ஹோம குண்டத்தில் எடுக்கப்பட்ட சாம்பலாக இருக்க வேண்டும். அதனை நெய்யில் கலந்து இட்டுக்கொள்ள வேண்டும்...வீட்டு நிலையில் வெள்ளி தோறும் மஞ்சள் சிறிது பூசி குங்குமம் இடவேண்டும்.. இது நோய்கிருமிகளை அண்டாமல் பாதுகாப்பது மட்டுமில்லாமல் கண் திருஷ்டியையும் போக்கும்....
கண் திருஷ்டி நீங்க யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

இராஜ வசிய திலகம்



இராஜ வசிய திலகம்
கோரோசனை என்பது பசுமாட்டின் வயிற்றில் இருந்து எடுக்கும்ஒருவித பொருள். 
இந்த கோரோசனையை -வெள்ளிக்கிழமை,ஞாயிற்றுக்கிழமைகளில்- தேனிலும்
திங்கள்-வியாழக்கிழமைகளில் நெய்யிலும்,
செவ்வாய்-பதன் கிழமைகளில் பலிலும்,
சனிக்கிழமைகளில் தயிரிலும் இழைத்து நெற்றியில் திலகமிட்டுச் செல்ல தேவர் முதல் யாவரும் வசியமாகி வணங்குவார்கள்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

குறிசொல்லும் "மை"


குறிசொல்லும் "மை"
கருஞ்சீலை, நின்றிடம்தீய்ந்த மூலி, ஆடையொட்டி வேரு ஆகியவற்றை ஐங்கோலத் தைலம் விட்டு மைபோல அரைத்து ஆஞ்சநேயரை தியானம் செய்து அந்த மையினை நெற்றியிலிட்டு அஞ்சனாதேவி புத்திரா! வாயுமைந்தா! வல்லபா" அனுமந்தா! ராமதூதா! நீ வந்து குறி சொல்லு ' என்று மந்திரம் கூறி மையை திலகமிட முக்காலத்தையும் குறி சொல்லலாம்.
  உன்னிடம் குறிகேட்பவர்கள் உன்னை புகழ்ந்து பேசுவார்கள்..இதற்கு ஆஞ்சனேயர் யந்திரம் கண்டிப்பாக வைத்து வழிபட வேண்டும்.
குறி சொல்லும் மை மற்றும் ஆஞ்சனேயர் யந்திரத் தகடு கிடைக்கும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Tuesday, February 14, 2017

காதலில் வெற்றி பெற மற்றும் சுகமான தாம்பத்திய வாழ்க்கைக்கு:

காதலில் வெற்றி பெற மற்றும் சுகமான தாம்பத்திய வாழ்க்கைக்கு:
வலது கை கட்டை விரலில் வெள்ளியிலான எந்த உருவங்களும் பதிக்காத வெள்ளி மோதிரத்தை மேற்கண்ட தேவைகள் உள்ள ஆண் பெண் அணிந்து வர நியாயமான காதலில் வெற்றி மற்றும் கணவன் மனைவி இடையே அன்னியோன்யம் ஏற்படும்.சுகமான திருமண வாழ்வு தரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தெய்வ தோஷம்:

தெய்வ தோஷம்:
நமது குடும்பத்தில்,இல்லங்களில் தலைமுறை தலைமுறையாக பூஜித்து வந்த குலதெய்வம்,தெய்வ படங்கள்,தெய்வ சிலைகள்,தெய்வீக யந்திரங்கள் இவற்றை சரிவர பூஜிக்காமால் விடுவது அல்லது அலட்சியப் படுத்துவது போன்ற காரணங்களாலக தெய்வ தோஷம் உண்டாகிறது.
தெய்வ தோஷம் ஒரு வீட்டில் உண்டானால் அந்த வீட்டில் எவ்வளவு சம்பாத்தித்தாலும் பணம் தாங்காது,தொடர்ந்து வீண் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்,வம்பு வழக்குகள் விபத்துக்கள் உண்டாகும்,மருத்துவ செலவுகள்,உறவுகள் பகையாக மாறுதல்,சதாகாலமும் பிரச்சினைகள் உண்டாகும்.மேலும் கணவன் மனைவி உறவில் விரிசல்,தாம்பத்தியத்தில் வெறுப்பு முதலிய தொல்லைகளை அந்த வீட்டில் ஏற்படுத்தும்.
தெய்வ தோஷம் இருப்பவர்கள் சரியான பரிகாரங்களை செய்து கொள்ளுவதன் மூலம் மேற்கண்ட பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு நல்ல வாழ்வினை பெறலாம்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தடைகள் விலக தாந்த்ரீக முறை:

தடைகள் விலக தாந்த்ரீக முறை:
இதை வியாழக் கிழமையன்று காலை 6-7,மதியம் 1-2,அல்லது இரவு 8-9 மணிக்குள் மட்டுமே செய்ய வேண்டும்.ஆகாச தாமரை மூலிகையை முறைப்படி பிடுங்கி வந்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து வெளியில் தெரியாதபடி முடிந்து வீட்டின் வடகிழக்கு மூலையில் மாட்டி வைக்க,தடைகள் தடங்கல்கள் விலகும்.இதை எவரும் தொடாதபடி பார்த்துக் கொள்ளவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:


தகாத உறவால் குடும்பத்தில் உண்டான குழப்பம்:
ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையிலிருந்து பெண் ஒருத்தி,என்னை தொடர்பு கொண்டால்,மணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் தன் கணவர் தன்னை விட்டு பிரிந்து,வேறு பெண்ணுடன் இருப்பதாகவும்,மிகுந்த மன வேதனையில் இருப்பதாகவும் கூறினாள்.நான் இருவர் பெயரையும் பூசையில் வைத்து அம்பாளிடம் கேட்டதற்கு,அவருக்கு வசிய இடுமருந்து கொடுக்கப்பட்டு சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும்,மேலும் சிலவிஷயங்களையும் சொன்னாள்.அந்த பெண்ணோட கணவருக்கு வசிய இடு மருந்தை முறிக்க முறிவு மருந்து உணவுடன் 15 நாட்கள் முதலில் கொடுக்கப்பட்டது இதற்கு அவர் அலுவலக நண்பர்கள் உதவினார்கள்.வசிய மருந்து முறிய முறிய சுயநினைவுக்கு வந்து தன் மனைவியை தேடி வந்தார்.அவரோட கள்ளக் காதலியை அவரிடமிருந்து பிரிக்க நான் சொன்ன முறைப்படி கொடுத்த பொருட்களை அவர் மனைவி செய்து முடித்தார்.அதேபோல் 35 நாட்களுக்குள் பிரிவினை உண்டானது.இன்று கணவன் மனைவி இருவரும் சேர்ந்து என்னிடம் வந்தார்கள்.அந்த பெண்ணோட முகத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தக் கண்ணீரும் வெளிப்பட்டது.எனக்கும் அளவில்லாத ஆனந்தம் உண்டானது.
எல்லாத்துக்கும் நம் அன்னையே துணை.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கோழிக் கடை,கறிக் கடை,அசைவ உணவகங்களில் தொழில் சிறக்க:


கோழிக் கடை,கறிக் கடை,அசைவ உணவகங்களில் தொழில் சிறக்க:
கோழிக் கடை,பிராய்லர் சிக்கன் கறி கடை,ஆடு வெட்டும் கறிக் கடை,அசைவ உணவகம் இவைகளில் வியாபாரம் சிறப்பாக நடக்க,மதுரை வீரன் மூலிகையை முறைப்படி எடுத்து கருக்கி சவ்வாது,அரகஜா சேர்த்து மை செய்து உருவேற்ற வேண்டும்.இதோடு மதுரை வீரன் சக்கரத்தை செம்புத் தகட்டில் கீறி பூஜித்து,மந்திர உருவேற்ற வேண்டும்.
பூஜித்த மதுரை வீரன் யந்திரம் மற்றும் மை இவற்றை சிக்கன் ஸ்டால்,மட்டன் ஸ்டால் அசைவ ஹோட்டல் இந்த தொழில் ஸ்தாபனங்களில் வைத்து வியாபாரம் செய்ய,எவ்வித எதிர்ப்பும்,முடக்கமும் இல்லாமல் தொழில் சிறப்பாக நடக்கும்.லாபம் அதிகரிக்கும்,வாடிக்கையாளர்கள் வருகை அதிகரிக்கும்.
சக்தியூட்டிய மதுரை வீரன் யந்திரத் தகடு மற்றும் மை கிடைக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989