Friday, October 20, 2017

குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்


குழந்தைகள் நன்றாகப் படிக்க பெற்றோர் ஜெபிக்க வேண்டிய கணபதி மந்திரம்

ஓம் கம் கணபதயே நமஹ மம புத்ரஸ்ய புத்தி தேஹி தேஹி ஹூம் பட்


வளர்பிறை புதன்கிழமை அன்று தொடங்கி ஒவ்வொரு புதன்கிழமையும் இம்மந்திரத்தை 108 தடவை ஜெபித்து வரவும்.

கிழக்கு பார்த்து ஜெபிக்கவும்.

ஒவ்வொரு தடவை மந்திரம் ஜெபிக்கும் பொழுதும் அருகம்புல்லால் கணபதி படம் அல்லது சிலைக்கு அர்ச்சிக்கவும்.

என் மகன் / மகள் (உங்கள் குழந்தையின் பெயர் குறிப்பிடவும்) கல்வி வளர்ச்சிக்காக இந்த மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சங்கல்பம் செய்து கொண்டு ஜெபிக்க ஆரம்பிக்கவும் .

வெற்றிலை,பாக்கு,அவல்,பொரிகடலை,பால்,பழம் படைக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

பன்னிரண்டு முக ருத்ராட்சம்(துவாதச ருத்ராட்சம்):


பன்னிரண்டு முக ருத்ராட்சம்(துவாதச ருத்ராட்சம்): 
இந்த ருத்ராட்சம் சூரியக் கடவுளைக் குறிக்கும்.இதை அணிவோர் அளவற்ற நிர்வாகத் திறனைப் பெறுவர்.இக்குணங்களால் ஒருவர் என்றும் பிரகாசிக்கும் ஒளியுடனும் பலத்துடன்,பிறரை ஆட்சி செய்து வருவர்.இந்த பன்னிரண்டு முக ருத்ராட்சத்தை மந்திரிகள்,அரசியல்வாதிகள்,ஆட்சியாளர்கள்,வணிகர்கள்,நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள்,ஆன்மீகப் பலம் வேண்டுவோர் போன்றவர்கள் அணிய வெற்றி மேல் வெற்றியும்,ஆளும் திறமையும் கிட்டும். இது வியத்தக்க வகையில் பலனளிக்க வல்லது."ஓம் நமசிவய" ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

பண வரத்து பெருக பரிகாரம்


பண வரத்து பெருக பரிகாரம்: ஒவ்வொரு மாதமும் வரும் பரணி நட்சத்திரத்தன்று முடிந்தளவு,சர்க்கரை மற்றும் கல்உப்பு வாங்கி வீட்டில் வைக்க பண வரத்து பெருகும். ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Saturday, October 14, 2017

குல தெய்வத்தை வசியம் செய்யும் முறை


குல தெய்வத்தை வசியம் செய்யும் முறை
குல தெய்வம் வசியம் செய்ய ஒரு பௌர்ணமி நாளில் கரு மஞ்சள் செடிக்கு காப்பு கட்டி அந்த மஞ்சளை எடுத்து அரைத்து அதனுடன் ...

ஜவ்வாது
அத்தர்
அரகஜா
புனுகு
ஜாதிக்காய்
ஜாதி பத்திரி
வெட்டிவேர்
பச்சை கற்பூரம்

அதனுடன் சித்தாமணக்கு எண்ணெய் விட்டு பதம் வரும் வரைக்கும் நன்றாக 2 ஜாமம் வரைக்கும் அரைக்க வேண்டும்



இந்த மையை காந்தம் ஒட்டாத டப்பியில் பதனம் செய்து வைக்க வேண்டும் பூஜையின் போது குல தெய்வத்திற்கு ஒரு வாழை இலை போட்டு அதன் மேல் ஒரு செப்பு தகடு வைத்து அதன் மேல் கருப்பு மஞ்சள் மூன்று எடுத்து வைத்து அதில் மேற்கண்ட அஞ்சனத்தை மஞ்சள் மேல் தடவி பூஜைக்கு தேவையான படையலை படைத்து கொண்டு மந்திரம் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும் .
குல தெய்வ வசிய மந்திரம்

ஓம் ஸ்ரீம் அம் உம் வம் லம் சிங்
ஐயும் கிலியும் சவ்வும் ஜம் ஜம்
பம் யம் ரம் மஹா (குலதெய்வத்தின் பெயர் )
சர்வ தனமே சர்வ ஜனமே வா வா வசி வசி ஹூம்பட் நமக .

குல தெய்வம் வசியம் செய்ய ஞாயிற்றுக்கிழமை உகந்தது இதற்கு யந்திரங்கள் எதுவும் கிடையாது இந்த கருமஞ்சள் மற்றும் மேற்கண்ட அஞ்சனம் போதுமானது இதனால் குடும்ப ஒற்றுமை மேலோங்கும் நெடுநாட்களாக நினைத்த காரியங்கள் நடக்காமல் தடைபட்டு வந்தால் குல தெய்வத்தின் அருளால் சகலமும் தடைகள் விலகி நல்ல வாழ்க்கை அமையும்

நம்மில் பலர் பல தெய்வங்களை வழிபாடு செய்து வருவார்கள். அவ்வாறு செய்வது தவறில்லை. அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் ஆகாது. அவை இஷ்ட தெய்வங்கள் அல்லது இஷ்ட தேவதைகள் எனப்படும். இஷ்ட தெய்வமும் குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் கூட குலதெய்வத்திற்கு கீழே தான். மற்ற தெய்வங்களும் குலதெய்வத்தின் அனுமதி பெற்றே அருளினை வழங்க முடியும்.

நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது.

இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும் காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குலதெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களை எளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்த வரலாறும் உண்டு.

குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு.

குலதெய்வமே தெரியாமல் பல குடும்பங்கள் பலவித இன்னல்களை அனுபவித்து வருகின்றன. குலதெய்வம் தெரியாமல் எந்த பூசைகள், வழிபாடுகள், பரிகாரங்கள் மற்றும் மந்திர செபங்கள் செய்தாலும் பலனில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எப்பாடுபட்டாவது குலதெய்வத்தினை கண்டறிந்து அதற்குரிய வழிபாட்டினை செய்து வரவேண்டும்.

நமது முன்னோர்கள் நமது குலதெய்வத்தினை வருடத்தின் ஒரு குறிப்பிட்ட நாளில் அவரவர் சொந்த பந்தங்கள், உறவினர்கள் மற்றும் பங்காளிகள் இவர்களுடன் ஒன்று சேர்ந்து கூட்டு வழிபாடு நடத்தி நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையின் இன்னல்கள் வந்தாலும் அவை வெகு நாட்கள் நீடிப்பதில்லை. குலதெய்வத்தின் அருளால் அவை சூரியனைக் கண்ட பனி போல் விலகி விடும்.

குல தெய்வத்தை வசியம் அஞ்சனம் கிடைக்கும் .

தித்திக்கும் தீப ஒளி திருநாள் பரிகாரங்கள் !!!

தித்திக்கும் தீப ஒளி திருநாள் பரிகாரங்கள் !!!
தீப ஒளி திருநாள் மஹாலக்ஷ்மி தாயாரின் நாள் என்றே கூறலாம். இந்த நாளில் தீபங்கள் ஏற்றி தாயாரை வழிபட்டு பசுக்களுக்கு மஞ்சள் நிற லட்டு மற்றும் மஞ்சள் வாழை பழம் கொடுத்து வர நம் குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். தீப ஒளி திருநாளில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே உங்களுக்காக அளிக்கிறேன்.
தீப ஒளி திருநாளில் புதியதுடைபத்தில் வீட்டை பெருக்கி சுத்தம் செய்வது மிகுந்த நன்மை தரும்-வறுமையை நீக்கும்.
மஹாலக்ஷ்மி / பெருமாள் கோவிலுக்கு புதிய துடைப்பம் மற்றும் வாசனை ஊதுவத்திகள் இந்நாளில் தானம் செய்யவும்.
கொட்டை பாக்கு ஒன்றை சிகப்பு நூலால் கட்டி லக்ஷ்மி தேவியின் படத்தில் மாலையாக இட்டு வழிபட்டு பின் அடுத்த நாள் அதை எடுத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து வர, செல்வ நிலை ஓங்கும்.
வியாபாரத்தில் உள்ளோர் / தொழில் செய்வோர் கண்டிப்பாக இந்நாளில் தொழில் செய்யும் இடத்திற்கு பூஜைகள் செய்து வழிபட வேண்டும்.
இந்நாளில் அனுமனை வழிபடுவது சிறப்பு- அனுமனுக்கு ஒரு மண் அகலில் எண்னை விளக்கேற்றி அதில் ஒரு கிராம்பு இட்டு வழிபடுவது நன்மை தரும்.
திருமணமான பெண்களுக்கு இந்நாளில் அழகு பொருட்கள் (முக பவுடர், லிப்ஸ்டிக் போன்றவை) தானம் செய்யவும்.
அதிகாலை ஸ்நானம் (குளியல்) நீரில் சிறிது பால் கலந்து குளிக்கவும்.
பூஜையில் மஞ்சள் கட்டைகளையும் வைத்து பூஜித்து பின்பு அவற்றை பண பெட்டியில் வைத்திருக்கவும்.
அசோக மரத்து இலைகளால் வீட்டின் முன் வாசலை அலங்கரிக்கவும்-மாமரத்து இலைகளையும் சேர்த்து கொள்ளலாம்.
கோமதி சக்கரத்தை கண்டிப்பாக தீப ஒளி நாள் வழிபாட்டில் சேர்த்து கொள்ளவும்.
குபேர மந்திரத்தை 108 முறை கூறி வழிபட்டு வரவும்.
ஏழு முக ருத்திராட்சம் இந்நாளில் அணிய பணவரத்து இரட்டிப்பாகும்.
தீப ஒளி நாள் இரவு அரச மரத்திற்க்கு அடியில் விளக்கேற்றி வைத்து பின்பு திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும்.தீப ஒளி நாள் காலையில் மரத்திற்க்கு நீர் ஊற்றவும்.
தீப ஒளி நாள் பூஜையில் அரிசியின் மேல் தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து வழிபடவும்.
அனைவருக்கும் தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்-அசைவம் தவிர்த்து அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்து இறை வழிபாட்டுடன் இந்நாளை இனிதே கொண்டாடி மகிழ்வீராக !!
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Friday, October 13, 2017

குழந்தைப் பேறில்லதவர்களூக்கு


குழந்தைப் பேறில்லதவர்களூக்கு
திருமணம் ஆகி புத்திரபாக்கியம் இல்லாமல் அவதிபடுவோருக்கு ஒரு எளிய பூஜை முறை இதை குரு முகமாக செய்திடவும் முதலில் ஒரு ஹோம குண்டத்தினை பயன்படுத்திட வேண்டும் .பூஜை செய்பவர் கிழக்கு முகமாய் அமர்ந்து செய்திட வோண்டும் பிறகு ஹோம குண்டத்தில் கருங்கலி,நாவல், மர குச்சிகளை கொண்டு ஹோம குண்டத்தில் தீயை வளர்க்க வோண்டும். பிறகு அக்கினியின் மூலமந்திரத்தை. உச்சரிக்க வேண்டும் .தீ நன்கு எரிய துவங்கிய பின்னர் புவனையின். மந்திரத்தை செல்லி பசும்பால், சந்தனம்,தேன், கலந்த கலவையினை நெருப்பில் விட வோண்டும் .பிறகு புவனையின் மந்திரத்தை செல்லி பூஜையை நிறைவு செய்யவும் பிறகு பாலரிஷ்ட மந்திரத்தை செபித்து உச்சரித்து (தேனை) மந்திரித்து குழந்தை இல்ல தம்பதியருக்கு கொடுக்க வேண்டும் அதை தம்பதியின் மனைவி மாத விலக்கு முடிந்து தலை முழூகிய பின்னர் உண்ணக் கெடுத்து கணவன் உடன் இல்லறத்தில் ஈடுபட்டு வர கருதரிக்கும் குழந்தை உண்டாகும்.


ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

மூலிகை தன வசிய விபூதி


மூலிகை தன வசிய விபூதி
வெள்ளருகு.குப்பைமேனி.கீழ்காய்நெல்லி.திருநிற்றுபச்சிலை.ஆகிய மூலிகையை.நாள் நட்ஷத்திரம் பார்த்து சமுலம் ஆகா எடுத்து நிழலில் உலர்த்தி பசு சானத்தில் ஆன வீரட்டியுடன் சேர்த்து எரித்து சாம்பலாக்கி இந்த கலவையுடன்
கோரோஜனம்,கஸ்தூரி,புனுகு,பல ஜிவராசிகளின் உயிர் பஷ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து, ஒம் க்லீம் றீம் என்று மந்திரம் உரு ஜபித்து பின் நெற்றியில் இட்டு கொள்ள சர்வ வசியம் உண்டாகும் இந்த மூலிகை தன வசிய விபூதியானது தீவினைகளில் இருந்து நாம்மை காப்பாற்றும் கவசமாய் செயல் படுகிறது இதை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பயன் படுத்தவும் இந்த மந்திர உரு ஏற்றபட்ட தன வசிய விபூதி வேண்டுவோர் அழைக்கவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
விலை.750 -/-

செய்வினை தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்


செய்வினை தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்
செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம். செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பவுர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.
ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய் 9, நாட்டு வாழைப்பழம் 18, கொட்டைப்பாக்கு18, வெற்றிலை 18, கதம்பப்பூ ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும். செய்வினை தோஷத்தை விரட்டும் மற்றொரு பரிகாரம் வருமாறு:
முதலில் குலதெய் வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும்.
அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறதோடிவிடும். யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

Wednesday, October 11, 2017

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?
பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-

அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.
எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.
குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.
அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.
ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.
அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.
எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன். இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும்.

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

குல தெய்வமும், காவல் தெய்வமும்!


குல தெய்வமும், காவல் தெய்வமும்!
இன்றைக்குப் பலருக்கும் பலத்த ஒரு சந்தேகம் உண்டு. குலதெய்வம் என்றால் என்ன? காவல் தெய்வம் என்றால் என்ன? குலதெய்வமும், காவல் தெய்வமும் ஒன்றா அல்லது வேறு வேறா?
குலம் தழைக்க வேண்டும் என்றால், குலதெய்வத்தைக் கும்பிட வேண்டுமா? அல்லது காவல் தெய்வத்தைக் கும்பிட வேண்டுமா?
காவல் தெய்வத்தைக் கும்பிட்டால், குலதெய்வம் கோபித்துக் கொள்ளுமா? இப்படி சந்தேகங்களுக்கு அளவே இல்லை.
எந்த தெய்வத்தைக் கும்பிட்டாலும், வேறு எந்த ஒரு தெய்வமும் கோபித்துக் கொள்வதில்லை. தெய்வங்கள் எல்லாமே சக்தியின் அம்சம். மனித குலத்தை மேம்படுத்துவதற்காக வந்த அவதாரங்கள்.
சரி... விளக்கத்துக்கு வருவோம்.
நம் சந்ததியினரை - அதாவது பரம்பரையைத் தொன்றுதொட்டுக் காத்து வருவதுதான் குலதெய்வம். ‘என்னை முழுக்க நம்பி சரண் புகுந்துவிட்ட இந்தக் குடும்பங்களைக் காப்பது என் தலையாய கடமை’ என்று தன்னை வணங்குகிற குடும்பத்தின் மீது தன் கருணைப் பார்வையைச் செலுத்தி ஆசிகளை வழங்கும் குலதெய்வம். ஒரு குலம் தழைக்க உதவுவது பெண்கள்தான். அதாவது குடும்பத் தலைவிதான். எனவேதான் குலதெய்வம் என்றாலே, பெரும்பாலும் பெண் தெய்வமாகவே இருக்கும். அதே சமயம் சில குடும்பங்களுக்கு ஐயனார், முனீஸ்வரர், முருகப் பெருமான் என்று சில ஆண் கடவுள்களும் குலதெய்வங்களாக இருந்து வருவது வழக்கம். காவல் தெய்வங்களாக இருக்கும் முனீஸ்வரன், ஐயனார் போன்ற தெய்வங்கள் சிலருக்கு குலதெய்வங்களாகவும் இருக்கலாம்.
நம் மூதாதையர்கள் எத்தனையோ ஆண்டுகளாகத் தங்கள் குலதெய்வங்களுக்குச் செய்து வருகின்ற வழிபாடுகளை எந்தக் காலத்திலும் நாம் விட்டு விடக்கூடாது. குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒரு முறையாவது குலதெய்வக் கோயிலுக்குக் குடும்பத்துடன் சென்று, என்ன முறைப்படி அந்தத் தெய்வத்தை வணங்க வேண்டுமோ அதன்படி வணங்கிவிட்டு வரவேண்டும். அதாவது வஸ்திரம் சார்த்துவது, மாவிளக்குப் போடுவது, விசேஷ படையல் போடுவது, அன்னதானம் செய்வது என்று என்னென்ன சம்பிரதாயங்கள் நம் முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றனவோ, அதன்படி செய்யவேண்டும்.
குலதெய்வக் கோயிலுக்கு எப்போதாவது ஒரு முறைதான் போவோம். ஆனால், காவல் தெய்வத்தின் தரிசனம் அடிக்கடி நமக்குக் கிடைக்கலாம்.
எல்லா குடும்பங்களுக்கும் ஒரே ஒரு தெய்வம் தான் குலதெய்வமாக இருக்கும். ஆனால், காவல் தெய்வம் என்பது ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் இருக்கலாம். காவல் தெய்வத்தின் பரிபூரண ஆசிர்வாதம் நமக்குக் கிடைக்க வேண்டுமென்றால், குலதெய்வ வழிபாட்டை நாம் தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் காவல் தெய்வம் நம்மைக் காப்பாற்றும்.
காவல் தெய்வம் என்பது நம்மைக் காத்து வருகின்ற ஒரு தெய்வம். காவல் தெய்வம், நாம் வசித்து வருகின்ற பகுதியில் இருக்கின்ற கடவுளாகக் கூட இருக்கலாம். இப்படி அமைந்துவிட்டால், காவல் தெய்வங்களை அடிக்கடி தரிசிக்கின்ற பேறு நமக்குக் கிடைக்கும். கிராமங்களில் வசித்து வருபவர்களுக்கு அவர்கள் வணங்கி வருகின்ற காவல் தெய்வங்கள் ஊர் எல்லையில் - ஏதேனும் ஒரு வயல்மேட்டில் அமைந்திருக்கும். வயலுக்குப் போகிற போக்கில் அந்த தெய்வத்துக்கு ஒரு ‘அட்டென்டென்ஸ்’ போட்டு விட்டுத்தான் தங்கள் வேலைகளைத் துவங்குவார்கள்.
காவல் தெய்வங்கள் என்றாலே பெரிய மீசை வைத்துக் கொண்டு, அரிவாள் தூக்கிக் கொண்டு, குதிரை, நாய் போன்ற வாகனங்களை வைத்துக் கொண்டிருக்கிற தெய்வங்கள் நம் நினைவுக்கு வரும். ‘காவல்’ என்றாலே அதற்குண்டான ஆயுதங்கள் தேவைதானே!
பெரும்பாலான ஊர்களில் காவல் தெய்வங்கள் குடி கொண்டதற்கு ஒரு பூர்வ கதை இருக்கும். அந்தக் கதைகள் பெரும்பாலும் யாரேனும் ஒரு தனி நபர் (ஆண் அல்லது பெண்) வஞ்சிக்கப்பட்ட தாகவோ, அல்லது ஒரு குடும்பத்தினர் பிறரால் துன்புறுத்தப் பட்டதாகவோ இருக்கும். பின்னாளில் அந்த தனி நபரோ அல்லது குடும்பமோ தெய்வமாகி, பிறரால் வணங்கப்படும் வழக்கம் வந்திருக்கலாம். இப்படித்தான் பல கிராமங்களில் குடி கொண்டிருக்கும் காவல் தெய்வங்களின் கதை அமைந்துள்ளது.
சுருக்கமாகச் சொல்லப் போனால், காவல் தெய்வங்களுக்கு கருணையும், அன்பும்தான் தெரியும். ஒரு காலத்தில் மனிதனாக இருந்து தெய்வமாக இன்று குடிகொண்டு அருள்பாலித்து வருகின்றன என்பதால், ஒரு குடும்பத்தில் இருக்கிற கஷ்ட நஷ்டங்கள் தெரியும். அதனால்தான், தன்னை நம்பியவர்களை, அவர்கள் சின்னச் சின்ன தவறுகள் செய்தாலும், அவற்றைப் பொறுத்துக் கொண்டு, அவர்களை எப்படியேனும் கைதூக்கி விடுகின்றன காவல் தெய்வங்கள்.
காவல் தெய்வங்கள் குடி கொண்டுள்ள கிராமப் புறத்து ஆலயங்கள் எல்லாம் பெரும்பாலும் விமரிசையாக இருக்காது. பிரதான வழிபாட்டில் இருக்கும் தெய்வம், ஏதோ ஒரு மூலையில், போதிய பராமரிப்பு இல்லாமல் குடி கொண்டிருக்கும். அங்கே போதுமான வசதிகள் இருக்காது. இந்த தெய்வத்தை பூஜிக்கும் பூசாரி எப்போது ஆலயத்துக்கு வருவார் என்று சொல்ல முடியாது. தினமும் பக்தர்கள் கூட்டமும் இருக்காது.
அதேநேரம் விசேஷ தினங்கள், திருவிழாக்காலம் என்றால், அந்தப் பகுதியே அல்லோல கல்லோலப்படும். அந்த தெய்வங்களுக்கு விதவிதமான படையல்கள், ஆடைகள், அபிஷேக ஆராதனைகள் என்று எல்லாமே தடபுடல்படும்.
தமிழ்நாட்டில் தற்போது வழிபாட்டில் இருந்து வருகின்ற காவல் தெய்வங்களின் எண்ணிக்கையைப் பட்டியலிட ஆரம்பித்தால் அது நீண்டு கொண்டே போகும். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் மாரியம்மன், திரௌபதி அம்மன், சுடலை முத்து, கருப்பசாமி, காத்தவராயன், முனியாண்டி, சொரிமுத்து, பிலாவடி, மாடன், வீரன் இப்படிப் பல காவல் தெய்வங்கள் உண்டு.
எல்லா கிராமங்களிலும் நாம் தரிசிக்கக் கூடியது மாரியம்மன் ஆலயம். பெரும்பாலானவர்களுக்கு மாரியம்மன்தான் காவல் தெய்வம். காரணம், ஒரு தாயாக இருந்து தன்னை அண்டியவர்களைக் காப்பதில் மாரியம்மனுக்கு ஈடு இணை கிடையாது. தன் குழந்தைகளைப் பாதுகாப்பதில் தாய்க்குச் சமமாக வேறு எவரைச் சொல்ல முடியும்?
சிவன் கோயில், பெருமாள் கோயில், விநாயகர் கோயில் இல்லாத கிராமம்கூட இருக்கலாம்.ஆனால், மாரியம்மன் கோயில் இல்லாத ஊர் இருக்கவே முடியாது.
‘மாரி’, ‘மகமாயி’, ‘மாரியாத்தா’ என்றெல்லாம் கிராமத்தவர்களால் கொண்டாடப்படும் இந்த மாரியம்மன் யார்? ஆடி மாதங்களில் கூழும், வேப்பிலையுமாகக் கொண்டாடப்படும் இந்த ‘மாரி’தான் மண்ணில் உதித்த மாபெரும் தெய்வம்!
‘மாரி’ இல்லாமல் நாம் இல்லை!

ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

பண முடை நீங்க:

பண முடை நீங்க:
வீடு,தொழில் ஸ்தாபனங்களில் பண முடக்கம் இருந்து கொண்டே இருப்பின்,ஒரு சிறிய வலம்புரி சங்கு,மஞ்ச நிற சோழிகள் மற்றும் ஏழு முக ருத்ராட்சம் இவைகளை மஞ்சள் துணியில் முடிந்து,வாயு மூலையில் கட்டி வைக்க பண முடக்கம் நீங்கி,பணப் புழக்கம் உண்டாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989,+917598758991

Sunday, October 8, 2017

வருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள்




வருடம் முழுதும் மகாலக்ஷ்மியின் அருள் கிட்ட தீபஒளி திருநாள் பரிகாரங்கள்
இந்நாளில் குளிக்கும் நீரில் சிறிது பால் விட்டு குளித்து வர அதிர்ஷ்டம் சேரும்.
கொட்டை பாக்கினை சிகப்பு நூலால் சுற்றி லக்ஷ்மி தேவியின் கழுத்தில் மாலையாக அணிவிக்கவும். மறு நாளிற்கு மறு நாள் அதை கழற்றி வீட்டின் பண அறையில் வைத்து இருக்கவும்-மறு வருடம் தீபாவளி நாள் அதை ஓடும் நீரில் விட்டு புதிதாக அணிவிக்கவும்.
முதல் நாளே புதிய தென்னந்துடப்பம் வாங்கி வைத்து வீட்டை தீபாவளி நாள் முதல் அந்த துடைப்பத்தில் சுத்தம் செய்து வரவும்- இந்த நாளில் கோவில்களுக்கு பெருக்க தென்னந்துடப்பங்கள் தானமாய் தர லக்ஷ்மி தேவி மனம் குளிர்ந்து அருள் புரிவார்.
வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து இன்னாளில் பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.
இந்நாளில் வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள் விலகி நன்மைகள் பெருகும்.
மீன்களுக்கு இந்நாளில் நாம் ஏற்கனவே கூறியுள்ளபடி, கோதுமை உருண்டைகள் போட்டு வரலாம்.
இந்நாளில்மாடுகள் மற்றும் குரங்குகளுக்கு அச்சு வெல்லம் கொடுத்து வருவது அளவற்ற நற்பயனை தரும்.
ஏழு முக ருத்திராட்சம் இந்நாளில் அணிய பணவரத்து இரட்டிப்பாகும்.
சிறிய சிகப்பு பட்டு நூலில் ஆல மர வேர் சிறிது வைத்து வீட்டு வாயிலில் இந்நாளில் கட்ட வீட்டினுள் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.
மகாலட்சுமி தாயாரின் படம் அல்லது விக்ரகத்தின் முன் 6 மண் அகலில் சுத்தமான நெய் சேர்த்து அதில் ஒவ்வொன்றிலும் ஒரு கிராம்பு மற்றும் ஒரு ஏலக்காய் சேர்த்து விளக்கேற்ற அடுத்த ஒரு வருடத்திற்கு நிரந்தர செல்வ செழிப்பு உண்டாகும்.
இந்நாளில் பெண் குழந்தைகளுக்கு தங்களால் முடிந்த புத்தாடை எடுத்து தானம் செய்வது தேவியின் மனம் குளிர வழி செய்யும்.
பசுக்களுக்கு இந்நாளில் முடிந்த அளவு மஞ்சள் லட்டு கொடுத்து வர வாழ்கை இனிப்பாகும்.
அரச மரத்திற்கு பால் கலந்த நீரை இந்நாளில் ஊற்றுவது அளவற்ற நற்பயனை பெற்று தரும்.
முக்கியமாக இந்நாளிலும் மறு நாள் அமாவாசை நாளிலும் கண்டிப்பாக அசைவம் தவிர்ப்பது அடுத்து வரும் ஒரு வருடத்திற்கு சிக்கல்கள் இல்லா வாழ்வு தரும்.
மறு நாள் இரவு (அமாவாசை) அரச மரத்தின் அடியில் ஒரு மண் அகலில் நல்லெண்ணெய் விளக்கேற்றி வைத்து திரும்பி பார்க்காமல் வீடு சேர்ந்து கால்களை அலம்பி வீட்டினுள் செல்லவும்.
மறு நாள் அமாவாசை அன்று மாலை 5.40 முதல் 7.30 வரை மகாலட்சுமி தேவியை பூஜிப்பது ஒரு வருடம் பூஜித்த பலனை பெற்று தரும்.