Tuesday, June 27, 2017

பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்


பெண்களின் மனத்துயர் நீக்கும் சக்தி மந்திரம்
இது பெண்களின் உடல் ரீதியான,மன ரீதியான துன்பங்களைத் தீர்த்து உடல், மனபலம், நல்வாழ்வு தருவது .ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் போன்ற தோஷங்களோ ,தீய கிரகங்களின் சேர்க்கையாலோ அவஸ்தைப்படுபவர்கள், திருமணத் தடை உள்ளவர்கள்,திருமண வாழ்வில் பிரச்சனைகள் உள்ளவர்கள் இம்மந்திர ஜெபத்தினால் துன்பம் நீங்கப் பெறலாம்.காதல் தோல்வி, விவாகரத்து போன்றவற்றால் மனம் வருந்துபவர்களும் இம்மந்திரம் ஜெபித்து துன்பத்தில் இருந்து விடுபடலாம்.

மந்திரம்:-


ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் | ஸர்வபூஜ்யே தேவி மங்கள சண்டிகே | ஹூம் பட் ஸ்வாஹா ||

ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

முத்து பரிகாரம்


Thursday, June 22, 2017

சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?

சுமங்கலி பூஜை எப்படிச் செய்வது? அதன் நன்மைகள் என்னென்ன?
சுமங்கலி பூஜை, திருமணமான பெண்கள் தங்கள் கணவன் நீண்ட ஆயுளைப் பெறவும், திருமணம் ஆகாத பெண்கள் திருமணத் தடைக்கான தோஷம் போக்கவும் நடத்தப்படுகிறது. 'சுமங்கலி' என்றால் மங்கலம் நிறைந்தவள் என்று பொருள். அம்பிகையின் திவ்ய நாமங்களைச் சொல்லி வழிபடும் ஶ்ரீ லலிதா சகஸ்ரநாமத்தில் 967 வது திருநாமமாக உள்ள 'சுவாஷினி' என்னும் பெயரில் இருந்துதான் 'சுமங்கலி' என்னும் பெயரானது உருவானது.
திருமணமான பெண்களை 'சுமங்கலி' என்று அழைப்பது வழக்கம். பராசக்தி உலகைக் காத்தருள்வதைப் போல, குடும்பத்தைச் சீரும், சிறப்போடும் திறம்பட வழி நடத்தும் பெண்கள் சக்தியின் வடிவமாகவே போற்றப்படுகின்றனர். சுமங்கலிப் பெண்கள் ஒன்று சேர்ந்து, திறம்பட நடத்துவதால் சக்தி வழிபாடாகவே இது போற்றப்படுகிறது.
எந்தெந்த தினங்களில் சுமங்கலி பூஜை நடத்தலாம் ?

ஞாயிறு, திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நடத்தலாம். இந்த தினங்களில் யோகம், திதி போன்றவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கரிநாளில் நடத்தக்கூடாது. ராகுகாலம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நவராத்திரி நாட்களில் நடத்துவது மேலும் சிறப்பாக அமையும்.

சுமங்கலி பூஜை எப்படிச் செய்ய வேண்டும்? :

பூஜை செய்வோர் இல்லங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டின் உள்ளேயும், வாசலிலும் அழகாக மாக்கோலம் இட வேண்டும்.

மாவிலைத் தோரணங்களால் வீட்டை அழகுபடுத்த வேண்டும்.

பூஜை செய்வோர் இருக்கும் சுமங்கலிப் பெண்கள் மட்டும் அல்லாமல், உற்றார் உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து நடத்துவது அந்தச் சூழலையே இனிமையானதாக மாற்றும்.

பூஜைக்கு அழைக்கப்படும் பெண்களை சக்தியின் வடிவமாகக் கருதி சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும்.

பின்பு, அவர்களை அழகாக கோலமிடப்பட்ட பலகையில் அமரவைக்க வேண்டும். அவர்களது பாதங்களைத் தாம்பூலத் தட்டில் வைத்து, பூஜை நடத்தும் இல்லத்தின் தலைவி அவர்களுக்கு, பாதபூஜை செய்ய வேண்டும்.

அடுத்ததாக குங்குமம், சந்தனம் பூசி, அவர்கள் தலையில் சூடிக் கொள்ள மலர்களும் கொடுக்கவேண்டும்.
தங்கள் வசதிக்குத் தகுந்தவாறு புடவை அல்லது ஜாக்கெட் துணியுடன் , மஞ்சள், குங்குமம், மருதாணி (குலவிருத்திக்காக) மற்றும் வெற்றிலை பாக்கு ஆகியவற்றைத் தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கவேண்டும்.

விழாவுக்கு வந்த பெண்களுக்கு குடிப்பதற்குப் பாலும், பழமும் கொடுக்கவேண்டும். அவர்களை ஶ்ரீதேவியாக நினைத்துத் தீபாராதனை செய்ய வேண்டும். தீபாராதனை முடிந்த பின்பு 'பஞ்சாங்க நமஸ்காரம்' மேற்கொள்ளவேண்டும்,

அடுத்ததாக, பூஜைக்கு வந்த சுமங்கலிப் பெண்களுக்கு அறுசுவை உணவளித்து, விழாவுக்கு வந்தவர்களின் மனம் குளிரச் செய்ய வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களை மரியாதையோடு வழி அனுப்ப வேண்டும். அதன் பிறகுதான் வீட்டில் உள்ளவர்கள் உணவருந்த வேண்டும்.

சுமங்கலி பூஜை செய்வதால், உண்டாகும் நன்மைகள்:

இல்லத்தில் செல்வம் பெருகும்.

துன்பம் நீங்கி இன்பம் உண்டாகும்.

தோஷங்கள் நீங்கும்.

குலவிருத்தி உண்டாகும்.

களத்திர தோஷம் நீங்கி, திருமணம் விரைவில் நடைபெறும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

பஞ்சதீப எண்ணெய் தரும் பரவசப் பலன்கள்!


சனி தோஷம் விலகும், கடன் தொல்லை தீரும்.. பஞ்சதீப எண்ணெய் தரும் பரவசப் பலன்கள்!
அகல், திரி, எண்ணெய், சுடர் இந்த நான்கும் சேர்ந்ததுதான் விளக்கு. இந்த நான்கும், அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கும் இணைந்ததுதான் வாழ்க்கை என்று குறிக்கின்றது. வீட்டில் தீபம் ஏற்றினால், மகாலட்சுமி அருள் கிடைக்கும், தீய சக்திகள் விலகும் என்பது நம்பிக்கை. நமது உடல் மற்றும் ஆன்மா இரண்டும் பஞ்சபூத சக்தியால்தான் ஆட்கொள்ளப்படுகின்றன. நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று இவையனைத்தையும் சமநிலையில் வைத்திருந்தாலே, தொல்லைகள் நீங்கி ஆனந்தம் அடையலாம். பஞ்சபூத சக்தியை சமநிலைப்படுத்த பஞ்சதீப எண்ணெயைப் பயன்படுத்துவதே போதுமானதாகும்.
பஞ்சதீப எண்ணெய் என்றால் என்ன?
வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசுநெய், இலுப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்தும் கலந்ததுதான் பஞ்சதீப எண்ணெய். பஞ்சமி திதியன்று, பஞ்சதீப எண்ணெய் ஊற்றி, ஐந்து முக விளக்கேற்றி வழிபட்டால், இறையருள் பரிப்பூரணமாகக் கிடைக்கும். நான்கு முக தீபம் ஏற்றி வழிபட்டால், பசு பூமி போன்ற செல்வங்களைத் தரும். மூன்று முக தீபம் ஏற்றி வழிபட்டால், புத்திர சுகம் கிடைக்கும். இரண்டு முக தீபம் ஏற்ற குடும்ப ஒற்றுமை பெருகும் என்றும், ஒரு முக தீபம் ஏற்றுவதால், மத்திமமான பலன்கள் கிடைக்கும் என்பார்கள். இப்படி அவரவரின் தேவைகளுக்கேற்ப விளக்கை ஏற்றலாம்.
அமாவாசை, பெளர்ணமி அன்றும் செவ்வாய், வெள்ளி போன்ற தினங்களிலும் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இந்த எண்ணெயில் விளக்கேற்றுவது சிறந்த பலனைத் தரும்.
கடைகளில் கிடைக்கும் பஞ்சதீப எண்ணெய் சுத்தமானதா? என்று பலருக்கும் சந்தேகம் வரலாம். அத்தகையவர்கள், இந்த ஐந்து எண்ணெய்களின் சமமான அளவை எடுத்துக்கொண்டு உதாரணமாக எல்லா எண்ணெய்களிலும் 100 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டு நன்றாகக் கலக்கி, தூய்மையான ஒரு பாட்டிலில் வைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
பஞ்சதீப எண்ணெயின் பலன்கள் :
சாதாரண தீப எண்ணெயை ஏற்றுவதைக் காட்டிலும் பஞ்சதீப எண்ணெயை ஏற்றுவதால், மிகுந்த பலனை அடையலாம்.
தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட்டால், வசீகரம் கூடும்.
நல்லெண்ணெயில் தீபம் ஏற்றி வழிபட, ஆரோக்கியம் பெருகும் எமபயம் அணுகாது.
சகல காரியங்களும், வெற்றிபெற இலுப்பை எண்ணெயில் விளக்கை ஏற்றலாம்.
அழியாத புகழைப் பெற விளக்கெண்ணெய் தீபம் ஏற்றலாம். செல்வ விருத்தி, நினைத்தது நிறைவேற பசு நெய் சிறந்ததாகும்.
கணவன் மனைவி உறவு மேம்பட, சிறந்தது வேப்ப எண்ணெய்.
இப்படி அனைத்து வகையான எண்ணெய்களில் தனித்தனியே கிடைக்கும் பலன்களை பஞ்சதீப எண்ணெய் விளக்கு ஒன்றை ஏற்றுவதன் மூலம் பெறலாம்.
தேங்காய் எண்ணெய் தீபம் ஒரு ஜோடி ஏற்றி வைப்பதன் பலன், ஒரு நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி வைப்பதற்குச் சமம். நல்லெண்ணெய் தீபம் ஒரு ஜோடி ஏற்றி வைப்பதன் பலன், பசு நெய்யில் ஒரு விளக்கினை ஏற்றி வைப்பதற்குச் சமம். ஆயிரம் பசு நெய் விளக்குகளை ஏற்றி வைப்பதன் பலன் ஒரு இலுப்ப எண்ணெய் விளக்கை ஏற்றி வைப்பதற்குச் சமம். பஞ்சதீப எண்ணெயை ஆலயங்களிலும் வீட்டிலும் ஏற்றிவைப்பதால், எண்ணற்ற பலன்களை நாம் அடையலாம்.
விளக்கு ஏற்றும் திசைகள் :
பொதுவாக நாம் விளக்கை கிழக்கு திசை நோக்கியே ஏற்றுகின்றோம் இதனால், நம் வாழ்வில் துன்பங்கள் தொலைந்து, இன்பங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. அதுபோல, தெற்கு திசை நோக்கி தீபத்தை ஏற்றிவைப்பது எமனை அழைக்கும் செய்கையாகும்.
கடன் தொல்லை நீங்கி சனிதோஷம் விலக மேற்கு திசை நோக்கி, விளக்கை ஏற்றவேண்டும். செல்வ வளம் பெருக, திருமணத் தடை நீங்க, கல்வி ஞானம் பெருக வடக்கு திசை சிறப்பாகும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Wednesday, June 21, 2017

காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம்


காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம்
காலசர்ப்ப தோஷம் பாதிப்புகள் குறைய ஜெபிக்க வேண்டிய மந்திரம் :-
ஓம் புஜங்கேஷாய வித்மஹே |
சர்ப்பராஜாய தீமஹி |
தன்னோ நாக ப்ரசோதயாத் ||
இதனை தினமும் குறைந்தது 27 அல்லது அதற்குமேலும் ஜெபித்து வர காலசர்ப்ப தோஷ பாதிப்புகள் குறையும்.
வெள்ளை நூல் எடுத்து மஞ்சளில் நனைத்து அதை ஆலயங்களில் உள்ள நாகர் சிலைக்கு அணிவித்து வெற்றிலை,பாக்கு,பழம்,பால் படைத்து காலசர்ப்ப தோசத்தின் பாதிப்புகள் குறைய வேண்டி வழிபட்டு மறுநாள் அந்த நூலை எடுத்து வலது கையில் அணிந்து கொள்ள நன்மை உண்டாகும்..
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி
+91 75 98 75 89 89
www.mantrakali.blogspot.com

திருச்சி வருகை:


திருச்சி வருகை:
அன்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க. ஜீலை 08,09 2017,சனி,ஞாயிறு ஆகிய இருதினங்களுக்கு நேரில் திருச்சியில் என்னை சந்தித்து ஆலோசனை பெற நினைப்பவர்கள்,அனைத்து பிரச்சினைகளுக்கும் பரிகாரம் செய்து கொள்ள நினைப்பவர்கள் தொடர்பு கொள்க
முன்பதிவு அவசியம்.
ஆலோசனைக்கு கட்டணம் உண்டு.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

நான்கு முக ருத்ராட்சம்:

நான்கு முக ருத்ராட்சம்:
இதன் அதிதேவதை பிரம்மா.இது குரு அம்சமாகும்.இதனை அணிவதால் அறிவாற்றல்,கல்வி ஞானத்தை கொடுக்கும்.படிப்பில் கவனக்குறைவு உள்ளவர்கள் அணியலாம்.வயது வேறுபாடு இன்றி ஆசிரியர்கள்,மாணவர்கள் யாவரும் அணியலாம்.மூச்சு சுவாச கோளாறுகள் மட்டுப்படும்.திக்குவாய் பிரச்சினை நீங்கும்.பேச்சாற்றலை பெருக்கும்.முக்கியமாக கல்வி பணியாளர்கள்,கணிப்பொறியாளர்கள்,மின்னியல் துறையாளர்கள் அணிய வேண்டிய ருத்ராட்சம் இது.சதுர் வேத சக்திகளை உள்ளடக்கியது.
ஓம் சிவயநம
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?


செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?

செய்வினை சூனியத்தை அகற்றுவது எப்படி?
பல காரணங்களால் வீடுகளில் துர்சக்திகள் புகுந்துவிடுகின்றன.
1. தெய்வக்குற்றம் (கடவுளுக்கு நாம் செய்யும் அபவாதம்)
2. பிதிர் குற்றம் (பிதிர்களுக்கு நாம் செய்யும் அபவாதம்)
3. செய்வினை சூனியம்
கோவில்களுக்கு போகும் பக்தர்கள் தெய்வநிந்தனை செய்வதாலும், ஆலயங்களுக்குள் செய்யத்தகாத வியங்களைச் செய்வதாலும் தெய்வக்குற்றம் ஆகிவிடுகிறது.
இறந்த ஆத்மாக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் உதாசீனம் செய்யும் போது அது பிதிர்க்குற்றம் ஆகிவிடுகிறது. தெய்வக்குற்றம், பிதிர்க்குற்றம் ஏற்படும்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் தீயசக்திகள் தாமாக இலகுவில் புகுந்துவிடும்.
அதைவிட செய்வினை சூனியம் மூலமாக தீயசக்திகளை பிறர் ஏவிவிட வைக்கின்றனர்.
தீயசக்திகள் வீட்டில் புகுந்தால் அதற்கான அறிகுறிகள் எவை?
- வீட்டில் உள்ள நிம்மதி இல்லாமல் போகும்
- எதிர்பாராத நோய்கள் உருவாகும்
- வீட்டில் பொருட்செலவுகளை ஏற்படுத்தும் பல விடயங்கள் நடக்கும்
- பிள்ளைகளுக்கு படிப்பில் குறைபாடு ஏற்படும்
-கடவுளில் நம்பிக்கை குறையும்
-விவாகரத்துக்களை உண்டாக்கும்
-குடும்பப்பிரச்சனைகளை ஏற்படுத்தும்
தீய சக்திகள் வீடுகளில் புகுந்து கொள்ளும்போது அவற்றின் தீமையைக் குறைக்கும் வழி முறை என்ன?
45 தினங்கள் வைரவப் பெருமானுக்கு
வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு தினமும் வழிபடவேண்டும். இந்த 45 தினமும் வீட்டில் மச்சம் மாமிசம் கொண்டுவரவே கூடாது. (மச்சம் மாமிசம் ஆகியவை தீயசக்திகளின் பலத்தை அதிகரித்துவிடும்). தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகை மட்டும் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்ட வேண்டும். காலை சூரியன் உதயநேரத்திலும், மாலையில் சூரிய அஸ்தமன நேரத்தி்லும் இதை தொடர்ந்து செய்யவேண்டும். 45 தினங்களில் மீண்டும் உள்ளே புக முடியாவிடின் தீயசக்திகள் உள்நுழைய முடியாது.
சர்வ சத்ரு நாசன மந்திர உச்சாடனமான
ஓம் க்லீம் க்ருஷ்ணாய........ ", என்று துவங்கும் மந்திரம் தெரிந்தவர்கள் அதை தினமும் ஓதிவரலாம். அதை தெரியாதவர்கள் வைரவருக்குரிய பாடல்களை படிக்கலாம்.
45 தினங்களுக்கு பிறகு துர்ககையின் ஆலயம் சென்று, தீர்த்தம் பெற்று வீட்டில் தெளித்துவிடுங்கள். துர்க்கைக்கு அர்ச்சித்த குங்குமம் பெற்று, வீட்டு வாசலில் சூலம் கீறிவிடுங்கள்.
அதன் பின்னர், செய்வினை , சூனியம் வைத்த இடங்கள் தாமாக உங்கள் கண்ணுக்கு புலனாகும் சந்தர்ப்பம் ஏற்படும்.
வெள்ளைக் கடுகுச் செடிகள் இமய மலையை சுற்றிக் காவல் புரியும் பைரவரின் தேவ கணங்கள். ஆகவேதான் அவை அதிகம் இமய மலை அடிவாரங்களில் காணப்படும்.
ஏவல் பில்லி சூன்யம் செய்வினைகளை நீக்க,விடுபட தீர்வுகாண
தொடர்புக்கு:
ஸ்ரீ காளி தேவி
+91 75 98 75 89 89
www.mantrakali.blogspot.com

Sunday, June 18, 2017

தேக புஷ்டி லேகியம்


தேக புஷ்டி லேகியம்
1. பூனைக்காலிவித்து
2 முருங்கை வித்து.
3 - பூமி சர்க்கரைக்கிழங்கு.
4. அமுக்கரான் கிழங்கு
5. தண்ணீர் விட்டான் கிழங்கு
6. நிலப்பனை கிழங்கு
7.அத்தி வித்து
8. அரச வித்து
9.ஆலம் வித்து
10.நீர்முள்ளி விதை
11. பருத்தி விதை
12. நத்தைச் சூரி விதை
13. பாதாம் பருப்பு
14.சாரப் பருப்பு
15 முந்திரிப்பருப்பு
16. நெல்லிப்பருப்பு
17. ஜாதிக்காய்
18. ஜாதிப் பத்திரி
19. லவங்கம்
20 . லவங்கபட்டை
21 . ஏலம்.
22. அதிமதுரம்
23. அக்ர காரம் .
24. கோஷ்டம்
25 .சந்தனத் தூள்
26. மல்லி
27. குங்கும பூ
28. சுக்கு
29 மிளகு
30- திப்பிலி
31, வாயு விளங்கம்
32. இலவம் பிசின்
33- முருங்கை பிசின்
34- ஆலம்பி சின்
35, ஓரிலைத்தமா ரை
36. சிறு நெருஞ்சி விதை
37. கசகசா
39. பரங்கிப் oட்டை
40 . சீந்தில் சர்க்கரை
41. நாட்டுச் சர்க்கரை
42. தேங்காய் பால்
43. பசுவின் பால்
44. நெய்
45_ தேன்
சமயோசிதம் போல , அனுபவத்திற்கேற்ற படியும், வசதிக்கேற்ற படியும், சரக்குகளைக் குறைத்தோ , கூட்டியோ லேகிய மகவும், சூரணமாகவும் செய்து கொள்ளலாம்.
விந்து விளைவை அதிகபடுத்தி , நரம்புகளுக்கு ஊட்டங் கொடுத்தும் , பலத்தையும் ஆண்மையையும் உண்டாக்கும். தாது புஷ்டி அளித்து நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.
தொடர்புக்கு:
+91 75 98 75 89 89

எங்களிடம் கிடைக்கும் சக்தி வாய்ந்த யந்திரங்கள்

எங்களிடம் கிடைக்கும் சக்தி வாய்ந்த யந்திரங்கள்சக்தி வாய்ந்த யந்திரங்கள் பெயர்கள் விநாயகர் யந்திரம் சிந்தாமணி யந்திரம் சுவஸ்திக் யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த காயத்திரி யந்திரம் வாஸ்து சாந்தி யந்திரம் தூக்கத்தில் கெட்ட கனவு வராமலிருக்க யந்திரம் நினைத்த காரியங்கள் நிறைவேற யந்திரம் சர்வ சித்தி யந்திரம் பேய் விரட்ட யந்திரம் குழந்தைகளுக்கான பாதுகாப்பு யந்திரம் தீய சக்தியை திசை திருப்ப யந்திரம் எதிரிகள் ஆவிகள் தொல்லை நீங்க யந்திரம் குழந்தைகளுக்கு டாகினி சாகினி அகற்ற யந்திரம் பிரச்சனைகளிலிருந்து விடுபட யந்திரம் கிரகண பாதிப்பிலிருந்து விடுபட யந்திரம் பயம் தெளிய யந்திரம் வழக்குகளில் வெற்றி பெற யந்திரம் பகளாமுகி யந்திரம் எதிரிகளை வெற்றி கொள்ள யந்திரம் ஸ்ரீ ராமன் யந்திரம் துர்க்கா யந்திரம் சுய பாதுகாப்பு யந்திரம் எதிரிகளை தடைகட்ட யந்திரம் எதிரிகளை வீழ்த்த யந்திரம் சக்தி வாய்ந்த அனுமன் யந்திரம் ஆபத்துகளை விரட்டும் யந்திரம் ருத்ரன் பாதுகாப்பு யந்திரம் தன வரவிற்கான யந்திரங்கள் மகாலட்சுமி யந்திரம் சூதாட்ட வெற்றி யந்திரம் வியாபாரம் ,தொழில் அதிகரிக்க யந்திரம் வேலையில் தடைகளை நீக்க யந்திரம் வேலையில் மேல்பதவி கிடைக்க யந்திரம் வியாபாரத்தை அதிகரிக்க சக்தி வாய்ந்த யந்திரம் தன பிராப்தி யந்திரம் கூட்டு நிறுவனங்களில் லக்கி யந்திரம் வசிய யந்திரங்கள் கணவனை வசியம் செய்ய யந்திரம் ஆண்களை ஈர்க்க யந்திரம் பெண்களை ஈர்க்க யந்திரம் ஆண் பெண் பிரிவு யந்திரம் வசிய யந்திரம் மிகவும் சக்தி வாய்ந்த மோகினி யந்திரம் எதிரியை வசியம் செய்ய யந்திரம் அனைவரையும் ஈர்க்க யந்திரம் வியாபார வசிய யந்திரம் தேவதா வசிய யந்திரம் சாத்தான் வசிய யந்திரம் மதிப்பும் மரியாதையும் பெற யந்திரம்
தொடர்புக்கு:ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக


தொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாகதொழில் விருத்தியாக ,அதிகமான வாடிக்கையாளர்கள் ஆகர்ஷணமாக:-வளர்பிறை வெள்ளிக்கிழமை  அன்று தொடங்கிப் பின் வெள்ளிக்கிழமை தோறும் பிரம்ம முகூர்த்தம் (4:30 முதல் 6:00 மணிக்குள்) அல்லது சுக்ர ஹோரையில் கீழ்க்காணும் பிரயோகத்தைச் செய்து வர தொழில் ,வியாபாரம் விருத்தியடையும்.அதிகமான வாடிக்கையாளர்கள் வரத்தொடங்குவார்கள்.
ஒரு புது செம்புப் பாத்திரத்தில் நீர் வைத்து அதில் கொஞ்சம் பச்சைக்கற்பூரம் பொடி செய்து போட்டு,மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு கீழ்க்கண்ட மந்திரம் 108 முறை மேற்கு நோக்கி அமர்ந்து ஜெபித்துப் பின்னர் அந்த நீரைக் கடை, தொழிற்சாலை  முழுவதும் தெளித்து விடவும்.வலம்புரி சங்கில் நீரை ஊற்றித் தெளித்தால் சிறப்பான பலன் உண்டாகும்.தெளித்து ,முடித்த பின் நீர் மீதம்  இருந்தால் அதை  மேனேஜர்,முதலாளி அல்லது காசாளர் அறையில் ஈசான மூலையில் பலகை போட்டு அதன் மேல் வைக்கவும்.  மந்திரம் ஓம் ஹ்ரீம் தும் துர்க்காயை சர்வாகர்ஷணாயை ஹ்ரீம் தும் பட் ||
தொழில் வியாபார வசிய யந்திரத்தகடு,மை தேவைப்படுவர்கள் தொடர்பு கொள்கஸ்ரீ காளி தேவி-போன்:7598758989


Friday, June 16, 2017

சண்ட பைரவ மந்திரம்

சண்ட பைரவ மந்திரம்


மூல மந்த்ரம்
ஓம் ஹிரீம் சண்ட பைரவ சர்வ சத்ரு நசாய  ஸ்தாபய   ஸ்தாபய உச்சாடாய ஹூம்பட்  ஸ்வாஹா (உரு ஒரு இலச்சம்)

Wednesday, June 14, 2017

லக்ஷ்மி வசிய அஞ்சனம்


லக்ஷ்மி வசிய அஞ்சனம்
போதுவாக எல்லோறுக்கும் தேவை பணம் .பணம்யில்லாததால் பலரும் பலவித தவறுகளை செய்கிறார்கள் நமக்கு தேவையாக பணம் இருந்தால் சில தவறுகள் செய்ய வேண்டியது இல்லை.
தனத்துக்கு அதிபதியாக விலகும் குபேரனை வசியம் செய்தால் வாழ்வில் வறுமையே இல்லை ஆணால் குபேரனை வசியம் செய்வது அவ்வலு சுலபம் இல்லை ஆகையால் குபேரன் வேண்டாம்.அதுக்கு அடுத்த நிகராக இருக்கு தனதேவதை என்று உலகமே போற்றும் தாய் லட்சுமிதேவி வசியம் செய்தால். நாம் நடமுறை வாழ்வில் வறுமை இருக்காது.சரி வசியம் செய்வது எப்படினு பார்ப்போம்.
நன்கு தேரிய துளசிச்செடி வேரை காப்புக்கட்ட வேண்டும்.பின் வடக்கு வில்வவேரை காப்புக்கட்டிக்கொள்ளவும்.(லட்சுமி எப்போது ஈர்க்கும் மூலீகை வில்வம்.லட்சுமி ஈர்க்கும் திசை வடக்கு.அகையால்தான் வடக்கு வேரை எடுக்க வேண்டும்.) இந்த இரண்டு வேரையும் கரியாக்கி சந்தன அத்தர் விட்டு மையாக நைசாக அரைக்க வேண்டும்.அரைக்கும்போது கொஞ்சம் கஸ்தூரி செர்த்து மந்திரத்தை சொல்லிக்கொண்டு அரைக்கவும்.நன்கு அரைத்தா மையை பத்திரமாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
கிரமப்படி வெள்ளிக்கிழமையில் சத்திபூஜை செய்து மையை பூஜையில் வைத்து கீழ்கண்ட மூலமந்திரம் 48 நாள் செய்து வசியம்... செய்யவும் நிச்சையமாக வசியமாகும்.
மூலமந்திரம் :- ஓம் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசி வசி சுவாகா.
இதன் பலன் இதனால் சகலமும் சித்தியாகும்.வறுமை ஒழியும்.மதிப்பு கூடும்.செல்வாக்கு உயரும். தொட்டது எல்லாம் தொலங்கும் மனம் நிம்மதியடையும். லக்ஷ்மிதேவி கடாக்ஷமுண்டு எப்போதும்.

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

சகலமும் தரும் ஸ்ரீ காமதேனு மந்திரம்

காமதேனு ஒரு தேவ லோகப்பசு. சகல தேவர்களும் தேவதைகளும் காமதேனுவில் அடக்கம்.வட இந்தியாவில் இந்தப் பூஜை மிகப் பிரசித்தம்.

எனவே,காமதேனுவைப் பூஜிக்கிறவர்கள் தங்களது மனவிருப்பங்கள் நிறைவேறப்பெறுவார்கள் என்று மந்திரம் சாஸ்திரம் கூறுகிறது.

பகவத்கீதையில் கூட ஸ்ரீ கிருஷ்ண பகவான்
"நான் பசுக்களில் காமதேனுவாக இருக்கிறேன் என்று கூறுகிறார்".

காமதேனுவின் கன்றின் பெயர் நந்தினி.காமதேனுவைப் போலவே அதன் கன்றும் புனிதமானதாகக்   கருதப்படுகிறது.எப்பொழுதும் காமதேனுவுடன் அதன் கன்று இருக்கும் படி உள்ள படம் அல்லது விக்கிரகம் வைத்தே பூஜிக்க வேண்டும்.

தேவர்கள் தலைவன் இந்திரன் கீழ்க்கண்ட மந்திரங்களைக் கொண்டு காமதேனுவைப் பூஜித்துப் பலன் பெற்றிருக்கிறார்.


காமதேனு காயத்ரி மந்த்ரம்

ஓம் சுப காமாயை வித்மஹே
காம தத்ராயை ச தீமஹி
தன்னோ தேனு ப்ரசோதயாத்

காமதேனு அம்பிகா மந்த்ரம்

நமோ தேவ்யை மஹா தேவ்யை
சுரப்யை ச நமோ நமஹ
கவம் பீஜ ஸ்வரூபாய
நமஸ்தே ஜெகதம்பிகே

காமதேனு மூல மந்த்ரம்

ஓம் க்லீம் காமதுகே
அமோகே வரதே விச்சே
ஸ்புர ஸ்புர ஸ்ரீம்
பரஸ்ரீம் ஸ்ரீ காமதேனுவே நமோ நமஹ

Tuesday, June 13, 2017

12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர்


12 ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய விநாயகர் 

அவரவர் ராசிக்குரிய விநாயகப்பெருமானின் மூர்த்தங்களை வழிபட்டால் சிறப்பு இதோ..  

மேஷம்: செவ்வாயின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் இயற்கையில் வீரம் மிக்கவர்கள். எவருக்கும் அஞ்சாதவர்கள். மனதிற்கு சரியென்று பட்ட விஷயத்தை எவர் தடுத்தாலும் விடாது தைரியத்துடன் செயல்படுத்துபவர்கள். மனோ தைரியம் மிக்க நீங்கள் வழிபட வேண்டியவர் வீர கணபதி.

ரிஷபம்: சுக்கிரனின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் அம்பிகையின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரமானவர்கள். 12 ராசிகளில் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் இருப்பது உங்களுடைய ஜாதகத்தில் மட்டுமே. இயற்கையில் ராஜயோகத்தைப் பெற்ற நீங்கள் வழிபட வேண்டியவர் ராஜராஜேஸ்வரியின் அம்சத்தில் உள்ள ஸ்ரீவித்யா கணபதி.

மிதுனம்: பல்வேறு திறமையை உடைய நீங்கள் கண் திருஷ்டி தோஷத்தால் அடிக்கடி அவதிப்பட நேரிடும். உங்களின் திறமையும், வளர்ச்சியும் அடுத்தவர் மனதில் போட்டி, பொறாமையை வளர்க்கலாம். எதிரிகளைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படுவதில்லை என்றாலும், மறைமுகமாக வந்து சேருகின்ற தாக்குதல்களிலிருந்து விடுபட நீங்கள் வழிபட வேண்டியவர் லட்சுமி கணபதி

கடகம் : பல்கலை வித்தகர்களான நீங்கள் பன்முகம் கொண்டவர்கள். அபார ஞானமும், அசாத்தியமான ஞாபக சக்தியும் கொண்ட நீங்கள் அமைதியான முறையில் அடுத்தவர்களை வழிநடத்தும் திறன் மிக்கவர்கள். ஒரு நேரம் சாந்தம், ஒரு நேரம் கோபம் என முகத்தில் நவரசத்தையும் காட்டும் நீங்கள் வழிபட வேண்டியவர் ஹேரம்ப கணபதி.

சிம்மம்: இயற்கையில் தைரிய குணம் மிக்க உங்களுக்கு என்றுமே வெற்றித்திருமகள் துணை நிற்பாள். 12 ராசிகளில் தலைமை குணத்தினை உடைய உங்களுக்கு என்றுமே தன்னம்பிக்கை குறையவே குறையாது. அசாத்தியமான மன வலிமையுடன் என்றென்றும் வெற்றியினை ருசித்து வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் விஜய கணபதி.

கன்னி: இயற்கையில் பெண்மை குணத்தினை உடைய நீங்கள் சரியான துணையுடன் செயல்படும் காரியங்களில் வெற்றி காண்பவர்கள். உங்களின் வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செயல்படும்போது உங்களை வெல்ல எவராலும் இயலாது. உங்களின் வழிபாட்டிற்குரியவர் மோகன கணபதி

துலாம்: அயராத உழைப்பினை உடைய நீங்கள்,மேற்கொண்ட லட்சியத்தினை அடையும் வரை ஓய மாட்டீர்கள். ஒரு லட்சியத்தில் வெற்றி பெற்றாலும் நிறைவு கொள்ளாது, அடுத்த லட்சியத்தை நாடி செல்பவர்கள். வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வானமே எல்லை என்று செயல்பட்டு வரும் உங்களின் வழிபாட்டிற்கு உரியவர் க்ஷிப்ர ப்ரஸாத கணபதி.

விருச்சிகம்: இயற்கையில் மிகவும் சுறுசுறுப்பான குணத்தினை உடைய நீங்கள் ஓரிடத்தில் அமர்ந்திருக்காது சதா பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் நினைத்த மாத்திரத்தில் காரியத்தை செய்துமுடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தினைக் கொண்டவர்கள். எப்போதும் பரபரப்புடன் இயங்கி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சக்தி கணபதி

தனுசு: குரு பகவானின் ஆதிக்கத்தைப் பெற்ற நீங்கள் நேர்மையை மிகவும் நேசிப்பவர்கள். நேர் வழியைத் தவிர குறுக்குவழியில் செல்ல விருப்பமில்லாதவர்கள். தர்ம நெறியில் செல்வதால் அடிக்கடி தர்மசங்கடத்தை சந்தித்து வரும் உங்களுக்கு சங்கடஹர கணபதியே வழிபாட்டிற்கு உகந்தவர்.

மகரம்: சனிபகவானின் ஆதிக்கத்தினைப் பெற்ற நீங்கள் தியாக உள்ளம் கொண்டவர்கள். அளவான ஆசை கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் மனப்பான்மையினால் ஒருசில இழப்பினை சந்திப்பவர்கள். இதனால் அடிக்கடி மனக் குழப்பத்திற்கு ஆளாகும் நீங்கள் மனதினை அடக்கி ஆள கற்றுக் கொண்டீர்களேயானால் வெற்றி நிச்சயம். நீங்கள் வழிபட வேண்டியவர் யோக கணபதி.

கும்பம்: அனுபவ அறிவின் மூலமாக அடுத்தவர்களை அடக்கி ஆள நினைப்பவர்கள் நீங்கள். தான் அறிந்திராத விஷயத்தையும் கூட தனக்குத் தெரியாது என்று வெளிக்காண்பிக்காமல் செயல்படுவீர்கள். அதேநேரத்தில் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஆர்வம் செலுத்துபவர்கள். புதிய விஷயங்களையும் எளிதில் கற்றுக்கொண்டு தனித்திறமை மூலம் முன்னேறி வரும் நீங்கள் வழிபட வேண்டியவர் சித்தி கணபதி.

மீனம்: இயற்கையில் கள்ளம், கபடம் இல்லாத குழந்தைத்தனமான குணத்தினை உடையவர்கள் நீங்கள். அடுத்தவர்களிடம் எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எல்லோரும் நல்லவரே என்ற எண்ணத்துடன் பழகி வருவீர்கள். சூது, வாது தெரியாத நீங்கள், தான் நினைத்ததை அடைந்துவிட வேண்டும் என்ற பிடிவாத குணத்தினை உடையவர்கள். உங்களுடைய வழிபாட்டிற்கு உரியவர் பால கணபதி.

கடன் பிரச்சினைகள் தீர யந்திர வழிபாடு:

கடன் பிரச்சினைகள் தீர யந்திர வழிபாடு:
பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் கடன் பிரச்சினைகளில் சிக்கி தவிப்போர் இந்த யந்திரத்தை செம்புத் தகட்டில் கீறி,ருண கணபதி மூலமந்திரம் உருவேற்றி,முறையான பூசைகள் செய்து வழிபட மேற்கண்ட பிரச்சினைகள் தீரும்.
பூஜிக்கப்பட்ட யந்திரம்,ரட்சை கயிறு தேவைப்படுவர்கள் அணுகவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்


கிரக கோளாறுகளை நீக்க எளிய குளியல் பரிகாரங்கள்
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம்.
நடக்கும் திசை அறிந்து அதற்கேற்ப அந்த கிரகங்களுக்குரிய பொருட்களால் குளித்து வர, அந்த கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்தும், நற்பலன்கள் பெறலாம். மேலும், ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்பவும் தினசரி குளியல் முறை செய்து வர நிச்சயம் நற்பலன்கள் பெற்று வாழலாம்.
சூரியன் : கசகசாவை பொடி செய்து நீரில் கலந்தும் அல்லது, குங்குமப்பூ அல்லது ஏதேனும் சிகப்பு மலர்கள் நீரில் போட்டு குளித்து வரலாம். சிறிதளவு போதும். இவற்றை போட்டு நான்கைந்து குவளைகள் நீரில் குளித்து விட்டு, பின்பு வழக்கம் போல் குளித்து வரலாம்.
சந்திரன் : தயிரை முதலில் உடல் முழுவதும் தேய்த்து விட்டு சிறிது ஊறி பின்பு குளிக்கவும்.
செவ்வாய் : வில்வ கொட்டை பொடியை சிறிதளவு நீரில் சேர்த்து குளித்து வரலாம். செவ்வாய் தோஷத்தால் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், மற்றும் திருமண தடை போன்றவற்றிற்கு இது சிறந்த பரிகாரம்.
புதன் : மஞ்சள் கடுகுடன் சிறிது தேன் கலந்து, கங்கை நீர் அல்லது கடல் நீர் சிறிது சேர்க்கப்பட்ட நீரில் குளித்து வரலாம்.
வியாழன் : கருப்பு ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சுக்கிரன் : பச்சை ஏலக்காய் போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
சனி : கருப்பு எள் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ராகு : மகிஷாக்ஷி (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ) சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
கேது : அருகம்புல் சிறிதளவு போட்டு கொதிக்க வைத்த நீரை சிறிதளவு குளிக்கும் நீரில் ஊற்றி குளித்து வரவும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989