Sunday, January 28, 2018

தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்




தீராத பிரச்சினை, பிணி தீர எளிய பரிகாரங்கள்
பெண்கள் துர்க்கை அம்மனுக்கு கண்டிப்பாக விளக்கு ஏற்றியிருப்பார்கள். பிரார்த்தனை செய்ய, திருமணம் நடைபெற என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து செய்யப்படுகின்றன. துர்க்கை அம்மனை, ராகு காலத்தில் வழிபடவேண்டும். நம்முடைய தீர வேண்டிய, தெய்வத்தின் அருளால் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளுக்கு, குடும்ப பிரச்சினைகளுக்கு, சொந்த பந்தங்களால் நிகழ்ந்த தீராத பிரச்சினையின் கடுமை குறைய, செவ்வாய்க்கிழமை மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கை தனித்திருக்கும் ஆலயத்தில், ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். . அடுத்தவர் ஏற்றிய விளக்கில் ஏற்றக்கூடாது விளக்கினை ஜோடியாக தான் வைக்க வேண்டும். தீப ஓளி அம்மனை நோக்கியவாறு விளக்கு இருக்க வேண்டும்..
நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிணி தீர வேண்டுமானால், ஞாயிறு மாலை 4.30 – 6.00 ராகு கால வேளையில், மேற் குறிப்பிட்டவாறு விளக்கு ஏற்ற வேண்டும். நமது குடும்பத்திற்கு வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேற்றம் முதலான நன்மையின் பொருட்டு வேண்டுதல் வெள்ளிக்கிழமை 10.30 -12.00 மணி நேரத்தில் மேற்குறிப்பிட்டபடி எலுமிச்ச பழ விளக்கு ஏற்ற வேண்டும். இந்த பூஜையின் போது, அம்மனுக்கு மல்லிகை பூ அல்லது மஞ்சள் சாமந்தி பூ மட்டுமே வாங்க வேண்டும். அம்மனுக்கு அர்ச்சனை செய்வதாக இருந்தால் சாமி பெயரில் அர்ச்சனை செய்த பின்னரே, விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு ஏற்றிய பின்னரே 3 சுற்றுகள், வலம் வந்து நமஸ்கரிக்க வேண்டும். அதன் பின்னர் 20 நிமிடங்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
துர்கை பாடல்கள் சொல்லியவாறு இருக்கவேண்டும். 21 வது நிமிடம், கோயிலைவிட்டு வெளியேறி விட வேண்டும். வழியில், பிசையிடக்கூடாது கஷ்ட நிவர்த்தி பூஜை ஆனதால் நவகிரகம் சுற்ற வேண்டாம். வீடு திரும்பி, வீட்டில் பூஜை அறையில். ஒரு நெய் தீபம் ஏற்றி, 5 ஊதுபத்தி ஏற்றி, கற்பூரம் ஆராதனை செய்து, நிம்மதியாக ஓய்வு எடுக்கவேண்டும். வீட்டில் ஏற்றிய தீபம் அணையும்வரை, வெளியில் செல்லக்கூடாது. கண்ட கதைகள் பேசி கொண்டிருக்க கூடாது. இதுவே முறைப்படி செய்யும் வழிபாட்டு முறையாகும். இவ்வாறு 9 வாரங்கள் செய்வது முறை. தொடர்ச்சியாக செய்வதே உத்தமம். நமது பிரச்சினை தீர, வேண்டுதளுக்காக, ஆலயம் செல்லும்போதும் வரும்போதும் இறை நினைப்பில் செல்ல வேண்டும். கும்பலாக செல்வதை தவிர்க்கவேண்டும். கண்ட கதைகளை ஆலயத்திலும், செல்லும்போதும், வரும்போதும் பேசுதலை தவிர்க்க வேண்டும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, January 19, 2018

அஷ்ட கர்மங்களில் முதலாவது வசியம்


அஷ்ட கர்மங்களில் முதலாவது வசியம்:
வசியம் அதிதேவதை ஈசன்
எட்டுவகை வசியம்
1) சர்வவசியம்
2)இராஜ வசியம்
3)புருஷவசியம்
4)ஸ்த்ரீ வசியம்
5)மிருகவசியம்
6)சர்ப்ப வசியம்
7) சத்துரு வசியம்
8) லோகவசியம்
வசிய மந்திரம்
ஒரு ஞாயிற்றுக்கிழமை நாளில் உடல் சுத்தியுடன் சிவப்பு நிற ஆடை அணிந்து கிழக்கு முகமாய் அமர்ந்து கொண்டு முறையான
பூசை வைத்து அதன் நடுவில்
ஒரு காரீயத்தகட்டில் முக்கோணம் போட்டு அதன் நடுவில்
ஒரு வட்டம் போட்டு அவ்வட்டத்தினுள் லங் என்று எழுதவும்
இந்த யந்திரத்தை வைத்து
"ஓம் பிறீங் அங் அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா"
வசியமந்திரத்தை நாளொன்றுக்கு 108 உரு வீதம் 48 நாட்கள்
செபித்தால் வசியம் எட்டும் சித்தியாகும். அப்படி சித்தியானால் நீ நினைப்பதெல்லாம் சித்தியாகும்.
மாணவனே உனக்காக இதை சொல்கிறேன் கைஅடக்கமாக
இருந்து இதன் பலனைப்பார்
கேளடா வசியமென்ற யெட்டுக்குந்தான்
கிருபையுள்ள மந்திரமிது சொல்லக்கேளு
வாளடா ஓம் பிறீங் அங்அங் டங் ஸ்ரீயும் கிலியும் சுவாகா வென்று
வளமையுடன் செபிக்கிறதோர் வரிசைகேளு
காலடா முக்கோணம் நடுவில்விந்து
கருவாக லங்கெனவே சந்திரபீஜம்
ஆளடா தானெழுதிப்பூசைபண்ணி
அன்புடன் மந்திரத்தை உருவேசெய்யே.
செய்யடா தினம்நூறு உருவேசெய்தால்
செம்மையுடன் வசியமெட்டுஞ் சித்தியாகும்
மெய்யடா வசியமது சித்தியானால்
மேன்மைபெற நினைத்ததெல்லாஞ் சித்தியாகும்
அய்யனே புலத்தியனே உனக்காய்ச்சொன்னேன்
கையடா அடக்கமது மெய்யாய்ச்சொன்ன
கருணைவளர் வசியமதை கனிவாய்ப்பாரே.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

மாந்திரீகத்தின் எட்டு வகை அஷ்ட கர்மம்


மாந்திரீகத்தின் எட்டு வகை அஷ்ட கர்மம்
அஷ்ட கர்மம் என்பது மாந்திரீகத்தின் எட்டு வகை இவற்றை முறைப்படி கற்று தேர்ந்தவர்க்கே இது சித்தியாகும்.
அப்படி முறையாக கற்றவரே உண்மையான
மாந்திரீகவாதியாவார்.
அப்படி அஷ்ட கர்மங்களை முறையாக கற்றுத்தேர்வதற்குரிய
முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்காக அருளியுள்ளனர்.
அவ்வகையில் சல்லிய முனிவர் அருளிய சல்லியம் என்னும்
மாந்திரீக நூலில் அஷ்ட கர்மங்களுக்குரிய நாள், திசை, உடுப்பு,
உலோகம்,எண்ணை, அதிதேவதை, மலர், ஆசனம் இவைகள்
பற்றிய தகவல்களை தந்துள்ளார்.
அஷ்ட கர்மத்திற்குரிய நாட்கள்: ஞாயிறு - வசியம்
திங்கள் - மோகனம்
செவ்வாய் - வித்துவேஷணம்
புதன் - தம்பனம்
வியாழன் - உச்சாடனம்---பேதனம்
வெள்ளி - ஆக்ருஷணம்
சனி - மாரணம்
இதில் குறிப்பாக வியாழக்கிழமையில் எந்த வேலைகளைச்
செய்தாலும் அது பச்சை மரத்தில் ஆணிஏறுவது போல
உடனுக்குடன் பலிக்கும் என்கிறார் சல்லிய முனிவர்.
திசைகள்
கிழக்கு - வசியம்
தெற்கு - மோகனம்,மாரணம்
மேற்கு - உச்சாடனம்
வட்க்கு - பேதனம்
தென்மேற்கு - வித்துவேஷ்ணம்
தென்கிழக்கு - தம்பனம்
வடமேற்கு - ஆக்ருஷணம்
வடகிழக்கு - சகல கர்மத்திற்கும் உகந்த திசையாகும்.
வஸ்திரம்

சிவந்த வஸ்திரம் - வசியம்
மஞ்சள்வஸ்திரம் - மோகனம்
பச்சை வஸ்திரம் - தம்பனம்
வெள்ளை வஸ்திரம் - பேதனம்
பச்சைப்பட்டு - உச்சாடனம்
கருப்பு வஸ்திரம் - மாரணம்
செம்பட்டு-சகல கர்மத்திற்கும் உகந்த உடுப்புகளாகும்.
உலோகங்கள்
காரீயம் - வசியம்
வங்கம் - மோகனம்
பொன் - ஆக்ருஷணம்
செம்பு - தம்பனம்
வெள்ளீயம் - உச்சாடனம்
குருத்தோலை - வித்துவேஷணம்
இரும்பு - பேதனம்
வெள்ளி - மாரணத்திற்கும்
எண்ணைகள்
பசு நெய் - வசியம்
நல்லெண்ணை - மோகனம்
வேப்பெண்ணை - மாரணம்
புங்கெண்ணை - உச்சாடணம்
புன்னை எண்ணை - பேதனம்
ஆதளை எண்ணை - தம்பனம்
கழுதை,ஆடு,பன்றிகளின் நெய் - வித்துவேஷணம்
வன்னி,ஆல்,விளா,இவைகள் - சுபகர்மத்திற்கும்
கள்ளி,எருக்கு,எட்டி
அத்தி,இச்சி,விடத்தலை
இவைகள்} - அசுபகர்மத்திற்கும் உகந்த எண்ணை வகைகளாகும்.
அதிதேவதைகள்:
ஈசன் - வசியம்
அக்கினி - மோகனம்
இந்திரன் - தம்பனம்நிருதி - உச்சாடனம்
வருணன் - ஆக்ரூஷணம்
வாயுதேவன் - வித்துவேஷனம்
குபேரன் - பேதனம்
எமன் - மாரணம்
முதலியன அஷ்டகர்மத்திற்குரிய அதிதேவதைகளாகும்.
மலர்கள்:
மல்லிகை - வசியம்
முல்லை - மோகனம்
தாமரை - தம்பனம்
தும்பை - உச்சாடனம்
அரளி - ஆக்ரூஷணம்
காக்கண மலர் - வித்துவேஷணம்
ஊமத்தம் - பேதனம்
கடலை மலர் - மாரணம்
முதலியன அஷ்டகர்மத்திற்குரிய மலர்களாகும்.
ஆசனங்கள்:
வில்வப்பலகை - வசியம்
மாம்பலகை - மோகனம்
பலாப்பலகை - தம்பனம்
நீலக்கம்பளம் - உச்சாடனம்
வெள்ளாட்டுத்தோல் - ஆக்ருசணம்
எட்டிப்பலகை - வித்துவேஷனம்
மரத்தோலாடை -பேதனம்
அத்திப்பலகை - மாரணம்
முதலியன அஷ்டகர்மத்திற்குரிய ஆசனங்களாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

Friday, January 12, 2018

நன்றாக தூக்கம் வர


நன்றாக தூக்கம் வர:
மனக்குழப்பம்,மனபயம்,துஷ்டசக்திகள் தொந்தரவால் தூக்கம் வராமல் அவதிப்படுவர்கள்,சிறிதளவு மருதாணி பூவை தலையணைக்கு அடியில் வைக்க,நன்றாக தூக்கம் வரும்.
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

ஆஸ்துமா,சக்கரை நோய் குணமாக சூரணம்


ஆஸ்துமா,சக்கரை நோய் குணமாக சூரணம்:
சிறு குறிஞ்சான் சமூலம்,ஆடாதொடை சமூலம் மற்றும் திரிகடுகம் இவைகளை சூரணம் செய்து,அந்த பொடியை தினமும் இருவேளை ஒரு சிட்டிகை அளவு சாப்பிட அலர்ஜி,சைனஸ்,ஆஸ்துமா,கோழை இருமல்,சுவாசக் கோளாறு வியாதிகள் மற்றும் சர்க்கரை நோய் விரைவில் குணமாகும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989

தைப்பொங்கல்


தைப்பொங்கல்
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
தைப்பொங்கல் வரலாறு
ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளமில்லா இடங்களில் மழை நீர்த் தேக்கத்தால் ஒரு வேளாண்மைதான் விளைக்க முடியும். ஆகவே, மார்கழி (சிலை) அல்லது தை (சுறவை) மாத அறுவடையே நாடெங்கும் நிகழும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும்.
தமிழர் தேசிய விழா
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிருத்துவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கள் வைத்து கொண்டாடுகின்றனர்.தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது.
உழவர் திருநாள்
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.
பொங்க வைக்கும் முறை
தைப்பொங்கலுக்குச் சில நாள்களுக்கு முன்னரே தயாராகுதல் தொடங்கும். பொங்கலுக்குத் தேவையான பொருள்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். தமிழீழம், தமிழ்நாடு போன்ற இடங்களில் புதுப்பானைகளை பலர் வாங்குவர்.
நான்கு நாள் திருவிழா
பொங்கல் விழா நான்கு நாள் கொண்டாட்டம் ஆகும்.
போகி
போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும்.
போகி பண்டிகை என்பது ‘மார்கழி’ மாதம் முடிந்து ‘தை’ மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து புதியன புகுத்தல் வழக்கம்.ஆயர்கள் இந்திரவிழாவை முடித்து சூரியவழிபாடை தொடர்ந்தனர்.
அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தைப்பொங்கல்
தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கல்
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. 'பொங்கலோ பொங்கல் ! மாட்டுப் பொங்கல்!
பட்டி பெருக! பால் பானை பொங்க! நோவும் பிணியும் தெருவோடு போக!' என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.
காணும் பொங்கல்
இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இது பொதுவாக இந்தியாவிலேயே கொண்டாடப்படுகிறது.
பொங்கலை ஒத்த பிற விழாக்கள்
வடமாநிலங்களில் சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் உண்டு. இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. மகரம் என்றால் சூரியன் என்று பொருள். பகலவன்/பரிதி தனுர் ராசியில் இருந்து மகர ராசியின் நுழைவதன் மூலம் உத்தரயானத்தில் பகலவன்/பரிதி சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர். மணிப்பூர் மாநிலத்தில் குடியிருக்கும் தமிழ்மக்கள் தங்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகையைக்கொண்டாடினர்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

Wednesday, January 10, 2018

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்


வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள்
காசாளர் அறை (CASH COUNTER) அமைப்பு :-
கடை ,தொழிற்சாலைகளின் மைய நோக்கம் லாபமும் ,பணத்தைப் பெருக்குவதுமே. அதற்கு முக்கியமாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரின் அமைப்பு சரியாக இருக்கவேண்டும்.
குறிப்பு :
1.உள்ளே வரும் வாடிக்கையாளர்களைக் காசாளர் எளிதில் காணும் வண்ணம்
கேஷ் கவுன்டர் இருக்கவேண்டும்.
2.கடையின் மையப்பகுதியில் காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டர் இருந்தால் விற்பனை அதிகரிக்கும்.
3.குறிப்பாக காசாளர் அறை அல்லது கேஷ் கவுன்டரை பிற கவுன்டர்களில் இருந்து தனித்து இருக்கும் படி சிறிது தள்ளி அமைப்பது நல்லது.
4.காசாளரின் பின்புறம் ஒரு கண்ணாடி வைத்தால் நிரந்தர பணப்புழக்கம், விற்பனை அதிகரிப்பு ஏற்படும்.
..............................................................................................................................................................................................................
மந்திரகாளி மந்திராலயம்:
கணவன்/மனைவி வசியம்,ஆண்/பெண் வசியம்,காதலர்கள் வசியம்,குடும்ப வசியம்.
தொழில் வியாபார வசியம்,உத்தியோக வசியம்,ராஜ வசியம்,ஜன வசியம்,தனம்(பணம்)வசியம்,முக வசியம்,
குலதெய்வம் வசியம்,இஷ்டதெய்வம் மற்றும் பரிவார தெய்வம் வசியம்.
குடும்ப தெய்வம்,கன்னி தெய்வம் வசியம் மற்றும் வழிபாட்டு முறைகள்,
ஏவல் பில்லி சூன்யம்,செய்வினை கோளாறுகளை நீக்க, மாந்திரீக பாவைகள் மூலம் சகல மாந்திரீக கட்டுக்களையும் முறிக்க,
பேய்பிசாசு,துஷ்டசக்திகள்,கண்திருஷ்டி,முடக்கம்,தடை,தடங்கல்களை விலக்க,
குழந்தைகளுக்கு பாலகிரஹ தோஷம் நிவர்த்தி செய்ய மற்றும் பாதுகாப்பு தாயத்துக்கள்,
நன்கு படிப்பு வர,நல்ல மதிப்பெண்கள் பெற மற்றும் உயர்கல்வி பயில,
நல்ல வேலை கிடைக்க,அரசு உத்தியோகம் கிடைக்க மற்றும் உத்தியோக பிரச்சினைகள் நீங்க,
அரசியலில் வெற்றி பெற மற்றும் சமூகத்தில் உயர் அந்தஸ்து பெற,
வீடு மனை,வண்டி வாகன யோகம் பெற,
வீட்டில் தெய்வ கடாட்சம் மற்றும் லட்சுமி கடாட்சம் உண்டாக,செல்வம் பெருகி நிலைக்க,
புத்திரபாக்கிய தோஷம் நிவர்த்தி செய்து குழந்தை பேறு கிடைக்க,
திருமண தோஷம்,திருமண தடைகள் நீங்கி திருமணம் கைகூட,
கடன் தொல்லைகள் நீங்க,
தகாத உறவுகளை முறிக்க,
கோர்ட்கேஸ் வழக்குகளில் வெற்றி பெற,
விவசாயத்தில் நல்ல விளைச்சல் பெருக மற்றும் பிராணிகள்(ஆடு,மாடு,கோழி,முயல்) வளர்ப்பு முறையில் லாபம் உண்டாக,
அதிர்ஷ்டம் உண்டாக,அன்றாடம் பண வரவு வர,நினைத்தது நடக்க,
சகல தெய்வ வழிபாட்டு முறைகள்,
அருள்வாக்கு/குறி சொல்ல தெய்வ வசியம் மற்றும் அஞ்சனம் மை,யந்திரத் தகடுகள்,மற்றும் மாந்திரீக பயிற்சி
மேலும் சகல பிரச்சினைகள் மற்றும் காரியங்களுக்கு சித்த மாந்திரீகம்,மலையாள மாந்திரீகம்,மந்திர யந்திர தாந்த்ரீக பரிகாரங்கள் மூலம் தீர்வு காண அணுகவும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989
ஸ்ரீ மந்திரகாளி மந்திராலயம்,
EMAIL: mmsvguna@gmail.com
visit as: mantrakali.blogspot.com

Tuesday, January 9, 2018

மாந்திரீக பரிகாரம்


மாந்திரீக பரிகாரம்
பேய் பிடித்தவர்கள் எப்போதும் மந்தமாக சோக நிலையிலேயே இருப்பார்கள். ஒரு மாதிரியாக முறைத்துப் பார்ப்பார்கள். முகம் பழுத்து கண்களில் ஒரு பயம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். திடீர் திடீர் என்று அலறுவார்கள். தூக்கம் வாரது. யாரோ கூப்பிடுவதுபோ பாதி ராத்திரியில் எழுந்து போய்விடுவார்கள்.
தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இருக்காது.வழியில் ஆறு ஏரி குளம் தென் பட்டால் ஆபத்தைப் புரிந்து கொள்ளாமல் இறங்கி விடுவார்கள் காரணமின்றி கலகலவென்றும் சிரிப்பார்கள். இத்தகைய அறிகுறிகள் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ தென்பட்டால் பேய்பிடித்திருக்கிறது என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.
பெரும்பாலும் கல்யாணமாகாத கன்னிப் பெண்களுக்கு இதைப் போன்ற பேயின் சேட்டைகள் அதிகமாகத் தாக்கும். கெட்ட ஆவிகள் சிலரைப் பிடித்திருக்கக்கூடும். உங்களுக்கு ஆகாதவர்கள் மாந்திரீகர்கள் மூலமாக பில்லி சூனியம் ஏவல் வைத்திருக்கலாம். சரியான முறையில் மாந்திரீகச் சிகிச்சையளிக்கா விட்டால் அவர்களுடைய உயிருக்குக்கூட ஆபத்து ஏற்பட்டு விடலாம் . இத்தகைய பேய்த்தொல்லைகளிலிருந்து பேய் பிடியாளர்களையும்,ஏவலை எடுக்கும் நம்மையும் பாதுகாப்பது எப்படி?
அதற்கான விரிவான சக்தி வாய்ந்த யந்திரமே நீங்கள் கீழே பார்ப்பது. ( ஓம் சக்தி காப்பு யந்திரம் என்பது இதன் பெயர். )
ஓம் என்ற மந்திரம் சிவபெருமானிடமிருந்து ஆதியில் பிறந்தது. ஓம் என்பது பிரணவமாகும்.
"ஓம் பிரவணன் தேவாய நம"
என்று நாம் சிவபெருமானைத் துதிக்க வேண்டும். பார்வதி தேவியே சக்தியாகும்.
இதர பெண் தெய்வங்களான காளி,ஈஸ்வரி,பேச்சி முப்புடாதி,உச்சினி மாகாளி,அங்காளம்மன்,அழகம்மாள்,பத்ரகளி,எல்லாம் பார்வதி தேவியின் அம்சமாகும். இவர்கள் அட்டகாளி எனப்படுவார்கள். மூலக்கடவுளான பார்வதி திரிசூத்தில் சக்தியாக வாழுகிறாள். அவர்களை ஆராதித்து தவம் இருந்து மந்திரசக்தி பெறுபவர்களும் மனபலம் பெறுபவர்களுக்கு வலிமை அதிகம் வேண்டும். உறுதி துணிச்சல் வேண்டும்.
யந்திரத்தை வைத்து 108 தடவை பூஜிக்கும் போதோ 1008 தடவை உரு ஜெபிக்கும் போதோ உடம்பில் மகத்தான சக்தி பிறந்துவிடும். நீங்கள் மாக சக்தி பெற்றவர்களாகி விடுவார்கள்.
மாந்திரீகம் செய்யும்போது இயல்பாகவே அவனிடம் சக்தி பிறந்து விடுகிறது . பிரணாயாமம் செய்யும்போது பத்மாசனம் போட்டு நிமிர்ந்து உட்காருவதால் உடலுக்கு வலிமை ஏற்படுகிறது. மூச்சிப் பயிற்சியும் ஏற்படுகிறது.
உங்களையே மகாசக்தி படைத்த மனிதனாக மாற்றி விடுகிறது. உங்களால் எதுவும் முடியும் என்ற தன்னம்பிக்கையை ஏற்படுத்தி விடுகிறது.
தீராத நோய் கொண்டவர்களைக் குணப்படுத்துவது எப்படி?
பில்லி சூனிய ஏவல் வைக்கபபட்டு அதனால் நோயாளியானவர்கள் போதிய மாந்திரீகச் சிகிச்சை பெறாமல் இருந்தால் குணமடைவது கடினம் .மனத்துக்கு உள்ளத்திற்கு முதலில் அதிரடி சிகிச்சையளிக்க வேண்டும். மாந்திரீகப் பாதிப்பு என்பது ஒருவித மனநோயே ஆகும். மனோதத்துவ ரீதியாகவே பிரச்சனைகளைக் கையாண்டு பேயை ஓட்டி புதுமனிதனாக மாற்றவேண்டும். மாற்றிவிடலாம்.
படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகளுக்கு முதலில் சிறந்த ஆங்கில,சித்த, ஆயுர்வேத,யூனானி டாக்டர்களை வைத்து தீவிரமாகச் சிகிச்சையளிகள் நாம் விஞ்ஞான வளர்ச்சியை மறக்கக் கூடாது.
எந்த டாக்டர்களாலும் குணப்படுத்த முடியாத நோயாளிகளை,மனிதர்களால் பிழைக்க வைக்க முடியாது என்று கைவிடப்பட்ட கேஸ்களுக்கு நிச்சயமாக மாந்திரீகச் சிகிச்சை தேவை.
யாராலும் குணப்படுத்த முடியாத பேய் பிடித்தவர்களையும் பில்லி சூனியப் மாந்திரீக பாதிப்புக்காரர்களையும் குணப் படுத்த அவர்களுடைய வீட்டில் நடு அறையையே பூஜைக் குரிய இடமாகத் தேர்ந்தெடுங்கள். பூஜை நடக்கும்போதோ,பூஜை முடிந்த முழுமையாக ஒரு நாள் முடியும் முன்போ அந்த அறையினுள் வேறு யாரையும் அனுமதிக்க வேண்டாம்.
சங்கிலியால் கட்டப்பட்டோ, ஓயாமல் அலறிக்கொண்டிருக்கும் நோயாளியையோ, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தால் தூண்டப்படும் நோயாளியையோ என்ன செய்ய வேண்டும். இது அபாயகரமான பேய் பிடிப்பு ஆகும். இதற்கு முதல்தரமாக பயங்கரமான அதிரடி முறை சிகிச்சை தேவை.
இதற்கு ஹோமம் வளர்க்க வேண்டும். சாதாரணமானமாக உங்கள் வீட்டுக்கு கணபதி ஹோமம் மிகவும் நல்லது. சகல மங்களகரமான செளபாக்கியங்களும் கிடைக்கும்.
இதைச் செய்வதற்கு மாந்திரீகம் தேவையில்லை. இதற்காகவே புரோகிதம் செய்யும் ஆசார சீலர்களான புரோகிதர்களை அழைத்துக் கொள்ளுங்கள். மாந்திரீகத்தில் இரண்டு வகை உண்டு, சைவ பூஜையும் உண்டு.அசைவ பூஜையும் உண்டு.
பெரும்பாலும் மாந்திரீகர்கள் தெய்வங்களுக்கு ஏற்ற வகையிலேயே பூஜை செய்வார்கள். நாம் செய்யும் சக்தி பூஜைக்கு உயிர்ப்பலி எதுவும் கொடுக்க வேண்டாம். சக்தியின் அம்சமான காளி போன்ற தேவதைகள் உயிர்ப்பலி கேட்பவை என்ற போதிலும் அது இல்லாமலேயே சமாளித்து விடலாம். ஹோமம் வளர்த்துப் பூஜை செய்வதற்கு முன்னால் பூஜைக்குரிய பொருட்களைத் தயார் செய்ய வேண்டும்.
11 குளங்களிலிருந்து களிமண் கொண்டு வரச் செய்ய வேண்டும்
ஆல்,மா,மூவரசு,பலா,போன்ற 11 வகை மரங்களிலிருந்து உலர்ந்தச் சுள்ளிகளை எடுத்து வரச் செய்ய வேண்டும்.
11 வகை நவதானியங்கள்
தென்னம்பாளை பிளந்து 108 குச்சிகள் தயார் செய்து சிறிய தீப்பந்தம் போல் சுத்தமான துணி அல்லது பஞ்சு சிற்ற வேண்டும். உலர்ந்தச் சுள்ளிகள் சுமார் 11 கிலோ எடை இருக்க வேண்டும்.
வெள்ளைக் குந்திரிக்கம் 250 கிராம் பொடி செய்து வைத்திருக்கவும்.
சிங்கப்பூர் நயம் சாம்பிராணி 250 கிராம் பொடித்து தயார் நிலையில் வைத்திருக்கவும்.
கற்பூரம் ஒரு பெரிய துண்டு படிகாரம் 100 கிராம்.
ஊதுவத்தி சுமார் 100 .
பூஜைக்குரிய சக்தி பீடம் வைத்து வாழையிலையில் நிவேதனப் பொருட்களையும் படையல் போட்டு வாழைக்குலை ,வெற்றிலை, பாக்கு,பூ வைத்து நடுவே யந்திரத்தகட்டை இடம்பெறத் செய்யுங்கள்.
தகட்டை செப்புத்தகட்டிலோ,வெள்ளித்தகட்டிலோ எழுதலாம்.
பேய் பிடித்தது ,அல்லது செய்வினையால் தாக்கப் பட்டது ஆணாக இருந்தால் பச்சரிசி மாவு பிசைந்து பெண் பாவை செய்து வைக்கவும். தலைமுடிகள் வைக்கவும்.
பெண்ணாக இருந்தால் ஆண்பாவை செய்து வைக்கவும்.
நோயிளியை பீடத்துக்கு நேர் எதிரில் உட்காரவைத்து மாபழகையில் மீது தெற்கு முகமாகப் பார்த்து பூஜை செய்பவர் அமரவும்.
சட்டையின்றி இடுப்பில் காவி வஸ்திரம் (துணி) அணிந்து தலைப்பாகை கட்டவும். நெற்றியில் பெரிதாக ஒரு குங்குமம் பெட்டும் மேலே நீளமாகச் சந்தனக்கொடும் இடவும்.
வெண்ணீறு கொண்டு விபூதி இடவும். மார்பில் சந்தனம் பூசவும். ஊதுவத்தியைக் கொத்துக கொத்தாக கொளுத்தி புகைய விடவும்.
முன்னால் ஒரு திரிசூலத்தை நட்டு வைக்கவும். அதன் ஒவ்வொரு முனைகளிலும் புள்ளி விழாத எழுமிச்சம் பழங்களை குத்தி வைக்கவும்.
செவ்வரளிப்பூ மாலை அணிக்கலாம். நடுவே பெரிய நீள்சதுர வடிவில் பள்ளம் தோண்டி மெழுகிக் கோலம் போட்டு ஹோமம் வளர்ப்பதற்குத் தயாராக வைத்திருக்கவும்.
பூஜைக்குரியகளை கட்டியிருக்க வேண்டும்.
பேய் பிடித்த நபருடன் எடுபிடி வேலைகளைக் கவனித்து உடனுக்குடன் செயல்பட உதவியாள் ஒருவரையும் வைத்துக் கொள்ளலாம். நோயாளியின் மீது தனி அக்கறை கொண்ட நபர் அறைக்கு வெளியே காத்துக்கொண்டு இருக்கலாம். பூஜையறைக் கதவு திறந்தபடியே இருக்க வேண்டும் மூடக்கூடாது.
மாந்திரீகச் சிகிச்சையின்போது நோயாளியை இம்சைக்கக் கூடாது. தலைமுடிகளைப் பிடித்து இழுக்கவோ பிரம்பு கொண்டு அடிக்கவோ கூடாது. உங்கள் பார்வை ஹிப்னாடிச முறையில் ஒரே இடத்தில் நிலைகொண்டதாக இருக்க வேண்டும்.
குத்து விளக்கில் திரிகளை தேங்காய் எண்ணெய்,புன்னைக்காய் எண்ணெய், பசுநெய் ஆகிய ஏதாவது ஒன்றில் மிதக்கவிட்டு ஐந்த திரிகளாக எரியவிடவும்.
தென்னம்பாளையின் 108 குச்சிகளையும் தயாராக துணியோ சுற்றி தேங்காய் எண்ணெய் யில் நனைத்து வைத்திருங்கள்.
பலி இடுவதற்குத் தயாராக 108 எலுமிச்சம் பழங்களும்,தடியங்காய் 11 வில்வக்காய் 108 தயாராக இருக்கட்டும்.
புகை வெளியே போவதற்கு வசதியான ஜன்னல்கள் கொண்ட ஹாலாக அது இருக்க வேண்டும்.
இனி மாந்திரீக வேலையை " அரி ஓம் சிவாயநம... வசி...வசி..."
என்று உரத்தக்குரலில் கூவி ஆரம்பியுங்கள்.
மூல மந்திரம்
அரி ஓம் சிவாயநம அ இ உ எ ஏ சீரா மசிரிமியும் ஆகாசி வசி வசி மோகையா என் தாயே சக்தி மாகசக்தி என் வாக்கிலும் மனதிலும் வந்து முன் நிற்க ஸ்வாஹா ! 
ஒம் காளி ஓம் பிடாரி ஓம் நமசிவாயா வசி.. வசி...ஸ்வாஹா.
இந்த மூல மந்திரத்தை உச்சரித்தவாறு தென்னம் பாளை குச்சியை ஒவ்வொன்றாக எடுத்து எரியவிட்டு ஒன்றன் பின் ஒன்றாகத் தீக்குண்டத்தில் போடவும். தீக்குண்டம் நீள் சதுர வடிவில் அமைந்திருக்க வேண்டும்.
1 குளங்களிருந்து எடுத்து வரப்பட்டிருந்த களிமண்ணை தேங்காய் உடைத்த அந்த நீரைக் கொண்டு பிசைந்து ஹோமகுண்டம் தயார் செய்திருக்கவும்.
ஹோமத்தின் கரையில் திரிசூலம் எல்லாப் பக்கங்களிலும் இடவும். விபூதியும் இடவும். குங்குமம் வைக்கவும்.
நோயாளியின் நெற்றியில் மஞ்சணை அப்பிவிட்டு, மஞ்சணை என்பது குங்குமம் சந்தனம் கலப்பு ஆகும்.
நெற்றியில் விபூதி வைக்கவும். உங்கள் நெற்றியில் மஞ்சணையை நாமம் போல் இழுக்கவும்.
ஏற்கனவே தீக்குண்டத்தில் 11 வகையான மரங்களின் குச்சிகளை போட்டு முழுமையாக நிரப்பி வைத்திருக்க வேண்டும்.
மூல மந்திரம் செல்லிக் கொண்டே ஒவ்வொரு உச்சாடணத்துக்கும் ஒன்று வீதம் வெட்டி பலி கொடுக்க வேண்டும்
தென்னம்பாளைக் குச்சி எரிய அதையும் பிற ஒவ்வொரு பொருட்களை எடுத்து நோயாளியின் கால் முதல் தலை வரையில் சுற்றி எரியும் எரியும் ஹோம குண்டத்தில் போடவேண்டும்.
நோயாளி ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தொட வேண்டாம். உங்கள் பார்வை உத்வேகம் கொண்டதாக இருக்க வேண்டும்.
108 எலுமிச்சம் பழங்கள்,108 விவக்காய்கள் ஆகியவற்றை இரு துண்டுகளாக வெட்டி நெருப்பில் போடவும்.
புல்வகை நவதானிங்கள் ஒன்றின் பின் ஒன்றாகப் போடவும். போடும்போது முல மந்திரம் மறக்காமல் பக்தியுடன் பராசக்தியின் நினைவாகவே சொல்ல வேண்டும்.
வெள்ளைக் குந்திரிகம் குபீரென்று தீப்பற்றி க்கொள்ளும் தன்மை கொண்டது. அதனால் மந்திர சுலோகத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருப்பில் வீச வேண்டும் அது குபீர் குபீர் என்று பற்றிக் கொள்ளும் அதனால் அளவோடு வீசவும்.
பிறகு
பிரம்பை எடுத்து நோயாளியின் மீது மேலும் கீழுமாகத் தடவும்
ஆவேசமாக கீழே கண்ட மந்திரங்களை உச்சரிக்க வேண்டும்.
ஒம் சக்தி.... ஓம் நாரயணீ...ஓம் ஓங்காரி ஓம் ஆங்காரி...ஓம் அந்திரி ஓம்புரந்திரி ஓம் நிரந்தரி ஓம் சங்கரி ஓம்கெளரி ஓம் மனோகரி ஓம் சடாக்ஷரி ஓம் நீலி ஓம் கபாலி ஓம் மகேஸ்வரி ஓம் மாகாளி ஓம் மகாபைரவி ஓம் தாட்சாயணி ஓம் திரிசூலி ஓம் பகவதி ஓம் பர்வதி ராஜகுமாரி ஓம் பாம்பு அவதாரி ஓம் வேப்பிலைக்காரி ஓம் செவ்வாடைக்காரி ஓம் மகா பைரவி ஓம் குருவன் கொட்டை மாரியம்மா ஓம் பச்சிலைதேவி ஓம் பண்ணழகி ஓம் கண்ணழகி ஓம் பணத்தி ஓம் குணத்தி ஓம் சிம்மவாகினி ஓம் மங்கள நாயகி ஓம் மாட்சி ஓம் மகிடசம் ஹாரி ஓம் மகேஸ்வரி ஓம் ருத்திரி ஓம் மலைச்சி ஓம் புலச்சி ஓம் இறைச்சி ஓம் பேச்சி ஓம் ருத்திரி ஓம் சூத்திரி ஓம் அகோரி ஓம் கெளமாரி ஓம் மகிஷாசுரமர்த்தினி ஓம் ஈஸ்வரி ஓம் பராசக்தி வா.....வா....வா.....ஓம் ஹ்ராம் வசி...வசி...வசி...ஓம் ஸ்வாஹா...
தாயே...பராசக்தி...பரமேஸ்வரன் துணையே ....27 நட்சத்திரத்தில் இன்ன நட்சத்திரம்
12 ராசியில் இன்ன ராசியில் பிறந்த இன்னார் மகன் அல்லது மகள் பெயர் சொல்லி காரு...காரு...தூரு....தூரு...ஏகு ஏகு...ஐம்...இம்...உம்...
பாதுகாத்து ஆபத்தை விலக்கி பேய், பிசாசு,பில்லி,சூனியம்,ஏவல், விட்டவனை இடி இடி...அடி அடி... நகு நகு....துரத்து...துனத்து...குத்து...குத்து...குரல் வளையைப் பிடி பிடி எட்டி உதைத்து எரி நரகம் அனுப்பி காரு காரு.... தூரு தூரு...ஓட்டு...ஓட்டு... பஸ்மீகரம் ஆக்கு...ஆக்கு..
பரமேஸ்வரன் மேல் ஆணை! சக்தி உமையே உன் மீது ஆணை! இக்கணமே வருக..வந்து என் நாவில் நிற்க..
கெட்ட ஆவியை முட்ட ஓட்டு!
இப்படி ஆவேசமாகச் சொல்லிவாறு முழுவேகத்துடன் பிரம்பை எடுத்து தீட்சண்யப் பார்வையுடன் பாவையை அடித்து நொறுக்க வேண்டும்.
பின்னர் வெண்பூசணிக்காய் 11 ஐயும் தலையைச் சுற்றி வீட்டுக்கு வெளியே ஒவ்வொரு காய்யே எடுத்து சென்று உடைக்க வேண்டும்.
உடைக்கும்போது ஓம் ஸ்வாஹா, என்று சொல்ல வேண்டும்
பிரம்மாண்டமான இந்தப் பூஜையை முடித்துவிட்டு படிகானத்தையும் சுற்றி நெருப்பில் வைக்கவும்.
பிறகு சாஷ்டாங்கமாக வணங்கி எழுந்து நெற்றியில் குங்குமம் விபூதியும் கொடுத்து ""எழுந்திரு"" என்று சொல்லலாம்.
கைகளால் உதறச் சொல்லலாம்.
பிறகு ஓம குண்டத்தை 11 தடவை வலம் வரச் செய்து விட்டு அறைக்கு வெளியே அழைத்துப் போகச் சொல்ல வேண்டும்.
இந்தப் பூஜை நடக்க வேண்டிய நேரம் ஊர் அடங்கிய பிறகு இரவு நேரமாகும்.
மறுநாள் காலையில் குளித்து நீராடி புது வேட்டி கட்டி வந்து தரையில் விழுந்து வணங்கி விட்டு ஓம குண்டத்தை அப்புறப்படுத்தவும்..ஊருக்கு வெளியே போட்டு விடவும்.
யாந்திரத்தை எடுத்து தீபம் தூபம் காட்டி வீட்டில்ன் முன்னால் எல்லோரும் பார்க்கும் படியாக மாட்டி வைக்கவும்.
இந்த யந்திரம் தகுடு பேய் பிசாசு பில்லி ஏவல் சூனிய உபாதைகளிருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கும்..
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:+917598758989

செல்வவிருத்தி தரும் தாந்த்ரீகப் பிரயோகம்


செல்வவிருத்தி தரும் தாந்த்ரீகப் பிரயோகம்
தொடர்ந்த பணப்புழக்கமும்,செல்வ நிலையில் உயர்வும் தரும் இந்த தாந்த்ரீக பிரயோகம் மிக எளிமையான் அவளிமையான் அஒன்று.இதை அன்பர்கள் யாவரும் செய்து பலன் பெற வாழ்த்துகிறேன்.
இதைச் சங்கடஹர சதுர்த்தி அன்று வெள்ளை அல்லது மஞ்சள் நிற விரிப்பு விரித்து கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமர்ந்து செய்யவும்.
தேவையான பொருட்கள் :-
மஞ்சள் துண்டு ஒன்று
மஞ்சள் காட்டன் அல்லது பட்டுத் துணி
தேங்காய் ஒன்று
கொட்டைப்பாக்கு ஐந்து
கொட்டைப்பாக்கையும் தேங்காயையும் மஞ்சள்பொடி தடவி வைக்கவும்.பின்னர் மஞ்சள் துண்டு,தேங்காய்,ஐந்து கொட்டைப்பாக்கு இவற்றை மஞ்சள் துணியில் போட்டு முடிந்து கட்டவும்.அதற்குக் கற்பூரம், சாம்பிராணி தூபம்,ஊதுவத்தி தூபம் கட்டவும்.இந்தப் பிரயோகத்தைச் செய்யும் பொழுது மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ "ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹா" என்ற மந்திரத்தை ஜெபித்தவாறே செய்யவேண்டும்.
பின்னர் சக்தி வாய்ந்த இந்த செல்வவசியத் தேங்காய்முடியை வீடு அல்லது கடையில் சுத்தமான இடத்தில் வைக்கச் செல்வம் பெருகத் துவங்கும்.இதை நீங்களே அனுபவத்தில் உணரலாம்.வீட்டாரைத் தவிர வெளி நபர்கள் யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.வெளிநபர்கள் யாரிடமும் சொல்ல விரும்பினால் செய்த பின்னர் சொல்லிக் கொள்ளலாம்.
தினமும் அல்லது சங்கட சதுர்த்தி,திங்கள்கிழமை,வெள்ளிகிழமை, பௌர்ணமி நாட்களில் அதற்கு கற்பூரம் ,ஊதுவத்தி அல்லது சாம்பிராணி தூபம் காட்டி வர சக்தி குறையாமல் இருக்கும்.
தொடர்புக்கு
ஸ்ரீ காளி தேவி-போன்:7598758989